புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

11 June 2013


10ஆம் வாரம்
புதன்

முதல் ஆண்டு
 முதல் வாசகம்
 புதிய உடன்படிக்கையின் பணியாளராகும் தகுதியைக் கடவுள் எங்களுக்குத் தந்தார்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 4-11
சகோதரர் சகோதரிகளேகிறிஸ்துவின் வழியாய் நாங்கள் கடவுள்மேல் வைத்துள்ள உறுதியான நம்பிக்கையால்தான் இவ்வாறு சொல்லுகிறோம். நாங்களே செய்ததாக எதன்மேலும் உரிமை பாராட்டிக்கொள்ள எங்களுக்குத் தகுதி இல்லை. எங்கள் தகுதி கடவுளிடம் இருந்தே வருகிறது. அவரே புதிய உடன்படிக்கையின் பணியாளராகும் தகுதியை எங்களுக்குத் தந்தார். அவ்வுடன்படிக்கைஎழுதப்பட்ட சட்டத்தைச் சார்ந்ததல்லதூய ஆவியையே சார்ந்தது. ஏனெனில் எழுதப்பட்ட சட்டத்தால் விளைவது சாவுதூய ஆவியால் விளைவது வாழ்வு. கற்களில் பொறிக்கப்பட்ட அச்சட்டம் சார்ந்த திருப்பணி சாவை விளைவிப்பதாய் இருந்தும் அது மாட்சியுடன் அருளப்பட்டது.
விரைவில் மறையவேண்டியதாய் இருந்த அம்மாட்சி மோசேயின் முகத்தில் இஸ்ரயேல் மக்கள் பார்க்க முடியாத அளவுக்கு ஒளி வீசியது. அதுவே அப்படியிருந்தது என்றால் தூய ஆவி சார்ந்த திருப்பணி எத்துணை மாட்சி பொருந்தியதாய் இருக்கும்!
தண்டனைத் தீர்ப்பு அளிக்கும் திருப்பணியே இத்துணை மாட்சி பொருந்தியதாய் இருந்தது என்றால் விடுதலைத் தீர்ப்பு அளிக்கும் திருப்பணி எத்துணை மாட்சி நிறைந்ததாய் இருக்கும்!
அன்றைய மாட்சியை ஒப்புயர்வற்ற இன்றைய மாட்சியோடு ஒப்பிட்டால் அது மாட்சியே அல்ல. மறையப் போவது மாட்சி உடையதாய் இருந்தால் நிலையாக இருப்பது எத்துணை மாட்சி மிகுந்ததாய் இருக்கும்!
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 99: 5. 6. 7. 8. 9 (பல்லவி: 9உ)
பல்லவி: நம் கடவுளாகிய ஆண்டவரே தூயவர்.
நம் கடவுளாகிய ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்அவரது அரியணைமுன் தாள் பணிந்து வணங்குங்கள்அவரே தூயவர்! பல்லவி
மோசேயும் ஆரோனும் அவர்தம் குருக்கள்அவரது பெயரால் மன்றாடுவோருள் சாமுவேலும் ஒருவர்அவர்கள் ஆண்டவரை நோக்கி மன்றாடினர்அவரும் அவர்களுக்குச் செவிசாய்த்தார். பல்லவி
மேகத் தூணிலிருந்து அவர்களோடு பேசினார்அவர்கள் அவருடைய ஒழுங்கு முறைகளையும் அவர் அவர்களுக்குத் தந்த நியமங்களையும் கடைப்பிடித்தார்கள். பல்லவி
எங்கள் கடவுளாகிய ஆண்டவரே! நீர் அவர்களுக்குச் செவிசாய்த்தீர்மன்னிக்கும் கடவுளாக உம்மை வெளிப்படுத்தினீர்ஆயினும்,அவர்களுடைய தீச்செயல்களுக்காய் நீர் அவர்களைத் தண்டித்தீர். பல்லவி
நம் கடவுளாகிய ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்அவரது திருமலையில் அவரைத் தொழுங்கள். ஏனெனில்நம் கடவுளாகிய ஆண்டவரே தூயவர். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
திபா 25: 4,5
அல்லேலூயாஅல்லேலூயா! ஆண்டவரேஉம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்
அழிப்பதற்கல்லநிறைவேற்றுவதற்கே வந்தேன்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 17-19
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்அவற்றை அழிப்பதற்கல்லநிறைவேற்றுவதற்கே வந்தேன்.
விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.
எனவேஇக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவை அனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்.''
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை
புதிய உடன்படிக்கையின் பணியாளராக்கினார்.
அந்த புதிய உடன்படிக்கை ஆவியின் அருளால் வழங்கப்பட்டது.
அந்த புதிய உடன்படிக்கையின் நிலையான அடையாளமாகவே கிறிஸ்து விளங்கினார். அதை நிறைவேற்றுவதில் முனைப்பும் காட்டினார்.
நிறைவான அன்பினால் தான் மனுவுவானவர், பாடுகளையும், அவமானத்தையும் ஏற்றுக் கொண்டார். அந்த அன்பினால் புதிய கட்டளை கொடுத்து, அந்த அன்பிற்கு சாட்சிகளாக்கினார், அதனுடைய பணியாளராகவும் ஆக்கினார். இதனால் தான் அவருடைய நற்செய்தியை புறஇன மக்களுக்கும் எடுத்து செல்வதில் அவர்களுக்கு சிரமம் இல்லை.
இன்றைக்கு நாமும் அதே பணியினை செய்ய பணிக்கப்பட்டு இருக்கின்றோம்.
 

சூன் 11 புனித பர்னபா - திருத்தூதர் நினைவு

இன்றைய முதல் வாசகம்  இந்த நினைவுக்கு உரியது.
முதல் வாசகம்
 பர்னபா தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு நம்பிக்கை நிறைந்தவராய் பெருந்திரளான மக்களை ஆண்டவரிடம் சேர்த்தார்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 11: 21b-26; 13: 1-3
அந்நாள்களில் பெருந் தொகையான மக்கள் நம்பிக்கை கொண்டு ஆண்டவரிடம் திரும்பினர். இந்தச் செய்தி எருசலேம் திருச்சபையினரின் காதில் விழவே அவர்கள் பர்னபாவை அந்தியோக்கியா வரை சென்று வர அனுப்பி வைத்தார்கள். அவர் அங்குச் சென்றபோதுகடவுளின் அருள்செயலைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார்மேலும் உறுதியான உள்ளத்தோடு ஆண்டவரைச் சார்ந்திருக்குமாறு அனைவரையும் ஊக்கப்படுத்தினார். அவர் நல்லவர்தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு நம்பிக்கை நிறைந்தவராய்ப் பெருந்திரளான மக்களை ஆண்டவரிடம் சேர்த்தார்.
பின்பு சவுலைத் தேடி அவர் தர்சு நகர் சென்றார்அவரைக் கண்டுஅந்தியோக்கியாவுக்கு அழைத்துவந்தார். அவர்கள் ஓராண்டு முழுவதும் அந்தச் சபையாரோடு கூடவே இருந்து பெருந்திரளான மக்களுக்குக் கற்பித்து வந்தார்கள். அந்தியோக்கியாவில்தான் முதல் முறையாகச் சீடர்கள் கிறிஸ்தவர்கள் என்னும் பெயரைப் பெற்றார்கள்.
அந்தியோக்கியத் திருச்சபையில் பர்னபாநீகர் எனப்படும் சிமியோன்சிரேன் ஊரானாகிய லூக்கியுகுறுநில மன்னன் ஏரோதுவுடன் வளர்ந்த மனாயீன்சவுல் ஆகியோர் இறைவாக்கினராகவும்போதகராகவும் இருந்தனர்.
அவர்கள் நோன்பிருந்து ஆண்டவரை வழிபடும்போது தூய ஆவியார் அவர்களிடம், ``பர்னபாவையும் சவுலையும் ஒரு தனிப்பட்ட பணிக்கென நான் அழைத்திருக்கிறேன். அந்தப் பணிக்காக அவர்களை ஒதுக்கி வையுங்கள்'' என்று கூறினார். அவர்கள் நோன்பிருந்து இறைவனிடம் வேண்டினார்கள்தங்கள் கைகளை அவ்விருவர் மீது வைத்துத் திருப்பணியில் அமர்த்தி அவர்களை அனுப்பி வைத்தார்கள்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 98: 1. 2-3. 4. 5-6 (பல்லவி: 2b)
பல்லவி: பிற இனத்தார் கண்முன்னே ஆண்டவர் நீதியை வெளிப்படுத்தினார்.
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்ஏனெனில்அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி
ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்பிற இனத்தார் கண் முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். 3 இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். பல்லவி
உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். பல்லவி
யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள். 6 ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 28: 19,20b
அல்லேலூயாஅல்லேலூயா! நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்
 `விண்ணரசு நெருங்கி வந்துவிட்டதுஎனப் பறைசாற்றுங்கள்.
+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 7-13
அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: ``நீங்கள் செல்லும்போது `விண்ணரசு நெருங்கி வந்துவிட்டதுஎனப் பறைசாற்றுங்கள். நலம் குன்றியவர்களைக் குணமாக்குங்கள்இறந்தோரை உயிர்பெற்றெழச் செய்யுங்கள்தொழுநோயாளரை நலமாக்குங்கள்பேய்களை ஓட்டுங்கள்கொடையாகப் பெற்றீர்கள்கொடையாகவே வழங்குங்கள். பொன்வெள்ளிசெப்புக் காசு எதையும் உங்கள் இடைக் கச்சைகளில் வைத்துக்கொள்ள வேண்டாம். பயணத்திற்காகப் பையோஇரண்டு அங்கிகளோமிதியடிகளோ,கைத்தடியோ எடுத்துக்கொண்டு போக வேண்டாம். ஏனெனில் வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே.
நீங்கள் எந்த நகருக்கோ ஊருக்கோ சென்றாலும் அங்கே உங்களை ஏற்கத் தகுதியுடையவர் யாரெனக் கேட்டறியுங்கள். அங்கிருந்து புறப்படும் வரை அவரோடு தங்கியிருங்கள். அந்த வீட்டுக்குள் செல்லும்பொழுதேவீட்டாருக்கு வாழ்த்துக் கூறுங்கள். வீட்டார் தகுதி உள்ளவராய் இருந்தால்நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவர்கள் மேல் தங்கட்டும்அவர்கள் தகுதியற்றவர்களாய் இருந்தால் அது உங்களிடமே திரும்பி வரட்டும்.''
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.