புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

10 June 2020

புனித.பார்டோ (St.Bardo)மைன்ஸ் ஆயர்(Bishop of Mainz June 10

இன்றைய புனிதர்
2020-06-10
புனித.பார்டோ (St.Bardo)
மைன்ஸ் ஆயர்(Bishop of Mainz)
பிறப்பு
980
ஒப்பர்ஹோப்பன்(Oppershofen), ஹெஸன்(Hessen), ஜெர்மனி
இறப்பு
10 ஜூன் 1051
பாடர்போர்ன்(Paderborn), ஜெர்மனி

பார்டோ மிகவும் அமைதியானவராகவும் பக்தியானவராகவும் தன் வாழ்நாள் முழுவதும் திகழ்ந்தார். சிறுவயதிலிருந்தே தான் பிறந்த ஊரிலிருந்த ஆலயத்திற்கு சென்று, ஆலய பணிகளில் ஈடுபட்டு வந்தார். பார்டோ புல்டாவில்(Fulda) இருந்த ஆசீர்வாதப்பர் சபையில் சேர்ந்து குருவானார். குருவானபிறகு ஹெர்ஸ்பெல்டு(Herzfeld) என்ற ஊரிலிருந்த துறவற மடத்தில் பணிபுரிய அனுப்பப்பட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அத்துறவற இல்ல தலைவர் இறந்துவிட்டார். இதனால் அவரை தொடர்ந்து, பார்டோ தலைவர் பொறுப்பேற்று, ஆலயப்பணிகளிலும் ஈடுபட்டார். அப்போதுதான் அவர் மைன்ஸ் என்ற மறைமாநிலத்திற்கு 1031 ஆம் ஆண்டு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மற்றவர்களின் நல்வாழ்விற்காக தன் வாழ்வையே தியாகமாக்கினார். போதுமான அளவு உணவுகூட உண்ணாமல் வாழ்ந்தார். தன்னுடைய உணவையும், தனக்கு சொந்தமான அனைத்தையுமே ஏழைகளுக்கு கொடுத்துவிட்டு, மிகவும் ஏழ்மையான வாழ்வு வாழ்ந்தார். இதனால் திருத்தந்தை 9 ஆம் லியோ அவர்களால் கண்டிக்கப்பட்டார். பணியாற்ற உடலுக்கு சக்தி வேண்டுமென்று திருத்தந்தை அறிவுரை கூறினார். திருத்தந்தையின் ஆசீரையும் அறிவுரையும் பெற்ற பார்டோ, பாடர்போன் என்ற ஊருக்கு இறைபணிக்காக பயணம் செய்யும்போது காலமானார். அவரது கல்லறை ஜெர்மனியில் வைக்கப்பட்டுள்ளது. இவரது கல்லறையை ஏராளமானோர் பார்வையிட சென்றனர். அவர்கள் இவரிடம் மன்றாடும்போது, கேட்டவைகள் அனைத்தையும் பெற்றுக்கொண்டனர். இன்றுவரை இவரின் கல்லறையில் ஏராளமான புதுமைகள் நடந்த வண்ணமாக உள்ளது.


செபம்:
ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது என்று மொழிந்த இறைவா! ஏழைகளின் நல்வாழ்விற்காக, தன்னிடம் இருந்த அனைத்தையுமே புனித பார்டோ தியாகம் செய்தார். நாங்கள் அவரைப்போல எல்லாவற்றையுமே தியாகம் செய்யாவிட்டாலும், ஒருசிலவற்றையாவது பிறருடன் பகிர்ந்து வாழ, எங்களுக்கு நல்ல மனதை தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

பேராயர் கர்தினால் யோஹானஸ் தொமினிக் Johannes Dominici
பிறப்பு: 1357, புளோரன்ஸ் Florenz, இத்தாலி
இறப்பு: 10 ஜூன் 1419 புடாஸ்பெஸ்ட் Budapest, ஹங்கேரி


கொலோன் நகர் மறைசாட்சி மவ்ரினுஸ் Maurinus von Köln
பிறப்பு: 10 ஆம் நூற்றாண்டு
இறப்பு: 10 ஜூன், 10 நூற்றாண்டு


மறைசாட்சி ஒலிவியா Olivia
பிறப்பு: 10 ஆம் நூற்றாண்டு, செசிலியா Sizilien, இத்தாலி
இறப்பு: 10 ஆம் நூற்றாண்டு, துனிஸ் Tunis, துனேசியன்

தூய கெட்டூலியஸ் (ஜூன் 10)

இன்றைய புனிதர் :
(10-06-2020)

தூய கெட்டூலியஸ் (ஜூன் 10)
“என் பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் உங்களை இழுத்துச் செல்வார்கள். இவ்வாறு யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள். இப்படி அவர்கள் உங்களை ஒப்புவிக்கும்பொழுது, ‘என்ன பேசுவது? எப்படிப் பேசுவது?’ என நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் என்ன பேசவேண்டும்? என்பது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். ஏனெனில் பேசுபவர் நீங்கள் அல்ல. மாறாக, உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள் வழியாய் பேசுவார்” (மத் 10: 18 -20)

வாழ்க்கை வரலாறு

முதலாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் திருச்சபை வேகமாக வளர்ந்து வந்தது. இது பிடிக்காத ஒருசிலர் அப்போது உரோமையை ஆண்டுகொண்டிருந்த மன்னன் டிரேஜனிடம், கிறிஸ்தவர்கள் ஒன்றாகக் கூடிவந்து கேளிக்கைகளில் ஈடுபடுகிறார்கள், எதையெதையோ வழிபடுகிறார்கள் என்று பற்றி வைத்தார்கள். இதைக் கேட்டு சீற்றம் கொண்ட அவன் கிறிஸ்தவர்களைக் கொன்றொழிக்கத் திட்டம் தீட்டினான்.

இதற்கிடையில் டிரேஜனின் படையில் கெட்டூலியஸ் என்ற அதிகாரி ஒருவர் இருந்தார். அவர் கிறிஸ்துவின் போதனையால் தொடப்பட்டு, கிறிஸ்தவ மறையைத் தழுவினார். இதைத் தொடர்ந்து அவர், தான் வகிந்து வந்த பதவியைத் துறந்துவிட்டு திவோலிக்கு அருகில் இருந்த சபைன் என்ற குன்றுக்கு அருகில் குடிசை அமைத்து அங்கே கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கத் தொடங்கினார். அவருடைய போதனையைக் கேட்க ஏராளமான பேர் வந்து போனார்கள்.

இச்செய்தி மன்னனின் காதுகளைச் சென்றடைந்தது. இதனால் சினமுற்ற மன்னன் கெட்டூலியசையும் அவரோடு இருப்பவர்களையும் கைதுசெய்து வருமாறு  செரேயாலிஸ் என்னும் படைவீரனை அனுப்பி வைத்தான். இப்படி வந்தவனிடம் கெட்டூலியஸ் ஆண்டவர் இயேசுவின் பாடுகளையும் அவருடைய அன்பையும் அவனுக்கு எடுத்துச் சொன்னார். இதைக் கேட்டு மனம்மாறிய அந்தப் படைவீரன் கெட்டூலியசோடு சேர்ந்துகொண்டு கிறிஸ்தவ நெறியைப் பின்பற்றத் தொடங்கினான். செய்தி மன்னனின் காதுகளை எட்டியது. அவன் பிரிமிட்வுஸ் என்னும் படைவீரனை அனுப்பி வைத்து, கெட்டூலியசையும் செரேயாலிசையும் கைது செய்து வருமாறு அனுப்பி வைத்தான். அவனும் கெட்டூலியசின் போதனையால் ஈர்க்கப்பட்டு கிறிஸ்தவ நெறியைப் பின்பற்றத் தொடங்கினான். இதைத் தொடர்ந்து கெட்டூலியசின் சகோதரன் அமாசியசும் கிறிஸ்தவரானார்.

இவை எல்லாவற்றையும் குறித்துக் கேள்விப்பட்ட மன்னன் டிரேஜன், லிசினியுஸ் என்பவனைக் கூப்பிட்டு, கெட்டூலியசையும் அவனோடு இருக்கக்கூடிய படைவீரர்களையும் மக்களையும் கிறிஸ்துவை மறுதலிக்கச் சொல். அப்படி அவர்கள் மறுதலிக்கவில்லையென்றால் அங்கேயே அவர்களைக் கொன்றுபோட்டு” என்று சொல்லி அனுப்பி வைத்தான். லிசினியுஸ் கெட்டூலியசிடம் வந்து, மன்னன் சொன்னதைக் சொன்னான். அதற்கு கெட்டூலியசோ, “நானும் இங்கே இருக்கின்ற எல்லாரும் ஒருபோதும் கிறிஸ்துவை மறுதலிக்க மாட்டோம்” என்று மிக உறுதியாகச் சொன்னார். இதனால் லிசினியுஸ் கெட்டூலியசோடு அங்கிருந்த அனைவரையும் கைது செய்தான்.

அதன்பின்னர் அவன் அவர்கள் அனைவரையும் 27 நாட்கள் சிறையில் வைத்து, கொடுமையாகச் சித்ரவதை செய்தான். பிறகு அவர்களை தீயிலிட்டு சுட்டெரித்தான். ஆனால் தீயானது அவர்களை ஒன்றும் செய்யவில்லை. கடைசியில் அவன் அவர்களை தலைவெட்டிக் கொன்றுபோட்டான். இவ்வாறு கெட்டூலியசும் அவரோடு இருந்தவர்களும் ஆண்டவர் இயேசுவுக்கு தங்களுடைய இரத்தம் சிந்தி சான்று பகர்ந்தார்கள்.

கெட்டூலியசின் உடல் அவருடைய மனைவியும் தூயவருமான தூய சிம்போரோசாவின் கல்லறைக்கு அருகிலேயே வைக்கப்பட்டது.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

தூய கெட்டூலியசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

விசுவாசத்தில் வேரூன்றி இருந்தல்

தூய கெட்டூலியசின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது அவர் கிறிஸ்தவ விசுவாசத்தில் வேரூன்றி, மிக உறுதியாக இருந்ததுதான் நம்முடைய நினைவுவுக்கு வந்து போகின்றது. அவர் நினைத்திருந்தால் உரோமைப் படையில் உயர் பதவியில் மிக சந்தோசமாக இருந்திருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யாமல், தனது மனதிற்குப் பிடித்த கிறிஸ்தவ நெறியைப் பின்பற்றி அதிலே இறுதிவரைக்கும் வேரூன்றி இருந்தார்.

தூய கெட்டூலியசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், நம்முடைய விசுவாசத்தில் வேரூன்றி இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். இன்றைக்கு பலர் ஒரு சாதாரண கஷ்டம் வந்தாலே எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு, கிறிஸ்துவை விட்டு விலகிநிற்பது வேதனைக்குரியதாக இருக்கின்றது. இத்தகைய நிலை மாறவேண்டும். அனைவரும் தங்களுடைய விசுவாசத்தில் வேரூன்றி இருக்கவேண்டும்.

ஆகவே, தூய கெட்டூலியசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று ஆண்டவர் இயேசுவின்மீது கொண்ட நம்பிக்கையில் மிக உறுதியாக இருப்போம். அவருக்காக எதையும் இழக்கத் துணிவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.   

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

Saint of the Day : (10-06-2020)

Saint Getulius of Tivoli

Saint Name: St Getulius
Place: Gabii, South Africa
Birth:  XXX
Death: June 10, 120 AD

St Getulius whose feast is celebrated on June 10 is venerated together with Amantius, Cerealus, and Primitivus as a Christian martyr and saint. They are considered to have died at Gabii. According to tradition, Getulius was the husband of Saint Symphorosa. Getulius is a name meaning “of the Gaetuli,” which was a tribe of North Africa.

He was the husband of St. Symphorosa. An officer in the Roman army, he resigned when he became a Christian and returned to his estates near Tivoli, Italy. There he converted Caerealis, an imperial legate sent to arrest him. With his brother Amantius and with Caerealis and Primitivus, Getulius was tortured and martyred at Tivoli.

According to his legend, Getulius was a native of Gabii in Sabina. Getulius was an officer in the Roman army who resigned when he became a Christian. He retired to his estates near Tivoli. Caerealis was an imperial legate sent to arrest him but was converted to Christianity by Getulius. Primitivus was another officer sent to arrest him, but he was also converted. Amantius was Getulius' brother.

According to his Passio, all four men were tied to a stake and set alight. However, the fire did not harm them, so they were brutally clubbed and then beheaded.

According to the Roman Martyrology, Getulius was killed on the Via Salaria and is called the father of the Seven Martyrs and the husband of Symphorosa. His companions are called Caerealis, Amantius, and Primitivus. They were imprisoned, thrown into the flames but emerged unharmed, and then beaten to death with clubs. The legend further states that Saint Symphorosa buried them in an arenarium on her estate.

Their seven sons (not to be confused with the seven sons of Felicity of Rome) are named specifically. According to their legend, each of them suffered a different kind of martyrdom. Crescens was pierced through the throat, Julian through the breast, Nemesius through the heart, Primitivus was wounded at the navel, Justinus was pierced through the back, Stracteus (Stacteus, Estacteus) was wounded at the side, and Eugenius was cleft in two parts from top to bottom.

---JDH---Jesus the Divine Healer---


சிரிய புனிதர் எஃப்ரேம் June 9

இன்றைய புனிதர்
2020-06-09
புனித எப்ரேம் (St.Ephrem)
மறைவல்லுநர், விசுவாசத்திற்கு பாதுகாவலர்

பிறப்பு
306
மெசப்பொட்டேமியா
இறப்பு
373
கப்படோசியா
புனிதர்பட்டம்: திருத்தந்தை 15 ஆம் பெனடிக்ட்
இவரின் பெற்றோர்கள் பற்றியும், இவரது குருத்துவத்தைப்பற்றியும் இருவிதமான கருத்துக்கள் நிலவுகின்றது. கிறிஸ்துவின் ஒளிபெறாத பெற்றோர் என்று கூறப்படினும், எப்ரேம், "உண்மையின் வழியில் பிறந்தவன் நான்" கூறுவதிலிருந்து, இவரின் பெற்றோர் ஞான ஒளி பெற்றவர்கள் என்று நம்ப இடமுண்டு, மேலும் இவர் தியோக்கான் என்று அழைக்கப்பட்டாலும், குருத்துவ மகிமை பெற்றிருந்ததாக அவர் எழுதியவற்றிலிருந்து தெரிகிறது. இவர் தமது 18 ஆம் வயதில் திருமுழுக்குப் பெற்றார். அன்று முதல் நிசிபிஸ் நகர் ஆயர் புனித ஜேக்கப்பின் கண்காணிப்பில் இருந்தார். ஆயர் 325 ல் நிசேயா என்ற பொது சங்கத்திற்கு போகும்போது எப்ரேம்மையும் தன் செயலராக அழைத்து சென்றார். அப்போது ஆயர் இறந்து போகவே நிசிபிசிலேயே தங்கினார். அங்கே பெர்சியர்கள் படையெடுத்து வந்த வேத கலாபனையை பாடல்களாக தொகுத்தார். பின்னர் 350 ஆம் ஆண்டில் திருச்சபைக்கு இருந்த ஆபத்து நீங்கியது. வேதகலாபனை போரில் பெர்சியர் தோல்வி அடைந்தனர். 13 ஆண்டுகளுக்குப்பின் மன்னன் ஜோவியன் ஆட்சிக்காலத்தில் அமைதியின் பயனாக, நிசிபிஸ் நகரை பெர்சியாவுக்கு கொடுத்தார்.

இதனால் மனமுடைந்த எப்ரேம் எடெஸ்ஸாவுக்கு அருகில் தனிமையை நாடிச்சென்று ஒரு குகையில் நாட்களை செலவழித்தார். அங்கு கடும் தவ முயற்சிகளை மேற்கொண்டார். திருவழிபாட்டில் மக்களின் மனதை இறைவன்பால் எழுப்பும் ஆற்றல் திருப்பாடல்களுக்கு நிறையவே உள்ளது என்பதை இவர் உணர்ந்தார். திருவழிபாட்டில் "திருப்பாடல்களின் தந்தை" என்ற பட்டம் இவருக்கு மக்களால் கொடுக்கப்பட்டது. இவர் பெண்களின் பாடற்குழுவிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தார். இவர் இறுதிவரை தியாக்கோனாகவே இருந்தார். இவர் பல நூல்கள் எழுதினார். அனைத்திலுமே தான் ஓர் குருத்துவத்தை தேர்ந்துகொண்டதாகவே எழுதியுள்ளார். இவரின் நூல்கள் அனைத்தும் " இவருடைய நாட்களில் மக்கள் எப்படி விசுவாசத்தில் வளர்ச்சி அடைந்து வந்தனர். திருச்சபையில் எத்தகைய வழிபாட்டு முறைகள் நிலவி வந்தன என்பதை காட்டுகின்றது. அதேபோல் அன்னை மரியா எத்தகைய மாசு மறுவுமின்றி உற்பவித்தவர் என்று இவர் குறிப்பிடும்போது, அவரது நாட்களில் இவ்வுண்மையை விசுவாசிகள் தெரிந்து வைத்திருந்தனர். தாழ்ச்சியின் பொருட்டு, தமது அடக்க சடங்கின்போது, தம் உடலுக்கு தூபங்காட்ட வேண்டாம். இறைவனுக்கு மட்டுமே நறுமணத் தூபம் உரியது என்றும், ஆன்ம சாந்திக்காக திருப்பலி ஒப்புக்கொடுப்பது மட்டுமே சிறந்தது என்று கூறினார்.

எப்ரேம் 370 ஆம் ஆண்டில் கப்படோசியாவில் இருந்த புனித பாசிலை சந்தித்தார். ஏற்கெனவே பசிலியாரின் புகழ்பற்றி அவர் பலமுறை கேள்விப்பட்டிருந்தார். 372 ல் எப்ரேம் வாழ்ந்த பகுதிக்கருகில் மக்கள் கடும் பஞ்சத்தில் சிக்கினர். இவர் அம்மக்களை மீட்க அயராது உழைத்தார். எல்லாவிதமான முயற்சிகளையும் எடுத்து நிவாரணப் பணியில் ஈடுபட்டார். பஞ்சத்தில் அடிப்பட்ட நோயாளிகளுக்கு தொண்டாற்றினார். இப்பணிகளின் மிகுதியால் மிகவும் களைத்து போனார். தொடர்ந்து பணியாற்ற இவரின் உடல் ஒத்துழைக்கவில்லை. வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்கவே, தான் தங்கியிருந்த குகைக்குள் மெல்ல நகர்ந்து சென்றார். குகைக்குள் சென்றதுமே இறைவனடி சேர்ந்தார். இவர் ஓர் புகழ்மிக்க ஆசிரியர், தேன்சொட்டும் மறையுரையாளர், சிறந்த கவிஞர், விசுவாசத்தின் பாதுகாவலர், மறைநூலின் ஆழமான விளக்க உரையாளர் என்று இவர் வாழும்போதே, மக்கள் இவருக்கு புகழ் சூட்டினார்கள். இவர் சிரியன் ரீதியை சேர்ந்தவராக இருந்தபோதும் கூட "திருச்சபையின் மறைவல்லுநர்" என்ற பட்டம் இவர் ஒருவருக்கு மட்டுமே சூட்டப்பட்டது. திருவழிபாட்டில், திருப்பாக்களை சரளமாக புகுத்தும் பழக்கம் இவருக்கு இருந்ததால் இவரை "தூய ஆவியின் புல்லாங்குழல்" என்று அழைக்கப்பட்டார்.


செபம்:
இன்னிசை நாயகனே எம் தலைவா! இசையின் வழியாகவும், பல பாடல்களின் வழியாகவும், புனித எப்ரேம் உம்மை போற்றி புகழ்ந்தார். பல மனிதர்களையும் ஆன்மீக வாழ்விற்கு அழைத்து சென்றார். திருவழிபாட்டை உயிரோட்டமுள்ளதாக மாற்றினார். நாங்களும் எங்கள் வாழ்நாட்களில், பக்தியோடு திருவழிப்பாட்டில் பங்கு பெற்று, உமது நற்பலன்களை பெற்று கொள்ள வரம் தாரும்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

திருக்காட்சியாளர் அன்னா மரியா தைகி Anna Maria Taigi
பிறப்பு: 29 மே 1769, சியன்னா Sienna, இத்தாலி
இறப்பு: 9 ஜூன் 1837, உரோம், இத்தாலி
முத்திபேறுபட்டம்: 1920, திருத்தந்தை 15 ஆம் பெனடிக்ட்


திருக்காட்சியாளர் ஜோசப் தெ அங்கீட்டா Joseph de Anchieta SJ
பிறப்பு: 19 மார்ச் 1534, ஸ்பெயின்
இறப்பு: 9 ஜூன் 1591, ரேரிடிபா Reritiba, பிரேசில்
முத்திபேறுபட்டம்: 22 ஜூன் 1980


மக்டேபூர்க் நகர் பேராயர் டாகினோ Tagino von Magdeburg
பிறப்பு: 10 ஆம் நூற்றாண்டு, ரேகன்ஸ்பூர்க், பவேரியா
இறப்பு: 9 ஜூன் 1012, ரோட்டன்பூர்க், சாக்சன் அன்ஹால்ட்

† இன்றைய புனிதர் †
(ஜூன் 9)

✠ சிரிய புனிதர் எஃப்ரேம் ✠
(St. Ephrem the Syrian)
திருத்தொண்டர்/ ஒப்புரவாளர்/ மறைவல்லுநர்/ வணக்கத்துக்குரிய தந்தை/ ஆவியின் யாழ்:
(Deacon/ Confessor/ Doctor of the Church/ Venerable Father/ Harp of the Spirit)

பிறப்பு: கி.பி. 306
நிசிபிஸ் (தற்போதைய துருக்கி)
(Nisibis (Modern-day Turkey))

இறப்பு: ஜூன் 9, 373
எடிஸ்ஸா (தற்போதைய துருக்கி)
(Edessa (Modern-day Turkey))

ஏற்கும் சமயம்: 
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
கிழக்கு மரபுவழி கத்தோலிக்க திருச்சபைகள்
(Church of the East)
ஓரியண்டல் மரபுவழி திருச்சபை
(Oriental Orthodoxy)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)
சிரிய மரபுவழி திருச்சபை
(Syriac Orthodox Church)

புனிதர் பட்டம்: திருத்தந்தை 15ம் பெனடிக்ட்

நினைவுத் திருநாள்: ஜூன் 9

பாதுகாவல்: 
ஆன்மீக வழிகாட்டிகள்; ஆன்மீக தலைவர்கள்

சிரியனான புனிதர் எஃப்ரேம், 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த “சிரிய திருத்தொண்டரும்” (Syriac Christian Deacon), சிரிய மொழியில் புலமை பெற்ற பாடலாசிரியரும், இறையியலாளரும் ஆவார். இவரின் படைப்புகள் கிறிஸ்தவர்களிடையே மிகவும் புகழ் பெற்றதாய் இருந்தன. பல கிறிஸ்தவப் பிரிவுகள் இவரை புனிதராக ஏற்கின்றன. இவர், திருச்சபையின் மறைவல்லுநர் என கத்தோலிக்க திருச்சபையால் ஏற்கப்படுகின்றார். சிரிய மரபுவழி திருச்சபையில் இவருக்கு மிக முக்கிய வணக்கம் செலுத்தப்படுகின்றது.

எஃப்ரேம் பாடல்கள், கவிதைகள், மறை உரைகள் மற்றும் உரைநடை வடிவில் விவிலிய விளக்க உரைகள் பல எழுதி உள்ளார். இவை துன்ப வேளையில் திருச்சபையை சீர்திருத்த உதவும் வகையில் நடைமுறை இறையியல் படைப்புக்களாக இருந்தன. இவரின் படைப்புகளில் மேற்கு சிந்தனைகளின் தாக்கம் சிறிதாகவே இருப்பதால் அவை கிறிஸ்தவத்தின் துவக்க வடிவத்தைக் காட்டுகின்றது. இவர் சிரிய மொழி பேசும் திருச்சபை தந்தையர்களுல் மிக முக்கியமானவராகக் கருதப்படுகின்றார்.

கவிஞர், ஆசிரியர், பேச்சாளர், விசுவாசத்தின் பாதுகாவலர் என பன்முகம் கொண்ட எஃப்ரேம் ஒருவரே சிரிய இன மக்களிலிருந்து மறைவல்லுனராக அங்கீகரிக்கப்பட்டவர் ஆவார். இவரது காலத்தில் பரவலாக இருந்த தவறான கோட்பாடுகளுக்கெதிரான நிலைப்பாடுகள் எடுப்பதிலும் கத்தோலிக்க திருச்சபையின் கோட்பாடுகளைக் காப்பதிலும் தீவிரம் கொண்டிருந்தார்.

கி.பி. 308ம் ஆண்டு, “நிசிபிஸ்” (Nisibis) நகரின் இரண்டாவது ஆயராக நியமிக்கப்பட்ட “ஜேகப்பின்” (Jacob) மேற்பார்வையில் எஃப்ரேம் வளர்ந்தார். இளமையிலேயே திருமுழுக்கு பெற்ற இவர், திருத்தொண்டராகவும் அருட்பொழிவு பெற்றார். ஆனால், எப்போதுமே இவர் குருத்துவ அருட்பொழிவு பெறவில்லை. ஆயர் ஜேகப்பினால் ஆசிரியராக பணி நியமனம் பெற்ற இவர், சிரிய கிறிஸ்தவ மக்களிடையே பெரும் மதிப்பு பெற்றிருந்தார்.

ஆசிரிய பணியின் பகுதியாக பாடல்களை இயற்றி, இசையமைத்து, விவிலிய வர்ணனைகளை எழுத ஆரம்பித்தார். சில வேளைகளில் தமது பாடல்களில் தம்மை ஒரு மந்தை பணியாளாகவும், தமது ஆயரை மேய்ப்பராகவும் தமது சமூகத்தினரை மந்தை நிலமாகவும் சித்தரித்திருப்பார். எஃப்ரேம், “நிசிபிஸ் நகர பள்ளிகளை” (School of Nisibis) நிருவியவர் என்று பிரபலமாக புகழப்பட்டார். பின்வந்த நூற்றாண்டுகளில், அப்பள்ளி சிரியாக் மரபுவழி திருச்சபையின் கற்றல் மையமாக விளங்கியது.

ரோமப் பேரரசில் கிறிஸ்தவத்தின் நடைமுறைகளை சட்டப்பூர்வமாக்கியவரும் ஊக்குவித்தவருமான பேரரசர் “முதலாம் காண்ஸ்டன்டைன்” (Emperor Constantine I) கி.பி. 337ம் ஆண்டில் மரணமடைந்தார். இந்த வாய்ப்பைப் பற்றிக்கொண்ட பாரசீக மன்னன் “இரண்டாம் ஷாபூர்” (Shapur II of Persia) “ரோமன் வட மெசொப்பொட்டேமியாவில்” (Roman North Mesopotamia) தொடர் தாக்குதல்களை நடத்தினான். நிசிபிஸ் நகரம் கி.பி. 338, 346 மற்றும் 350 ஆகிய ஆண்டுகளில் முற்றுகையிடப்பட்டது. முதலிரண்டு முற்றுகைகளின்போது, எஃப்ரேமின் ஜெப வல்லமையால் நிசிபிஸ் காப்பாற்றப்பட்டது. கி.பி. 350ம் ஆண்டு நடந்த மூன்றாவது முற்றுகைக்காக “மைக்டோனியஸ் ஆற்றை” (River Mygdonius) திசை திருப்பி நிசிபிஸ் நகரின் சுற்றுச் சுவர்களை பலவீனப்படுத்த மன்னன் “இரண்டாம் ஷாபூர்” முயன்றான். ஆனால் நிசிபிஸ் நகர மக்கள் விரைந்து சுவற்றை சரி செய்து, தாக்குதலுக்காக வந்த யானைப்படை ஈர, சதுப்பு நிலங்களில் சறுக்கி விழுந்து சிதறிப்போக காரணமாயினர். எஃப்ரேம் கொண்டாடப்பட்டார். தாம் கண்ட நிசிபிஸ் நகரின் அற்புத இரட்சிப்பினை கவிதையாக வடித்தார். வெள்ளத்தில் பாதுகாப்பாக மிதந்து நீந்திச் சென்ற “நோவாவின் பேழை’யாக” (Noah's Ark) நிசிபிஸ் நகரை வர்ணித்திருந்தார்.

தமது கடைசி காலத்தை “எடிஸ்ஸா” (Edessa) நகரில் கழித்த எஃப்ரேம், பிளேக் கொள்ளை நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்வாய் செய்கையில் அதே பிளேக் நோயால் பாதிக்கப்பட்டு மரித்தார்.

இப்புனிதரால் இயற்றப்பட்ட நானூறுக்கும் மேற்பட்ட பாடல்கள் இன்றளவும் பாதுகாப்பாக உள்ளன.

† Saint of the Day †
(June 9)

✠ St. Ephrem the Syrian ✠

Deacon/ Confessor/ Doctor of the Church/ Venerable Father/ Harp of the Spirit:

Born: 306 AD
Nisibis (Modern-day Turkey)

Died: June 9, 373
Edessa (Modern-day Turkey)

Venerated in:
Catholic Church
Eastern Orthodox Church
Church of the East
Oriental Orthodoxy
Anglican Communion

Feast: June 9

Patronage: Spiritual directors and Spiritual leaders

Ephrem the Syrian was a Syriac Christian deacon and a prolific Syriac-language hymnographer and theologian of the fourth century.

Born at Nisibis, then under Roman rule, early in the fourth century; died June, 373. The name of his father is unknown, but he was a pagan and a priest of the goddess Abnil or Ibiza. His mother was a native of Amid. Ephraem was instructed in the Christian mysteries by St. James, the famous Bishop of Nisibis, and was baptized at the age of eighteen (or twenty-eight). Thenceforth he became more intimate with the holy bishop, who availed himself of the services of Ephraem to renew the moral life of the citizens of Nisibis, especially during the sieges of 338, 346, and 350.

One of his biographers relates that on a certain occasion he cursed from the city walls the Persian hosts, whereupon a cloud of flies and mosquitoes settled on the army of Sapor II and compelled it to withdraw. The adventurous campaign of Julian the Apostate, which for a time menaced Persia, ended, as is well known, in disaster, and his successor, Jovianus, was only too happy to rescue from annihilation some remnant of the great army which his predecessor had led across the Euphrates. To accomplish even so much the emperor had to sign a disadvantageous treaty, by the terms of which Rome lost the Eastern provinces conquered at the end of the third century; among the cities retroceded to Persia was Nisibis (363).

To escape the cruel persecution that was then raging in Persia, most of the Christian population abandoned Nisibis en masse. Ephraem went with his people, and settled first at Beit-Garbaya, then at Amid, finally at Edessa, the capital of Osrhoene, where he spent the remaining ten years of his life, a hermit remarkable for his severe asceticism. Nevertheless, he took an interest in all matters that closely concerned the population of Edessa. Several ancient writers say that he was a deacon; as such he could well have been authorized to preach in public. At this time some ten heretical sects were active in Edessa; Ephraem contended vigorously with all of them, notably with the disciples of the illustrious philosopher Bardesanes.

To this period belongs nearly all his literary work; apart from some poems composed at Nisibis, the rest of his writings-sermons, hymns, exegetical treatises-date from his sojourn at Edessa. It is not improbable that he is one of the chief founders of the theological "School of the Persians", so-called because its first students and original masters were Persian Christian refugees of 363. At his death St. Ephraem was borne without pomp to the cemetery "of the foreigners". The Armenian monks of the monastery of St. Sergius at Edessa claim to possess his body.

The aforesaid facts represent all that is historically certain concerning the career of Ephraem. All details added later by Syrian biographers are at best of doubtful value. To this class belong not only the legendary and occasionally puerile traits so dear to Oriental writers but also others seemingly reliable, e.g. an alleged journey to Egypt with a sojourn of eight years, during which he is said to have confuted publicly certain spokesmen of the Arian heretics. The relations of St. Ephraem and St. Basil are narrated by very reliable authors, e.g. St. Gregory of Nyssa (the Pseudo?) and Sozomen, according to whom the hermit of Edessa, attracted by the great reputation of St. Basil, resolved to visit him at Caesarea.

He was warmly received and was ordained deacon by St. Basil; four years later he refused both the priesthood and the episcopate that St. Basil offered him through delegates sent for that purpose to Edessa. Though Ephraem seems to have been quite ignorant of Greek, this meeting with St. Basil is not improbable; some good critics, however, hold the evidence insufficient, and therefore reject it, or at least withhold their adhesion. The life of St. Ephraem, therefore, offers not a few obscure problems; only the general outline of his career is known to us. It is certain, however, that while he lived he was very influential among the Syrian Christians of Edessa, and that his memory was revered by all, Orthodox, Monophysites, and Nestorians. They call him the "sun of the Syrians," the "column of the Church", the "harp of the Holy Spirit".

More extraordinary still is the homage paid by the Greeks who rarely mention Syrian writers. Among the works of St. Gregory of Nyssa (P.G., XLVI, 819) is a sermon (though not acknowledged by some) which is a real panegyric of St. Ephraem. Twenty years after the latter's death St. Jerome mentions him as follows in his catalog of illustrious Christians: "Ephraem, deacon of the Church of Edessa, wrote many works [opuscula] in Syriac, and became so famous that his writings are publicly read in some churches after the Sacred Scriptures.

அருளாளர் அன்னமேரி தெய்கி (1769-1837) June 9

ஜூன் 9 

அருளாளர் அன்னமேரி தெய்கி (1769-1837)
இவர் இத்தாலியில் உள்ள சியன்னாவில் பிறந்தவர்.

இவருடைய தந்தை ஒரு பெரிய தொழில் அதிபர். தொழிலில் அவருக்கு பெரிய தோல்வி ஏற்படவே குடிக்கு அடிமையாகி, தன்னுடைய வாழ்க்கையையும் குடும்பத்தையும் சீரழிக்கத் தொடங்கினார். இதனால் குடும்பம் வறுமையில் வாடத் தொடங்கியது.  ஆதலால் அன்னமேரி வீடுகளில் சிறுசிறு வேலைகளை பார்த்துக் குடும்பத்தைக் கரையேற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

சில காலத்திற்குப் பிறகு இவர் உரோமைக்குச் சென்று, அங்கு கிடைத்த சிறு சிறு வேலைகளைச் செய்து வந்தார். அப்பொழுது தோமினிக் என்பவருடைய அறிமுகம் கிடைத்தது. அவர்  இவர்மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார்.  இதையறிந்த இவரும் அவர்மீது அன்பு கொண்டார். இதைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

இல்லற வாழ்வில் இவர்களுக்கு இறைவன் 7 குழந்தைகளைக் கொடுத்து ஆசி வழங்கினார். இதன் பின் இவர் தன்னுடைய குழந்தைகளை இறைநம்பிக்கையிலும் பிறரன்பிலும் வளர்த்து வந்தார்.

இறைவன் இவருக்குப் பின்னர் நடப்பதை முன்கூட்டியே சொல்லக்கூடிய ஆற்றலை வழங்கி இருந்தார். இதன் மூலம் இவர் பின்னர் வரவிருந்த ஆபத்துக்களைச் சொல்லி பலரையும் ஆபத்திலிருந்து மீட்டார்.

இறைவனுக்கு இவருக்கு மிகுந்த ஞானத்தைக் கொடுத்திருந்தார். அதனால் இவரிடம் ஆலோசனை கேட்க திருத்தந்தை, கர்தினால்கள், ஆயர்கள், மக்கள் என பலரும் வந்தார்கள். 

இப்படி ஒரு சாதாரண பெண்மணியாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய இவர், இறைவன் தனக்கு கொடுத்த ஞானத்தைக் கொண்டு பலருக்கும் ஆலோசனைகளைச் சொல்லி, அவர்களுடைய வாழ்வில் ஒளியேற்றி வைத்தார்.

இவருக்கு  1920 ஆம் ஆண்டு அருளாளர் பட்டம் கொடுக்கப்பட்டது.

08 June 2020

புனித மரியம் திரேசியா சிரமெல் (1876-1926) June 8

ஜூன் 08

புனித மரியம் திரேசியா சிரமெல் (1876-1926)
இவர் கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், புத்தன்சிராவில் 1876 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 26 ஆம் நாள் பிறந்தார். 

இவருடைய குடும்பம் ஒரு காலத்தில் மிகவும் வசதியாக இருந்தது; ஆனால், இவருடைய தாத்தாவுக்கு 7 பெண் குழந்தைகள் இருந்ததால், அவர்களுக்குத் திருமணம்  செய்துவைக்கும்போது வரதட்சனை கொடுக்குக் கொடுத்தே ஏழையானது.

இவர் சிறு முதலே ஆண்டவர்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். அதனால் இவர் தன்னுடைய வாழ்க்கையை ஆண்டவருக்கு அர்ப்பணித்து வாழலாம் என்று முடிவு செய்தார். இதற்கு இவருடைய தாயார் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், அதாவது 1888 ஆம் ஆண்டு இவருடைய தாயார் இறந்துவிடவே, இவர் கார்மேல் சபையில் சேர்ந்தார். அங்கு இவரால் ஒருசில ஆண்டுகள் மட்டுமே இருக்க முடிந்தது. அதன்பிறகு இவர் அச்சபையிலிருந்து வெளியே வந்தார்.

1914 ஆம் ஆண்டு இவர் "திருக்குடும்பம்" என்ற சபையைத் தோற்றுவித்தார். அச்சபையின் தலைவியாக இருந்து இவர் நோயாளர்களைக் கவனித்துக் கொள்வதும், தனித்துவிடப்பட்டவர்களோடு நேரம் செலவழிப்பதும், ஏழைகளுக்கு உதவி செய்வதுமாக இருந்து வந்தார். 

இவருடைய சபையில் ஏராளமான பெண்கள் சேர்ந்தார்கள். அவர்களுடைய உதவியுடன் இவர் மேற்கண்ட பணிகளைச் செய்து வந்தார். இவர் அடிக்கடி காட்சிகள் கண்டார். அக்காட்சிகள் மூலமாக இவருக்குப் பல உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டன. இவர் ஐந்து காய வரங்களையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1926 ஆம் ஆண்டில் ஒருநாள் இவருடைய காலில் ஒரு பெரிய மரக்கட்டை விழுந்துவிட்டது. அது இவருக்கு மிகுந்த வேதனையைத் தரவே, சகோதரிகள் இவரை மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சிகிச்சை அளித்தார்கள். சிகிச்சை இவருக்குப் பலன் கொடுக்கவில்லை. அதனால் இவர் அதே ஆண்டு ஜூன் 8 ஆம் நாள் இறையடி சேர்ந்தார்.

இவர் இறக்கும்போது, "இயேசு, மரி யோசேப்பே! உங்களுடைய கைகளில் என்னுடைய இதயத்தையும் ஆன்மாவையும் ஒப்படைக்கிறேன்" என்ற வார்த்தைகளைச சொல்லிக் கொண்டே இறந்தார்.

இவருக்கு 2000 ஆம் ஆண்டு புனித திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலால் அருளாளர் பட்டமும், 2019 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 13-ஆம் நாள் திருத்தந்தை பிரான்சிஸால் புனிதர் பட்டமும் கொடுக்கப்பட்டது.

யோர்க் நகர் புனிதர் வில்லியம் ✠(St. William of York June 8

† இன்றைய புனிதர் †
(ஜூன் 8)

✠ யோர்க் நகர் புனிதர் வில்லியம் ✠
(St. William of York)
யோர்க் பேராயர்:
(Archbishop of York)

பிறப்பு: கி.பி. 11ம் நூற்றாண்டின் பிற்பகுதி

இறப்பு: ஜூன் 8, 1154
யோர்க், இங்கிலாந்து
(York, England)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholc Church)

புனிதர் பட்டம்: கி.பி. 1227
திருத்தந்தை மூன்றாம் ஹானரியஸ்
(Pope Honorius III)

முக்கிய திருத்தலம்:
யோர்க் மின்ஸ்ட்டர்)
(York Minister)

நினைவுத் திருநாள்: ஜூன் 8

புனிதர் வில்லியம், ஓர் ஆங்கிலேய கத்தோலிக்க குருவும், யோர்க் உயர் மறைமாவட்ட பேராயரும் (Archbishop of York) ஆவார். இவர், இரண்டு முறை யோர்க் உயர் மறைமாவட்ட பேராயராக பதவி வகித்ததன் மூலம் பிற பேராயர்களினின்றும் அசாதாரண வேறுபாடு கொண்டிருந்தார்.

“வில்லியம் ஃபிட்ஸ்ஹெர்பர்ட்” (William fitzHerbert) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் வில்லியம், இங்கிலாந்தின் யோர்க் (York) மாநிலத்தில் பிறந்தவர். அரசன் முதலாம் ஹென்றியின் (King Henry I) பொக்கிஷதாரராகவும் வேந்தராகவும் பதவி வகித்த “ஹெர்பர்ட்” (Herbert of Winchester) இவரது தந்தையார் ஆவார். இவரது தாயாரின் பெயர் “எம்மா” (Emma) என்றும், “அரசன் ஸ்டீஃபன்” (King Stephen) மற்றும் “வின்செஸ்டர்” ஆயரான (Bishop of Winchester) ஹென்றி (Henry of Blois) ஆகியோரின் சகோதரி என்றும், “பிளாயிஸி’ன்” பிரபுவான (Count of Blois) இரண்டாம் “ஸ்டீஃபனின்” (Stephen II) சட்டவிரோத மகள் என்றும் பெரும்பாலான ஆதாரங்கள் கூறுகின்றன. வில்லியம் கி.பி. 1090ம் வருடத்துக்கு முன்னர் பிறந்திருக்கலாம் என்றும் அவர் பிறந்த சரியான தேதி அல்லது வருடம் பற்றின தகவல்கள் இல்லை என்பர். அரச குடும்பங்களுடன் உறவு மற்றும் சம்பந்தங்கள் உள்ளதால் இவர் பலமுறை தேர்தல்கள் போன்ற அரசியல் சிக்கல்களிலும் பிரச்சினைகளிலும் சிக்கியதுண்டு.

கி.பி. 1141ம் ஆண்டு நடந்த பேராயர் நியமனத்துக்கான தேர்தலில் வில்லியம் வெற்றி பெற்று பேராயர் ஆனார். இதே பதவிக்கான தேர்தல் மூன்று முறை நடந்தது. ஏற்கனவே தேர்தல் நடந்த இரண்டு முறையும் ஏதாவது காரணங்களால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. “யோர்க்ஷைர்” (Yorkshire) பிராந்தியங்களைச் சேர்ந்த “சிஸ்டேர்சியன்” (Cistercian monasteries) துறவற மடாலயங்கள் பேராயர் தேர்தல்களில் இவரை எதிர்த்தன. 

ஒரு பேராயராக, வில்லியம் பல்வேறு திருச்சபை சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். இதனால் யோர்க் மக்களிடம் பிரபலமானார். இருப்பினும், திருத்தந்தையிடமிருந்து தரப்படும் - பேராயருக்கான அதிகாரங்களைக் குறிக்கும் “பல்லியம்” (Pallium) எனும் மேலங்கி இவருக்கு இன்னும் தரப்படாதது இவருக்கு ஒரு பெரும் குறையாகவே இருந்தது. இவரை இன்னும் பிடிவாதமாக எதிர்த்துவரும் “சிஸ்டேர்சியன்” (Cistercian monasteries) துறவியரும் இதற்கு தடையாகவே இருந்தனர். “பல்லியம்” (Pallium) பெரும் முயற்சியாக வில்லியம் ரோம் பயணித்தார்.

கி.பி. 1145ம் ஆண்டு, திருத்தந்தையருக்கான தேர்தல், ஃபிட்ஸ்ஹெர்பெர்ட்டின் காரணத்தால் (FitzHerbert's cause) “சிஸ்டேர்சியன்” (Cistercian) துறவியும் திருத்தந்தையுமான “மூன்றாம் யூஜினுக்கு” (Pope Eugene III) பின்னடைவாக அமைந்தது. புகழ் பெற்ற “சிஸ்டேர்சியன்” மடாதிபதியும் ஆன்மீக தலைவருமான “பெர்னார்ட்” (Bernard of Clairvaux) வில்லியமை பேராயர் பதவியிலிருந்து இறக்குவதில் தமது செல்வாக்கு அனைத்தையும் செலுத்தினார். வில்லியம் மதச்சார்பற்ற சக்திகளால் தூண்டப்படுவதாகவும், சிஸ்டேர்சியன் மடாலயங்களை ஒடுக்குவதாகவும், “புனித பார்பராவின் வில்லியம்” (William of St. Barbara) என்பவரை முறைகேடாக யோர்க் மாநிலத்தின் கல்வி நிறுவனங்களின் தலைவராக நியமித்ததாகவும் தொடர் புகார்களை அனுப்பினார்.

கி.பி. 1145–46ம் ஆண்டு குளிர்காலத்தில் வழக்கை மறு பரிசீலனை செய்த மூன்றாம் யூஜின் (Pope Eugene III), வில்லியம் முறையற்று பேராயராக அருட்பொழிவு செய்விக்கப்பட்டதாகவும், அதன் காரணமாக அவர் பேராயர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாகவும் அறிவித்தார்.

யோர்க் உயர்மறை மாவட்டத்திற்கு மற்றுமொரு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், “சிஸ்டேர்சியன்” மடாதிபதியான “ஹென்றி முர்டேக்” (Henry Murdac) மற்றும் அரசனின் வேட்பாளரான “ஹிலரி” (Hilary of Chichester) ஆகியோர் போட்டியிட்டனர். இவர்களில் “ஹென்றி முர்டேக்” வெற்றி பெற்றதாக திருத்தந்தை அறிவித்தார்.

வில்லியம் பதவி நீக்கம் செய்யப்பட்டதையும் “ஹென்றி முர்டேக்” வெற்றி பெற்றதையும் அரசர் ஸ்டீஃபன் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். அத்துடன் “ஹென்றி முர்டேக்” யோர்க் மாநிலத்தில் தங்குவதை தடுத்தார்.

சில வருட காலத்திலேயே “ஹென்றி முர்டேக்” மற்றும் திருத்தந்தை யூஜின் ஆகியோர் மரித்துப்போயினர். வில்லியம் தமது பதவியினிமித்தம் புதிய திருத்தந்தை “நான்காம் அனஸ்டாசியஸ்” (Pope Anastasius IV) அவர்களை சந்திக்க ரோம் பயணித்தார். வில்லியமின் மறு பதவி நியமனத்திற்கு இசைந்த திருத்தந்தை, கி.பி. 1153ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 20ம் நாளன்று, அதனை உறுதி செய்தார். 

வெற்றிக்களிப்புடன் யோர்க் மாநிலம் திரும்பிய வில்லியம், தமது ஆதரவாளர்களுடன் வெற்றி ஊர்வலம் போகையில், “யோர்க்” நகரிலுள்ள “ஔஸ்” பாலம் (Ouse Bridge in York) இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக, இதில் ஒருவர்கூட மரிக்கவில்லை.

வெற்றியுடன் நாடு திரும்பிய பேராயர் வில்லியம் சில மாத காலத்திலேயே கி.பி. 1154ம் ஆண்டு, ஜூன் மாதம், 8ம் நாளன்று, மரணமடைந்தார். அவர் உணவில் விஷம் வைத்து கொல்லப்பட்டார் என குற்றம் சாட்டப்பட்டது. யோர்க் மாநிலத்தின் தலைமை திருத்தொண்டரான “ஒஸ்பெர்ட்” (Osbert de Bayeux) என்பவர் பேராயருக்கு உணவில் விஷம் கலந்து கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டார். விசாரணைக்காக அரண்மனைக்கு அழைக்கப்பட்ட அவர் ஆஜராவதற்கு முன்னரே மன்னர் ஸ்டீஃபன் மரணமடைந்ததால் விசாரணை தள்ளிப்போனது. அதன்பின்னர் விசாரணை நடக்காமலே போனது. “யோர்க் மின்ஸ்டரில்” (York Minster) வில்லியம் அடக்கம் செய்யப்பட்டார். அதன் பின்னர் அங்கே எண்ணற்ற அதிசயங்கள் நடக்கத் தொடங்கின. ஒருமுறை, தீ விபத்தின்போது அவரது கல்லறையை திறந்து பார்த்த போது, அவரது உடல் அழியாமலும் தீயில் கருகாமலும் காணப்பட்டது. அத்துடன், ஒருவகை நறுமணம் வருவதாகவும் கூறப்பட்டது.

அவரது மரணம் நிகழ்ந்த ஜூன் 8ம் தேதி அவருடைய நினைவுத் திருநாளாக கொண்டாடப்படுகிறது.

​புனித.மேடர்டாஸ் (St. Medardaus)ஆயர் June 8

இன்றைய புனிதர் :
(08-06-2020)

​புனித.மேடர்டாஸ் (St. Medardaus)
ஆயர்

பிறப்பு 
456
வாலெண்சியென்னா(Valencienne), ஆப்பிரிக்கா
   
இறப்பு 
545
பிரான்சு

இவர் தன் இளம் வயதில், ஒரு நாள் புல்வெளியில் நடந்து கொண்டிருக்கும்போது, இடி மின்னலுடன் கூடிய மழை வந்தது. அப்போது ஒரு பெரிய பருந்து வந்து இளைஞனை அப்படியே தூக்கிக்கொண்டு பிறந்தது. இளைஞன் மழையில் நனையாமல் இருக்க தன் சிறகுகளை அடர்ந்து விரித்து, தன் சிறகுகளின் நிழலில் வைத்து காத்தது. இதனால் மழை இல்லாமல் இயற்கை வளம் கருகும்போது இவரின் பெயரை கூறி ஜெபித்தால் மழை வரும் என்ற நம்பிக்கை பரவியது. அதேபோல் மக்கள் இவரின் பெயரால் ஜெபிக்கும்போது, பலமுறை மழையைபெற்று கொண்டனர். இதனால் ஜூன் 8 ஆம் நாள் மழைக்கான நாள் என்று குறிப்பிட்டுள்ளனர். இறைவனின் அருளால் நிரப்பப்பட்டு இவர் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார். இவர் சிரித்தாலே, இவரின் வாயில் உள்ள மொத்தப் பற்களையும் பார்க்கலாம். அவ்வாறு அவர் வாய்விட்டு சிரிப்பார். 

505 ஆம் ஆண்டு இவர் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். 530 ஆம் ஆண்டு பாரிசிலிருந்த நையன் (Noyon) என்ற மறைமாநிலத்திற்கு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ரைம்ஸ் (Reims) பேராயர் ரெமிஜியுஸ் என்பவரால் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார். ஆயர் மேடர்டாஸ் – ன்(Medardaus) பணி அம்மறைமாநிலத்தில் ஆல் போல் தழைத்து வளர்ந்தது. அப்போது அவர் தூரின் நாட்டு அரசின் ராடேகுண்டீஸ் என்பவரால் வதைக்கப்பட்டு கொல்லப்பட்டார். இவரது உடல் "புனித மடோனா" என்ற துறவற மடத்திற்கு சொந்தமான கல்லறையில் புதைக்கப்பட்டது. இன்று இக்கல்லறையின் மேல் ஒரு சிறிய கெபி கட்டப்பட்டுள்ளது. 

செபம்:
அற்புதங்களையும், அதிசயங்களையும் செய்து வரும் எம் இறைவா! உமது பெயரால் நம்பிக்கையோடு செபிக்கிறவர்களுக்கு எல்லாவிதங்களிலும் உதவி செய்து வருகின்றீர். ஆம் இறைவா! உம்மால் படைக்கப்பட்ட இயற்கை வாடும்போது, உமது வல்லமையில், அவைகள் மீண்டும் புத்துயிர் பெற உதவும்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

Saint of the Day : (08-06-2020)

St. Medardus

Bishop of Noyon, b. at Salency (Oise) about 456; d. in his episcopal city 8 June, about 545. His father, Nectardus, was of Frankish origin, while his mother, named Protagia, was Gallo-Roman. It is believed that St. Gildardus, Bishop of Rouen, was his brother. His youth was entirely consecrated to the practise of Christian virtues and to the study of sacred and profane letters. He often accompanied his father on business to Vermand and to Tournai, and frequented the schools, carefully avoiding all worldly dissipation. His exemplary piety and his knowledge, considerable for that time, decided the Bishop of Vermand (d. 530) to confer on him Holy Orders, and caused him to be chosen as his successor. Forced, in spite of his objections, to accept this heavy charge, he devoted himself zealously to his new duties, and to accomplish them in greater security, since Vermand and the northern part of France in general were then generally troubled by wars and exposed to the incursions of the barbarians, he removed his episcopal see in 531 from Vermand, a little city without defence, to Noyon, the strongest place in that region. The year following, St. Eleutherius, Bishop of Tournai, having died, St. Medardus was invited to assume the direction of that diocese also. He refused at first, but being urged by Clotaire himself he at last accepted. This union of the two dioceses lasted until 1146, when they were again separated. Clotaire, who had paid him a last visit at Noyon, had his body transferred to the royal manor of Crouy at the gates of the city of Soissons. Over the tomb of St. Medardus was erected the celebrated Benedictine abbey which bears his name. St. Medardus was one of the most honoured bishops of his time, his memory has always been popularly venerated in the north of France, and he soon became the hero of numerous legends. The Church celebrates his feast on 8 June.
---JDH---Jesus the Divine Healer---

† இன்றைய புனிதர் †
(ஜூன் 8)

✠ புனிதர் மேடர்டஸ் ✠
(St. Medardus)

ஆயர் மற்றும் ஒப்புரவாளர்:
(Bishop and Confessor)

பிறப்பு: கி.பி. 456
சாலேன்சி, ஒய்ஸ், பிகார்டி, ஃபிரான்ஸ்
(Salency, Oise, Picardy, France)

இறப்பு: ஜூன் 8, 525
நோயொன், ஒய்ஸ், பிகார்டி, ஃபிரான்ஸ்
(Noyon, Oise, Picardy, France)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்கிய திருத்தலங்கள்:
“புனிதர் மேடர்டஸ் துறவு மடம், சோய்ஸ்சொன்ஸ், ஃபிரான்ஸ்
(Abbey of Saint-Médard, Soissons, France)

நினைவுத் திருநாள்: ஜூன் 8

பாதுகாவல்:
பருவநிலை, பல் வலிக்கெதிராக, திராட்சைத் தோட்டங்கள், குடிபானங்கள், கைதிகள், விவசாயிகள் மற்றும் மன நோயாளிகள்.

“புனிதர் மேடர்டஸ்” அல்லது “புனிதர் மேடர்ட்” (Saint Medardus or St Medard) என அறியப்படும் இப்புனிதர், வெர்மண்டோய்ஸ்” மறைமாவட்ட ஆயர் (Bishop of Vermandois) ஆவார். இவர், தமது மறைமாவட்ட ஆயரகத்தை “நோவோன்” (Noyon) நகருக்கு மாற்றினார்.

ஃபிரான்ஸ் நாட்டின் "பிகார்டியில்" (Picardy in France) பிறந்த இவரது தந்தையார் “ஃபிராங்கிஷ்” (Frankish) இனத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரது பெயர் “நேக்டாரிடஸ்” (Nectaridus) ஆகும். “கல்லோ-ரோமன்” (Gallo-Roman) இனத்தைச் சேர்ந்த இவரது தாயாரின் பெயர் “புரோடோகியா” (Protagia) ஆகும்.

“ரோவென்” மறைமாவட்ட ஆயராக (Bishop of Rouen) இருந்த புனிதர் “கில்டர்ட்” (Saint Gildard) இவரது சகோதரர் ஆவார். இதில் அதிசயிக்கத்தக்க விடயம் என்னவென்றால், இச்சகோதரர்கள் இருவரும் பிறந்தது, ஆயராக அருட்பொழிவு செய்விக்கப்பட்டது, இவ்வுலக வாழ்வை விட்டு நித்திய வாழ்வுக்கு சென்றது யாவும் ஒன்றாகவேயாகும்.

சிறு வயதில், “வெர்மான்ட்” மற்றும் “டௌர்ணாய்” (Vermand and Tournai) ஆகிய இடங்களில் கல்வி கற்ற இவர், சீரழிவிற்கு வழி வகுக்கும் இவ்வுலக ஆர்வங்களை கவனமுடன் தவிர்த்து வந்தார்.

தமது சிறு வயதில், ஒரு நாள் புல்வெளியில் நடந்து கொண்டிருக்கும்போது, இடி மின்னலுடன் கூடிய கன மழை வந்தது. அப்போது ஒரு பருந்து இவர் மழையில் நனையாமல் இருக்க தனது சிறகுகளை அகல விரித்தபடி இவர் போகும் பாதையில் பறந்து வந்து இவரை மழையிலிருந்து காத்தது என கூறுவார். இதனாலேயே இவர் பருவநிலைகளின் பாதுகாவலராக அறியப்படுகிறார்.

இவருக்கு 33 வயதாகையில் “வெர்மான்ட்” (Vermand) மறைமாவட்ட ஆயர் “அலோமேர்” (Bishop Alomer) மரண படுக்கையிலிருந்தார். அறிவிலும் பக்தியிலும் முன்மாதிரியான மேடர்டஸ் ஆயர் பதவிக்கு முற்றிலும் தகுதியானவர் என தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலில் சம்மதம் தெரிவிக்காத இவர், பிறகு தம்மேல் ஆயருக்குள்ள நம்பிக்கையை காக்கும் விதமாக சம்மதித்தார்.

ஆயராக இவரது பணிகள் பற்றின தகவல்களும் ஆதாரங்களும் அதிகம் இல்லை. இரண்டு வருடங்களின் பின்னர், “டௌர்ணாய்” மறைமாவட்ட ஆயரான (Bishop of Tournai) “புனிதர் எலூதெரியஸ்” (Saint Eleutherius) அவர்களின் மரண வேளையில் ஆயர் பொறுப்பினை ஏற்பதற்காக மேடர்டஸ் அங்கே வரவழைக்கப்பட்டார். வேறு வழியின்றி “டௌர்ணாய்” மறைமாவட்ட ஆயர் பதவியையும் ஏற்றுக்கொண்ட மேடர்டஸ், இரண்டு மறைமாவட்டங்களுக்கு ஆயராக பணியாற்றினார். கி.பி. 1146ம் ஆண்டு வரை ஒன்றாகவே இருந்த “நோயொன்” மற்றும் “டௌர்ணாய்” (Noyon and Tournai) ஆகிய இரு மறைமாவட்டங்களும் அதன்பின்னர் பிரிந்தன.

“நோயொன்” நகரில் 525ம் ஆண்டு, ஜூன் மாதம், 8ம் நாளன்று, மரித்த ஆயர் மேடர்டஸ், அவரது காலத்தில் மிகவும் போற்றப்பட்ட ஆயர் ஆவார். முதலில் ஃபிரான்ஸ் நாட்டிலும், அதன் பின்னர் “கொலோனிலும்” (Cologne), மேற்கு ஜெர்மனியிலும் (western Germany) இவரது புகழ் பரவியிருந்தது. பிள்ளைப்பேறு வேண்டியும், மழை வேண்டியும், சிறை வாசம் மற்றும் மோசமான வானிலைக்கெதிராகவும் இவர் அழைக்கப்பட்டார். திராட்சைத் தோட்டங்கள், குடிபானங்கள், கைதிகள், விவசாயிகள் மற்றும் மன நோயாளிகள் ஆகியோரின் பாதுகாவலராகவும் இவர் அழைக்கப்படுகிறார்.

07 June 2020

ஸ்பொலேட்டோ நகர்ப் புனித போர்டினாடூஸ் June 1

ஜூன் 01

ஸ்பொலேட்டோ நகர்ப் புனித போர்டினாடூஸ்
இவர் இத்தாலியில் உள்ள ஸ்பொலேட்டோ நகரில் பங்குப் பணியாளராகப் பணியாற்றியவர்.

தன்னுடைய பங்கில் இருந்த நோயாளர்கள், ஏழைகள்மீது மிகுந்த அன்பும் கரிசனையும் கொண்டவர் இவர். எந்தளவுக்கு என்றால், தன்னிடமிருந்த எல்லாவற்றையும் ஏழைகளுக்கும் நோயாளிகளுக்கும் கொடுக்கக்கூடியவராக இருந்தார்.

இவர் தனக்கு ஓய்வுநேரம் கிடைத்தபோது விவசாயம் செய்துவந்தார். அதிலிருந்து கிடைத்த வருமானத்தையும்கூட இவர் ஏழைகளுக்குக் கொடுத்து வந்தார்.

ஒருநாள் இவர் நிலத்தை உழுது கொண்டிருக்கும்பொழுது, இரண்டு செப்புக் காசுகளைக் கண்டெடுத்தார். அந்தச் செப்புக்காசுகள் அவ்வளவு மதிப்பு இல்லாதவையாக இருந்தாலும், எதற்கும் பயன்படும் என்று அவற்றைத் தன்னுடைய ஆடையில் முடிந்துகொண்டார்.

மாலைவேளையில் இவர் தன்னுடைய வேலையை முடித்துக்கொண்டு  திரும்பி வந்தபோது, பிச்சைக்காரர் ஒருவரைக் கண்டார். 

அவர் இவரிடம் பிச்சை கேட்டபொழுது இவர் 'என்னிடம் நிலத்தில் கண்டெடுத்த இரண்டு செப்புக் காசுகளைதானே இருக்கின்றன...! இவற்றையா கொடுப்பது...?'என்று யோசித்துகொண்டு அந்தச் செப்புக் காசுகளை எடுத்தபொழுது, அவை இரண்டும் தங்கக் காசுகளாக மாறியிருந்தன.

அதைக்கண்டு மிகவும் வியப்படைந்த இவர், தங்கக்காசுகளாக மாறியிருந்த அந்த இரண்டு செப்புக்காசுகளையும் பிச்சைக்காரரிடம் கொடுத்துவிட்டு வீடு திரும்பினார்.

இப்படித் தன்னிடம் இருந்ததைப் பிறரோடு பகிர்ந்து கொள்ளக்கூடியவராகவும் ஏழைகள், வறியவர்கள்மீது மிகுந்த அக்கறைகொண்டவராகவும் வாழ்ந்த இவர் கிபி 400 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

சிந்தனை

"ஏழைகளுக்கு இரங்கி உதவி செய்கிறவர், ஆண்டவருக்குக் கடன் கொடுக்கிறார்" நீதிமொழிகள் நூல்.

"இவ்வுலகம் ஒரு வாடகை வீடு; நம்முடைய நற்செயல்கள் நாம் இந்த உலகத்திற்குச் செலுத்தும் வாடகை" 
- கொல்கொத்தா நகர் புனித தெரசா

"கொடுப்பதில் இன்பம் பெறுவதில் இல்லை" இயேசு

- மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

Feast : Holy Trinity (07-06-2020)

Feast : Holy Trinity (07-06-2020) 

*Holy Day:* Trinity Sunday
This feast is celebrated on the first Sunday after Pentecost to venerate the religious dogma of the Trinity, the three persons of God, the Father, the Son and the Holy Spirit. The origin of the celebration of this feast was started when the Arian heresy of the 4th century was spreading among the people. Arius, a priest of Alexandria believed and preached that Jesus was a created being and denied any divinity in Jesus and also denied three persons of God (Trinity). The chief opponent of Arius was Athanasius of Alexandria, a deacon to Alexander, the bishop of Alexandria. Athanasius attended the first Council of Nicaea in the year 325 convened by the Emperor Constantine-I the Great as the secretary of the bishop of Alexandria. Athanasius sternly argued in support of the Trinity and the council adopted the dogma.
The Athanasius creed about the Trinity is as follows: 'The Catholic faith is this, that we venerate one God in the Trinity and the Trinity in oneness; neither confounding the persons, nor dividing the substance: for there is one person of the Father, another of the Son and another of the Holy Spirit; but the divine nature of the Father and of the Son and of the Holy Spirit is one, their glory is equal, their majesty is co-eternal'. The Father, the Son and the Holy Spirit are eternal, uncreated and infinite. The Father is Almighty, the Son is Almighty, the Holy Spirit is Almighty and yet there are no three Almighties but one Almighty. The Father is God, The Son is God and the Holy Spirit is God, not three Gods but one God. The Father was not made, not created, not begotten by anyone. The Son is from the Father alone, not made or created but begotten. The Holy Spirit is from the Father and the Son, not made, not created, not begotten but proceeding. In this Trinity there is nothing first or later, nothing greater or less not all three persons are co-eternal and co-equal with one another. There is Unity in Trinity and Trinity in Unity.
The pope John-XXII directed the universal church to celebrate this festival and pope Pius-X raised it to the dignity of a Double of the First Class on July 24, 1911.

---JDH---Jesus the Divine Healer---

புனித வில்லிபால்ட் (700-787) June 7

ஜூன் 7 

புனித வில்லிபால்ட் (700-787)
இங்கிலாந்து நாட்டைச் சார்ந்தவர் இவர்.

இவர் பிறந்த மூன்றாவது ஆண்டில், இவருக்குக் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. எல்லாரும் இவர் இறந்துவிடுவார் என்று நினைத்துக்கொண்டிருந்தபொழுது, இவருடைய பெற்றோர் இறைவனிடத்தில்,  "என் மகன் இவன் பிழைத்துக்கொண்டால், அவனை நாங்கள் உம்முடைய பணிக்குத் தந்துவிடுகின்றோம்" என்று சொல்லி மன்றாடினார்கள்.

இவர்கள் வேண்டியது போன்றே, வில்லிபால்ட் பிழைத்துக் கொண்டார். இதனால் இவரது பெற்றோர் இவரை இறைப்பணிக்கு அர்ப்பணித்தார்கள்.

சில காலத்துக்குப் பிறகு இவரும் இவருடைய தந்தையும் உரோமைக்கும் எருசலேமுக்கும் திருப்பயணம் மேற்கொண்டார்கள். போகிற வழியில் இவருடைய தந்தை இறந்துவிட, அவரை இவர் புதைத்துவிட்டு, தொடர்ந்து திருப்பயணம் மேற்கொண்டார். இப்படி இவர் தனியாகப் போகிறபோது, ஓரிடத்தில் இவரை உளவாளி என்று நினைத்துக் கைது செய்து, ஓரிரு ஆண்டுகள் சிறை வைத்தார்கள்.

சிறையிலிருந்து விடுதலையான பின் இவர், தன் சொந்த நாட்டிற்கு வந்து, தன்னுடைய தாயின் வழிகாட்டுதலின் பேரில், ஜெர்மனியில் இருந்த தன்னுடைய உறவினரான புனித போனிப்பாஸைச் சந்தித்தார். அவர் இவரை ஈஸ்டேட் என்ற பகுதியில் ஆயராக நியமித்தார்.

அங்கு இவர் ஏறக்குறைய 40 ஆண்டுகள் இறைப்பணியையும் மக்கள்பணியையும் ஒருங்கே செய்தார். தொடக்கத்தில் அப்பகுதியில் இவர் பணிகளைச் செய்தபோது, மிகப்பெரிய அளவில் சவால்களை சந்தித்தார்; ஆனாலும், இவர் மன உறுதியோடு இருந்து, ஆயர் பணியை சிறப்பாகச் செய்து நிறைவு செய்தார்.

இவர் 787 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

புனிதர் அன்டோனியோ மரிய கியனேல்லி June 7

† இன்றைய புனிதர் †
(ஜூன் 7)

✠ புனிதர் அன்டோனியோ மரிய கியனேல்லி ✠
(St. Antonio Maria Gianelli)

ஆயர்/ நிறுவனர்:
(Bishop/ Founder)

பிறப்பு: ஏப்ரல் 12, 1789
செரெட்டா, மான்ட்டுவா, மிலன்
(Cereta, Mantua, Duchy of Milan)

இறப்பு: ஜூன் 7, 1846 (வயது 57)
பியசென்ஸா, எமிலியா-ரோமாக்னா, பார்மா
(Piacenza, Emilia-Romagna, Duchy of Parma)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: ஏப்ரல் 19, 1925
திருத்தந்தை பதினோராம் பயஸ்
(Pope Pius XI)

புனிதர் பட்டம்: அக்டோபர் 21, 1951
திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ்
(Pope Pius XII)

நினைவுத் திருநாள்: ஜுன் 07

பாதுகாவல்:
போப்பியோ மறைமாவட்டம் (Diocese of Bobbio), வல் டி வர (Val di Vara)

புனிதர் அன்டோனியோ மரிய கியனேல்லி, இத்தாலியின் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஆயரும், “தோட்ட அன்னையின் மகள்கள்” (Daughters of Our Lady of the Garden) மற்றும் “புனித அல்போன்சஸ் மறைப்பணியாளர்கள்” (The Missionaries of Saint Alphonsus) ஆகிய சபைகளை நிறுவியவரும் ஆவார்.

கி.பி. 1789ம் ஆண்டு, விவசாயிகளின் கிராமமொன்றில் பிறந்த அன்டோனியோ மரிய கியனேல்லி’யின் தந்தை பெயர் “கியாகொமோ” (Giacomo) ஆகும். இவரது தாயார் பெயர் “மரிய கியனேல்லி” (Maria Gianelli) ஆகும். ஐந்து சகோதரர்களுடன் பிறந்த இவர் ஒரு விதிவிலக்கான மாணவர் ஆவார். இவரது குடும்பத்தினர் தங்கியிருந்து பணியாற்றிய பண்ணையின் உரிமையாளரே இவரது குருத்துவ படிப்புக்காக செலவு செய்தார்.

1807ம் ஆண்டு, நவம்பர் மாதம், தமது 18 வயதில் “இறையியல் சித்தாந்தம்” மற்றும் “புனித வழிபாட்டு முறை” ஆகியவற்றை கற்க ஆரம்பித்து முனைவர் பட்டம் வென்றார். 1812ம் ஆண்டு, மார்ச் மாதம், “ஜெனோவாவின் கர்தினால் பேராயர்” (Cardinal Archbishop of Genoa) “கியுசெப் மரிய ஸ்பினா” (Giuseppe Maria Spina) அவர்களால் திருத்தொண்டராக அருட்பொழிவு செய்விக்கப்பட்ட இவர், அதே 1812ம் வருடத்திலேயே அதே கர்தினால் பேராயராலேயே குருத்துவ அருட்பொழிவு செய்விக்கப்பட்டார். முறையான வயதாகாத காரணத்தால் இவருக்கு சிறப்பு ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. குருத்துவம் பெற்ற இவர், “மான்ட்டுவா” (Mantua) என்ற பங்கில் பங்குத்தந்தையாக நியமனம் பெற்று பணியாற்றினார்.

1826ம் ஆண்டு, “சியாவாரி’யின்” (Chiavari) தலைமை குருவாக நியமிக்கப்பட்டார். 1837ம் ஆண்டு வரை பதினோரு வருடங்கள் அதே பதவியிலிருந்தார். ஆண்களுக்கான “புனித அல்போன்சஸ் மறைப்பணியாளர்கள்” (The Missionaries of Saint Alphonsus) என்ற சபையை 1827ம் ஆண்டு நிறுவினார். அந்த சபை 1848ம் ஆண்டு வரை நீடித்தது. 1829ம் ஆண்டு, ஜனவரி மாதம், 12ம் நாளன்று, “தோட்ட அன்னையின் மகள்கள்” (Daughters of Our Lady of the Garden) என்ற பெண்களுக்கான சபையை நிறுவினார். ஏழைப் பெண்களுக்கு கல்வி கற்பிக்கவும் நோயாளிகளுக்கு சேவை செய்வதற்காகவும் இந்த சபை பணியாற்றுகிறது. இதன் சேவைகள், இன்றும் ஐரோப்பா, ஆசியா மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகள் (Europe, Asia and the United States of America) ஆகிய உலக நாடுகளில் தொடர்ந்து நடைபெறுகிறது. இவர் மரித்து பல வருடங்களின் பின்னர் 1882ம் ஆண்டு, ஜூன் மாதம், 7ம் நாளன்று, திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ (Pope Leo XIII) இச்சபைக்கு முறையாக அங்கீகாரமளித்தார்.

திருத்தந்தை பதினாறாம் கிரகோரி (Pope Gregory XVI) அவர்கள் இவரை “போப்பியோ” மறைமாவட்ட ஆயராக (Bishop of Bobbio) 1837ம் ஆண்டு, நியமித்தார்.

சுமார் ஒரு வருட காலம் நோய்வாய்ப்பட்டிருந்த இவர், ஜூன் 1846ம் ஆண்டு, ஜூன் மாதம், 7ம் நான்று, மரித்தார்.



† Saint of the Day †
(June 7)

✠ St. Antonio Maria Gianelli ✠

Bishop/ Founder:

Birth name: Antonio Maria Gianelli

Born: April 12, 1789
Cereta, Mantua, Duchy of Milan

Died: June 7, 1846 (Aged 57)
Piacenza, Emilia-Romagna, Duchy of Parma

Venerated in: Roman Catholic Church

Beatified: April 19, 1925
Pope Pius XI

Canonized: October 21, 1951
Pope Pius XII

Feast: June 7

Patronage: Bobbio, Val di Vara, Figlie di Nostra Signora del Giardino

Saint Antonio Maria Gianelli was an Italian Roman Catholic prelate who served as the Bishop of Bobbio from 1837 until his death. He was also the founder of the Figlie di Nostra Signora del Giardino and the Missionaries of Saint Alphonsus. Gianelli was dedicated to the educational needs of his people and catered to their spiritual and material needs as well; he was on hand to aid the ill and the poor and made evangelization a focus to his episcopal mission. He likewise preached missions and became known for his charisma and his eloquence.

Gianelli's beatification was celebrated in 1925 and he was later canonized as a saint in late 1951. Since 4 June 2000, he has been the patron saint for both Bobbio and Val di Vara.

Life:
Antonio Maria Gianelli was born on 12 April 1789 - on Easter Sunday - to Giacomo and Maria Gianelli; he had five brothers. His mother often taught people catechism and his father was known for his efforts in peace-making in their town. He grew up in a small village of farmers and he was an exceptional student - so much so that the owner of the farm he lived on - Nicoletta Rebizzo - paid for his studies for the priesthood.

He commenced those studies in November 1807 in Genoa where he began his studies in dogmatics and liturgical practice and earned his doctorate. He had been made a subdeacon in September 1811 and was granted the rather unusual privilege of being allowed to preach while still a subdeacon due to his exceptional eloquence being a well-noted fact. The Cardinal Archbishop of Genoa Giuseppe Maria Spina ordained him to the diaconate in mid-1812. He was ordained to the priesthood in 1812 (in Genoa at the church of Nostra Signora del Carmine) and had to receive special dispensation since he was not at the canonical age required for ordination. Gianelli celebrated his first Mass in Cerreta. He served as a parish priest in Mantua after he was ordained. Spina sent Gianelli in 1812 to teach at Carcare in Savona. In February 1813 he was made the vice-parish priest of the San Matteo church in Genoa and on 23 May 1814 joined the Congregation of the Suburban Missionaries of Genoa. From September 1815 until 1817 he served as a professor at the college of the Padri Scolopi in Carcare before becoming a professor of rhetoric in November 1816 in Genoa. He remained there until 1822 when he was granted another position that he would hold for a decade. His future students included the future Archbishop of Genoa Salvatore Magnasco and Venerable Giuseppe Frassinetti.

Gianelli was made the archpriest of the church of Saint John the Baptist in Chiavari on 21 June 1826 after Luigi Lambruschini appointed him to that position; he held that position until 1837. From November 1826 he taught in Chiavari teaching his studies theological subjects as well as Latin and Greek. He was the founder of the Missionaries of Saint Alphonsus in 1827 for men and that order lasted from that point to 1856 while the Oblates of Saint Alphonsus lasted from its founding in 1828 until 1848 when it had to be dissolved. He also founded the Figlie di Nostra Signora del Giardino on 12 January 1829. It was a teaching order for females that worked with the sick. The order received formal papal approval from Pope Leo XIII on 7 June 1882 which came a few decades after Gianelli's death.

Pope Gregory XVI appointed him as the Bishop of Bobbio in 1837 and he received his episcopal consecration after his appointment. He had been preaching a mission in February 1838 when he learned that the appointment had been made. He restored devotion to Saint Columbanus in his diocese and conducted two diocesan synods. He visited each parish in his diocese on a regular basis. Gianelli spent long periods in the confessional in order to accommodate the endless stream of people seeking absolution.

In April 1845 he started to show signs of tuberculosis that had not been diagnosed from the onset; he spent the next month in recuperation where he seemed to regain his strength for a time. He seemed to recover during this period but his illness returned in the spring of 1846 and his condition started to deteriorate at a rapid pace. He died on 7 June 1846 due to a serious fever combined with tuberculosis; he had been recuperating in Piacenza at the time. His order still continues its work in Europe and Asia and has also expanded to the United States of America. On 21 October 2001, a statue made out of white Carrara marble was dedicated to him.

புனித மரிய தெரேசியா டி சோபிரான் (St. Maria Theresia de Soubiran) June 7

இன்றைய புனிதர்
2020-06-07
புனித மரிய தெரேசியா டி சோபிரான் (St. Maria Theresia de Soubiran)
சபை நிறுவுனர்
பிறப்பு
1834
காஷ்டல்நாடரி(Castelnaudary)
இறப்பு
7 ஜூன் 1889
முக்திபேறுபட்டம்: 1946, திருத்தந்தை 12 ஆம் பயஸ்

இவர் தனது 21 ஆம் வயதிலிருந்து அன்னைமரியிடம் கற்பு என்னும் வார்த்தைப்பாட்டை அர்ப்பணித்து துறவற வாழ்வை வாழ்ந்தார். தன்னுடன் 14 இளம் பெண்களையும் சேர்த்து அனைவரும் ஒரே குழுமமாக வாழ்ந்து வந்தனர். பின்னர் இக்குழுவை நாளடைவில் பல இளம் பெண்கள் இனங்கண்டு கொண்டு, தங்களையும் அக்குழுவோடு இணைத்தார். இளம் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, மரிய தெரேசியா டி சோபிரான், தன் பிறந்த ஊரிலேயே ஒரு துறவற இல்லம் தொடங்கினார். இவ்வில்லத்தை இயேசு சபையை சார்ந்த அருட்தந்தை மரியா அக்சீலியாடிஸ் (Maria Auxiliatrice) என்பவர் உதவிசெய்து, ஆன்ம குருவாக பணியாற்றி வழிநடத்திவந்தார். இவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து ஜெபித்து, அன்னையின் அருளால் "மரியன்னையின் உதவியாளர்கள்"(Mariens von der immer währenden Hilfe) என்று தங்களின் சபைக்கு பெயர் சூட்டினர்.

இச்சபையினர் தேவையில் இருக்கும் மனிதர்களை இனங்கண்டு, ஏழைகளைத் தேடி சென்று உதவி செய்து வந்தனர். இவர்களின் பணி சிறக்கவே 1868 ஆம் ஆண்டு திருத்தந்தை 9 ஆம் பயஸ் அவர்களால், முறையான துறவற சபையாக அங்கீகரிக்கப்பட்டது. இதன்பின் தன் 34 ஆம் வயதில் அச்சபையின் முதல் சபைத்தலைவியாக மரிய தெரேசியா டி சோபிரான் அவர்கள் பொறுப்பேற்று வழிநடத்தினார். அதன்பின் பல அவதூறுகளுக்கும், துன்பங்களுக்கும் ஆளாக்கப்பட்டு, பல்வேறு துன்பங்களை அனுபவித்தார். இதனால் 1873 ஆம் ஆண்டு சபைத்தலைவி பதவியிலிருந்து தானே முன்வந்து விலகினார். அதன்பின் அச்சபையை விட்டே வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் அச்சபையிலிருந்து வெளியேறி "இயேசுவின் இறை இரக்கத்தின் கன்னியர்கள்"(Barmherzigen Sisters) என்ற சபையில் சேர்ந்து, தான் இறக்கும்வரை அங்கேயே தன் வாழ்நாட்களை கழித்தார்.


செபம்:
அன்பான தந்தையே! தன்னுடைய சிறுவயதிலேயே அன்னை மரியிடம் தன் வாழ்வை அர்ப்பணமாக்கிய மரியா தெரேசியாவைப்போல, நாங்களும் அன்னையின்மேல் அன்பு கொண்டு, தங்களை எந்நாளும் அர்ப்பணித்து வாழ உமதருளைத் தந்தருளும்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

ஆயர் சபைநிறுவுநர் அந்தோனியுஸ் கியானெல்லி Antonius Gianelli
பிறப்பு: 12 ஏப்ரல் 1789 செரிரோட்டோ Cerreto, இத்தாலி
இறப்பு: 7 ஜூன் 1846, பியாசென்சா Piacenza, இத்தாலி


கோண்டாட் நகர் துறவி யூஸ்டூஸ் Justus von Condat OSB
பிறப்பு: 5 அல்லது 6 ஆம் நூற்றாண்டு
இறப்பு: 6 ஆம் நூற்றாண்டு, கோண்டாட் Condat, பிரான்சு


நியூமுன்ஸ்டர் நகர் துறவி ரூபர்ட் Robert von Newminster
பிறப்பு: 1105, கார்வன் Garven

06 June 2020

அருளாளர் மரிய கர்லோவ்ஸ்கா June 6

ஜூன் 06

அருளாளர் மரிய கர்லோவ்ஸ்கா (1865-1935)
இவர் போலந்து நாட்டில் பிறந்தவர். இவருடைய குடும்பத்தில் இவர் கடைசிக் குழந்தை; இவரோடு பிறந்தவர்கள் மொத்தம் 10 பேர்.

சிறுவயதிலேயே தன்னுடைய பெற்றோரை இழந்த இவர், தன்னுடைய உறவினரின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். சில காலத்திற்குப் பெர்லினில் துணிகளை நெய்து வந்த தன்னுடைய சகோதரியோடு சேர்ந்து பணிசெய்த இவர், அங்கிருந்து தன்னுடைய சொந்த நாட்டுக்குத் திரும்பி வந்தார்.

அப்பொழுது இவர் பிராங்கே என்றோர் இளம்பெண்ணைச் சந்தித்தார். அவரிடம் இவர் பேசுகின்றபொழுது, அவர் குடும்பத்தால் கைவிடப்பட்டவர் என்பது தெரியவந்தது. உடனே இவர் குடும்பத்தால் கைவிடப்பட்டோர், ஆதரவற்றோர், விலைமகளிர் ஆகியோரின் மறுவாழ்விற்காக ஒரு சபையைத் தொடங்குவது நல்லது என்று முடிவு செய்து, அதன்படி Sisters of Divine Shepherd of Divine Providence என்ற சபையைக் தொடங்கினார்.

இதன்பிறகு இவர் கைவிடப்பட்டோர், ஆதரவற்றோர், விலைமகளிர் ஆகியோரின் மறுவாழ்வுக்காகக் கடுமையாக உழைத்தார். இயேசுவின் தூய்மைமிகு இதயத்தின்மீது மிகுந்த பற்று கொண்ட இவர், அவரிடம் நம்பிக்கையோடு மன்றாடி வந்தார்.

இப்படி இறைவன்மீது மிகுந்த பற்று கொண்டு, இறைப்பணியையும் மக்கள் பணியையும் செய்துவந்த இவர், 1935 ஆம் ஆண்டு தன்னுடைய அறுபதாவது வயதில் இறையடி சேர்ந்தார்.

இவருக்கு 1997ஆம் ஆண்டு ஜூன் திங்கள் ஆறாம் நாள், புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களால் அருளாளர் பட்டம் கொடுக்கப்பட்டது

புனித நார்பெர்ட் June 6

இன்றைய புனிதர் :
(06-06-2020)

 புனித நார்பெர்ட் 
( St. Norbert of Xanten )
கத்தோலிக்க திருச்சபை ஆயர் :

பிறப்பு : c. 1080
புனித ரோமப் பேரரசு (Holy Roman Empire)

இறப்பு : ஜூன் 6, 1134
ஜெர்மனி

புனிதர் பட்டம் : 1582
திருத்தந்தை பதின்மூன்றாம் கிரகோரி

நினைவுத் திருநாள் : ஜூன் 6

அரச குடும்பத்தில் பிறந்த இவர் பேரரசின் இல்லத்தில் வளர்ந்தார். உலக இன்ப சுகங்களை ஆர்வத்துடன் தேடி வந்தார்.
உலக நோக்குடன் குருவாக விரும்பினார்.
உதவி தியாக்கோன் பட்டம் பெற்ற பின்னும் மேல் பட்டங்களை பெற்றால் தம் விருப்பம் போல் நடக்க முடியாது என்று அஞ்சி அவற்றைப் பெறவில்லை.
ஒரு நாள் இவர் குதிரை சவாரி செய்கையில், திடீரென குதிரையை மின்னல் தாக்கியது. குதிரை பயந்து ஓடவே, இவர் கிழே விழுந்தார். ஓர் அதிசய குரல் இவரை தேவ சேவைக்கு அழைத்தது. சுய நிலைக்கு வந்ததும் தன் தவறுகளுக்காக வருந்தனார். அரண்மனையில் வாழ்வதை விட்டு விட்டு தனி வாழ்வு, தவ வாழ்வு வாழ விருப்பினார்.
ஒரு மடத்தில் ஞான ஒடுக்கம் செய்தபோது, அது புண்ணிய வாழ்வில் இவரை உறுதிப்படுத்தியது. இரண்டு ஆண்டுகளாக தம்மைத் தயாரித்து குருப்பட்டம் பெற்று தமது உடமைகள் அனைத்தையும் ஏழைகளுக்குக் கொடுத்து விட்டு, ஊர் ஊராய்ப் போய் மக்களுக்குப் பிரசங்கித்தார்.
பிரமோந்திரே என்னும் இடத்திற்குப் போய் ஒரு சந்நியாச மடத்தைத் தொடங்கினார். பேராயர் பதவியை ஏ ற்கும்படி இவர் வற்புறுத்தப்பட்டார். இந்த உயர்ந்த பதவியிலும் தவவாழ்வு வாழ்ந்து, ஆர்வத்துடன் அயராது உழைத்து மக்களை சீர்திருந்தினார்.
சிலர் இவரை எதிர்த்தார்கள். எதிர்ப் பாப்புவால் ஏற்பட்ட திருச்சபையின் பிளவு, ஒழுங்கீனங்களைச் சரிபடுத்தினார். திவ்விய நற்கருணை மீது இவருக்கு மிகுந்த பக்தி உண்டு. திவ்விய நற்கருணையில் இயேசு உண்மையாகவே இருக்கிறார். கடவுளுக்குரிய ஆராதனை திவ்விய நற்கருணைக்கு செலுத்தப்பட வேண்டும் என்னும் திருசபையின் போதனையை விரோதிகள் எதிர்த்தார்கள். இவர் அவர்களை வன்மையாகக் கண்டித்தார். தனது 53ம் வயதில் இறந்தார்.
சிந்தனை :
ஒரு புதுமை செய்து கடவுள் இவரை தம் சேவைக்கு அழைத்தார். இவ்விதம் நடக்கும் என்று எல்லோரும் எதிப்பார்க்க முடியாது. இறைவனது குரலுக்கு உடனே கீழ்ப்படிவோம்.

செபம் :
ஆண்டவரே, நீர் உமது சேவைக்கு அழைக்கும் இளைஞர்களுக்கு திட மனதைக் கொடுத்தருளும். 
ஆமென். 

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்..


Saint of the Day : (06-06-2020)

St. Norbert

He was born at Xanten in the left bank of Rhineland near Wessel in about the year 1080. His father was Heribert, Count of Gennep and mother Hedwig of Guise. Norbert was ordained a sub-deacon and appointed to the Cannonry at Xanten but there also he lived a life of pleasure. He was summoned to the court of Henry-V, Holy Roman Emperor and was given the charge of the Emperor’s Almoner (a church officer in charge of distributing charity). He avoided ordination to the priesthood to continue his life of pleasure. But he got a change of mind when he was involved in a dangerous cart-riding accident from which he escaped miraculously. He then resigned his job in the Emperor’s Court and came back to Xanten and lived a life of prayer and penance. He founded the Abbey of Furstenberg in the year 1115 by using a portion of his property. He was then ordained a priest and sold all his properties and distributed the proceeds to the poor. He became a preacher with the permission of the Pope Gelasius-II and preached the Gospel throughout northern France. In the Council of Reims (in 1119) Pope Calixtus-II asked Norbert to found a religious order in the Diocese of Laon in France. He founded the Order of Canons Regular of Premontre and the Order was approved by the pope Honorius-II in 1125. He was appointed arch-bishop of Magdeburg in 1126. He also became the advisor of Lothair-II, the Holy Roman Emperor and persuaded the Emperor to send army to Rome in 1133 to safeguard and restore Innocent-II to the Papacy against the anti-pope Anacletus-II. He died on June 6, 1134.

St. Norbert was canonized by pope Gregory-XIII in the year 1582.

---JDH---Jesus the Divine Healer---


† இன்றைய புனிதர் †
(ஜூன் 6)

✠ புனிதர் நோர்பர்ட் ✠
(St. Norbert of Xanten)

மக்டேபர்க் பேராயர்/ நிறுவனர்:
(Archbishop of Magdeburg and Founder)

பிறப்பு: கி.பி. 1080
கென்னபெரிஸ், கொலோன் மறைமாவட்டம், தூய ரோம பேரரசு
(Genneperhuis, Diocese of Cologne, Holy Roman Empire)

இறப்பு: ஜூன் 6, 1134
மேக்டிபர்க், மேக்டிபர்க் உயர்மறைமாவட்டம் (தற்போதைய சக்ஸனி-அன்ஹல்ட், ஜெர்மனி)
(Magdeburg, Archbishopric of Magdeburg (now Saxony-Anhalt, Germany)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

புனிதர் பட்டம்: கி.பி. 1582
திருத்தந்தை பதின்மூன்றாம் கிரகோரி
(Pope Gregory XIII)

நினைவுத் திருநாள்: ஜூன் 6

பாதுகாவல்:
பாதுகாப்பான பிரசவம், “மேக்டிபர்க்” (Magdeburg)

புனிதர் நோர்பர்ட், ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஒரு பேராயரும், “ப்ரீமொன்ஸ்ட்ரேடேன்சியன்” (Premonstratensian) அல்லது நோர்பர்ட்டைன்” (Norbertines) என்று அழைக்கப்படும் சபையை நிறுவியவரும் ஆவார்.

ஜெர்மனியின் “சென்டென்” (Xanten) எனுமிடத்தில், அரச குடும்பத்தில் பிறந்த இவர், பேரரசின் இல்லத்தில் வளர்ந்தார். இவரது தந்தை, தூய ரோம பேரரசின் பிரபுவான “ஹெரிபர்ட்” (Heribert) ஆவார். இவரது தாயாரின் பெயர் “ஹெட்விக்” (Hedwig of Guise) ஆகும். உலக இன்ப சுகங்கள் இவரை தேடி வந்தன.

ஒருமுறை இவர், துணை திருத்தொண்டராக அருட்பொழிவு பெறுவதற்காக, தமது குடும்பத்தின் செல்வாக்கின் மூலமாக பங்கு தேவாலயமான புனிதர் விக்டர் தேவாலயத்திலிருந்து நிதி மானியம் கிடைக்கப்பெற்றார். தேவாலய அலுவலகத்தில் வெறுமனே உட்கார்ந்து மந்திரிப்பது மட்டுமே இவரது பணியாகும். அத்துடன், கொலோன் நகர பேரரசர் ஐந்தாம் ஹென்றி’க்கு (Emperor Henry V in Cologne) மத ஆலோசகராகவும் பணி நியமனம் பெற்றிருந்தார். ஆகவே இவருக்கு இருபுறமுமிருந்து வருவாய் தாராளமாக வந்தது.

மத குருவாக அருட்பொழிவு பெறுவதை இவர் விரும்பவில்லை. கி.பி. 1113ம் ஆண்டு, ஒருமுறை “காம்ப்ராய் ஆயராக” (Bishop of Cambrai) நியமனம் கிட்டியது. அதையும் அவர் மறுத்துவிட்டார். காரணம், பணிச்சுமையே ஆகும்.

கி.பி. 1115ம் ஆண்டு, இளவேனிற்காலத்தில் “முன்ஸ்டர்லேண்ட்” (Münsterland) என்னுமிடத்தின் மேற்கத்திய பகுதியிலுள்ள “வ்ரடென்” (Vreden) எனும் இடத்திற்கு ஒருமுறை இவர் குதிரை சவாரி சென்றார். திடீரென தோன்றிய இடி மின்னல் குதிரையின் காலை தாக்கவே, மிரண்டு போன குதிரை இவரை கீழே தள்ளிவிட்டு ஓடிச் சென்றது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சுய நினைவின்றி கிடந்தார் நோர்பர்ட்.

கிட்டத்தட்ட உயிருக்கு ஆபத்தான இந்த விபத்துக்குப் பிறகு, இவரது கடவுள் பக்தியானது சிறிதே ஆழமானது. தமது பணி நியமனங்களை கைவிட்ட இவர், தவ வாழ்வு வாழ்வதற்காக “சன்டேன்” (Xanten) நகருக்கு திரும்பிச் சென்றார். “கொலோன்” (Cologne) நகருக்கு அருகேயுள்ள “புனித சிகேபெர்க்” (St. Sigeberg) மடத்தின் மடாதிபதியான “கோனோ” (Cono) என்பவரின் வழிகாட்டுதலின்படி வாழ ஆரம்பித்தார்.

1115ம் ஆண்டு, தமது ஆன்மீக வழிகாட்டியான கோனோ’வுக்கு நன்றி தெரிவிக்குமுகமாக தமது சொத்தின் ஒரு பகுதியை செலவிட்டு, “ஃபர்ஸ்டென்பெர்க்” (Abbey of Fürstenberg) துறவு மடத்தை நிறுவி கோனா’வுக்கும் அவரை பின்பற்றும் அவரது பெனடிக்டைன் துறவியர்க்கும் அளித்தார். நோர்பர்ட் தமது முப்பத்தைந்து வயதில் குருத்துவ அருட்பொழிவு பெற்றார். நோர்பர்ட் நற்கருணை ஆண்டவர் மற்றும் இறைவனின் அதி தூய அன்னையான மரியாளின் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தார். அவர் ஏற்றுக்கொண்ட துறவறத்தின் கடுமை காரணமாக அவரது முதல் மூன்று சீடர்கள் மரித்துப் போயினர். இதனால் மிகவும் துயருற்ற நோர்பர்ட், தமது சொத்துக்கள் யாவையும் விற்று ஏழைகளுக்கு செலவிட்டார்.

நோர்பர்ட், திருத்தந்தை “இரண்டாம் கெலசியஸ்” (Pope Gelasius II) அவர்களை காணச் சென்றார். திருத்தந்தை அவரை குடிமக்களின் பிரசங்கியாகும்படி அறிவுறுத்தினார். நோர்பர்ட், தற்போதைய மேற்கு ஜெர்மனி (Western Germany), பெல்ஜியம் (Belgium), நெதர்லாந்து (The Netherlands) மற்றும் வட ஃபிரான்ஸ் (Northern France) ஆகிய நாடுகளில் பிரசங்கித்தார். இவரது பிரசங்கங்களின்போது, எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்தியதாகவும் கூறப்படுகின்றது.

நோர்பர்ட், மத்திய ஜெர்மனியிலுள்ள “மக்டேபர்க்” (Magdeburg) உயர்மறைமாவட்டத்தின் பேராயராக ஆர்வமில்லாமலே பொறுப்பேற்றார். காரணம், அப்போதைய கால கட்டத்தில், அங்கே கிறிஸ்தவம் மற்றும் பாகனிசம் இரண்டுமே சரிசமமாக இருந்தன. இருப்பினும் நோர்பர்ட் வைராக்கியமாகவும் தைரியமாகவும் 1134ம் ஆண்டு, ஜூன் மாதம், 6ம் நாளன்று, தாம் மரிக்கும்வரை திருச்சபைக்கு தமது சேவையை தொடர்ந்து ஆற்றினார்.

05 June 2020

புனித சஞ்சோ June 5

ஜூன் 05

புனித சஞ்சோ (-851)
இவர் பிரான்ஸ் நாட்டில் உள்ள அல்பி என்ற இடத்தில் பிறந்தவர்.

சிறுவயதிலேயே இவரை மூர் என்ற இனத்தவர் கைதுசெய்து,  ஸ்பெயின் நாட்டிலுள்ள கோர்தோபா என்ற இடத்தில் அடிமையாக  விற்றனர். அப்பொழுது இவரை கோர்தோபாவில் மன்னராக இருந்தவர் விலைக்கு வாங்கித் தன்னுடைய அரண்மனையில் பணியாளராக வைத்துக் கொண்டார்.

அரண்மனையில் பணியாளராகப் பணியாற்றிய தொடங்கிய இவர் தனக்குக் கொடுக்கப்பட்ட பணிகளை மிகவும் பொறுப்புடனும் உண்மையுடனும் செய்து வந்தார். இதனால் இவரை மன்னருக்கு மிகவும் பிடித்துப்போனது.

அங்கேயேதான் இவர் தன்னுடைய கல்வியை கற்றுக் கொண்டு, கிறிஸ்துவைத் தன்னுடைய தலைவராக ஏற்றுக்கொண்டனர்.

இந்த நேரத்தில் மூர் இனத்தவர் இவரை கிறிஸ்துவை மறுதலித்துவிட்டுத் தாங்கள் வழிபட்டு வந்த கடவுளை ஏற்றுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தினர். இவர் அதற்கு மறுத்ததால், அவர்கள் இவருடைய தலையை வெட்டிக் கொன்று போட்டார்கள். இவ்வாறு இவர் ஆண்டவர் இயேசுவுக்குச் சான்று பகர்ந்தார்.