புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

03 June 2020

புனித கொன்சாகா கொன்சா (1862-1886) June 3

ஜூன் 3 

புனித கொன்சாகா கொன்சா (1862-1886)
இவர் உகாண்டாவில், பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்தவர்.

தெகுசாகா என்பவரிடத்தில் வேலை பார்த்துவந்த இவர், கீழ்ப்படிதலோடும் நம்பிக்கைக்குரியவராகவும் அறிவில் சிறந்தவராகவும் கடின உழைப்பாளியாகவும் இருந்ததால், அவர் இவரைத் தன்னுடைய மகனைப் போன்று பார்த்துக்கொண்டார்.

ஒருமுறை உகாண்டா மன்னருடைய அரண்மனையில் பணியாற்றுவதற்கு நம்பிக்கைக்குரிய பணியாளர்கள் தேவைப்பட்டதால், தெகுசாகா இவரை மன்னரிடத்தில் அனுப்பிவைத்தார். அங்கு இவர் மிகுந்த பொறுப்போடும் பணியாளர்களிடத்தில் இரக்கத்தோடும் நடந்துகொண்டார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இவர் அருள்பணியாளர் லூர்தல் என்பவரிடத்தில் திருமுழுக்குப் பெற்று, கிறிஸ்தவரானார். கிறிஸ்தவரான பின்பு இவர் கிறிஸ்துவின்மீது மிகுந்த நம்பிக்கைகொண்டு ஓர் உண்மைக் கிறிஸ்தவராக வாழ்ந்து வந்தார்.

1886 ஆம் ஆண்டு உகாண்டாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக மிகப்பெரிய கலவரம் வெடித்தது. அக்கலவரத்தில் இவரும் இவரோடு சேர்த்து ஒருசிலரும் கொல்லப்பட்டார்கள். இவருக்கு 1964 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 18 ஆம் நாள், திருத்தந்தை ஆறாம் பவுலால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

இவர் சிறைக் கைதிகளுக்குப் பாதுகாவலர்.

புனிதர் கெவின் June 3

† இன்றைய புனிதர் †
(ஜூன் 3)

✠ புனிதர் கெவின் ✠
(St. Kevin of Glendalough)
நிறுவனர், மடாதிபதி:
(Founder and Abbot)

குரு மற்றும் மடாதிபதி:
(Priest and Abbot)

பிறப்பு: கி.பி 498
அயர்லாந்து
(Ireland)

இறப்பு: ஜூன் 3, 618

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

புனிதர் பட்டம்: டிசம்பர் 9, 1903
திருத்தந்தை பத்தாம் பயஸ்
(Pope Pius X)

நினைவுத் திருநாள்: ஜூன் 3

பாதுகாவல்:
பிளாக்பேர்ட்ஸ் (Blackbirds), டப்ளின் பேராயம் (Archdiocese of Dublin), க்ளென்டலோ (Glendalough), கில்மநாக் (Kilnamanagh)

அயர்லாந்து (Ireland) நாட்டின் "விக்லோ" (County Wicklow) மாகாணத்திலுள்ள "க்ளென்டலோ" (Glendalough) துறவு மடத்தின் நிறுவனரும், அதன் முதல் மடாதிபதியுமான கெவின், ஒரு ஐரிஷ் புனிதர் ஆவார்.

அயர்லாந்து (Ireland) நாட்டின் தலைநகரான டப்ளின் (Dublin) நகரில், ஒரு உள்ள ஒரு ஃபிரான்சிஸ்கன் கான்வென்ட்டின் (Franciscan Convent) பதிவுகளில், பாதுகாக்கப்பட்ட ஒரு இடைக்கால இலத்தீன் சுய வரலாற்றுக் குறிப்பு (Latin Vita) உள்ளது. இவ்வரலாற்றுக் குறிப்புகளின்படி கெவின், கோய்ம்லாக் (Coemlog) மற்றும் கோமல் (Coemell of Leinster) ஆகிய பிரபுத்துவ பெற்றோருக்குப் பிறந்தவர் ஆவார்.

ஆயர் லூகிடஸ் (Bishop Lugidus) என்பவரால் குருத்துவ அருட்பொழிவு செய்விக்கப்பட்ட கெவின், உடனடியாக க்ளென்டலோ (Glendalough - a glacial valley) எனும் ஒரு பனிப்பாறை பள்ளத்தாக்குக்குச் சென்றார். இலத்தீன் சுய வரலாற்றுக் (Latin Vita) குறிப்புகளின்படி, தற்போது "புனிதர் கெவின் படுக்கை" (St. Kevin's Bed) என்று அழைக்கப்படும் வெண்கல வயது கல்லறை (Bronze Age tomb) ஒரு குகையில் ஒரு துறவியாக வாழ்ந்தார். அங்கே அவர் ஒரு தேவதூதரால் அவர் வழிநடத்தப்பட்டார். புனித கெவின் படுக்கை, மலையின் விளிம்பிற்கு மிக அருகில் உள்ள பாறை முகத்தில் மனிதனால் உருவாக்கப்பட்ட குகை என்று சிறப்பாக விவரிக்க முடியும். சுமார் 30 அடி உயரமான இதன் மேலிருந்து, ஏரியை காணலாம். 3 அடி உயரமும் 2½ அடி அகலமும் கொண்ட ஒரு குறுகிய பாதை வழியாக அதை அணுகலாம். குகையை அணுகுவது மிகவும் கடினமாகும்.

மடாலயம்:
கெவின் இயற்கையுடன் ஒரு அசாதாரண நெருக்கத்துடன் அங்கு ஒரு துறவியின் வாழ்க்கையை வாழ்ந்தார். அவரைச் சுற்றியுள்ள விலங்குகளும் பறவைகளுமே அவரது தோழர்கள் ஆவர். அவர் ஏழு ஆண்டுகளாக விலங்குகளின் தோல்களை மட்டுமே அணிந்துகொண்டு, கற்களில் தூங்கி, மிகக் குறைவாக சாப்பிட்டு வாழ்ந்தார்.

அவர் வெறுங்காலுடனேயே பயணித்த அவர், ஜெபத்தில் தனது நேரத்தை செலவிட்டார். பல சீடர்கள் விரைவில் இவரிடம் ஈர்க்கப்பட்டனர். மேலும் கெவின் செல் (Kevin's Cell) என்று அழைக்கப்படும் ஒரு சுவரால் சூழப்பட்ட குடியேற்றம், ஏரி கரைக்கு அருகில் நிறுவப்பட்டது. கி.பி. 540ம் ஆண்டு வாக்கில் ஒரு ஆசிரியராகவும், தூய மனிதராகவும் இவரது புகழ் வெகுதூரம் பரவியது. அவரது உதவியையும் வழிகாட்டலையும் நாட பலர் வந்தார்கள். காலப்போக்கில் க்ளென்டலோ (Glendalough), புனிதர்கள் மற்றும் அறிஞர்களின் புகழ்பெற்ற செமினரியாகவும், பல மடங்களின் நிறுவனராகவும் வளர்ந்தார்.

கி.பி. 544ம் ஆண்டு, கெவின் வெஸ்ட்மீத் (County Westmeath) மாகாணத்தில் உள்ள யுஸ்னீச் மலைக்குச் (Hill of Uisneach) சென்று புனித மடாதிபதிகளான கொலம்பா (Columba), காம்கால் (Comgall) மற்றும் கன்னிச் (Cannich) ஆகியோரை பார்வையிட்டார். பின்னர் அவர் க்ளோன்மேக்னோயிஸ் (Clonmacnoise) சென்றார். அங்கு புனித சியரன் (St. Cieran) மூன்று நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டிருந்தார். தனது சமூகத்தை உறுதியாக நிலைநாட்டிய அவர், நான்கு ஆண்டுகளாக தனிமையில் ஓய்வு கொண்டார். மேலும் தனது துறவிகளின் உற்சாகமான வேண்டுகோளின் பேரில் மட்டுமே க்ளென்டலோவுக்குத் திரும்பினார். கி.பி. 618ம் ஆண்டில் அவர் இறக்கும் வரை, கெவின் க்ளென்டலோவில் உள்ள தனது மடத்திற்கு தலைமை தாங்கினார். உண்ணாவிரதம், பிரார்த்தனை, மற்றும் கற்பித்தல் மூலம் தனது வாழ்க்கையை வாழ்ந்தார். புனிதர் கெவின் டப்ளின் மறைமாவட்டத்தின் (Diocese of Dublin) பாதுகாவல் புனிதர்களில் ஒருவர் ஆவார்.

அவர் ஐரிஷ் புனிதர்களின் இரண்டாவது சபையைச் (Second order of Irish Saints) சேர்ந்தவர் ஆவார். இறுதியில், க்ளென்டலோ, அதன் ஏழு தேவாலயங்களுடன், அயர்லாந்தின் பிரதான யாத்திரை தலங்களில் ஒன்றாக மாறியது.

புனிதர் சார்ளஸ் லுவாங்கா June 3

† இன்றைய புனிதர் †
(ஜூன் 3)

✠ புனிதர் சார்ளஸ் லுவாங்கா ✠
(St. Charles Lwanga)
மறைசாட்சி:
(Martyr)

பிறப்பு: ஜனவரி 1, 1860
புகாண்டா அரசு, ஆபிரிக்கா
(Kingdom of Buganda)

இறப்பு: ஜூன் 3, 1886 (வயது 26)
நமுகோங்கோ, புகாண்டா அரசு, ஆபிரிக்கா
(Namugongo, Kingdom of Buganda)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)
லூதரன் திருச்சபை
(Lutheranism)

முக்திபேறு பட்டம்: 1920
திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட்
(Pope Benedict XV)

புனிதர் பட்டம்: அக்டோபர் 18, 1964
திருத்தந்தை ஆறாம் பவுல்
(Pope Paul VI)

முக்கிய திருத்தலங்கள்:
உகாண்டா மறைசாட்சியர் பேராலயம், முன்யோன்யோ மறைசாட்சியர் திருத்தலம்
(Basilica of the Uganda Martyrs, Munyonyo Martyrs Shrine)

நினைவுத் திருநாள்: ஜுன் 3

பாதுகாவல்:
ஆப்பிரிக்க கத்தோலிக்க இளைஞர் செயல்பாடுகள் (African Catholic Youth Action), மனம் மாறியவர்கள் (Converts), துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டவர்கள் (Torture victims)

புனிதர் சார்ளஸ் லுவாங்கா கத்தோலிக்க திருச்சபைக்கு மதம் மாறி வந்த உகாண்டா நாட்டு ஆதிவாசி ஆவார். இவர் கிறிஸ்துவின் மீதுள்ள தமது விசுவாசத்திற்காக துன்புறுத்தப்பட்டு மறைசாட்சியாக கொல்லப்பட்டவர் ஆவார். 13 முதல் 30 வயதுக்குள்ளான 22 இளைஞர்களில் ஒருவராக சார்ளஸ் லுவாங்காவும் உயிருடன் தீவைத்து எரித்துக் கொல்லப்பட்டார்.

"பகாண்டா ஆதிவாசி" (Baganda tribe) இனத்தைச் சேர்ந்த சார்ளஸ் லுவாங்கா, தற்போதைய உகாண்டா நாட்டின் மத்திய தென் பிராந்தியத்தில் பிறந்தவர் ஆவார். அன்றைய புகாண்டா அரசின் மன்னனான "இரண்டாம் முவாங்காவின்" (Court of King Mwanga II of Buganda) அரசவையில் தலைமை நிர்வாகியாக பணியாற்றியவர் ஆவார். இவர் "பியர் கிரௌட்" (Pere Giraud) என்ற கத்தோலிக்க குருவால் 1885ம் ஆண்டு, நவம்பர் மாதம், 15ம் நாளன்று, திருமுழுக்கு செய்விக்கப்பட்டார்.

வெளிநாட்டு காலனித்துவத்தை எதிர்க்கும் அரசனின் முயற்சியாக, புதிதாக கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்கள் தமது விசுவாசத்தை கைவிட வலியுறுத்தினான். கிறிஸ்தவ விசுவாசத்தை கைவிட மறுத்த கத்தோலிக்க மற்றும் ஆங்கிலிக்கன் சமூகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்களை 1885 மற்றும் 1887 ஆகிய வருடங்களுக்கிடையான காலகட்டத்தில் தூக்கிலிட்டு கொன்றான். தமது அரசவையிலிருந்த சார்ளஸ் லுவாங்கா உள்ளிட்ட தமக்கு நெருக்கமான அலுவலர்களையும் கொன்றான்.

மதத்திற்கான வீரமரணம்:
(Martyrdom)
பண்டைய புகாண்டா நாட்டில் கிறிஸ்தவ துன்புறுத்தல்கள் 1885ம் ஆண்டு தொடங்கின. கத்தோலிக்க சமூகத்தினரின் தலைவரான ஆயர் "ஜேம்ஸ் ஹன்னிங்டன்" (Bishop James Hannington) உள்ளிட்ட ஆங்கிலிக்கன் சமூகத்தினர் புகாண்டாவின் அரசன் "இரண்டாம் முவாங்காவால்" (King Mwanga II of Buganda) கொன்று குவிக்கப்பட்டனர். அதன் பின்னர், அரசவையில் தலைமை நிர்வாகியாக பணியாற்றியவரும் கிறிஸ்தவ கொள்கைகளை கற்பிக்கும் ஆசிரியருமான (Lay Catechist) "ஜோசஃப் முகாஸா பலிகுட்டெம்ப்" (Joseph Mukasa Balikuddembe) என்பவர் அரசனின் இத்தகைய கொலை செயல்களுக்காக அவனை கண்டித்தார். அரசனுக்கு நல்ல ஆலோசனைகள் கொடுத்தார். ஆனால் அரசனோ, "ஜோசஃப் முகாஸா'வை" பிடித்து தலையை வெட்டி கொலை செய்தான். அத்துடன், 1885ம் ஆண்டு, நவம்பர் மாதம், 15ம் நாளன்று, ஜோசஃபின் ஆதரவாளர்களையும் அவரை பின்பற்றுபவர்களையும் கைது செய்தான். கொலை செய்யப்பட்ட "ஜோசஃப் முகாஸா'வின்" பணிகளை சார்ளஸ் லுவாங்காவிடம் அரசன் ஒப்படைத்தான். அன்றைய தினம்தான் லுவாங்கா திருமுழுக்கு பெற்றார்.

அரசன் "இரண்டாம் முவாங்கா'வின்" (King Mwanga II of Buganda) முறைகேடான, ஒழுக்கக்கேடான பாலியல் விருப்பங்களுக்கு ஒப்புக்கொள்ளாத சார்ளஸ் லுவாங்கா உள்ளிட்ட இளைஞர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களனைவரும் கொல்லப்படுவதன் முதல் நாளன்று, சார்ளஸ் லுவாங்கா அங்கிருந்த மற்ற இளைஞர்களுக்கு திருமுழுக்கு அளித்து கிறிஸ்தவர்களாக மனம் மாற்றினார்.

நாட்டை அந்நிய ஆக்கிரமிப்புகளிலிருந்து காப்பாற்றுவதற்காக கிறிஸ்தவ துன்புறுத்தல்களை தொடங்கிய அரசன் முவாங்காவின் கோபம், தன்னுடைய சுய பாலியல் விருப்பங்களுக்கு இளைஞர்கள் ஒத்துப்போகாததால் அதிகமாக எரிந்தது. அரசன் அவ்விளைஞர்களை கொல்ல தீர்மானித்தான். இருப்பினும் அவர்களை கிறிஸ்தவ விசுவாசத்தை விட்டுவிட வற்புறுத்தினான். ஆனால், அனைத்து இளைஞர்களுமே கிறிஸ்தவ விசுவாசத்தில் உறுதியாக இருந்தார்கள்.

இளைஞர்கள் 22 பேரும் கொல்லப்பட வேண்டிய நாளான  1886ம் ஆண்டு, ஜூன் மாதம், 3ம் தேதியும் வந்தது. சார்ளஸ் லுவாங்கா தனியாக கொல்லப்படுவதற்காக பிறரிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டார். அவர் எரிக்கப்படுமுன்னர், எரிப்பவனைப் பார்த்து, "இந்த தீ எனக்கு குளிரும் தண்ணீர் போன்றது; நீயும் மனம் மாறு; என்னைப்போல கிறிஸ்தவனாகு" என்றார். பின்னர் அவர் உயிருடன் எரிக்கப்பட்டார்.

கத்தோலிக்க இளைஞர்கள் 12 பேரும், ஆங்கிலிக்கன் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 9 பேரும், தனித்தனியாக உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். அதன் பின்னர், "முபாகா டுஸின்டே" (Mbaga Tuzinde) என்ற கத்தோலிக்க இளைஞரும் கிறிஸ்தவ விசுவாசத்தை விட மறுத்த காரணத்துக்காக மரணத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டு, தீயில் எரியப்பட்டார்.

“உகாண்டா மறைசாட்சியரின் பேராலயம்” (Basilica of the Uganda Martyrs) அவர்கள் கொல்லப்பட்ட "நமுகோங்கோ" (Namugongo) என்ற இடத்தில் கட்டப்பட்டது.

சார்ளஸ் லுவாங்காவுடன் மரணத்தில் உடன் பயணித்த பிற கத்தோலிக்கர்க இளைஞர்களும் 1964ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 18ம் நாளன்று, திருத்தந்தை ஆறாம் பவுல் (Pope Paul VI) அவர்களால் புனிதர்களாக அருட்பொழிவு செய்விக்கப்பட்டனர்.


இன்றைய புனிதர் :
(03-06-2020)
புனித சார்லஸ் லுவாங்கா 
( St. Charles Lwanga )
மறைசாட்சி/ ஆப்ரிக்க இளைஞர்களின் பாதுகாவலர் :

பிறப்பு :1860 அல்லது 1865
உகாண்டா, ஆப்ரிக்கா

இறப்பு : ஜூன் 3, 1886
ஆப்ரிக்கா

முத்திபேறு பட்டம்: 1920
திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட்

புனிதர் பட்டம்: 18 அக்டோபர் 1964
திருத்தந்தை ஆறாம் பவுல்

நினைவுத் திருநாள் : ஜுன் 3

"வெள்ளைக் குருக்கள்" என்றழைக்கப்படும் துறவற சபையினர் ஆப்ரிக்காவில் நைல் நதி மேற்குப்பகுதியில் வாழ்ந்து வந்து மக்களிடையே 1878ல் மறைபரப்புப்பணியில் இறங்கினர். 1879ம் ஆண்டு பெரிய சனிக்கிழமையன்று முதன்முதலாக சிலர் திருமுழுக்கு பெற்றனர். இவர்களில் சிலர் இஸ்லாம் மறையிலிருந்து புரோட்டஸ்டாண்டு சபைக்கு மாறி, அதிலிருந்து கத்தோலிக்கரானவர்கள்.
கத்தோலிக்க மெய்மறை மிக விரைவாக பரவுகிறதென்பதை உணர்ந்த இஸ்லாமியரின் தூண்டுதலால் 1886ல் முவாஷ்கா (Muwashka) என்ற அரசன் கத்தோலிக்கர்களைத் துன்புறுத்த ஏவிவிட்டான்.
சார்லஸ் லுவாங்காவும் அவரின் தோழர்களும் அரச அவையில் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் எல்லாரும் 13-30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள். முவாஷ்கா ஓரின சேர்க்கைக்கு அடிமைப்பட்டவனாக இருந்தான். அவன் அரச அலுவல் புரிந்தவர்களைக் கெடுக்க சூழ்ச்சி செய்தபோது, சார்லஸ் தம் தோழர்களிடம், "இது தீமையானது, கொடுமையானது" என்று அறிவுரை கூறி ஓரின சேர்க்கையில் ஈடுபடாமல் காப்பாற்றி வந்தார். சார்லஸ் தான் புதிதாக பெற்றுக்கொண்ட விசுவாசத்திற்காக நமுகொஸ்கோ (Namukosco) என்ற இடத்தில் நெருப்பிலிடப்பட்டு கொல்லப்பட்டார்.
சார்லஸின் அறிவுரைப்படி மற்ற இளைஞர்கள் தங்கள் புனிதத்தில் நிலைத்து நின்றனர். 13 வயதான சிறு பெண் தனது கற்புக்காக மற்றவர்களைப்போல உயிரைத் தியாகம் செய்தார். இந்த வேதகலாபனை முடிந்த மறு ஆண்டிலேயே ஆப்பிரிக்காவின் இந்தப் பகுதியில் மறைபரப்பு பணி மிக விரைவாக பரவியது. ஆப்பிரிக்காவில் இந்த மறைசாட்சிகளின் இரத்தம் சிந்தப்பட்டதன் பயனாக ஒரு புதுயுகம் தோன்றிவிட்டது. முழுமையான சுதந்திரம் பெற்று மகிழும் ஆப்பிரிக்காவாக பொலிவுடன் வளர்ந்து கொண்டிருக்கிறது. இவர்களின் வேதனையில் புதிய யுகத்தை சார்ந்த ஆப்பிரிக்கா மக்களின் ஆன்மீக மேம்பாட்டுக்கான பாடங்கள் பல மிளிர்கின்றன.
மறைசாட்சிகள் தூண்களில் கட்டப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்டனர். சாட்டையடி பட்டனர். ஈட்டிகளால் குத்தப்பட்டனர், சுட்டெரிக்கப்பட்டனர். தலை வெட்டப்பட்டனர். இப்படி இருந்தும் ஆப்பிரிக்காவில் கிறிஸ்தவர்கள் பலுகிப் பெருகினர்.

செபம் :
இரக்கமே உருவான இறைவா! 
இரத்தம் சிந்தி மறைசாட்சிகளாக மரித்து, பல கிறிஸ்தவர்களை உருவாக்கிய புனித லுவாங்கா சார்லசை நினைத்து, அவரின் மகத்துவமிக்க, மேன்மையான பணிக்காக உம்மை நாங்கள் போற்றுகிறோம், புகழ்கின்றோம். ஆப்பிரிக்காவில் வாழும் ஒவ்வொரு கிறிஸ்தவர்களையும், நீர் நிறைவாக ஆசீர்வதியும். உமது மறைபரப்பு பணியை ஆற்றிக் கொண்டிருக்கின்ற உமது ஊழியர்களை, கண்ணின் இமைபோல நீர் காத்து வழிநடத்தியருள வேண்டுமாய், இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம். ஆமென்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.


Saint of the Day : (03-06-2020)

St. Charles Lwanga and Companions

St. Charles and many other martyrs for the faith died between November 15, 1885 – January 27, 1887 in Namugongo, Uganda. St. Charles and his companions were beatified in 1920 and canonized by Pope Paul VI in 1964.

In 1879 Catholicism began spreading in Uganda when the White Fathers, a congregation of priests founded by Cardinal Lavigerie were peacefully received by King Mutesa of Uganda.

The priests soon began preparing catechumens for baptism and before long a number of the young pages in the king’s court had become Catholics.

However, on the death of Mutesa, his son Mwanga, a corrupt man who ritually engaged in pedophilic practices with the younger pages, took the throne.

When King Mwanga had a visiting Anglican Bishop murdered, his chief page, Joseph Mukasa, a Catholic who went to great length to protect the younger boys from the king’s lust, denounced the king’s actions and was beheaded on November 15, 1885.

The 25 year old Charles Lwanga, a man wholly dedicated to the Christian instruction of the younger boys, became the chief page, and just as forcibly protected them from the kings advances.

On the night of the martyrdom of Joseph Mukasa, realizing that their own lives were in danger, Lwanga and some of the other pages went to the White Fathers to receive baptism. Another 100 catechumens were baptized in the week following Joseph Mukasa’s death.

The following May, King Mwanga learned that one of the boys was learning catechism. He was furious and ordered all the pages to be questioned to separate the Christians from the others.  The Christians, 15 in all, between the ages of 13 and 25, stepped forward. The King asked them if they were willing to keep their faith. They answered in unison, “Until death!”

They were bound together and taken on a two day walk to Namugongo where they were to be burned at the stake.  On the way, Matthias Kalemba, one of the eldest boys, exclaimed, “God will rescue me. But you will not see how he does it, because he will take my soul and leave you only my body.”  They executioners cut him to pieces and left him to die alone on the road.

When they reached the site where they were to be burned, they were kept tied together for seven days while the executioners prepared the wood for the fire.

On June 3, 1886, the Feast of the Ascension, Charles Lwanga was separated from the others and burned at the stake. The executioners slowly burnt his feet until only the charred remained. Still alive, they promised him that they would let him go if he renounced his faith. He refused saying, “You are burning me, but it is as if you are pouring water over my body.”  He then continued to pray silently as they set him on fire. Just before the flames reached his heart, he looked up and said in a loud voice, “Katonda! – My God!,” and died.

His companions were all burned together the same day all the while praying and singing hymns until they died.

There were 22 protomartyrs in all. The last of the protomartyrs, a young man named John Mary, was beheaded by King Mwanga on January 27, 1887.

The persecutions spread during the reign of Mwanga, with 100 Christians, both Catholics and Protestants, being tortured and killed.

St. Charles Lwanga is the patron saint of African Catholic Youth Action.

---JDH---Jesus the Divine Healer---