புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

25 March 2020

வானதூதர் கபிரியேல் மரியாளுக்கு மங்கள வார்த்தை சொன்ன விழா (மார்ச் 25)


வரலாற்றுப் பின்புலம்
இன்று நாம் வானதூதர் கபிரியேல் மரியாளுக்கு மங்கள வார்த்தை சொன்னதை நினைவுகூர்ந்து கொண்டாடுகின்றோம். தொடக்கத்தில் இவ்விழா ‘இயேசுவின் மனித அவதாரப் பெருவிழா’ என்று கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர்தான் இன்று நாம் வழங்கும் இப்பெயரால் அழைக்கப்பட்டது.

வானதூதர் கபிரியேல் மரியாளுக்கு மங்கள வார்த்தை சொன்ன இந்த நிகழ்வு ஒரு சாதாரண நிகழ்வு கிடையாது. அது மனித வரலாற்றையே மாற்றிப்போட்ட நிகழ்வு என்றுகூடச் சொல்லலாம். ஏனென்றால் மரியாள் சொன்ன ஆம் என்ற ஒற்றைச் சொல்லால்தான் ‘வார்த்தை வடிவான கடவுளால் நம்மிடையே குடிகொள்ள முடிந்தது’ (யோவா 1:14); மீட்பு இந்த உலகிற்கு வந்தது. ஆகையால் இந்த நிகழ்வின் முக்கியத்துவதை முதலில் நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

கபிரியேல் அதிதூதர் மரியாளிடம், “அருள்மிகப்பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!” என்று சொன்னவுடன், இவ்வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் மரியாள் கலங்குகிறார். இதைக் குறித்து தூய பெர்னார்டின் இவ்வாறு கூறுவார், “மரியாளிடம் வானதூதர் ‘உலகத்திலேயே நீதான் மிகப்பெரிய பாவி’ என்று சொல்லியிருந்தால்கூட அவள் ஏற்றிருப்பாள். ஆனால் அவரோ அருள்மிகப்பெற்றவரே என்று சொன்னதால்தான் மரியாள் கலங்குகிறார். காரணம் தாழ்ச்சி நிறைந்த உள்ளம் இதுபோன்ற வார்த்தைகளைக் கேட்டு கலங்கத்தான் செய்யும்”.

தொடர்ந்து வானதூதர் மரியாவிடம், “இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராய் இருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின்மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது” என்று சொன்னபோது, மரியாள், “இது எப்படி நிகழும்?”, நான் கன்னி ஆயிற்றே!” என்கிறார். மரியாள் இப்படிக் கேட்பதில் அர்த்தமில்லாமல் இல்லை. ஏனென்றால் விவிலியத்தில் வயது முதிர்ந்தோர் கருவுற்று குழந்தையைப் பெற்ற நிகழ்வு இருக்கிறது. ஆனால் கன்னி ஒருத்தி கருவுற்று குழந்தையைப் பெற்றெடுத்த நிகழ்வு இல்லை. அதனால் மரியாள் அப்படிக் கேட்கிறார். மரியாளுடைய கேள்வியின் ஆழத்தைப் புரிந்துகொண்ட வானதூதர், “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால், உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்” என்று சொன்னபிறகு மரியாள், “நான் ஆண்டவரின் அடிமை. உமது சொற்படி எனக்கு நிகழட்டும்” என்கிறார். உடனே தூய ஆவியார் அவர்மீது இறங்கி வர இயேசுவை கருத்தரிக்கிறார்.

ஆகவே, மரியாள் ‘ஆம்’ என்று சொன்ன அந்த ஒரு சொல்லில் மீட்பு இந்த மண்ணுலகிற்கு வந்துவிட்டது என நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஆதிபெற்றோரான ஆதாமும் ஏவாளும் கடவுளின் கட்டளையை மறுத்ததால் பாவம் இந்த மண்ணுலகில் நுழைந்தது. அந்தப் பாவத்தை மரியாள் தான் சொன்ன ஆம் என்ற சொல்லினால் விரட்டியடிக்கிறார். வானதூதர் கபிரியேல் மரியாளுக்கு மங்கள வார்த்தை சொன்ன இந்த நிகழ்வு கி.பி. 431 ஆம் ஆண்டிற்குப் பிறகு இன்றுவரை விழாவாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

Feast : (25-03-2020)
Annunciation of the Lord

This feast is the celebration of the announcement to Mary by the arch-angel Gabriel that she would bear the son of God and holy. This is found only in the gospel of Luke (1:28-38). Arch-angel serves as the messenger of God. Gabriel appears in Old Testament (Daniel 8:15-26 and 9:21-27) and in New Testament (Luke 1:11-20 and 1-26-38). As per his own declaration to Zachariah, father of John the Baptist, He is standing before the God always. At that time Mary was betrothed to Joseph and as per Jewish law this betrothal was binding as a marriage and valid for one year. For every child birth three partners are involved, the father, mother and the God's grace or spirit of God. But in the birth of Jesus there was no involvement of human father. Jesus was created by God through Holy Spirit in Virgin Mary. This same message is also seen in the Holy Quran also (Part 16-Chapter 19). When the arch-angel delivered the message of the virgin divine conception of Jesus in Virgin Mary, she asked How can this be, since I do not know a man as per the Gospel of Luke. Virgin Mary raised the same doubt as per the verses of Holy Quran also (Part -16- Chapter-19-Verse-20).

---JDH---Jesus the Divine Healer---

சபை நிறுவுநர் லூசியா பிலிப்பீனி Lucia Filippini march 25

இன்றைய புனிதர்
2020-03-25
சபை நிறுவுநர் லூசியா பிலிப்பீனி Lucia Filippini
பிறப்பு
ஜனவரி 1672,
உரோம்
இறப்பு
25 மார்ச் 1732,
மோண்டேபியாஸ்கோனே Montefiascone, இத்தாலி
புனிதர்பட்டம்: 22 ஜூன் 1930, திருத்தந்தை 11 ஆம் பயஸ்

இவர் தனது 20 ஆம் வயதில் கர்தினால் மார்க் ஆண்டோனியோ பார்பாரிகோ Marc Antonio Barbarigo என்பவரின் உதவியுடன் இவரின் பெயரில் துறவற சபை ஒன்றை நிறுவினார். இச்சபையினர் கைவிடப்பட்ட குழந்தைகளையும் விதவைகளையும் ஒன்று சேர்த்து, அவர்களை கண்காணித்து பராமரித்து வருவதை தங்களின் நோக்கமாக கொண்டனர். இவர் 1704 ஆம் ஆண்டு அச்சபையின் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இவர் உரோமையிலும் தன் சபையை நிறுவினார். மேலும் இச்சபையினர் இளம் தம்பதியினர் எவ்வாறு இல்லற வாழ்வில் ஈடுபட வேண்டுமென்றும் என்பதைப் பற்றியும் எடுத்துக்கூறி நல்ல உறவுடன் வாழ வழிகாட்டினர். இவர் தொடங்கிய சபையானது 1910 ஆம் ஆண்டிலிருந்து திருத்தந்தையின் ஒப்புதல் பெற்ற சபையாக அறிவிக்கப்பட்டு செயல்பட்டது.


செபம்:
தாழ்நிலையில் இருப்போரை பரிவன்புடன் நோக்கும் எம் இறைவா! நீர் ஒருவரே அருஞ்செயல்களை செய்கின்றீர். உம்மால் ஆகாதது ஒன்றுமில்லை என்பதை உறுதிப்படுத்துகின்றீர். தேவையிலிருப்போருக்கு பல துறவற சபைகளின் மூலம் உதவுகின்றீர். புனித லூசியா பிலிப்பீனியின் வழியாக நீர் ஏற்படுத்திய சபையை, அதன் நோக்கத்துடன் என்றும் செயல்பட உதவி செய்தருளும். இச்சபையினரின் வழியாக துயர் நிறைந்தோர்க்கு ஆறுதலாகவும், உள்ளம் உடைந்தோர்க்கு உறுதுணையாகவும், அழுபவர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பவராகவும் இருந்தருளும்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

சபைநிறுவுநர் மர்கரீத்தா ரோசா பிளெஸ் Margareta Rosa Flesch
பிறப்பு : 24 பிப்ரவரி 1826 ஷோய்ன்ஸ்டட் Schönstatt, ஜெர்மனி
இறப்பு : 25 மார்ச் 1906 வால்ட்பிரைட்பாக் Waldbreitbach, ஜெர்மனி


பியோமன் துறவி புரோகோபியஸ் Prokopius von Böhmen
பிறப்பு : 990 கோடவுன் Chotaun, செக் குடியரசு
இறப்பு : 25 மார்ச் 1053, சாவாச்சா Savaza, செக் குடியரசு