புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

19 February 2020

பெனவெண்ட்டோ நகர் ஆயர் பார்பாட்டூஸ் Barbatus of Benevento

இன்றைய புனிதர்
2020-02-19
பெனவெண்ட்டோ நகர் ஆயர் பார்பாட்டூஸ் Barbatus of Benevento
பிறப்பு

610
இறப்பு
19 பிப்ரவரி 682,
பெனவெண்ட், இத்தாலி

இவர் இத்தாலி நாட்டிலுள்ள பெனவெண்ட்டோ என்ற நகரில் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். அதன்பிறகு பெனவெண்ட்டோ Marcona என்ற நகருக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர் மறைப்பணியாற்றி பலரை மனந்திருப்பினார். அச்சமயம் 663 ஆம் ஆண்டு பெனவெண்ட்டோ நகரானது அரசன் 2 ஆம் கொன்ஸ்டான்ஸ் என்பவரின் கீழ் கொண்டுவரப்பட்டது, இதனால் பார்பாட்டூஸ் பல இன்னல்களை சந்திக்க நேரிட்டது. இருப்பினும் இவர் அரசருடன் இணைந்து சுமுகமான முறையில் பணியாற்றி தன் மறைமாவட்டத்தில் அமைதியை ஏற்படுத்தினார். இவர் 680 ஆம் ஆண்டு கொன்ஸ்டாண்டினோபிளில் நடந்த பேரவையில் பங்குபெற்று தன் மறைமாவட்டத்திற்காக பரிந்து பேசியுள்ளார்.


செபம்:
அமைதியையும் அருளையும் வழங்கும் எம் தந்தையே இறைவா! தன் மறைமாவட்ட மக்களை என்றும் அமைதியான வாழ்வை வாழ செய்த புனித பார்பாட்டூஸ்சின் வழிகாட்டுதலை எம் மறைமாவட்ட மக்களை என்றும் அமைதியான வாழ்வை வாழ செய்த புனித பார்பாட்டூஸ்சின் வழிகாட்டுதலை எம் மறைமாவட்ட ஆயர்கள் கடைபிடித்து தன்னுடன் இணைந்து பணியாற்றும் அனைவருடனும் சுமூகமான உறவுகொள்ளச் செய்தருள நீர் வழிகாட்டி வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

லவ்சான்னே நகர் ஆயர் போனிபாசியுஸ் Bonifatius von Lausanne
பிறப்பு : 1180 ப்ருசல் Brüssel, பெல்ஜியம்
இறப்பு : 19 பிப்ரவரி 1260(?) ப்ருசல்

தூய கொன்ராட் (பிப்ரவரி 19)

இன்றைய புனிதர் : 
(19-02-2020) 

தூய கொன்ராட் (பிப்ரவரி 19)

“நீங்கள் மனம்மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்” (மத் 3: 8)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் விழாக் கொண்டாடும் கொன்ராட் இத்தாலியில் இருந்த ஓர் உயர்குடியில் பிறந்தவர். இவர் ஒரு பெண்ணை மணமுடித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

வேட்டையாடுவதில் அதிக நாட்டம் கொண்ட கொன்ராட் தன்னுடைய சகாக்களோடு ஒரு சமயம் வேட்டையாடச் சென்றார். அப்போது அவர் குறிவைத்த விலங்கானது தப்பித்து புதருக்குள் ஓடி ஒழிந்தது. இதனால் அவர் அந்த விலங்கை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்று புதருக்குத் தீ வைத்தார். அந்தத் தீயானது பரவி பெருவாரியான இடத்தை அழித்து நாசமாக்கியது. இதற்கிடையில் அந்த வழியாக வந்த ஓர் ஏழைக் குடியானவன்தான் இதற்கு காரணம் என்று சொல்லி அரசாங்கம் அவருக்கு மரண தண்டனை விதித்துக் கொன்றது.

இச்செய்தி கேள்விப்பட்ட கொன்ராட் மிகவும் மனம் வருந்தினார். உடனே அவர் அரசாங்கத்திடம் சென்று, “நான்தான் எல்லாவற்றிற்கும் காரணம், தன்னை எப்படியும் தண்டித்துக் கொள்ளலாம்” என்றார். அதற்கு அரசாங்கம் அவரிடமிருந்து பெரும் இழப்பீட்டுத் தொகையைக் கோரியது. உடனே அவர் தன்னுடைய நிலம், சொத்து பத்துகள் அனைத்தையும் விற்று இழப்பீட்டைக் கட்டினார். எல்லாவற்றையும் இழப்பீடாக் கட்டியபிறகு அவர் பரம ஏழையானார். அடுத்து என்ன செய்வது என்று அவர் யோசித்துக் கொண்டிருக்கும்போது, தானும் தன்னுடைய மனைவியும் துறவறம் பூனுவதைத் தவிர வேறு வழியில்லை என்று அவருக்குத் தோன்றியது. உடனே அவர் தன்னுடைய மனைவியை புனித கிளாரம்மாள் சபைக்கு அனுப்பி வைத்துவிட்டு, தன்னை பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையில் இணைத்துக்கொண்டு, ஒரு துறவியைப் போன்று வாழத் தொடங்கினார்.

கொன்ராட், பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்த பிறகு தன்னுடைய தவற்றுக்காக வருந்தாத நாளே இல்லை. தன்னுடைய வாழ்வின் அடுத்த முப்பது ஆண்டுகளில் அவர் நோட்டாவிற்குச் சென்று, அங்கிருந்த திருச்சிலுவையின் முன்பு முழந்தாள் படியிட்டு வேண்டிக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் அவர் வேண்டுதலால் நிறைய அற்புதங்கள் நடைபெறுவதை அறிந்து நிறைய மக்கள் அவரிடத்தில் சென்றார்கள். அவர் அவர்களுக்காக இறைவனிடத்தில் வேண்டி ஆசிர்வாதத்தைப் பெற்றுத் தந்தார். அவர் மூப்படைந்ததும், அப்படியே இறையடி சேர்ந்தார்.