புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

15 March 2020

பயஸ் கெல்லர் Pius Keller மார்ச்15

இன்றைய புனிதர்
2020-03-15
பயஸ் கெல்லர் Pius Keller
பிறப்பு
25 செப்டம்பர் 1825,
பாலிங்ஹவ்சன் Nallinghausen, பவேரியா
இறப்பு
15 மார்ச் 1904,
முனர்ஸ்டாட் Münnerstadt, பவேரியா

இவர் ஓர் விவசாயியின் குடும்பத்தில் பிறந்தார். இவரின் பெற்றோர் இவருக்கு யோஹானஸ் Johannes என்று பெயரிட்டனர். இவர் குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட சில மாதங்களிலேயே 1849 ஆம் ஆண்டு அகஸ்டின் துறவற இல்லத்திற்குச் சென்றார். இவர் அவ்வில்லத்திற்குச் சென்ற ஒரு சில ஆண்டுகளில் அவ்வில்லத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தனது 53 ஆம் வயதில் அச்சபையின் மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு இவர் மீண்டும் முனர்ஷ்டட் திரும்பினார்.

இவர் அங்கு எண்ணிலடங்கா துறவற இல்லங்களைக் கட்டினார். அத்துடன் குருமடங்களையும் நிறுவினார். இவர் ஒப்புரவு அருட்சாதனம் கேட்கும் பணியை எப்போதும் தவறாமல் செய்தார். இவர் தன் வாழ்வின் எல்லாச் சூழலிலும் மிகக் கடுந்தவ வாழ்வை வாழ்ந்தார். இவர் புனித அகஸ்டின் துறவற இல்லத்தின் வாழும் புனிதர் என்றழைக்கப்பட்டார். 1934 ல் ஆண்டு முத்திபேறுபட்டம் அளிப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டது. 1960 ஆம் ஆண்டு தயாரிப்பு பணிகள் அனைத்தும் முடிந்ததும் எழுத்தில் வடிவமைத்து அறிக்கைகள் அனைத்தும் உரோமைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவரின் உடல் அகஸ்டின் துறவற இல்லத்தில் அமைந்துள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.


செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்லவரே! பயஸ் கெல்லரை நீர் உம் மகனாகத் தேர்ந்தெடுத்தீர். உம் பணியை பரப்ப ஆசீர் வழங்கினீர். அவரின் வழியாக துறவற மடங்களை கட்டி எழுப்பினீர். உம் அழகிய பணி இம்மண்ணில் பரவ அவரை உமது கருவியாக பயன்படுத்தினீர். அவரின் வழியாக அச்சபையை உம் சிறகுகளின் நிழலில் வைத்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

குரு பிளாசிடஸ் ரிக்கார்டி Placidus Riccardi
பிறப்பு : 24 ஜூன் 1844, ட்ரேவி Trevi, இத்தாலி
இறப்பு : 15 மார்ச் 1915, உரோம், இத்தாலி


திருத்தந்தை சக்கரியாஸ் Zacharias
பிறப்பு : 7 ஆம் நூற்றாண்டு, இத்தாலி
இறப்பு : 15 மார்ச் 752, உரோம், இத்தாலி

தூய லூயிஸ் தே மரிலாக் (மார்ச் 15)

இன்றைய புனிதர் : 
(15-03-2020) 

தூய லூயிஸ் தே மரிலாக் (மார்ச் 15)
“சமூகத்தில் விளிம்பு நிலையிலிருப்பவர்களுக்கு சேவை புரிவதில் தீவிரம் காட்டுங்கள்; அவர்கள்மீது அன்பு மழை பொழியுங்கள்; அவர்களுக்குரிய மதிப்புக் கொடுங்கள்; கிறிஸ்துவுக்கு நீங்கள் காட்டும் மரியாதைப் போல் இவர்களுக்கும் காட்டுங்கள்” - தூய லூயிஸ் தே மரிலாக்

வாழ்க்கை வரலாறு

லூயிஸ் தே மரிலாக், 1591 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் திங்கள் 12 ஆம் நாள், பாரிஸ் நகரிலிருந்த ஒரு தளபதிக்கு மகளாகப் பிறந்தார். இவர் பிறந்த உடனே இவருடைய தாயார் இறந்துபோக, இவருடைய தந்தை வேறொரு பெண்ணை மணந்தார். இதனால் லூயிஸ் தே மரிலாக் சிற்றன்னையின் கண்காணிப்பில் வளரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சிற்றன்னை இவரைக் கடுமையாகச் சித்ரவதை செய்தார். இதையெல்லாம் பார்த்த இவருடைய தந்தை, இவரை பார்சி நகரில் இருந்த சாமிநாதர் துறவுமடத்திற்கு அனுப்பி வைத்து கல்வி கற்க வைத்தார். லூயிஸ் தே மரிலாக்கும் அங்கு சிறந்த முறையில் கல்வி கற்றுவந்தார்.

நாட்கள் செல்லச் செல்ல லூயிஸ் தே மரிலாக்குக்கு தானும் துறவியாக மாறவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. எனவே, அவர் கிளாரிஸ்ட் சபை தலைமை அருட்சகோதரியிடம் சென்று, தன்னை அவர்களுடைய சபையில் சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், அந்த தலைமை அருட்சகோதரியோ, “உன்னைப் பார்க்கின்றபோது கடவுள் உனக்கென்று வேறொரு திட்டம் வைத்திருக்கிறார் என்பதுபோல் தோன்றுகிறது. ஆகவே, உன்னுடைய வாழ்வை சுய ஆய்வுக்கு உட்படுத்தி, அதன்பின் ஒருவேளை கடவுள் உன்னை இந்தப் பணிக்கென அழைத்திருந்தால் இங்கு வா” என்று சொல்லி அனுப்பி வைத்தார். லூயிஸ் தே மரிலாக்கும் தன்னுடைய வாழ்வை சுய ஆய்வுக்கு உட்படுத்திப் பார்த்தார். இதற்கிடையில் பிரான்ஸ் நாட்டு அரசி, இவரை தன்னுடைய அரசாங்கத்தின் ஆவணக் காப்பாளராக இருக்கக் கேட்டுக்கொண்டார். லூயிஸ் தே மரிலாக்கும் அதற்குச் சரியென்று சொல்லி, அங்கேயே பணிசெய்து வந்தார். அப்போதுதான் அவர் அன்றோய்ன் என்ற உயர்குடி இளைஞரைச் சந்தித்தார். அவர் இவர்மீது ஆழமான அன்பு கொண்டிருந்தார். எனவே இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமண வாழ்வில் மகிழ்ந்திருந்த லூயிஸ் தே மரிலாக், மிசெல் என்ற குழந்தையைப் பெற்றெடுத்தார். இப்படி வாழ்க்கை இன்பமயமாகப் போய்க்கொண்டிருக்க திடிரென்று ஒருநாள் லூயிஸ் தே மரிலாக்கின் கணவர் இறந்துபோனார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த இவர், சமூகத்தில் விளிம்பு நிலையில் இருந்தவர்களின் முன்னேற்றத்திற்காக தன்னுடைய வாழ்வினை அர்ப்பணிக்கத் தொடங்கினார்.

இந்த சமயத்தில்தான் ஏற்கனவே அன்புப் பணிகளை ‘அன்புப் பணிக் குழுவினர்’ என்ற பெயரில் செய்துகொண்டிருந்த தூய வின்சென்ட் தே பவுலின் தோழமை கிடைத்தது. அவர் லூயிஸ் தே மரிலாக்கை வாஞ்சையோடு ஏற்றுக்கொண்டு தன்னோடு பணிசெய்ய இணைத்துக்கொண்டார். இப்படி நாட்கள் போய்கொண்டிருந்த சமயத்தில் ஒருநாள் ஆண்களுக்களு சேவை செய்ய ஏராளமான சபைகள் இருக்கின்றனவே, ஏன் பெண்களுக்கு சேவை செய்ய ஒரு சபையைத் தொடங்கக்கூடாது என்ற யோசனை வின்சென்ட் தே பவுலுக்குத் தோன்றியது. அதனடிப்படையில் அவர் லூயிஸ் தே மரிலாக்கிடம் பெண்களுக்கென்று ஒரு சபையைத் தொடங்கச் சொன்னார். அப்படித் தொடங்கப்பட்டதுதான் ‘அன்பின் பணியாளர் சபை’ (Sisters of Charity). இந்தச் சபையின் வழியாக, ஏழைக் குழந்தைகள், அனாதைகள், வயது முதிர்ந்தோர் இவர்களுக்குத் தொண்டு செய்யப்பட்டன. லூயிஸ் தே மரிலாக், இப்பணிகளை எல்லாம் செய்வதறிப் பார்த்து, நிறையப் பேர் இவருடைய சபையில் சேர்ந்தார்கள். இன்னொரு சமயம் போலந்து நாட்டு அரசி, லூயிஸ் தே மரிலாக்கை தன்னுடைய நாட்டிற்கு அழைத்து, சேவைகள் செய்யப் பணித்தார். அவரும் அங்கு சேவை செய்து நல்லதொரு பெயரோடு நாட்டிற்குத் திரும்பி வந்தார்.

இப்படி இறைப்பணியையும் மக்கள் பணியையும் செய்துவந்த லூயிஸ் தே மரிலாக் 1660 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1934 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய லூயிஸ் தே மரிலாக்கின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. சேவை செய்து வாழ்வோம்

தூய லூயிஸ் தே மரிலாக்கின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்க்கும்போது அவர் சமூகத்தில் விளிம்பு நிலையில் இருந்த மக்களுக்கு சேவை செய்து வாழ்வதை தன்னுடைய இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்தார் என்பது நமக்குப் புரியும். அவரைப் போன்று நாம் நம்மோடு வாழக்கூடிய எளியவர், வறியவருக்கு சேவை செய்ய முன்வருகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். மத்தேயு நற்செய்தி 25 ஆம் அதிகாரத்தில் வருகின்ற இறுதித் தீர்ப்பு உவமையில் ஆண்டவர் இயேசு, ‘மிகச் சிறிய சகோதர சகோதரிகளுக்குச் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்’ என்பார். ஆம், நாம் நம்மோடு வாழக்கூடிய எளிய எளியவருக்குச் செய்கின்ற உதவிகள் எல்லாம் இறைவனுக்குச் செய்யப்படக்கூடியவையே ஆகும்.

ஆகவே, தூய லூயிஸ் தே மரிலாக்கின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று ஏழை எளியவரில் இறைவனைக் கண்டு, அவர்களுக்குச் சேவை செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Saint of the Day : (15-03-2020)

St. Louise de Marillac

She was born on August 15, 1591 in Paris was said to be born out of wedlock. She lived among the affluent society people of Paris. She wanted to become a Capuchin nun and to do social service. But her request was rejected by the family. She was then married off to one Antoine Le Gras, secretary to Queen Marie on February 5, 1617. She lived a happy life with Antoine and they had a boy child Michael. But her husband died of some illness some years later. She thought that she can now fulfill her desire to become a religious woman. She met St. Vincent de Paul and sought his advice to become a religious worker. She was the co-founder of Daughters of Charity with St. Vincent de Paul, in the year 1633. She became the head of the Daughters of Charity later. The association Daughters of Charity was having more than forty houses in France when she died on March 15, 1660. As a wife, mother, widow, teacher, nurse, social worker and religious founder, she stands as a model for all women.

She was beatified by pope Benedict-XV on May 9, 1920 and canonized by pope Pius-XI on March 11, 1934. Declared the Patron of Social Workers by pope John-XXIII, in the year 1960. She is venerated as the patroness of disappointing children, loss of parents, people rejected by religious orders, sick people, social workers and widows.

---JDH---Jesus the Divine Healer---