புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

25 September 2020

இன்றைய புனிதர் : (25-09-2020)ரெடோநெழ் நகர தூய செர்ஜியுஸ்

இன்றைய புனிதர் : 
(25-09-2020)

ரெடோநெழ் நகர தூய செர்ஜியுஸ் 
இன்று நாம் நினைவுகூரும் செர்ஜியுஸ், 1315 ஆம் ஆண்டு, ரஷ்யாவில் உள்ள ரோஸ்டவ் வெளிகி என்ற இடத்தில் இருந்த ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தார். நாட்டில் அவ்வப்போது ஏற்பட்ட உள்நாட்டுப் போர்களின் காரணமாக இவரது குடும்பம் அங்கு இங்கு என்று அலைகழிக்கப்பட்டது, அதனாலேயே குடும்பம் வறுமையில் வாடத் தொடங்கியது. கடைசியில் இவரது குடும்பம் ரெடோநெழ் என்ற இடத்தில் குடியேறி அங்கேயே வாழத் தொடங்கியது.

இப்படி செர்ஜியுசின் குடும்பம் அங்கு இங்கு என்று அலைகழிக்கப்பட்டதால், அவரால் சரியான கல்வியறிவு பெறமுடியவில்லை. இதற்கிடையில் செர்ஜியுசின் பெற்றோர் திடிரென இறந்துபோனார்கள். இதனால் அவரும் அவருடைய சகோதரரும் மாஸ்கோவிற்கு அருகில் இருந்த ஒரு காட்டிற்குச் சென்று, அங்கு துறவிகளைப் போன்று வாழத் தொடங்கினார்கள். சிறுதுகாலம் செர்ஜியசோடு இருந்த அவருடைய சகோதரர், அதன்பிறகு மாஸ்கோவில் இருந்த வேறொரு துறவுமடத்திற்குச் சென்று, அங்கு துறவியாக வாழத் தொடங்கினார்.

இந்நிலையில் செர்ஜியுஸ் காட்டில் தனியாக இருந்துகொண்டு, ஜெப தவ வாழ்க்கை வாழ்வதைக் கேள்விப்பட்ட பல இளைஞர்கள் அவரிடத்தில் வந்து, தங்களை அவருடைய சீடர்களாக ஏற்றுக்கொள்ளக் கேட்டார்கள். அவரும் அதற்கு முழு சம்மதம் தெரிவித்ததால், அவர்கள் அவரோடு இருந்துகொண்டு ஜெப தவ வாழ்க்கை வாழ்ந்துவந்தார்கள்.
காட்டில் ஜெர்சியுசும் அவரோடு சேர்ந்து பல இளைஞர்களும் ஜெப தவ வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்ட பொதுமக்கள், அப்படிப்பட்டவர்கள் வாழ்கின்ற புண்ணிய மண்ணில் நாமும் வாழ்ந்தால் நமக்கு நிறைய ஆசிர்வாதம் கிடைக்கும் என்று நம்பி, அவர்கள் துறவுமடம் இருந்த இடத்தில் வீடுகளைக் கட்டி அங்கு வாழத் தொடங்கினார்கள். அந்த இடத்திற்கு SERGIEV POSAD என்றும் பெயரிட்டு மகிழ்ந்தார்கள். 

இப்படியே நாட்கள் போய்க்கொண்டிருக்க செர்ஜியுசைப் பற்றிய செய்தி, மாஸ்கோவில் இருந்த மன்னருக்குத் தெரியவந்தது. அவர் செர்ஜியுசை வந்து சந்தித்து, தனக்குப் பின் தன்னுடைய பதவியை ஏற்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், செர்ஜியுசோ தனக்கு எந்தவொரு பதவியும் வேண்டாம் என்று மறுப்புத் தெரிவித்து விட்டார். அதேநேரத்தில் அவருக்கு அவ்வப்போது ஆலோசனைகள் சொல்லிவந்தார்.

ஒருசமயம் மாஸ்கோவின் மன்னர் டர்டர் என்பவரோடு போர்தொடுக்கச் சென்றபோது, செர்ஜியுஸ் அவரிடம், “மன்னா! நீ எதற்கும் அஞ்சாதே! ஆண்டவராகிய கடவுள் உன்னோடு இருக்கின்றார், அவர் உன்னை முன்னின்று ஆசிர்வதித்து வழிநடத்துகிறார்” என்று சொல்லி அனுப்பிவைத்தார். போரில் மாஸ்கோவின் மன்னருக்கே வெற்றி கிடைத்தது. இதனால் அவர் செர்ஜியுசை மிக உயர்வாக மதிக்கத் தொடங்கினார், அவருக்கு வேண்டியமட்டும் ஏதாவது செய்ய நினைத்தார். ஆனால் செர்ஜியுசோ தனக்கு எதுவும் வேண்டாம் என்று மிக எளிமையாக வாழ்ந்து வந்தார். செர்ஜியுஸ் தன்னுடைய வாழ்வின் பெரும்பகுதியை ஜெபத்திலேதான் செலவழித்தார். அவருடைய ஜெபத்திற்கு வல்லமை இருக்கின்றது என்ற நம்பி, நிறையப் பேர் அவருடைய ஜெப உதவியை நாடிவந்தர்கள். அவரும் அவர்களுக்காக ஜெபித்தார். இப்படி ஜெப மனிதராகவே வாழ்ந்துவந்த ஜெர்ஜியுஸ் 1392 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1452 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

Saint of the Day : (25-09-2020)

Saint Sergius of Moscow

Born to the nobility, his family moved to Radonezh to escape attack against the city of Rostov, losing their fortune and becoming peasants in the process. Following the deaths of his parents, Sergius and his brother Stephen became hermits at Makovka in 1335, then each left separately to become a monk. As Sergius's reputation for holiness spread, he attracted so many students that he founded the Holy Trinity monastery for them; following his ordination at Pereyaslav Zalesky, he served as its first abbot. His brother joined the monastery, but when he opposed Sergius's strict rule, Sergius left the community to live again as a hermit. However, the monastery began to decline, causing the metropolitan of Moscow to order Sergius to return as abbot. Advisor to the Prince of Moscow, he encourged the campaign that ended with the Battle of Kulikovo in 1380 which ended the Mongol domination of Russia. In the Russia that followed he founded forty monasteries. Late in life he resigned his position and retired to live his last few months as a prayerful monk. He is venerated as the foremost saint of Russia.

Born : 
c.1314 near Rostov, Yaroslavl Oblast, Russia as Bartholomew of Radonezh.

Died : 
25 September 1392 at the Trinity Lavra of Saint Sergius of natural causes

Canonized: 
1449 by Pope Nicholas V

---JDH---Jesus the Divine Healer---

No comments:

Post a Comment