ஏப்ரல் 19
புனித எம்மா (-1038)
இவர் பதினொன்றாம் நூற்றாண்டில், தற்போதைய பரேமன் என்ற இடத்தில் இருந்த ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தார்.
இளம்வயதில் கடுஞ்சினம் கொள்ளக்கூடிய வராக இருந்தார் இவர்.
இவர் லியூட்ஜர் என்பவருக்கு மணம் முடித்துக் கொடுக்கப்பட்டார். இவர்கள் இருவருக்கும் இறைவன் ஓர் ஆண்குழந்தையைத் தந்தார்.
இப்படி வாழ்க்கை நகர்கையில், இரஷ்யாவிற்குச் சென்ற இவருடைய கணவர் இறந்து போனார். இது இவருடைய வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
இதனால் முன்கோபியாக இருந்த இவர், அமைதியின் வடிவாய் மாறினார்; தன்னிடம் இருந்ததை ஏழைகளுக்கும் பல கோயில்களுக்கும் வாரி வாரி வழங்கத் தொடங்கினார்.
இறுதியாக இவருடைய மகனை இறைப்பணிக்கு அர்ப்பணித்துவிட்டு, நிம்மதியாக இறையடி சேர்ந்தார்.
பல ஆண்டுகளுக்குப் பின் இவருடைய உடல் தோண்டி எடுக்கப்பட்டபோது, இவரது உடல் முழுவதும் சிதைந்து போயிருக்க, கொடுத்துக் கொடுத்துச் சிவந்த இவரது கைகள் மட்டும் அழியாமல் இருந்தன.
சிந்தனை:
கொடுப்பதில் இன்பம், பெறுவதில் இல்லை.
பிறருக்குக் கொடுத்து வாழும்போது, கொடுத்ததைவிட மிகுதியாக நாம் பெறுகிறோம்.
சினம் எழுகிறபோது, அதன் விளைவுகளை எண்ணிப்பார்.
- மரிய அந்தோனிராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக