புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

25 September 2020

புனித ஜியோன்னா ஆல்பர்ட் St. Albert of Geona. September 25

இன்றைய புனிதர்
2020-09-25
புனித ஜியோன்னா ஆல்பர்ட் St. Albert of Geona
பிறப்பு
1149,
பார்மா (Parma), இத்தாலி
இறப்பு
1215,
பாலஸ்தீனா
பாதுகாவல்: கார்மேல் சபை

ஆல்பர்ட் ஓர் உன்னத குடும்பத்தில் பிறந்தார். திருச்சிலுவை(Holy Cross) என்ற சபையில் குருவானார். 1184 ஆம் ஆண்டில் இத்தாலி நாட்டிலுள்ள பிப்பியோ (Bibbio) என்ற மறைமாவட்டத்திற்கு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1205 ஆம் ஆண்டு எருசலேமில் உள்ள கிறிஸ்துவ மக்களின் பொறுப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கு அம்மக்களின் நலன்களுக்காக அயராது உழைத்தார். அந்நாட்டில் கிறிஸ்துவ மக்கள் அரசரின் கீழ் அடிமைகளாக அமர்த்தப்பட்டிருந்தனர். 1187 ஆம் ஆண்டு பேரரசரிடமிருந்து அம்மக்களை விடுவித்து, விடுதலை வாழ்வை வழங்கினார். அன்றிலிருந்து எருசலேம் கிறிஸ்துவர்கள் அமைதியாக வாழ்ந்தனர். சில ஆண்டுகளில் மீண்டும் அம்மக்கள் முஸ்லீம்களின் கையில் அகப்பட்டனர். ஆல்பர்ட் அம்மக்களை மீண்டும் முஸ்லீம்களிடமிருந்து விடுவித்து சுதந்திரத்துடன் அமைதியாக வாழ வழிவகுத்தார்.

பேரரசர் பிரடெரிக் பர்ப்ரோச்சா (Frederick Babbarossa) என்பவர் திருச்சபையில் கலகம் ஏற்படுத்தினார். அப்போதிலிருந்து ஆல்பர்ட், அரசனிடம் தொடர்பு கொண்டார். பேரரசருக்கும் திருத்தந்தை 2 ஆம் கிளமெண்ட்டிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் இவர்கள் இருவரின் நடுவிலும் சமாதானப் புறாவாக ஆல்பர்ட் இருந்தார். பேரரசரை அன்பான, அமைதியான மனிதனாக மாற்றினார்.

ஆல்பர்ட் பிறகு தன் இருப்பிடத்தை அக்கோ Akko என்ற இடத்திற்கு மாற்றினார். அங்கு கார்மேல் என்றழைக்கப்பட்ட மலை ஒன்று இருந்தது. அம்மலையில் துறவற மடங்களைக் கட்டினார். துறவிகள் தனித்தனி குகைகளிலும், செல்களிலும் தங்கி செப வாழ்வில் ஈடுபட ஏற்பாடு செய்தார். 1209 ஆம் ஆண்டு துறவியர்கள் கடைபிடிக்க ஒழுங்குகளை எழுதினார்.

அவ்விதங்களின்படி, துறவிகளை வாழ ஊக்கமூட்டினார். கடுமையான விரதமிருந்து செபிக்க தூண்டினார். இறைச்சி உண்பதை குறைத்தார். அமைதியை கடைபிடித்து வாழ வற்புறுத்தினார். மிக மிகக் கடுமையான ஒழுங்குகளை கடைபிடிக்க துறவிகளை தூண்டினார்.

1254 ஆம் ஆண்டு திருத்தந்தை 4 ஆம் இன்னொசெண்ட் அவர்கள், இவர் எழுதிய ஒழுங்குகளை, கார்மேல் சபைத்துறவிகள் கடைபிடித்து வாழ, அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்தார். பின்னர் ஆல்பர்ட் பாலஸ்தீனாவில் நடைபெற்ற லேடெரன் என்றழைக்கப்பட்ட பொது சங்கக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டார். அப்போது அங்கிருந்தவர்களில் சிலர், இவருக்கெதிராக சதித்திட்டங்களை தீட்டினர். அவர்களின் சதித்திட்டத்தால் அக்கூட்டத்திலேயே கொலை செய்யப்பட்டார். உயிருக்கு போராடியபோது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து வெளியேறியபின் புனித திருச்சிலுவை திருநாளன்று இறைவனடி சேர்ந்தார்.


செபம்:
விடுதலை அளிப்பவரே எம் கடவுளே! இன்றும் பாலஸ்தீனா நாட்டில், கிறிஸ்தவர்கள் துன்பப்பட்டுக் கொண்டிருப்பதை நீர் அறிவீர். அம்மக்களின் மனங்களை அறிந்து, நீர்தாமே விடுதலை அளித்து, அமைதியான வழியில் வாழ்க்கை நடத்த, உமது அருளையும், ஆசீர்வாதங்களையும் நிறைவாக அம்மக்களுக்கு தந்து வழிநடத்தும்படியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

குசான்ஸ் நகர் எர்மென்ஃப்ரீட் Ermenfrid von Cusance
பிறப்பு: 600
இறப்பு: 25 செப்டம்பர் 670, குசான்ஸ், பிரான்சு


அமீனஸ் ஆயர் & மறைசாட்சி ஃபிர்மீனுஸ் Firminus von Amiens
பிறப்பு: 3 அல்லது 6 ஆம் நூற்றாண்டு பாம்ப்லோனா Pamplora, ஸ்பெயின்
இறப்பு: 3 அல்லது 6 ஆம் நூற்றாண்டு அமீனஸ் Amiens, பிரான்ஸ்
பாதுகாவல்: அமீனஸ் மற்றும் பாம்ப்லோனா நகர், குழந்தைகள், காய்ச்சல், வலிப்பு, மூட்டு நோயிலிருந்து


ஃப்ளு நகர் நிக்கோலஸ் Nikolaus von Flüe
பிறப்பு: 1417, சாக்சல்ன், சுவிட்சர்லாந்து
இறப்பு: 21 மார்ச் 1487, சாக்சல்ன் Sachseln
பாதுகாவல்: சுவிட்சர்லாந்து, சாக்சல்ன்


செர்கியஸ் ராடோனெஸ் Sergius Radonez
குரு & சபைநிறுவுனர்
பிறப்பு: 1314, ராடோனெஸ், ரஷ்யா
இறப்பு: 25 செப்டம்பர் 1392, மாஸ்கோ, ரஷ்யா

No comments:

Post a Comment