புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

16 April 2020

புனிதர் பெனடிக்ட் ஜோசஃப் லேபர் April 16

† இன்றைய புனிதர் †
(ஏப்ரல் 16)
✠ புனிதர் பெனடிக்ட் ஜோசஃப் லேபர் ✠
(St. Benedict Joseph Labre)

நித்திய ஆராதனையின் யாசகர்:
(Beggar of Perpetual Adoration) 

பிறப்பு: மார்ச் 25, 1748
அமெட்டஸ், அர்ட்டாய்ஸ், ஃபிரான்ஸ் அரசு
(Amettes, Artois, Kingdom of France)

இறப்பு: ஏப்ரல் 16, 1783 (வயது 35)
ரோம், திருத்தந்தையர் மாநிலங்கள்
(Rome, Papal States)

ஏற்கும் சபை:
கத்தோலிக்க திருச்சபை
(புனிதர் ஃபிரான்சிசின் மூன்றாம் நிலை சபை)
(Catholic Church)
(Third Order of St. Francis)

முக்திபேறு பட்டம்: மே 20, 1860
திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்
(Pope Pius IX)

புனிதர் பட்டம்: டிசம்பர் 8, 1881
திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ
(Pope Leo XIII)

முக்கிய திருத்தலம்:
சாண்டா மரியா அய் மொண்டி, ரோம், இத்தாலி
(Church of Santa Maria ai Monti
Rome, Italy)

நினைவுத் திருநாள்: ஏப்ரல் 16

பாதுகாவல்:
திருமணமாகாத ஆண்கள், நிராகரித்தல், மன நோய், மனநலம் பாதிக்கப்பட்ட மக்கள், பிச்சைக்காரர்கள், வீடற்றவர்கள், நாடோடிகள் (Hobos)

புனிதர் பெனடிக்ட் ஜோசஃப் லேபர், ஃபிரெஞ்ச் நித்திய ஆராதனையின் யாசகரும், ஃ பிரான்சிஸ்கன் மூன்றாம் நிலை துறவியும், கத்தோலிக்க புனிதருமாவார்.

வட ஃபிரான்ஸ் (North of France) நாட்டின் “அர்டாய்ஸ்” (Artois) மாகாணத்திலுள்ள “பஸ்-டி-கலாய்ஸ் டிபார்ட்மென்ட்” (Pas-de-Calais department) தலைநகரான “அர்ராஸ்” (Arras) நகரின் அருகேயுள்ள “அமெட்டஸ்” (Amettes) கிராமத்தில், 1748ம் ஆண்டு பிறந்த இவர், தமது பெற்றோரின் பதினைந்து குழந்தைகளுள் மூத்த குழந்தை ஆவார். இவரது தந்தையார், ஒரு வசதியான வியாபாரியாவார். அவரது பெயர், “ஜீன் பேப்டிஸ்ட் லேபர்” (Jean Baptist Labre) ஆகும். இவரது தாயாரின் பெயர், “அன்னி கிரேன்ட்ஷைர்” (Anne Grandsire) ஆகும்.

இவரது கிராமத்திலிருந்து சிறிது தூரத்தில் சேவையாற்றிய கத்தோலிக்க குருவான இவாது தாய்மாமன், மகிழ்ச்சியுடன் இவரை ஏற்று, இவருக்கு குருத்துவ கல்வியில் வழி காட்டினார். இவர், தமது பதினாறு வயதில், பெனடிக்ட் சட்டங்களின்படி (Rule of St. Benedict) நடத்தப்படும் “சிஸ்டேர்சியன்” (Cistercian order) சபையின் கிளையான “ட்ரேப்பிஸ்ட்” (Trappist) துறவியாக உதவுமாறு தமது தாய்மாமனான குருவை வேண்டினார். ஆனால் அவரது பெற்றோரோ, அவரை இன்னமும் வயதாகும்வரை காத்திருக்கச் சொன்னார்கள்.

பெனடிக்டுக்கு பதினெட்டு வயதாகையில், கொள்ளை தொற்று நோயால் இவர்களது கிராமம் பாதிக்கப்பட்டபோது, மாமனும் மருமகனும் இணைந்து நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்வதில் தீவிரமானார்கள். மாமன் பாதிக்கப்பட்ட மக்களின் ஆன்மாக்களையும் உடல்களையும் கவனித்துக் கொண்டிருந்தபோது, பெனடிக்ட் கால்நடைகள் கவனித்துக் கொண்டிருந்தார். இவர், அவைகளின் கொட்டில்களை சுத்திகரித்து அவற்றுக்கு உணவளித்தார். தமது மாமனின் கீழே, ஒரு மாணவனான இவர், ஒரு விவசாய கூலித் தொழிலாளியாக மாறினார். தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுள் இறுதியானவராக இவரது மாமன் இருந்தார்.

பெனடிக்ட், (La Trappe Abbey) எனும் துறவு மடத்தில் இணைவதற்காக விண்ணப்பித்தார். ஆனால், இவரது குறைவான வயது காரணத்தாலும், தனிப்பட்ட முறையில் இவருக்கு யாரும் பரிந்துரைக்காத காரணத்தாலும், இவர் நிராகரிக்கப்பட்டார். பின்னர் இவர், “கார்தூசியன்” (Carthusians) மற்றும் “சிஸ்டேர்சியன்” (Cistercians) சபைகளில் இணைவதற்கும் முயற்சித்தார். ஆனால், இவர் ஆன்மீக வாழ்க்கைக்கு பொருத்தமற்றவர் என்ற காரணம் காட்டி, இரண்டு சபைகளுமே இவரை நிராகரித்தன. இவர், சுமார் ஆறு வாரங்களாக, “நுவில்லியில்” (Neuville) உள்ள கார்தூசியர்களில் ஒருவராக இருந்தார். 1769ம் ஆண்டு, நவம்பர் மாதம், அவர் “செப்ட்-ஃபாண்ட்ஸ்” (Sept-Fonts) எனுமிடத்திலுள்ள சிஸ்டெசியியன் மடத்தில் (Cistercian Abbey) அனுமதி பெற்றார். ஆனால், சிறிது காலத்திலேயே அவரது உடல் ஆரோக்கியம் காரணமாக, அவர் வேறு இடங்களில் பணியாற்ற முடிவு செய்யப்பட்டது.

கத்தோலிக்க பாரம்பரியப்படி, கடவுளால் தமக்கு அளிக்கப்பட்டது என்று இவர் நினைத்த தமது விருப்பங்களை தாம் அனுபவிப்பதாக எண்ணினார். புனிதர் அலெக்சியஸ் (Saint Alexius of Rome) அவர்களை உதாரணமாகக் கொண்டு ஈர்க்கப்பட்டார். தூய ஃபிரான்சிஸ்கன் துறவி “புனிதர் ரோச்” (Saint Roch) அவர்களின் திருயாத்திரைகளை உதாரணமாக ஏற்றார். தனது நாட்டையும் பெற்றோர்களையும் விட்டு விலக முடிவு செய்தார். மற்றும் உலகில் ஒரு புதிய வகையான வாழ்க்கை வாழ, மிகவும் வேதனைமிகுந்த, மிகுந்த தண்டனைக்குரிய வாழ்க்கையை விரும்பினார். உலகின் கிறிஸ்தவ பக்தியின் புகழ்பெற்ற இடங்களில் ஒரு யாத்திரிகனானார்.

புனித பிரான்சிஸின் மூன்றாம் நிலை (Third Order of Saint Francis) சபையில் இணைந்த பெனடிக்ட், எளிய வாழ்க்கையையும் புனிதர் யாத்திரைகளையும் விரும்பி ஏற்றார். முதலில் ரோம் நகருக்கு நடைபயணம் சென்றார். வழியில் யாசகம் பெற்று, அவற்றைக் கொண்டே உண்டார். பின்னர் அவர் ஐரோப்பாவின் பெரும்பாலான பிரதான திருத்தலங்களுக்கு அடிக்கடி சென்றார். அர்ஜென்டினா (Argentina) நாட்டின் “லொரெட்டோ” (Loreto) எனுமிடத்திலுள்ள பல்வேறு திருத்தலங்களுக்கு யாத்திரை சென்றார். இத்தாலி (Italy) நாட்டிலுள்ள அசிசி (Assisi), நேப்பில்ஸ் (Naples) மற்றும் “பாரி” (Bari) ஆகிய திருத்தலங்களுக்கும் யாத்திரை சென்றார். சுவிட்சர்லாந்து (Switzerland) நாட்டின் “ஈய்ன்சியேடேல்ன்” (Einsiedeln) திருத்தலத்திற்கு சென்றார். ஃபிரான்ஸ் (France) நாட்டிலுள்ள “பரே-லி-மோனியல்” (Paray-le-Monial) திருத்தலத்திற்கும் ஸ்பெயின் (Spain) நாட்டிலுள்ள “சேன்டியாகோ டி கம்போஸ்டேலா” (Santiago de Compostela) திருத்தலத்திற்கும் சென்றார். இந்த பயணங்களின்போது அவர் எப்போதும் நடைபயனமாகவே சென்றார். சேறு மற்றும் கந்தலான அவரது ஆடைகளுடன் திறந்த வெளியில் அல்லது கிடைத்த அறையின் மூளைகளிலேயே உறங்கினார். யாசித்து கிடைத்த சில உணவு வகைகளையே உண்டார். அதனையும் பிறருடன் பகிர்ந்துகொண்டார். அவர் அரிதாக பேசினார், அடிக்கடி ஜெபம் செய்தார், அவர் பெற்ற ஏச்சுபேச்சுகளையும் அமைதியாக ஏற்றுக்கொண்டார்.

இவ்வாறாக, பெனடிக்ட் ஒரு யாசகராகவே இறுதிவரை வாழ்ந்தார். குறிப்பாக, கடவுளின் முட்கிரீடத்தைப் பற்றி சிந்திக்கும்போது அடிக்கடி அவர் மயக்கமடைவார் என கூறப்படுகிறது. இவர், தாம் சந்தித்த பிற வீடற்ற மக்களை குணப்படுத்தியதாகவும், தமக்கு கிடைத்த ரொட்டித் துண்டுகளை பல்கிப் பெருக வைத்ததாகவும் கூறப்படுகிறது. அவரது வாழ்நாளின் கடைசி ஆண்டுகளில் (அவருடைய முப்பதுகளில்), அவர் ரோமில் வசித்து வந்தார். கொலோசெய்யின் (Colosseum) இடிபாடுகளில் வாழ்ந்த ஒரு காலப்பகுதிக்காக, லொரெட்டோவின் அன்னை (Shrine of Our Lady of Loreto) திருத்தலத்திற்கு ஒரு வருடாந்திர புனித யாத்ரீகத்தை மட்டுமே செய்ய முடிந்தது.

அவர் நகரத்தில் அனைவருக்கும் அறிமுகமான ஒரு நபராக இருந்தார். மற்றும் நற்கருணை ஆராதனைக்கான அவரது அர்ப்பணிப்புக்காக "நாற்பது மணி நேரத்தின் துறவி" (Saint of the Forty Hours) என அறியப்படுகிறார்.

அவர் இறப்பதற்கு ஒருநாள் முன், “சாண்டா மரியா ஆய் மோன்டி” தேவாலயத்தில் (Church of Santa Maria ai Monti) சரிந்து விழுந்தார். அவரது எதிர்ப்பையும் மீறி, அவர் ஆலயத்தின் பின்னால் இருந்த ஒரு வீட்டிற்கு தூக்கி செல்லப்பட்டார். 1783ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 16ம் தேதியன்று, புனித வாரத்தின்போது (Holy Week) ஊட்டச்சத்துக் குறைவு காரணமாக அவர் மரித்தார். அவர், “சாண்டா மரியா ஆய் மோன்டி” (Church of Santa Maria ai Monti) தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

இவரது சரித்திரத்தை எழுதிய இவரது ஒப்புரவாளரான “மார்கோனி” (Marconi), இவர் மறித்து மூன்றே மாத காலத்துக்குள், இவரது பரிந்துரை காரணமாக 136 பேர் நோயினின்றும் அற்புதமாக குணமானதாக எழுதியுள்ளார்.

தூய பெர்னதெத் (ஏப்ரல் 16)

இன்றைய புனிதர்: 
(16-04-2020) 

தூய பெர்னதெத் (ஏப்ரல் 16)
“நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இந்தச் சிறு பிள்ளையைப் போலத் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர்” (மத் 18: 3-4)

வாழ்க்கை வரலாறு

பிரான்ஸ் நாட்டில் உள்ள லூர்து நகருக்கு அருகில் இருந்த நெவர்ஸ் என்னும் இடத்தில், 1844 ஆம் ஆண்டு, ஜனவரி திங்கள் 7 ஆம் நாள் பெர்னதெத் பிறந்தார். இவர்தான் குடும்பத்தில் மூத்த பிள்ளை. பெர்னதெத்தின் குடும்பம் ஒரு காலத்தில் மிகவும் வசதியாக இருந்தது. ஆனால், ஏதோ ஒரு காரணத்தால் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் போனது. பெர்னதெத்துக்கு சிறுவயதிலே ஆஸ்மா நோய் வந்ததால் அவர் மிகவும் கஷ்டப்பட்டார். இப்படிப்பட்ட சூழலுக்கு மத்தியில் பெர்னதெத் தன்னுடைய நண்பர்களோடு அருகிலிருந்த மசபெல் குகைக்கு ஆடு மேய்க்கச் சென்றார்.

1858 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 11 ஆம் அவர் இப்படி ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது, வானிலிருந்து ஒரு பெண் தோன்றினார். அவர் வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்தார், இடையில் ஊதா நிறக் கச்சை அணிந்திருந்தார். கையில் ஜெபமாலை வைத்திருந்தார். இக்காட்சி பெர்னதெத்துக்கு மட்டுமே தெரிந்தது. அவருடைய நண்பர்களுக்குத் தெரியவில்லை. இதை அவர் தன்னுடைய வீட்டிலும் அக்கம் பக்கத்திலிருந்தவர்களிடமும் சொன்னபோது யாருமே அதை நம்பவில்லை. மாறாக பெர்னதெத் பிதற்றுகிறார் என்றார்கள்.

தொடர்ந்து பெர்னதெத் மசபெல் குகைக்குச் சென்று, ஆடு மேய்க்கும்போது, வானத்திலிருந்து தோன்றிய பெண்மணி தன்னை ‘நாமே அமல உற்பவம்’ என்றும், பாவ மன்னிப்புப் பெற மனமாறவேண்டும் என்றும் ஜெபமாலை சொல்லவேண்டும் என்றும் அவரிடத்தில் எடுத்துச் சொன்னார். அதையும் பெர்னதெத் அங்கிருந்த பங்குத்தந்தையிடமும் அதிகாரிகளிடமும் எடுத்துச் சொன்னபோது அவர்கள், அதனை ஆய்வுக்கு உட்படுத்திய பின்னே நம்பமுடியும் என்று சொல்லிவந்தார்கள். அதற்குள் மரியன்னை பெர்னதெத்துக்கு காட்சி கொடுத்த செய்தி மக்களுக்குத் தெரியவர பெருந்திரளான மக்கள் அங்கு வந்தார்கள்.

இதற்கிடையில் 1868 ஆம் ஆண்டு, பெர்னதெத் நெவர்ஸ் நகரில் இருந்த துறவற சபையில் துறவியாகச் சேர்ந்தார். அங்கு அவர் ஜெபத்திலும் தவத்திலும் தம்மை முழுமையாய் ஈடுபடுத்திக் கொண்டு வாழ்ந்து வந்தார். அது மட்டுமல்லாமல், தாழ்ச்சிக்கு இலக்கணமாக வாழ்ந்து வந்தார். ஏற்கனவே அவர் ஆஸ்மா நோய்க்கு உள்ளாகி இருந்ததால் உடலளவில் பெரிதும் கஷ்டப்பட்டார். 1879 ஆம் ஆண்டு வந்த ஏப்ரல் மாதத்தில் அவருடைய நோய் முற்றிப்போனது. இதனால் அவர் படுத்த படுக்கையானார். ஏப்ரல் 16 ஆம் நாள், தனக்கு ஏற்பட்ட நோயிலிருந்து மீளமுடியாமல் அப்படியே இறையடி சேர்ந்தார். இவருக்கு 1933 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய பெர்னதெத்தின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. தாழ்ச்சி

தூய பெர்னதெத்திடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடமே அவரிடமிருந்த தாழ்ச்சிதான். அவர் அடிக்கடி சொல்லக்கூடிய வார்த்தைகளிலிருந்தே இதைப் புரிந்துகொள்ளலாம். அவர் சொல்வார், “நான் ஒரு துடைப்பதற்குச் சமமானவள். துடைப்பம் வீட்டைச் சுத்தமாக்குகிறது என்பதற்காக அதனை வீட்டின் நடுவே யாரும் வைப்பதில்லை, அதுபோன்றுதான் மரியா தன்னுடைய திருநாமம் விளங்க என்னைப் பயன்படுத்தினார். அவருடைய திருநாமம் பரவிவிட்டது. இப்போது என்னுடைய தேவையும் முடிந்துவிட்டது. இப்போது நான் ஒரு துடைப்பத்தைப் போன்றே கிடக்கிறேன்” என்று. மரியன்னை தனக்குக் காட்சி கொடுத்தார் என்று அவர் தலைக்கனத்தோடு இருக்கவில்லை, தாழ்ச்சியோடுதான் இருந்தார். அவரிடமிருந்த தாழ்ச்சி நம்மிடம் இருக்கின்றதா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இன்றைக்கு நாம் அடுத்தவரால் உயர்வாக மதிக்கப்படவேண்டும், போற்றப்பட வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். தாழ்ச்சியோடு வாழ்வதற்கு முன்வருவதில்லை. இத்தகைய சூழ்நிலைதான் தாழ்ச்சியோடு வாழ்ந்த தூய பெர்னதெத் முக்கியத்துவம் பெறுகின்றார்.

ஒரு சமயம் மிகச் சிறந்த இசைக் கலைஞராகிய லியோனார்டு பெர்ன்ஸ்டேன் என்பவரிடம் நிருபர் ஒருவர், “எந்த இசைக்கருவியை வாசிப்பது மிகவும் கஷ்டம்?” என்று கேட்டார். அதற்கு அவர், இரண்டாம் வயலின்” என்றார். “ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?” என்று நிருபர் கேட்டதற்கு அவர், “முதலாம் வயலின் வாசிப்பவர் எல்லாருடைய கவனத்தையும் பெறுவார், இரண்டாம் வயலின் வாசிப்பவர் அப்படிக் கிடையாது, அவர் யாருடைய கவனத்தையும் பெறமாட்டார். அதனாலேயே இரண்டாம் வயலின் வாசிப்பது மிகவும் கஷ்டம். அதனை வாசிப்பதற்கு உள்ளத்தில் நிறையத் தாழ்ச்சி தேவை” என்றார். ஆமாம், தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தினரால் மட்டுமே இரண்டாம் வயலினை வாசிக்க முடியும். இன்று நாம் நினைவுகூரும் பெர்னதெத்தும் தாழ்ச்சிக்கு எடுத்துக்காட்டாக விளங்கினார் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது.

ஆகவே, தூய பெர்னதெத்தின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தினராய் வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்
Saint of the Day : (16-04-2020)

 St. Bernadette Soubirous

She was born at Lourdes, France on January 7, 1844 to Francois Soubirous and Louise Soubirous. The name given to her at the time of baptism was Mary Bernard. She and her family lived in utter poverty. On February 11, 1858 (Thursday), when she along with her sister and a friend went out to collect firewood, The Blessed Virgin Mary granted her a vision in a cave/Grotto on the banks of Gave River near Lourdes. Her sister and the other friend who accompanied her could not see anything. During the apparition Virgin Mary appeared with white robe and a blue sash and yellow roses covered her feet. She also held a large rosary in her right arm. There were altogether 18 apparitions from February 11 to July 16, 1858. On February 25, 1858 (Thursday) a spring emerged from the cave where the apparition occurred and the water from the spring was found out to be with miraculous qualities. On March 25, 1858 (Thursday), Bernadette asked Virgin Mary her name and Virgin Mary told her that Her name is 'The Immaculate Conception'. It was also reported that during this vision on March 25 Bernadette held a lighted candle in her hands. After some time, the candle burnt down and the flame was said to be in direct contact with her palm/skin for over 15 minutes but she did not experience any pain and her skin was also not affected. Bernadette later became a member of the Sisters of Notre Dame in Nevers. French authorities tried to shut the spring in the cave and also to halt the construction of the church. But the vision reached fame and Empress Eugenie, wife of Emperor Napoleon-III interfered in this matter and the work continued. She suffered from an illness and died on April 16, 1879 at Nevers. Her body was exhumed on September 22, 1909 and it was found to be incorrupt. This is one of the miracles for her canonization.

She was beatified on June 14, 1927 by pope Pius-XI and also canonized by pope Pius-XI on December 8, 1933.

---JDH---Jesus the Divine Healer---