புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

10 August 2020

திருத்தொண்டர் லாரன்ஸ் (Laurentius/ Lorenz / Lawrence)மறைசாட்சி August 10

இன்றைய புனிதர் :
(10-08-2020)

திருத்தொண்டர் லாரன்ஸ் (Laurentius/ Lorenz / Lawrence)
மறைசாட்சி
பிறப்பு : 230
ஸ்பெயின்
    
இறப்பு : 10 ஆகஸ்டு 258 
உரோம், இத்தாலி. வலேரியன் என்ற என்ற அரசனால் கொல்லப்பட்டார்.
பாதுகாவல்: வுப்பர்டால்(Wuppertal) மற்றும் நூரன்பெர்க்(Nürnberg) நகரங்களுக்கு.

இவர் உரோமைத் திருச்சபையின், திருத்தந்தை புனித 2 ஆம் சிக்ஸ்டஸிடம் (Pope Sixtus II) திருத்தொண்டராக இருந்தார். அப்போது மாமன்னன் வலேரியன் (Valerien) கிறித்தவர்களை அடக்கி, ஒடுக்கி துன்புறுத்தினான். அந்நேரத்தில் திருத்தந்தை 2 ஆம் சிக்ஸ்துவையும் அவருடன் இருந்த நான்கு திருத்தொண்டர்களையும் பிடித்து சென்று கொன்றான். அவர்கள் மரித்த நான்காம் நாளே லாரன்சும் மறைசாட்சியாக எரித்துக்கொல்லப்பட்டார். ஆலயத்திற்கு சொந்தமான அனைத்து பொருட்களையும் எடுத்து ஏழைகளுக்கு கொடுத்தார். அரசன் கேட்ட கேள்விகளுக்கு லாரன்ஸ் கூறிய விடைகளை அரசன் தவறாக புரிந்துகொண்டான். அதனால் லாரன்சை ஒரு இரும்புக்கட்டிலில் போட்டு அதற்கடியில் நெருப்பு வைத்து கொளுத்தி கொல்லும்படி ஆணையிட்டான். ஆனால் லாரன்சோ, நெருப்பில் வேகும்போது இறைவனைப் போற்றி புகழ்ந்து செபித்தார். தன் உடல் முழுவதும் எரிந்த பிறகு, நன்றாக வெந்துவிட்டது, திருப்பிப்போடுங்கள் என்றார். இவரது கல்லறை காம்போ வேரோனா என்ற பகுதியில் தீபூர்த்தினா சாலை அருகே உள்ளது. அக்கல்லறையின்மேல் மாமன்னர் கொன்ஸ்தான்சியுஸ் பேராலயம் ஒன்றை எழுப்பினார். 4 ஆம் நூற்றாண்டிலேயே இப்புனிதரின் பக்தி பரவியது.

செபம்:
அன்பின் ஊற்றே எம் இறைவா! தனது வாழ்வை மக்களின் பணிக்காகவும், உமது இறையரசின் மேன்மைக்காகவும் அர்ப்பணித்து மறைசாட்சியாக மரித்த புனித லாரன்சை நினைத்து உமக்கு நாங்கள் நன்றி கூறுகின்றோம். அவர் உம்மை அன்பு செய்ததுபோல, நாங்களும் உம்மை அன்பு செய்து அவர் போதித்த வாழ்வின்படி நாங்கல் வாழவும், நீர் வரம் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

Saint of the Day : (10-08-2020)

St. Lawrence

He was born in A.D. 225 in a place now in modern day Spain. He was one of the seven Deacons of ancient Rome under Pope Sixtus-II. He gave all the money he had to the poor people. When the Pope Sixtus-II was condemned to death by the Emperor Valerian and when the Pope was led to execution, St. Lawrence followed the Pope. He asked the Pope Father, where are you going without your deacon. To this the Pope answered him that in three days you will follow me. After the death of the Pope Sixtus-II, the Prefect of Rome, who was a greedy pagan, ordered Lawrence to bring all the Church’s treasures to him. Lawrence asked for three days to bring the treasures to him. He then gathered all the poor and sick people in Rome and brought them before the Prefect and told him they are the treasures of the Church. The Perfect became furious and condemned Lawrence to a slow and cruel death. He was tied on top of an iron grill over a slow fire. This roasted the flesh of Lawrence little by little and led him to a slow and very painful death. Tradition says that he was martyred at San Lorenzo in Panisperna on August 10, 258. Legend says that St Lawrence, while he was roasted on the iron grill told the soldiers that his flesh is now suitably roasted so that it can be eaten by them. Emperor Constantine constructed an Oratory in honor of St. Lawrence. The grill of iron of martyrdom was placed by Pope Pascal-II in the Church of St. Lorenzo in Lucina.

He is one of the widely venerated saints of Catholic Church. The Perseid Meteor Shower occurs every year in mid-August on or near San Lawrence feast day, is called by many people as the Tears of Saint Lawrence.

---JDH---Jesus the Divine Healer---

† இன்றைய புனிதர் †
(ஆகஸ்ட் 10)

✠ புனிதர் லாரன்ஸ் ✠
(St. Lawrence of Rome)

திருத்தொண்டர், மறைசாட்சி:
(Deacon and Martyr)

பிறப்பு: டிசம்பர் 26, 225
வலென்சியா அல்லது ஒஸ்கா, ஹிஸ்பானியா (தற்போதைய ஸ்பெயின்)
(Valencia or less likely Osca, Hispania (modern-day Spain)

இறப்பு: ஆகஸ்ட் 10, 258
ரோம் (Rome)

ஏற்கும் சமயம்: 
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodoxy)
ஆங்கிலிகன் சமூகம்
(Anglican Communion)
லூதரனியம் 
(Lutheranism)

முக்கிய திருத்தலம்:
புனிதர் லாரன்ஸ் ஃபுவோரி லெ முரா பேராலய திருத்தலம், ரோம்
(Basilica di San Lorenzo fuori le Mura in Rome)

நினைவுத் திருவிழா: ஆகஸ்ட் 10

பாதுகாவல்: 
கனடா (Canada), இலங்கை (Sri Lanka), நகைச்சுவையாளர்கள் (Comedians), நூலகர்கள் (Librarians), மாணவர்கள் (students), சுரங்கத் தொழிலாளர்கள் (miners), சமையல்காரர்கள் (Chefs), ரோஸ்டர்ஸ் (Roasters), ரோம் (Rome), ரோடர்டாம் (நெதர்லாந்து) (Rotterdam (Netherlands), ஹூஸ்கா (ஸ்பெயின்) (Huesca (Spain), சான் லாரென்ஸ் (San Lawrenz), கோசோ மற்றும் பிர்யூ (மால்டா) (Gozo and Birgu (Malta), பாராங்கை சான் லோரென்சோ சான் பப்லோ (பிலிப்பைன்ஸ்) (Barangay San Lorenzo San Pablo (Philippines), ஏழை (Poor), தீயணைப்பு வீரர்கள் (Firefighters).

புனிதர் லாரன்ஸ், “திருத்தந்தை இரண்டாம் சிக்ஸ்டஸின்” (Pope Sixtus II) கீழே ரோம் நகரில் பணியாற்றி, ரோமப் பேரரசன் “வலேரியன்” (Roman Emperor Valerian) என்பவனது ஆட்சிக் காலத்தில் நடந்த கிறிஸ்தவ துன்புருத்தல்களின்போது கி.பி. 258ம் ஆண்டு கொல்லப்பட்ட ஏழு திருத்தொண்டர்களுள் (Deacon) ஒருவர் ஆவார்.

மரபுகளின்படி, மறைசாட்சிகள் – புனிதர் “ஒரேன்ஷியஸ்” (St Orentius) மற்றும் புனிதர் “பேஷியன்ஷியா” (St Patientia) ஆகியோர் இவரது பெற்றோர் என நம்பப்படுகிறது.

இவர், கிரேக்க குடியும், மிகவும் பிரபலமான மற்றும் மிகவும் மதிப்புமிக்க ஆசிரியர்களுல் ஒருவரும், எதிர்கால திருத்தந்தையுமான இரண்டாம் சிக்ஸ்டசை” (Pope Sixtus II) தற்போதைய “சரகோஸா” (Zaragoza) எனுமிடத்தில் சந்தித்தார். இறுதியில் இருவரும் ஸ்பெயின் (Spain) நாட்டை விட்டு, ரோம் (Rome) நகர் புறப்பட்டுச் சென்றனர். கி.பி. 257ம் ஆண்டு, சிக்ஸ்டஸ் திருத்தந்தையானபோது, அவர் லாரன்ஸையும் இன்னும் ஆறு பேரையும் திருத்தொண்டர்களாக (Deacon) அருட்பொழிவு செய்வித்தார். லாரன்ஸ் இளைஞராக இருப்பினும், அவர்களில் முதன்மைத் திருத்தொண்டராக (Archdeacon of Rome) நியமித்தார்.

ரோமானிய அதிகார வர்க்கம், விதிமுறை ஒன்றினை நிறுவியதாக “கர்தாஜ்” ஆயரான (Bishop of Carthage) “புனிதர் சைப்ரியன்” (St. Cyprian) குறிப்பிடுகிறார். அந்த விதிமுறையில், கண்டிக்கப்பட்ட அனைத்து கிறிஸ்தவர்களும் தூக்கிலிடப்பட வேண்டுமென்றும், அவர்களின் பொருட்கள் மற்றும் சொத்துக்கள் பேரரசின் கருவூலத்தால் பறிமுதல் செய்யப்பட வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறுகிறார்.

“பேரரசன் வலேரியன்” (Emperor Valerian), கி.பி. 258ம் ஆண்டு, ஆகஸ்ட் மாத தொடக்கத்தில், அனைத்து ஆயர்கள், குருக்கள் மற்றும் திருத்தொண்டர்கள் அனைவரும் உடனடியாக தூக்கிலடப்படவேண்டும் என்ற உத்தரவினை வெளியிட்டான். கி.பி. 258ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி, “புனிதர் கல்லிக்ஸ்டஸின்” (Cemetery of St Callixtus) கல்லறையில் வழிபாடு நடத்திக்கொண்டிருந்த திருத்தந்தை “இரண்டாம் சிக்ஸ்டஸ்” (Pope Sixtus II) பிடிக்கப்பட்டு, உடனடியாக தூக்கிலிடப்பட்டார்.

சிக்ஸ்டசின் மரணத்தின் பின்னர், திருச்சபையின் சொத்துக்கள் அனைத்தையும் திருப்பி ஒப்படைக்க வேண்டுமென ரோம தலைமை அதிகாரி (Prefect) கட்டளையிட்டான். சம்பவங்களின் ஆரம்ப ஆதாரமாக இருந்த புனிதர் “அம்ப்ரோஸ்” (St Ambrose), சொத்துக்களை ஒன்று திரட்ட தமக்கு மூன்று நாட்கள் அவகாசம் வேண்டுமென லாரன்ஸ் கேட்டதாகவும், இயன்றவரை சொத்துக்களை வேக வேகமாக ஏழைகளுக்கு பகிர்ந்தளித்ததாகவும் கூறுகிறார். சொத்துக்கள் ரோம தலைமை அதிகாரியின் (Prefect) கைகளுக்கு போய் விடக்கூடாதே என்ற அவசரம் அவரது வேகத்திலிருந்தது என்கிறார்.

மூன்றாவது நாள், ஒரு சிறு குழுவை தலைமை தாங்கி வந்த லாரன்ஸ், தலைமை அதிகாரி முன்னிலையில் ஆஜரானதாக கூறுகிறார். திருச்சபையின் சொத்துக்களை ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டபோது, அவர் தம்முடன் வந்திருந்த எளியவர்கள், ஊனமுற்றோர், பார்வையற்றோர் மற்றும் வேதனையால் துன்புருவோரை அதிகாரியின் முன்னிறுத்தி, இவர்களே திருச்சபையின் உண்மையான சொத்துக்கள் என்றார். “திருச்சபை உண்மையிலேயே செல்வம் மிகுந்தது; உங்களுடைய பேரரசனை விட எவ்வளவோ செல்வம் உள்ளது” என்று, லாரன்ஸ் தலைமை அதிகாரியிடம் அறிக்கையிட்டார். இத்தகைய அறைகூவல், லாரன்ஸை நேரடியாக மரணத்தின் வாயிலுக்கு இட்டுச் சென்றது. கடும் கோபமடைந்த தலைமையதிகாரி, தாம் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த, இறைச்சி போன்றவற்றை சுடுவதற்கு பயன்படும் கம்பி போன்ற பெரிய அளவிலான சூடான இரும்பு கம்பிகளில் லாரன்ஸை படுக்கவைத்தான். நெடு நேர வேதனை அனுபவித்த லாரன்ஸ், சிரித்த முகத்துடன், “இந்த பக்கம் வெந்துவிட்டது; மறுபக்கம் திருப்பி போடு” என்றார்.

மரபுப்படி, புனித லாரன்ஸை கௌரவிக்கும் விதமாக, பேரரசர் “முதலாம் கான்ஸ்டன்டைன்” (Emperor Constantine I) ஒரு சிற்றாலயம் அமைத்தார். இது ரோம் நகரின் ஏழு திருப்பயண ஆலயங்களுல் ஒன்றாக துவக்கக்காலம் முதலே கருதப்பட்டது. இவ்வாலயத்தை திருத்தந்தை “முதலாம் டமாஸ்கஸ்” (Pope Damasus I) சீரமைத்து “புனித லாரன்ஸ் பேராலயமாக” (Basilica di San Lorenzo fuori le Mura) மாற்றினார். புனிதர் லாரன்ஸ் மறைசாட்சியாக மரித்த இடத்தில், “புனித லாரன்ஸ் சிறு பசிலிக்கா” (Minor Basilica of San Lorenzo in Panisperna) உருவாக்கப்பட்டது. லாரன்ஸ் மறைசாட்சியாக உபயோகப்பட்ட இரும்புக்கம்பி, அங்கேயே வைக்கப்பட்டுள்ளது.