புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

03 May 2020

புனித.பிலிப்பு ,யாக்கோபு May 3

இன்றைய புனிதர் : 
(03-05-2020) 

புனித.பிலிப்பு திருத்தூதர்
பிறப்பு பெத்சாயிதா, கலிலேயா
இறப்பு ஹியராப்போலிஸ், பிரிஜியா
கலிலேயாவிலுள்ள பெத்சாயிதா என்ற ஊரில் தோன்றிய பிலிப்பு, யோவான் நற்செய்தியாளரால் மீண்டும் மீண்டும் குறிப் பிடப்படுகின்றார். இறைமகன் இயேசு, பேதுருவையும், அந்திரே யாவையும் தேர்ந்து கொண்டபிறகு, என்னைப் பின்பற்றி வா என்று கூறி பிலிப்பைத் தேர்ந்துகொண்டார். பிலிப்பும் இயேசு வின் அழைத்தலை ஏற்று உடனே அவரைப் பின் தொடர்ந்தார். இதிலிருந்து பிலிப்பு எந்த அளவிற்கு இயேசுவுக்கு பணிந்திருந் தார் என்பதை தெரிந்துக்கொள்ளலாம். பின்பு பிலிப்பு உடனே தன் நண்பர் நத்தனியேலிடம் சென்று, நடந்ததை எல்லாம் விள க்கினார். நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வரக்கூடுமோ என்ற நத்தனியேலிடம் வந்து பாரும் என்று கூறி பதிலளித்தார் பிலிப்பு. இதிலிருந்து பிலிப்பு எவ்வளவு திறந்த மனதுடன் இருந்திருக்கி றார் என்பதை அறிந்து கொள்ளலாம். 200 தெனாரியத்திற்கு அப் பம் வாங்கினாலும் கூட போதாதே என்று யேசுவிடம் பதிலளித் தார் பிலிப்பு (யோவான் 6:7)

ஒருமுறை இயேசுவைப்பற்றி கேள்விப்பட்ட கிரேக்கர்கள் யெருச லேமை வந்தடைந்து, யேசுவைப் பார்க்க வேண்டுமென்று பிலி ப்பிடம் கேட்டனர். உடனே பிலிப்பு இதை அந்திரேயாவிடம் தெரி வித்து இதைப்பற்றி இருவரும் கலந்து பேசி, கிரேக்கர்களைப்ப ற்றி இயேசுவிடம் தெரிவித்தார். இதிலிருந்து பிலிப்பின் உயர்ந்த எண்ணங்களை அறியலாம். தூய ஆவியாரின் வருகைக்கு பிறகு பிலிப்பு ஆசியா சென்று மறைபரப்புப்பணியில் நாட்களை செல விட்டார் என்று தியோடற், யுசிபியுஸ் என்ற பழங்காலத்து வரலா ற்று ஆசியர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
† இன்றைய புனிதர் †
(மே 3)

✠ புனிதர் யாக்கோபு (அல்பேயுவின் மகன்) ✠
(St. James, Son of Alphaeus)

திருத்தூதர்:
(Apostle)
பிறப்பு: கி.மு. முதல் நூற்றாண்டு
கலிலேயா, யூதேயா, ரோம பேரரசு
(Galilee, Judaea, Roman Empire)

இறப்பு: கி.பி. 62
எருசலேம், யூதேயா, ரோம பேரரசு அல்லது எகிப்து
(Jerusalem, Judaea, Roman Empire or Aegyptus (Egypt)

ஏற்கும் சமயம்:
கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் ஒன்றியம்
(Anglican Communion)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

திருவிழா:
மே 3 (கத்தோலிக்கம்)
1 மே (ஆங்கிலிக்க ஒன்றியம்)
9 அக்டோபர் (கிழக்கு மரபுவழி திருச்சபை)

பாதுகாவல்:
மருந்தகப் பணியாளர்; இறக்கும் நிலையில் இருப்போர்; இத்தாலி, கம்பளி நெய்பவர்; தொப்பி செய்பவர்கள்; உருகுவை

அல்பேயுவின் மகனான புனித யாக்கோபு என்பவர் இயேசு கிறிஸ்துவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவர். இவர் அல்பேயுவின் மகன் யாக்கோபு என்றே அனைத்து ஒத்தமை நற்செய்தி நூல்களிலும் உள்ள திருத்தூதர்களின் பட்டியலில் அழைக்கப்படுகின்றார்.

விவிலியத்தில்:
இவரைப்பற்றி விவிலியத்தில் அதிகம் இடம் பெறவில்லை. இவர் புதிய ஏற்பாட்டில் நான்கு முறை மட்டுமே குறிக்கப்படுகின்றார். செபதேயுவின் மகன் யாக்கோபுவிடமிருந்து பிரித்துக்காட்ட இவர் சிரிய யாக்கோபு அல்லது சின்ன யாக்கோபு என்று அழைக்கப்படுகின்றார். (மாற்கு 15:40) இப்பெயரே இவருக்கு பாரம்பரிய சுவடிகளிலும் உள்ளது.

மாற்கு நற்செய்தியில்:
அல்பேயுவின் மகன் யாக்கோபின் அழைப்பு :
மாற்கு நற்செய்தியாளரே முதன் முதலில் இவரை அல்பேயுவின் மகன் என திருத்தூதர்களைப் பட்டியல் இடும் போது அழைக்கின்றார். அவரும் ஒரே முறை தான் அழைக்கின்றார்.

மாற்கு நற்செய்தியில் இவர் அல்பேயுவின் மகன் லேவியின் அழைப்பு இடம் பெறுகின்றது. ஆயினும், லேவி திருத்தூதர்களின் பட்டியலில் இடம் பெறவில்லை. அவருக்கு பதில் அல்பேயுவின் மகன் யாக்கோபு இடம் பெறுகின்றார்.

மாற்கு நற்செய்தியில் பிற யாக்கோபு:
மாற்கு நற்செய்தியாளர் மூன்று யாக்கோபுகளை விகுதியுடன் குறிப்பிடுகின்றார். அவர்கள், அல்பேயுவின் மகன் யாக்கோபு, செபதேயுவின் மகன் யாக்கோபு, இயேசுவின் சகோதரரான யாக்கோபு. பிற மூன்று இடங்களில் விகுதியற்று குறிக்கின்றார். அவர்கள் உறுமாற்றத்தின் போது ஒலிவ மலையில் உள்ள யாக்கோபு, கெத்சமணி தோட்டத்தில் இயேசுவோடு இருக்கும் யாக்கோபு, தொலையில் நின்று இயேசுவின் சிலுவையை உற்று நோக்கிக்கொண்டிருந்தவர்களுல் ஒருவரான மரியாவைக்குறிக்க சின்ன யாக்கோபு, யோசே ஆகியோரின் தாயாகிய மரியா என்னும் போதும்.

மத்தேயு நற்செய்தியில்:
அல்பேயுவின் மகன் யாக்கோபின் அழைப்பு :
பேதுரு, அந்திரேயா, செபதேயுவின் மகன் யாக்கோபு மற்றும் அவரின் சகோதரர் யோவான் ஆகியோர் இயேசு கிறிஸ்துவின் சீடராக அழைக்கப் பெற்றனர். இதன் பின்னர் மாற்கு நற்செய்தியில் உள்ள அல்பேயுவின் மகன் லேவியின் அழைப்பைப் போன்றே மத்தேயு இயேசுவின் அழைப்பை பெறுகின்றார். ஆனாலும் மத்தேயு அல்பேயுவின் மகன் என குறிக்கப்படவில்லை எனினும் மத்தேயுவும் லேவியைப்போல வரி தண்டினவராக குறிக்கப்படுகின்றார். மத்தேயு நற்செய்தியில் வரி தண்டினவரான மத்தோயுவும், அல்பேயுவின் மகன் யாக்கோபுவும் திருத்தூதர்கள் பட்டியலில் இடம் பெறுகின்றனர்.

மத்தேயு நற்செய்தியில் பிற யாக்கோபு:
மத்தேயு தனது நற்செய்தியில் யாக்கோபுவைக்குறிக்கும் போது, அவரின் உறவுவினர்களை வைத்தே பிரித்துக் காட்டுகின்றார். மத்தேயு மூன்று யாக்கோபுகளை தன் நற்செய்தியில் குறிப்பிடுகின்றார். அவர்கள் 

♫ யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரராக
♫ செபதேயுவின் மகனாகவும், யோவான் சகோதரராகவும்
♫ அல்பேயுவின் மகனாகவும்.

உறுமாற்றத்தின் போது இருந்த யாக்கோபு யோவான் சகோதரர் என குறிப்பிடப்படுகின்றார். கெத்சமணி தோட்டத்தில் இருந்தவர் அல்பேயுவின் மகனாக குறிப்பிடப்படுகின்றார். மேலும் தொலையில் நின்று இயேசுவின் சிலுவையை உற்று நோக்கிக்கொண்டிருந்தவர்களுல் ஒருவரான மரியாளைக்குறிக்க யாக்கோபு, யோசே ஆகியோரின் தாயாகிய மரியாள் என்னும் போதும் யாக்கோபுவுக்கு இவர் மாற்கை போல "சின்ன" என்னும் அடை மொழி இல்லாமல் குறிக்கின்றார்.

பாரம்பரியம்:
புனித யாக்கோபு என்னும் பெயருடன் ஒருவர் சில கிறிஸ்தவர்களோடு சேர்த்து கைது செய்யப்பட்டு, பின்னர் ஏரோது மன்னனால் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் என திருத்தூதர் பணிகள் நூல் குறிக்கின்றது. ஆனால் அது இவர் அல்ல எனவும், அது செபதேயுவின் மகன் யாக்கோபுவே எனவும் அறிஞர்கள் கொள்கின்றனர்.

இவர் பாரம்பரியப்படி எகிப்தில் மறைப்பணி ஆற்றும்போது சிலுவையில் அறையுண்டு கொல்லப்பட்டார் என்பது மரபு.

செபம்:

ஆண்டவராகிய கடவுளே! உம் திருத்தூதரான பிலிப்புவின் விழா வை ஆண்டுதோறும் கொண்டாடுவதன் வழியாக எங்களை மகிழ்வித்தீர். அவருடைய வேண்டுதலால் நாங்கள் உமது முடிவி ல்லா பேரின்ப ஒளியை காண எமக்கு உமதருளை தந்தருளும். 

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.