புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

18 April 2020

அருளாளர் ஆண்ட்ரேஸ் ஹிபெர்நான் ரியல் ஏப்ரல் 18

† இன்றைய புனிதர் †
(ஏப்ரல் 18)

✠ அருளாளர் ஆண்ட்ரேஸ் ஹிபெர்நான் ரியல் ✠
(Blessed Andrés Hibernón Real)
மறைப்பணியாளர்: 
(Religious)

பிறப்பு: கி.பி. 1534
மூர்சியா, ஸ்பெயின் அரசு
(Murcia, Kingdom of Spain)

இறப்பு: ஏப்ரல் 18, 1602 (வயது 68)
காண்டியா, வலென்சியா, ஸ்பெயின் அரசு
(Gandia, Valencia, Kingdom of Spain)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: மே 22, 1791
திருத்தந்தை ஆறாம் பயஸ்
(Pope Pius VI)

நினைவுத் திருநாள்: ஏப்ரல் 18

பாதுகாவல்:
மூர்சியா (Murcia)
அல்கன்டரில்லா (Alcantarilla)

அருளாளர் ஆண்ட்ரேஸ் ஹிபெர்நான் ரியல், “ஃபிரான்சிஸ்கன் இளம் துறவியர் சபையைச்” (Order of Friars Minor) சேர்ந்த ஒரு ஸ்பேனிஷ் ரோமன் கத்தோலிக்க மறைப்பணியாளர் ஆவார்.

அந்நாளைய ஸ்பேனிஷ் அரசின் மூர்சியா நகரில் 1534ம் ஆண்டு வசதியான பிரபுத்துவ குடும்பத்தில் பிறந்தவர் ஹிபெர்நான். பாதகமான சூழ்நிலைகளின் காரணமாக, இவரது மொத்த குடும்பமும் நிதி நிலைமையில் நொடித்துப்போனது. இவர்களது குடும்பச் சுமையை குறைக்கும் நோக்கில், இவரது மாமன் ஒருவர் இவரது கல்விப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார். எனவே இவர் தமது கல்வியை வலேன்சியா (Valencia) நகரில் தொடங்கினார். இவரது இன்னொரு மாமன் ஒருவர் பாதிரியாராக இருந்த மூர்சியா பேராலயத்தில் இவர் திருமுழுக்கு பெற்றார்.

இவர் தமது இளமையில், கஷ்டப்படும் தமது பெற்றோருக்கும் சகோதரர்களுக்கும் உதவும் பொருட்டும், எதிர்பாராத விதமாக வரவிருக்கும் சகோதரியின் திருமணத்திற்காகவும் வெளியூர் சென்று கடினமாக உழைத்து கணிசமாக பொருள் சேர்த்தார். தாம் உழைத்துச் சேர்த்த பணத்துடன் ஊர் திரும்பும் வழியில், இவரை வழிமறித்த திருடர்கள் கும்பல் ஒன்று, இவரிடமிருந்த பணம் பொருள் முழுவதையும் கொள்ளையடித்துச் சென்றது. இதனால் தாம் அடைந்த ஏமாற்றமும் வருத்தமும், தம்மை இவ்வுலகின் பொருள் ஆசைகளில் எவ்வளவு தூரம் ஈர்த்திருக்கிறது என்பதனை உணர்ந்தார்.

திருட்டு போகக்கூடிய - அழிந்து போகும் இவ்வுலக செல்வங்களை சேர்க்கும் ஆசைகளுக்கு மாறாக, இனிமேல் யாராலும் கொள்ளையடிக்க இயலாத செல்வங்களை சேர்க்க முடிவு செய்தார்.

1556ம் ஆண்டு, ஸ்பெயின் நாட்டின் தென்கிழக்கு பிராந்தியமான "அல்பாசிட்" (Albacete) என்னுமிடத்திலுள்ள "இளம் துறவியர் சபையின்" பள்ளியில் (Convent of the Order of Friars Minor) சேர மிகவும் தாழ்ச்சியுடன் கெஞ்சி அனுமதி பெற்றார். 1557ம் ஆண்டு, நவம்பர் மாதம், முதல் தேதியன்று, தமது துறவு ஆடைகளைப் பெற்றுக்கொண்டதுடன், அன்றுமுதல் தமது புதுமுக துறவுப் பயிற்சியையும் தொடங்கினார்.

அடிக்கடி அன்னை மரியாளின் திருத்தலங்களை நாடிச் செல்ல ஆரம்பித்த ஹிபெர்நான், மணிக்கணக்கில் நற்கருணையாண்டவரின் முன்பு முழங்கால்படியிட்டு நின்றபடி செபிக்க தொடங்கினார். இதன்மூலம் அவர் நற்கருணையாண்டவரிடம் தீவிர பக்தியை தம்மில் உருவாக்கினார். இந்த துறவி, அடிக்கடி தமது குருக்களுடன் இணைந்து நோயிற்றோரை சந்திக்க சென்றார்.

1563ம் ஆண்டு ஃபெப்ரவரி மாதம், இவர் "எல்ச்" (Elche) என்னுமிடத்திலுள்ள "புனித ஜோஸ் 'அல்கன்டரைன்' ஃபிரான்சிஸ்கன் சீர்திருத்த பள்ளிக்கு" (Alcantarine Franciscan Reform Convent of San José) மாற்றப்பட்டார்.

1574ம் ஆண்டுவரை அங்கேயே தமது செப வாழ்வினை அர்ப்பணித்த துறவி ஹிபெர்நான், "வலேன்சியா'வில்" (Valencia) ஸ்தாபிக்கப்பட்டிருந்த பள்ளியின் நடைமுறைப் பணிகளை பெற்றுக்கொள்வதற்காக தமது துறவு மட தலைவர்களால் "வலேன்சியா" (Valencia) அனுப்பப்பட்டார். அங்கே, இவருக்கு "வலென்சியா" உயர்மறைமாவட்ட பேராயர் புனிதர் "ஜுவான் டி ரிபெர்" (Archbishop of Valencia Saint Juan de Riber) அவர்களின் நட்பு கிட்டியது.

தாம் மரிப்பதன் நான்கு ஆண்டுகளின் முன்னேயே தாம் மரிக்கப்போகும் நாளை முன்னறிவித்த இத்துறவி, அவர் முன்னறிவித்திருந்ததன்படியே, 1602ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 18ம் நாள் செபமாலை செபித்துவிட்டு மரித்தார்.

2020-04-18புனித.ஹெர்லூக்கா பெர்ன்ரீட் (Herluka of Bernried)துறவி

இன்றைய புனிதர்
2020-04-18
புனித.ஹெர்லூக்கா பெர்ன்ரீட் (Herluka of Bernried)
துறவி
பிறப்பு
1060
ஸ்டுட்கார்ட்(Stuttgart), ஜெர்மனி
இறப்பு
1127
பெர்ன்ரீட்(Bernried)

ஹெர்லூக்கா இளமையாக இருக்கும்போது, தன் ஊரில் வில்லியம் என்ற துறவி ஆன்மீக வழிகாட்டியாக இருந்தார். அப்போது துறவி வில்லியம் அவர்களின் பணிவாழ்வினால் தூண்டப்பட்டு, எப்போதும் அவருடன் சென்று மக்களை சந்தித்தார். அப்போது கண்பார்வை இழந்த ஒருவருக்கு ஹெர்லூக்கா வழிகாட்டினார். அவரின் மேல் அதிக அன்பு வைத்து, தன் ஜெபத்தினால் கண்ணிழந்தவருக்கு உதவி செய்தார். பின்னர் 1086-ல் ஜெர்மனியிலுள்ள பவேரியா (Baveria) மறைமாவட்டத்திலிருந்த ஆசீர்வாதப்பர் சபையில் சேர்ந்து துறவியானார்.

துறவியான பிறகு ஆக்ஸ்பூர்க் (Augsburg) ஆயராக இருந்த விக்கிட்ரீப் (Wikterp) அவர்களுக்கு எல்லா விதங்களிலும் அவரின் பணிவாழ்விற்கு தேவையான ஏராளமான உதவிகளை செய்தார். அப்போது தனது செபத்தாலும், தியாக வாழ்வினாலும், கிறிஸ்துவ பக்தியை பரப்ப பவேரியாவில் மிகவும் பாடுபட்டார். அப்போது மிக கொடூரமான துன்பங்களுக்கு உட்படுத்தப்பட்டார். இதனால் ஹெர்லூக்கா அங்கிருந்து தப்பி ஓடி ஜெர்மனியிலுள்ள ஸ்டன்பெர்கர் (Starnberger) ஆற்றின் அருகிலுள்ள அகஸ்டினா துறவற மடத்தில் தங்கி இருந்தார். 1122 ஆம் ஆண்டு வரை பெர்ன்ரீட் என்ற ஊரில் இருந்த, துறவற இடத்தில் வாழ்ந்து, துறவியாகவே இறந்தார்.


செபம்:
நல்ல ஆயனாம் இறைவா! கிறிஸ்துவை இவ்வுலகில் பரப்ப உமது அரசை இம்மண்ணில் கொண்டுவர, புனித ஹெர்லூக்கா பெர்ன்ரீட் அனுபவித்த துன்பங்களை நினைத்து, நாங்கள் உமக்கு நன்றி கூறுகின்றோம். இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு துறவியையும் நீர் காத்து வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

தூனன் நகர் துறவி இடெஸ்பால்ட் Idesbald von Dünen
பிறப்பு: 1090 பெல்ஜியம்
இறப்பு: 1167 தூனன், பெல்ஜியம்
பாதுகாவல்: கப்பல், காய்ச்சல் மற்றும் மூட்டு நோயிலிருந்து


மறைப்பணியாளர் உர்ஸ்மார் Ursmar
பிறப்பு: 7 ஆம் நூற்றாண்டு, பிரான்சு
இறப்பு: 18 ஏப்ரல் 713, லோபெஸ் Lobbes, பெல்ஜியம்

தூய கால்டினுஸ் (ஏப்ரல் 18)

இன்றைய புனிதர் : 
(18-04-2020) 

தூய கால்டினுஸ் (ஏப்ரல் 18)
“நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது” (மத் 10:10)

வாழ்க்கை வரலாறு

1100 ஆம் ஆண்டு, இத்தாலில் உள்ள மிலனில் கால்டினுஸ் பிறந்தார். இவருடைய குடும்பம் மிகவும் வசதியான குடும்பம். சிறு வயதிலே அறிவிலும் ஞானத்திலும் வல்லவராக விளங்கிய கால்டினுஸ், வளர்ந்து பெரிய ஆளாக மாறியபோது குருவாக மாறவேண்டும் என்ற எண்ணம் கொண்டார். அதனடிப்படையில் அவர் குருத்துவப் படிப்புப் படித்து குருவாக மாறினார். முதலில் இரண்டு திருத்தந்தையர்களிடம் தலைமைச் செயலராகவும் திருத்தொண்டராகவும் பணியாற்றிய கால்டினுஸ் அதன்பின்னர் திருத்தந்தை மூன்றாம் அலெக்ஸ்சாண்டர் என்பவருக்கு உதவியாளராக இருந்தார்.

1159 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த அட்ரியன் இறந்தார். எனவே அவருக்குப் பின்னர் மூன்றாம் அலெக்ஸ்சாண்டர் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவரை இத்தாலியில் அரசராக இருந்த பிரெடரிக் பார்பரோசா என்பவன் ஏற்கவில்லை. அவன் தனக்குப் பிடித்தமான நான்காம் விக்டர் என்பவரை திருத்தந்தையாக அறிவித்தான். இதனால் மிகப்பெரிய குழம்பம் ஏற்பட்டது. மிலன் நகரில் இருந்த மக்கள் மன்னுடைய முடிவை ஏற்கவில்லை, அவர்கள் அவனுக்கு எதிராகக் கிளம்பினார்கள். இதனால் சினமடைந்த மன்னன் மிலனை நகரை முற்றுகையிட்டான். அதோடு திருந்தந்தை மூன்றாம் அலெக்ஸ்சாண்டரையும் அவருக்கு உதவியாக இருந்த கால்டினுசையும் சிறைபிடிக்கத் திட்டமிட்டான். ஆனால், அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி வேறொரு இடத்திற்குச் சென்றார்கள். இதற்கிடையில் மிலன் நகரில் பஞ்சமும் நோயும் தலைவிரித்தாடியது. இதனால் மன்னன் மிலன் நகர் மீது இருந்த தன்னுடைய பிடியைத் தளர்த்தினான்.

1165 ஆம் ஆண்டு, பிரச்சனைகள் ஓரளவுக்கு முடிவுக்கு வந்தபிறகு திருந்தந்தை மூன்றாம் அலெக்ஸ்சாண்டர் தனக்கு உதவியாக இருந்த கால்டினுசை கர்தினாலாக உயர்த்தினார். அதைத் தொடர்ந்து 1166 ஆம் ஆண்டு மிலன் நகரில் ஆயராக இருந்த ஹூபர்ட் என்பவர் இறந்துபோனதால் கால்டினுஸ் மிலன் நகரின் ஆயராக நியமிக்கப்பட்டார்.

கால்டினுஸ் மிலன் நகரின் ஆயராக உயர்ந்த பிறகு செய்த பணிகள் ஏராளம். குறிப்பாக இவர், கடன்பட்டு அந்தக் கடனையெல்லாம் அடக்க முடியாமல் கஷ்டபட்ட ஏழை எளியவருடைய கடனையெல்லாம் அடைப்பதற்கு உதவியாக இருந்தார். அது மட்டுமல்லாமல் மன்னனுக்கு ஆதரவாக இருந்த அத்தனை பேரையும் திருச்சபையை விட்டு நீக்கினார். இவ்வாறு ஏழைகளுக்கு ஏழையாய், எல்லாருக்கும் எல்லாமுமாய் இருந்த ஆயர் கால்டினுஸ் 1176 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவர் திருச்சபைக்கும் குறிப்பாக மிலன் நகருக்குச் செய்த நன்மைகளின் பொருட்டு, மிலன் நகரின் பாதுகாவலராகக் கருதப்படுகின்றார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய கால்டினுசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. துயருவோரின் துயர் துடைப்போம்

தூய கால்டினுசின் வாழக்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கும்போது அவர் கடன் பட்ட ஏழை எளியவரின் கடனையெல்லாம் அடைக்க உதவி செய்தார் என்று பார்த்தோம். இவ்வாறு அவர் துயருற்றோரின் துயர் துடைப்பவர் ஆனார். தூய கால்டினுசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று சமூகத்தில் துயருற்றுத் தவிப்போரின் துயர் துடைக்க முன் வருகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இந்த இடத்தில் செஜடன் (Cejatan) என்ற புனிதருடைய வாழ்வையும் இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது மிகவும் பொருள் நிறைந்ததாக இருந்தாக இருக்கும் என்று தோன்றுகின்றது. ஒரு சமயம் அவர் உரோமையின் வீதிகளில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது அநியாய வட்டி வாங்குவோரிடம் மாட்டிக்கொண்டு, ஏழைகள் மிகவும் கஷ்டப்பட்டார்கள். இதைக் கண்ணால் பார்த்த செஜடன் இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்று நினைத்தார். எனவே அவர் Credit Union என்ற ஒன்றைத் தொடங்கி வட்டியில்லாக் கடன் கொடுத்து, ஏழை எளியவருக்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்தார். இவருடைய இந்த தன்னலமில்லா உதவியைக் கண்டு, மக்கள் பெரிதும் மகிழ்ந்து போனார்கள். உரோமை நகரில் இருந்த ஏழை எளியவரின் துயர் துடைக்க செஜடன் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியவை. நாம் நம்மாலான உதவிகளைச் செய்து, ஏழை எளியவரின் துடைப்பதே சாலச் சிறந்த ஒன்றாகவும்.

ஆகவே, தூய கால்டினுசின் நினைவுநாளை கொண்டாடும் நாம் அவரைப் போன்று துன்புறுவோரின் துடைப்போம். இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

17 April 2020

ஏப்ரல் 17 புனிதர் அனிசேட்டஸ் ✠(St. Anicetus)

† இன்றைய புனிதர் †
(ஏப்ரல் 17)

✠ புனிதர் அனிசேட்டஸ் ✠
(St. Anicetus)
11ம் திருத்தந்தை:
(11th Pope)

இயற்பெயர்: அனிசேட்டஸ்

பிறப்பு: உறுதியாகத் தெரியவில்லை

இறப்பு: கிபி சுமார் ஏப்ரல் 20, 167
ரோம், ரோமப் பேரரசு
(Rome, Roman Empire)

நினைவுத் திருநாள்: ஏப்ரல் 17

திருத்தந்தை புனிதர் அனிசேட்டஸ் (Pope Saint Anicetus), ரோம் நகர ஆயராகவும், கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாகவும், கி.பி. சுமார் 150ம் ஆண்டிலிருந்து 167ம் ஆண்டு வரை பணிபுரிந்தார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் 11ம் திருத்தந்தை ஆவார். லூயி டுக்கேன் (Louis Duchesne) என்னும் வரலாற்றாசிரியர் கருத்துப்படி, முதல் இரண்டு நூற்றாண்டுகளில் நிகழ்ந்த திருச்சபை வரலாற்றுச் செய்திகளைத் துல்லியமாகக் கால வரையறை செய்வது மிகக் கடினம்.

அனிசேட்டஸ் பண்டைய சிரியா நாட்டில் ஏமெசா (Emesa) என்னும் நகரில் பிறந்தார். ஏமெசா இன்று ஹோம்ஸ் (Homs) என்று அழைக்கப்படுகிறது. மரபுப்படி, அனிசேட்டசின் தந்தை, இன்றைய சுவிட்சர்லாந்து பகுதியிலிருந்து சிரியா நாட்டுக்குப் பெயர்ந்துசென்றவர் ஆவார்.

ஞானக்கொள்கைக்கு எதிர்ப்பு:
அனிசேட்டஸ் உரோமைக்கு ஏன் வந்தார் என்பது பற்றித் தெளிவில்லை. ஒருவேளை அவர் ஞானக்கொள்கை (Marcionism and Gnosticism) என்னும் தப்பறையை எதிர்த்ததால் கீழைத் திருச்சபையை விட்டு உரோமைக்குச் செல்லும் கட்டாயம் எழுந்திருக்கலாம்.

அந்நாட்களில் உரோமையில் மார்சியோன் (Marcion of Sinope) என்பவர் ஞானக்கொள்கையைப் (Marcionism) பரப்பிவந்தார். அதை அனிசேட்டஸ் எதிர்த்தார். உரோமையில் புனித ஜஸ்டின் நிறுவியிருந்த கல்விக்கூடம் இந்த எதிர்ப்பில் அவருக்குத் துணையாக இருந்தது. திருத்தூதர்களிடமிருந்து பெறப்பட்ட கத்தோலிக்க கிறித்தவ கொள்கையின் பெயரால் அவர் ஞானக்கொள்கை போன்ற தவறான மெய்யியல் அணுகுமுறைகளை எதிர்த்துப் போராடினார்.

குருக்கள் நீண்ட முடி வளர்க்க தடை:
"திருத்தந்தையர் நூல்" (Liber Pontificalis) என்னும் ஏட்டின்படி, கத்தோலிக்க குருக்கள் நீண்ட முடி வளர்த்தலாகாது என்று அனிசேட்டஸ் தடைவிதித்தார். இது ஒருவேளை ஞானக்கொள்கையினர் நீண்ட முடி வளர்த்ததால் அவர்களிடமிருந்து கிறித்தவப் பணியாளர்களை வேறுபடுத்தும் நோக்கத்துடன் நிகழ்ந்திருக்கலாம்.

புனித பொலிக்கார்ப்போடு (Polycarp of Smyrna) சந்திப்பு:
ஸ்மிர்னா (Smirna) நகரத்தின் ஆயரும் 80 வயது நிரம்பியவருமான புனித பொலிக்கார்ப்பு ஆசிய சபைகளின் தூதுவராக உரோமைக்கு அனுப்பப்பட்டு, அங்கே திருத்தந்தை அனிசேட்டசை சந்தித்துப் பேசினார். புனித பொலிக்கார்ப்பு நற்செய்தியாளராகிய புனித யோவானின் சீடராக இருந்தார் என்பது மரபு. ஒருவேளை அவர் குரு யோவான் (John the Presbyter) என்பவரின் சீடராக இருந்திருக்கலாம் என்று சில அறிஞர் கருதுகின்றனர்.

பொலிக்கார்ப்பின் சீடராக இருந்த புனித லியோன் நகர இஞ்ஞாசியார் இத்தகவலைத் தருகிறார்.

இயேசுவின் உயிர்த்தெழுதல் கொண்டாடப்பட வேண்டிய நாள்:
பொலிக்கார்ப்பு கீழைத் திருச்சபையிலிருந்து திருத்தந்தை அனிசேட்டசைத் தேடி உரோமைக்கு வந்தது இயேசுவின் உயிர்த்தெழுதலை எந்த நாளில் கொண்டாடுவது என்பது பற்றித் தெளிவுபெறுவதற்கு ஆகும். பொலிக்கார்ப்பும் அவர் தலைமை வகித்த ஆசிய நாட்டு ஸ்மிர்னா பகுதியும் இயேசுவின் உயிர்த்தெழுதலை நிசான் மாதத்தின் 14ஆம் நாள் கொண்டாடினர். அந்நாளில்தான் யூதர்கள் பாஸ்கா விழாவைக் கொண்டாடுவது வழக்கம். ஆனால் நிசான் மாதத்தின் 14ஆம் நாள் வாரத்தின் ஏதாவது ஒரு நாளாக இருக்கலாம். அது ஞாயிற்றுக் கிழமையாக எல்லா ஆண்டுகளிலும் இராது. எனவே இந்நிலைப்பாடு "பதினான்காம் நாள் கொள்கை" என்னும் பெயர் பெற்றது.

இவ்வாறு கொண்டாடும் பழக்கம் திருத்தூதர் காலத்திலிருந்தே பெறப்பட்டது என்றும், குறிப்பாக, யோவான் (திருத்துதர் அல்லது குரு) சமூகத்தில் அவ்வழக்கம் நிலவியது என்றும் கீழைச் சபை வாதாடியது.

ஆனால் உரோமைத் திருச்சபை இயேசுவின் உயிர்த்தெழுதல் விழாவை ஆண்டுதோறும் ஞாயிற்றுக் கிழமைதான் கொண்டாடியது. ஏனென்றால் ஞாயிற்றுக் கிழமை இயேசு உயிர்த்தெழுந்ததால் அது "ஆண்டவரின் நாள்" (Day of the Lord) என்று அழைக்கப்பட்டதோடு கிறித்தவர்களின் பாஸ்கா விழாவாகவும் மாறியிருந்தது. நிசான் மாதத்தின் 14ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமையாக இருந்தால் அன்று உயிர்த்தெழுதல் விழாக் கொண்டாடப்படும். அவ்வாறு இல்லாவிடின், நிசான் 14ஆம் நாளுக்குப் பின் வருகிற முதல் ஞாயிறு உயிர்த்தெழுதல் ஞாயிறு ஆகும்.

ஆண்டுதோறும் இயேசுவின் உயிர்த்தெழுதல் விழாவை நிசான் மாதம் 14ஆம் நாள் கொண்டாடுவதா, அல்லது நிசான் 14ஆம் நாளை அடுத்துவரும் ஞாயிறன்று அவ்விழாவைக் கொண்டாடுவதா என்பது பற்றி அனிசேட்டசுக்கும் பொலிக்கார்ப்புக்கும் இடையே ஒத்த கருத்து உருவாகவில்லை. இருந்தாலும் திருத்தந்தை அனிசேட்டஸ் உரோமைத் திருச்சபையின் வழக்கத்தைக் கீழைச் சபையின்மீது திணிக்க விரும்பவில்லை. எனவே இரு சபைகளும் தம் மரபுக்கு ஏற்ப உயிர்த்தெழுதல் விழாவைக் கொண்டாடி வரலாயின.

பிற்காலத்தில் உயிர்த்தெழுதல் விழாவை எந்த நாளில் கொண்டாடுவது என்பது பற்றிய விவாதம் மீண்டும் எழுந்தது.

வரலாற்றாசிரியர் ஹெகேசிப்பஸ் (Hegesippus) உரோமை வருகை:
பண்டைய கிறித்தவ வரலாற்றாசிரியர் ஹெகேசிப்பஸ் (Hegesippus) என்பவரும் திருத்தந்தை அனிசேட்டசைச் சந்திக்க உரோமை சென்றார். உரோமைப் பீடம் தொடக்க காலத்திலிருந்தே முதன்மை பெற்றதற்கு இதுவும் ஒரு அடையாளமாகக் கொள்ளப்படுகிறது.

மொந்தானியக் கொள்கை (Montanism) கண்டிக்கப்படுதல்:
திருத்தந்தை அனிசேட்டஸ் மொந்தானியக் கொள்கையைக் கண்டனம் செய்தார். கீழைத் திருச்சபையில் மொந்தானுஸ் (Montanus) என்பவர் கிபி இரண்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் "புதிய இறைவாக்கு இயக்கம்" (New Prophecy) என்றொரு போக்கினைத் தோற்றுவித்தார். தாம் தூய ஆவியால் தூண்டப்பட்டு இறைவாக்கு உரைத்ததாகவும், கடுமையான அறநெறி நடத்தையே கடவுளுக்கு உகந்தது என்றும் அவர் போதித்தார். கிறித்தவக் கொள்கைக்கு எதிராக அவர் போதித்தார் என்று அனிசேட்டஸ் மொந்தானியக் கொள்கையை (Montanism) கண்டனம் செய்தார்.

இறப்பு:
திருத்தந்தை அனிசேட்டஸ் ரோமப் பேரரசன் லூசியஸ் வேர்சஸ் (Lucius Verus) என்பவரின் ஆட்சியில் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டுக் கொல்லப்பட்டார் என்பது மரபு. ஆனால் இதற்கு வரலாற்று ஆதாரம் இல்லை. ஏப்ரல் மாதம் 16, 17, 20 ஆகிய நாள்கள் அவரது இறப்பு நாளாகக் குறிக்கப்படுகின்றன. இருப்பினும், ஏப்ரல் 20ம் நாள் அவர் இறந்ததாகக் கொண்டு அன்று அவருடைய திருவிழா கொண்டாடப்படுகிறது. பழைய வழக்கப்படி, ஏப்ரல் 17ம் நாள் அவர் திருநாள் கொண்டாடப்பட்டது.

(17-04-2020) புனித.காதேரி டேக்காக்விதா (Kateri Tekakwitha)

இன்றைய புனிதர் : 
(17-04-2020) 

புனித.காதேரி டேக்காக்விதா (Kateri Tekakwitha)
பிறப்பு  1657  நியூயார்க்

இறப்பு  17 ஏப்ரல் 1680
கானாவெக்(Kahnawake), கியூபெக் (Quebec), கனடா   

முத்திபேறுபட்டம்:22 ஜூன்,1980 திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் 

புனிதர் பட்டம்: 21அக்டோபர் 2012, 
திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்
சுற்றுசூழல், கைவிடப்பட்டோர், வெளிநாட்டில் வாழ்வோரின் பாதுகாவலர்
காதேரி டேக்காக்விதா 1657 -ல் நியூயார்க்கில் பிறந்தார். இவர் பிறந்தவுடன் பெரியம்மை என்ற நோயால் தாக் கப்பட்டு முகம், உடல் முழுவதிலும் பெரிய வடுக்கள் ஏற்பட்டு மிகவும் அழகு குறைந்தவளாக இருந்தார். இத னால் இவர் தன் பெற்றோரால் கைவிடப்பட்டுஅனாதை குழந்தையாக விடப்பட்டார். இவர் நியூயார்க்கில் கிறி ஸ்துவ ஆலயத்தில் கேத்ரின் டேக்காக்விதா என்று பெயர் மாற்றி ஞானஸ்நானம் பெற்றார். இவர் மோகாக் (Mohawk) மக்களின் "லில்லி" என்றழைக்கப்பட்டார். இவர் மிகவும் பொறுமையானவராக திகழ்ந்தார். இவர் ஓர் உலகப் பெண்ணாக இருந்தாலும், கற்பு என்னும் துற வற வார்த்தைப்பாட்டை, தன் உயிருள்ளவரை ஒழுக்க மாய் கடைபிடித்து வாழ்ந்தார். இவர் தனது 24 ஆம் வய தில் கனடாவிலுள்ள கியூபெக் மாவட்டத்தில், மாண்ட்ர லின் அருகிலுள்ள கானாவெக் என்ற இடத்தில் 1680 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் நாள் இறந்தார். இவர் இறந்தபின் அண்டிவந்து செபித்தோர்க்கு ஏராளமான நன்மை களை செய்தார். 1980 ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் அவர்களால் முத்திப்பேறு பட்டம் கொடுக்கப்பட்டது. பின்னர்2012 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் நாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.


செபம்:
எம்மை பாதுகாத்து, வழிநடத்தும் எம் மூவொரு இறைவா! இவ்வுலகில் அனாதைகளாக இருக்கும் ஒவ்வொருவருக்கும் நீரே அரணும், கோட்டையுமாய் இருந்து பாதுகாத்திட வேண்டி உம்மை மன்றாடுகின்றோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Saint of the the day : (17-04-2020)

Saint Kateri Tekakwitha

Daughter of a Christian Algonquin woman captured by Iroquois and married to a non-Christian Mohawk chief. Orphaned during a smallpox epidemic, which left her with a scarred face and impaired eyesight. Converted and baptized in 1676 by Father Jacques de Lamberville, a Jesuit missionary. Shunned and abused by relatives for her faith. Escaped through 200 miles of wilderness to the Christian Native American village of Sault-Sainte-Marie. Took a vow of chastity in 1679. Known for spirituality and austere lifestyle. Miracle worker. Her grave became a pilgrimage site and place of miracles for Christian Native Americans and French colonists. First Native American proposed for canonization, her cause was started in 1884 under Pope Leo XIII. The Tekakwitha Conference, an international association of Native American Catholics and those in ministry with them, was named for her.

Born : 
1656 at Osserneon (Auriesville), modern New York, USA

Died :
17 April 1680 at Caughnawaga, Canada of natural causes

Canonized :
21 October 2012 by Pope Benedict XVI
• the canonization miracle involved the cure of a boy suffering from a flesh-eating bacteria

Patronage :
ecologists, environmentalists
• ecology, environment
• environmentalism
• exiles
• against the loss of parents
• orphans
• people ridiculed for their piety
• Native Americans
• diocese of Gallup, New Mexico

---JDH---Jesus the Divine Healer---

16 April 2020

புனிதர் பெனடிக்ட் ஜோசஃப் லேபர் April 16

† இன்றைய புனிதர் †
(ஏப்ரல் 16)
✠ புனிதர் பெனடிக்ட் ஜோசஃப் லேபர் ✠
(St. Benedict Joseph Labre)

நித்திய ஆராதனையின் யாசகர்:
(Beggar of Perpetual Adoration) 

பிறப்பு: மார்ச் 25, 1748
அமெட்டஸ், அர்ட்டாய்ஸ், ஃபிரான்ஸ் அரசு
(Amettes, Artois, Kingdom of France)

இறப்பு: ஏப்ரல் 16, 1783 (வயது 35)
ரோம், திருத்தந்தையர் மாநிலங்கள்
(Rome, Papal States)

ஏற்கும் சபை:
கத்தோலிக்க திருச்சபை
(புனிதர் ஃபிரான்சிசின் மூன்றாம் நிலை சபை)
(Catholic Church)
(Third Order of St. Francis)

முக்திபேறு பட்டம்: மே 20, 1860
திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்
(Pope Pius IX)

புனிதர் பட்டம்: டிசம்பர் 8, 1881
திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ
(Pope Leo XIII)

முக்கிய திருத்தலம்:
சாண்டா மரியா அய் மொண்டி, ரோம், இத்தாலி
(Church of Santa Maria ai Monti
Rome, Italy)

நினைவுத் திருநாள்: ஏப்ரல் 16

பாதுகாவல்:
திருமணமாகாத ஆண்கள், நிராகரித்தல், மன நோய், மனநலம் பாதிக்கப்பட்ட மக்கள், பிச்சைக்காரர்கள், வீடற்றவர்கள், நாடோடிகள் (Hobos)

புனிதர் பெனடிக்ட் ஜோசஃப் லேபர், ஃபிரெஞ்ச் நித்திய ஆராதனையின் யாசகரும், ஃ பிரான்சிஸ்கன் மூன்றாம் நிலை துறவியும், கத்தோலிக்க புனிதருமாவார்.

வட ஃபிரான்ஸ் (North of France) நாட்டின் “அர்டாய்ஸ்” (Artois) மாகாணத்திலுள்ள “பஸ்-டி-கலாய்ஸ் டிபார்ட்மென்ட்” (Pas-de-Calais department) தலைநகரான “அர்ராஸ்” (Arras) நகரின் அருகேயுள்ள “அமெட்டஸ்” (Amettes) கிராமத்தில், 1748ம் ஆண்டு பிறந்த இவர், தமது பெற்றோரின் பதினைந்து குழந்தைகளுள் மூத்த குழந்தை ஆவார். இவரது தந்தையார், ஒரு வசதியான வியாபாரியாவார். அவரது பெயர், “ஜீன் பேப்டிஸ்ட் லேபர்” (Jean Baptist Labre) ஆகும். இவரது தாயாரின் பெயர், “அன்னி கிரேன்ட்ஷைர்” (Anne Grandsire) ஆகும்.

இவரது கிராமத்திலிருந்து சிறிது தூரத்தில் சேவையாற்றிய கத்தோலிக்க குருவான இவாது தாய்மாமன், மகிழ்ச்சியுடன் இவரை ஏற்று, இவருக்கு குருத்துவ கல்வியில் வழி காட்டினார். இவர், தமது பதினாறு வயதில், பெனடிக்ட் சட்டங்களின்படி (Rule of St. Benedict) நடத்தப்படும் “சிஸ்டேர்சியன்” (Cistercian order) சபையின் கிளையான “ட்ரேப்பிஸ்ட்” (Trappist) துறவியாக உதவுமாறு தமது தாய்மாமனான குருவை வேண்டினார். ஆனால் அவரது பெற்றோரோ, அவரை இன்னமும் வயதாகும்வரை காத்திருக்கச் சொன்னார்கள்.

பெனடிக்டுக்கு பதினெட்டு வயதாகையில், கொள்ளை தொற்று நோயால் இவர்களது கிராமம் பாதிக்கப்பட்டபோது, மாமனும் மருமகனும் இணைந்து நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்வதில் தீவிரமானார்கள். மாமன் பாதிக்கப்பட்ட மக்களின் ஆன்மாக்களையும் உடல்களையும் கவனித்துக் கொண்டிருந்தபோது, பெனடிக்ட் கால்நடைகள் கவனித்துக் கொண்டிருந்தார். இவர், அவைகளின் கொட்டில்களை சுத்திகரித்து அவற்றுக்கு உணவளித்தார். தமது மாமனின் கீழே, ஒரு மாணவனான இவர், ஒரு விவசாய கூலித் தொழிலாளியாக மாறினார். தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுள் இறுதியானவராக இவரது மாமன் இருந்தார்.

பெனடிக்ட், (La Trappe Abbey) எனும் துறவு மடத்தில் இணைவதற்காக விண்ணப்பித்தார். ஆனால், இவரது குறைவான வயது காரணத்தாலும், தனிப்பட்ட முறையில் இவருக்கு யாரும் பரிந்துரைக்காத காரணத்தாலும், இவர் நிராகரிக்கப்பட்டார். பின்னர் இவர், “கார்தூசியன்” (Carthusians) மற்றும் “சிஸ்டேர்சியன்” (Cistercians) சபைகளில் இணைவதற்கும் முயற்சித்தார். ஆனால், இவர் ஆன்மீக வாழ்க்கைக்கு பொருத்தமற்றவர் என்ற காரணம் காட்டி, இரண்டு சபைகளுமே இவரை நிராகரித்தன. இவர், சுமார் ஆறு வாரங்களாக, “நுவில்லியில்” (Neuville) உள்ள கார்தூசியர்களில் ஒருவராக இருந்தார். 1769ம் ஆண்டு, நவம்பர் மாதம், அவர் “செப்ட்-ஃபாண்ட்ஸ்” (Sept-Fonts) எனுமிடத்திலுள்ள சிஸ்டெசியியன் மடத்தில் (Cistercian Abbey) அனுமதி பெற்றார். ஆனால், சிறிது காலத்திலேயே அவரது உடல் ஆரோக்கியம் காரணமாக, அவர் வேறு இடங்களில் பணியாற்ற முடிவு செய்யப்பட்டது.

கத்தோலிக்க பாரம்பரியப்படி, கடவுளால் தமக்கு அளிக்கப்பட்டது என்று இவர் நினைத்த தமது விருப்பங்களை தாம் அனுபவிப்பதாக எண்ணினார். புனிதர் அலெக்சியஸ் (Saint Alexius of Rome) அவர்களை உதாரணமாகக் கொண்டு ஈர்க்கப்பட்டார். தூய ஃபிரான்சிஸ்கன் துறவி “புனிதர் ரோச்” (Saint Roch) அவர்களின் திருயாத்திரைகளை உதாரணமாக ஏற்றார். தனது நாட்டையும் பெற்றோர்களையும் விட்டு விலக முடிவு செய்தார். மற்றும் உலகில் ஒரு புதிய வகையான வாழ்க்கை வாழ, மிகவும் வேதனைமிகுந்த, மிகுந்த தண்டனைக்குரிய வாழ்க்கையை விரும்பினார். உலகின் கிறிஸ்தவ பக்தியின் புகழ்பெற்ற இடங்களில் ஒரு யாத்திரிகனானார்.

புனித பிரான்சிஸின் மூன்றாம் நிலை (Third Order of Saint Francis) சபையில் இணைந்த பெனடிக்ட், எளிய வாழ்க்கையையும் புனிதர் யாத்திரைகளையும் விரும்பி ஏற்றார். முதலில் ரோம் நகருக்கு நடைபயணம் சென்றார். வழியில் யாசகம் பெற்று, அவற்றைக் கொண்டே உண்டார். பின்னர் அவர் ஐரோப்பாவின் பெரும்பாலான பிரதான திருத்தலங்களுக்கு அடிக்கடி சென்றார். அர்ஜென்டினா (Argentina) நாட்டின் “லொரெட்டோ” (Loreto) எனுமிடத்திலுள்ள பல்வேறு திருத்தலங்களுக்கு யாத்திரை சென்றார். இத்தாலி (Italy) நாட்டிலுள்ள அசிசி (Assisi), நேப்பில்ஸ் (Naples) மற்றும் “பாரி” (Bari) ஆகிய திருத்தலங்களுக்கும் யாத்திரை சென்றார். சுவிட்சர்லாந்து (Switzerland) நாட்டின் “ஈய்ன்சியேடேல்ன்” (Einsiedeln) திருத்தலத்திற்கு சென்றார். ஃபிரான்ஸ் (France) நாட்டிலுள்ள “பரே-லி-மோனியல்” (Paray-le-Monial) திருத்தலத்திற்கும் ஸ்பெயின் (Spain) நாட்டிலுள்ள “சேன்டியாகோ டி கம்போஸ்டேலா” (Santiago de Compostela) திருத்தலத்திற்கும் சென்றார். இந்த பயணங்களின்போது அவர் எப்போதும் நடைபயனமாகவே சென்றார். சேறு மற்றும் கந்தலான அவரது ஆடைகளுடன் திறந்த வெளியில் அல்லது கிடைத்த அறையின் மூளைகளிலேயே உறங்கினார். யாசித்து கிடைத்த சில உணவு வகைகளையே உண்டார். அதனையும் பிறருடன் பகிர்ந்துகொண்டார். அவர் அரிதாக பேசினார், அடிக்கடி ஜெபம் செய்தார், அவர் பெற்ற ஏச்சுபேச்சுகளையும் அமைதியாக ஏற்றுக்கொண்டார்.

இவ்வாறாக, பெனடிக்ட் ஒரு யாசகராகவே இறுதிவரை வாழ்ந்தார். குறிப்பாக, கடவுளின் முட்கிரீடத்தைப் பற்றி சிந்திக்கும்போது அடிக்கடி அவர் மயக்கமடைவார் என கூறப்படுகிறது. இவர், தாம் சந்தித்த பிற வீடற்ற மக்களை குணப்படுத்தியதாகவும், தமக்கு கிடைத்த ரொட்டித் துண்டுகளை பல்கிப் பெருக வைத்ததாகவும் கூறப்படுகிறது. அவரது வாழ்நாளின் கடைசி ஆண்டுகளில் (அவருடைய முப்பதுகளில்), அவர் ரோமில் வசித்து வந்தார். கொலோசெய்யின் (Colosseum) இடிபாடுகளில் வாழ்ந்த ஒரு காலப்பகுதிக்காக, லொரெட்டோவின் அன்னை (Shrine of Our Lady of Loreto) திருத்தலத்திற்கு ஒரு வருடாந்திர புனித யாத்ரீகத்தை மட்டுமே செய்ய முடிந்தது.

அவர் நகரத்தில் அனைவருக்கும் அறிமுகமான ஒரு நபராக இருந்தார். மற்றும் நற்கருணை ஆராதனைக்கான அவரது அர்ப்பணிப்புக்காக "நாற்பது மணி நேரத்தின் துறவி" (Saint of the Forty Hours) என அறியப்படுகிறார்.

அவர் இறப்பதற்கு ஒருநாள் முன், “சாண்டா மரியா ஆய் மோன்டி” தேவாலயத்தில் (Church of Santa Maria ai Monti) சரிந்து விழுந்தார். அவரது எதிர்ப்பையும் மீறி, அவர் ஆலயத்தின் பின்னால் இருந்த ஒரு வீட்டிற்கு தூக்கி செல்லப்பட்டார். 1783ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 16ம் தேதியன்று, புனித வாரத்தின்போது (Holy Week) ஊட்டச்சத்துக் குறைவு காரணமாக அவர் மரித்தார். அவர், “சாண்டா மரியா ஆய் மோன்டி” (Church of Santa Maria ai Monti) தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

இவரது சரித்திரத்தை எழுதிய இவரது ஒப்புரவாளரான “மார்கோனி” (Marconi), இவர் மறித்து மூன்றே மாத காலத்துக்குள், இவரது பரிந்துரை காரணமாக 136 பேர் நோயினின்றும் அற்புதமாக குணமானதாக எழுதியுள்ளார்.

தூய பெர்னதெத் (ஏப்ரல் 16)

இன்றைய புனிதர்: 
(16-04-2020) 

தூய பெர்னதெத் (ஏப்ரல் 16)
“நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இந்தச் சிறு பிள்ளையைப் போலத் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர்” (மத் 18: 3-4)

வாழ்க்கை வரலாறு

பிரான்ஸ் நாட்டில் உள்ள லூர்து நகருக்கு அருகில் இருந்த நெவர்ஸ் என்னும் இடத்தில், 1844 ஆம் ஆண்டு, ஜனவரி திங்கள் 7 ஆம் நாள் பெர்னதெத் பிறந்தார். இவர்தான் குடும்பத்தில் மூத்த பிள்ளை. பெர்னதெத்தின் குடும்பம் ஒரு காலத்தில் மிகவும் வசதியாக இருந்தது. ஆனால், ஏதோ ஒரு காரணத்தால் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் போனது. பெர்னதெத்துக்கு சிறுவயதிலே ஆஸ்மா நோய் வந்ததால் அவர் மிகவும் கஷ்டப்பட்டார். இப்படிப்பட்ட சூழலுக்கு மத்தியில் பெர்னதெத் தன்னுடைய நண்பர்களோடு அருகிலிருந்த மசபெல் குகைக்கு ஆடு மேய்க்கச் சென்றார்.

1858 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 11 ஆம் அவர் இப்படி ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது, வானிலிருந்து ஒரு பெண் தோன்றினார். அவர் வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்தார், இடையில் ஊதா நிறக் கச்சை அணிந்திருந்தார். கையில் ஜெபமாலை வைத்திருந்தார். இக்காட்சி பெர்னதெத்துக்கு மட்டுமே தெரிந்தது. அவருடைய நண்பர்களுக்குத் தெரியவில்லை. இதை அவர் தன்னுடைய வீட்டிலும் அக்கம் பக்கத்திலிருந்தவர்களிடமும் சொன்னபோது யாருமே அதை நம்பவில்லை. மாறாக பெர்னதெத் பிதற்றுகிறார் என்றார்கள்.

தொடர்ந்து பெர்னதெத் மசபெல் குகைக்குச் சென்று, ஆடு மேய்க்கும்போது, வானத்திலிருந்து தோன்றிய பெண்மணி தன்னை ‘நாமே அமல உற்பவம்’ என்றும், பாவ மன்னிப்புப் பெற மனமாறவேண்டும் என்றும் ஜெபமாலை சொல்லவேண்டும் என்றும் அவரிடத்தில் எடுத்துச் சொன்னார். அதையும் பெர்னதெத் அங்கிருந்த பங்குத்தந்தையிடமும் அதிகாரிகளிடமும் எடுத்துச் சொன்னபோது அவர்கள், அதனை ஆய்வுக்கு உட்படுத்திய பின்னே நம்பமுடியும் என்று சொல்லிவந்தார்கள். அதற்குள் மரியன்னை பெர்னதெத்துக்கு காட்சி கொடுத்த செய்தி மக்களுக்குத் தெரியவர பெருந்திரளான மக்கள் அங்கு வந்தார்கள்.

இதற்கிடையில் 1868 ஆம் ஆண்டு, பெர்னதெத் நெவர்ஸ் நகரில் இருந்த துறவற சபையில் துறவியாகச் சேர்ந்தார். அங்கு அவர் ஜெபத்திலும் தவத்திலும் தம்மை முழுமையாய் ஈடுபடுத்திக் கொண்டு வாழ்ந்து வந்தார். அது மட்டுமல்லாமல், தாழ்ச்சிக்கு இலக்கணமாக வாழ்ந்து வந்தார். ஏற்கனவே அவர் ஆஸ்மா நோய்க்கு உள்ளாகி இருந்ததால் உடலளவில் பெரிதும் கஷ்டப்பட்டார். 1879 ஆம் ஆண்டு வந்த ஏப்ரல் மாதத்தில் அவருடைய நோய் முற்றிப்போனது. இதனால் அவர் படுத்த படுக்கையானார். ஏப்ரல் 16 ஆம் நாள், தனக்கு ஏற்பட்ட நோயிலிருந்து மீளமுடியாமல் அப்படியே இறையடி சேர்ந்தார். இவருக்கு 1933 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய பெர்னதெத்தின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. தாழ்ச்சி

தூய பெர்னதெத்திடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடமே அவரிடமிருந்த தாழ்ச்சிதான். அவர் அடிக்கடி சொல்லக்கூடிய வார்த்தைகளிலிருந்தே இதைப் புரிந்துகொள்ளலாம். அவர் சொல்வார், “நான் ஒரு துடைப்பதற்குச் சமமானவள். துடைப்பம் வீட்டைச் சுத்தமாக்குகிறது என்பதற்காக அதனை வீட்டின் நடுவே யாரும் வைப்பதில்லை, அதுபோன்றுதான் மரியா தன்னுடைய திருநாமம் விளங்க என்னைப் பயன்படுத்தினார். அவருடைய திருநாமம் பரவிவிட்டது. இப்போது என்னுடைய தேவையும் முடிந்துவிட்டது. இப்போது நான் ஒரு துடைப்பத்தைப் போன்றே கிடக்கிறேன்” என்று. மரியன்னை தனக்குக் காட்சி கொடுத்தார் என்று அவர் தலைக்கனத்தோடு இருக்கவில்லை, தாழ்ச்சியோடுதான் இருந்தார். அவரிடமிருந்த தாழ்ச்சி நம்மிடம் இருக்கின்றதா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இன்றைக்கு நாம் அடுத்தவரால் உயர்வாக மதிக்கப்படவேண்டும், போற்றப்பட வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். தாழ்ச்சியோடு வாழ்வதற்கு முன்வருவதில்லை. இத்தகைய சூழ்நிலைதான் தாழ்ச்சியோடு வாழ்ந்த தூய பெர்னதெத் முக்கியத்துவம் பெறுகின்றார்.

ஒரு சமயம் மிகச் சிறந்த இசைக் கலைஞராகிய லியோனார்டு பெர்ன்ஸ்டேன் என்பவரிடம் நிருபர் ஒருவர், “எந்த இசைக்கருவியை வாசிப்பது மிகவும் கஷ்டம்?” என்று கேட்டார். அதற்கு அவர், இரண்டாம் வயலின்” என்றார். “ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?” என்று நிருபர் கேட்டதற்கு அவர், “முதலாம் வயலின் வாசிப்பவர் எல்லாருடைய கவனத்தையும் பெறுவார், இரண்டாம் வயலின் வாசிப்பவர் அப்படிக் கிடையாது, அவர் யாருடைய கவனத்தையும் பெறமாட்டார். அதனாலேயே இரண்டாம் வயலின் வாசிப்பது மிகவும் கஷ்டம். அதனை வாசிப்பதற்கு உள்ளத்தில் நிறையத் தாழ்ச்சி தேவை” என்றார். ஆமாம், தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தினரால் மட்டுமே இரண்டாம் வயலினை வாசிக்க முடியும். இன்று நாம் நினைவுகூரும் பெர்னதெத்தும் தாழ்ச்சிக்கு எடுத்துக்காட்டாக விளங்கினார் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது.

ஆகவே, தூய பெர்னதெத்தின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தினராய் வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்
Saint of the Day : (16-04-2020)

 St. Bernadette Soubirous

She was born at Lourdes, France on January 7, 1844 to Francois Soubirous and Louise Soubirous. The name given to her at the time of baptism was Mary Bernard. She and her family lived in utter poverty. On February 11, 1858 (Thursday), when she along with her sister and a friend went out to collect firewood, The Blessed Virgin Mary granted her a vision in a cave/Grotto on the banks of Gave River near Lourdes. Her sister and the other friend who accompanied her could not see anything. During the apparition Virgin Mary appeared with white robe and a blue sash and yellow roses covered her feet. She also held a large rosary in her right arm. There were altogether 18 apparitions from February 11 to July 16, 1858. On February 25, 1858 (Thursday) a spring emerged from the cave where the apparition occurred and the water from the spring was found out to be with miraculous qualities. On March 25, 1858 (Thursday), Bernadette asked Virgin Mary her name and Virgin Mary told her that Her name is 'The Immaculate Conception'. It was also reported that during this vision on March 25 Bernadette held a lighted candle in her hands. After some time, the candle burnt down and the flame was said to be in direct contact with her palm/skin for over 15 minutes but she did not experience any pain and her skin was also not affected. Bernadette later became a member of the Sisters of Notre Dame in Nevers. French authorities tried to shut the spring in the cave and also to halt the construction of the church. But the vision reached fame and Empress Eugenie, wife of Emperor Napoleon-III interfered in this matter and the work continued. She suffered from an illness and died on April 16, 1879 at Nevers. Her body was exhumed on September 22, 1909 and it was found to be incorrupt. This is one of the miracles for her canonization.

She was beatified on June 14, 1927 by pope Pius-XI and also canonized by pope Pius-XI on December 8, 1933.

---JDH---Jesus the Divine Healer---

15 April 2020

15-04-2020 முத்திபேறுபெற்ற. சீசர் பஸ் (Caesar by bus)சபை நிறுவுனர்

இன்றைய புனிதர் : 
(15-04-2020) 

முத்திபேறுபெற்ற. சீசர் பஸ் (Caesar by bus)
சபை நிறுவுனர்
பிறப்பு 3 பிப்ரவரி 1544 கவைலன் (Cavailon), பிரான்சு

இறப்பு 15 ஏப்ரல் 1607 அவஞ்நான்(Avignon), பிரான்சு

முத்திபேறுபட்டம்: 1975 திருத்தந்தை ஆறாம் பவுல்

சீசர் 1544 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி பிரான்சு நாட்டிலுள்ள கவைலன் என்ற ஊரில் பிறந்தார். இவர் பல ஆண்டுகள் ஓர் அரசனின் படையில் சேர்ந்து, படை வீரராக பணியாற்றினார். போர் முடிந்து வீடு திரும்பிய விடுமுறை நாட்களில், கவிதை எழுதுவதிலும், ஓவியம் வரைவதிலும் தன் நேரத்தை செலவழித்தார். பின்னர் பிரான்சு நாட்டின் மேற்கு கடற்கரை பகுதியை முற்றுகையிட பிரெஞ்சு இராணுவத்தினர் ஏற்பாடு செய்தனர். அப்போது சீசர் பஸ் தானும், கடற்படை இராணுவத்தில் சேரவேண்டுமென்று முடிவு செய்தார். ஆனால் இவர் ஒவிங்ஸ்(Owings) என்ற தீவிர நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் இம்முயற்சியை கைவிட்டார். மூன்று ஆண்டுகள் வரை, போரில் பங்கேற்க கூடாது என்றும், முழுமையான ஓய்வு எடுக்க வேண்டுமென்றும் இராணுவ படை அதிகாரி உத்தரவிட்டார். இந்த மூன்று ஆண்டுகளில் போரில் மக்களை கொன்று குவித்ததை நினைத்த சீசர் பஸ் மிகவும் மன வேதனைப்பட்டார். இப்பாவங்களுக்கு பரிகாரம் செய்ய, பல பக்தி முயற்சிகளை மேற்கொண்டார். தன் வாழ்வின் பாதையை மாற்றி அமைத்தார். தான் வைத்திருந்த பணத்தைக் கொண்டு, ஏழைகள் பலருக்கு உதவினார். பலரின் நோய்களை குணமாக்க பணம் செலவழித்தார்.

பின்னர் தன் சொந்த ஊரான கவைலன்-க்கு திரும்பினார். அப்போது குருவாக பணியாற்றிய தன் உடன்பிறந்த சகோதரர் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். இதனால் அதிர்ச்சி அடைந்த சீசர் பஸ், தான் குருவாக விரும்பி, தன் அண்ணன் ஆற்றிய இயேசுவின் சீடத்துவ பணியை தொடர விருப்பம் தெரிவித்து, உலக ஆசைகளை வெறுத்து, குருமடத்தில் சேர்ந்து 1582 ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். குருவான பிறகு மறையுரை ஆற்றுவதிலும், மறைக்கல்வி போதிப்பதிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டார்.

பிறகு 1592 -ல் குருமட மாணவர்கள் இறையியல் படிக்கவேண்டுமென்று, பிரான்சிலுள்ள பாரீசில், இறையியல் கல்லூரி ஒன்றை நிறுவினார். அதன் பிறகு அக்கல்லூரியில் படித்த சில மாணவர்களைக் கொண்டு "மதச்சார்பற்ற கிறிஸ்துவ குருக்கள்" (Secular priests of Christian Doctrine) என்ற சபையை பிரான்சிலுள்ள அவிஞ்நானிலும், சுவிட்சர்லாந்திலும் நிறுவினார். திருத்தந்தை எட்டாம் கிளமெண்ட் அவர்கள் 1597 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் நாள், இச்சபை ஓர் மதசார்பற்ற சபை என்ற அங்கீகாரத்தை வழங்கினார். தொடக்கத்தில் ஆண்களுக்கு மட்டுமே இச்சபை நிறுவப்பட்டது. பின்னர் பெண்களுக்காகவும் கிறித்தவர்களின் மகள்கள்(Daughters of Christians) என்ற சபை நிறுவப்பட்டது. இச்சபையே சில வருடங்கள் கழித்து உருசுலின்ஸ்(Ursulines) என்று பெயர் மாற்றம் பெற்று, இன்று வரை இயங்கிவருகிறது.

சீசர் பஸ் 1607 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் நாள் பிரான்சிலுள்ள அவிஞ்நான் என்ற ஊரில் இறந்தார். 1975ஆம் ஆண்டு வத்திகானிலுள்ள புனித பீட்டர் பேராலயத்தில் திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களால் முத்திபேறு பட்டம் கொடுக்கப்பட்டது.

செபம்:
மன்னிப்பின் நாயகனே! தான் செய்த பாவங்களை நினைத்து மனந்திரும்பி, உம் பாதையை தொடர்ந்த சீசர் பஸ்சை போல, நாங்களும் எம் பாவங்களிலிருந்து விடுப்பட்டு, மனந்திருந்தி வாழ உம் அருளைத் தாரும்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Saint of the Day : (15-04-2020)

Blessed Cesar de Bus

A middle child - the seventh of thirteen children, and raised as a pious child. Soldier at age 18, and fought in the war against the Huguenots. Joined the navy to fight in the siege of La Rochelle, but illness kept him from the fight. He lived for three years in Paris, France, devoted to poetry and painting and to wild and frivolous living. Back in his home town of Cavaillon, he took over the position of his late brother as canon of Salon, a position he wanted for its income and connections instead of its spiritual significance. One night while on his way to a masked ball, he passed a shrine where a small light was burning before an image of the Virgin Mary. He was suddenly overwhelmed by the memory that a friend, Antoinette Reveillade, had prayed fervently for his salvation. He realized that there was no way he could live a life offending God and then expect to be accepted in the end. There, on the road, he had a complete conversion.

Ordained in 1582. Canon in Avignon. He was profoundly affected reading a biography of Saint Charles Borromeo, and tried to take him as a model in all things, especially his devotion to catechesis. Worked as a catechist in Aix-in-Provence, France, an area in turmoil following the Religious Wars. Saint Francis de Sales called him “a star of the first magnitude in the firmament of Catechesis.” He founded the Ursulines of Province and the Fathers of Christian Doctrine (Doctrinarians). The Fathers were destroyed during the French Revolution, but an Italian branch, the Doctrinarian Fathers continues today with houses in Italy, France and Brazil.

Born :
3 February 1544 in Cavillon, Vaucluse, France

Died :
Easter Sunday, 15 April 1607 in Avignon, Vaucluse, France of natural causes
• interred in the church of Saint Mary in Monticelli in Rome, Italy

Beatified :
27 April 1975 by Pope Paul VI

Patronage :
catechists

---JDH---Jesus the Divine Healer---

14 April 2020

தூய லிட்வினா (ஏப்ரல் 14)

இன்றைய புனிதர் : 
(14-04-2020) 

தூய லிட்வினா (ஏப்ரல் 14)
“கிறிஸ்துவின் துன்பங்களில் நீங்கள் இத்துணைப் பங்கு கொள்கிறீர்கள் என எண்ணி மகிழுங்கள். அப்பொழுது கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படும் வேளையில் இன்னும் மகிழ்ந்து பேருவகை கொள்வீர்கள்” (1 பேது 4: 13)

வாழ்க்கை வரலாறு

லிட்வினா, 1380 ஆம் ஆண்டு நெதர்லாந்தில் பிறந்தார். இவர் சிறு வயது முதலே அன்னை மரியாவிடம் அளவு கடந்த பக்திகொண்டு வாழ்ந்து வந்தார். இவரிடமிருந்த பக்தியைக் கண்டு எல்லோரும் வியப்படைந்தார்கள்.

1396 ஆம் ஆண்டு லிட்வினாவின் வாழ்வில் ஒரு பெரிய விபத்து ஏற்பட்டது. அந்த விபத்து அவரை படுத்த படுக்கையாக்கியது. இது நடந்த சில நாட்களிலே அவருடைய முகம் மற்றும் உடல் முழுவதும் புண்கள் ஏற்பட்டன. அந்தப் புண்கள் எல்லாம் அவருக்குத் தீராத வலியைத் தந்தது. இத்தகைய தருணங்களில் அவர் செய்வதறியாது திகைத்தார். அப்போது தான் இவருடைய ஆன்ம ஆலோசகர் தந்தை ஜான் பாட் என்பவர் அவரிடம், இயேசுவின் பாடுகளைக் குறித்து தியானிக்கச் சொன்னார்.

லிட்வினா, இயேசுவின் பாடுகளை தியானிக்கத் தொடங்கியதிலிருந்து அவருடைய உடல் வேதனைகள் எல்லாம் தணிந்தன. அது மட்டுமல்லாமல், அவர் ஒருவிதமான பரவச நிலையை உணர்ந்தார். இதனால் அவர் இயேசுவின் பாடுகளைக் குறித்து தியானிக்கத் தொடங்கி, இயேசுவுக்கு உகந்தவராக வாழத் தொடங்கினார். லிட்வினா அவ்போது காட்சிகள் கண்டார். அந்தக் காட்சிகளில் ஆண்டவர் இயேசு அவரோடு உறவாடினார், பல காரியங்களை அவருக்கு வெளிப்படுத்தினார்.

லிட்வினா, தனது கடைசிப் பத்தொன்பது ஆண்டுகளில் அவ்வளவாக உணவு உட்கொள்ளவில்லை, அதிக நேரம் ஓய்வெடுக்கவும் எப்போதும் அவர் இயேசுவின் பாடுகளைக் குறித்தே தியானித்துக் கொண்டிருக்கவும் செய்தார். இதனால் அவர் இயேசு தன்னோடு எப்போதும் இருக்கின்றார் என்பதை உணர்ந்தார். நற்கருணை மட்டுமே உட்கொண்டு வந்தார். வேறு எந்த உணவையும் அவர் உட்கொள்ளவில்லை. நற்கருணைதான் அவருக்கு ஆன்மீக உணவாக மட்டுமல்ல, வாழ்வளிக்கும் உணவாக இருந்து வந்தது. இப்படி தன்னுடைய வாழ்வில் ஏற்பட்ட வலிகளைப் பொறுத்துக்கொண்டு ஆண்டவர் இயேசுவின் பாடுகளைப் பற்றியே தியானித்துக் கொண்டிருந்த லிட்வினா 1433 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1890 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய லிட்வினாவின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. வலிகளைப் பொறுத்துக்கொண்டால், வாழ்வு வசந்தமாகும்

தூய லிட்வினாவின் வாழ்க்கை வரலாற்றை நாம் வாசித்துப் பார்க்கும்போது, அவர் தன்னுடைய வாழ்வில் ஏற்பட்ட வலிகளை எல்லாம் பொறுத்துக்கொண்டு, அதனை வாழ்விற்கான சுருதியாக மாற்றிக்கொண்டது தான் நம்முடைய வியப்புக்குரியதாக இருக்கின்றது. தூய லிட்வினாவின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று நம்முடைய வாழ்வில் நமக்கு ஏற்படும் வழிகளை, துன்பங்களைப் பொறுத்துக்கொள்கின்றோமா? இல்லை அவற்றைக் கண்டு முணுமுணுக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்கில் நம்முடைய வாழ்வில் நமக்கு ஏற்படும் வலிகளைக் கண்டு நாம் கடவுளை சபிப்பது மிகவும் வேதனையான ஒரு காரியமாக இருக்கின்றது. இத்தகைய சூழ்நிலையில் நாம் தூய லிட்வினாவை நம்முடைய முன்னுதாரணமாகக் கொண்டு வலிகளைப் பொறுமையோடு தாங்கிக் கொள்வது மிகவும் சிறப்பானது.

உலகப் புகழ்பெற்ற ஓவியர் ஒனாயர். அவர் வரைந்த ஓவியங்கள் காலம் கடந்து பேசப்பட்டு வருகின்றன. அவர் ரூமேட்டிஸம் என்ற நோயினால் பாதிக்கப்பட்டார். அப்படியிருந்தும் அந்த நோய் தந்த வலிகளை எல்லாம் பொறுத்துக்கொண்டு அவர் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்தார். இதைப் பார்த்த அவருடைய நண்பர், “ஒனாயரே! வயதான காலத்தில் வலியின் உச்சத்தில் ஓவியம் வரைவது அவசியமா?” என்று கேட்டார். அதற்கு அவர் அவரிடம், “வலி நீடிப்பது சில மணி நேரங்கள்தான். ஆனால் வரைவதன் இன்பமோ பல நாட்கள் நீடுகள். அதைவிடவும் வரைகின்ற ஓவியமோ காலம் கடந்தும் நிற்கும். அதனால் இப்படி ஓவியங்களை வரைந்துகொண்டிருக்கின்றேன்” என்றார்.

ஆமாம், வலிகளைப் பொறுமையோடு தாங்கிக்கொண்டு தொடர்ந்து உழைப்பவரே, வாழ்வில் வசந்தத்தைக் காண்பார்.

ஆகவே, தூய லிட்வினாவின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று, நம்முடைய வாழ்வில் வருகின்ற வலிகளைப் பொறுமையோடு தாங்கிக்கொள்வோம், இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

13 April 2020

தூய முதலாம் மார்டின் (ஏப்ரல் 13)

13 ஏப்ரல் 2020, திங்கள்

இன்றைய புனிதர்

தூய முதலாம் மார்டின் (ஏப்ரல் 13)
“கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” (யோவான் 12: 24)

வாழ்க்கை வரலாறு

மார்டின் ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் டோடி என்னும் நகரில் பிறந்தார். . இவர் வளரும்போதே அறிவிலும் ஞானத்திலும் சிறந்து விளங்கியதால், திருத்தந்தை அவர்கள் இவரை கொன்ஸ்தாந்திநோபல் நகரின் தூதுவராக ஏற்படுத்தினார். ஒருசில ஆண்டுகளிலே இவர் திருத்தந்தையாகவும் உயர்ந்தார்.

திருத்தந்தையாக உயர்ந்த பின்பு மார்டின் மிகச் சிறப்பான முறையில் பணிகளைச் செய்து வந்தார். குறிப்பாக திருச்சபையை எதிரிகளிடமிருந்தும் தப்பறைக் கொள்கைக் கொள்கைகளிலிருந்தும் கட்டிக்காப்பாற்றி வந்தார்.. இவருடைய காலத்தில் மொனோதலிடிசம் எனப்படும் தப்பறை கொள்கை திருச்சபைக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருந்து வந்தது. இத்தப்பறைக் கொள்கை இயேசுவுக்கு இறையியல்பு மனித இயல்பு என்ற இரு இயல்புகள் கிடையாது, ஒரு இயல்பு தான் இருக்கின்றது என்று சொல்லி வந்தது. இதனை திருத்தந்தை மார்டன் மிகக் கடுமையாக எதிர்த்தார். அது மட்டுமல்லாமல் லாத்தரன் சங்கத்தைக் கூட்டி, இத்தப்பறைக் கொள்கையைப் பரப்பி வந்த கொன்ஸ்தாந்திநோபலின் மன்னன் கொன்ஸ்டண்டீனை கடுமையாக எதிர்த்தார்.

இது அரசனுக்குப் பிடிக்கவில்லை. எனவே அவன் வெகுண்டெழுந்தான். திருத்தந்தை மார்டினைப் பிடிக்க ஒலிம்பியம்ஸ் என்பவனை அனுப்பி வைத்தான். அவனால் திருத்தந்தையைப் பிடிக்க முடியவில்லை. காரணம் திருத்தந்தையிடமிருந்த ஏதோ ஓர் ஆற்றல், அவரை அவன் நெருங்க விடாமல் செய்தது. எனவே, அவன் தன்னுடைய தோல்வியை ஒத்துக்கொண்டு ஓடிப்போனான். ஒலிம்பியசுக்குப் பிறகு மன்னன் தியோடர் என்பவனை அனுப்பி வைத்து, திருத்தந்தையை பிடிக்கச் செய்தான். அவன் உரோமை நகருக்கு வந்து திருத்தந்தையைப் பிடித்துக் கொண்டுபோய் கொன்ஸ்தாந்திநோபல் நகரில் போய் இறக்கினான். ஏற்கனவே உடல் வலுவற்று இருந்த திருத்தந்தை, கப்பல் பயணத்தின்போது சரியாக உணவு கொடுக்கப்படாததால் மிகவும் உடல் மெலிந்து காணப்பட்டார்.

கொன்ஸ்தாந்திநோபல் நகருக்குக் கொண்டுவரப்பட்ட திருத்தந்தைக்கு அரசன் மரணதண்டனை விதித்தான். ஆனால், அங்கிருந்த மக்களோ அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இதனை சற்றும் எதிர்பார்த்திராத மன்னன் அவரை கெர்சோன் என்ற பகுதிக்கு நாடு கடத்தினான். அங்கு அவர் ஒன்றரை ஆண்டுகள் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார். இதனால் அவருடைய உடல் மிகவும் பலவீனமடைந்து போய், 655 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் நாள் இறையடி சேர்ந்தார். இவர் இறந்த பின்பு, இவருடைய உடல் அடக்கம் செய்து வைக்கப்பட்ட கல்லறையில் நிறையப் புதுமைகள் நடந்தன.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய மார்டினின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. துணிவோடு இருத்தல்

தூய மார்டினின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது அவரிடம் இருந்த துணிச்சல், யாருக்கும் அஞ்சாத மன உறுதிதான் நம்முடைய நினைவுக்கு வந்து போகின்றது. தூய மார்டினின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்றது துணிச்சலோடு ஆண்டவருடைய வார்த்தையை எடுத்துரைக்கின்றோமா? அவருக்குச் சான்று பகற்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

கல்லூரி ஒன்றில் ‘சுய முன்னேற்ற வகுப்பு’ நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர் ஒருவரிடம், மாணவன், “துணிச்சல் என்றால் என்ன?” என்று கேட்டான். அதற்கு ஆசிரியர் அவனிடம், “மனத்தளர்ச்சி கொள்ளாமல், தோல்விகளையும் அவமானங்களையும், கஷ்டங்களையும் தாங்கிக்கொள்வதே மகத்தான துணிச்சல்” என்றார். இதை கேட்டு அந்த மாணவன், வாழ்வில் வரக்கூடிய தோல்விகளையும் கஷ்டங்களையும் துணிவோடு தாங்கிக்கொள்ளத் தயாரானான். ஆமாம், நம்முடைய வாழ்வில் நாம் சந்திக்கின்ற கஷ்டங்கள், அவமானங்கள் போன்றவற்றை எல்லாம் உறுதியான மனநிலையோடு தாங்கிக் கொண்டு, தொடர்ந்து நம்முடைய இலக்கை நோக்கி நடப்பதுதான் உண்மையான துணிச்சல் ஆகும்.

ஆண்டவர் இயேசு தன்னுடைய பணி வாழ்வில் பல்வேறு எதிர்ப்புகளையும் அவமானங்களையும் சந்தித்தார். திருமுழுக்கு யோவானும் அப்படித்தான். இவர்கள் எல்லாம் தங்களுடைய வாழ்வில் எதிர்ப்புகளும் அவமானங்களும் வந்துவிட்டதே என்று தங்களுடைய முயற்சியில் இருந்து பின்வாங்கவில்லை. எப்போதும் அவர்கள் முன்னோக்கித்தான் சென்றார்கள். அதனால்தான் இன்றைக்கும் நம்மால் நினைவுகூரப் படுபடுகின்றார்கள்.

ஆகவே, தூய மார்டினின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று, அஞ்சா நெஞ்சத்தோடும் துணிச்சலோடும் ஆண்டவருக்குச் சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Saint of the Day : (13-04-2020)

Pope Saint Martin I

Chosen 74th pope in 649 without imperial approval. Conducted the Lateran Council which condemned the patriach of Constantinople for Monothelitism, which claimed that Christ had no human will. This put him in opposition to the emperor who had him arrested and tortured. Paul, Patriarch of Constantinople, repented of his stance which saved Martin from execution, but the pope died soon after from damage done during his imprisonment, and is considered a martyr, the last martyred pope.

Born :
at Todi, Tuscany, Italy

Died : 
655 at Cherson, Crimea (in modern Ukraine) from starvation

Papal :
649

---JDH---Jesus the Divine Healer---

12 April 2020

புனித.ஜூலியஸ் (Julius I)ஆயர் April 12

இன்றைய புனிதர்
2020-04-12
புனித.ஜூலியஸ்  (Julius I)
ஆயர்
பிறப்பு

மேற்கு உரோம பேரரசு (Western Roman Empire)
இறப்பு
12 ஏப்ரல் 352
உரோம்

ஜூலியஸ் 337ஆம் ஆண்டு முதல் 352 ஆம் ஆண்டு வரை உரோமில் ஆயராக இருந்தார். உரோமில் பிறந்தவரான இவர் மார்க் என்ற ஆயரின் வாரிசாக தேர்வு செய்யப்பட்டார். இவர் ஆரியன் (Arian) திருச்சபையைப் பற்றி நன்கு அறிந்திருந்தார். கான்ஸ்டான் டி நோபிள் பேராயராக இருந்தபோது, 341 ல் அந்தியோக்கியாவில் பேராயர்களின் மாநாடு நடைபெற்றது.. இதனால் உரோமின் பிரதிநிதியாக அம்மாநாட்டிற்கு ஆயர் ஜூலியஸ் சென்றார். அங்கு நடைப்பெற்ற சில விவாதங்களுக்கு ஆயர் ஜூலியஸ் மறுப்பு தெரிவித்தார். இதனால் பேராயர்கள் நடுவில் இரு பிரிவு ஏற்பட்டது. அத்தனாசியுஸ் ஒரு பிரிவாகவும், ஜூலியஸ் மறுபிரிவாகவும் பிரிந்தனர். அத்தனாசியஸ், ஆயர் ஜூலியஸ் மீது வழக்கு தொடர்ந்தார். இதனால் உரோம் ஆயராக, அத்தனாசியுஸ் பொறுப்பேற்றார். ஆயர் அத்தனாசியுஸ், தன் மீது கூறிய வழக்குகள் அனைத்தும் பொய் என்று கூறி, ஜூலியஸ், அலெக்சாண்டரின் பேரவைக்கு கடிதம் எழுதினார். இக்கடிதத்தை அலெக்சாண்டரின் பேராயர் திருத்தந்தைக்கு அனுப்பினார். திருத்தந்தையால் இக்கடிதம் வாசிக்கப்பட்டு, ஆயர்களின் குழுக்களையும் அழைத்து விசாரித்தார். அப்போது ஆயர் ஜூலியஸ் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டது.

அதன்பிறகு ஆயர் ஜூலியஸ் தொடர்ந்து திறமையாக செயல்பட்டார். அப்போது 76 ஆயர்களை கொண்டு பிலிப்போபோலிஸில்(Philoppopolis) மாநாடு நடைப்பெற்றது. இம்மாநாட்டை ஆயர் ஜூலியஸ் தலைமை தாங்கி நடத்தினார். இதில் ஆயர் அத்தனாசியாரும் கலந்து கொண்டார். அதன்பிறகு 300 மேற்கு உரோம் ஆயர்களை கொண்டு, மீண்டும் ஓர் மாநாடு நடைப்பெற்றது. இதற்கு முன் நடந்த 3,4 மற்றும் 5 ஆவது மாநாடுகளில் பேசப்பட்ட விவாதங்கள் அனைத்தும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, நடைமுறைப் படுத்தப்பட்டது. இவ்வாறாக ஆயர் ஜூலியஸ் பல மாநாட்டை தலைமையேற்று நடத்தி, திருச்சபையில் பல மாற்றங்களை கொண்டு வந்தார்.

ஆயர் ஜூலியஸ் 352 ஆம் ஆண்டு, ஏப்ரல் 12 ஆம் நாள் உரோமையில் இறந்தார். இவர் இறந்தபிறகு மக்களால் புனிதராக வணங்கப்பட்டார். ஜூலியஸ் தான் ஆயராக உரோமில் இருந்தபோதுதான் கிறித்துப்பிறப்பு விழாவையும், மூன்று அரசர்கள் பெருவிழாவையும் தொடர்ந்து கொண்டாடப்பட வேண்டுமென்று, மாநாடுகளில் வலியுறுத்தினார். திருச்சபை காலண்டரில் தேதியை குறிப்பிட்டு, விழாக்களை இணைத்தார். அன்றிலிருந்து இவ்விரு விழாவும் பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


செபம்:
நல்ல ஆயனாம் இறைவா! உமது இறையரசை இவ்வுலகில் நிலைநாட்ட, எம் ஆயர்களோடு இருந்து, எம்மை வழிநடத்தியருளும்




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

திருக்காட்சியாளர் குரியினன்வோர்த் நகர் ஹென்றி Heinrich von Grünenwörth
பிறப்பு: 14 ஆம் நூற்றாண்டு
இறப்பு: 12 ஏப்ரல் 1396 ஸ்ட்ராஸ்பூர்க் Straßburg, பிரான்சு

11 April 2020

புனித.தனிஸ்லாஸ்ஆயர், மறைசாட்சி April 11

இன்றைய புனிதர்
2020-04-11
புனித.தனிஸ்லாஸ்
ஆயர், மறைசாட்சி
பிறப்பு
26 ஜூலை 1030
ஜெசப்பனா (Szcepanow)
இறப்பு
11 ஏப்ரல் 1079
போலந்து
புனிதர் பட்டம்: 1253
திருத்தந்தை நான்காம் இன்னோசென்ட்

இவர் போலந்து நாட்டில் ஜெசப்பனாவிலுள்ள, போக்கினா (Bochina) என்ற ஊரில் 1030 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26 ஆம் நாள் ஓர் அரசர் குடும்பத்தில் பிறந்தார். இவரின் பெற்றோருக்கு பல வருடங்கள் குழந்தைப்பேறு இல்லாமலிருந்தபோது, பல ஜெப, தவ முயற்சிகளை மேற்கொண்டு, இறைவனின் அருளால் அற்புதமாக, ஓர் அதிசய குழந்தையாக இவர் பிறந்தார். இவர் பெற்றோர் இவரை அறிவிலும், ஞானத்திலும், பக்தியிலும் சிறந்த குழந்தையாக வளர்த்தார்கள். அதன்பின் பிரான்சிலுள்ள ஓர் கன்னியர்களின் பள்ளியில் இளம் வயது படிப்பை முடித்துவிட்டு, போலந்து நாட்டிற்கு சென்று குருமடத்தில் சேர்ந்து குருவானார்.

பின்பு 1072 ஆம் ஆண்டு கிராக்காவ்(Krakau) மறைமாவட்டத்தில் ஆன்ம குருவாக பணியாற்றியபின் ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது போலந்து நாட்டின் அரசராக இருந்த இரண்டாம் பொலோஸ்லாஸின் (Boleslaw) தாய் தனிஸ்லாசின் உறவினர். இவர் பல நோய்களால் தாக்கப்பட்டு இறந்து போனார். இவரின் இறுதி சடங்கை ஆயர் தனிஸ்லாஸ் அவர்கள் நிறைவேற்றிவைத்தார். இதனால் அரசர் குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டது. இப்பிரச்சினைகளை ஆயர் தனிஸ்லாஸ் அவர்களே தீர்த்து வைத்தார். பண ஆசை பிடித்தவனாகவும், இன்னும் பல தீய செயல்களுக்கும் அடிமைப்பட்டவனாகவும் வாழ்ந்த அரசர் இரண்டாம் பொலோஸ்லாசை மனந்திருப்பினார்.

ஆனால் மீண்டும் அரசர் பாவ நிலைக்கே திரும்பினான். ஆயர் தனிஸ்லாஸ் மீண்டும் அவரைக் கண்டித்தார். இதனால் அரசன் கோபம் கொண்டு திருச்சபைக்கு எதிராகச் செயல்பட்டான். ஆயர் திருப்பலியாற்றிக் கொண்டிருந்தபோது, அவரை கொல்ல ஆள் அனுப்பினான். ஆனால் ஆயரிடமிருந்து பேரொளி ஒன்று வெளிப்பட்டதால், அவரை படையாட்கள் கொல்லாமல் விட்டுச் சென்றார்கள். இதனால் அரசனே வந்து ஆயரை 1079 ஆம் ஆண்டு ஏப்ரல் பதினொன்றாம் தேதி வெட்டிக் கொன்றான். இப்பெரிய பாவத்தை செய்ததால் போலந்து நாட்டை விட்டு விரட்டப்பட்டான். பின்னர் ஹங்கேரி நாடு சென்று, ஓசியாக் என்ற ஊரிலிருந்த புனித ஆசீர்வாதப்பர் சபையில் சேர்ந்து, தன் பாவங்களுக்கு பரிகாரம் செய்தான்.

ஆயர் தனிஸ்லாஸ் ஓர் நல்ல ஆயனாக இருந்து திருச்சபையை வழிநடத்தினார். ஏராளமான ஏழைகளுக்கு உதவிசெய்தார். தம் மறைமாவட்டதிலிருந்த மறைபரப்பு பணியாளர்களை ஆண்டுதோறும் சந்தித்து இறைப்பணியை திறம்பட செய்ய ஊக்கமூட்டினார். 1253 ஆம் ஆண்டு திருத்தந்தை நான்காம் இன்னோசென்ட் அவர்களால், அசிசி நகரில் புனிதராக உயர்த்தப்பட்டார். ஆயர் தனிஸ்லாஸ் போலந்து நாட்டிற்குப் பாதுகாவலராக உள்ளார்.


செபம்:
அன்பான இறைவா! உமது மாட்சிமைக்காக தம் உயிரை இழந்த புனித தனிஸ்லாஸைப் போல, எம் திருச்சபையிலுள்ள ஒவ்வொரு ஆயர்களும் உமது மகிமைக்காக வாழ வரம் தாரும்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

சபைநிறுவுநர் ஹெலேனா குவேரா Helena Guerra
பிறப்பு: 23 ஜூன் 1835 லூக்கா Lucca, இத்தாலி
இறப்பு: 11 ஏப்ரல் 1914 இத்தாலி

புனித லாங்கினஸ்

யார் இந்த புனித லாங்கினஸ்
பைபிளில் புதிய ஏற்பாட்டு கால நூல்கள் என்ற அடிப்படையில் பல புத்தகங்கள், திருமுகங்கள் உள்ளது...அவற்றில் ஒன்று ‘நிக்கோதேமுவின் திருமுகம்’.
இவ் நூல் நாம் பயன்படுத்தும் புதிய ஏற்பாடு பைபிளில் இல்லை...ஆனாலும் பல ஆதி திருச்சபை குறித்து குறிப்புகளை கொண்டுள்ளது..
அந்த நூலில் இயேசுவின் விலாவில் ஈட்டியால் குத்தியவரின் பெயரும் அவரைப் பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. இயேசுவைக் குத்தப் பயன்படுத்தப்பட்ட ஈட்டியானது தூய அல்லது புனித ஈட்டி (Relics) என அழைக்கப்படுகிறது.

ஆதி திருச்சபை எழுத்துக்களின் அடிப்படையில் அந்த வீரனின் பெயர் ‘லாங்கினஸ்’. பார்வைக் குறைபாடு உடையவர். இவரே இயேசுவின் விலாவில் ஈட்டியால் குத்துகிறார். சிலுவைக் குற்றவாளிகளின் விலாவில் ஈட்டியால் குத்தும் வழக்கம் அன்றைய காலத்தில் இருந்தது. ஒருவகையில் விரைவில் குற்றவாளிகள் இறக்கவும், அவர்கள் இறந்து விட்டார்களா என்பதை ஊர்ஜிதப்படுத்தவும் இதைச் செய்வார்கள்.

இயேசுவின் விலாவில் இவர் குத்துகிறார். அப்போது இரத்தமும், தண்ணீரும் வடிகின்றன. தெறிக்கின்ற குருதியில் சில துளிகள் பார்வைக் குறைபாடுடைய அவனது கண்களில் விழுகின்றன. அவனது கண்கள் முழுமையாய் குணமடைகின்றன. ஈட்டியால் தன்னைக் குத்தியவருக்கும், நன்மையைச் செய்கிறது குணமளிக்கும் குருதி.

இயேசு உயிர்த்தெழுந்ததைக் கேள்விப்பட்டபின் அவர் இயேசுவின் சீடர்களைச் சந்திக்கிறார். அதன் பின் அவர் கிறிஸ்தவராக மாறுகிறார்.

தனது வேலையை உதறிவிட்டு நற்செய்தி அறிவித்தலில் ஈடுபட்டார். சொந்த ஊரான கப்பதோஷியாக்குத் திரும்பி இயேசுவின் நற்செய்தியைப் பறைசாற்றி வேத சாட்சியாக மரித்தார்...

இவரின் நினைவுச்சின்னங்கள் இத்தாலியில் புனித அகுஸ்தீனார் தேவாலயத்தில் உள்ளது...

THE ROMAN SOLDIER WHO PIERCED THE SIDE OF JESUS CONVERTED AND BECAME A SAINT?
St. Longinus is the centurion who pierced the side of Our Lord while He was hanging on the Cross. St. Longinus, who was nearly blind, was healed when some of the blood and water from Jesus fell into his eyes. It was then he exclaimed "Indeed, this was the Son of God!" [Mark 15:39]. St. Longinus then converted, Left the army, took instruction from the apostles and became a monk in Cappadocia. There he was arrested for his faith, his teeth forced out and tongue cut off. However, St. Longinus miraculously continued to speak clearly and managed to destroy several idols in the presence of the governor. The governor, who was made blind by the demons that came from the idols, had his sight restored when St. Longinus was being beheaded, because his blood came in contact with the governors' eyes. St. Longinus' relics are now in the church of St Augustine, in Rome. His Lance is contained in one of the four pillars over the altar in the Basilica of St Peter's in Rome.

தூய வால்டேட்ரூடிஸ் (ஏப்ரல் 09)

இன்றைய புனிதர் : 
(09-04-2020) 

தூய வால்டேட்ரூடிஸ் (ஏப்ரல் 09)
“என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவை எல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறு பெற்றார்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள் ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும் (மத் 5: 11-12)

வாழ்க்கை வரலாறு

வால்டேட்ரூடிஸ், பெல்ஜியம் நாட்டில் ஏழாம் நூற்றாண்டில் பிறந்தார். இவருடைய குடும்பமே புனிதர்களின் குடும்பம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்தளவுக்கு இவரது தாய், தந்தை, இவருடைய அக்காள், கணவர், இவருடைய நான்கு பிள்ளைகள் என எல்லாரும் பின்னாளில் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டார்கள்.

வால்டேட்ரூடிஸ், அழகில் சிறந்தவராய் இருந்தார். அதனால் இவரை மணந்து கொள்வதற்கு நிறையப் பேர் போட்டி போட்டுக்கொண்டு வந்தார்கள். ஆனால் வால்டேட்ரூடிசின் தந்தையோ அவருக்குப் பிடித்தாற்போல் ஓர் இளைஞனைத் தேர்ந்தெடுத்து, அவருக்கு வால்டேட்ரூடிசை மணமுடித்துக் கொடுத்தார். அவர் பெயர் மடெல்கார் என்பது ஆகும். மடெல்கர் வால்டேட்ரூடிஸ்மீது அன்பு மழை பொழிந்து அவரை நல்ல விதமாய் பார்த்துக் கொண்டார்.

இப்படி வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாய் போய்க்கொண்டிருந்த தருணத்தில், வால்டேட்ரூடிஸ்மீது பொறமை கொண்டவர்கள் அவர் மிகவும் தவறான பெண்மணி என்று பழி போட்டார்கள். அத்தகைய தருணங்களில் வால்டேட்ரூடிஸ் மனம் உடைந்து போய்விடவில்லை. மாறாக ஆண்டவர் இயேசுவின்மீது மக்கள் அபாண்டமாகப் பழி போட்டபோது, அவர் எப்படி அதை எதிர்கொண்டாரோ அதுபோன்று வால்டேட்ரூடிசும் மக்கள் தன்மீது சுமத்திய அபாண்டமான பழிகளை துணிவோடு எதிர்கொண்டார்.

இதற்கு மத்தியில் வால்டேட்ரூடிஸ் – மடெல்கர் தம்பதியினருக்கு இறைவன் நான்கு குழந்தைகளைக் கொடுத்து ஆசிர்வதித்திருந்தார். நான்காவது குழந்தையைப் பெற்ற சிறுது நாட்கள் கழித்து வால்டேட்ரூடிசின் கணவர் துறவற வாழ்க்கை மேற்கொள்வதாக அவரிடத்தில் சொன்னார். வால்டேட்ரூடிஸ் அதற்கு எந்தவித மறுப்பும் சொல்லாமல், தன் கணவர் துறவற வாழ்க்கை மேற்கொள்வதற்கு முழு அனுமதியும் கொடுத்தார். இதற்கு பின்னர் வால்டேட்ரூடிஸ் எப்போதும் ஜெபத்திலும் தவத்திலும் தன்னை முழுமையாய் ஈடுபடுத்திக் கொண்டார். தன்னுடைய பிள்ளைகளும் ஓரளவு வளர்ந்த பின் வால்டேட்ரூடிசும் துறவற மடத்தில் சேர்ந்து, இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழத் தொடங்கினார்.

துறவற மடத்தில் சேர்ந்த பின்பு வால்டேட்ரூடிஸ் ஏழைகள் மீது உண்மையான அன்பைக் காட்டினார். மட்டுமல்லாமல் அவர்களுக்காக ஜெபித்தார். இப்படி இறைவனுக்காக தன்னை முற்றிலும் அர்ப்பணித்து வாழ்ந்த வால்டேட்ரூடிஸ் 688 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருடைய இறப்புக்குப் பின்னர் இவருடைய கல்லறையில் நிறைப் புதுமைகள் நடக்கத் தொடங்கின.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய வால்டேட்ரூடிசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. விமர்சனங்களை விவேகத்தோடு எதிர்கொள்வோம்

தூய வால்டேட்ரூடிஸ் மிகவும் அழகாக இருந்ததால், அவர்மீது பொறமை கொண்ட ஒருசில விஷமிகள் அவரைக் குறித்து மிகவும் தவறாகப் பேசினார்கள். அத்தகைய தருணங்களில் எல்லாம் அவர் இயேசுவையே முன்மாதிரியாகக் கொண்டு, அவர் எப்படி தன்மீது சுமத்தப்பட்ட விமர்சனங்களை விவேகத்தோடு எதிர்கொண்டாரோ அதுபோன்று வால்டேட்ரூடிசும் தன்மீது சுமத்தப்பட்ட விமர்சனங்களை விவேகத்தோடு எதிர்கொண்டார்.

பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கும் நம் ஒவ்வொரின் மீதும் பலர் தேவையில்லாமல் விமர்சனங்களை, குற்றச்சாட்டுகளை வைப்பார்கள். அப்படிப்பட்ட தருணத்தில் நாம் தூய வால்டேட்ரூடிசை போன்று விமர்சனங்களை விவேகத்தோடு எதிர்கொள்ளவேண்டும் என்பதுதான் நம் கருத்தில் கொள்ளவேண்டிய செய்தியாக இருக்கின்றது. இன்னும் சொல்லப் போனால், பலருக்கு நல்லத்தைப் பார்த்து பாராட்டக்கூடிய மனப்பக்குவம் வருவதில்லை. அவர்கள் எப்போதும் குறை கண்டுபிடிப்பதையே தங்கள் தொழிலாக வைத்திருக்கின்றார்கள். இவர்களிடத்திலும் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

ஒரு சமயம் காட்டு வழியாகப் போன ஒருவன் அதிசய நாயைக் கண்டான். அது தண்ணீரில் சாவகாசமாய் நடந்து போகக்கூடிய நாய். மட்டுமல்லாமல் கண்ணில் பட்ட பறவைகளைப் பிடித்து வந்து கரையில் போடும். அந்த அதிசய நாயோடு நட்பு பாராட்டி ஊருக்குள் அழைத்து வந்து, ஆசையோடு வீட்டுக் காரியிடம் காட்டினான். அவளும் ஆசையோடு பார்த்தாள். அவளுடைய கண் முன்னாலே அந்த நாய் தண்ணீரில் நடந்து போனது; கண்ணில் பட்ட பறவைகளைப் பிடித்து வந்து கரையில் போட்டது. இதைப் பார்த்த வீட்டுக்காரி, “என்னங்க இந்த நாய் தண்ணீரில் நடந்து போகிறது, இதற்கு நீந்தத் தெரியாதா?” என்றாள். இதைக் கேட்டு அவளுடைய கணவன் தன் தலையில் அடித்துக் கொண்டான்.

தண்ணீரில் நடந்து போகக்கூடிய அற்புத நாயாக அது இருக்க, அந்த நாய்க்கு நீந்தத் தெரியாது என்று நொட்டை சொன்ன அந்தப் பெண்மணியைப் போன்று நிறையப் பேர், பாராட்டுவதற்கு நிறைய இருந்தும் விமர்சிக்கவே செய்வார்கள். இப்படிப்பட்டவர்களை விவேகத்தோடு எதிர்கொள்வது சிறப்பு.

ஆகவே, தூய வால்டேட்ரூடிசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று இறைப்பணியை சிறப்புடன் செய்வோம், எதிர்வரும் சவால்களைத் துணிவோடு வெல்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

புனித. மக்தலேனா கனோசா (Magdalena Conassa), April 10

இன்றைய புனிதர்
2020-04-10
புனித. மக்தலேனா கனோசா (Magdalena Conassa),
சபை நிறுவுனர்
பிறப்பு
02 மார்ச் 1774
வெரோனா, இத்தாலி
இறப்பு
10 ஏப்ரல் 1835
வெரோனா, இத்தாலி
முத்திபேறுப்பட்டம்: 1941 திருத்தந்தை 12 ஆம் பயஸ்
புனிதர் பட்டம்: 2 அக்டோபர் 1988 திருத்தந்தை 2 ஆம் ஜான் பால்

புனித மக்தலேனா கனோசா 1774 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் நாள் இத்தாலி நாட்டிலுள்ள வெரோனாவில் பிறந்தார். மார்க்கிராப்பின் ஒக்டோவியூஸ், தெரேசா ஸ்லூவா இவரின் பெற்றோர். மக்தலேனா ஐந்து வயதாக இருக்கும்போது அவரின் தந்தை விபத்தில் இறந்துவிட்டார். இதனால் தன் தாய் மீண்டும் ஓர் மறுமணம் செய்துகொண்டார். புதிய தந்தையால் மக்தலேனா பல துன்பங்களை அனுபவித்தார். தாழ்ச்சியிலும், பக்தியிலும் சிறந்து விளங்கிய மக்தலேனா குழந்தையாக இருந்த போதே துறவியாக வேண்டுமேன்று ஆசைப்பட்டார். மக்தலேனா தன் ஊரிலிருந்த கார்மேல் மடத்திற்கு சென்று அவ்வப்போது ஜெபித்து வந்தார். சிறுவயதில் பெற்றோரின் கொடுமை தாங்க முடியாமல் கார்மேல் மடத்திற்கு சென்று தஞ்சம் அடைந்தார். அங்கு மக்தலேனா கார்மேல் மட கன்னியர்களால் வளர்க்கப்பட்டார். தம் பள்ளிப்படிப்பை முடித்தபின், தம் பதினைந்தாம் வயதில் கார்மேல் மடத்தில் துறவற பயிற்சியில் சேர்ந்தார். எட்டு மாதங்கள் கழித்து, தன் சொந்த ஊரிலிருந்து, ற்றோவிசோ(Treviso) என்ற ஊரிலிருந்த கார்மேல் மடத்திற்கு பயிற்சிக்காக அனுப்பிவைக்கப்பட்டார். ஆனால் அங்கிருந்து சில மாதங்களிலிலேயே விரைவில் வெரொனா திரும்பினார். அப்போது அரசர் நெப்போலியன் வடக்கு இத்தாலியை ஆக்கிரமித்தான். இதனால் மக்தலேனா தன் சொந்த வீட்டு நிர்வாகத்தை கவனிக்க வேண்டியதாக இருந்தது.

நெப்போலியனின் ஆக்கிரமிப்பால் தன் அரண்மனையிலிருந்த பல குழந்தைகள் காயப்பட்டு, அனாதைகளாக விடப்பட்டனர். இதனால் மக்தலேனா தன் அரண்மனையிலே, ஓர் இல்லத்தில் குழந்தைகளை தங்க வைத்து, பராமரித்து அவர்களுக்கு கல்வியை வழங்கினார். 1808 ஆம் ஆண்டு கைவிடப்பட்ட குழந்தைகளை தொடர்ந்து பராமரிக்க வேண்டி, உதவிக்காக ஜெனோவா மாவட்டத்திலிருந்து ஓர் அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் பயனாக 1808 ஆம் ஆண்டு அன்பின் மகள்கள்(Daughters of Love) என்ற சபையை நிறுவினார். பிறகு 1810 மற்றும் 1812 ஆம் ஆண்டுகளில் வெனிஸ் நகரிலிருந்த தெருகுழந்தைகளுக்கு, வெனிஸில் 2 சபையையும், 1816 ஆம் ஆண்டு மிலானிலுள்ள பெர்காமோவிலும்(Bergamo) சபைகளை நிறுவினார். இச்சபைகளை தொடர்ந்து பராமரிக்க அப்போது ஆஸ்திரிய நாட்டில் அரசராக இருந்த முதலாம் பிரான்ஸ் அவர்களால் ஆதரவு கொடுக்கப்பட்டது. அரசர் தொடர்ந்து எல்லா விதங்களிலும் உதவிகளை வழங்கினார். 1828 ஆம் ஆண்டு திருத்தந்தை பன்னிரெண்டாம் லியோ அவர்களால், இச்சபை திருத்தந்தையின் அதிகாரத்திற்குட்பட்ட சபையாக அங்கீகரிக்கப்பட்டது. அதன்பிறகு இச்சபை இத்தாலி, இந்தியா, இந்தோனிசியா, ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா என பல நாடுகளில் பரவியது.

மக்தலேனா 1835 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் நாள் வெரோனாவில் இறந்தார். 1941 ஆம் ஆண்டு திருத்தந்தை 12 ஆம் பயஸ் அவர்களால் முத்திபேறுப்பட்டம் கொடுக்கப்பட்டது. திருத்தந்தை 2 ஆம் ஜான் பால் அவர்களால் 1988 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டாம் நாள் புனிதராக அறிவிக்கப்பட்டார்.


செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! புனித மக்தலேனாவைப் போல, நாங்களும் ஏழை, எளியவர்களின் மேல் அக்கறை கொண்டு வாழ உமதருள் தாரும்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

அட்மோண்ட் நகர் துறவி எங்கல்பெர்ட் Engelbert von Admont
பிறப்பு: 1250, ஸ்டையர்மார்க் Steiermark, ஆஸ்திரியா