புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

05 May 2020

புனிதர் நன்ஸியோ சல்ப்ரிஸியோ ✠(St. Nunzio Sulprizio) May 5

† இன்றைய புனிதர் †
(மே 5)

✠ புனிதர் நன்ஸியோ சல்ப்ரிஸியோ ✠
(St. Nunzio Sulprizio)
பொதுநிலையாளர்:

பிறப்பு: ஏப்ரல் 13, 1817
பெஸ்கோஸ்சென்ஸோனெஸ்கோ, பெஸ்கரா, இரண்டு சிசிலிய இராச்சியம்
(Pescosansonesco, Pescara, Kingdom of the Two Sicilies)

இறப்பு: மே 5, 1836 (வயது 19)
நேபிள்ஸ், இரண்டு சிசிலிய இராச்சியம்
(Naples, Kingdom of the Two Sicilies)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திப்பேறு பட்டம்: டிசம்பர் 1, 1963
திருத்தந்தை நான்காம் பவுல்
(Pope Paul VI)

புனிதர் பட்டம்: அக்டோபர் 14, 2018
திருத்தந்தை பிரான்சிஸ்
(Pope Francis)

நினவுத் திருநாள்: மே 5

பாதுகாவல் : ஊனமுற்றோர், கொல்லர்கள், தொழிலாளர்கள், "பெஸ்கோஸ்சென்ஸோனெஸ்கோ நகரம்" (Pescosansonesco)

புனிதர் நன்ஸியோ சல்ப்ரிஸியோ, இத்தாலி நாட்டின் ரோமன் கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த ஒரு பொதுநிலையாளர் ஆவார். கொல்லர் பனியின் பயிற்சியாளராக இருந்த இவர், தமது சுருக்கமான வாழ்க்கையில்  மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். அவரை அறிந்தவர்களுக்கு, அவர் ஒரு மென்மையான மற்றும் பக்தியான நபராக கருத்தில் கொள்ளப்பட்டிருந்தார்.

இவரது மரணத்தின் பின்னர், தீராத நோயால் பாதிக்கப்பட்டிருந்த இருவர், நலம் வேண்டி இவரை வேண்டிக்கொண்டதால், இவரது பரிந்துரையால் அவர்கள் அதிசயமாக குணமானதாக நிரூபணமான காரணத்தால், இவருக்கு கி.பி. 1963ம் ஆண்டின் இறுதியில் அருளாளராக முக்திப்பேறு பட்டமளிக்கப்பட்டார். இரண்டாவது அதிசயத்தை உறுதிப்படுத்திய பின்னர், 2018ம் ஆண்டு, ஜூன் மாதம், 14ம் தேதி, திருத்தந்தை ஃபிரான்சிஸ், புனிதர் படத்துக்கான தனது ஒப்புதலை உறுதிப்படுத்தினார். அதே ஆண்டு, அக்டோபர் மாதம், 14ம் தேதியன்று, இவருக்கு புனிதர் பட்டமளித்தார்.

கி.பி. 1817ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 13ம் தேதி, உயிர்த்த ஞாயிறு பெருநாளின் சில நாட்களின் பின்னர் பிறந்த இவரது தந்தையின் பெயர், "டொமெனிக்கோ சல்ப்ரிஸியோ" (Domenico Sulprizio) ஆகும். இவரது தாயார், "ரோசா லூசியானி" (Rosa Luciani) ஆவார். இவர் பிறந்த காலத்தில் கடுமையான பஞ்சம் தலை விரித்தாடியது. பிறந்த அன்றே திருமுழுக்கு பெற்ற இவர், 1820ம் ஆண்டு, மே மாதம், 16ம் நாள், உறுதிப்பூசுதல் அருட்சாதனம் பெற்றார்.

1820ம் ஆண்டின் ஜூலை மாதம், இவருக்கு மூன்று வயதாகையில், இவரது தந்தை மரித்துப் போனார். அதன் பிறகு, நான்கு மாதங்களின் பின்னர், இவரது சின்னஞ்சிறு தங்கை "டோமேனிக்கா" (Domenica) மரித்துப்போனார். இவரது தாயார் வாழ்க்கையை ஓட்டுவதற்காக, 1822ம் ஆண்டு வயதான ஒருவரை மறுமணம் செய்துகொண்டார். வளர்ப்புத் தந்தை இவருடன் எப்போதும் கடுமையாகவே நடந்துகொண்டதால், இவர் தமது தாயாருடனும் பாட்டியுடனும் ஒண்டிக்கொண்டார். இதற்கிடையே கத்தோலிக்க குருவானவர் "டி ஃபேபிஸ்" (De Fabiis) என்பவர் நடத்திவந்த பள்ளியில் சேர்ந்து கல்வி கற்றார். அவரது குழந்தை பருவத்தில் அவர் திருப்பலிகளில் கலந்துகொள்ளவும், இயேசு கிறிஸ்துவை அறிந்து கொள்ளவும் நேரம் எடுத்துக்கொண்டார். ஆனால் அவரது முன்மாதிரியையும் புனிதர்களையும் பின்பற்றினார்.

கி.பி. 1823ம் ஆண்டு, மார்ச் மாதம், 5ம் தேதி, அவரது தாயார் மரித்துப்போகவே, இவர் தமது தாய்வழி பாட்டியான "அன்னா ரொசாரியா லூசியானி டெல் ரோஸ்சி" (Anna Rosaria Luciani del Rossi) என்பவருடன் வசிக்க சென்றார். கல்வியறிவற்ற அவரது பாட்டி, கிறிஸ்தவ விசுவாசத்தில் தீவிரமானவர். அடிக்கடி கால்நடையாகவே நடந்து  போகும் வழக்கமுள்ள இருவரும், தவறாது உள்ளூர் ஆலயத்தில் திருப்பலிகளில் பங்குகொண்டனர். அருட்தந்தை பேண்டாக்ஸி என்பவர் நிர்வகித்த ஏழை மாணவர்க்கான பள்ளியில் சேர்ந்து கல்வி கற்க தொடங்கினார். அவருடைய பாட்டி பின்னர் 1826ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 4ம் தேதியன்று இறந்தார். அதன்பின்னர், அவரது தாய்மாமன் அவரை கொல்லர் பணி கற்க சேர்த்துவிட்டார். அவரது மாமன் அவரை மிகவும் கடுமையாக நடத்தினார். ஒழுக்கமாக வாழுவதற்கு பட்டினி கிடக்க வேண்டும் என்று நினைத்த அவர், சல்ப்ரிஸியோவுக்கு சரியான உணவளிக்காமல் பட்டினி போட்டார். அவர் செய்யும் சின்னஞ்சிறு தவறுகளுக்காக அவரை அடித்து உதைத்து துன்புறுத்தினார். அவரது வயதுக்கு மீறிய வேலைகளை செய்த அவருக்கு 1837ம் ஆண்டு, ஒரு நோய்த்தொற்று ஏற்பட்டது. ஒரு குளிர்கால காலை வேளையில், அவரது மாமா அவரை "ரொக்கா டாக்லியாட்டாவின்" (Rocca Tagliata) சரிவுகளுக்கு பொருட்களை விநியோகம் செய்ய  அனுப்பியபோது அவருக்கு நோய்த்தொற்று  ஏற்பட்டது. அன்று மாலை, உழைப்பின் களைப்பால் அவர் சோர்வாகிப்போனார். ஒரு கால்  வீங்கிப் போனது. மற்றும் எரியும் காய்ச்சல் அவரை படுக்கையில் கட்டாயப்படுத்தி தள்ளியது. இதனை அவர் தமது ராமனிடம் தெரிவிக்கவில்லை. இருப்பினும் அவரால் காலையில் படுக்கையிலிருந்து எழுந்திருக்க இயலவில்லை. அவரது மாமாவுக்கு அவரது துன்பம் அலட்சியமாக இருந்தது. அவரது நிலை பின்னர் ஒரு கால் (Gangrene) செயலற்றுப்போனது.  முதலில், தென் இத்தாலியின் "லாஅகுய்லா" (L'Aquila) நகரிலுள்ள மறுத்தவமனையிலும், பின்னர், "நேப்பிள்ஸ்" (Naples) நகரிலுள்ள மறுத்தவமனையிலும் சிகிச்சை பெற்றார். ஆனால் அவரது வேதனைகள் கூடியதேயொழிய, குறையவில்லை. இருப்பினும் வேதனைகளை தாங்கிக்கொண்ட அவர், அவற்றை ஆண்டவரிடம் ஒப்புக்கொடுத்தார்.

தமது நோயின்போது, வீட்டிலிருக்கையில், அவருடைய புண் சீல் வைத்ததால், அவற்றை நிலையான அடிப்படையில் சுத்தம் செய்ய வேண்டியிருந்தது. அவர் தனது காயத்தை சுத்தப்படுத்த வீட்டிற்கு அருகே ஒரு ஓடைக்கு சென்றார். ஆனால் துணி துவைக்க வந்த ஒரு பெண், அவர் தண்ணீரை மாசுபடுத்துவதாக கூறி, அவரைத் துரத்திவிட்டார். அதற்கு பதிலாக அவர் மற்றொரு ஓடையில் தமது புண்ணை சுத்தம் செய்ய அனுமதிக்க பலமுறை ஜெபமாலை ஜெபித்துவந்தார்.

1835ம் ஆண்டு, டாக்டர்கள் அவரது ஒரு காலை தங்கள் ஒரே விருப்பமாக வெட்ட முடிவெடுத்தனர். ஆனால் அவரது வலி தொடர்ந்து இருந்தது. 1836ம் ஆண்டு, மார்ச் மாதம், அவருடைய நிலைமை மோசமடைந்தது. அவருக்கு காய்ச்சல் அதிகரித்தபோதெல்லாம் அவருடைய அவரது துன்பங்களும் அதிகரித்தன. கடவுள்மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையை அவர் தொடர்ந்தார். தமது முடிவு நெருங்கிவிட்டது என்ற உண்மையை நன்கு அறிந்திருந்தார். இரண்டு மாதங்கள் கழித்து, அவர் மரித்த நாளன்று, அவர் சிலுவையாண்டவரின் திருச்சொரூபத்தை வரவழைத்தார். மற்றும் கடைசி நேரத்தில் தமது ஒப்புரவாளரை அழைத்து, அவரிடம் இறுதி அருட்சாதனங்களைப் பெற்றுக்கொண்டார். 1836ம் ஆண்டு, அவர் தமக்கு ஏற்பட்ட நோயின்காரணமாக மரித்தார். அவரது எஞ்சியுள்ள மிச்சங்கள் இப்போது நேபிள்ஸில் (Naples) நகரிலுள்ள "சான் டோமினிகோ சொரியானோ" (Church of San Domenico Soriano) தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. அவரது மரணத்தின் பல தசாப்தங்களுக்கு பிறகு திருத்தந்தை "பதின்மூன்றாம் லியோ" அவரை தொழிலாளர்களின் முன்மாதிரியாக முன்மொழிந்தார்.

புனிதர் ஹிலாரி May 5

† இன்றைய புனிதர் †
(மே 5)

✠ புனிதர் ஹிலாரி ✠
(St. Hilary of Arles)
ஆர்ல்ஸ் ஆயர்:
(Bishop of Arles)

பிறப்பு: கி.பி. 403

இறப்பு: கி.பி. 449

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

நினைவுத் திருநாள்: மே 5

புனிதர் ஹிலாரி, தென் ஃபிரான்ஸ் (Southern France) நாட்டின் ஆர்ல்ஸ் (Arles) மறைமாவட்ட ஆயரும், ரோமன் கத்தோலிக்கம் மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபைகளால் புனிதராக அங்கீகரிக்கப்பட்டவருமாவார். இவரது நினைவுத் திருநாள் மே மாதம் ஐந்தாம் நாளன்று நினைவுகூறப்படுகின்றது.

ஹிலாரி, தமது பதினேழு வயதில், “செயின்ட் ஹோனரட்” (Island of Saint-Honorat) தீவிலுள்ள “சிஸ்டேர்சியன்” துறவறமான (Cistercian monastery) “லெரின்ஸ்” (Lérins Abbey) மடத்தில் சேர்ந்தார். அக்காலத்தில், அவரது உறவினரான “புனிதர் ஹோனரடஸ்” (Saint Honoratus of Arles) “லெரின்ஸ்” மடத்தின் மடாதிபதியாக இருந்தார். அவரே ஆர்ல்ஸ் மறைமாவட்டத்தின் ஆதிகால ஆயராகவும் இருந்தார். ஹிலாரி இதற்கு முன்னதாக “டிஜோனில்” (Dijon) வாழ்ந்து கொண்டிருக்கிறார். மற்ற அதிகாரிகள், அவர் “பெல்கிக்கா” (Belgica) அல்லது “ப்ரோவென்ஸ்” (Provence) நகரிலிருந்து வந்ததாக நம்புகின்றனர்.

இவர், மேற்கத்திய ரோமப் பேரரசின் அரசியல்வாதியான “ஹிலாரியஸ்” (Hilarius) என்பவரது மகன் அல்லது உறவினர் என்று நம்பப்படுகின்றார். ஹிலாரியஸ், கி.பி. 396ம் ஆண்டில் “கௌல்” (Gaul) நகரிலும், கி.பி. 408ம் ஆண்டில் ரோம் நகரிலும் தலைமை அதிகாரியாக (Prefect) இருந்துள்ளார்.

ஹிலாரி, தமது உறவினரான ஆர்ல்ஸ் ஆயர், “புனிதர் ஹோனரடஸ்” என்பவருக்குப் பின்னர் 429ம் ஆண்டு, ஆர்ல்ஸ் ஆயராக பதவியேற்றார். இவர், புனிதர் அகுஸ்தினாரை (St Augustine) முன்னுதாரணமாக ஏற்று, அவரது சபைக் குருமார்களை ஒரு "சபைக்குள்" ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது; அவர்கள் கடுமையான சுய ஒழுக்கம் மற்றும் சமூகப் பயிற்சிகளுக்கு தங்கள் நேரத்தை அர்ப்பணித்தனர். ஹிலாரி, தமது உழைப்பு முழுவதையும் ஏழை மக்களுக்கே பகிர்ந்தளித்தார்.

கைதிகளை மீட்கும் பொருட்டு, இவர் ஆலயங்களின் பரிசுத்த பாத்திரங்களை (Sacred vessels) விற்றார். அவர் ஒரு அற்புதமான பேச்சாளர் (Orator) ஆனார். அவர் பயணம் செய்த எல்லா இடங்களுக்கும் நடை பயணமாகவே பயணித்தார். எப்போதும் எளிய ஆடை அணிவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அது பிரகாசமான பக்கமாகும். ஹிலாரி பிற பிஷப்புகளுடன் தனது உறவுகளில் சிக்கலை எதிர்கொண்டார். அவரிடம் சில அதிகார வரம்பு இருந்தது. அவர், பாரபட்சம் பாராது, ஒரு ஆயரை பதவியை விட்டு விலக்கினார். நோய்வாய்ப்பட்டிருந்த ஆயர் ஒருவருக்குப் பதிலாக, வேறு ஒருவரை ஆயராக தேர்வு செய்தார். ஆனால், விடயம் சிக்கலானது. நோய்வாய்ப்பட்ட ஆயர் மரிக்கவில்லை. திருத்தந்தை புனிதர் பெரிய லியோ (Pope Saint Leo the Great), ஹிலாரியை ஒரு ஆயராகவே வைத்திருந்தார். ஆனால் அவருடைய சில அதிகாரங்களைக் கைப்பற்றினார்.

ஹிலாரி, கி.பி. 449ம் ஆண்டு மரித்தார். மிகவும் சரியான நேரத்தில், ஒரு ஆயர் எப்படி இருக்கவேண்டும் என்பதை கற்றுக்கொண்ட திறமைசாலியாகவும் பக்திமானாகவும் ஹிலாரி இருந்தார்.

புனித.காடேஹார்டு(St.Godehard)ஹில்டஸ்ஹைம் ஆயர் (Bishop of Hildesheim) may 5

இன்றைய புனிதர்
2020-05-05
புனித.காடேஹார்டு(St.Godehard)
ஹில்டஸ்ஹைம் ஆயர் (Bishop of Hildesheim)
பிறப்பு
960
ரைகர்ஸ்டோர்ப் (Reicherdorf), ஜெர்மனி
இறப்பு
5 மே 1038
ஹில்டஸ்ஹைம், ஜெர்மனி
புனிதர் பட்டம்: 1131
திருத்தந்தை. இரண்டாம் இன்னொசெண்ட்
ஹில்டஸ்ஹைம் நகரின் பாதுகாவலர்

காடேஹார்டு ஓர் ஏழை விவசாயியின் மகனாக பிறந்தார். இவர் சிறு பிள்ளையாக இருக்கும்போதே இவரின் தந்தை தன் நிலத்தை பெனடிக்ட் சபையை சேர்ந்த குருக்களுக்கு தானமாக தந்தார். இச்சபையை சார்ந்தவர்களும் அந்நிலத்தில் ஒரு துறவற இல்லம் கட்டினர். நாளடைவில் சிறுவன் காடேஹார்டு பள்ளி செல்லும் பருவத்தை அடைந்தததால் குருக்களாலேயே பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டான். அறிவிலும், ஞானத்திலும் மிக சிறந்தவனாய் இருந்தான். கல்வியை முடித்துவிட்டு, துறவிகளின் மடத்திலேயே சிறுசிறு உதவிகளை செய்து கொடுத்து, அவர்களுடனே தங்கினார். அப்போது துறவிகளோடு சேர்ந்து பாடல்கள் பாடுவதிலும், திருப்பலியிலும் பங்கேற்றார். துறவற குருக்களின் வாழ்க்கை இவருக்கு பிடித்துவிடவே, தானும் குருவாக வேண்டுமென்று ஆசைகொண்டு, 990 ஆம் ஆண்டு தனது துறவற வார்த்தைப்பாடுகளைபெற்று குருவானார். இவர் குருவானபிறகு ஜெர்மனியிலுள்ள ஹில்டஸ்ஹைம் என்ற ஊருக்கு மறைபரப்பு பணிக்காக அனுப்பிவைக்கப்பப்பட்டார்.

அப்போது ஜெர்மனியை ஆட்சி செய்த அரசர் இரண்டாம் ஹென்றி அவர்களால் 1022 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் நாள் ஹில்டஸ்ஹைமிற்கு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஆயரான பிறகு ஜெர்மனி முழுவதும் 30 புதிய ஆலயங்களையும், ஒரு சில பெரிய தேவாலயங்களை பழுது பார்த்து திருத்தியமைக்கும் பணியையும், பல பள்ளிகளையும் கட்டினார்.

பின்னர் "குளுனி" என்ற சபையை நிறுவினார். அதன்பிறகு பிரான்ஸ் நாட்டிலும் இச்சபையை தொடங்கினார். ஆயர் காடேஹார்டு மக்களிடம் காட்டிய அன்பிற்கு ஈடு இணை ஏதும் கிடையாது. ஹங்கேரி, ஹாலந்து, போலந்து, சுவிட்சர்லாந்து என பல்வேறு நாடுகளுக்கு சென்று மறைபரப்பு பணியை செய்து இறைவன்பால் மக்களை ஈர்த்தார். ஏராளமான மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றினார். எப்போதும் புன்முறுவலுடன் பணிசெய்து, மக்களின் நண்பனாகவும், இறைவனின் சீடனாகவும் இறுதிவரை வாழ்ந்தார். இவர் இறக்கும் வரை இறைவனின் பணியை இடைவிடாமல் ஆர்வமாக ஆற்றினார். இவர் இறந்தபின் இவரது உடல் ஹில்டஸ்ஹைமில் உள்ள பெரிய தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.


செபம்:
நல்ல ஆயனாம் இறைவா! இறக்கும்வரை மக்களுக்கு உதவி செய்து, ஏழைகளின் சிரிப்பில் இறைவனை கண்ட காடேஹார்டைப் போல, இன்றைய உலகில் வாழும் உமது இறை ஊழியர்களும் பணிபுரிய உம் அருள்தாரும்




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

குரு பிரான்சு டெண்ட்லர் Franz Tendler
பிறப்பு: 21 மார்ச் 1820 வீயன்னா Wien, ஆஸ்திரியா
இறப்பு: 5 மே 1902, ஆஸ்திரியா


எருசலேம் ஆயர் மாக்சிமுஸ் Maximus von Jerusalem
பிறப்பு: 3 ஆம் நூற்றாண்டு
இறப்பு: 4 ஆம் நூற்றாண்டு, எருசலேம்

தூய ஆஞ்சலோ (மே 05)

இன்றைய புனிதர் :
(05-05-2020)

தூய ஆஞ்சலோ (மே 05)
“யோவான் கைது செய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்திப் பறைசாட்சிக்கொண்டே இயேசு கலிலேயாவுக்கு வந்தார். காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் என்று அவர் கூறினார்”      (மாற் 1: 14 – 15)

வாழ்க்கை வரலாறு

12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், யூதாவில் உள்ள எருசலேமில், ஒரு யூதக் குடும்பம் வாழ்ந்து வந்தது. அக்குடும்பத்தில் இருந்த பெண் மிகவும் பக்தியானவள். ஒரு சமயம் அன்னை மரியா அந்தப் பெண்ணுக்குத் தோன்றி, “நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மெசியா ஏற்கனவே வந்துவிட்டார்; உனக்கு இரண்டு ஆண்பிள்ளைகள் பிறக்கும். அவர்களில் ஒருவன் திருச்சபையில் பிதாபிதாவாகவும், மற்றவன் கார்மேல் சபையில் சேர்ந்து பின்னாளில் மறைசாட்சியாகவும் உயிர் துறப்பான்” என்று சொல்லிவிட்டு மறைந்து போனார்.

இந்தக் காட்சிக்குப் பிறகு அந்தப் பெண்ணும் அவளுடைய கணவரும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்கள். ஓரிரு ஆண்டுகள் கழித்து, மரியா அந்தப் பெண்மணிக்குச் சொன்னது போன்று, அவளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தார்கள். அவர்களில் ஒருவர்தான் இன்று நாம் நினைவுகூருகின்ற ஆஞ்சலோ. ஆஞ்சலோ வளரும்போதே இறை அச்சத்திலும் ஞானத்திலும் சிறந்து விளங்கி வந்தார். கிரேக்கம், லத்தின், ஹீப்ரு போன்று மொழிகளிலும் அவர் புலமை பெற்று விளங்கினார். இப்படி நாட்கள் மிகவும் சந்தோசமாகப் போய்கொண்டிருந்த தருணத்தில், ஆஞ்சலோவின் பெற்றோர் இறந்து போனார்கள்.

ஆஞ்சலோவிற்கு பதினெட்டு வயது நடக்கும்போது அவர் கார்மேல் சபையில் துறவியாகச் சேர்ந்தார். அங்கு அவர் மிகவும் முன்மாதிரியான துறவியாக வாழ்ந்து வந்தார். ஒரு சமயம் அவர் ஜெபித்துக்கொண்டிருக்கும்போது ஆண்டவர் இயேசு அவருக்கு முன்பாகத் தோன்றி, “ஆஞ்சலோ! நீ உடனே சிசிலிக்குப் புறப்பட்டுச் சென்று, அங்கு நற்செய்தி அறிவி” என்று சொல்லிவிட்டு மறைந்து போனார். அப்போது ஆஞ்சலோவோ வேறெதுவும் யோசிக்காமல் உடனே சிசிலிக்குப் புறப்பட்டுச் சென்றார். போகிற வழியில் இருந்த பலேர்மோ என்ற இடத்தில் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை அறிவித்து, 200 க்கு மேற்ப்பட்டவர்களையும் மனம் திருப்பினார். தொடர்ந்து அவர் லாகத்தா என்னும் இடத்திலும் நற்செய்தியை அறிவித்து பலரை மனம் திருப்பினார்.

லாகத்தா என்ற இடத்தில் அவர் நற்செய்தி அறிவித்துக் கொண்டிருக்கும்போது தவறான முறையில் வாழ்ந்துவந்த பெரேங்கினுஸ் என்பவனைக் குறித்துக் கேள்விப்பட்டார். உடனே அவர் பெரேங்கினுசிடம் சென்று அவனுடைய தவற்றைச் சுட்டிக்காட்டினார். இதனால் அவன் இகழ்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டவனாய் நினைத்தான். அவன் அவரை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று நினைத்தான். எனவே, அவன் அதற்கான தருணத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தான்.

ஒரு சமயம் ஆஞ்சலோ மக்களுக்கு முன்பாகப் போதித்துக் கொண்டிருக்கும்போது பெரேங்கினுசின் ஆட்களில் ஒருவன், கூட்டத்திற்குள் புகுந்து ஆஞ்சலோவை வெட்டிக் கொன்றுபோட்டான். அவர் கொல்லப்படுவதற்கு முன்பாக, தன்னைக் கொல்லவந்தவனை மனதார மன்னித்துவிட்டு தன்னுடைய உயிரைத் துறந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய பெரேங்கினுசின் நினைவுநாளை கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

தீமை செய்தவருக்கு நன்மை

தூய ஆஞ்சலோவின் வாழ்வின் வரலாற்றை வாசித்துப் பார்க்கும்போது அவர் தன்னைக் கொல்லவந்தவனையும் மன்னித்து, அவனுக்காக ஜெபித்தார் என்று அறிந்துகொள்கின்றோம். இவ்வாறு அவர் தீமை செய்வதவருக்கும் நன்மை செய்பவராக, பகைவரை மன்னிப்பவராக விளங்கினார். தூய ஆஞ்சலோவைப் போன்று நம்மால் தீமை செய்வதவர்களை மன்னிக்க முடிகின்றதா? அவர்களுக்கு தீமைக்குப் பதிலாக நன்மை செய்ய முடிகின்றதா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஹிட்லரின் வதைமுகாமில் சிலகாலம் சித்ரவதைகளை அனுபவித்துவிட்டு, வெளியே வந்தவர் மார்டின் நிமொல்லர் என்பவர். பின்னாளில் அவர் பெரிய பிரபலமானார். அவர் வதை முகாமிலிருந்து வெளியே வந்தவுடன் சொன்ன செய்தி, “கடவுள் தன்னை பகைப்போருக்கும் ஏன் நம்மைப் பகைப்போருக்கும்கூட நன்மை அன்றி, தீமை செய்வது இல்லை” என்பதாகும். இவ்வார்த்தைகள் சிந்திக்கப்பட வேண்டியவையாக இருக்கின்றன. கடவுள் தனக்குத் தீங்கு செய்வோருக்கும் நன்மை செய்வாரே அன்றி, தீமை செய்வதில்லை” எனவே நாம் அவரைப் போன்று தீமை செய்பவர்களுக்கும் நன்மை செய்பவர்களாக இருக்க வேண்டும்.

ஆகவே, தூய ஆஞ்சலோவின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று தீமை செய்வோருக்கும் நன்மை செய்வோம், ஆண்டவரின் நற்செய்தியை வல்லமையோடு எடுத்துரைப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.