புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

15 February 2020

புனிதர் கிளாடி டி லா கொலொம்பியெர் பெப்ரவரி 15

† இன்றைய புனிதர் †
(ஃபெப்ரவரி 15)

✠ புனிதர் கிளாடி டி லா கொலொம்பியெர் ✠
(St. Claude de la Colombiere)

அருட்பணியாளர், குரு, ஒப்புரவாளர்:
(Religious, Priest and Confessor)

பிறப்பு: ஃபெப்ரவரி 2, 1641
புனித சிம்போரியன்-டி'ஓஸோன், டௌஃபின், ஃபிரான்ஸ் அரசு
(Saint-Symphorien-d'Ozon, Dauphiné, Kingdom of France)

இறப்பு: ஃபெப்ரவரி 15, 1682 (வயது 41)
பாரே-லி-மோனியல், பர்கண்டி, ஃபிரான்ஸ் அரசு
(Paray-le-Monial, Duchy of Burgundy, Kingdom of France)

ஏற்கும் சமயம்:
கத்தோலிக்க திருச்சபை (இயேசு சபை)
(Catholic Church (Society of Jesus)

முக்திபேறு பட்டம்: ஜூன் 16, 1929
திருத்தந்தை பதினோறாம் பயஸ்
(Pope Pius XI)

புனிதர் பட்டம்: மே 31, 1992
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
(Pope John Paul II)

முக்கிய திருத்தலம்:
இயேசுசபை தேவாலயம், பாரே-லெ-மோனியல், சவோனே-ஏட்-லோய்ர், ஃபிரான்ஸ்
(Jesuit Church, Paray-le-Monial, Saône-et-Loire, France)
பாதுகாவல்:
இயேசுவின் திருஇருதய பக்தி
(Devotion to the Sacred Heart of Jesus)

நினைவுத் திருநாள்: ஃபிப்ரவரி 15

இன்றைய புனிதராக நினைவுகூறப்படும் புனிதர் "கிளாடி டி லா கொலொம்பியெர்" இயேசு சபையைச் சார்ந்தவர் என்பதால், இயேசு சபையைச் சேர்ந்த துறவியர் மற்றும் குருக்களுக்கு இன்றைய தினம் ஒரு விஷேச தினமாகும். கிளாடி தமது சிநேகிதியும் ஆன்மீக துணையுமான "புனிதர் மார்கரெட் மேரி அலகோக்யூ'வுடன்" (Saint Margaret Mary Alacoque) இணைந்து இயேசுவின் திருஇருதய பக்தியை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். ஆகவே, இயேசுவின் திருஇருதயத்தின்பால் தீவிர பக்தி கொண்டுள்ளோர்க்கும் இன்றைய தினம் ஒரு விஷேட தினமாகும்.

இவர் ஒரு இயேசு சபை குருவும், அருட்பணியாளரும், ஒப்புரவாளரும், துறவறம் சார்ந்த எழுத்தாளருமாவார்.

1641ம் ஆண்டு, ஃபிரான்ஸ் அரசின் (Kingdom of France) பண்டைய "டௌஃபின்" (Province of Dauphiné) பிராந்தியத்தில் பிறந்த கிளாடியின் தந்தை "பெர்ட்ரான்ட்" (Bertrand de la Colombière) ஒரு பத்திர சான்றளிக்கும் அலுவலர் ஆவார். தாயாரின் பெயர், "மார்கரெட்" (Margaret Coindat) ஆகும். இவர்களது குடும்பம் விரைவிலேயே அருகாமையிலுள்ள நகரான "வியன்னா"வுக்கு (Vienne) புலம்பெயர்ந்து சென்றது. அங்கே கிளாடி தமது ஆரம்ப கல்வியை தொடங்கினார்.

1658ம் ஆண்டு, தமது பதினேழாம் வயதில் கிளாடி "அவிக்னான்" (Avignon) என்ற இடத்திலுள்ள இயேசு சபையின் துறவறப் புகுநிலையில் (Novitiate) இணைந்தார். துறவறப் புகுநிலை கல்வியை இரண்டு வருடங்களில் முடித்த கிளாடி, உயர் கல்வியையும் அதே நகரிலேயே தொடங்கினார். அதன் பின்னர், தமது பிரதிநிதித்துவத்தை அதே கல்லூரியில் இலக்கணம் மற்றும் இலக்கியம் ஆகியனவற்றை கற்பிப்பதில் ஈடுபடுத்தினார்.

"கிளேர்மான்ட்" (College de Clermont) கல்லூரியில் இறையியல் கற்பதற்காக 1666ம் ஆண்டு, கிளாடி பாரிஸ் நகர் அனுப்பப்பட்டார். அங்கே இறையியல் படிப்பை பூர்த்தி செய்ததும் குருத்துவ அருட்பொழிவு செய்யப்பட்டார். பின்னர் முதன்முதலாக "லியான்" (Lyon) நகரிலுள்ள இவரது முன்னாள் பள்ளியில் கற்பிக்க பணி நியமனம் பெற்றார். அதன்பின்னர், அவர் இயேசு சபையின் மறை பரப்பும் குழுவினருடன் இணைய அறிவுறுத்தப்பட்டார். அங்கேதான் அவரது பிரசங்கிக்கும் திறனும் வலிமையையும் வெளிப்பட்டது.

1676ம் ஆண்டு கிளாடி, அப்போதைய இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளின் அரசியான (Queen consort of England, Scotland and Ireland) “மேரி” (Mary of Modena) என்பவரின் போதகராக இங்கிலாந்து நாட்டுக்கு அனுப்பப்பட்டார். ஃபிரான்ஸ் நாட்டிலிருந்தது போலவே இங்கேயும் திறமையான மறை போதகராகவும், ஒப்புரவாளராகவும் செயல்பட்டார். பல சிரமங்களை எதிர்கொண்ட போதிலும், “மார்கரெட் மேரி அலாக்கோவை” (St. Margaret Mary Alacoque) கடிதங்கள் மூலம் வழிகாட்டினார். கிளாடியின் வைராக்கியமான பணிபுரியும் திறனும், இங்கிலாந்தின் பருவநிலையும் சேர்ந்து கிளாடியின் உடல்நிலையை மோசமாக்கின. அவர் மிகவும் பலவீனமடைந்ததுடன் சுவாசக் கோளாறு நோய்களால் பாதிக்கப்பட்டார். இதன்காரணமாக, அவரது பணிகள் இங்கிலாந்து நாட்டில் முடிவுக்கு வந்தன.

1678ம் ஆண்டு, நவம்பர் மாதம், ஃபிரான்ஸ் நாட்டுக்கு திரும்பிச் செல்ல அழைக்கும் உத்தரவுக்காக காத்திருந்த வேளையில், சட்டென அவர் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார். ஆங்கிலேய அரசுக்கு எதிராக திருத்தந்தை சார்பாக சதி புரிவதாக குற்றம் சாட்டப்பட்டார். கத்தோலிக்க எதிர்ப்பு வெறியார்களால் பிடிக்கப்பட்டு கடுமையான நிலைமைகளில் சிறைப்படுத்தப்பட்டார். இதன்காரணமாக இவரது ஆரோக்கியம் மேலும் சீர்கெட்டது.

ஃபிரான்ஸ் மன்னர் பதினான்காம் லூயிஸின் (King of France, Louis XIV) தலையீட்டால் மரண தண்டனையின்றி தப்பிய கிளாடி, உடனடியாக 1679ம் ஆண்டு, ஃபிரான்ஸுக்கு நாடு கடத்தப்பட்டார். சிறை வாழ்க்கையின் கோர பிடியினால் மோசமாக பாதிக்கப்பட்டிருந்த கிளாடி ஃபிரான்ஸ் திரும்பினார்.

தமது வாழ்க்கையின் கடைசி இரண்டு வருடங்களை "லியோன்" (Lyon) நகரில் செலவிட்ட கிளாடி, இரத்த ஒழுக்கு (Hemorrage) காரணமாக 1682ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 15ம் நாளன்று மரணமடைந்தார்.

திருத்தந்தை ஃபிரான்சிஸ் அவர்கள், கடவுளின் அன்புக்கும் இரக்கத்துக்கும் மிக அழகாக முக்கியத்துவம் தருபவர் என்பதாலும், கிளாடி ஒரு சக இயேசு சபையினராகவும், இயேசுவின் திருஇருதய பக்தியை தீவிரமாக பரப்பியவர் என்பதாலும் கிளாடி அவருக்கு மிகவும் விசேடமானவர் எனலாம். மற்றும், கடவுளின் அன்புக்கும், இரக்கத்துக்கும் முக்கியத்துவம் தருவது இவ்விருவரின் சிறப்புப் பண்பாகும்.

புனிதர் தியடோசியஸ் ஃப்ளோரென்டினி பெப்ரவரி 15

† இன்றைய புனிதர் †
(ஃபெப்ரவரி 15)

✠ புனிதர் தியடோசியஸ் ஃப்ளோரென்டினி ✠
(St. Theodosius Florentini)

கபுச்சின் துறவி/ சபை நிறுவனர்:
(Capuchin monk and a founder)

பிறப்பு: மே 23, 1808
முன்ஸ்டர், கிரிசன்ஸ், ஸ்விட்சர்லாந்து
(Münster, in the Grisons, Switzerland)

இறப்பு: ஃபெப்ரவரி 15, 1865
ஹைடன், அப்பென்செல்,  ஸ்விட்சர்லாந்து
(Heiden, in Appenzell, Switzerland)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

நினைவுத் திருநாள்: ஃபெப்ரவரி 15

புனிதர் தியடோசியஸ் ஃப்ளோரென்டினி, ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு கப்புசின் சபை துறவியாவார். இவர், கத்தோலிக்க சபைகளையும் கல்வி நிறுவனங்களையும் நிறுவியவராவார்.

1825ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 22ம் நாள், தனது 17 வயதிலேயே கப்புச்சின் சபையில் சேர்ந்த இவர், 1830ம் ஆண்டு, குருத்துவம் பெற்று, குருவானார். உடனடியாக புதுமுக துறவியரின் தலைமைப் பொறுப்பேற்ற (Novice Master) இவர், தத்துவம் மற்றும் இறையியல் கற்பிக்க தொடங்கினார். “படேன்” (Baden) எனும் வரலாற்று ஜெர்மன் பகுதியின் பாதுகாவலராக பொறுப்பேற்றார். 1845ம் ஆண்டு, “ச்சூர்” (Chur) எனும் பங்கின் பங்குத் தந்தையும், சிரேஷ்டருமானார். 1857ம் ஆண்டு, (Definitor) என்ற பதவியை வகித்த இவர், 1860ம் ஆண்டு, “ச்சூர்” மறைமாவட்டத்தின் (Diocese of Chur) தலைமைக் குருவாகவும் (Vicar-General) பதவி வகித்தார்.

1847ம் ஆண்டு, ஸ்விட்சர்லாந்தில் நடந்த “சொண்டேர்பன்ட்” (The Sonderbund War) சிவில் யுத்தத்தின் பின்னர், தீவிர அரசியல் (Radical party) கட்சி, கத்தோலிக்க உணர்வுகளை எதிர்த்தது. திருச்சபையின் பாதுகாப்பின் விளைவாக, தந்தை தியடோசியஸ் 1841ம் ஆண்டு, “அல்சேஸி”ற்கு (Alsace) ஓடிப்போனார். அதே வருடம் ஆகஸ்ட் மாதம் அவர் திரும்ப வந்தார். அவர், ஹோலி கிராஸ்/ தூய திருச்சிலுவை ஃபிரான்சிஸ்கன் சகோதரியரின் கல்வி நிறுவனத்தை நிறுவினார். 1844ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 16ம் நாள், “அல்டார்ஃப்” (Altorf) எனுமிடத்திலுள்ள கபுச்சின் தேவாலயத்தில், முதல் மூன்று அருட்சகோதரியர் மூன்றாம் நிலை தூய ஃபிரான்சிஸ் சபையின் (Third Order of St. Francis) சீருடைகளைப் பெற்றுக்கொண்டனர். கிறிஸ்துவில் ஆத்துமாக்களை ஜெயிப்பதற்காக, தங்கள் வாழ்க்கை முறையிலிருந்து எதையும் தடுக்கக்கூடிய எந்த ஒன்றையும் செய்யாமலிருக்க அவர்களது அமைப்பு சட்டங்கள், அனைவரையும் தங்களைக் கட்டிக்கொள்ளும்படி கட்டளையிட்டிருந்தன. இந்த அடித்தளத்திலிருந்து, கற்பிக்கும் சகோதரிகளின் சபை, “மென்ஸிங்கன்” (Menzingen) எனுமிடத்திலுள்ள அவர்களுடைய தலைமை இல்லத்தில் வளர்ந்தது.

பின்னர், தந்தை தியடோசியஸ், “இன்ஜென்பால்” (Ingenbohl) எனுமிடத்தில், “கருணையின் சகோதரியர்” (Sisters of Mercy) சபையை நிறுவினார். இரு சபையினரும் கல்விப் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். கருணையின் சகோதரிகள், ஏழைகளுக்கும் நோய்வாய்பட்டவர்களுக்கும் இல்லங்களை உருவாக்கினர். தனியார் மருத்துவ சேவைகளை மேற்கொண்டனர்.

இதற்கிடையில் தந்தை தியடோசியஸ், ஒரு பள்ளி ஆசிரியராக தன்னையும் பரபரப்பாக வைத்திருந்தார். அவர் “வோல்க்ஸ்குலேன்” (Volksschulen) பள்ளிகளில் மேற்பார்வையிடும் பணிகளையும் செய்தார். இது ஏழைகளுக்கு மட்டுமல்லாமல் மற்றவர்களும் கலந்துகொண்டனர். அவர் தொடர்ச்சியான பள்ளிகளை ஊக்குவித்தார். மற்றும், பயிற்சியாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் தொழில்நுட்ப அறிவுரைகளுக்கு ஆதரவாக இருந்தார். அவர் புதிதாக (Maria-Hilf zu Schwyz) எனப்படும் இயேசுசபை கல்லூரி ஒன்றை நிறுவினார். புதிய கத்தோலிக்க வாழ்க்கையைத் தூண்டுவதற்காக அவர் மத குருக்களுக்காக பிரபலமான பணிகளையும் தியானங்களையும் தொடங்கினார்.

சுவிஸ் ஆயர்களின் வருடாந்த மாநாட்டின் நிறுவனம் உருவாவதற்கு, இவரது முயற்சிகளே காரணமாக இருந்தது. சுவிஸ் கத்தோலிக்கர்களின் கத்தோலிக்க உணர்வுகளை வலுப்படுத்தவும், சமூக வேலைகளை ஒழுங்கமைக்கவும், “பக்தி சபையை” (Pius Society) நிறுவினார்.

சிறுவர்கள், பயிற்சி பெற்றவர்கள், புறக்கணிக்கப்பட்ட சிறுவர்கள், மற்றும் வெளியேற்றப்பட்ட கைதிகள் போன்ற உதவியற்ற மற்றும் சார்ந்து இருக்கும் கவனிப்பு மற்றும் ஆய்வுகளின் மீது அவர் மிகவும் ஆர்வமாக இருந்தார். தொழில் சம்பந்தமான கேள்விகளுக்கு, 1863ம் ஆண்டு, பிராங்க்ஃபோர்ட்டில் தமது உரையில் அவர் தம்மை வெளிப்படுத்தினார். தொழிற்துறை, தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு கடன் தரும் வங்கிகள் ஆகியவற்றை கிறிஸ்தவ மயமாக்க கோருகையில், அவர் பின்வருமாறு கூறினார்:
"முன்பு, மடாலயங்கள் தொழிற்சாலைகளாக மாறியது; இப்போது தொழிற்சாலைகள் மடாலயங்களாக மாறும்; இலாபங்கள் தொழிலாளர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்".

இந்த யோசனையை நிறைவேற்றுவதற்காகம், தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. ஆனால் அவை நிறுவியவர்களிடையே வணிக திறமையின்மை காரணமாக அவை தோல்வியடைந்தன. தந்தை தியடோசியஸ், (Ingenbohl) எனுமிடத்தில், புத்தகங்கள் அச்சிடும் மற்றும் புத்தக-கட்டு அமைப்பு ஒன்றையும், புத்தகங்கள் விநியோகத்திற்கான ஒரு சமுதாயத்தையும் நிறுவினார்.

தந்தை தியடோசியஸ், பலரின் வாழ்வில் ஆன்மீக வழிகாட்டியாக திகழ்ந்தார். அத்துடன் பல குடும்பங்களில் அப்போஸ்தல வாழ்வை அறிமுகப்படுத்தினார். அத்துடன் பள்ளிகளிலும் மருத்துவ மனைகளிலும் பல தொழிற்சாலைகளிலும் ஆன்மீக வழிகாட்டியாகப் பணியாற்றினார்.
இவர் கைவிடப்பட்டவர்களுக்கென்று பல இல்லங்களை நிறுவினார். அதன்பிறகு ஆண்களுக்கென சில மருத்துவப் பயிற்சி பெறும் இல்லங்களை நிறுவினார். இடைவிடாமல் பணியாற்றி பல அச்சிடும் நிறுவனங்களையும், நூலகங்களையும், தொழிற்சாலைகளையும் நிறுவினார். இவர் பல பள்ளிகளை ஒருங்கிணைக்கும் பணியை சிறப்பாக ஆற்றினார். இவர் "மக்களின் மறைப்பரப்பு பணியாளர்" என்றழைக்கப்பட்டார்.

Sts. Saint Faustinus and Saint Jovita 15-2-20

Saint of the Day : (15-02-2020)

Sts. Saint Faustinus and Saint Jovita

Saint Faustinus

Born to the nobility in 2nd century Italy, the older brother of Saint Jovinus. Priest. Zealous preacher in Brescia, Milan, Rome, and Naples. Tortured and martyred in the persecution of Emperor Hadrian.
While their cultus is ancient and widespread, recent scholarship indicates that the story of Jovinus and Faustinus was a pious fiction mistaken for a biography.

Born : 
at Brescia, Lombardy, Italy

Died : 
with his brother, he was thrown to the lions, but the animals refused to touch the men
• beheaded in 120 at Brescia, Italy
• relics reported in Brescia, Rome, Verona, and Bologna. 

Patronage : 
Brescia, Italy
• Credera Rubbiano, Italy


Saint Jovita

Born to the nobility in 2nd century Italy, the younger brother of Saint Faustinus. Deacon. Zealous preacher in Brescia, Milan, Rome, and Naples. Tortured and martyred in the persecution of Emperor Hadrian.

While their cultus is ancient and widespread, recent scholarship indicates that the story of Jovinus and Faustinus was a pious fiction mistaken for a biography.

Born : 
at Brescia, Lombardy, Italy
• Credera Rubbiano, Italy

Died : 
with his brother, he was thrown to the lions, but the animals refused to touch the men
• beheaded in 120 at Brescia, Italy
• relics reported in Brescia, Rome, Verona, and Bologna

Patronage : 
Brescia, Italy

புனிதர்கள் ஃபாஸ்டினுஸ் மற்றும் ஜோவிட்டா பெப்ரவரி 15

† இன்றைய புனிதர் †
(ஃபெப்ரவரி 15)
புனிதர்கள் ஃபாஸ்டினுஸ் மற்றும் ஜோவிட்டா
படைப்பு முழுவதற்கும் அவர் தம் இரக்கத்தை வெளிப்படுத்தினார் (சீஞா 16:16)
ஃபாஸ்டினுஸ்  மற்றும் ஜோவிட்டார் இருவரும் இத்தாலியில் , லம்பார்தேயில் உள்ள ப்ரசியா என்னும் இடத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் .உடன் பிறந்த சகோதரர்கள் . முதலாமவர் குருவாக இருந்தார் .இரண்டாமரோ திருத்தொண்டராக இருந்தார் .பாரம்பரியத் தகவல்களின்படி இருவருமே தீவிரமாக நற்செய்தியைப் போதித்து கிறிஸ்துவை மற்றவர்கள் அறியச் செய்வதில் முனைப்புக் காட்டினார்கள் என்பது தெரிகிறது.
கிறிஸ்தவர்களைக் கொன்றழித்து ஆனந்தம் அடைந்த அரசர்களை மகிழ்விக்க ஆளுநர்களும் கங்கனம் கட்டிச் செயல்பட்டார்கள் . அப்படியான  ஆளுநர்களுள் ஒருவரான ஜூலியன் இச்சகோதரர்கள் இருவரையும் கைது செய்தான் .துன்புறுத்தி குதூகலித்தான் .ப்ரசியாவிலிருந்து பிலான் நகருக்கும் அங்கிருந்து உரோமைக்கும் ,பிறகு நேப்பிள்ஸ் பகுதிக்கும் மீண்டும் ப்ரசியாவுக்கும் இருவரையும் கட்டி இழுத்துச் சென்றான்.

அப்போது யதார்த்தமாக அந்தப்பக்கமா வந்து பேரரசர் அட்ரியன் இருவரைப் பற்றியும் விசாரித்தான் .இதைக் குறித்து ,அப்போது பேரரசன் அட்ரியனுடன் ப்ரசியாவுக்கு வந்திருந்த புனித கலாசெருஸ் எழுதியுள்ளார் .இவர் ப்ரசியாவைத் தாய் மண்ணாகவும் ,பேரரசர் அட்ரியன் அரசவையில் அதிகாரியாகவும் இருந்தவர்.
விசாரணையின்போது சூரியனை வணங்கும்படி கட்டளை பிறப்பித்தான் பேரரசன் . அதை மறுத்து, "உலகிற்கு ஒளிதர சூரியனைப் படைத்த இறைவனைத் தவிர வேறொன்றையும் வணங்க மாட்டேன் " என்று ஃபாஸ்டினுஸ் துணிச்சலுடன் பதிலுரைத்தார்.

தாங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு முன்பாக இருந்த சிலை ஒளிரும் படி வடிவமைக்கப்பட்டிருந்ததைக் கவனித்த ஜோவிட்டா "விண்ணகத்திலிருந்து ஆட்சி செய்யும் இறைவனையே நாங்கள் வணங்குகிறோம் . அவரை சூரியனைப் படைத்தார். நீங்களும் இந்த சிலையும் கருகிப்போவீர்கள் .இதை வணங்கும் அனைவருக்கும் அவமானமே வந்து சேரும்" என்று ஒளிபடைத்த கண்ணினனாக முழங்கினார்.
உடனேயே அச்சிலை கறுத்துப்போனது. அங்கு நின்றிருந்த பூசாரிகளை அனுப்பி சிலையைச் சுத்தம் செய்யும்படி அரசன் கட்டளையிட்டான் . பயந்து நடுங்கி தயங்கியபடியே அவர்கள் சென்றார்கள் . சென்று அச்சிலையைத் தொட்டதும் அது சாம்பல் போல உதிர்ந்து விழுந்தது.
கோபத்தின் உச்சத்திற்குப் போன பேரரசன் பசியோடும் பட்டினியோடும் வளர்க்கப்பட்டிருந்த சிங்கங்களுக்கு  இரையாக்கு வதற்காக அதன் குகைகளுக்கு இருவரையும் இழுத்துச் செல்ல கட்டளையிட்டான் . அதன்படியே வீரர்கள் செய்தார்கள் . குகையின் கதவுகள் திறக்கப்பட்டன. சிங்கங்கள் பாய்ந்து வந்தன . பாய்ந்து வந்த சிங்கங்கள் அவர்கள் முன் மண்டியிட்டு பணிந்து நின்றன .இதை நேரில் பார்த்த புனித கலாசெருஸ் உண்மைக் கடவுளை நம்பித் தன்னோடு 12 ஆயிரம் மக்களைச் சேர்த்துத் திருமுழுக்குப் பெற்ற கிறிஸ்தவரானார்.
பிறகு இருவரையும் சிறையில் அடைத்து உணவும், நீரும் கொடுக்காது பட்டினி போட்டு கொல்லத் தயாரானார்கள் . சிறையில் இருந்தபோது வானதூதர்கள் வந்து இருவரையும் திடப்படுத்தினார்கள் . பயம் போக்கி மகிழ்ச்சி அளித்தார்கள் .அந்த அறை முழுவதும் நிறைந்திருந்த ஒளியைப் பார்த்த எண்ணற்றோர் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஆனார்கள் . நிறைவில் இருவரும் தலை வெட்டப்பட்டு மறைசாட்சி ஆனார்கள் .இது 120 ஆம் ஆண்டில் நடந்தது.
தங்கள் நாட்டின் முதன்மைப் பாதுகாவலராக வைத்த இவர்களிடம் மன்றாடுவதுடன் , இவர்களின் புனிதப் பொருள்களையும் ப்ரசியா மக்கள் பாதுகாத்து வருகிறார்கள்
.

ஒளிரும் இறைவனின் திரு முக தரிசனத்தை படைப்பு அனைத்திலும் தேடுவோர் அவை சொல்லும் வாழ்விற்கான இறை நற்செய்தியைக் கண்டுகொள்ள முடியும்.