புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

12 April 2020

புனித.ஜூலியஸ் (Julius I)ஆயர் April 12

இன்றைய புனிதர்
2020-04-12
புனித.ஜூலியஸ்  (Julius I)
ஆயர்
பிறப்பு

மேற்கு உரோம பேரரசு (Western Roman Empire)
இறப்பு
12 ஏப்ரல் 352
உரோம்

ஜூலியஸ் 337ஆம் ஆண்டு முதல் 352 ஆம் ஆண்டு வரை உரோமில் ஆயராக இருந்தார். உரோமில் பிறந்தவரான இவர் மார்க் என்ற ஆயரின் வாரிசாக தேர்வு செய்யப்பட்டார். இவர் ஆரியன் (Arian) திருச்சபையைப் பற்றி நன்கு அறிந்திருந்தார். கான்ஸ்டான் டி நோபிள் பேராயராக இருந்தபோது, 341 ல் அந்தியோக்கியாவில் பேராயர்களின் மாநாடு நடைபெற்றது.. இதனால் உரோமின் பிரதிநிதியாக அம்மாநாட்டிற்கு ஆயர் ஜூலியஸ் சென்றார். அங்கு நடைப்பெற்ற சில விவாதங்களுக்கு ஆயர் ஜூலியஸ் மறுப்பு தெரிவித்தார். இதனால் பேராயர்கள் நடுவில் இரு பிரிவு ஏற்பட்டது. அத்தனாசியுஸ் ஒரு பிரிவாகவும், ஜூலியஸ் மறுபிரிவாகவும் பிரிந்தனர். அத்தனாசியஸ், ஆயர் ஜூலியஸ் மீது வழக்கு தொடர்ந்தார். இதனால் உரோம் ஆயராக, அத்தனாசியுஸ் பொறுப்பேற்றார். ஆயர் அத்தனாசியுஸ், தன் மீது கூறிய வழக்குகள் அனைத்தும் பொய் என்று கூறி, ஜூலியஸ், அலெக்சாண்டரின் பேரவைக்கு கடிதம் எழுதினார். இக்கடிதத்தை அலெக்சாண்டரின் பேராயர் திருத்தந்தைக்கு அனுப்பினார். திருத்தந்தையால் இக்கடிதம் வாசிக்கப்பட்டு, ஆயர்களின் குழுக்களையும் அழைத்து விசாரித்தார். அப்போது ஆயர் ஜூலியஸ் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டது.

அதன்பிறகு ஆயர் ஜூலியஸ் தொடர்ந்து திறமையாக செயல்பட்டார். அப்போது 76 ஆயர்களை கொண்டு பிலிப்போபோலிஸில்(Philoppopolis) மாநாடு நடைப்பெற்றது. இம்மாநாட்டை ஆயர் ஜூலியஸ் தலைமை தாங்கி நடத்தினார். இதில் ஆயர் அத்தனாசியாரும் கலந்து கொண்டார். அதன்பிறகு 300 மேற்கு உரோம் ஆயர்களை கொண்டு, மீண்டும் ஓர் மாநாடு நடைப்பெற்றது. இதற்கு முன் நடந்த 3,4 மற்றும் 5 ஆவது மாநாடுகளில் பேசப்பட்ட விவாதங்கள் அனைத்தும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, நடைமுறைப் படுத்தப்பட்டது. இவ்வாறாக ஆயர் ஜூலியஸ் பல மாநாட்டை தலைமையேற்று நடத்தி, திருச்சபையில் பல மாற்றங்களை கொண்டு வந்தார்.

ஆயர் ஜூலியஸ் 352 ஆம் ஆண்டு, ஏப்ரல் 12 ஆம் நாள் உரோமையில் இறந்தார். இவர் இறந்தபிறகு மக்களால் புனிதராக வணங்கப்பட்டார். ஜூலியஸ் தான் ஆயராக உரோமில் இருந்தபோதுதான் கிறித்துப்பிறப்பு விழாவையும், மூன்று அரசர்கள் பெருவிழாவையும் தொடர்ந்து கொண்டாடப்பட வேண்டுமென்று, மாநாடுகளில் வலியுறுத்தினார். திருச்சபை காலண்டரில் தேதியை குறிப்பிட்டு, விழாக்களை இணைத்தார். அன்றிலிருந்து இவ்விரு விழாவும் பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


செபம்:
நல்ல ஆயனாம் இறைவா! உமது இறையரசை இவ்வுலகில் நிலைநாட்ட, எம் ஆயர்களோடு இருந்து, எம்மை வழிநடத்தியருளும்




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

திருக்காட்சியாளர் குரியினன்வோர்த் நகர் ஹென்றி Heinrich von Grünenwörth
பிறப்பு: 14 ஆம் நூற்றாண்டு
இறப்பு: 12 ஏப்ரல் 1396 ஸ்ட்ராஸ்பூர்க் Straßburg, பிரான்சு