புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

26 May 2020

தூய பிலிப்புநேரி (மே 26)

இன்றைய புனிதர் :
(26-05-2020)

தூய பிலிப்புநேரி (மே 26)

நிகழ்வு


பிலிப்புநேரி வாழ்ந்த காலத்தில் அடுத்தவரைப் பற்றி இழிவாக, தரக்குறைவாகப் பேசும் பெண்மணி ஒருவர் இருந்தார். அவருக்கு சரியான பாடம் புகட்டவேண்டும் என பிலிப்புநேரி நினைத்தார். எனவே ஒருநாள் அவர் அந்த பெண்மணி இருந்த இடத்திற்குச் சென்று, வாத்தின் இரண்டு இறக்கைகளைக் கொடுத்து, அதனை கொஞ்சம் கொஞ்சமாக பிய்த்து காற்றில் பறக்கவிடச் சொன்னார். அவரும் மிகவும் குஷியாக இறக்கைகளைக் பிய்த்து அவற்றை காற்றில் பறக்கவிட்டார். சிறுது நேரம் கழித்து பிலிப்பு நேரி அந்தப் பெண்மணியிடம், “இப்போது நீ காற்றில் பறக்கவிட்ட இறக்கைகளை ஒன்றாக சேகரித்துக் கொண்டுவா” என்றார். அதற்கு அந்தப் பெண்மணி, “காற்றில் பறந்து போன எல்லாவற்றையும் எப்படிக் கொண்டுவருவது? அது போனது போனதுதான்” என்றார். அதற்கு அவர், “எப்படி காற்றில் பறக்கவிட்ட இறக்கைகளை மீண்டுமாக சேகரித்துக் கொண்டுவர முடியாதோ, அதுபோன்றுதான் நீ மற்றவர்களைப் பற்றி பரப்பிய பொய் குற்றச்சாட்டுகளும், தவறான கருத்துகளும். ஆகையால் இனிமேலாவது நீ பிறரைப் பற்றி தப்பான கருத்துகளைப் பரப்புவதை நிறுத்து” என்றார். அதன்பிறகு அந்தப் பெண்மணி தான் செய்து வந்த தவறை செய்யாமல் மனம்திரும்பி வாழ்ந்து வந்தார்.

வாழ்க்கை வரலாறு

கி.பி 1515 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் நாள் இத்தாலியில் உள்ள பிளாரன்ஸ் என்ற நகரில் பிலிப்புநேரி பிறந்தார். இவருடைய தந்தை பிரான்சிஸ்கோ, தாய் லூக்ரெஸ்னா என்பவராகும். இவருடைய குடும்பம் செல்வச் செழிப்பான குடும்பம். இவர் தன்னுடைய பதினெட்டாவது வயதில் தான் செய்துவந்த வணிகத் தொழிலை விட்டுவிட்டு உரோமை நகருக்குச் சென்றார். உரோமை நகரில் இருந்த ஏழு ஆலயங்களுக்கும் கால்நடையாகச் சென்று, இரவில் தூய செபஸ்தியார் புதைகுழியில் போய் படுத்துக்கொள்வார்.

ஒருநாள் உரோமை நகரில் இருந்த ஒரு பணக்காரர் தன்னுடைய மகனுக்கு பாடம் சொல்லிக்கொடுத்தால், தன்னுடைய வீட்டில் தங்கிக்கொள்ளலாம் என்று சொன்னார். அதற்கு பிலிப்புநேரி சரி எனச் சொல்லிவிட்டு, அந்த பணக்காரரின் மகனுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்துவிட்டு, அவருடைய வீட்டில் தங்கியிருந்தார். பிலிப்புநேரி இயல்பிலே கலகலப்பானவராக, மக்களை ஆற்றுப் படுத்துவதில் வல்லவராக இருந்தார். அதனால் அவர் தான் இருக்கக்கூடிய இடத்தை எப்போதும் கலகலப்பாக வைத்துக்கொண்டார், அதோடு தன்னை நாடிவரும் மக்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கி, அவர்களுடைய வாழ்வில் ஒளியேற்றி வைத்தார். பிலிப்புநேரி நோயாளிகளைச் சந்தித்து, அவர்களை திடப்படுத்துவதில் அதிக அக்கறை எடுத்துக்கொண்டு வாழ்ந்தார். 1538 – 39 ஆம் ஆண்டுகளில் உரோமை நகரில் ஏற்பட்ட கடும்பஞ்சத்தில் ஏழை எளியவருக்கு உதவிசெய்து பெருந்தொண்டாற்றினார்.

இவருடைய பணிகளைப் பார்த்த அருட்தந்தை பெர்சியோனா ரோசா என்பவர் இவரை குருவாக படிக்கச் சொன்னார். அந்த குருவின் வார்த்தைகளுக்கு இணங்கி இவர் குருவாகப் படித்து, 1551 ஆம் ஆண்டு மே 26 ஆம் நாள் குருவாக உயர்ந்தார். இவர் குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட பிறகு செய்த பணிகள் ஏராளம். குறிப்பாக இவர் இளைஞர்களை ஒன்று திரட்டினார். அவர்களுக்கு கதைகள், மறைக்கல்வி வழியாக நல்லறிவு புகட்டினார். மேலும் இவர் ஜெபக்குழுக்களை ஏற்படுத்தி மக்களை இறைநம்பிக்கையில் வளர்த்தெடுத்தார்.

இவர் ஒப்புரவு அருட்சாதனத்திற்கும் திவ்ய நற்கருணைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்துவந்தார். அதில் மக்களை சிறப்பாக பயிற்றுவித்து வந்தார். இவர் நிறைவேற்றும் திருப்பலியில் கலந்துகொள்ளும் ஒருவர் திவ்ய நற்கருணையை உட்கொண்ட உடனேயே தன்னுடைய அலுவலகத்திற்கு ஓடிவிடுவார். சிறுதுநேரம் கூட நற்கருணை நாதருக்கு முன்பாக உட்கார்ந்து ஜெபிக்க மாட்டார். இதனைக் கவனித்த பிலிப்புநேரி அவருக்கு சரியான பாடம் புகட்ட நினைத்தார். எனவே ஒருநாள் அந்த இளைஞர் திவ்ய நற்கருணையை வாங்கி உட்கொண்டு உடனே ஓடியபோது, பிலிப்புநேரி பீடச் சிறுவர்களை அழைத்து, மெழுகுதிரிகளை ஏந்திக்கொண்டு அவர் பின்னால் ஓடிச் சொன்னார். இதைப் பார்த்த அந்த இளைஞர் தன்னுடைய குற்றத்தை உணர்ந்து, அதன்பிறகு நற்கருணை நாதருக்கு முன்பாக அதிக நேரம் உட்கார்ந்து ஜெபிக்கத் தொடங்கினர்.

இவர் மக்களுக்கு ஆலோசனை கூறும் திறமையைப் பார்த்து ஆயர்கள், கர்தினால்கள் முதற்கொண்டு இவரிடம் ஆலோசனை கேட்கவந்தார்கள், அதன்மூலமாக இவருக்கு நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். அப்படி நண்பர்கள் ஆனவர்கள்தான் தூய லயோலா இஞ்ஞாசியாரும் தூய சார்லஸ் பொரோமேயுவும். பிலிப்புநேரி தனக்குக் கிடைத்த நட்பை ஒருபோதும் தவறாகப் பயன்படுத்தியதில்லை, அதன்வழியாக அவர் ஆதாயம் அடையவும் நினைக்கவில்லை. அவர் கடவுள் தனக்குக் கொடுத்த திறமைகளை கடவுளுடைய மகிமைக்காகவே பயன்படுத்தினார். அடிக்கடி காட்சிகளைக் கண்டார். அதன்வழியாக அவர் இறைவனோடு உள்ள உறவில் மேலும் மேலும் வந்தார். பிலிப்புநேரி மக்களைப் பார்த்து அடிக்கடி கேட்கக்கூடிய வார்த்தை, “இன்று ஏதாவது நன்மை செய்தீர்களா?” என்பதுதான். இப்படிக் கேட்பதன் வழியாக அவர் மக்களை பிறருக்கு நன்மை செய்யத் தூண்டினார்.

பிலிப்பு நேரியின் பணிகளைப் பார்த்த திருத்தந்தை பதிமூன்றாம் கிரகோரியார் இவரை ஒருசபையின் தலைவராக ஏற்படுத்தினார். இவரும் இவரோடு இருந்து பயிற்சி பெற்ற இளைஞர்களும் சேர்ந்து உருவாக்கிய சபையின் பெயர்தான் ‘ஆரட்டரியன்’ என்பவர். இதை அவர் மற்ற துறவற சபைகளைப் போன்று அல்லாமல், ஒரு ஜெபக் குழுவாக பயன்படுத்தி மக்களுடைய விசுவாச வாழ்விற்கு பேருதவியாக இருக்கச் செய்தார். இப்படி பல்வேறு பணிகளைச் செய்த பிலிப்புநேரி 1595 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். 1622 ஆம் ஆண்டு இவர் புனிதராக திருநிலை படுத்தப்பட்டார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்


தூய பிலிப்புநேரியின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. நற்செய்தி அறிவிப்பில் ஆர்வம்


தூய பிலிப்புநேரி நற்செய்தி அறிவிப்பதில் ஆர்வமுள்ள பணியாளராக இருந்து செயல்பட்டார் என்று சொன்னால் அது மிகையாகாது. இவருடைய சம காலத்தவரான தூய பிரான்சிஸ் சவேரியார் இந்தியாவில் நற்செய்தி அறிவிக்கும்போது, அங்கிருந்து அவர் அனுப்பும் மடல்களைப் படித்துவிட்டு, தானும் கீழை நாடுகளுக்குச் சென்று, நற்செய்தி அறிவித்து மறைசாட்சியாக உயிர்துறக்கவேண்டும் என்று ஆர்வம் கொண்டார். ஆனால் அருட்தந்தை பெர்சியோனா ரோசா ன்பவரின் அறிவுறுத்தலின் பேரில் உரோமை நகரிலேயே நற்செய்தி அறிவிக்கத் தொடங்கினார். அதனால் இவர் உரோமை நகரின் இரண்டாவது திருத்தூதர் என்று அழைக்கப்படுகின்றார். இவர் தூய சவேரியார் மீது அதிகமான பற்றும் மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்ததனால் என்னவோ சவேரியார் புனிதர் பட்டம் பெற்ற அதே ஆண்டில் இவரும் பெற்றார்.

இவருடைய விழாவைக் கொண்டாடும் நமக்கு நற்செய்தி அறிவிப்பின் மீது ஆர்வம் இருக்கின்றதா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். நாம் உலகெங்கும் சென்று, எல்லாருக்கும் நற்செய்தி அறிவிக்கத் தேவையில்லை. இருக்கும் இடத்தில் நற்செய்தி அறிவித்தாலே போதும். அதுவே சிறந்ததாக இருக்கும். ஆகவே, தூய பிலிப்பு நெறியைப் போன்று நாமும் நற்செய்தி அறிவிப்பின்பால் ஆர்வமுள்ள பணியாளர்களாக விளங்குவோம்.

2. நாம் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சியை விதைப்பவர்களாக


தூய பிலிப்புநேரியார் தான் இருந்த இடத்தை எப்போதும் மகிழ்ச்சியாகும், கலகலப்பாகவும் வைத்திருப்பார். அத்தகைய வரத்தை இறைவனிடமிருந்து அவர் பெற்றிருந்தார். அவரைப் போன்று நாம் வாழும் இடத்தில், குழுமத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துபவர்களாக நாம் இருக்கின்றோமா? என்பது நமது சிந்தனைக்கு உரியதாக இருக்கின்றது.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்” (யோவா 15:11). ஆம், நாம் அனைவரும் மகிழ்ந்திருக்கவேண்டும் என்பதுதான் இறைவனின் திருவுளமாக இருக்கின்றது. எப்போதும் நாம் துக்கப்பட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்பது அல்ல இறைவனின் விரும்பம். ஆகவே, நாம் முதலில் மகிழ்ச்சியாக இருக்கின்றோமா?, நாம் வாழும் சமுதாயத்தில் நம்முடைய அன்பான வார்த்தைகளால் மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடியவர்களாக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்ப்போம்.

ஒரு கிராமத்தில் இருந்த இளைஞர்கள் சிலர் அவ்வூரில் இருந்த ஆலமரத்தின் அடியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களுடைய பேச்சு ‘ஊரில் யாராரெல்லாம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்’ என்பது தொடர்பாக வந்தது. அப்போது ஓர் இளைஞன் “நம்மூரில் இருக்கும் ஜமின்தார்தான் மிகவும் மகிழ்ச்சியான மனிதர் என்று எனக்குத் தெரிகிறது” என்றான். அதற்கு இன்னொரு இளைஞன் அவனை இடைமறித்து, “இல்லை இல்லை, அவருக்கு பணம் எந்தளவுக்கு இருக்கிறதோ அந்தளவுக்கு அவருக்குப் பிரச்சனை இருக்கின்றது” என்றான். அதன்பிறகு இன்னும் ஒருசிலரை அவர்கள் சொல்லிப்பார்த்தார்கள். அவர்களும் ஏதோ ஒருவிதத்தில் கவலைப்பட்டு வாழ்வதால் அவர்களை விட்டுவிட்டார்கள்.

அப்போது அந்த வழியாக ஒரு விவசாயி வந்தார். அவர் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது போன்று தெரிந்தது. உடனே இளைஞர்கள் அவரிடம், “உங்களால் மட்டும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கமுடிகிறதே, அது எப்படி என்று கேட்டார்கள். அதற்கு அவர், “நான் சம்பாதிப்பதில் மனநிறைவு கொள்கிறேன். தேவைக்கு மேல் ஆசைபட்டது கிடையாது. என்னால் இயன்ற அளவு ஏழைகளுக்குக் கொடுக்கிறேன். அதனால் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்றார். நாம் நம்மிடம் இருப்பதை பிறருக்குக் கொடுக்கும்போது எப்போதும் மகிழ்ச்சிதான். அதைதான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

ஆகவே, தூய பிலிப்பு நேரியின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் நாமும் அவரைப் ஒன்று ஆர்வமுள்ள நற்செய்திப் பணியாளராவோம், நாம் வாழும் இடத்தில் நம்முடைய சொல்லால், செயலால் மகிழ்ச்சியை ஏற்படுத்துவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

25 May 2020

✠ புனிதர் மரிய மகதலின் டி பஸ்ஸிMay 24

† இன்றைய புனிதர் †
(மே 24)

✠ புனிதர் மரிய மகதலின் டி பஸ்ஸி ✠
(St. Mary Magdalene de' Pazzi)
கன்னியர்:
(Virgin)

பிறப்பு: ஏப்ரல் 2, 1566
ஃப்ளாரன்ஸ், இத்தாலி
(Florence, Duchy of Florence)

இறப்பு: மே 25, 1607 (வயது 41)
ஃப்ளாரன்ஸ், இத்தாலி
(Florence, Grand Duchy of Tuscany)

ஏற்கும் சமயம்: 
ரோமன் கத்தோலிக்கம்
(Roman Catholic Church)

அருளாளர் பட்டம்: கி.பி. 1626
திருத்தந்தை எட்டாம் அர்பன்
(Pope Urban VIII)

புனிதர் பட்டம்: ஏப்ரல் 28, 1669 
திருத்தந்தை பத்தாம் கிளமெண்ட்
(Pope Clement X)

முக்கிய திருத்தலம்:
புனிதர் மரிய மகதலின் டி பஸ்ஸி துறவு மடம், கரேக்கி, ஃப்ளாரன்ஸ், இத்தாலி
(Monastery of Santa Maria Maddalena de' Pazzi, Careggi, Florence, Italy)

நினைவுத் திருவிழா: மே 24

பாதுகாவல்: 
நேப்பிள்ஸ் (துணை பாதுகாவலர்) (Naples (co-patron), நோய்களுக்கெதிராக (Against bodily ills), பாலின தூண்டுதளுக்கே எதிராக (Against sexual temptation), நோயாளிகள் (Sick people)

புனிதர் மரிய மகதலின் டி பஸ்ஸி, ஒரு இத்தாலிய ரோமன் கத்தோலிக்க புனிதரும், கார்மேல் சபை துறவியும், கிறிஸ்தவ சித்தரும் ஆவார்.

“கதெரீனா” (Caterina) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் மரிய மகதலின் டி பஸ்ஸி, கி.பி. 1566ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 2ம் நாளன்று, ஃப்ளாரென்ஸ் நகரில் பிறந்தார். இவரது தந்தை நகரின் புகழ்பெற்ற செல்வந்தர் ஆவார். அவரது பெயர், “கமிலோ டி கெரி டே பஸ்ஸி” (Camillo di Geri de' Pazzi) ஆகும். இவரது தாயாரின் பெயர், “மரிய பௌன்டெல்மொன்டி” (Maria Buondelmonti) ஆகும். பஸ்ஸி சிறுமியாக இருக்கையிலேயே ஆன்மீக மற்றும் பக்தி மார்க்கத்தின்பால் ஈர்க்கப்பட்டிருந்தார். ஒன்பது வயதிலேயே பஸ்ஸி இறைவனின் திருப்பாடுகளை தியானிக்கக் கற்றுக்கொண்டார். தமது பத்து வயதிலேயே புது நன்மை பெற்றுக்கொண்ட அவர், தமது கன்னிமைக்காக பிரமாணம் செய்துகொண்டார்.

அவரது பன்னிரண்டு வயதில் தமது தாயாரின் முன்னிலையிலேயே இறைவனின் திருக்காட்சியைக் காணும் பேறு பெற்றார். அதுமுதலே பலவித அற்புத திருக்காட்சிகளைக் கண்டார்.

கி.பி. 1580ம் ஆண்டு, பஸ்ஸி “மால்டா சபையினர்” (Order of Malta) நடத்தும் பெண் துறவியரின் மடத்தில் கல்வி கற்க அவரது தந்தையால் அனுப்பப்பட்டார். ஆனால் விரைவிலேயே திரும்ப அழைத்துக்கொள்ளப்பட்ட பஸ்ஸி, ஒரு பிரபுக் குடும்ப இளைஞனை திருமணம் செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டார். ஆனால், தாம் தமது கன்னிமைக்காக இறைவனிடம் பிரமாணம் எடுத்துக்கொண்டதை தந்தையிடம் எடுத்துக்கூறினார். இறுதியில், தமது சம்மதத்தை தெரிவித்த தந்தையார், பஸ்ஸியின் துறவு வாழ்க்கைக்கு சம்மதம் தெரிவித்தார். பஸ்ஸி, “தூய மரியாளின் கார்மேல் துறவு மடத்தை” (Carmelite Monastery of St. Mary) தேர்ந்துகொண்டார். கி.பி. 1583ம் ஆண்டு, புகுமுக (Novice) துறவறம் பெற்ற பஸ்ஸி, “அருட்சகோதரி மேரி மகதலின்” (Sister Mary Magdalene) என்ற துறவற பெயரை ஏற்றுக்கொண்டார்.

புகுமுக (Novice) துறவறத்தில் ஒருவருட காலம் இருந்த பஸ்ஸி, ஒருமுறை மிகவும் மோசமாக நோயால் பாதிக்கப்பட்டார். வேதனைகளை வெளிக்காட்டாத பஸ்ஸியின் இருதயம் கிறிஸ்துவின் அன்பில் நிறைந்திருந்தது. இதனைக் கண்ட மடத்தின் அருட்சகோதரி ஒருவர் பஸ்ஸியிடம், “சிறு முணுமுணுத்தல் கூட இல்லாமல் எப்படி உங்களால் வேதனைகளை பொறுத்துக்கொள்ள முடிகிறது” என்று கேட்டார். அதற்கு பதிலளித்த பஸ்ஸி, இறைவனின் பாடுபட்ட சொரூபத்தைச் சுட்டிக்காட்டியபடி, “கிறிஸ்துவின் பாடுகளை அனுபவிக்க அழைக்கப்பட்ட எவருக்குமே வலிகளும் வேதனைகளும் இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்” என்றார்.

இதுபோன்ற இவரது எண்ணங்களும் கிறிஸ்துவுக்குள்ளான இவரது அன்பும் இவருக்கு தொடர்ந்த இறைவனின் திருப்பாடுகளின் திருக்காட்சிகளை காண கிட்டியது. இறைவனின் பெயரால் இவர் நிகழ்த்திய அற்புதங்கள் எண்ணிலடங்காதவை ஆகும். பிறரின் எண்ணங்களைக் கூட அறிந்து கூறும் வல்லமை பெற்றவராக இவர் திகழ்ந்தார் என்பர். அதுபோலவே, எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தியும் இவர் பெற்றிருந்தார். உதாரணத்துக்கு, “கர்தினால் அலெஸ்ஸான்ட்ரோ டே மெடிசி” (Cardinal Alessandro de' Medici) அடுத்த திருத்தந்தை ஆவார் என்றார். அதுபோலவே அவர் திருத்தந்தையாக தேர்வு செய்யப்பட்டு, “பதினோராம் லியோ” (Pope Leo XI) ஆனார்.

அவரது வாழ்நாளில், தூர தொலைவு நாடுகளிலிருந்த பலருக்கு நேரில் காட்சியளித்து அவர்களது நோய்களை குணமாக்கியதாக கூறப்படுகிறது.

கி.பி. 1607ம் ஆண்டு, தமது 41 வயதில் மரித்த இப்புனிதரின் உடல், கெட்டுப்போகாத நிலையிலேயே இருப்பதாக கூறப்படுகிறது.

புனிதர் பட்டமளிப்பு:
இவரின் இறப்புக்குப் பின், பல புதுமைகள் நிகழ்ந்ததால், இவருக்கு முக்திபேறு பட்டம் அளிப்பதற்கான முயற்சிகள் திருத்தந்தை ஐந்தாம் பவுலின் (Pope Paul V) ஆட்சியில் தொடங்கி திருத்தந்தை எட்டாம் அர்பனின் (Pope Urbun VIII) ஆட்சியில் கி.பி. 1626ம் ஆண்டு, வழங்கப்பட்டது. எனினும் 62 ஆண்டுகளுக்குப் பின்னரே திருத்தந்தை பத்தாம் கிளமெண்டால் (Pope Clement VIII), கி.பி. 1669ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 28ம் நாளன்று, புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது. 

நினைவுத் திருவிழா நாள்:
இவரின் புனிதர் பட்டமளிப்பின் போது, இவரது விழா நாள், இவரின் இறந்த நாள் ஆகிய, மே மாதம், 25ம் நாள் எனக் குறிக்கப்பட்டது. ஆனால் கி.பி. 1725ம் ஆண்டு, அந்நாள் புனித திருத்தந்தை ஏழாம் கிரகோரிக்கு (Pope Gregory VII) ஒதுக்கப்பட்டதால், மே மாதம், 29ம் தேதிக்கு நகர்த்தப்பட்டது. கி.பி. 1969ம் ஆண்டு நடந்த மாற்றத்தில் மீண்டும் மே மாதம், 24ம் தேதிக்கு நகர்த்தப்பட்டது.

புனிதர் ஏழாம் கிரெகோரி May 25

† இன்றைய புனிதர் †
(மே 25)

✠ புனிதர் ஏழாம் கிரெகோரி ✠
(St. Gregory VII)
157ம் திருத்தந்தை:
(157th Pope)

பிறப்பு: கி.பி. 1015
சொவானா, டுஸ்கனி, தூய ரோமப் பேரரசு
(Sovana, Tuscany, Holy Roman Empire)

இறப்பு: மே 25, 1085
சலேர்னோ, அபுலியா
(Salerno, Duchy of Apulia)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திப்பேறு பட்டம்: கி.பி. 1584
திருத்தந்தை பதின்மூன்றாம் கிரகோரி
(Pope Gregory XIII)

புனிதர் பட்டம்: மே 24, 1728
திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட்
(Pope Benedict XIII)

நினைவுத் திருவிழா: மே 25

"ஹில்டப்ராண்ட்" (Hildebrand of Sovana) எனும் இயற்பெயர் கொண்ட திருத்தந்தை ஏழாம் கிரகோரி, கத்தோலிக்கத் திருச்சபையின் 157ம் திருத்தந்தையாக 1073ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 2ம் நாள்முதல் 1085ம் ஆண்டு, தனது மரணம் வரை ஆட்சி புரிந்தவராவார்.

தற்போதைய "மத்திய இத்தாலியின்" (Central Italy), "தென் டுஸ்கனி" (Southern Tuscany) பிராந்தியமான – அன்றைய தூய ரோமப் பேரரசின் “சொவானா” எனுமிடத்தில் பிறந்த ஹில்டப்ராண்ட், கொல்லர் (Blacksmith) ஒருவரின் மகனாவார். சிறு வயதில், ரோம் நகரிலுள்ள புனித மரியாளின் மடாலயத்தில் (Monastery of St. Mary) கல்வி கற்க அனுப்பப்பட்டார். அங்கே, “அவன்டைன் மலை” (Aventine Hill) மேலுள்ள மடாலயமொன்றில் இவரது மாமன் ஒருவர் மடாதிபதியாக இருந்தார்.

கத்தோலிக்கத் திருச்சபையினை சீர்திருத்த முயன்றவர்களில் இவர் மிகவும் குறிப்பிடத்தக்கவர் ஆவார். தூய ரோமப் பேரரசர் நான்காம் ஹென்றி (Holy Roman Emperor Henry IV) மற்றும் இவருக்கும் இடையே நிகழ்ந்த ஆயர்நிலை திருப்பொழிவுக்கு ஆட்களை தேர்வுசெய்யும் அதிகாரம் குறித்த சச்சரவில் (Investiture Controversy) திருத்தந்தைக்கு இருந்த அதிகாரத்தை இவர் நிலைநாட்டினார். இதை ஏற்காத நான்காம் ஹென்றி'யை திருச்சபையின் முழு உறவு ஒன்றிப்பிலிருந்து இருமுறை நீக்கினார். இதனால் மூன்றாம் கிளமெண்ட்'டை, எதிர்-திருத்தந்தையாக (Antipope Clement III) ஹென்றி நியமித்தார். திருத்தந்தைத் தேர்தலுக்கான புதிய வழிமுறைகளை சட்டமாக்கினார்.

திருப்பட்டங்களைக் காசுக்கு விற்றதை கடுமையாக இவர் எதிர்த்தார். குருக்கள் கற்பு நிலை வாக்கு அளித்து திருமணமாகாமல் வாழ வேண்டும் என்று இருந்த சட்டத்தை இவர் கடுமையாக நடைமுறைப்படுத்தினார். இவர் தனது அதிகாரத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தியதால் பலரின் வெறுப்புக்கு ஆளானார்.

திருத்தந்தை ஏழாம் கிரகோரிக்கு, திருத்தந்தை பதின்மூன்றாம் கிரகோரி (Pope Gregory XIII), 1584ம் ஆண்டில், முக்திபேறு பட்டமும், 1728ம் ஆண்டில், திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட் (Pope Benedict XIII) புனிதர் பட்டமும் அளித்தனர்.

தூய பீத் (மே 25)

இன்றைய புனிதர் :
(25-05-2020)

தூய பீத் (மே 25)
இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார். (லூக் 2:52)

வாழ்க்கை வரலாறு

பீத், இங்கிலாந்து நாட்டில் உள்ள மங்டன் என்னும் இடத்தில் 672 ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு ஏழு வயது நடக்கும்போது தூய பேதுரு மற்றும் தூய பவுல் துறவுமடத்தில் சேர்ந்து கல்வி கற்றார். இயல்பிலே திறமைசாலியாக விளங்கிய பீத் கல்வி கேள்வியில் சிறந்து விளங்கினார்.

686 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில், இவர் இருந்த பகுதியில் பயங்கரக் கொள்ளை ஏற்பட்டது. அதில் ஏராளமான பேர் இறந்துபோனார்கள். இவர் மட்டும் எப்படியோ அதிஸ்டவசமாக பிழைத்துக்கொண்டார். இதனை இறைவனின் அருட்பெரும் செயல் என உணர்ந்த இவர், இறைவனுக்காக தன் வாழ்வு முழுவதையும் அர்ப்பணிக்கத் தொடங்கினார். அதனால் இவர் தூய ஆசிர்வாதப்பர் சபையில் சேர்ந்து துறவியாக வாழ விரும்பினார். அதன்படி இவர் தூய ஆசிர்வாதப்பர் சபையில் சேர்ந்து படிக்கத் தொடங்கினார். பெனடிக்ட் பிஸ்காப் என்பவர் இவரை சிறந்த விதமாய் வழி நடத்தினார். இவ்வாறு பீத் தன்னுடைய 19 வது வயதில் திருத்தொண்டராகவும் அதற்கு அடுத்த ஆண்டில் குருவானவராகவும் உயர்ந்தார்.

பீத் தான் வாழ்ந்த காலத்திலேயே மக்களால் ‘வணக்கத்திற்கு உரியவர்’ என்று அன்போடு அழைக்கப்பட்டார். காரணம் இவருடைய எளிய மற்றும் தாழ்ச்சி நிறைந்த வாழ்க்கை. மட்டுமல்லாமல் இவர் விவிலியத்தில் ஆழமான புலமை பெற்றிருந்தார். அந்தப் புலமை இவரை பல நூல்களை எழுதச் செய்தது. குறிப்பாக இவர் எழுதிய 45 நூல்களில் 30 நூல்கள் விவிலியம் தொடர்பானது என்பது குறிப்பிடத் தக்கது.

735 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் நாள் இவர் தன்னுடைய சாவு நெருங்கி வந்துவிட்டது என்பதை உணர்ந்தார். எனவே இவர் வானத்தை அண்ணார்ந்து பார்த்து, “தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாகுக” என்று சொல்லி தன்னுடைய ஆவியை இறைவனிடத்தில் ஒப்படைத்தார். இவருக்கு 1899 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த பதிமூன்றாம் சிங்கராயர் அவர்களால் மறைவல்லுநர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

தூய பீத்தின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. கடவுள் கொடுத்த திறமைகளை கடவுளின் திருப்பெயர் விளங்கப் பயன்படுத்துவோம்

தூய பீத்தின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடமே, அவர் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட திறமையை கடவுளின் பெயர் விளங்கச் செய்ததுதான். அவர் ஒருபோதும் தன்னுடைய விளங்கச் செய்யவில்லை. தூய பீத்தின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று கடவுள் நமக்குக் கொடுத்த திறமையை கடவுளின் பெயர் விளங்கச் செய்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஓர் ஊரில் ஒரு கடுமையான உழைப்பாளி இருந்தார். அவர் எப்போதுமே ஏதாவது ஓர் ஆராய்ச்சியை செய்துகொண்டே இருப்பார். அதுவும் அவரது அறையை தாழிட்டு செய்து கொண்டிருப்பார். காரணம் அவர் ஆராய்ச்சி செய்யும் சமயத்தில் யாரும் அவரை தொந்தரவு செய்வது அவருக்கு பிடிக்காது. எனவே அவர் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் சமயங்களில் அவரது கதவுகள் அடைக்கப்பட்டு இருக்கும்.

அவ்வாறு இருக்க அவரை இடையுறு செய்யவும் இரண்டு ஜீவன் அந்த வீட்டில் இருந்தன. அவை அவரது செல்ல பிராணிகளான இரு பூனைகள். அதில் ஒன்று பெரியது மற்றொன்று சிறியது. இவர் ஏதாவது ஓர் ஆராய்ச்சியில் முழ்கி இருக்கும் அந்த சமயம் அந்த இரு பூனைகளும் வெளியே செல்ல நினைத்து கத்தி கூப்பாடு போடும். இதனால் அவர் பல ஆராய்ச்சிகளில் சிந்தனைகளை தவறவிடும் நிலை ஏற்பட்டது. எனவே அவர் தமது வேலையாளை மிக ஆணவத்தோடு அழைத்து, இந்த கதவில் இரு துளைகளை இடு, ஒன்று பெரியது, மற்றொன்று சிறியது. இந்த இரு ஓட்டைகளைப் பயன்படுத்தி அந்த இரு பூனைகளும் வெளியில் சென்றுவிடும். அதன்பிறகு என்னுடைய ஆராய்ச்சிக்கு எவ்வித பங்கமும் வந்து சேராது என கூறினார்.

இதைக் கேட்ட அவரது வேலையாள், “ஐயா, ஒரு பெரிய துளை இட்டாலே இரண்டும் வரும், போகும். அப்படி இருக்க மற்றொரு துளை அவசியமா? என்றார். இப்படி ஒரு கேள்வியை அவரிடம் இருந்து அவர் எதிர்பார்க்கவில்லை. அன்றோடு அவரின் ஆணவம், மமதை அனைத்தும் பொடி பொடியாகின. பிறகு அவர் கூறியதை நினைத்து அவரே வருத்தப்பட்டார். அவர் தான் E=mc2 என்ற சமன்பாட்டை கண்டு பிடித்த ஐன்ஸ்டீன்.

எல்லாம் என்னால்தான், எல்லாரையும் விட நான் பெரியவன் என்ற ஆணவத்தில் சிலர், சமயங்களில் இப்படி மூக்கு அறுபடுவது உண்டு.

நாமும்கூட பல நேரங்கில், எல்லாமே கடவுள் கொடுத்தது என்பதை உணராமல், எல்லாமே என்னால்தான் நடக்கிறது என்ற மமதையும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இத்தகையதொரு மனப்பான்மை நம்மிடத்தில் இருந்து மறைந்து கடவுளுடைய கையில் நான் ஒரு கருவி என்ற மனப்பான்மையோடு வாழவேண்டும்.

ஆகவே, தூய பீத்தின் நினைவு நாளைக் கொண்டாம் நாம், அவரைப் போன்று கடவுள் கொடுத்த திறமையை கடவுளின் திருப்பெயர் விளங்கப் பயன்படுத்துவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

24 May 2020

சாலையோர மாதா May 24

இன்றைய புனிதர்
2020-05-24
சாலையோர மாதா

இத்தாலி மொழியில் "மடோநாடெல்லா ஸ்ட்ராடா" என்று அழைக்கப்படும். சாலையோர மாதாவின்மீது இயேசு சபையினருக்கு என்றுமே ஒரு தனி பக்தி உண்டு. இவ்வாலயம் இயேசு சபையினருக்கு என்றுமே ஒரு தனி பக்தி உண்டு. இவ்வாலயம் இயேசு சபையின் முதல் ஆலயம். இவ்வாலயத்தை மையமாக வைத்தே புனித இஞ்ஞாசியாரும், அவர் தம் தோழர்களும் தங்களது ஆன்மீக பணிகளில் ஈடுபட்டனர். இவ்வாலயத்தில் மன்றாடிவிட்டு சென்றபோது செய்த காரியங்கள் அனைத்தையும் வெற்றிப்பெற்றது. இதனால் இந்த சிற்றாலயத்திற்கு இன்று வரை தனிச்சிறப்பு பெற்று வருகின்றது.

கி.பி. 1538 ஆம் ஆண்டின் இறுதியில் புனித இனிகோ தம் தோழர்களுடன் இந்த ஆலயத்திற்கு அருகில் கிடைத்த ஓர் வீட்டில் தங்கிருந்து தங்களின் பணிகளில் ஈடுபட்டனர். இந்த ஆலயத்தில் அடிக்கடி திருப்பலி நிறைவேற்றுவது, மறையுரை ஆற்றுவது, ஒப்புரவு அருட்சாதனம் அளிப்பது, மறைக்கல்வி போதிப்பது என பல பணிகள் இவர்களின் முதன்மை பணிகளாக அமைந்தது. அவ்வாலயத்தின் பங்குத்தந்தையாக இருந்த பீட்டர் கொடாசியோவுக்கு (Peter Codasio) இயேசு சபையினர் ஆற்றிய பணிகள் மிகவும் பிடித்திருந்தது. அப்போது 1538 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 1539 மே வரை உரோமையிலும், சுற்றுவட்டாரங்களிலும் கடுங்குளிரும், உணவுப்பற்றாக்குறையும் மக்களை வாட்டி வதைத்தது. புனித இனிகோ தம் சகோதரர்களுடன் 3000 மக்களின் துயர்நீக்கி, உணவும், உடையும் கொடுத்து வந்தார். இத்தொண்டு பங்கு குரு பீட்டர் கொடாசியோவின் நெஞ்சை நெகிழ வைத்தது. அவர்களின் தொண்டால் பங்கு குரு பெரிதும் ஈர்க்கப்பட்டார். இதனால் அச்சபையில் சேரவிரும்பி, ஒருமாத தியானத்தில் ஈடுபட்டு, இறுதியில் 1539 ஆம் ஆண்டு இயேசு சபையில் சேர்ந்தார். இவர்தான் இயேசு சபையின் முதல் இத்தாலியர் ஆவார். அதன்பின் இவர் வழியாக சட்டரீதியாக சாலையோர மாதா ஆலயம் இயேசு சபைக்கு கிடைத்தது.

இந்த ஆலயம் மிகவும் சிறியதாகவும், குறுகலாகவும் இருந்ததால் பல மக்கள், பல ஆண்டுகளாக, ஆலயத்தின் வெளியே நின்றவாறே திருப்பலியில் பங்குக்கொண்டனர். இதனால் இயேசு சபையினர் அனைவரின் உழைப்பால் இவ்வாலயத்தின் முன்னால் திருப்பலிக்கென்று இடம் ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் இயேசு சபையினர், தங்குவதற்கும், பணிபுரிவதற்கும் வசதியாக தந்தை பீட்டர் தம் தந்தையின் சொத்துக்களை விற்றுப்பெரிய வீடு ஒன்றை அமைத்து கொடுத்தார். அச்சமயத்தில் இயேசு சபையில் இறந்தவர்கள் இவ்வாலயத்தில்தான் அடக்கம் செய்யப்பட்டார்கள். புனித பீட்டர், இவரின் தந்தை கொடாசியோ, புனித இனிகோ அனைவரும் இவ்வாலயத்தில் தான் அடக்கம் செய்யப்பட்டார்கள்.

இவர்களின் இறப்பிற்கு பின் 1565-ல் பிரான்சிஸ் போர்ஜியா(Francis Borgiya) என்பவர் இயேசு சபையின் தலைவராக பொறுப்பேற்றார். இவரது காலத்தில் ஜேசு என்ற பெயரில் பேராலயம் ஒன்று கட்டுவதற்காக முன்னிருந்த சிற்றாலயத்தை இடித்துவிட்டு, இன்று ஜேசு என்றழைக்கப்படும் பேராலயத்தைக் கட்டினார். இவ்வாலயம் உரோம் நகரில் உள்ள ஆலயங்களில் மிகவும் கவர்ச்சிகரமானமாக காணப்படுகின்றது. இன்றுவரை உலகின் எப்பகுதியிலிருந்தும் இயேசு குருக்கள் உரோம் வந்தாலும் இவ்வாலயத்தில், சிற்றாலயத்திலிருந்து கொண்டுவரப்பட்ட மாதா உருவத்தின் முன், திருப்பலி நிறைவேற்றுவதில் தனி ஆர்வம் காட்டுகின்றனர்.


செபம்:
புனித.கன்னி மரியாளே எமக்காக இயேசுவை மன்றாடும்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

மறைப்பணியாளர், துறவி, சபைநிறுவுநர் பிரான்சு ப்ஃபானர் Franz Pfanner
பிறப்பு: 21 செப்டம்பர் 1825, லாங்கன் Langen, ஆஸ்திரியா
இறப்பு: 24 மே 1909, எம்மாவுஸ், தென் ஆப்ரிக்கா


பிராடோ நகர், மாநிலத்தலைவர், மறைசாட்சி யோஹானஸ் Johannes von Prado OFM
பிறப்பு: 1563, மோர்கோவேஜோ Morgovejo, ஸ்பெயின்
இறப்பு: 24 மே 1631 மராக்கேஷ் Marraksesch, மொராக்கோ Marokko
முத்திபேறுபட்டம்: 1728

† இன்றைய திருவிழா †
(மே 24)

✠ சாலையோர மாதா ✠
(Madonna Della Strada)

திருவிழா நாள்: மே 24

“மடோன்னா டெல்லா ஸ்ட்ரடா” (Madonna Della Strada), “ஸான்டா மரியா டெல்லா ஸ்ட்ரடா” (Santa Maria Della Strada), “பாதையோர அன்னை” (Our Lady of the Way) மற்றும் “சாலையோர மாதா” (Our Lady of the Road) என்ற பெயர்களிலெல்லாம்  அழைக்கப்படும் மரியன்னையின் ஒரு திருச்சொரூப படம் ரோம் நகரிலுள்ள “கேசு தேவாலயத்தில்” (Church of the Gesu in Rome) போற்றிப் பாதுகாக்கப்படுகின்றது. இத்தேவாலயம், இயேசு சபையினரின் “தாய் தேவாலயம்” (Mother Church of the Society of Jesus) என்று அறியப்படுகின்றது.

“சாலையோர மாதா” இயேசு சபையினரின் பாதுகாவலியாவார்.

மாதாவின் மீது இயேசு சபையினருக்கு என்றுமே ஒரு தனி பக்தி உண்டு. இவ்வாலயம் இயேசு சபையின் முதல் ஆலயம் ஆகும். இவ்வாலயத்தை மையமாக வைத்தே புனித இஞ்ஞாசியாரும், அவர் தம் தோழர்களும் தங்களது ஆன்மீக பணிகளில் ஈடுபட்டனர். இவ்வாலயத்தில் மன்றாடிவிட்டு சென்றபோது செய்த காரியங்கள் அனைத்துமே வெற்றி பெற்றது. இதனால் இந்த சிற்றாலயத்திற்கு இன்று வரை தனிச்சிறப்பு உள்ளது.

கி.பி. 1538ம் ஆண்டின் இறுதியில் புனித இனிகோ தம் தோழர்களுடன் இந்த ஆலயத்திற்கு அருகில் கிடைத்த ஓர் வீட்டில் தங்கிருந்து தங்களின் பணிகளில் ஈடுபட்டனர். இந்த ஆலயத்தில் அடிக்கடி திருப்பலி நிறைவேற்றுவது, மறையுரை ஆற்றுவது, ஒப்புரவு அருட்சாதனம் அளிப்பது, மறைக்கல்வி போதிப்பது என பல பணிகள் இவர்களின் முதன்மை பணிகளாக அமைந்தது. அவ்வாலயத்தின் பங்குத்தந்தையாக இருந்த பீட்டர் கொடாசியோவுக்கு (Peter Codasio) இயேசு சபையினர் ஆற்றிய பணிகள் மிகவும் பிடித்திருந்தது. அப்போது கி.பி. 1538ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல், 1539 மே மாதம் வரை ரோமிலும், சுற்றுவட்டாரங்களிலும் கடுங்குளிரும், உணவுப் பற்றாக்குறையும் மக்களை வாட்டி வதைத்தது. புனிதர் இனிகோ தம் சகோதரர்களுடன் 3000 மக்களின் துயர் நீக்கி, உணவும், உடையும் கொடுத்து வந்தார். இத்தொண்டு பங்கு குரு பீட்டர் கொடாசியோவின் நெஞ்சை நெகிழ வைத்தது. அவர்களின் தொண்டால் பங்கு குரு பெரிதும் ஈர்க்கப்பட்டார். இதனால் அச்சபையில் சேரவிரும்பி, ஒருமாத தியானத்தில் ஈடுபட்டு, இறுதியில் கி.பி. 1539ம் ஆண்டு, இயேசு சபையில் சேர்ந்தார். இவர்தான் இயேசு சபையின் முதல் இத்தாலியர் ஆவார். அதன்பின் இவர் வழியாக சட்டரீதியாக சாலையோர மாதா ஆலயம் இயேசு சபைக்கு கிடைத்தது.

இந்த ஆலயம் மிகவும் சிறியதாகவும், குறுகலாகவும் இருந்ததால் பல மக்கள், பல ஆண்டுகளாக, ஆலயத்தின் வெளியே நின்றவாறே திருப்பலியில் பங்குக்கொண்டனர். இதனால் இயேசு சபையினர் அனைவரின் உழைப்பால் இவ்வாலயத்தின் முன்னால் திருப்பலிக்கென்று இடம் ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் இயேசு சபையினர், தங்குவதற்கும், பணிபுரிவதற்கும் வசதியாக தந்தை பீட்டர் தம் தந்தையின் சொத்துக்களை விற்றுப்பெரிய வீடு ஒன்றை அமைத்து கொடுத்தார். அச்சமயத்தில் இயேசு சபையில் இறந்தவர்கள் இவ்வாலயத்தில்தான் அடக்கம் செய்யப்பட்டார்கள். புனித பீட்டர், இவரின் தந்தை கொடாசியோ, புனித இனிகோ அனைவரும் இவ்வாலயத்தில் தான் அடக்கம் செய்யப்பட்டார்கள்.

இவர்களின் இறப்பிற்கு பின் கி.பி. 1565-ல் பிரான்சிஸ் போர்ஜியா (Francis Borgiya) என்பவர் இயேசு சபையின் தலைவராக பொறுப்பேற்றார். இவரது காலத்தில் ஜேசு என்ற பெயரில் பேராலயம் ஒன்று கட்டுவதற்காக முன்னிருந்த சிற்றாலயத்தை இடித்துவிட்டு, இன்று ஜேசு என்றழைக்கப்படும் பேராலயத்தைக் கட்டினார். இவ்வாலயம் ரோம் நகரில் உள்ள ஆலயங்களில் மிகவும் கவர்ச்சிகரமானமாக காணப்படுகின்றது. இன்றுவரை உலகின் எப்பகுதியிலிருந்தும் இயேசு சபை குருக்கள் ரோம் வந்தாலும் இவ்வாலயத்தில், சிற்றாலயத்திலிருந்து கொண்டுவரப்பட்ட மாதா திருச்சொரூபத்தின் முன், திருப்பலி நிறைவேற்றுவதில் தனி ஆர்வம் காட்டுகின்றனர்.

கிறிஸ்தவர்களின் சகாய அன்னை (மே 24)

(24-05-2020) 

கிறிஸ்தவர்களின் சகாய அன்னை (மே 24)
“சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்றுகொண்டிருந்தனர். இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவளித்து வந்தார் (யோவா 19: 25-27)

வரலாறு

திருச்சபை ஒவ்வொரு கால கட்டத்திலும் பல்வேறு விதமான நெருக்கடிகளையும் சவால்களையும் சந்தித்தது என்பது யாவரும் அறிந்த ஒரு விஷயம். திருத்தந்தை ஏழாம் பத்திநாதர் திருச்சபையின் தலைவராக, திருத்தந்தையாக இருந்த சமயத்தில் திருச்சபை புதுவிதமான பிரச்சனை ஒன்றைச் சந்தித்தது. அது என்னவெனில் மாவீரன் (?) நெப்போலியன் திருத்தந்தை ஏழாம் பத்திநாதரைப் பிடித்து சவானா என்ற இடத்தில் சிறை வைத்தான். 1808 ஆம் ஆண்டிலிருந்து 1814 ஆம் ஆண்டு வரை ஏறக்குறைய 6 ஆம் ஆண்டுகள் சிறையில் இருந்த திருத்தந்தை பலவிதமான சித்ரவதைகளை அனுபவித்தார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் 1814 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 17 ஆம் நாள் திருத்தந்தை ஏழாம் பத்திநாதர் விடுதலையாகி உரோமை நகருக்கு வந்தார். அவர் உரோமை நகருக்கு வரும் வழியில் இருந்த அனைத்து அன்னையின் ஆலயங்களுக்கும் சென்று தான் விடுதலையானதற்கு அன்னைக்கு நன்றி செலுத்தினார். மட்டுமல்லாமல் இதன் பொருட்டு செப்டம்பர் 18 ஆம் வியாகுல அன்னையின் விழாவைக் கொண்டாடப் பணித்தார். இதற்கிடையில் திருத்தந்தை அவர்களை சிறைப்பிடித்து வைத்து பலவிதங்களில் அவரைச் சித்ரவதை செய்த நெப்போலியன் வாட்டர்லூப் என்ற இடத்தில் வீழ்ச்சி அடைத்தான்.

இதைத் தொடர்ந்து 1815 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் நாளில் ‘கிறிஸ்தவர்களின் சகாய அன்னை’ என்று இந்த விழாவை திருத்தந்தை அவர்கள் உலகம் முழுவதும் கொண்டாடப் பணித்தார். திருத்தந்தையைத் தொடர்ந்து தூய தொன் போஸ்கோ கிறிஸ்தவர்களின் சகாய அன்னை பக்தி முயற்சி பல இடங்களிலும் பரவுவதற்குக் காரணமாக இருந்தார். அது மட்டுமல்லாமல், அந்த அன்னையின் பேரில் அருட்சகோதரிகளுக்கு என்று ஒரு துறவற சபையையும் ஏற்படுத்தினார். இவ்வாறு கிறிஸ்தவர்களின் சகாய அன்னை பக்தி முயற்சி எங்கும் பரவியது.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

கிறிஸ்தவர்களின் சகாய அன்னை நினைவு நாளைக் கொண்டாடும் நாம், இந்நாள் நமக்குச் சொல்லும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

அபயம் தர அன்னையை வேண்டுவோம்!

இந்த நாள் நமக்குச் சொல்லக்கூடிய மிக முக்கியமான செய்தி, நாம் நம்முடைய இன்னல் இக்கட்டுகளில் நமக்கு சகாயம் தரும் (சகாய) அன்னையின் உதவியை நாட வேண்டும் என்பதாகும்.

அபயம் வேண்டி அன்னையை நாடியவருக்கு அன்னை பலமுறை அபயம் தந்திருக்கின்றாள். அதில் மிகச் சிறப்பான ஒரு நிகழ்வு இது.

பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் துருக்கிய படையானது மேல்திசை நாடுகள்மீது அதாவது கிறிஸ்தவ நாடுகளின்மீது படையெடுத்து வந்தது. இதனால் கிறிஸ்தவ நாடுகள் அனைத்தும் நடுங்கி ஒடுங்கிக் கொண்டிருந்தன. மக்கள் அழிவின் வாசலிலே தாங்கள் நிற்பதாக எண்ணி கொலை நடுக்கம் கொண்டனர். கிறிஸ்தவ நகரங்கள் ஆட்டங்கண்டன. துருக்கியரின் படையெடுப்பாலும் அவர்களது போர் திறமையாலும் வெற்றிமேல் வெற்றிச்சூடி நாடுகளையெல்லாம் சூறையாடி தன் ஆதிக்கத்தைப் பெருக்கிக்கொண்டு ஐரோப்பிய நாடுகளை நோக்கி முன்னேறிக் கொண்டு வந்ததால் அவைகளை கண்டவர்கள் நிலைகுலைந்து விட்டனர். கடலிலே கப்பலோடு கப்பல் மோதின. கடும் போர் ஏற்பட்டது.

இதற்கு மத்தியில் லெப்பாந்தோ கடலில் தொன் ஜூவான் தளபதியின் படைகளுக்கும் துருக்கியப் படைகளுக்கும் இடையே பெரும் போர் மூளவே யாருக்கு வெற்றி என்ற தவிப்பும், எதிரியின் எண்ணற்ற வீரர்களையும் அவர்களின் பலத்தையும் கண்ட கிறிஸ்துவ உலகத்தினர் சொல்லொண்ணா துன்பம் அடைய கண்ணீர் கண்களிலே மல்க கன்னிமரியின் அபயம் தேடி கைவிரித்து வேண்டினர். அந்த அவல நேரத்தில் கன்னிமரி அபயம் அளித்தாள். ஆம், எதிரிகளுக்கு சாதகமாக வீசிய காற்று திடீரென அற்புதவிதமாக கிறிஸ்தவ போர் வீரர்களுக்குத் துணையாக திசைமாறி வீச கப்பல்கள் மோதி சிதறின. தீப்பற்றியெரிந்தன. இதனால் கிறிஸ்துவ படை துருக்கியரை துரத்தி முறியடித்து வெற்றி வாகை சூடியது.

அன்னையானவள் தன்னை அபயம் எனத் தேடும் தன் மக்களுக்கு எந்நாளும் அபயம் தருவாள் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.

ஆகவே, கிறிஸ்தவர்களின் சகாயமாக இருக்கும் அன்னையிடம் அடைக்கலம் புகுவோம். அவருக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

23 May 2020

கோர்ஸிகாவின் புனிதர் ஜூலியா May 23

† இன்றைய புனிதர் †
(மே 23)

✠ கோர்ஸிகாவின் புனிதர் ஜூலியா ✠
(St. Julia of Corsica)
கன்னியர்/ மறைசாட்சி:
(Virgin, Martyr)

பிறப்பு: ஜூலை 25
கர்தாஜ், மேற்கத்திய ரோமப் பேரரசு
(Carthage, Western Roman Empire)

இறப்பு: கி.பி. 5ம் நூற்றாண்டு (439)
கோர்ஸிகா, மேற்கத்திய ரோமப் பேரரசு
(Corsica, Western Roman Empire)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை 
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

புனிதர் பட்டம்: ஃபெப்ரவரி 14

நினைவுத் திருவிழா: மே 23

பாதுகாவல்:
கோர்ஸிகா (Corsica), லிவோர்னோ (Livorno), 
சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்கள் (Torture victims)
கைகள் மற்றும் கால்களின் நோய்க்குறிகள் (Pathologies of the hands and the feet)

புனிதர் “கோர்சிகாவின் ஜூலியா” (Saint Julia of Corsica) என்றும், புனிதர் “கார்தாஜ்’ன் ஜூலியா” (Saint Julia of Carthage) என்றும், புனிதர் நோன்ஸா’வின் ஜூலியா (Saint Julia of Nonza) என்றும் அறியப்படும் புனிதர் ஜூலியா, கன்னியரும், மறைசாட்சியும் ஆவார். இவரும் புனிதர் “டெவோட்டா’வும் (Saint Devota) கோர்ஸிகா’வின் (Corsica) பாதுகாவலர்களாக திருச்சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ரோமானிய ஆட்சியின் கீழே “கோர்சிகா” கிறிஸ்தவ மறையை தழுவியதன் முன்னர் (Pre-Christian Corsica under Roman rule) நடந்த கிறிஸ்தவர்களின் துன்புருத்தல்களின்போது இவர்கள் மறைசாட்சிகளாக கொல்லப்பட்டதாக சரித்திரம் இயம்புகின்றது.

“விக்டர் விட்டேன்சிஸ்” (Victor Vitensis) எனும் ஒரு ஆபிரிக்க ஆயர் (Bishop of Africa), ரோம சாம்ராஜ்ஜியத்தின் ஆபிரிக்க பிராந்திய நாடான “வண்டல்ஸ்” (Vandals) நாட்டின் அரசர்கள் “ஜீஸெரிக்” (Geiserici) மற்றும் “ஹனுரிக்” (Hunirici) ஆகியோரின் காலத்தில் நடைபெற்ற கிறிஸ்தவ துன்புறுத்தல்கள் பற்றிய சரித்திர பதிவுகளை எழுதினார்.

கி,பி, 429ம் ஆண்டு, அரசன் “ஜீஸெரிக்” (Geiseric) சுமார் 80,000 பழங்குடியினருடன் ஸ்பெயின் நாட்டிலிருந்து ஆபிரிக்கா நோக்கி படையெடுத்தான். கி.பி. சுமார் 439ம் ஆண்டு, “கார்தாஜ்” (Carthage) நாட்டை கைப்பற்றினான். அதன் பின்னர் அவன் அங்குள்ள கிறிஸ்தவ மக்களை “ஆரியனிஸ” (Arianism) மதத்திற்கு மாற்ற எடுத்துக்கொண்ட கொடுங்கோல் துன்புறுத்தல் நடவடிக்கைகள் அப்போதிருந்த கிறிஸ்தவ ஆயர்கள் எவராலும் மறக்கவோ, பொறுத்துக்கொள்ளவோ இயலாததாகும்.

ஜூலியா, ஒரு “கார்தாஜ்” (Carthaginian girl) பெண்ணாவார். அவர் “யூசேபியஸ்” (Eusebius) என்பவனால் அவரது நகரிலிருந்து பிடித்து கொண்டுவரப்பட்டார். பின்னர் அவரை அடிமையாக விற்றான். இதுபோலவே கீழ்படியாத கிறிஸ்தவர்கள் பலரை அவர்கள் அகற்றினார்கள். “யூசேபியஸ்” (Eusebius) ஒரு பாலஸ்தீனிய நாட்டின் சிரிய (Citizen of Syria in Palestine) பிரஜை ஆவான். “கேப் கோர்ஸ்” (Cap Corse) துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த சரக்குக் கப்பலில் போதையின் கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருந்தனர். அவர்களின் பாவச் செயல்களுக்காக ஜூலியா மிகவும் மன வருத்தத்தில் இருந்தார். கப்பலிலுள்ள ஒரு பெண், பாகனிய கடவுளர்களை பூஜிக்க மறுப்பதாகவும், ஏளனம் செய்வதாகவும் “ஃபெலிக்ஸ் சாக்சோ” (Felix Saxo) என்பவனிடம் கூறினர். ஃபெலிக்ஸ், அப்பெண்ணை நமது வழிக்கு கொண்டுவாருங்கள்; அல்லது அவளை என்னிடம் கொண்டுவாருங்கள் என்று யூசேபியஸிடம் சொன்னான். யூசேபியஸோ, நான் “எவ்வளவோ முயற்சித்தும் எனக்கு வெற்றி கிடைக்கவில்லை. உங்களால் முடிந்தால் முயற்சி செய்யுங்கள்” என்றான்.

“ஃபெலிக்ஸ் சாக்சோ” (Felix Saxo) நயமாகவும் பயமுறுத்தியும் முயன்று பார்த்தான். ஆனால், ஜூலியா கிறிஸ்துவின் விசுவாசத்தை கைவிட மறுத்துவிட்டார். ஆகவே, சிறிதும் இரக்கமற்ற முறையில் துன்புறுத்தப்பட்டு ஜூலியா மறைசாட்சியாக கொல்லப்பட்டார்.

பெர்த் நகர் புனிதர் வில்லியம் May 23

† இன்றைய புனிதர் †
(மே 23)

✠ பெர்த் நகர் புனிதர் வில்லியம் ✠✠
(St. William of Rochester)
மறைசாட்சி:
(Martyr)

பிறப்பு: கி.பி 12ம் நூற்றாண்டு
பெர்த், ஸ்காட்லாந்து
(Perth, Scotland)

இறப்பு: கி.பி 1201
ரோச்செஸ்டர், இங்கிலாந்து
(Rochester, England)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

புனிதர் பட்டம்: கி.பி 1256
திருத்தந்தை நான்காம் அலெக்சாண்டர்
(Pope Alexander IV)

நினைவுத் திருநாள்: மே 23

பாதுகாவல்: தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள்

ரோச்செஸ்டர் நகர் வில்லியம் (Saint William of Rochester) என்றும் அழைக்கப்படும் பெர்த் நகர் புனிதர் வில்லியம் (Saint William of Perth), இங்கிலாந்தில் மறைசாட்சியாக மறைந்த ஒரு ஸ்காட்டிஷ் துறவி ஆவார். அவர் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாவலர் ஆவார்.

அக்காலத்தில், ஸ்காட்லாந்து (Scotland) நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான பெர்த் (Perth) நகரில் பிறந்த இவர், இளமையில், ஓரளவு முரட்டுத்தனமாக இருந்தார். ஆனால், வளர வளர, அவர் கடவுளின் சேவைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். வர்த்தக ரீதியாக ஒரு ரொட்டி தயாரிக்கும் (Baker) தொழில் செய்து வந்த இவர், (சில ஆதாரங்கள் அவர் ஒரு மீனவர் என்று கூறுகிறார்கள்), தாம் உற்பத்தி செய்யும் ஒவ்வொரு பத்தாவது ரொட்டியையும் ஏழைகளுக்காக ஒதுக்குவது அவருக்குப் பழக்கமாக இருந்தது.

வில்லியம் தினம்தோறும் காலை திருப்பலி காண ஆலயம் செல்லும் வழக்கம் கொண்டிருந்தார். ஒரு நாள், வெளிச்சம் கூட சரியாக விடிகாலை வேளை, தேவாலயத்தின் வாசலில் ஒரு கைவிடப்பட்ட குழந்தையைக் கண்டு, அதனை தத்தெடுத்தார்.  குழந்தைக்கு டேவிட் எனும் பெயர் சூட்டிய அவர், தமது தொழிலான ரொட்டி தயாரிக்கும் பணியையும், வர்த்தகத்தை கற்பித்தார். சில காலத்தின் பின்னர், அவர் புனித திருத்தலங்களைப் பார்வையிட திட்டமிட்டார். மேலும், புனிதப்படுத்தப்பட்ட பணப்பையையும் (உண்டியல் பணம்), தமது வளர்ப்புப் பிள்ளையான டேவிட்டையும், ஊழியர்களையும்  அழைத்துக்கொண்டு, திருயாத்திரை புறப்பட்டார்.

அவர்கள் ரோச்செஸ்டர் (Rochester) நகரில் மூன்று நாட்கள் தங்கியிருந்தனர். அடுத்த நாள் கேன்டர்பரி (Canterbury) நகருக்கு எண்ணினர். அங்கிருந்து ஜெருசலேம் (Jerusalem) நகருக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதற்கு பதிலாக, டேவிட் வேண்டுமென்றே தனது வரர்ப்புத் தந்தையை வேண்டுமென்றே ஒரு குறுக்கு வழியில் தவறாக வழிநடத்தினான். வழியில், அவர்கள் வழிச்செலவுக்கும், காணிக்கைகளுக்குமாக சேமித்து வைத்திருந்த உண்டியல் பணம் முழுதையும் கொள்ளையடித்தான். தமது வளர்ப்புத் தந்தையான வில்லியமை தலையில் அடித்து கீழே தரையில் வீழ்த்திய அவன், அவரது தொண்டையை அறுத்து அவரை கொலை செய்தான்.

அவரது உடல், மனநோயாளி பெண்மணி ஒருத்தியால் கண்டெடுக்கப்பட்டது. அப்பெண்மணி, "ஹனிசக்கிள்" (Honeysuckle) என்றழைக்கப்படும் மலர்களாலான ஒரு மலர்மாலை பின்னி, அதனை வில்லியமின் உடலின் தலையருகே வைத்தாள். (இந்த "ஹனிசக்கிள்" வகை மலர்கள், வட அமெரிக்கா (North America) மற்றும் யூரேசியா  (Eurasia) நாடுகளில் காணப்படுகிறது.) ஒரு மலர்மாலையை தனது தலையிலும் சூடிக்கொண்டாள். அக்கணமே, அவளை பிடித்திருந்த மனநோய் அவளை விட்டகன்றது.

நடந்த சம்பவங்களை கேட்டறிந்த ரோச்செஸ்டர் நகர (Monks of Rochester) துறவிகள், வில்லியமின் உடலை ஆலயத்திற்கு கொண்டு சென்று அங்கேயே அடக்கம் செய்தனர். அவர் புனித ஸ்தலங்களுக்கு யாத்திரை சென்ற காலத்தில் மரித்ததாலும், மனநோயாளி பெண்மணி குணமான காரணத்தினாலும், அவர் மறைசாட்சியாக கௌரவிக்கப்பட்டார். மனநோயாளி பெண்மணி குணமான அதிசயத்தின் விளைவாகவும், அவரது மரணத்திற்குப் பிறகு அவரது பரிந்துரையில் செய்யப்பட்ட மற்ற அற்புதங்களின் விளைவாகவும், அவர் மக்களால் ஒரு புனிதர் என்று வணங்கப்பட்டார்.

ரோச்செஸ்டர் (Rochester) நகரில் இவரது பெயரில் அர்ப்பணிக்கப்பட்ட ஆலயமும் (The shrine of St William of Perth), இவரது பெயரால் நிறுவப்பட்ட தொடக்கப்பள்ளியும் (St William of Perth Primary School) உள்ளன.

ஜான் பாப்டிஸ்ட் தே ரோச்சி (மே 23)

இன்றைய புனிதர் :
(23-05-2020)

ஜான் பாப்டிஸ்ட் தே ரோச்சி (மே 23)
“ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னை கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்” (மத் 25: 36 -37)

வாழ்க்கை வரலாறு

ஜான் பாப்டிஸ்ட், 1698 ஆம் ஆண்டு இத்தாலியில் உள்ள வல்டாஜியோ என்னும் இடத்தில் பிறந்தார். இவருடைய குடும்பம் மிக சாதாரண குடும்பம். ஆதலால் இவருடைய படிப்புச் செலவை இவருடைய குடும்பத்தாரால் பார்க்க முடியாமல் போய், நல்லுள்ளம் கொண்ட ஒருவர்தான் ஏற்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இவருக்குக் 13 வயது நடக்கும்போது இயேசு சபையினர் நடத்தி வந்த கல்லூரியில் சேர்ந்து படித்தார். அதன்பின்னர் சாமிநாதர் சபையில் சேர்ந்து 1721 ஆம் ஆண்டு குருவாக அருட்பொழிவு செய்யப்பட்டார். குருவாக அருட்பொழிவு செய்யப்பட்ட பின்பு பற்பல பணிகளை மிகச் சிறப்பாக செய்து வந்தார். குறிப்பாக மருத்துவ மனைகளில் இருந்த நோயாளிகளைச் சந்தித்து அவர்களைத் தேற்றினார்; கைவிடப்பட்டோரையும் அனாதைகளையும் மிகச் சிறப்பான முறையில் பராமரித்து வந்தார். அவர்களுக்காகப் புதிதாக ஒரு மருத்துவ மனையையும் கட்டித் தந்து உதவினார். இதனால் இவர் எல்லாருடைய நன்மதிப்பையும் பாராட்டையும் பெற்றார்.

ஜான் பாப்டிஸ்டுக்கு அடிக்கடி வலிப்பு நோய் வந்தது. அது அவருடைய உடல் நலத்தை நிறையவே பாதித்தது. அத்தகைய சூழ்நிலையிலும் அவர் ஏழை எளிய மக்கள்மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி அவர்களை நல்ல விதமாய் பராமரித்து வந்தார்.

சில காலத்திற்குப் பின் இவர் சிவித்தா காஸ்தலேனே என்னும் இடத்திற்கு மாற்றலாகிச் சென்றார். அங்கிருந்த ஆயர் இவரைக் குறித்து கேள்விப்பட்டு இவரை மக்கள் ஒப்புரவு அருட்சாதனத்தை செய்வதற்கென்று முழுநேரப் பணியாளராக நியமித்தார். அந்தப் பணியையும் இவர் சிறந்த விதத்திலே செய்து வந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவருடைய நோய் முற்றியது. இதனால் இவர் 1764 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் தேதி இறையடி சேர்ந்தார். இவருக்கு 1881 ஆம் ஆண்டு திருத்தந்தை பதிமூன்றாம் சிங்கராயர் அவர்களால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

தூய ஜான் பாப்டிஸ்ட் தே ரோச்சியின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. சமூகத்தின் மீதான அக்கறை

தூய ஜான் பாப்டிஸ்டின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது அவர் அடுத்தவர்மீதும் இந்த சமூகத்தின் மீதும் கொண்டிருந்த அன்பும் அக்கறையும்தான் நம்முடைய நினைவுக்கு வருகின்றது. இவரைப் போன்று நாம் அடுத்தவர் மீதும் இந்த சமூகத்தின் மீதும் அக்கறை கொண்டு வாழ்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பல நேரங்களில் நாம், என்னுடைய குடும்பம், என்னுடைய உறவுகள் என்றே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இத்தகைய சூழ்நிலையில் அடுத்தவர் மீதும் இந்த சமூகத்தின் மீது அக்கறைகொண்ட மக்களாக வாழ்ந்து காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது.

ஓர் ஊரில் இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் யாரைப் பற்றியும் அக்கறையும் இல்லாமல் தானுண்டு தன்னுடைய வேலை உண்டு என்றே வாழ்ந்து வந்தான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவனுடைய தந்தை அவனிடம் பிறர் நலம் பேணும்படி அறிவுரை கூறிக்கொண்டே இருந்தார். இதனால் கடுப்பான மகன் தந்தைக்கு சரியான பாடம் புகட்ட நினைத்தான். எனவே அவன் ஒரு காலிக்குவளையை எடுத்து தந்தையின் முன்பாகக் காட்டி, அதில் பாலை நிரப்பினான். “இந்தக் குவளை நான். இதிலுள்ள பால் என் வாழ்க்கை” என்றான். உடனே அவனுடைய தந்தை சிறிது சக்கரையை அதில் கலந்தார்.

பின்னர் அவர் அவனிடத்தில் சொன்னார், “சமூக அக்கறை என்னும் சக்கரையை இல்லாமல் உன் கசக்கும்”. இதைக் கேட்டு உள்ளம் குத்தப்பட்ட அவன் தன் வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டான்.

ஆம், அடுத்தவர் மீதான அக்கறையும் இந்த சமூகத்தின் மீதான அக்கறையும் நமக்கு இல்லையென்றால் நமது வாழ்வு கசக்கத்தான் செய்யும்.

ஆகவே, தூய ஜான் பாப்டிஸ்ட்டின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று அடுத்தவர் மீதான அக்கறை கொண்டு வாழ்வோம், நம்மிடத்தில் இருக்கும் சுயநலப் போக்கைத் தவிர்ப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

22 May 2020

தூய ரீட்டா (மே 22)

இன்றைய புனிதர் :
(22-05-2020)

தூய ரீட்டா (மே 22)
நிகழ்வு

திருமணத்திற்கு முன்பே ரீட்டாவிற்கு அகுஸ்தினாருடைய மடத்தில் சேர்ந்து துறவியாக வாழவேண்டும் என்று ஆசை. ஆனால் அவருடைய பெற்றோர்களுடைய கட்டாயத்தின் பேரில் அவர் மணந்துகொண்டார். தன்னுடைய கணவர் மற்றும் பிள்ளைகள் இறந்தபிறகும் தனித்துவிடப்பட்ட சூழ்நிலையில் துறவியாக மடத்தில் சேரவேண்டும் என்று விரும்பினார். ஆனால் துறவு மடத்தில் இருந்தவர்கள் திருமணமான ஒருவரை துறவுமடத்தில் சேர்ப்பது நல்லதல்ல என்று சொல்லி மறுத்துவிட்டனர். இப்படிப்பட்ட நிலையில் அவர் தன்னுடைய இஷ்டப் புனிதர்களான தூய அகுஸ்தினார், தூய திருமுழுக்கு யோவான், தூய நிக்கோலாஸ் ஆகியோரிடம் இடைவிடாது மன்றாடினார் எப்படியாவது தான் துறவுமடத்தில் சேரவேண்டும் என்று.ஒருநாள் அவர் தனக்கு விருப்பமான அந்த மூன்று தூயவர்களிடம் மன்றாடிக்கொண்டிருக்கும்போது அவர்கள் மூவரும் இவரை கைபிடித்து அழைத்துக்கொண்டு போய் அகுஸ்தினாருடைய திருவுமடத்தில் இருந்த சிற்றாலயத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டு, கதவை அடைத்துவிட்டுச் அங்கிருந்து போய்விட்டனர்.

அடுத்தநாள் துறவு மடத்தில் இருந்தவர்கள் சிற்றாலத்திற்கு வந்தபோது அது அடைக்கப்பட்டுக் கிடந்தது. ஒருவழியாக மடத்தில் இருந்தவர்கள் கதவைத் திறந்துகொண்டு உள்ளே போனபோது அங்கே ரீட்டா முழந்தாள் படியிட்டு இறைவனிடம் உருக்கமாக வேண்டிக்கொண்டிருந்தார். “எப்படி இங்கே வந்தாய்?” என்று அவர்கள் அவரிடம் கேட்க அகுஸ்தினாரும் திருமுழுக்கு யோவானும் தூய நிக்கோலாசம் தன்னை இங்கு வந்து விட்டுச்சென்றதாக கூறினார். உடனே அங்கிருந்த அனைவரும் இறையருளால்தான் அவர் இங்கு வந்திருக்கிறார் என்பதை உணர்ந்து அவரை துறவுமடத்தில் துறவியாக சேர்த்துக்கொண்டார்கள்.

வாழ்க்கை வரலாறு

ரீட்டா 1381 ஆம் ஆண்டு இத்தாலில் உள்ள ஸ்போலேடோ என்ற ஊரில் இருந்த ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோருக்கு நீண்டநாட்களாக குழந்தையே இல்லை. இடைவிடாத ஜெபத்தினால்தான் இவர்கள் ரீட்டாவைப் பெற்றெடுத்தார்கள். இவருடைய தாய் இறைபக்தியில் சிறந்து விளங்கினார். அதனால் இவர் தன்னுடைய மகளான ரீட்டாவை இறைபக்தியில் சிறப்பாக வளர்த்தெடுத்தார். ரீட்டா சிறுவயது முதற்கொண்டே ஜெபத்திலும் ஏழைகளுக்கு உதவும் நல்ல பண்பிலும் சிறந்து விளங்கினாள்.

இவருக்கு பதினெட்டு வயது நடந்துகொண்டிருந்தபோது இவர் தூய அகுஸ்தினாருடைய சபையில் துறவியாகச் சேரவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். ஆனால் இவருடைய பெற்றோர் வயதானவர்கள் என்பதாலும் இவர்களைப் பராமரிக்க ஆள் இல்லை என்பதாலும் இவர் பெற்றோருடைய கட்டாயத்தில் பேரில் பெர்டினான்ட் என்ற மனிதனை மணந்துகொண்டார். அவர் சாதாரண மனிதாக இல்லை. முரடனாகவும் ரீட்டாவை எப்போதும் அடித்துத் துன்புறுத்துபவனாகவும் இருந்தான். ரீட்டா மிகவும் பொறுமையாக தன்னுடைய கணவர் மனந்திரும்பும்படியாக இறைவனிடம் எப்போதும் வேண்டிக்கொண்டே இருந்தார். இந்த நேரத்தில் ரீட்டாவிற்கு ஜான், பால் என்ற இரண்டு குழந்தைகள் பிறந்தார்கள். குழந்தைகள் பிறந்த பின்பாவது தன்னுடைய கணவர் திருந்துவார் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால் அவரோ ரீட்டாவை மேலும் மேலும் அடித்துத் துன்புறுத்திக்கொண்டே இருந்தார்.

நாட்கள் செல்ல செல்ல ரீட்டா தன்னுடைய கணவருக்காக தொடர்ந்து இறைவனிடம் வேண்டிக்கொண்டே இருந்தார். அவர் செய்த ஜெபம் வீண்போகவில்லை. ஆம், அவருடைய கணவர் மனம்மாறினார், புதிய வாழ்க்கை வாழத் தொடங்கினார். எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்த நேரத்தில் திடிரென்று ஒருநாள் அவருடைய கணவரை மர்ம நபர்கள் சிலர் கொன்றுபோட்டார்கள். அப்போது ரீட்டா அடைந்த துன்பத்திற்கு அளவே இல்லை. ஆனாலும் அவர் ஆண்டவர் இயேசு சிலுவையில் தொங்கியபோது தன்னுடைய பகைவர்களை மன்னித்ததுபோன்று தன்னுடைய கணவரைக் கொன்றவர்களை மன்னித்தார். அவர் மன்னித்தாலும் அவருடைய பிள்ளைகளான ஜானும் பாலும் தங்களுடைய தந்தையைக் கொன்றுபோட்ட கயவர்களைக் கொன்றுபோட துடித்துக்கொண்டிருந்தார்கள். இதை நினைத்து ரீட்டா பெரிதும் கவலைப்பட்டார். அப்போது அவர் கடவுளிடம், “இறைவா! என்னுடைய இரண்டு பிள்ளைகளையும் மனமாறச் செய்யும்.
இல்லையென்றால் அவர்களை உம்மிடத்தில் எடுத்துக்கொள்ளும்” என்று உருக்கமாக மன்றாடினார். அடுத்த ஓராண்டில் ரீட்டாவின் இரண்டு மகன்களும் இறையடி சேர்ந்தார்கள்.

இப்படி கணவரும் பெற்ற பிள்ளைகளும் தன்னைவிட்டுப் போன அவர் தனிமைச் சிறையில் வாடினார். அப்போது அவருக்கு துறவுமடத்தில் சேர்ந்து வாழ்நாளெல்லாம் துறவியாகவே வாழலாம் என்ற எண்ணம் தோன்றியது. அதற்காக அவர் அகுஸ்தினாருடைய துறவுமடத்தை அணுகியபோது, திருமணமான யாரையும் உள்ளே சேர்த்துக்கொள்வது கிடையாது என்று சொல்லி மறுத்துவிட்டனர். இதனால் அவர் மன வருத்தத்திற்கு உள்ளானார். இத்தகைய வேளைகளில் அவர் இறைவனிடமும் தன்னுடைய இஷ்ட புனிதர்களிடம் ஜெபிக்கத் தவறியதில்லை. அப்போதுதான் அவர் அவருடைய இஷ்ட புனிதர்களால் அழைத்துச்செல்லப்பட்டு அகுஸ்தினாருடைய துறவுமடத்தில் கொண்டுபோய் விடப்பட்டார். இதைப் பார்த்த துறவுமடத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் இவரை துறவுமடத்தில் துறவியாக ஏற்றுக்கொண்டார்கள்.

துறவுமடத்தில் சேர்ந்தபிறகு இவர் ஜெபத்திலும் கீழ்ப்படிதலிலும் நற்கருணை பக்தியிலும் சிறந்து விளங்கினார். குறிப்பாக இவர் இயேசுவின் பாடுபட்ட சிரூபத்தை பார்த்து அதிகமாக தியானித்தார். அத்தகைய தருணத்தில்தான் 1441 ஆம் ஆண்டு இயேசுவின் தலையில் இருந்த முள்முடியில் இருந்த ஒரு முள்ளானது அவரது நெற்றியில் பதிந்து அவருக்கு மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தியது. அவர் இறைவனிடத்தில் தன்னுடைய நெற்றியில் பதிந்து வேதனையை ஏற்படுத்தும் முள்ளை நீக்குமாறு எவ்வளவோ கேட்டார். ஆனால் இறைவனோ அது அவருடைய நெற்றியில் என்றைக்கும் இருக்குமாறு செய்தார். நெற்றியில் ஏற்பட்ட காயத்திலிருந்து வழிந்த இரத்தம் சில நேரம் நாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் துறவுமடத்தில் இருந்தவர்கள் அவரை அவருடைய அறையிலிருந்தே ஜெபிக்குமாறு கேட்டுக்கொண்டார்கள். இதனால் அவர் தன்னுடைய அறையிலே தங்கி இறைவனிடம் ஜெபித்து வந்தார். அந்த நாட்களில் எல்லாம் (ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்கு மேல்) அவர் நற்கருணையை மட்டுமே உண்டு வந்தார்.

இப்படி ஜெபத்திலும் தவத்திலும் தன்னுடைய வாழ்வைச் செலவழித்த ரீட்டா 1457 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். 1900 ஆம் ஆண்டு திருத்தந்தை பனிரெண்டாம் சிங்கராயரால் இவர் புனிதையாக உயர்த்தப்பட்டார். திருமணம் செய்துகொள்ள இருக்கும் பெண்கள் தூய ரீட்டாவிடம் ஜெபித்தால் நல்ல கணவர் கிடைப்பார் என்பது ஒரு நம்பிக்கை.


கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ரீட்டாவின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. விடாமுயற்சி

தூய ரீட்டாவை விடாமுயற்சிக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு என்று சொன்னால் அது மிகையாகது. ஏனென்றால் அவர் இளமைப் பருவத்தில் இருந்தபோது துறவுமடத்தில் சேரவேண்டும் என்று விருப்பம் கொண்டார். அது அவருடைய பெற்றோரால் மறுக்கப்பட்டது. பின்னர் அவர் தன்னுடைய கணவர் மற்றும் பிள்ளைகளை இழந்துநின்றபோதும் துறவறமடத்தில் சேர விரும்பினார். அப்போதும் துறவு மடத்தில் இருந்தவர்களால் அது மறுக்கப்பட்டது. இப்படியாக துறவியாக மாறவேண்டும் என்ற எண்ணம் அவருக்குப் பலமுறை மறுக்கப்பட்டபோதும் அவர் விடாமுயற்சியோடு போராடிக்கொண்டிருந்தார். இறுதியாக அது இறையருளால் நிறைவேறியது. மத்தேயு நற்செய்தி 7:7 ல் ஆண்டவர் இயேசு கூறுவார், “கேளுங்கள் உங்களுகுக் கொடுக்கப்பட்டும், தேடுங்கள் நீங்கள் கண்டைவீர்கள், தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும்” என்று. ஆம், நாம் தொடர்ந்து விடாமுயற்சியோடு ஒரு காரியத்திற்காக போராடும்போது அது நிச்சயமாகக் கிடைக்கும். அதைத் தான் தூய ரீட்டா அவருடைய அவருடைய வாழ்க்கை நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

ஒரு நகரில் இருந்த மிக முக்கியான கடையின் வாசலில் ஜோடி புறாக்கள் கூடிகட்டு இருந்தன. இதைப் பார்த்த அந்த கடையில் இருந்த பணியாளர் புறக்கூண்டை அகற்றி அந்த ஜோடிப் புறாக்களை விரட்டியடித்தார். ஆனால் அந்த புறாக்கள் மீண்டும் மீண்டுமாக அதே இடத்தில் வந்து கூடுகட்டின. இதைப் பார்த்த அந்தக். கடையின் முதலாளி பணியாளிடம், “மீண்டும் மீண்டுமாக அந்தப் பறவைகள் இங்கேயே வந்து கூடுகட்டுவதால் அது இங்கேயே இருந்துவிட்டுப் போகட்டும்” என்று சொல்லி, அவற்றை அங்கேயே தங்க அனுமதித்தார். விடாமுயற்சியோடு ஒரு காரியத்தை செய்தால், அது இப்போது இல்லாவிட்டாலும் ஒருநாள் கைகூடும் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகிறது. தூய ரீட்டாவின் வாழ்வும் நமக்கு அதைத்தான் நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

2. துன்பத்தை ஏற்றுக்கொண்டு வாழ்தல்

தூய ரீட்டா தனக்கு ஏற்பட்ட துன்பத்தை (முள்ளால் ஏற்பட்ட காயத்தை) நினைத்து வருந்தவில்லை. தொடக்கத்தில் அவர் வருந்தினாலும் பின்னாளில் அதனை இறை விருப்பமாக ஏற்றுக்கொண்டார். நம்முடைய வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் துன்பங்களை எப்படிப் பார்க்கிறோம் என சிந்தித்துப் பார்க்கவேண்டும். துன்பத்தை நினைத்து வருந்துகின்றோமா? அல்லது அந்தத் துன்பம் இன்பத்திற்கான நுழைவாயில் என ஏற்றுக்கொள்கிறோமா என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
தூய பவுல் தன்னுடைய உள்ளத்தைத் தைக்கும் முள்ளை நீக்குமாறு இறைவனிடம் கேட்டார். ஆனால் இறைவனோ என் அருள் உனக்குப் போதும், வலுவின்மையில் வல்லமை சிறந்தோங்கும் என சொல்லி அதனை ஏற்றுக்கொள்ளப் பணித்தார். (2 கொரி 12:9) பவுலும் அதனை அப்படியே ஏற்றுக்கொண்டார். தூய ரீட்டாவின் விழாவைக் கொண்டாடும் நாம் துன்பத்தைக் குறித்த நமது பார்வை எப்படிப்பட்டதாக இருக்கின்றது என நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

American Anthem என்ற சிறுகதையில் வரும் நிகழ்ச்சி. இரண்டு நண்பர்கள் வாகனத்தில் போய்க்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் எதிர்பாராத விதமாக விபத்துக்கு உள்ளானார்கள். இரண்டு பேருக்குமே காலில் சரியான அடி. அதனால் அவர்கள் தங்களுடைய காலை இழக்க வேண்டிய சூழல். இந்த விபத்துக்குப் பிறகு ஒரு நண்பன் தன்னை வீட்டுக்குள்ளே அடைத்துக்கொண்டு தனக்கு ஏற்பட்ட இழப்பை நினைத்து வாழ்நாள் முழுவதும் அழுதுகொண்டே இருந்தான். ஆனால் இன்னொரு நண்பனோ தன்னுடைய கால் போனாலும் சக்கர நாற்காலில் உட்கார்ந்துகொண்டு மக்கள் அதிகமாகக் கூடும் தெருக்களில் பாடிக்கொண்டே சென்று மக்களை மகிழ்ச்சிப் படுத்தினான். அவனும் தனக்கு ஏற்பட்ட இழப்பை ஒரு பொருட்டாக நினைக்காமல் மகிழ்ச்சியோடு வாழ்நான்.

நமக்கு வரும் துன்பத்தை நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதில் நம்முடைய வாழக்கை அடங்கி இருக்கிறது என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

ஆகவே, தூய ரீட்டாவின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் நாம் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழத் துணிவோம், விடாமுயற்சியோடு எதையும் செய்வோம். துன்பத்தை துணிவோடு ஏற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

21 May 2020

புனித ஹெர்மான் ஜோசப் (St.Hermann Joseph)குரு May 21

இன்றைய புனிதர்
2020-05-21
புனித ஹெர்மான் ஜோசப் (St.Hermann Joseph)
குரு
பிறப்பு
பிறப்பு: 12 ஆம் நூற்றாண்டின் இறுதியில்
இறப்பு
இறப்பு: 7 ஏப்ரல் 1241
ஹோப்பன்(Hopen), ஐப்பல்(Eifel), ஜெர்மனி

இவர் ஓர் ஏழையின் குடும்பத்தில் பிறந்தார். இவர் சிறுபிள்ளையாக இருக்கும்போதே கொலோனில் உள்ள ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு வந்தார். அப்போது செபிக்க சென்றபோது ஒருநாள் கொலோன் ஊரில் இருந்த ஓர் ஆலயத்தில், அன்னைமரியாள், கையில் குழந்தை இயேசுவை வைத்திருக்கும் ஒரு படத்தை பார்த்து, அப்படத்தின் முன் மண்டியிட்டு செபித்தார். அப்போது ஹெர்மான் தன் கையில் ஆப்பிள் பழம் வைத்திருந்தார். அதை எடுத்து அன்னைமரியிடம் கொடுக்க, குழந்தை இயேசு தன் கையை நீட்டி சிறுவன் ஹெர்மான் கொடுத்த அப்பழத்தை வாங்கிக் கொண்டார். இதைப் பார்த்து திகைத்துப் போன அவர், தான் ஓர் குருவாக வேண்டுமென்று முடிவு செய்தார். அதன்பிறகு அவர் குருமடத்தில் சேர்ந்து குருவானார். எப்போதும் செபிக்க வேண்டும், விவிலியம் வாசிக்கவேண்டும். திருப்பலியில் பங்கெடுக்கவேண்டும் என்று நினைத்து, இதுதான் துறவற வாழ்வு என்றுணர்ந்து அவ்வாழ்வை தேர்வை செய்தார். ஆனால் அங்கு அனைத்தும் அவருக்கு எதிர்மறையாக இருந்தது. அவரை அந்த துறவற மடத்தில், உணவு சமைப்பவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டுவந்து சேர்க்கும் பொறுப்பை ஏற்றுகொள்ள சொன்னார்கள். அவரும் அப்பொறுப்பை ஏற்று தினமும் கடைக்குச் சென்று, தன்னிடம் ஒப்படைத்த வேலைகளை செய்து வந்தார். இதனால் கோவிலில் அமர்ந்து செபிப்பதற்கென தனியாக அவருக்கு நேரம் கிடைக்காததால், ஒருநாள் அன்னைமரியிடமும், தந்தை சூசையிடமும், தனது கவலைகளை செபத்தில் கூறிக்கொண்டிருந்தார். அப்போது அன்னையானவள், அவரிடம் உன் உடனுள்ள சகோதர, சகோதரிகளுக்கு நீ புரியும் உன் வேலைகளே உன்னிடமிருந்து வருகின்ற உண்மையான ஜெபம் என்றுணர்த்தினார்.

அதன்பிறகு ஹெர்மான் தனது எண்ணங்களை மாற்றிக்கொண்டு தனக்கு குறிக்கப்பட்ட வேலைகள் அனைத்தையும் மகிழ்வோடு செய்து வந்தார். அவ்வேலைகள் அனைத்தையும் ஜெபமாக மாற்றினார். அதன்வழியாக உடனிருந்த அனைவரின் அன்பையும் பெற்றார். அதிலிருந்து ஹெர்மான் அன்னைமரியின் பாடல் ஒன்றை எப்போதும் பாடிக் கொண்டே இருந்தார். அவர் தொடர்ந்து நீண்ட நாட்களாக நோன்பிருந்து ஜெபித்தார். இதனால் கடுமையான நோய்க்கு ஆளாக்கப்பட்டார். அப்போது சுல்பிக் (Zulpich) என்ற ஊரில் இருந்த சிஸ்டர்சீசியன்(Zisterzienserinn) துறவற இல்லத்திற்கு சென்றார். அங்கு அவர் ஆன்மீக குருவாக பணியாற்றினார். அவரை சந்திக்க வந்த அனைவருக்கும் ஆசீரை வழங்கி மகிழ்ச்சிப்படுத்தினார். ஹெர்மான் அத்துறவற இல்லத்திற்குள் நுழைந்தவுடனே, "இங்குள்ள கல்லறையில்தான் என்னை அடக்கம் செய்யவேண்டும், நான் இங்குதான் இறப்பேன்" என்று கூறினார். அவர் கூறியபடியே, ஒருநாள் ஆலயத்தில் ஜெபித்துக்கொண்டிருக்கும்போதே, கண்களைமூடி அமைதியாக இறைவனிடம் சேர்ந்தார்.


செபம்:
எல்லாம் வல்ல இறைவா! புனித ஹெர்மான் அன்னைமரியிடம் மிகுந்த பாசம் கொண்டிருந்தார். அவரது அன்பையும், பாசத்தையும் பெற்று நாங்கள் என்றும், அன்னைமரியின் பிள்ளைகளாக வாழ உம் அருளை எமக்கு பொழிந்தருளும். ஆமென்




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

மாசேனோட் நகர் ஆயர், சபைநிறுவுநர் கார்ல் ஹாய்கன் Karl Eugen von Mazenod OMI
பிறப்பு: 1 ஆகஸ்ட், 1782 எயிக்ஸ் Aix, பிரான்சு
இறப்பு: 21 மே 1861 மர்செய்லே Marseille, பிரான்சு


அபோ நகர் ஆயர் ஹெம்மிங் Hemming von Abo
பிறப்பு: 1300, ஸ்வீடன்
இறப்பு: 21 மே 1366, அபோ Abo, ஸ்வீடன்


போலந்து நாட்டு அரசி ரிக்கேசா Richeza von Polen
பிறப்பு: 1000 ரைன் Rhein
இறப்பு: 1063, சால்பெல்டு Saalfeld, தூரிங்கன் Thüringen


மறைசாட்சி, குரு அலெக்சாண்டிரியா நகர் செக்குண்டூஸ் Secundus von Alexandria
பிறப்பு: 300 ஆப்ரிக்கா
இறப்பு: 356, வட ஆப்ரிக்கா

புனித இயூஜின் டி மசெனோ (Saint Eugene de Mazenod, May 21

இன்றைய புனிதர் :
(21-05-2020)

புனித இயூஜின் டி மசெனோ (Saint Eugene de Mazenod, 
ஆகத்து 1, 1782 - மே 21, 1861) என்பவர் பிரெஞ்சு கத்தோலிக்க குரு ஆவார். இவருக்கு 1975 அக்டோபர் 19 இல் திருத்தந்தை ஆறாம் பவுலினால் அருளாளர் பட்டமும், 1995, திசம்பர் 3 இல் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலினால் புனிதர் பட்டமும் வழங்கப்பட்டது.

மறைமாவட்டம் - 
மர்சேய்

ஆட்சி பீடம் - மர்சேய்

நியமனம் - 2 அக்டோபர் 1837

ஆட்சி முடிவு - 21 மே 1861

குருத்துவத் திருநிலைப்பாடு
 - 21 டிசம்பர் 1811

ஆயர்நிலை திருப்பொழிவு - 14 அக்டோபர் 1832

பிறப்பு : ஆகத்து 1, 1782
Aix-en-Provence, பிரான்சு

இறப்பு : 21 மே 1861 (அகவை 78)
மர்சேய், பிரான்சு

குடியுரிமை - பெரெஞ்சு

சமயம் - கத்தோலிக்க திருச்சபை

வகித்த பதவிகள் - அமலமரித் தியாகிகள் சபையின் தலைவர் (1816-1832)
இகோசியுமின் பட்டம் சார்ந்த ஆயர் (1832-1837)

திருவிழா - 21 மே

ஏற்கும் சபை - கத்தோலிக்கம்

முத்திப்பேறு - 19 அக்டோபர் 1975
ஆறாம் பவுல் (திருத்தந்தை)-ஆல்

புனிதர் பட்டம் - 3 டிசம்பர் 1995
திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்-ஆல்

பாதுகாவல் - சிதைந்த குடும்பங்கள்


வாழ்க்கைச் சுருக்கம் :

இயூஜின் டி மசெனோ பிரான்சில் பிரபுக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். 1790 ஆம் ஆண்டு ஏற்பட்ட பிரான்சியப் புரட்சியை அடுத்து தன் தந்தையுடன் நாடு கடத்தப்பட்டு 11 ஆண்டுகள் இத்தாலியில் வாழ்ந்து 1802 ஆம் ஆண்டில் பிரான்சுக்கு திரும்பினார். 1808 ஆம் ஆண்டு குரு மடத்தில் இணைந்து இறையியல், மெய்யியல் கல்விகளைக் கற்று 1811 ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.

அமலமரியின் தியாகிகள் சபை உருவாக்கல்

ஏழைகள் வாழும் சேரிப்புறம், வைத்தியசாலை, சிறைச்சாலை போன்ற இடங்களில் சென்று பணி செய்தார். தனது பணியின் தேவையை உணர்ந்த இவர் ஒரு புதிய சபையை உருவாக்கினார். 1816 ஆம் ஆண்டில் "புறொவான்சின் மறைபரப்பாளர் சபை" என்ற பெயருடன் புதிய குழுவாக மறை மாவட்டத்தால் அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதில் 5 குருக்கள் மாத்திரமே இருந்தார்கள்.

1826 ஆம் ஆண்டு பெப்ரவரி 17 ஆம் நாள் இக்குழுவின் பெயர் "அமலமரியின் மறைபரப்புத் தியாகிகள்" (Missionary Oblates of Mary Immaculate) என மாற்றப்பட்டது[1]. 1832 ஆம் ஆண்டு இவர் மார்செயில் ஆயரானார்.

இலங்கையில் அமலமரித் தியாகிகள்

1847 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை கத்தோலிக்கத் திருச்சபை பெரும் சவால்களை எதிர்நோக்கியது. அவர்களின் பணியின் தேவை அதிகமாக காணப்பட்டது. இதனால் அங்கு குருக்களின் தேவையும் அதிகரித்தது. அப்பொழுது இருந்த ஆயர் ஒராசியோ பெற்றக்கினி குருக்களைத் தேடி ஐரோப்பா சென்றார். பிரான்சில் அவர் ஆயர் இயுஜினை சந்தித்து அவரை இலங்கையில் பணியாற்ற சில குருக்களை அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். இதனை ஏற்றுக் கொண்ட யூஜின் டி மசெனோ மூன்று அமலமரித் தியாகிகளை இலங்கைக்கு அனுப்ப முன்வந்தார். முதன் முதலில் 1847, நவம்பர் 28 இல் அருட்தந்தை செமேரியாவின் தலைமையில் மூன்று அமலமரித் தியாகிகள் தென்னிலங்கையின் காலி துறைமுகத்தை வந்தடைந்தார்கள். இவர்கள் அங்கிருந்து 1848, பெப்ரவரி 4 இல் வடக்கே மன்னாரை வந்தடைந்தார்கள். பின் ஊர்காவற்றுறைக்கு சென்றார்கள். அமலமரித் தியாகிகளின் பணி யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகி விரிந்தது. அமலமரித் தியாகிகளே 1862 இல் திருக்குடும்ப கன்னிய சபையினரை இலங்கைக்கு அழைத்து வந்தார்கள்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

20 May 2020

தூய சியன்னா பெர்னார்டின் (மே 20

இன்றைய புனிதர் :
(20-05-2020)

தூய சியன்னா பெர்னார்டின்  (மே 20)
“பேதுரு அவரிடம், “வெள்ளியும் பொன்னும் என்னிடம் இல்லை; என்னிடம் இருப்பதை உமக்குக் கொடுக்கிறேன். நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்” என்று கூறி, அவரது வலக்கையைப் பற்றிப் பிடித்துத் தூயக்கிவிட்டார். உடனே அவரது காலடிகளும் கணுக்கால்களும் வலுவடைந்தன” (திப 3: 6-7)

வாழ்க்கை வரலாறு

பெர்னார்டின், 1380 ஆம் அண்டு சியன்னாவில் பிறந்தார். இவர் பிறந்த ஒருசில ஆண்டுகளிலே இவருடைய பெற்றோர் இறந்து போனார்கள். எனவே இவர் தனது அத்தையின் பராமரிப்பிலே வளர்ந்து வந்தார். பெர்னார்டினுக்கு 20 வயது நடக்கும்போது சியன்னாவில் பயங்கரக் கொள்ளை நோய் – பிளேக் நோய் – ஏற்பட்டு நிறையப் பேர் இறந்துபோனார்கள். இதைப்  பார்த்த பெர்னார்டின், தன்னோடு ஒருசில இளைஞர்களைச் சேர்த்துக்கொண்டு, கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்தியில் பணிசெய்தார். இதனால் அவருடைய உடல்நலம் குன்றியது. அவருடைய தொண்டையும் பாதிக்கப்பட்டது. அப்படியிருந்தபோதும் அவர் பாதிக்கப்பட்ட மக்களின் துயரை உணர்ந்து, அவர்களுக்கு மத்தியில் பணிசெய்து வந்தார்.

இது நடந்து இரண்டு ஆண்டுகள் கழித்து பெர்னார்டின் இறைவனின் சிறப்பான அழைப்பினை உணர்ந்தார். எனவே இவர் தன்னுடைய உடைமைகள் அனைத்தையும் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு பிரான்சிஸ்கன் சபையில் போய் சேர்ந்தார். அங்கு ஏறக்குறைய 12 ஆண்டுகள் செபத்திலும் தவத்திலும் ஒறுத்தல் முயற்சிகளிலும் நாட்களைச் செலவழித்தார். இதற்கிடையில் அவர் தொண்டை சரியாகி, நல்ல குரல்வளம் பெற்றார்.

இதன்பிறகு இவர் ஊர்கள்தோறும் சென்று, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் வல்லமையோடு அறிவிக்கத் தொடங்கினார். இதனால் பெர்னார்டினின் போதனையைக் கேட்க ஏராளமான பேர் கூடிவந்தார்கள். பெர்னார்டின் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை வல்லமையோடு அறிவித்த தருணத்தில், இயேசுவின் திருநாமத்தைப் பற்றியும் போதிக்கத் தொடங்கினார். இயேசுவின் திருநாமம் வல்லமையானது, இதனை அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தால் நிறைந்த பலன் கிடைக்கும் என்று மக்களுக்கு எடுத்துச் சொன்னார். சில நேரங்களில் இவர் இயேசுவின் திருநாமம் (IHS) பதித்த அட்டைகளை மக்களுடைய தலையில் வைத்து ஜெபித்தார். அதனால் ஏராளமான புதுமைகள் நடைபெற்றன.

பெர்னார்டினைப் பிடிக்காத ஒருசிலர், அவரைப் பற்றி திருத்தந்தையிடம் மூன்றுமுறை பத்தி வைத்தார்கள். ஆனால் அவருக்கு எதிராக எந்த சான்றும் நிருபிக்கப்படாததால், அவரை திருத்தந்தை ஒன்றும் சொல்லவில்லை. சிலநேரங்களில் பெர்னார்டின் போதிப்பதைக் கேட்பதற்காக முப்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடிவந்தார். அவர்களுக்கெல்லாம் அவர் ஆண்டவருடைய நற்செய்தியை வல்லமையோடு எடுத்துரைத்தார். இதனால் இறைமக்கள் அனைவரும் அவரை ‘மக்கள் போதகர்’ என்ற அழைத்து வந்தார்கள்.

இப்படி ஆண்டவருடைய கைகளில் வல்லமையுள்ள கருவியாகச் செயல்பட்ட பெர்னார்டின், 1444 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1450 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய பெர்னார்டினின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

இயேசுவின் திருநாமத்தை நம்பிக்கையோடு உச்சரிப்போம்

தூய பெர்னாட்டின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கும்போது நம்முடைய மனதில் தோன்றக்கூடிய ஒரு சிந்தனை இயேசுவின் திருப்பெயரை நம்பிக்கையோடு உச்சரிக்கவேண்டும். அப்படி நாம் உச்சரித்தால் அதனால் நிறைய ஆசிர்வாதன்களைப் பெறுவோம் என்பது உறுதி என்பதாகும்.

தூய பெர்னார்டின் ஆண்டவர் இயேசுவின் திருப்பெயரை உலகறியச் செய்தார். அத்திருப்பெயரை கொண்டே நிறைய மக்களுக்கு ஆசிர்வாதங்களைப் பெற்றுத் தந்தார். தூய பெர்னார்டினைப் போன்று இயேசுவின் திருப்பெயருக்கு இருக்கும் வல்லமையை உணர்ந்திருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

1274 ஆண்டு, திருத்தந்தை பத்தாம் கிரகோரியார் திருத்தந்தையாக இருந்தபோது, திருச்சபை எதிரிகளிடமிருந்து மிகப்பெரிய அச்சுறுத்தலைச் சந்தித்தது. அத்தகைய தருணத்தில் அவர் செய்வதறியாது திகைத்தார். எனவே அவர் லயோன்ஸ் என்ற இடத்தில் ஆயர்களையும் கர்தினால்களையும் கூட்டி, பிரச்னையை எப்படிச் சமாளிப்பது என்று கேட்டார். அப்போது ஒருசிலர், “இப்பிரச்சினையைத் தீர்க்க ஒரே, அதே நேரத்தில் எளிய வழி இயேசுவின் திருப்பெயரைச் சொல்லி ஜெபிப்பதுதான்” என்றார்கள். திருத்தந்தையும் அதற்குச் சரி என்று சொல்ல, திருச்சபை முழுவதும் இயேசுவின் திருபெயரைச் சொல்லி, பிரச்சனைகள் ஓயுமாறு ஜெபித்தது. இதனால் அந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு கிடைத்தது. அதன்பிறகு திருச்சபையில் அமைதியான ஒரு சூழ்நிலை உருவானது.

இயேசுவின் திருப்பெயருக்கு எத்துனை வல்லமை இருக்கின்றது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று. 

ஆகவே, தூய பெர்னார்டினின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று இயேசுவின் திருப்பெயரைச் சொல்லி ஜெபிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

19 May 2020

கேர்மார்ட்டின் நகர புனிதர் இவோ May 19

† இன்றைய புனிதர் †
(மே 19)

✠ கேர்மார்ட்டின் நகர புனிதர் இவோ ✠
(St. Ivo of Kermartin)
ஏழைகளுக்காக பரிந்து பேசுபவர்:
(Advocate of the Poor)

பிறப்பு: அக்டோபர் 17, 1253
கேர்மார்ட்டின், டச்சி பிரிட்டனி
(Kermartin, Duchy of Brittany)

இறப்பு: மே 19, 1303 (வயது 49)
லான்னேக், டச்சி பிரிட்டனி
(Louannec, Duchy of Brittany)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

புனிதர் பட்டம்: ஜூன் 1347
திருத்தந்தை ஆறாவது கிளெமென்ட்
(Pope Clement VI)

நினைவுத் திருநாள்: மே 19

பாதுகாவல்:
பிரிட்டனி, வக்கீல்கள், கைவிடப்பட்ட சிறுவர்கள்
(Brittany, Lawyers, Abandoned Children)

புனிதர் கேர்மார்ட்டின் நகர இவோ, ஏழை மக்களுக்காக பரிந்து பேசும் ஒரு கத்தோலிக்க குரு ஆவார்.

கி.பி. 1253ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 17ம் தேதி, பிறந்த இவரது தந்தையான "ஹெலோரி" (Helori), "கெர்மார்ட்டின்" (Kermartin) நகர பிரபு ஆவார். இவரது தாயாரின் பெயர் "அஸோ டு கென்கிஸ்" (Azo du Kenquis) ஆகும். பதினான்கு வயதில் "பாரிஸ் பல்கலைகழகத்தில்" (University of Paris) கல்வி கற்க அனுப்பப்பட்ட இவர், அங்கே சிவில் சட்டம் கற்று பட்டதாரியானார். பிற மாணவர்கள் கல்வி காலத்தை கொண்டாட்டங்களில் கழிக்க, இவோ கல்வியிலும், செப வாழ்விலும் முனைப்பாக இருந்தார். நேரம் வாய்க்கும்போதெல்லாம் நோயாளிகளைப் பார்க்க சென்றார். புலால் மற்றும் திராட்சை இரசம் போன்ற மது வகைகளையும் தவிர்த்தார். இறையியலையும், திருச்சபை சட்ட ஒழுங்குமுறைகளையும் கற்றார்.

கி.பி. 1284ம் ஆண்டு, குருத்துவ அருட்பொழிவு பெற்ற இவர், 1285ம் ஆண்டு "ட்ரெட்ரெஸ்" (Tredrez) எனும் பங்கில் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டார். சுமார் எட்டு ஆண்டுகள் அங்கே பணியாற்றிய இவோ, அங்கிருந்து "லௌன்னேக்" (Louannec) எனும் பங்கின் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.

"லௌன்னேக்" (Louannec) பங்கிலேயே தாம் இறக்கும்வரை ஏழைகளின் பாதுகாவலராகவும், அவர்களுக்கு வேண்டிய சட்ட உதவிகளை இலவசமாக செய்தும் உதவி செய்தார். கைவிடப்பட்டவர்களையும் ஏழைகளையும் அன்பு செய்து, அவர்கள் வாழ்வில் முன்னேற்றமடைய வழிவகை செய்தார்.

டூர்ஸ் நகர விதவைப் பெண் (The Widow of Tours):
பாரிஸ் (Paris) நகரின் தென்மேற்கே, 111 கிலோமீட்டர் தூரத்திலுள்ள “ஒர்லியான்ஸ்” (Orléans) நகரின் அருகேயுள்ள “டூர்ஸ்” (Tours) நகரில், ஆயர் தமது நீதிமன்றத்தை நடத்திவந்தார். வழக்கறிஞரான ஈவோ, நீதிமன்றத்திற்கு வருகை தரும்போதெல்லாம், ஒரு குறிப்பிட்ட விதவைப் பெண்ணுடன் தங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒரு நாள், நிலச்சுவான்தாரான அந்த விதவைப் பெண் கண் கலங்கி அழுவதைக் கண்டார். விசாரித்தபோது, அடுத்த நாளே தாம் ஏமாற்றப்பட்ட ஒரு பயண வணிகரின் வழக்குக்கு பதில் சொல்வதற்காக நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும் என்று அவள் கூறினாள். தமது பயணத்தின்போது, இவ்விதவைப் பெண்ணுடன் தங்கிச் செல்லும் “டோ” மற்றும் “ரோ” (Doe and Roe) ஆகிய இரண்டு வணிகர்கள் தந்திரமாக அவளை ஏமாற்றி, அவளிடமிருந்து பணம் பறிக்கும் நோக்கில் அவள்மீது வழக்கு தொடுத்திருந்தனர். விதவைப் பெண்ணுக்கு ஆறுதல் கூறிய ஈவோ, மறுநாள் தமது சாதுர்யமான வாதத்தால் விதவையை ஏமாற்றிய வணிகர்களின் தந்திரத்தை வெளிக் கொணர்ந்தார்.

இவ்வாறு இவ்விளம் வழக்கறிஞர், விதவைப் பெண் ஏமாற்றப்படாமல் காப்பாற்றினார். விதவைப் பெண்ணை காப்பாற்றுவதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளும் வாதங்களும், அவரது புகழ் மேலும் பரவ வழிவகுத்தது.