புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

13 April 2020

தூய முதலாம் மார்டின் (ஏப்ரல் 13)

13 ஏப்ரல் 2020, திங்கள்

இன்றைய புனிதர்

தூய முதலாம் மார்டின் (ஏப்ரல் 13)
“கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” (யோவான் 12: 24)

வாழ்க்கை வரலாறு

மார்டின் ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் டோடி என்னும் நகரில் பிறந்தார். . இவர் வளரும்போதே அறிவிலும் ஞானத்திலும் சிறந்து விளங்கியதால், திருத்தந்தை அவர்கள் இவரை கொன்ஸ்தாந்திநோபல் நகரின் தூதுவராக ஏற்படுத்தினார். ஒருசில ஆண்டுகளிலே இவர் திருத்தந்தையாகவும் உயர்ந்தார்.

திருத்தந்தையாக உயர்ந்த பின்பு மார்டின் மிகச் சிறப்பான முறையில் பணிகளைச் செய்து வந்தார். குறிப்பாக திருச்சபையை எதிரிகளிடமிருந்தும் தப்பறைக் கொள்கைக் கொள்கைகளிலிருந்தும் கட்டிக்காப்பாற்றி வந்தார்.. இவருடைய காலத்தில் மொனோதலிடிசம் எனப்படும் தப்பறை கொள்கை திருச்சபைக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருந்து வந்தது. இத்தப்பறைக் கொள்கை இயேசுவுக்கு இறையியல்பு மனித இயல்பு என்ற இரு இயல்புகள் கிடையாது, ஒரு இயல்பு தான் இருக்கின்றது என்று சொல்லி வந்தது. இதனை திருத்தந்தை மார்டன் மிகக் கடுமையாக எதிர்த்தார். அது மட்டுமல்லாமல் லாத்தரன் சங்கத்தைக் கூட்டி, இத்தப்பறைக் கொள்கையைப் பரப்பி வந்த கொன்ஸ்தாந்திநோபலின் மன்னன் கொன்ஸ்டண்டீனை கடுமையாக எதிர்த்தார்.

இது அரசனுக்குப் பிடிக்கவில்லை. எனவே அவன் வெகுண்டெழுந்தான். திருத்தந்தை மார்டினைப் பிடிக்க ஒலிம்பியம்ஸ் என்பவனை அனுப்பி வைத்தான். அவனால் திருத்தந்தையைப் பிடிக்க முடியவில்லை. காரணம் திருத்தந்தையிடமிருந்த ஏதோ ஓர் ஆற்றல், அவரை அவன் நெருங்க விடாமல் செய்தது. எனவே, அவன் தன்னுடைய தோல்வியை ஒத்துக்கொண்டு ஓடிப்போனான். ஒலிம்பியசுக்குப் பிறகு மன்னன் தியோடர் என்பவனை அனுப்பி வைத்து, திருத்தந்தையை பிடிக்கச் செய்தான். அவன் உரோமை நகருக்கு வந்து திருத்தந்தையைப் பிடித்துக் கொண்டுபோய் கொன்ஸ்தாந்திநோபல் நகரில் போய் இறக்கினான். ஏற்கனவே உடல் வலுவற்று இருந்த திருத்தந்தை, கப்பல் பயணத்தின்போது சரியாக உணவு கொடுக்கப்படாததால் மிகவும் உடல் மெலிந்து காணப்பட்டார்.

கொன்ஸ்தாந்திநோபல் நகருக்குக் கொண்டுவரப்பட்ட திருத்தந்தைக்கு அரசன் மரணதண்டனை விதித்தான். ஆனால், அங்கிருந்த மக்களோ அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இதனை சற்றும் எதிர்பார்த்திராத மன்னன் அவரை கெர்சோன் என்ற பகுதிக்கு நாடு கடத்தினான். அங்கு அவர் ஒன்றரை ஆண்டுகள் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார். இதனால் அவருடைய உடல் மிகவும் பலவீனமடைந்து போய், 655 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் நாள் இறையடி சேர்ந்தார். இவர் இறந்த பின்பு, இவருடைய உடல் அடக்கம் செய்து வைக்கப்பட்ட கல்லறையில் நிறையப் புதுமைகள் நடந்தன.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய மார்டினின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. துணிவோடு இருத்தல்

தூய மார்டினின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது அவரிடம் இருந்த துணிச்சல், யாருக்கும் அஞ்சாத மன உறுதிதான் நம்முடைய நினைவுக்கு வந்து போகின்றது. தூய மார்டினின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்றது துணிச்சலோடு ஆண்டவருடைய வார்த்தையை எடுத்துரைக்கின்றோமா? அவருக்குச் சான்று பகற்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

கல்லூரி ஒன்றில் ‘சுய முன்னேற்ற வகுப்பு’ நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர் ஒருவரிடம், மாணவன், “துணிச்சல் என்றால் என்ன?” என்று கேட்டான். அதற்கு ஆசிரியர் அவனிடம், “மனத்தளர்ச்சி கொள்ளாமல், தோல்விகளையும் அவமானங்களையும், கஷ்டங்களையும் தாங்கிக்கொள்வதே மகத்தான துணிச்சல்” என்றார். இதை கேட்டு அந்த மாணவன், வாழ்வில் வரக்கூடிய தோல்விகளையும் கஷ்டங்களையும் துணிவோடு தாங்கிக்கொள்ளத் தயாரானான். ஆமாம், நம்முடைய வாழ்வில் நாம் சந்திக்கின்ற கஷ்டங்கள், அவமானங்கள் போன்றவற்றை எல்லாம் உறுதியான மனநிலையோடு தாங்கிக் கொண்டு, தொடர்ந்து நம்முடைய இலக்கை நோக்கி நடப்பதுதான் உண்மையான துணிச்சல் ஆகும்.

ஆண்டவர் இயேசு தன்னுடைய பணி வாழ்வில் பல்வேறு எதிர்ப்புகளையும் அவமானங்களையும் சந்தித்தார். திருமுழுக்கு யோவானும் அப்படித்தான். இவர்கள் எல்லாம் தங்களுடைய வாழ்வில் எதிர்ப்புகளும் அவமானங்களும் வந்துவிட்டதே என்று தங்களுடைய முயற்சியில் இருந்து பின்வாங்கவில்லை. எப்போதும் அவர்கள் முன்னோக்கித்தான் சென்றார்கள். அதனால்தான் இன்றைக்கும் நம்மால் நினைவுகூரப் படுபடுகின்றார்கள்.

ஆகவே, தூய மார்டினின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று, அஞ்சா நெஞ்சத்தோடும் துணிச்சலோடும் ஆண்டவருக்குச் சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Saint of the Day : (13-04-2020)

Pope Saint Martin I

Chosen 74th pope in 649 without imperial approval. Conducted the Lateran Council which condemned the patriach of Constantinople for Monothelitism, which claimed that Christ had no human will. This put him in opposition to the emperor who had him arrested and tortured. Paul, Patriarch of Constantinople, repented of his stance which saved Martin from execution, but the pope died soon after from damage done during his imprisonment, and is considered a martyr, the last martyred pope.

Born :
at Todi, Tuscany, Italy

Died : 
655 at Cherson, Crimea (in modern Ukraine) from starvation

Papal :
649

---JDH---Jesus the Divine Healer---

12 April 2020

புனித.ஜூலியஸ் (Julius I)ஆயர் April 12

இன்றைய புனிதர்
2020-04-12
புனித.ஜூலியஸ்  (Julius I)
ஆயர்
பிறப்பு

மேற்கு உரோம பேரரசு (Western Roman Empire)
இறப்பு
12 ஏப்ரல் 352
உரோம்

ஜூலியஸ் 337ஆம் ஆண்டு முதல் 352 ஆம் ஆண்டு வரை உரோமில் ஆயராக இருந்தார். உரோமில் பிறந்தவரான இவர் மார்க் என்ற ஆயரின் வாரிசாக தேர்வு செய்யப்பட்டார். இவர் ஆரியன் (Arian) திருச்சபையைப் பற்றி நன்கு அறிந்திருந்தார். கான்ஸ்டான் டி நோபிள் பேராயராக இருந்தபோது, 341 ல் அந்தியோக்கியாவில் பேராயர்களின் மாநாடு நடைபெற்றது.. இதனால் உரோமின் பிரதிநிதியாக அம்மாநாட்டிற்கு ஆயர் ஜூலியஸ் சென்றார். அங்கு நடைப்பெற்ற சில விவாதங்களுக்கு ஆயர் ஜூலியஸ் மறுப்பு தெரிவித்தார். இதனால் பேராயர்கள் நடுவில் இரு பிரிவு ஏற்பட்டது. அத்தனாசியுஸ் ஒரு பிரிவாகவும், ஜூலியஸ் மறுபிரிவாகவும் பிரிந்தனர். அத்தனாசியஸ், ஆயர் ஜூலியஸ் மீது வழக்கு தொடர்ந்தார். இதனால் உரோம் ஆயராக, அத்தனாசியுஸ் பொறுப்பேற்றார். ஆயர் அத்தனாசியுஸ், தன் மீது கூறிய வழக்குகள் அனைத்தும் பொய் என்று கூறி, ஜூலியஸ், அலெக்சாண்டரின் பேரவைக்கு கடிதம் எழுதினார். இக்கடிதத்தை அலெக்சாண்டரின் பேராயர் திருத்தந்தைக்கு அனுப்பினார். திருத்தந்தையால் இக்கடிதம் வாசிக்கப்பட்டு, ஆயர்களின் குழுக்களையும் அழைத்து விசாரித்தார். அப்போது ஆயர் ஜூலியஸ் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டது.

அதன்பிறகு ஆயர் ஜூலியஸ் தொடர்ந்து திறமையாக செயல்பட்டார். அப்போது 76 ஆயர்களை கொண்டு பிலிப்போபோலிஸில்(Philoppopolis) மாநாடு நடைப்பெற்றது. இம்மாநாட்டை ஆயர் ஜூலியஸ் தலைமை தாங்கி நடத்தினார். இதில் ஆயர் அத்தனாசியாரும் கலந்து கொண்டார். அதன்பிறகு 300 மேற்கு உரோம் ஆயர்களை கொண்டு, மீண்டும் ஓர் மாநாடு நடைப்பெற்றது. இதற்கு முன் நடந்த 3,4 மற்றும் 5 ஆவது மாநாடுகளில் பேசப்பட்ட விவாதங்கள் அனைத்தும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, நடைமுறைப் படுத்தப்பட்டது. இவ்வாறாக ஆயர் ஜூலியஸ் பல மாநாட்டை தலைமையேற்று நடத்தி, திருச்சபையில் பல மாற்றங்களை கொண்டு வந்தார்.

ஆயர் ஜூலியஸ் 352 ஆம் ஆண்டு, ஏப்ரல் 12 ஆம் நாள் உரோமையில் இறந்தார். இவர் இறந்தபிறகு மக்களால் புனிதராக வணங்கப்பட்டார். ஜூலியஸ் தான் ஆயராக உரோமில் இருந்தபோதுதான் கிறித்துப்பிறப்பு விழாவையும், மூன்று அரசர்கள் பெருவிழாவையும் தொடர்ந்து கொண்டாடப்பட வேண்டுமென்று, மாநாடுகளில் வலியுறுத்தினார். திருச்சபை காலண்டரில் தேதியை குறிப்பிட்டு, விழாக்களை இணைத்தார். அன்றிலிருந்து இவ்விரு விழாவும் பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


செபம்:
நல்ல ஆயனாம் இறைவா! உமது இறையரசை இவ்வுலகில் நிலைநாட்ட, எம் ஆயர்களோடு இருந்து, எம்மை வழிநடத்தியருளும்




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

திருக்காட்சியாளர் குரியினன்வோர்த் நகர் ஹென்றி Heinrich von Grünenwörth
பிறப்பு: 14 ஆம் நூற்றாண்டு
இறப்பு: 12 ஏப்ரல் 1396 ஸ்ட்ராஸ்பூர்க் Straßburg, பிரான்சு

11 April 2020

புனித.தனிஸ்லாஸ்ஆயர், மறைசாட்சி April 11

இன்றைய புனிதர்
2020-04-11
புனித.தனிஸ்லாஸ்
ஆயர், மறைசாட்சி
பிறப்பு
26 ஜூலை 1030
ஜெசப்பனா (Szcepanow)
இறப்பு
11 ஏப்ரல் 1079
போலந்து
புனிதர் பட்டம்: 1253
திருத்தந்தை நான்காம் இன்னோசென்ட்

இவர் போலந்து நாட்டில் ஜெசப்பனாவிலுள்ள, போக்கினா (Bochina) என்ற ஊரில் 1030 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26 ஆம் நாள் ஓர் அரசர் குடும்பத்தில் பிறந்தார். இவரின் பெற்றோருக்கு பல வருடங்கள் குழந்தைப்பேறு இல்லாமலிருந்தபோது, பல ஜெப, தவ முயற்சிகளை மேற்கொண்டு, இறைவனின் அருளால் அற்புதமாக, ஓர் அதிசய குழந்தையாக இவர் பிறந்தார். இவர் பெற்றோர் இவரை அறிவிலும், ஞானத்திலும், பக்தியிலும் சிறந்த குழந்தையாக வளர்த்தார்கள். அதன்பின் பிரான்சிலுள்ள ஓர் கன்னியர்களின் பள்ளியில் இளம் வயது படிப்பை முடித்துவிட்டு, போலந்து நாட்டிற்கு சென்று குருமடத்தில் சேர்ந்து குருவானார்.

பின்பு 1072 ஆம் ஆண்டு கிராக்காவ்(Krakau) மறைமாவட்டத்தில் ஆன்ம குருவாக பணியாற்றியபின் ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது போலந்து நாட்டின் அரசராக இருந்த இரண்டாம் பொலோஸ்லாஸின் (Boleslaw) தாய் தனிஸ்லாசின் உறவினர். இவர் பல நோய்களால் தாக்கப்பட்டு இறந்து போனார். இவரின் இறுதி சடங்கை ஆயர் தனிஸ்லாஸ் அவர்கள் நிறைவேற்றிவைத்தார். இதனால் அரசர் குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டது. இப்பிரச்சினைகளை ஆயர் தனிஸ்லாஸ் அவர்களே தீர்த்து வைத்தார். பண ஆசை பிடித்தவனாகவும், இன்னும் பல தீய செயல்களுக்கும் அடிமைப்பட்டவனாகவும் வாழ்ந்த அரசர் இரண்டாம் பொலோஸ்லாசை மனந்திருப்பினார்.

ஆனால் மீண்டும் அரசர் பாவ நிலைக்கே திரும்பினான். ஆயர் தனிஸ்லாஸ் மீண்டும் அவரைக் கண்டித்தார். இதனால் அரசன் கோபம் கொண்டு திருச்சபைக்கு எதிராகச் செயல்பட்டான். ஆயர் திருப்பலியாற்றிக் கொண்டிருந்தபோது, அவரை கொல்ல ஆள் அனுப்பினான். ஆனால் ஆயரிடமிருந்து பேரொளி ஒன்று வெளிப்பட்டதால், அவரை படையாட்கள் கொல்லாமல் விட்டுச் சென்றார்கள். இதனால் அரசனே வந்து ஆயரை 1079 ஆம் ஆண்டு ஏப்ரல் பதினொன்றாம் தேதி வெட்டிக் கொன்றான். இப்பெரிய பாவத்தை செய்ததால் போலந்து நாட்டை விட்டு விரட்டப்பட்டான். பின்னர் ஹங்கேரி நாடு சென்று, ஓசியாக் என்ற ஊரிலிருந்த புனித ஆசீர்வாதப்பர் சபையில் சேர்ந்து, தன் பாவங்களுக்கு பரிகாரம் செய்தான்.

ஆயர் தனிஸ்லாஸ் ஓர் நல்ல ஆயனாக இருந்து திருச்சபையை வழிநடத்தினார். ஏராளமான ஏழைகளுக்கு உதவிசெய்தார். தம் மறைமாவட்டதிலிருந்த மறைபரப்பு பணியாளர்களை ஆண்டுதோறும் சந்தித்து இறைப்பணியை திறம்பட செய்ய ஊக்கமூட்டினார். 1253 ஆம் ஆண்டு திருத்தந்தை நான்காம் இன்னோசென்ட் அவர்களால், அசிசி நகரில் புனிதராக உயர்த்தப்பட்டார். ஆயர் தனிஸ்லாஸ் போலந்து நாட்டிற்குப் பாதுகாவலராக உள்ளார்.


செபம்:
அன்பான இறைவா! உமது மாட்சிமைக்காக தம் உயிரை இழந்த புனித தனிஸ்லாஸைப் போல, எம் திருச்சபையிலுள்ள ஒவ்வொரு ஆயர்களும் உமது மகிமைக்காக வாழ வரம் தாரும்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

சபைநிறுவுநர் ஹெலேனா குவேரா Helena Guerra
பிறப்பு: 23 ஜூன் 1835 லூக்கா Lucca, இத்தாலி
இறப்பு: 11 ஏப்ரல் 1914 இத்தாலி

புனித லாங்கினஸ்

யார் இந்த புனித லாங்கினஸ்
பைபிளில் புதிய ஏற்பாட்டு கால நூல்கள் என்ற அடிப்படையில் பல புத்தகங்கள், திருமுகங்கள் உள்ளது...அவற்றில் ஒன்று ‘நிக்கோதேமுவின் திருமுகம்’.
இவ் நூல் நாம் பயன்படுத்தும் புதிய ஏற்பாடு பைபிளில் இல்லை...ஆனாலும் பல ஆதி திருச்சபை குறித்து குறிப்புகளை கொண்டுள்ளது..
அந்த நூலில் இயேசுவின் விலாவில் ஈட்டியால் குத்தியவரின் பெயரும் அவரைப் பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. இயேசுவைக் குத்தப் பயன்படுத்தப்பட்ட ஈட்டியானது தூய அல்லது புனித ஈட்டி (Relics) என அழைக்கப்படுகிறது.

ஆதி திருச்சபை எழுத்துக்களின் அடிப்படையில் அந்த வீரனின் பெயர் ‘லாங்கினஸ்’. பார்வைக் குறைபாடு உடையவர். இவரே இயேசுவின் விலாவில் ஈட்டியால் குத்துகிறார். சிலுவைக் குற்றவாளிகளின் விலாவில் ஈட்டியால் குத்தும் வழக்கம் அன்றைய காலத்தில் இருந்தது. ஒருவகையில் விரைவில் குற்றவாளிகள் இறக்கவும், அவர்கள் இறந்து விட்டார்களா என்பதை ஊர்ஜிதப்படுத்தவும் இதைச் செய்வார்கள்.

இயேசுவின் விலாவில் இவர் குத்துகிறார். அப்போது இரத்தமும், தண்ணீரும் வடிகின்றன. தெறிக்கின்ற குருதியில் சில துளிகள் பார்வைக் குறைபாடுடைய அவனது கண்களில் விழுகின்றன. அவனது கண்கள் முழுமையாய் குணமடைகின்றன. ஈட்டியால் தன்னைக் குத்தியவருக்கும், நன்மையைச் செய்கிறது குணமளிக்கும் குருதி.

இயேசு உயிர்த்தெழுந்ததைக் கேள்விப்பட்டபின் அவர் இயேசுவின் சீடர்களைச் சந்திக்கிறார். அதன் பின் அவர் கிறிஸ்தவராக மாறுகிறார்.

தனது வேலையை உதறிவிட்டு நற்செய்தி அறிவித்தலில் ஈடுபட்டார். சொந்த ஊரான கப்பதோஷியாக்குத் திரும்பி இயேசுவின் நற்செய்தியைப் பறைசாற்றி வேத சாட்சியாக மரித்தார்...

இவரின் நினைவுச்சின்னங்கள் இத்தாலியில் புனித அகுஸ்தீனார் தேவாலயத்தில் உள்ளது...

THE ROMAN SOLDIER WHO PIERCED THE SIDE OF JESUS CONVERTED AND BECAME A SAINT?
St. Longinus is the centurion who pierced the side of Our Lord while He was hanging on the Cross. St. Longinus, who was nearly blind, was healed when some of the blood and water from Jesus fell into his eyes. It was then he exclaimed "Indeed, this was the Son of God!" [Mark 15:39]. St. Longinus then converted, Left the army, took instruction from the apostles and became a monk in Cappadocia. There he was arrested for his faith, his teeth forced out and tongue cut off. However, St. Longinus miraculously continued to speak clearly and managed to destroy several idols in the presence of the governor. The governor, who was made blind by the demons that came from the idols, had his sight restored when St. Longinus was being beheaded, because his blood came in contact with the governors' eyes. St. Longinus' relics are now in the church of St Augustine, in Rome. His Lance is contained in one of the four pillars over the altar in the Basilica of St Peter's in Rome.

தூய வால்டேட்ரூடிஸ் (ஏப்ரல் 09)

இன்றைய புனிதர் : 
(09-04-2020) 

தூய வால்டேட்ரூடிஸ் (ஏப்ரல் 09)
“என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவை எல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறு பெற்றார்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள் ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும் (மத் 5: 11-12)

வாழ்க்கை வரலாறு

வால்டேட்ரூடிஸ், பெல்ஜியம் நாட்டில் ஏழாம் நூற்றாண்டில் பிறந்தார். இவருடைய குடும்பமே புனிதர்களின் குடும்பம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்தளவுக்கு இவரது தாய், தந்தை, இவருடைய அக்காள், கணவர், இவருடைய நான்கு பிள்ளைகள் என எல்லாரும் பின்னாளில் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டார்கள்.

வால்டேட்ரூடிஸ், அழகில் சிறந்தவராய் இருந்தார். அதனால் இவரை மணந்து கொள்வதற்கு நிறையப் பேர் போட்டி போட்டுக்கொண்டு வந்தார்கள். ஆனால் வால்டேட்ரூடிசின் தந்தையோ அவருக்குப் பிடித்தாற்போல் ஓர் இளைஞனைத் தேர்ந்தெடுத்து, அவருக்கு வால்டேட்ரூடிசை மணமுடித்துக் கொடுத்தார். அவர் பெயர் மடெல்கார் என்பது ஆகும். மடெல்கர் வால்டேட்ரூடிஸ்மீது அன்பு மழை பொழிந்து அவரை நல்ல விதமாய் பார்த்துக் கொண்டார்.

இப்படி வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாய் போய்க்கொண்டிருந்த தருணத்தில், வால்டேட்ரூடிஸ்மீது பொறமை கொண்டவர்கள் அவர் மிகவும் தவறான பெண்மணி என்று பழி போட்டார்கள். அத்தகைய தருணங்களில் வால்டேட்ரூடிஸ் மனம் உடைந்து போய்விடவில்லை. மாறாக ஆண்டவர் இயேசுவின்மீது மக்கள் அபாண்டமாகப் பழி போட்டபோது, அவர் எப்படி அதை எதிர்கொண்டாரோ அதுபோன்று வால்டேட்ரூடிசும் மக்கள் தன்மீது சுமத்திய அபாண்டமான பழிகளை துணிவோடு எதிர்கொண்டார்.

இதற்கு மத்தியில் வால்டேட்ரூடிஸ் – மடெல்கர் தம்பதியினருக்கு இறைவன் நான்கு குழந்தைகளைக் கொடுத்து ஆசிர்வதித்திருந்தார். நான்காவது குழந்தையைப் பெற்ற சிறுது நாட்கள் கழித்து வால்டேட்ரூடிசின் கணவர் துறவற வாழ்க்கை மேற்கொள்வதாக அவரிடத்தில் சொன்னார். வால்டேட்ரூடிஸ் அதற்கு எந்தவித மறுப்பும் சொல்லாமல், தன் கணவர் துறவற வாழ்க்கை மேற்கொள்வதற்கு முழு அனுமதியும் கொடுத்தார். இதற்கு பின்னர் வால்டேட்ரூடிஸ் எப்போதும் ஜெபத்திலும் தவத்திலும் தன்னை முழுமையாய் ஈடுபடுத்திக் கொண்டார். தன்னுடைய பிள்ளைகளும் ஓரளவு வளர்ந்த பின் வால்டேட்ரூடிசும் துறவற மடத்தில் சேர்ந்து, இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழத் தொடங்கினார்.

துறவற மடத்தில் சேர்ந்த பின்பு வால்டேட்ரூடிஸ் ஏழைகள் மீது உண்மையான அன்பைக் காட்டினார். மட்டுமல்லாமல் அவர்களுக்காக ஜெபித்தார். இப்படி இறைவனுக்காக தன்னை முற்றிலும் அர்ப்பணித்து வாழ்ந்த வால்டேட்ரூடிஸ் 688 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருடைய இறப்புக்குப் பின்னர் இவருடைய கல்லறையில் நிறைப் புதுமைகள் நடக்கத் தொடங்கின.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய வால்டேட்ரூடிசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. விமர்சனங்களை விவேகத்தோடு எதிர்கொள்வோம்

தூய வால்டேட்ரூடிஸ் மிகவும் அழகாக இருந்ததால், அவர்மீது பொறமை கொண்ட ஒருசில விஷமிகள் அவரைக் குறித்து மிகவும் தவறாகப் பேசினார்கள். அத்தகைய தருணங்களில் எல்லாம் அவர் இயேசுவையே முன்மாதிரியாகக் கொண்டு, அவர் எப்படி தன்மீது சுமத்தப்பட்ட விமர்சனங்களை விவேகத்தோடு எதிர்கொண்டாரோ அதுபோன்று வால்டேட்ரூடிசும் தன்மீது சுமத்தப்பட்ட விமர்சனங்களை விவேகத்தோடு எதிர்கொண்டார்.

பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கும் நம் ஒவ்வொரின் மீதும் பலர் தேவையில்லாமல் விமர்சனங்களை, குற்றச்சாட்டுகளை வைப்பார்கள். அப்படிப்பட்ட தருணத்தில் நாம் தூய வால்டேட்ரூடிசை போன்று விமர்சனங்களை விவேகத்தோடு எதிர்கொள்ளவேண்டும் என்பதுதான் நம் கருத்தில் கொள்ளவேண்டிய செய்தியாக இருக்கின்றது. இன்னும் சொல்லப் போனால், பலருக்கு நல்லத்தைப் பார்த்து பாராட்டக்கூடிய மனப்பக்குவம் வருவதில்லை. அவர்கள் எப்போதும் குறை கண்டுபிடிப்பதையே தங்கள் தொழிலாக வைத்திருக்கின்றார்கள். இவர்களிடத்திலும் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

ஒரு சமயம் காட்டு வழியாகப் போன ஒருவன் அதிசய நாயைக் கண்டான். அது தண்ணீரில் சாவகாசமாய் நடந்து போகக்கூடிய நாய். மட்டுமல்லாமல் கண்ணில் பட்ட பறவைகளைப் பிடித்து வந்து கரையில் போடும். அந்த அதிசய நாயோடு நட்பு பாராட்டி ஊருக்குள் அழைத்து வந்து, ஆசையோடு வீட்டுக் காரியிடம் காட்டினான். அவளும் ஆசையோடு பார்த்தாள். அவளுடைய கண் முன்னாலே அந்த நாய் தண்ணீரில் நடந்து போனது; கண்ணில் பட்ட பறவைகளைப் பிடித்து வந்து கரையில் போட்டது. இதைப் பார்த்த வீட்டுக்காரி, “என்னங்க இந்த நாய் தண்ணீரில் நடந்து போகிறது, இதற்கு நீந்தத் தெரியாதா?” என்றாள். இதைக் கேட்டு அவளுடைய கணவன் தன் தலையில் அடித்துக் கொண்டான்.

தண்ணீரில் நடந்து போகக்கூடிய அற்புத நாயாக அது இருக்க, அந்த நாய்க்கு நீந்தத் தெரியாது என்று நொட்டை சொன்ன அந்தப் பெண்மணியைப் போன்று நிறையப் பேர், பாராட்டுவதற்கு நிறைய இருந்தும் விமர்சிக்கவே செய்வார்கள். இப்படிப்பட்டவர்களை விவேகத்தோடு எதிர்கொள்வது சிறப்பு.

ஆகவே, தூய வால்டேட்ரூடிசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று இறைப்பணியை சிறப்புடன் செய்வோம், எதிர்வரும் சவால்களைத் துணிவோடு வெல்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

புனித. மக்தலேனா கனோசா (Magdalena Conassa), April 10

இன்றைய புனிதர்
2020-04-10
புனித. மக்தலேனா கனோசா (Magdalena Conassa),
சபை நிறுவுனர்
பிறப்பு
02 மார்ச் 1774
வெரோனா, இத்தாலி
இறப்பு
10 ஏப்ரல் 1835
வெரோனா, இத்தாலி
முத்திபேறுப்பட்டம்: 1941 திருத்தந்தை 12 ஆம் பயஸ்
புனிதர் பட்டம்: 2 அக்டோபர் 1988 திருத்தந்தை 2 ஆம் ஜான் பால்

புனித மக்தலேனா கனோசா 1774 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் நாள் இத்தாலி நாட்டிலுள்ள வெரோனாவில் பிறந்தார். மார்க்கிராப்பின் ஒக்டோவியூஸ், தெரேசா ஸ்லூவா இவரின் பெற்றோர். மக்தலேனா ஐந்து வயதாக இருக்கும்போது அவரின் தந்தை விபத்தில் இறந்துவிட்டார். இதனால் தன் தாய் மீண்டும் ஓர் மறுமணம் செய்துகொண்டார். புதிய தந்தையால் மக்தலேனா பல துன்பங்களை அனுபவித்தார். தாழ்ச்சியிலும், பக்தியிலும் சிறந்து விளங்கிய மக்தலேனா குழந்தையாக இருந்த போதே துறவியாக வேண்டுமேன்று ஆசைப்பட்டார். மக்தலேனா தன் ஊரிலிருந்த கார்மேல் மடத்திற்கு சென்று அவ்வப்போது ஜெபித்து வந்தார். சிறுவயதில் பெற்றோரின் கொடுமை தாங்க முடியாமல் கார்மேல் மடத்திற்கு சென்று தஞ்சம் அடைந்தார். அங்கு மக்தலேனா கார்மேல் மட கன்னியர்களால் வளர்க்கப்பட்டார். தம் பள்ளிப்படிப்பை முடித்தபின், தம் பதினைந்தாம் வயதில் கார்மேல் மடத்தில் துறவற பயிற்சியில் சேர்ந்தார். எட்டு மாதங்கள் கழித்து, தன் சொந்த ஊரிலிருந்து, ற்றோவிசோ(Treviso) என்ற ஊரிலிருந்த கார்மேல் மடத்திற்கு பயிற்சிக்காக அனுப்பிவைக்கப்பட்டார். ஆனால் அங்கிருந்து சில மாதங்களிலிலேயே விரைவில் வெரொனா திரும்பினார். அப்போது அரசர் நெப்போலியன் வடக்கு இத்தாலியை ஆக்கிரமித்தான். இதனால் மக்தலேனா தன் சொந்த வீட்டு நிர்வாகத்தை கவனிக்க வேண்டியதாக இருந்தது.

நெப்போலியனின் ஆக்கிரமிப்பால் தன் அரண்மனையிலிருந்த பல குழந்தைகள் காயப்பட்டு, அனாதைகளாக விடப்பட்டனர். இதனால் மக்தலேனா தன் அரண்மனையிலே, ஓர் இல்லத்தில் குழந்தைகளை தங்க வைத்து, பராமரித்து அவர்களுக்கு கல்வியை வழங்கினார். 1808 ஆம் ஆண்டு கைவிடப்பட்ட குழந்தைகளை தொடர்ந்து பராமரிக்க வேண்டி, உதவிக்காக ஜெனோவா மாவட்டத்திலிருந்து ஓர் அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் பயனாக 1808 ஆம் ஆண்டு அன்பின் மகள்கள்(Daughters of Love) என்ற சபையை நிறுவினார். பிறகு 1810 மற்றும் 1812 ஆம் ஆண்டுகளில் வெனிஸ் நகரிலிருந்த தெருகுழந்தைகளுக்கு, வெனிஸில் 2 சபையையும், 1816 ஆம் ஆண்டு மிலானிலுள்ள பெர்காமோவிலும்(Bergamo) சபைகளை நிறுவினார். இச்சபைகளை தொடர்ந்து பராமரிக்க அப்போது ஆஸ்திரிய நாட்டில் அரசராக இருந்த முதலாம் பிரான்ஸ் அவர்களால் ஆதரவு கொடுக்கப்பட்டது. அரசர் தொடர்ந்து எல்லா விதங்களிலும் உதவிகளை வழங்கினார். 1828 ஆம் ஆண்டு திருத்தந்தை பன்னிரெண்டாம் லியோ அவர்களால், இச்சபை திருத்தந்தையின் அதிகாரத்திற்குட்பட்ட சபையாக அங்கீகரிக்கப்பட்டது. அதன்பிறகு இச்சபை இத்தாலி, இந்தியா, இந்தோனிசியா, ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா என பல நாடுகளில் பரவியது.

மக்தலேனா 1835 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் நாள் வெரோனாவில் இறந்தார். 1941 ஆம் ஆண்டு திருத்தந்தை 12 ஆம் பயஸ் அவர்களால் முத்திபேறுப்பட்டம் கொடுக்கப்பட்டது. திருத்தந்தை 2 ஆம் ஜான் பால் அவர்களால் 1988 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டாம் நாள் புனிதராக அறிவிக்கப்பட்டார்.


செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! புனித மக்தலேனாவைப் போல, நாங்களும் ஏழை, எளியவர்களின் மேல் அக்கறை கொண்டு வாழ உமதருள் தாரும்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

அட்மோண்ட் நகர் துறவி எங்கல்பெர்ட் Engelbert von Admont
பிறப்பு: 1250, ஸ்டையர்மார்க் Steiermark, ஆஸ்திரியா

08 April 2020

தூய ஜூலி பில்லியர்ட் (ஏப்ரல் 08)

இன்றைய புனிதர் : 

தூய ஜூலி பில்லியர்ட் (ஏப்ரல் 08)
“நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்; எனவே என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். என் நுகம் அழுத்தாது, என் சுமை எளிதாய் உள்ளது. (மத் 11: 29)

வாழ்க்கை வரலாறு

ஜூலி பில்லியர்ட், 1751 ஆம் ஆண்டு, ஜூலை திங்கள் 13 ஆம் நாள், பிரான்ஸ் நாட்டில் உள்ள பிக்கார்டி என்னும் இடத்தில் பிறந்தார். ஜூலி, குடும்பத்தில் ஐந்தாவது பிள்ளை. சிறு வயது முதலே இவர் மிகவும் பக்தியுள்ள குழந்தையாக வளர்ந்து வந்தார். அதனால் இவர் மிகக் குறைந்த வயதிலே நற்கருணை ஆண்டவரை உட்கொள்ளும் வாய்ப்புப் பேறுபெற்றார்.

ஜூலிக்கு பதினான்கு வயது நடக்கும்போது கற்பு என்னும் வார்த்தைப்பாட்டை எடுத்துக்கொண்டு இறைவனுக்கு மிகவும் பிரமாணிக்கமாய் வாழ்ந்து வந்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஜூலியின் தந்தை செய்து வந்த வியாபாரம் பெரிய நஷ்டமடைந்தது. இதனால் குடும்பம் மிகவும் நொடிந்துபோனது. இந்தக் கஷ்டத்திலிருந்து மீண்டுவர ஜூலியின் குடும்பத்தாருக்கு வெகு நாட்கள் ஆகிவிட்டது. இப்படி நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க ஜூலிக்கு 23 வயது நடந்து கொண்டிருக்கும்போது ஜூலியின் தந்தைக்குப் பிடிக்காத ஒருவர் அவர்மீது துப்பாக்கியை வைத்துச் சுட முயன்றார். அதிர்ஷ்டவசமாக ஜூலியின் தந்தை அதிலிருந்து தப்பித்துக் கொண்டார். ஆனாலும் அது தந்த அதிர்ச்சி ஜூலியை நடக்க முடியாமல் செய்தது. இதனால் அவர் படுக்கையிலே காலம் தள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இப்படிப்பட்ட சூழ்நிலை உருவானாலும்கூட ஜூலி மனந்தளராமல், இறைவனிடத்தில் இடைவிடாது ஜெபித்து வந்தார். ஜூலிக்கு 50 வயது நடக்கும்போது குருவானவர் ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் திரு இருதய ஆண்டவருக்கு நவநாள் பக்தி முயற்சிகளை மேற்கொண்டார். நவநாளின் ஐந்தாம் நாளின்போது இவர் திரு இருதய ஆண்டவருக்கு முன்பாக ஜெபித்துக் கொண்டிருக்கும்போது இவர் கால் நன்றாக மாறி நடக்கத் தொடங்கினார். இதைக் கண்டு எல்லாரும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். இந்தன்பிறகு இவர் 1803 ஆம் ஆண்டு தனக்குக் நெருக்கமாக இருந்த ஒருசில சகோதரிகளின் உதவியுடன் புதிதாக ஒரு சபையை ஏற்படுத்தினார். இந்த சபையின்மூலம் இவர் பல ஏழை எளிய குழந்தைகளுக்கு கல்வி அறிவு புகட்டி வந்தார். அது மட்டுமல்லாமல் பல இடங்களில் துறவு மடங்களைத் துவங்கி மக்களுக்கு மத்தியில் ஆன்மீக எழுச்சி உருவாகக் காரணமாக இருந்தார்.

இந்தக் காலக் கட்டத்தில்தான் பிரஞ்சுப் புரட்சியானது ஏற்பட்டது. இதனால் திருச்சபைக்கு அச்சுறுத்தலான சூழ்நிலை ஏற்பட்டது. இத்தகைய சூழ்நிலையிலும் ஜூலி மனந்தளராமல் ஆண்டவருடைய பணியைத் திறம்படச் செய்து வந்தார் இப்படிப் பல்வேறு பணிகளை ஓய்வின்றிச் செய்துவந்த ஜூலி உடல்நலம் குன்றி 1816 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1969 ஆம் ஆண்டு திருத்தந்தை ஆறாம் பவுலால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ஜூலி பில்லியர்ட்டின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், இவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. மனந்தளராது இருத்தல்

தூய ஜூலி பில்லியர்டின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கும்போது நம்முடைய மனதில் தோன்றக்கூடிய ஒரே சிந்தனை மனந்தளராது விடாமுயற்சி உழைக்கவேண்டும் என்பதுதான். ஜூலியின் கால்கள் முடமாகி, நடக்க முடியாமல் போனாலும் கூட அவர் மனந்தளராமல் விடாமுயற்சியோடு உழைத்து வந்தார். அவருடைய அந்த உழைப்புக்குப் பலன் கிடந்தது. நாமும் நம்முடைய வாழ்வில் ஏற்படக்கூடிய துன்பங்கள், நெருக்கடிகளைக் கண்டு துவண்டு விடாமல், விடர்முயற்சியோடு உழைத்தோம் என்றால், வாழ்வில் வெற்றியைப் பெறுவது உறுதி.

1952 ஆம் ஆண்டு இமயமலைச் சிகரத்தை எட்டிப் பிடிக்க முயற்சி செய்து தோல்வி அடைந்தவர் எட்மன்ட் ஹிலாரி என்பவர். அதற்கு முன்னும் அவர் பல முயற்சிகளை மேற்கொண்டு தோல்விகளைச் சந்தித்திருந்தார். இதற்கு மத்தியில் அவருடைய முயற்சிகளைப் பாராட்டி ஊக்குவிக்க ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விழா மேடையஈல் இமயமலைச் சிகரத்தைக் கம்பீரமாக வரைந்திருந்தார்கள். அதைப் பார்த்த ஹிலாரி, “ஏய் எவரஸ்ட் சிகரமே! என்னை நீ பலமுறை தோற்கடித்துள்ளாய்! அடுத்தமுறை உன்னை நான் நிச்சயம் தோற்கடிப்பேன். ஏன் தெரியுமா? உன் வளர்ச்சி என்றோ முடிந்து போய்விட்டது. ஆனால், என் விடாமுயற்சியோ நாள்தோறும் வளர்ந்து கொண்டே இருக்கின்றது” என்று உரக்கச் சொன்னார்.

அவர் சொன்னது போன்றே மனந்தளராது விடாமுயற்சியோடு போராடி 1953 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் நாள் சிகரத்தை அடைந்தார். அவருடைய விடாமுயற்சி அவருக்கு வெற்றியைக் கொணர்ந்தது. ஜூலி பில்லியர்ட்டும் மனந்தளராது உழைத்தார். அதனால் வாழ்வில் வெற்றிகளை குவித்தார்.

ஆகவே, தூய ஜூலி பில்லியர்ட்டின் நினைவு நாளைக் கொண்டாடும் நாமும் அவரைப் போன்று மனந்தளராது விடாமுயற்சியோடு உழைப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Saint of the Day : (08-04-2020)

St. Julie Billiart

She was born on July 12, 1751 at Cuvilly, Picardy, France to Jean-Francois Billiart and Marie-Louise-Antoinette. She attended a one-room school at Cuvilly. She was very pious and was very interested in studying the religious lessions. The Parish Priest recognized her talent in religious studies and allowed her to take the first communion and to be confirmed at age 9. She was suffering from paralysis of lower limb due to a shock from age 22 years and was almost bedridden. She was held in very high esteem for her piety and virtue. The foundation for the Sisters of the Notre Dame was laid, for the uplift of the poor people. The first superiors of the foundation were Julie and Francois. The first pupils were nine orphans. She was miraculously cured from the paralysis on June 1, 1804 on the feast day of the Sacred Heart after a Novena was made. The Sisters of Notre Dame was approved on June 19, 1806 by an Imperial Decree. She founded fifteen convents in a period of twelve years. She died on April 8, 1816 at Namur, Belgium.

She was beatified by pope Pius-X on May 13, 1906 and canonized by pope Paul-VI on June 22, 1969. She is a patron against poverty, bodily ills and diseases.

---JDH---Jesus the Divine Healer---

07 April 2020

தூய ஜான் பாப்டிஸ்ட் தெலசால் (ஏப்ரல் 07)

இன்றைய புனிதர்

தூய ஜான் பாப்டிஸ்ட் தெலசால் (ஏப்ரல் 07)
நிகழ்வு

ஒரு நகரில் பிரபலமான பள்ளிக்கூடம் இருந்தது. அந்த பள்ளிக்கூடத்தில் தானும் படிக்காமல், தனக்கு அடுத்திருப்பவனையும் படிக்கவிடாமல் அழும்பு செய்துகொண்டிருந்த அமைச்சரின் மகனை, அவனுக்கு பாடம் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்த ஆசிரியர் அடிப்பதற்காக கையை ஓங்கியபோது அவன் அவரைப் பார்த்துச் சொன்னான், “ஒரு இலட்சம் ரூபாய் டொனேசன் கொடுத்துச் சேர்ந்திருக்கும் என்னை நீங்கள் அடித்தால், நடப்பதே வேறு!. “நீ கொடுத்தது ஒரு இலட்சம் என்றால் நான் கொடுத்ததோ பத்து இலட்சம்” என்று சொல்லியபடியே ஆசிரியர் அவனைப் பின்னியெடுத்து விட்டார்.

கல்விக்கூடங்கள் இன்றைக்கு காசு கொழிக்கும் நிறுவனங்களாக மாறிப்போய்விட்டதை இந்த நிகழ்வானது வேடிக்கையாகவும் வேதனையோடு பதிவு செய்கிறது.

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் ‘கல்வித் தந்தை’ என அழைக்கப்படும் ஜான் பாப்டிஸ்ட் தெலசால் என்பவருடைய விழாவைக் கொண்டாடுகின்றோம். இவர் பிரான்சு நாட்டில் உள்ள ரிம்ஸ் என்ற நகரில் 1651 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி பிறந்தார். இவருடைய குடும்பம் மிகவும் வசதியான குடும்பம். இருந்தாலும் இவர் சிறுவயதிலிருந்து எளிமையாய் பக்தியாய் விளங்கினார். எந்தளவுக்கு என்றால் ஒருமுறை இவருக்கு பிறந்தநாள் வந்தபோது, இவருடைய வீட்டில் இருந்தவர்கள் எல்லாரும் விழா ஏற்பாடுகளை ஆடம்பரமாகவும் தடபுடலாகவும் செய்துகொண்டிருந்தார்கள். ஆனால் இவரோ யாருக்கும் தெரியாமல் தன்னுடைய பாட்டியின் அறைக்குச் சென்று புனிதர்களைப் பற்றி தனக்கு சொல்லித் தருமாறு கேட்டுக்கொண்டிருந்தார். அந்தளவுக்கு ஆடம்பரத்தை நாடாமால் ஆன்மீக காரியங்களில் தன்னை முழுவதும் ஈடுபடுத்திக்கொண்டார்.

ஆலயத்திற்கு சென்று குருவானவருக்கு திருப்பலியில் உதவி செய்வதில் இவர் பெரிதும் மகிழ்ந்திருந்தார். இதனால் இவருடைய உள்ளத்தில் தானும் ஒரு குருவாக மாறவேண்டும் என்ற எண்ணம் பதினோறாவது வயதிலே தோன்றியது. இந்த எண்ணம் அவருடைய இருபத்தி ஏழாவது வயதில் நிறைவேறியது. தெலசால் குருவாக மாறிய சமயம் ஜான்சனிசம் என்ற தப்பறைக் கொள்ளை பிரான்சு நாடு முழுவதும் பரவியிருந்தது. (ஆண்டவர் இயேசு கிறிஸ்து எல்லாருக்கும் கடவுளில்லை, ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்கு மட்டுமே அவர் கடவுள் என்பதுதான் இக்கொள்கையின் அடிப்படை வாதம்). இது ஒருபுறமிருக்க எப்போது வேண்டுமானாலும் நாட்டில் போர் ஏற்படலாம் என்ற பயம் மக்கள் மத்தியில் அதிகமாக நிலவியது. மக்கள் வறுமையிலும் அடிப்படைக் கல்வியைக் கூட பெறாமல் வாழ்ந்துகொண்டிருந்தார்கள. இதைப் பார்த்த தெலசால் மக்களுக்கு நல்ல கல்வியறிவை புகட்டவேண்டும், ஏனென்றால் நல்ல கல்விதான் நேர்மையான, நல்ல கிறிஸ்தவர்களை உருவாக்கும் என்பது அவருடைய ஆழமான நம்பிக்கையாக இருந்தது. எனவே அவர் சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த ஏழை எளியவர் கல்வி பெற பள்ளிக்கூடங்களைத் திறந்தார். அவர்களுக்கு நல்ல கல்வியைப் புகட்டினார்.

தெலசால் இப்படிப்பட்ட ஒரு பணியைத் தொடங்கியதும், அவருக்கு நிறைய மனிதர்களிடமிருந்து எதிர்ப்புகள் வந்தன. ஆனால் அவர் அவற்றையெல்லாம் துணிவோடு எதிர்கொண்டார். மாணவர்களுக்கு நல்ல கல்வி கொடுக்கவேண்டும் என்றால் அதற்கு முதலில் ஆசிரியர்கள் நல்லறிவைப் பெறவேண்டும் என்று சொல்லி, ஆசிரியர்களுக்கு பயிற்சிப் பள்ளியைத் தொடங்கினார். அதன்வழியாக அவர்களுக்கு பயிற்சியையும் கொடுத்தார். இப்படி உருவான ஆசிரியர்களைக் கொண்டே ‘கிறிஸ்தவப் பள்ளிகளின் சகோதரர்கள்’ என்றதொரு புதிய சபையைத் தொடங்கினார்.

தெலசால் மேற்கொண்ட முயற்சிகளில் மிகவும் சிறப்பானது மாணவர்கள் தாய்மொழியில் பாடங்களைக் கற்கச் செய்தது ஆகும். இதற்காக அவர் பெரிதும் பாடுபட்டார். இன்றைக்கு தாய்மொழியில் பாடங்களை கற்றால்தான் குழந்தைகள் அறிவிலும் சிந்திக்கும்திறனிலும் சிறப்பாக வளர்வார்கள் என்றதொரு கருத்து வலியுறுத்தப்படுகிறது. இதனை அன்றைக்கே செய்தவர் தெலசால். இப்படி கல்வியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய தெலசால் தான் செய்த பணிகள் தனக்கு நிறைவைத் தந்திருக்கிறது உணர்ந்த பிறகு, இப்பொறுப்புகளை தலைமைச் சகோதரரான பர்த்திலேமேயு என்பவரிடம் ஒப்படைத்துவிட்டு தன்னுடைய அறுபத்தி எட்டாவது வயதில் இறையடி சேர்ந்தார்.

திருத்தந்தை பதிமூன்றாம் சிங்கராயர் இவரை 1900 ஆம் ஆண்டு புனிதராக உயர்த்தினார். 1950 ஆம் ஆண்டில் திருத்தந்தை பனிரெண்டாம் பத்திநாதர் இவரை ‘பள்ளி ஆசிரியர்களின் பாதுகாவலர்’ என்று அறிவித்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

‘காலத்திற்கு ஏற்ற கல்விமுறைத் தந்தை’ என அழைக்கப்படும் தூய ஜான் பாப்டிஸ்ட் தெலசாலின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. அனைவருக்கும் கல்வி

தூய தெலசால் கல்வியில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. பணக்காரர்களும் வசதிபடைத்தவர்களும் மட்டும் கல்வியைப் பெற முடியும் என்ற நிலையை மாற்றி எல்லா மக்களும் குறிப்பாக ஏழை எளிய மக்களும் நல்ல கல்வியை பெற்றுக்கொள்ள பெரிதும் பாடுபட்டார். அவருடைய விழாவைக் கொண்டாடும் நாம், எல்லா மக்களும் நல்லதொரு கல்வியைப் பெற நாம் முயற்சிசெய்கிறோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நம் ஆண்டவராகிய இயேசு குருவும் ஆசிரியரும் அரசரும் ஆவார். அவர் மக்களுக்கு போதிக்கும் பணியை சிறப்பாக செய்தார். அவருடைய போதனையைக் கேட்டு நிறைய பேர் ஆறுதலையும் மனமாற்றத்தையும் அடைந்தார்கள் என்று நற்செய்தியில் படிக்கின்றோம். அவர் வழியில் நடக்கும் நாம் போதிக்கும் பணியை சிறப்பாகச் செய்யவேண்டும் என்பதே நமக்கு முன்பாக உள்ள சவாலாக உள்ளது. இன்றைக்கு உள்ள கல்விமுறை முற்றிலுமாக மாறிப்போனது. அது அறிவைப் பெருக்குவதே நல்ல கல்வி என்று நினைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் உண்மை அதுவல்ல. “கல்வி என்பது வெறும் புத்தகப் படிப்பு மட்டுமல்ல, வேலை வாய்ப்புக்கான ஒரு சான்றிதழ் மட்டுமல்ல. மாறாக ஒருவரை முழு மனிதனாக மாற்றி தன்னம்பிக்கையையும் சமூக அக்கறையையும் மனிதநேயத்தையும் அவருள் வளர்ப்பதே உண்மையான கல்வி” என்பார் டாக்டர் ராதா கிருஷ்ணன். எவ்வளவு ஆழமான வார்த்தைகள் இவை. ஆகவே கல்விதான் விடுதலைக்கான ஆயுதம். அத்தகைய கல்வி நம்மில் சமூக அக்கறையையும் மனித நேயத்தையும் வளர்க்கவேண்டும் என்பதை உணர்த்து வாழ்வோம்.

மும்பையில் உள்ள ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் செயல்பட்டு வந்த நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் (NSS) ஒரு வார முகாமாக அருகே இருந்த சேரி மக்களோடு தங்கிப் பணிசெய்தார்கள். அப்போது அவர்கள் அங்கே இருந்த மக்களின் வாழ்வாதாரம், சமூக, அரசியல், பொருளாதாரம் மற்றும் கல்விநிலை எப்படி இருக்கின்றது என்ற ஓர் ஆய்வினை மேற்கொண்டார்கள். அந்த ஆய்வின் முடியில், அம்மக்கள் கல்வியறிவில் மிகவும் பின்தங்கியிருக்கிறார்கள், அதனால் அவர்களுடைய வளர்ச்சி ஐம்பது வருடங்களுக்கு பின்னோக்கி இருக்கிறது என்ற உண்மையையைக் கண்டறிந்தார்கள்.

இது நடந்து முப்பது ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். மீண்டுமாக அந்தக் கல்லூரியிலிருந்த நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் முன்பு சென்ற அதே சேரிப் பகுதிக்குச் சென்றார்கள். அவர்கள் அங்கு சென்றபோது முன்னாள் மாணவர்கள் அந்த சேரிப்பகுதினைக் குறித்து தயாரித்து வைத்திருந்த ஆய்வினையும் தங்களோடு எடுத்துக்கொண்டு சென்றார்கள். அவர்கள் நினைத்தார்கள் இம்மக்கள் வளர்ச்சியடைய இன்னும் இருபது முப்பது வருடங்கள் பிடிக்கும் என்று. ஆனால் அங்கு போய் பார்த்தபோது மக்களுடைய வாழ்வாதாரம் முற்றிலுமாக அங்கு மாறியிருந்தது. மக்கள் எல்லா நிலைகளிலும் குறிப்பாக கல்வியில் சிறந்து விளங்கியிருந்தார்கள். இதைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப்போன அந்த கல்லூரி மாணவர்கள், “இத்தகைய மாற்றத்திற்குக் காரணம் என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் சொன்ன ஒரே பதில், “இந்த ஊருக்கு புதிதாக வந்த ஆசிரியர்தான் எங்களுடைய இந்த முன்னேற்றத்திற்குக் காரணம். அவர் எங்களுக்கு நல்ல கல்வியறிவு புகட்டி எங்களை எல்லா நிலைகளிலும் வளர்த்தெடுத்தார். ஆனால் அவர் இன்றைக்கு உயிரோடு இல்லை”. இதைக் கேட்ட அந்த மாணவர்கள் மலைத்துப் பொய் நின்றார்கள்.

ஒரு ஆசிரியர் நினைத்தால் ஒரு சமூகத்தை நல்வழிக்குக் கொண்டுவர முடியும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.

ஆகவே கல்வியால் – ஆசிரியரால் – உண்டாகும் மாற்றம் எத்தகையது என உணர்வோம். இன்று நாம் கொண்டாடும் தூய தெலசாலைப் போன்று ஏழை எளியவர் மீது இரங்குவோம், அவர்களுக்கு நல்ல போதனையை சொல்லித் தருவோம். அதன்வழியாக நிறைவாய் பெறுவோம்.
Saint of the Day : (07-04-2020)

St. John Baptist de la Salle

He was born in Reims, France on April 30, 1651. From his early life he wanted to lead a religious life. He received the tonsure at Saint Salpice on March 11, 1662 at the age of 11 years. He was named the Canon of the Rheims Cathedral at the age of 15 years. But he left Saint Salpice on April 19, 1672 to educate his brothers and to lead the family, due to the death of his parents. He met one Nyel of Raven and as per his request he became interested in giving education to poor children. Then he dedicated much of his life for creating schools for imparting good education to poor children in France. He was then ordained as a priest on April 9, 1678 to dedicate his life fully for the service of poor. He started a new religious institute, the Institute of the Brothers of the Christian Schools, commonly known as Christian Brothers. No priests were involved in the institutes. He and his Brothers succeeded in creating a network of quality schools in France. He was the pioneer in the program for training the teachers. He was the father of modern pedagogy. He was a model of piety. He became more involved in the working with poor youth. He became a poor man by giving all his inheritance in the cause of poor people. He died on April 7, 1719 (Good Friday).

He was beatified on February 19, 1888 and canonized on May 24, 1900 by pope Leo-XIII. He was declared as the patron saint of Teachers by pope Pius-XII on May, 15, 1950.

---JDH---Jesus the Divine Healer---

06 April 2020

முத்திபேறுபெற்ற. மிக்காயேல் ரூவா April 6

இன்றைய புனிதர் : 
(06-04-2020) 

முத்திபேறுபெற்ற. மிக்காயேல் ரூவா (Michael Rua SDB)
பிறப்பு 9 ஜூன் 1837 தூரின், இத்தாலி

இறப்பு 6 ஏப்ரல் 1910 தூரின், இத்தாலி

முத்திபேறு பட்டம்: 29 அக்டோபர் 1972 திருத்தந்தை ஆறாம் பவுல்

இவர் 1837 ஆம் ஆண்டு இத்தாலி நாட்டிலுள்ள தூரின் (Turin) என்ற இடத்தில் ஜூன் 9 ஆம் நாள் பிறந்தார். இவர் தனது 15-ம் வயதில் தனது படிப்புகளை முடித்துவிட்டு, புனித தொன் போஸ்கோ அவர்கள் குருவாக இருந்தபோது, அவரால் தொடங் கப்பட்ட இளைஞரணியில் சேர்ந்தார். அப்போது மிக்காயேல் ரூவாவும், தொன்போஸ்கோவும் நண்பர்கள் ஆனார்கள். 1861 ஆம் ஆண்டு தொன்போஸ்கோ தொடங்கிய சலேசிய சபையில் இளைஞர்களுக்குப் பணியாற்றும் பணியில் ஈடுபட்டார். புனித சலேசிய சபை உருவாவதற்கு தொன்போஸ்கோவிற்கு பெரும ளவில் உதவிசெய்தார். அப்போது இளைஞர்களுக்கு எல்லாவி தங்களிலும் தாயாக இருந்து உதவிசெய்த தொன்போஸ்கோ வின் அம்மா இறந்ததால், இளைஞர்களுக்கு தாய் இல்லை என்ற எண்ணத்தைப் போக்க ரூவா தன் தாயை, இளைஞர்களு க்கு தாயாக இருந்து பணிபுரிய அர்ப்பணித்தார்.

இந்த இளைஞரணியானது திருச்சபையால் அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென்பதை உண ர்ந்து, தொன்போஸ்கோவிற்கு துணையாக, தனது 22-ம் வயதில் 1860 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் நாளன்று குருப்பட்டம் பெற்று இளைஞர்களுக்கு ஞானமேய்ப்பராக பணியாற்றினார். அதன் பிறகு தொன்போஸ்கோவிடமிருந்து விலகி சென்று 1885-ல் பார்சிலோனாவில் இளைஞர்களுக்கான சீடத்துவத்தை தொட ங்கினார். தமது 26 ஆம் வயதில் அழகு துணை வால்டோக்கோ (Mirabello) என்ற குழுவை தொடங்கி, அதற்கு முதல்வராக பொறுப்பேற்றார். பின்பு கத்தோலிக்க அவைகளின் மேலாள ராக பணியாற்றினார். 1865 -ல் போஸ்கோ அவர்களால் சலேசிய சபைகளுக்கு துணைமுதல்வராக அறிவிக்கப்பட்டார். பிறகு 1872 ஆம் ஆண்டு கிறித்தவர்களின் சகாயமாதா சபையை தொட ங்கினார். (Daughter of Mary Help of Christians)
                                                          1888 ஆம் ஆண்டு தொன்போஸ்கோ இறந்தவுடன் இச்சபையை வழிநடத்தும் பொறுப்பை மிக்கா யேல் ரூவா ஏற்றுக்கொண்டார். பின்பு திருத்தந்தை பதிமூன் றாம் லியோ (Pope Leo XIII) அவர்களால் இச்சபை சலேசிய சபை யாக அறிவிக்கப்பட்டது. பின்பு உலகம் முழுவதிலும் சென்று இச்சபை தொடங்கப்பட்டது. பிறகு தனது 73ஆம் வயதில் 1910 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் நாள் இத்தாலியிலுள்ள தூரின் என்ற நகரில் இறந்தார். தொன்போஸ்கோ இறந்தபோது 57 ஆக இருந்த சபைக்குழுமங்களை (communities) ரூவா 345 சபை க்குழுமங்களாக பெருக்கினார். 773 ஆக இருந்த சலேசியர்களை 4000-மாக பெருக்கினார். 6 ஆக இருந்த சபை மாநிலங்களை 34 மாநிலங்களாக (Provincialate) 33 உலக நாடுகளில் தொடங்கி வைத்தார். இவர் திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களால் 1972 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் நாள் முத்திபேறு பட்டம்(Blessed) கொடுக்கப்பட்டது. இன்று வரை "Don" என்ற பெய ரிலேயேதான் சலேசிய குழுமங்கள் அழைக்கப்படுகின்றது.


செபம்:
உமது சிறகுகளின் நிழலில் வைத்து எம்மை பாதுகாத்து வழிநடத்திவரும் எம் அன்பு இறைவா! எங்களால் இயன்றவரை ஓர் நல்ல இளைய சமுதாயத்தை உருவாக்க, எமக்கு உமது அருளையும், ஞானத்தையும் தந்து வழிநடத்தியருளும்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Saint of the Day : (06-04-2020)

Blessed Michele Rua

Son of a weapons manufacturer. Attended a Don Bosco Oratory as a boy, and met Saint John. He impressed Don Bosco so much that the future saint sent Michele to college, and made him his assistant in youth work. Priest. Member of the Salesians of Don Bosco. First successor to Saint John Bosco as Superior General of the Salesians; under his leadership the community grew from 700 to 4000 members, from 64 to 341 houses. People who knew him said that he had the gifts of reading hearts, healing and prophecy.

Born :
9 June 1837 in Turin, Italy

Died :
6 April 1910 in Turin, Italy of natural causes

Beatified :
29 October 1972 by Pope Paul VI

---JDH---Jesus the Divine Healer---

05 April 2020

இன்றைய புனிதர் : (05-04-2020)

இன்றைய புனிதர் : 
(05-04-2020) 
தூய வின்சென்ட் பெரெர் (ஏப்ரல் 05)

யோவான் கைது செய்யப்பட்ட பின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாட்சிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் என்று அவர் கூறினார்.

வாழ்க்கை வரலாறு

1350 ஆம் ஆண்டு, ஸ்பெயின் நாட்டில் உள்ள வாலன்சியாவில் வின்சென்ட் பெரர் பிறந்தார். இவருடைய பெற்றோர் கன்ஸ்டான்சியா, மிக்வெல் ஆவர். வின்சென்ட் பெரர் தன்னுடைய தொடக்கக் கல்வியை தனது சொந்த ஊரிலேயே கற்றார். அப்போதே அவர் இறையழைத்தலை உணர்ந்தார். எனவே அவர் அனைத்தையும் துறந்துவிட்டு 1367 ஆம் ஆண்டு சாமிநாதர் சபையில் சேர்ந்து மெய்யியலையும் இறையியலையும் கற்றுத் தேர்ந்து, குருவானவராகி, பின்னாளில் தான் கல்வி கற்ற அதே இடத்திலே பேராசிரியர் ஆனார்.

இதற்கிடையில் வின்சென்ட் பெரர் இருந்த பகுதியில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. மக்களெல்லாம் உணவுக்குப் பெரிதும் கஷ்டப்பட்டார்கள். அப்படிப்பட்ட சமயத்தில் இவர் மக்களுக்கு மத்தியில் இறங்கி, சிறப்பான முறையில் களப்பணி ஆற்றினார். மட்டுமல்லாமல், வின்சென்ட் பெரருக்கு எதிர்காலத்தில் நடக்க இருப்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளக்கூடிய வல்லமையை இறைவன் கொடுத்திருந்தார். அதனால் அவர் பஞ்சத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களை நோக்கி, “இன்னும் ஒருசில நாட்களில் இங்கே ஒரு கப்பல் கோதுமையை ஏற்றுக்கொண்டு வரும்” என்றார். அவர் சொன்னதுபோன்றே கப்பலொன்று கோதுமையை ஏற்றுக்கொண்டு வந்தது. அதைப் பார்த்து மக்களெல்லாம் மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். அதே நேரத்தில் அந்தக் கப்பலிலிருந்த கோதுமையை அள்ளி, மக்களுக்கு அவரவர் தேவைக்கு ஏற்ப பகிர்ந்து கொடுத்தார்.

இப்படி வாழ்க்கை மிகவும் அமைதியாகப் போய்க்கொண்டிருந்த தருணத்தில் வின்சென்ட் பெரரை தானுஸ் நகருக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு அவர் இறையியலைக் கற்பித்து வந்தார். வின்சென்ட் பெரர் தன்னிடம் பாடம் கற்று வந்த மாணவர்களிடம் அடிக்கடி சொல்லக்கூடிய வசனம், “உனது படிப்பில் வெற்றி வேண்டுமா? அப்படியானால் ஜெபத்திற்குப் பிறகு படி” என்பதுதான். இவர் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு, மாணவர்கள் அப்படியே அதைப் பின்பற்றி வந்தார்கள். இவரிடமிருந்த திறமையைக் கண்டு யோலண்டா நாட்டு அரசி இவரை தன்னுடைய தன்னுடைய ஆலோசகராக்கிக் கொண்டார்.

இந்த சமயம் பார்த்து பீட்டர் தே லூனா என்பவர் அவிங்னோனில் இருந்துகொண்டு தன்னை 13 வது திருத்தந்தையாக அறிவித்து வின்சென்ட் பெரரும் அதற்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டார். வின்சென்ட் பெரரோ அதற்கு ஆதரவு தெரிவிக்காமல் திருச்சபைக்கு என்றும் உண்மையாக இருந்து வந்தார். இவர் எப்போதும் இயேசுவிடமும் சாமிநாதரிடமும் பிரான்சிஸ் அசிசியாரிடமும் தனிப்பட்ட அன்பு கொண்டிருந்தார். ஒரு சமயம் இவர் செபித்துக் கொண்டிருந்தபோது மேலே சொன்ன மூவரும் அவருக்கு முன்பாகத் தோன்றி, “அன்பு மகனே வின்சென்ட் பெரர்! நீ கடினமான ஒறுத்தல் முயற்சிகள் இருந்து, மக்களையும் அவ்வாறு இருக்கச் சொல்லி, மனம்திரும்பி வாழச் சொல்” என்று சொல்லிவிட்டு மறைந்துபோனார்கள். இவரும் அவ்வாறே செய்து மக்களை மனந்திருப்பினார். இப்படி ஆண்டவரின் வார்த்தையை எடுத்துச் சொல்லி, மக்களை மனம்திரும்பச் செய்த வின்சென்ட் பெரர் 1419 ஆம் ஆண்டு, ஏப்ரல் 5 ஆம் நாள் இறையடி சேர்ந்தார். இவருக்கு 1455 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய வின்சென்ட் பெரரின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. மக்களை மனந்திருந்தி வாழ அழைத்தல்

தூய வின்சென்ட் பெரரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்க்கும்போது, அவர் மக்களை மனந்திருந்தி வாழ அழைத்ததுதான் நம் கண்முன்னால் வந்து போகின்றது. இவரது நினைவுநாளைக் கொண்டாடும் நாம், மக்களை மனமாற்றத்திற்கு அழைக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். ஏனென்றால் இன்றைக்கு மக்கள் குற்ற உணர்வே இல்லாமல் தவறு செய்து கொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்டச் சூழலில் நாம் அவர்களது குற்றத்தை உணரச் செய்து, அவர்களைப் புது வாழ்விற்கு அழைத்துச் சொல்வது நம்முடைய கடமையாக இருக்கின்றது.

நற்செய்தி வாசத்தில் திருமுழுக்கு யோவான் தொடாங்கி, ஆண்டவர் இயேசு திருத்தூதர்கள் என அனைவருமே மக்களை மனமாற்றத்திற்கு அழைத்தார்கள். நாமும் அத்தகைய பணியைச் செய்கின்றபோது, இயேசுவின் உண்மையான சீடர்கள் என நம்மை உறுதியாகச் சொல்லலாம்.

ஆகவே, தூய வின்சென்ட் பெரரின் நினைவு நாளைக் கொண்டாடும் நாமும், அவரைப் போன்று, மக்களை மனமாறச் செய்து, அவர்களை ஆண்டவரிடம் கொண்டு வருவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

2020-04-05புனித வின்சென்ட் பெரர், (Vincent Ferrer) குரு(Priest)

இன்றைய புனிதர்

2020-04-05புனித வின்சென்ட் பெரர், (Vincent Ferrer) குரு(Priest)

பிறப்பு
23 ஜனவரி 1350
வாலன்சியா(Valencia), ஸ்பெயின்

இறப்பு
05 ஏப்ரல் 1418
ஸ்பெயின்

இவர் ஓர் பக்தியான, உன்னதமான குடும்பத்தில், ஆங்கிலேயர் வில்லியம் பெரர் (William Ferrer) மற்றும் ஸ்பானிஸ் பெண் கான்ஸ்டான்ஷியா(Canstantia) என்பவருக்கும் மகனாக பிறந்தார். பிறந்த நாளிலிருந்தே இவரது வாழ்வு ஆரம்பமானது. இவர் பிறந்த அதே நாளில் வாலென்சியாவில் ஞானஸ்நானம் பெற்றார். இவர் தம் ஐந்தாம் வயதில் தீவிர நோயால் பாதிக்கப்பட்டார். குழந்தை பருவத்திலேயே ஓர் அழகிய சிறுவனாகவும், மிகவும் உயர்ந்த குணங்களையும் இயற்கையிலே பெற்றிருந்தார். இவரது பெற்றோர் இவரை, அன்னைமரியிடமும். ஏழைகளிடத்திலும் மிகுந்த பக்தியும், பாசமும் கொண்டவராக வளர்த்தனர். இவர் ஒவ்வொரு புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து, தான் பெறும் இறைச்சி மற்றும் உயர்தர உணவுகளை தான் உண்ணாமல் மற்றவர்களுக்கு கொடுத்தார். வின்சென்ட் ஏழைகளை கடவுளின் நண்பர்களாக கருதி, அவர்கள்மேல் மிகுந்த பாசம் வைத்தார். இதைப் பார்த்த இவர் பெற்றோர் தன் குழந்தையின் தர்ம செயல்களால் ஈர்க்கப்பட்டு, தங்களுக்கென்று இருந்த சொத்தில் மூன்றில் ஒரு பகுதியை ஏழைகளுக்கென்று ஒதுக்கி தன் குழந்தையுடன் சேர்ந்து தாங்களும் தர்மம் செய்தார்கள். வின்சென்ட் எட்டாம் வயதில் படிப்பைத் தொடங்கினார். பன்னிரண்டு வயதில் தத்துவயியலையும் (philosophy), பதினான்காம் வயதில் இறையியலையும்(theology) யாரும் எதிர்பார்க்காத விதமாக திறமையாக படித்து முடித்தார்.

பின்னர் 1367 ஆம் ஆண்டு பிப்ரவரி ஐந்தாம் நாள் வாலன்சியாவிலுள்ள தொமினிக்கன் ப்ரையரில் (Dominican priory) சேர்ந்து, தன்னை கடவுளுக்கு அர்ப்பணமாக்கினார். ஆனால் அவர் சாத்தானின் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு மிகவும் வேதனை அடைந்து சபையைவிட்டு வெளியேறி தனியாக செயல்பட நினைத்தார். ஆனால் பெற்றோர் இவரை செபத்தின் வழியாக மீண்டும் மீண்டும் ஊக்கமூட்டி உற்சாகப்படுத்தி துறவறமடத்திலேயே, அன்னை மரியாவின் துணையால் தனது துன்பங்களை தாங்கிக்கொண்டு நவதுறவு வரை (Novitiate) பயிற்சிகளை பெறவைத்தனர்.

அதன்பிறகு அவர் பார்சிலோனாவிற்கு(Barcelona) பிரபலமான தத்துவயியல் ஆசிரியராக பணிபுரிய அனுப்பிவைக்கப்பட்டார். அதன்பிறகு 1373 ல் பார்சிலோனாவில் மறைபரப்பு பணிக்காக அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவர் மிகவும் பஞ்சத்தில் அடிப்பட்டு, மக்களால் ஒதுக்கப்பட்டார். ஆனாலும் அவர் இரவு பகலென்று பாராமல் கப்பலில் பயணித்து போதித்தார். இதை கவனித்த கப்பலில் பயணம் செய்த சிலர், இவரை வதைத்து, கேலி செய்வதற்காக உயிருடனிருந்த ஒருவரை இறந்ததுபோல நடிக்கச்செய்தனர். இவர் இறந்த பிணத்தின் முன் செபித்தார். இதை கண்டு அவரைச்சுற்றியிருந்தவர்கள் பரிகாசம் செய்து சிரித்தனர். ஆனால் இவரின் வல்லமையை வெளிப்படுத்த இறைவன் உண்மையிலேயே அவரை இறக்கச் செய்தார். இதையறிந்த பரிகாசம் செய்தோர் பயம் கொண்டு, தவற்றை உணர்ந்து, தாங்கள் கூறிய பொய்யை மன்னிக்கும்படி வேண்டி, மனம்மாறி கிறிஸ்துவை பின் தொடர்ந்தார்கள்.

பின்னர் 1376 ல் மீண்டும் வின்சென்ட் தூலூஸ் (Toulouse) என்ற இடத்திற்கு ஓர் ஆண்டு கல்வியை தொடர அனுப்பப்பட்டார். அங்கு எபிரேய மொழியில் விவிலியத்தை ஆய்வுசெய்தார். அதன்பின்னர் 1379 ல் பார்சிலோனாவில் குருவானார். பிறகு மீண்டும் 1385 - 1390 களில் வாலென்சியாவிற்கு வரவழைக்கப்பட்டு பேராலயத்தில் போதித்தார். அப்போது ஏறக்குறைய 30,000 யூதர்களை மனமாற்றினார். அங்கு இவரது போதனையை கண்ட சில கர்தினால்கள் இவரை பழிவாங்கும் நோக்குடன் இவர்மேல் சில பொய்குற்றங்களைச் சுமத்தி நீதிமன்றத்திற்கு அனுப்பினர். அங்கு அவர்மேல் சுமத்தப்பட்ட குற்றங்களை பீட்டர் டி லூனா(Peter De Luna) என்ற திருத்தந்தை விசாரித்தார். ஆனால் வின்சென்ட் கூறிய உண்மைகள் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், அவர் குருவாக இருக்கக்கூடாது என்றும், துறவறத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென்றும் பேசப்பட்ட போது, வின்சென்ட் இடைவிடாது இறைவேண்டலில் ஈடுபட்டார். இதன்வழியாக உண்மைகள் வெளிக்கொணரப்பட்டது. இதன்பிறகு இவர் தனது குருத்துவ வாழ்வில் பலவிதமான நோய்களை குணமாக்கி, இறைசக்தியை இவ்வுலகில் வெளிப்படுத்தினார்.

21 ஆண்டுகளில் சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளில் பல்லாயிரக்கணக்கான பாவிகள் தம் பாவ நிலையை முற்றிலும் விட்டகலும் முறையில் போதித்து, செய்யும் செயல்களில் "உன்னை நினைப்பதற்கு மாறாக இறைவனை நினைத்துக்கொள்" என்ற இப்புனிதரின் வார்த்தை மற்றவர்களை ஆழமாக சிந்தித்து செயல்பட தூண்டியது. தனது இறுதிமூச்சுவரை ஓர் சிறந்த குருவாகவே வாழ்ந்து, ஏப்ரல் 5 ஆம் நாள் 1418 ஆம் ஆண்டு இறந்தார்.

இவரது வாழ்க்கை திருமறையை போதிக்கும் குருக்களுக்கு சிறந்த ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது. மறையுரைகளில் எளிய நடைமுறையைப் பின்பற்றி, இயன்ற அளவிற்கு சான்றுகளை கொடுத்து, பாவம் செய்தவர்களை மனந்திருப்பி, பயனளிக்கும் வாழ்வு வாழ வேண்டும் என்பதை தன் வாழ்வின் வழியாக நமக்கு விட்டுச்சென்றார்.


செபம்:

அன்பின் பரம்பொருளே எம் இறைவா! நீர் ஒவ்வொரு கிறித்தவர்களையும் நல்ல நற்செய்தியாளராகவே படைத்துள்ளீர் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். தூய ஆவியின் வல்லமையால் நீர் எங்களோடும், எங்களை வழிநடத்தும் குருக்களோடும் நாவிலிருந்து பேசி, நாங்களும் புனித வின்சென்ட் பெரரைப் போல நற்செய்தி பரப்புபவர்களாக வாழ்ந்து, ஒரு சிலரையேனும் பாவ வாழ்விலிருந்து மீட்டு, எல்லார்க்கும் எல்லாமுமாக வாழ வரம் தாரும்.

இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

துறவி, திருக்காட்சியாளர் கத்தரீனா தோமாஸ் Katharina Thomas CSA

பிறப்பு :1 மே 1531, மலோர்கா தீவு Mallorca, ஸ்பெயின்
இறப்பு :5 ஏப்ரல் 1574, மலோர்கா தீவு

04 April 2020

தூய இசிதோர் (ஏப்ரல் 04)

இன்றைய புனிதர் : 
(04-04-2020) 

தூய இசிதோர் (ஏப்ரல் 04)
இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார் (லூக் 2: 52)

வாழ்க்கை வரலாறு

இசிதோர், 560 ஆம் ஆண்டு, ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு பக்தியான குடும்பத்தில் பிறந்தார். இவருடைய குடும்பத்தில் இவரோடு பிறந்த சகோதரர்கள் லியாண்டர், புல்ஜென்சியஸ் மற்றும் சகோதரி ப்ளோரென்டினா என யாவருமே பிற்காலத்தில் புனிதர்களாக மாறினார்கள் என்பது வரலாறு.

இசிதோர் தன்னுடைய மூத்த சகோதரர் லியாண்டர் தந்த உற்சாகத்தினால் கல்வியில் சிறந்து விளங்கி, பிற்காலத்தில் மிகச் சிறந்த எழுத்தாளராக உருவெடுத்தார். இவருடைய எழுத்தாற்றலால் உருவான புத்தகங்கள் அதிகம். “History of the Goths, A history of the world, A Dictionary, Encyclopaedia” போன்றவை எல்லாம் இவருடைய எழுத்தாற்றலுக்கு மிகப்பெரிய சான்றுகள். இப்புத்தகங்கள் எல்லாம் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தன.

600 ஆம் ஆண்டு, செவில்லேவில் ஆயராக இருந்த இசிதோரின் மூத்த சகோதர் இறந்துவிடவே, அந்தப் பொறுப்பு இசிதோருக்குக் கொடுக்கப்பட்டது. இசிதோர் ஆயர் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட பிறகு எல்லாப் பணிகளையும் செவ்வனே செய்து வந்தார். இசிதோர் ஏழை எளிய மக்களிடம் தனிப்பட்ட அன்பு கொண்டிருந்தார். அதனடிப்படையில் தன்னுடைய ஆயர் இல்லத்தை ஏழைகள் அதிகமாக வாழும் பகுதியில் கட்டி எழுப்பினார். மட்டுமல்லாமல் ஏழைகள் எப்போது வேண்டுமானாலும் தன்னை வந்து பார்த்து, தங்களுடைய குறைகளை தன்னிடத்தில் எடுத்துச் சொல்லலாம் என்று கூறி, அதன்படியே செய்தார்.

இசிதோர், மக்களுக்கு நல்ல கல்வி கிடைக்கவேண்டும் என்று அரும்பாடு பட்டார். அதோடு கூட ஒவ்வொரு பங்காலயத்திற்குப் பக்கத்திலும் குருமடம் இருக்க வேண்டும் என்றும், அந்தக் குருமடத்தில் சேர்ந்து இளைஞர் ஆன்மீகக் கல்வியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மக்களிடத்தில் எடுத்துச் சொல்லி வந்தார். மக்களும் அவர் சொன்னதைக் கேட்டு, தங்களுடைய குழந்தைகளை குருமடங்களுக்கு அனுப்பி வைத்து ஆன்மீகக் கல்வியைப் பெறுவதற்கு உறுதுணையாக இருந்து வந்தார்கள்.

இப்படி இடையறாது மக்களுக்கும் இறைவனுக்கும் பணி செய்து வந்ததால், இசிதோரின் உடல் நலம் குன்றியது. அதனால் அவர் 636 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவர் இறப்பதற்கு சிறு நேரத்திற்கு முன்பாக இறைமக்களிடம், தான் அறிந்தோ அறியாமலோ செய்த தவறுகளை எல்லாம் பொறுத்தருளுமாறு கேட்டுக்கொண்டு, அதன்பிறகே தன்னுடைய ஆவியை இறைவனிடம் ஒப்படைத்தார். இவருக்கு 1598 ஆம் ஆண்டு புனிதர் பட்டமும் 1722 ஆம் ஆண்டு இறைவல்லுநர் பட்டமும் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

தூய இசிதோரின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்த்த நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக் கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. ஏழைகளுக்கு உதவி செய்தல்

தூய இசிதோரின் வரலாற்றைப் படித்துப் பார்க்கும்போது அவர் ஏழைகளிடத்தில் கொண்டிருந்த அன்பும் அதன்மூலம் அவர் அவர்களுக்குச் செய்த உதவியும் தான் நமது நினைவுக்கு வருகின்றது. இவருடைய நினைவு நாளைக் கொண்டாடுகின்ற நாம் ஏழைகளிடத்தில் அன்பும் அவர்களுக்கு உதவியும் செய்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “மிகச் சிறியோராகிய ஒருவருக்குச் செய்ததெல்லாம் எனக்கே செய்தீர்கள்” என்று (மத் 25: 40). ஆம், ஏழைகளுக்குச் செய்கின்ற உதவி இறைவனுக்கே சென்று சேருகின்றது. அது நமது உள்ளத்திற்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் தருகின்றது என்பது உண்மை.

பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டோபர் ரீவ். அவருடைய வாழ்க்கை மிகவும் சந்தோசமாகப் போய்க்கொண்டிருந்த தருணத்தில் திடிரென்று ஒருநாள் அவருக்கு பக்கவாதம் ஏற்பட அவர் வீல்சேரில் முடங்கிப் போனார். அப்போது பத்திரிக்கையாளர் சிலர் அவருடைய மனைவி டானாலியிடம், “உங்கள் கணவருடைய புனர்வாழ்வு முறை எப்படிப் போகிறது?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் அவர்களிடம், “எல்லாருக்கும் நிறைய உதவி செய்கின்றோம்” என்றார். சிறுது நேர இடைவெளிக்குப் பிறகு கிறிஸ்டோபர் ரீவ் அவர்களிடம், “எப்போதெல்லாம் எதையோ இழந்த தோல்வி வருகிறதோ அப்போதெல்லாம் இல்லாதவர்களுக்கு உதவுவோம். நமக்கு நாமே உதவிக் கொள்ள நல்ல வழி மற்றவருக்கு உதவுவதும் அதனால் வரும் மகிழ்ச்சியும் தான்” என்று கூறினார்.இதைக் கேட்டு பத்திரிக்கையாளர்கள் மிகவும் வியந்துபோனார்.

ஆம், நமது வாழ்வில் மகிழ்ச்சி பிறக்க நாம் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். அதுதான் ஏழைகளுக்கு உதவி செய்வது. தூய இசிதோரும் ஏழைகளுக்கு அப்படித்தான் உதவி செய்தார்.

ஆகவே, தூய இசிதோரின் நினைவு நாளைக் கொண்டாடும் நாமும் அவரைப் போன்று ஏழைகளுக்கு நம்மால் ஆன உதவிகளைச் செய்வோம். அதன் வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

சிசெஸ்ட்டர் நகர தூய ரிச்சர்ட் (ஏப்ரல் 03)

இன்றைய புனிதர் : 
(03-04-2020) 

சிசெஸ்ட்டர் நகர தூய ரிச்சர்ட் (ஏப்ரல் 03)
“இதோ பார்! என் சொற்களை உன் வாயில் வைத்துள்ளேன். பிடுங்கவும், தகர்க்கவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட்டவும், நடவும், இன்று நான் உன்னை மக்களினங்கள் மேலும் அரசுகள் மேலும் பொறுப்பாளனாய் ஏற்படுத்தியுள்ளேன்” (ஏரே 9: 10)

வாழ்க்கை வரலாறு

ரிச்சர்ட், 1197 ஆம் ஆண்டு, இங்கிலாந்தில் உள்ள ட்ரூய்ட்விச் என்னும் இடத்தில் பிறந்தார். இவர் பிறந்த ஒருசில ஆண்டுகளிலே இவருடைய தந்தை இறந்துபோனார். அதனால் தாயின் பராமரிப்பிலே வளரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ரிச்சர்டின் தாயார் இவரை பக்தி நெறியில் வளர்த்ததால், சிறுவயதிலே இவர் இறைப்பற்றிலும் அறிவிலும் சிறந்து விளங்கினார்.

தொடக்கக் கல்வியை தான் பிறந்த ஊரிலே பெற்ற ரிச்சர்ட், மேற்படிப்பை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் பாரிசிலும் அதைத் தொடர்ந்து போலோங்கோவிலும் கற்றார். இவரிடமிருந்த அறிவையும் ஞானத்தையும் கண்டு இவரை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமித்தார்கள். தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பினை ரிச்சர்ட் சிறப்புடனே செய்து வந்தார். இதற்கடையில் இவருக்கு குருவாக மாறி, இறைவாக்குப் பணியைச் செய்யவேண்டும் என்ற ஆர்வம் வந்தது. எனவே அவர் தான் வகித்து வந்த துணைவேந்தர் பதவி மற்றும் பெரிய இடத்திலிருந்து வந்த திருமணத்திற்கான அழைப்பு எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு குருத்துவ வாழ்விற்கு தன்னை அர்ப்பணித்தார்.

குருத்துவப் படிப்பை நல்ல முறையில் படித்து முடித்த ரிச்சர்ட் குருவாகி, தன் சொந்த ஊருக்கு அருகிலே நற்செய்திப் பணியைச் செய்து வந்தார். அடுத்த ஒருசில ஆண்டுகளில் இவர் சிசெஸ்டர் நகர ஆயராக உயர்த்தப்பட்டார். இங்கேதான் பிரச்சனை ஆரம்பித்தது. எப்படியென்றால் அக்காலத்தில் இங்கிலாந்து நாட்டை ஆண்டுவந்த மூன்றாம் ஹென்றி என்ற மன்னன் தனக்கு நெருக்கமான ராபர்ட் என்பவரை ஆயராக நியமித்தான். ஏற்கனவே திருச்சபை சிசெஸ்டரில் ரிச்சர்டை ஆயராக நியமித்திருக்க, அரசன் தன் பங்குக்கு ராபர்ட் என்பவரை நியமித்ததால் பெரிய குழப்பம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் மூன்றாம் ஹென்றி என்ற அந்த அரசன் ரிச்சர்டை சிசெஸ்டருக்குள் வரவிடாமல் தடுத்தான். இதனால் ரிச்சர்ட் நாடோடியாகவே அங்கும் இங்கும் அலைந்து நற்செய்திப் பணி செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அத்தகைய சூழ்நிலையிலும் அவர் மனந்தளராது இறைவாக்குப் பணியைச் செய்து வந்தார்.

இந்த நேரத்தில் ரிச்சர்டுக்கு சைமன் என்ற குருவானவரின் நட்பு கிடைத்தது. அவருடைய இடத்தில் தங்கி ரிச்சர்ட் சிலகாலம் நற்செய்திப் பணியைச் செய்து வந்தார். இப்படி நாட்கள் உருண்டோடிக் கொண்டிருந்த தருணத்தில் திருத்தந்தை அவர்கள் மூன்றாம் ஹென்றியிடம், அவர் நியமித்த ஆயரை திரும்ப எடுத்துக்கொள்ளவில்லை என்றால், திருச்சபையிலிருந்தே வெளியேற்றப்படுவாய் என்று சொன்னதும் பயந்துபோய், தான் நியமித்த ஆயரை திரும்பப் பெற்றுக்கொண்டான். இதனால் ரிச்சர்ட் சிசெஸ்டர் நகர ஆயராகப் பதவி ஏற்றார். ஆயராகப் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு, ரிச்சர்ட் அற்புதமான பணிகளைச் செய்தார். ஏழை எளியவரின் நலனில் அதிகமான அக்கறை எடுத்துக்கொண்டு அவர்களுடைய மேம்பாட்டிற்காக இரவும் பகலும் உழைத்தார். அது மட்டுமல்லாமல், திருச்சபையை எதிரிகளிடமிருந்தும் ஒருசில விசமிகளிடமிருந்தும் காப்பாற்றக் கடுமையாக உழைத்தார். இப்படி இறைவாக்குப் பணியையும் மக்கள் பணியையும் செய்து வந்த ஆயர் ரிச்சர்ட் 1253 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ரிச்சர்ட்டின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. அஞ்சா நெஞ்சத்தோடு ஆண்டவரின் பணியைச் செய்தல்

தூய ரிச்சர்ட்டிடமிருந்து நாம் கற்றுக்க்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடம் அஞ்சா நெஞ்சத்தோடு ஆண்டவருடைய பணியைச் செய்வதாகும். ஆயராக இருக்கும்போது மன்னன் மூன்றாம் ஹென்றியிடமிருந்து ரிச்சர்ட்டுக்கு கடுமையான எதிர்ப்புகள் வந்தன. அவற்றையெல்லாம் கண்டு அவர் பயப்படாமல், அஞ்சா நெஞ்சத்தினராய் ஆண்டவரின் பணியைச் செய்தார். அவரை நினைவுகூருகின்ற நாம் அஞ்சா நெஞ்சத்தோடு இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஆண்டவர் மீது கொண்ட விசுவாசத்திற்காக உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டவர் நற்செயாளர் யோவானின் சீடரும் ஸ்மிர்னா நகர ஆயருமான போலிகார்ப். அவரிடம் எதிரிகள், “கிறிஸ்துவை மறுதலி இல்லையென்றால் உன்னை உயிரோடு எரித்துவிடுவோம்” என்றார்கள். அதற்கு அவர், “எனக்கு 86 வயது ஆகின்றது. இத்தனை ஆண்டுகளும் இயேசு எனக்கு எந்தவொரு கெடுதலும் செய்யவில்லை. மாறாக நன்மை மட்டுமே செய்திருக்கின்றார். அப்படிப்பட்டவரை நான் எப்படி மறுதலிப்பேன்” என்றார். இதைக் கேட்டு சினம் கொண்ட எதிரிகள் அவரை உயிரோடு எரித்து கொன்றுபோட்டார்கள். போலிகார்ப், எதிரிகள் தன்னை மிரட்டியபோதும் அஞ்சாமல் தன்னுடைய விசுவாசக்தில் மிக உறுதியாக இருந்தார். அது போன்றுதான் தூய ரிச்சர்டும் தன்னுடைய விசுவாசத்தில் தளராமல் இருந்தார். அதனாலேயே இன்றைக்கு ஒரு புனிதராக உயர்ந்திருக்கின்றார்.

ஆகவே, தூய ரிச்சர்ட்டின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று அஞ்சா நெஞ்சத்தோடு ஆண்டவருக்குச் சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

புனித பவோலா பிரான்சிஸ்(Francis of Paola)வனத்துறவி April 2

இன்றைய புனிதர் : 
(02-04-2020) 

புனித பவோலா பிரான்சிஸ்(Francis of Paola)
வனத்துறவி
பிறப்பு 1416 கலாப்பிரியா (Calabria

இறப்பு 02 ஏப்ரல் 1507 தூர்ஸ் (Tours)
                                         புனிதர் பட்டம் : 1529
                      திருத்தந்தை 10 ஆம் சிங்கராயர் (Leo X)
இத்தாலியில் கலாப்பிரியா என்னும் பகுதியில் பவோலா என் னுமிடத்தில் 1416 ஆம் ஆண்டில் பிறந்தார். மிகவும் பக்தியுள்ள இவரது பெற்றோர், ராபர்ட் என்ற பெயரை இச்சிறுவனுக்குச் சூட்டினர். புனித அசிசியாரின் மன்றாட்டினால் பிறந்த இவரை அவருடைய மடத்தில் ஓர் ஆண்டு ஒப்படைத்திருந்தபோது, இச்சிறுவனுக்கு அசிசியார் துறவு உடைஉடுத்தியிருந்தார்கள். அப்போது இச்சிறுவனுக்கு வயது 13. செபத்தில் ஆழ்ந்த பற்றும், மிகவும் தாழ்ச்சியும், ஒறுத்தலும் கொண்டு விளங்கினார். உரோமை நகர், அசிசி திருத்தலங்களுக்குச் சென்று திரும்பிய பின் தன்பெயரை "பிரான்சிஸ்" என்று மாற்றிக்கொண்டார். அதன்பிறகு 6 ஆண்டுகள் வரை தனிமையை நாடி குகைக்குச் சென்று அங்கு தவவாழ்வில் தன் நாட்களைச் செலவழித்தார். இவரின் தவவாழ்வினால் தூண்டப்பட்டு மேலும் இரு தோழ ர்கள் 1435-ல் இவரை வந்தடைந்தனர். 1454-ல் பலரும் இவரைப் பின்பற்றியதால் ஒரு துறவு மடமும், ஆலயமும் கட்டப்பட்டன. இப்பணியை சிறப்பான முறையில் நிறைவேற்ற, சாதாரண மக் களும், அதிகம் பணம் கொண்டவர்களும், தாராளமான முறை யில் உதவினர். பிரான்சிஸ், மக்களின் இதயச் சிந்தனைகளை அறியும் வரத்தையும், இறைவாக்குரைக்கும் வரத்தையும் பெற் றிருந்தார். பாறை போன்ற இதயம் படைத்த பல ஆன்மாக்களை மனந்திருப்பி இறைவனை நாடச் செய்தார். பிளேக் நோய் அதி கம் இருந்த அக்காலத்தில், இந்நோய்க்கு முற்றுப்புள்ளி வைப் பதற்கு இடைவிடாமல் செபித்ததில் இப்புனிதரின் புனிதம் காணப்பட்டது.

இப்புனிதரால் தொடங்கப்பட்ட புதிய துறவற சபைக்கு " இறை வனின் இல்லத்தில் மிகச்சிறியோர்" என்று பொருள் தரும் "மினிம்ஸ்" (Minims) என்ற பெயரைச் சூட்டினார். இது “மிகத் தாழ்நிலையினரின் சபை” என்று பிற்காலத்தில் பெயர் பெற் றது. இச்சபையைத் திருத்தந்தை பீடம் 1506 ஆம் ஆண்டில் உறுதி ப்படுத்தியது. பிறரன்பு, தாழ்ச்சி, கடுமையான ஏழ்மை இவை களே இச்சபைக்கு ஆணிவேராக அமைந்தது. இப்புனிதர் பெண் களுக்கென்றும் 3 ஆம் சபையை நிறுவினார்.

இவர் இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன் தனிமையில் இருந்து செபித்தார். இறுதியில் தனது 91 ஆம் வயதில் 1507 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் நாள் புனித வெள்ளிக்கிழமையன்று பிரான்சிலுள்ள தூர்ஸ் (Tours)நகரில் இறைவனடி சேர்ந்தார். இறந்த 12 ஆண்டுகளுக்குப் பிறகு திருத்தந்தை 10 ஆம் சிங்கராயர் (Leo X)அவர்களால் புனிதர் பட்டம் கொடுக்க ப்பட்டது. இவரது இறப்பிற்குப்பின், மிக விரைவில் இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் நாடுகளில் 400 துறவற மடங் கள் பலுகிப் பெருகின. 1562-ல் இவரது உடல் அழியாதிருந்த நிலையில் காட்டுமிராண்டிகளான யூகனாட்ஸ் (Youganats) என்றழைக்கப்பட்டவர்கள், இவரது கல்லறையைத் தோண்டி புனிதரின் உடலை வெளிக்கொணர்ந்து அதைச் சுட்டெரித்தனர்.


செபம்:
எங்கள் தாயும், தந்தையுமான மூவொரு இறைவா! புனித பவோலா பிரான்சிஸைப் போல நாங்களும் செப, தவ வாழ்வினால் தூண்டப்பட்டு, அவரின் உன்னதமான முன்மாதிரியைப் பின்பற்றி, பல ஆன்மாக்களை மனந்திருப்பி, உமக்கு சான்று பகர்ந்து வாழ வரம் தாரும்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

கிரநோபல் நகர தூய கியூ (ஏப்ரல் 01)

இன்றைய புனிதர் : 
(01-04-2020) 

கிரநோபல் நகர தூய கியூ (ஏப்ரல் 01)
பின்னர் மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார் (லூக் 1:38).

வாழ்க்கை வரலாறு

கியூ, 1052 ஆம் ஆண்டு, பிரான்ஸில் உள்ள வலன்ஸ் என்னும் நகரில் பிறந்தார். இவருடைய தந்தை ஒடிலோ நாட்டிற்காகப் போராடிய இராணுவ வீரர். தாயார் குடும்பத்தை அன்பாய் வழிநடத்திய ஓர் இல்லத்தரசி.

அன்பான பெற்றார், அழகான குடும்பச் சூழல் என்று வளர்ந்த கியூ, சிறுவயது முதலே இறைவனிடத்தில் ஆழமான பக்தி கொண்டு வளர்ந்தார். தனது தொடக்கக் கல்வியை வலன்ஸ் நகரில் பெறும்போது இறைவனின் அழைப்பை உணர்ந்தார். படிப்பை முடித்ததும் குருமடத்தில் சேர்ந்து குருவானார். சில ஆண்டுகளிலே அவர் கிரநோபல் நகரின் ஆயராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார். இவர் ஆயராகத் திருப்பொழிவு செய்யப்பட்டு கிரநோபல் நகருக்குச் சென்றபிறகு சந்தித்த முதல் பிரச்சனை கிறிஸ்தவர்களுடைய பலதார மனம்தான். ஆயர் கியூ தன்னுடைய வல்லமையான போதனையால் கிறிஸ்தவர்களிடமிருந்த அந்த தீய பழக்கத்தை அப்புறப்படுத்தினார். இப்பிரச்சனையோடு ஆயர் இன்னொரு பிரச்சனையையும் சந்தித்தார். அதுதான் பாவ மன்னிப்புக்காக பெருந்தொகை வாங்குவது. இதனையும் அவர் அறவே ஒழித்தார்.

இப்படி அவருடைய ஆயர் பணி நன்றாகப் போய்க்கொண்டிருந்த தருணத்தில், அவர் மீண்டுமாக துறவற மடத்தில் சேர்ந்து அங்கேயே ஒரு சாதாரண துறவியைப் போல் வாழத் தீர்மானித்தார். அதன்பேரில் அவர் அவெர்ணாவில் இருந்த துறவற மடத்திற்குச் சென்று அங்கு சிலகாலம் துறவற வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இதற்கிடையில் திருத்தந்தை இரண்டாம் கிரகோரியார் கியூவின் சேவை கிரநோபல் மக்களுக்குத் தேவை என்பதை உணர்ந்து, அவரை மீண்டுமாக அந்நகரின் ஆயராக நியமித்தார். இரண்டாம் முறையாக கிரநோபல் நகரின் ஆயராக பதவியேற்றுக் கொண்டபிறகு ஆயர் கியூ இன்னும் சிறப்பான முறையில் பணிகளைச் செய்து வந்தார். குறிப்பாக துறவற சபைகளை அதிகமாக ஊக்கப்படுத்தி, அவர்களைத் தன்னுடைய மறைமாவட்டத்தில் நற்செய்திப் பணி செய்யப் பணித்தார். இப்படியாக ஆயர் கியூவுக்கும் தூய ப்ருனோ மற்றும் அவர்களுடைய ஆறு தோழர்களுக்கும் இடையே நல்ல நட்பு மலர்ந்தது.

ஆயர் கியூ ஏழைகள் மட்டில் தனிப்பட்ட அன்பு கொண்டிருந்தார். சமயங்களில் அவர்கள் உணவின்றிப் பட்டினியாய் கிடந்தபோது திருச்சபைச் சொத்துகளையும் ஏன் ஆயருடைய மோதிரத்தையும்கூட விற்று அவர்களுடைய பசியைப் போக்கினார். அந்தளவுக்கு அவர் ஏழைகள் பால் அன்பு கொண்டிருந்தார். இப்படி அவர் இடையறாது பணி செய்ததால் அவருடைய உடல் நலம் குன்றியது. எனவே அவர் திருத்தந்தையிடம், மீண்டுமாகத் துறவற மடத்திற்குச் சென்று, அங்கே துறவியாக வாழலாமா என்று அனுமதி கேட்டார். அதற்கு திருத்தந்தை மறுப்புச் சொல்லவே, கியூ கடைவரைக்கும் ஆயராக இருந்து 1132 ஆண்டு இறையடி சேர்ந்தார். இவர் இறந்த அடுத்த இரண்டாவது ஆண்டில் இவருக்குப் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய கியூவின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்ம்.

1. கீழ்படிந்து வாழ்தல்

ஆயர் தூய கியூவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடமே அவரிடமிருந்த கீழ்படிதல்தான். ஆயர் பதவியை ராஜினமா செய்து அவ்வெர்ணாவில் இருந்த துறவற மடத்தில் அவர் துறவியாக வாழ்ந்துகொண்டிருந்தபோது திருத்தந்தை ஏழாம் கிரகோரியார் மீண்டுமாக அவரை கிரநோபிலின் ஆயராகப் பொறுப்பேற்குமாறு கேட்டுக்கொண்டபோது, எந்தவித மறுப்பும் சொல்லாமல், இறைவனின் திருவுளம் நிறைவேறட்டும் என்று கீழ்படிதலோடு ஆயர் பதவியை ஏற்றுக்கொண்டார். தூய கியூவிடமிருந்த கீழ்படிதல் என்ற பண்பு நம்மிடம் இருக்கின்றதா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பிலிப்பிலியருக்கு எழுதப்பட்ட திருமுகம் 2: 6-11 ல், இயேசு கிறிஸ்து தந்தையின் திருவுளத்திற்குக் கீழ்படிந்து வாழ்ந்தனால், தந்தைக் கடவுள் அவரை மேலும் மேலும் உயர்த்தினார் என்று பவுலடியார் கூறுவார். நாமும் இறைவனின் திருவுளத்திற்கு கீழ்படிந்து நடக்கும்போது இறைவன் நம்மை மேலும் மேலும் உயர்த்துவார் என்று உண்மை.

சிறுமி ஒருத்தி தன்னுடைய தோழியிடம் சென்று, “நாங்கள் எங்களுடைய வீட்டிலிருந்து ஊட்டிக்கு சுற்றுலா போகிறோம். நீயும் வருகிறாயா?” என்று கேட்டார். அதற்கு அந்தக் சிறுமி, “நான் என்னுடைய பெற்றோரிடத்தில் கேட்டுவிட்டு அவர்கள் சரியென்று சொன்னால் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு தன்னுடைய பெற்றோரிடத்தில் அனுமதி கேட்கப் போனாள். போனவள் திரும்பி வந்து தன் தோழியிடம், “என் பெற்றோர் என்னை போகவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் அதனால் வரவில்லை” என்றாள். அதற்கு முதல் சிறுமி, “நீ உன்னுடைய பெற்றோரிடத்தில் கொஞ்சம் அழுத்திக் கேட்டிருந்தால், அவர்கள் விட்டிருப்பார்கள். நீ அவர்களிடத்தில் அழுத்திக் கேட்கவில்லை போலும், அதனால்தான் அவர்கள் உன்னை விடவில்லை” என்றாள். “அப்படியில்லை, என்னுடைய பெற்றோருக்கு எது நல்லதெனத் தெரியும். அவர்கள் சொன்னதற்குக் கீழ்படிந்து நடப்பதே எனக்கும் நல்லது” என்றாள் இரண்டாம் சிறுமி.

ஆம் நாம் நமது பெற்றோரின் வார்த்தைகளுக்குக் கீழ்படிந்து நடப்பது எவ்வளவு நல்லதோ அவ்வளவு நல்லது நாம் இறைவனுக்குக் கீழ்படிந்து நடப்பது. இன்று நினைவுகூறும் தூய கியூவும் இறைவனுக்கு கீழ்படிந்து நடந்தார், அதனால் இறைவன் அவரைப் பன்மடங்கு உயர்த்தினார்.

ஆகவே, தூய கியூவை போன்று நாமும் இறைவனுக்குக் கீழ்ப்படிந்து நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.