புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

03 July 2020

புனிதர் தோமா ✠(St. Thomas) July 3

† இன்றைய புனிதர் †
(ஜூலை 3)

✠ புனிதர் தோமா ✠
(St. Thomas)
திருத்தூதர், பிரசங்கிப்பாளர், மறைசாட்சி :
(Apostle, Preacher, Christian Martyr)

பிறப்பு: கி.பி. 1 (முற்பகுதி)
கலிலேயா, ரோமப் பேரரசு (தற்போதைய இஸ்ரேல்)
(Galilee, Roman Empire (Present-day Israel)

இறப்பு: டிசம்பர் 21, கி.பி. 72
பரங்கிமலை, சென்னை, சோழப் பேரரசு (தற்போதைய தூய சாந்தோம் மலை, தமிழ்நாடு, இந்தியா)
(Parangimalai, Chennai, Chola Empire (Present-day St. Thomas Mount, Tamil Nadu, India)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
லூதரன் திருச்சபை
(Lutheran Church)
மலங்கரா திருச்சபை
(Malankara Church)
கிழக்கு அசிரிய திருச்சபை
(Assyrian Church of the East)
ஆங்கிலிகன் சமூகம்
(Angilican Communion)
ஓரியண்ட்டல் மரபுவழி திருச்சபை
(Oriental Orthodox Church)

முக்கிய திருத்தலங்கள்:
தூய தோமா திருத்தூதர் பேராலயம், ஒர்டோனா, இத்தாலி
(Basilica of St. Thomas the Apostle in Ortona, Italy)
சென்னை சாந்தோம் தேவாலயம்
(Santhom Church, Chennai, India)
நினைவுத் திருவிழா: ஜூலை 3

சித்தரிக்கப்படும் வகை: இயேசுவின் விலாவில் கையை இடுபவராக, வேல்

பாதுகாவல்: கட்டட கலைஞர், இந்தியா, மற்றும் பல

புனிதர் தோமா அல்லது புனித தோமையார் (St. Thomas), இயேசு தமது நற்செய்திப் பணிக்காக தேர்ந்தெடுத்த பன்னிரு திருத்தூதர்களில் ஒருவர் ஆவார். 

பாவம் தோமா! உயிர்த்த ஆண்டவரைக் காண்பதற்கு அவர் போட்ட நிபந்தனை அவருக்கு ஒரு பட்டப் பெயர் சூட்டப்படக் காரணமாயிற்று. "ஐயப் பேர்வழி" என்றே இன்றுவரை உலகம் இவரை அழைக்கின்றது. இயேசு கிறிஸ்து உயிர்த்துவிட்டார் என மற்ற திருத்தூதர்கள் சொன்னதை முதலில் நம்ப மறுத்ததால் இவர் “சந்தேக தோமா” (Doubting Thomas) என்ற பெயராலும் அழைக்கப்படுகிறார். ஆனால் அவர், "நீரே என் ஆண்டவர். நீரே என் கடவுள்" (யோவான் 20:28) என்று விசுவாச அறிக்கை வெளியிட்டதுபோல வேறு யாரும் அவ்வளவு மனம் விட்டு அறிக்கையிடவில்லை. இவர் நமக்கு ஓர் உருக்கமான, விசுவாசம் நிறைந்த செபத்தை அமைத்து கொடுத்து, இச்செபத்தை நாம் பொருள் உணர்ந்து சொல்லும் போதெல்லாம் நமது பற்றுறுதி மெருகேற்றப்படுகிறது. "காணாமல் நம்புவோர் பேறுபெற்றோர்" என்று கூறிய உயிர்த்த ஆண்டவர், உலகம் முடியும்வரை தம்மில் விசுவாசம் கொள்வோர் பேறு பெற்றோர் என்று தெளிவுபடுத்துகிறார். நாம் இந்த விசுவாசக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது பெரும் ஆறுதலும் பெருமையும் கொண்டதாகும்.

இந்தியாவில் இயேசுவின் நற்செய்தியை முதன்முதலில் அறிவித்தவர் இவரே என்று பழங்கால கிறிஸ்தவ மரபும், ஏடுகளும் சான்று பகர்கின்றன. கேரளாவில் வாழும் தோமையார் கிறிஸ்தவர்களும் இதற்கு சான்றாக உள்ளனர்.
பெயரும் இளமையும்:
இயேசுவின் திருத்தூதர்களுள் ஒருவரான இவரை நற்செய்தி நூல்கள் தோமா என்ற பெயருடனேயே அடையாளப்படுத்துகின்றன. 'தோமா' என்னும் “அரமேய” அல்லது “சிரியாக்” (Aramaic or Syriac) மொழிச் சொல்லுக்கு இரட்டையர் என்பது பொருள். இதற்கு இணையான திதைமுஸ் (Didymus, தமிழ் ஒலிப்பெயர்ப்பு: திதிம்) என்ற கிரேக்க மொழிச் சொல் யோவான் நற்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இந்த பெயரின் அடிப்படையில் இவருடன் இரட்டையராகப் பிறந்த ஒரு சகோதரரோ, சகோதரியோ இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பழங்கால சிரிய மரபின்படி, திருத்தூதரின் முழுப்பெயர் யூதா தோமா என்று அறியப்படுகிறது.
இளமைக் காலம்:
ரோமப் பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்த முதல் நூற்றாண்டு பாலஸ்தீன் நாட்டின் கலிலேயா பகுதியில் தோமா பிறந்தார். இவரது தந்தை படகு கட்டும் தொழில் செய்து வந்ததாகவும், தோமாவும் அதே தொழிலையே செய்து வந்ததாகவும் பழங்கால மரபு கூறுகிறது. இவர் கல்வியறிவு பெற்றவர் என்றும், தச்சு வேலை செய்தவர் என்றும், மீனவர்களோடும், தச்சுத் தொழிலாளர்களோடும் நெருங்கி பழகி வந்ததாகவும் அறிகிறோம். எந்த ஒன்றின் உண்மை நிலையையும் கேள்வி கேட்டு, தெளிவுபடுத்திக் கொள்ளும் குணம் கொண்டவராக இருந்தார். இவர் இயேசுவின் நெருங்கிய உறவினர் என்றும், இயேசுவைப் போன்ற தோற்றம் கொண்டிருந்ததே இவர் திதைமுஸ் என்று அழைக்கப்பட காரணம் எனவும் சில குறிப்புகள் கூறுகின்றன. ஆனால், திருத்தூதர் பிலிப்பு மூலம் இவர் இயேசுவுக்கு அறிமுகமானதாக சிலர் கூறுகின்றனர்.

இந்தியாவில் தோமா:
கிறிஸ்தவர்கள் தோமா கி.பி 52ம் ஆண்டு, இந்தியாவிற்கு பயணித்தார் எனவும், முசிறித் துறைமுகம் (Muziris) வந்தடைந்தார் எனவும் நம்புகின்றனர். அப்போது அங்கு கொச்சி யூதர்கள் சமூகம் காணப்பட்டது. ஆனாலும் அவர் அங்கு வந்தார் என்பதற்கு வரலாற்று ஆதாரம் இல்லை.

பாரம்பரியமாக குறிப்பிடப்படும் தோமாவின் பணிகள் என்ற நூல், ரப்பான் பாட்டு என்ற வாய்மொழி பாடல் தொகுப்பு ஆகியவை குறிப்பிடத்தக்க நூல்களாகும்.

தோமாவின் பணிகள்:
'தோமாவின் பணிகள்' என்ற நூல் கி.பி. 2ம் நூற்றாண்டில் சிரியாக் மொழியில் எழுதப்பட்டது. அது இயேசுவின் உயிர்ப்புக்கு பிறகு, தோமா இந்தியாவுக்கு வந்து நற்செய்தி அறிவித்து உயிர்துறந்தது குறித்த வரலாற்று குறிப்புகளுடன் கூடிய கதையை வழங்குகிறது. இந்த நூல் இந்தியாவில் தோமா என்று பொதுவாக குறிப்பிட்டாலும், இரண்டு பகுதிகளில் அவர் பணி செய்த விவரங்களைத் தருகிறது.

இயேசு உயிர்த்தெழுந்து விண்ணகம் சென்ற பிறகு, அவரது சீடர்கள் எந்த நாட்டில் சென்று பணியாற்ற வேண்டும் என்பது குறித்து சீட்டுப் போட்டு பார்த்தனர். அப்போது, தோமாவுக்கு விழுந்த சீட்டில் இந்தியாவின் பெயர் வந்தது. அதிக தொலைவில் உள்ள இந்தியாவுக்கு செல்ல அவர் விரும்பவில்லை. அப்போது இந்தோ-பார்த்திய அரசரான கொண்டபோரஸ் அனுப்பிய ஹப்பான் என்பவர், கட்டடக் கலைஞர் ஒருவரை எதிர்பார்த்து பாலஸ்தீன் சென்றிருந்தார். அவருக்கு தோன்றிய இயேசு தமது பணியாளரை அழைத்து செல்லுமாறு கூறி, தோமாவை அவருடன் அனுப்பி வைத்தார்.

கொண்டபோரஸ் அரசவைக்கு வந்த தோமா, மாளிகை கட்டுவதாகக் கூறி பணத்தை வாங்கிக் கொண்டு, அதை ஏழைகளுக்கு உதவி செய்ய செலவிட்டார். குறிப்பிட்ட காலத்திற்கு பின் மாளிகையைப் பார்க்கச் சென்ற அரசர், அங்கு ஒரு சிறிய கல் கூட இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தோமா தம்மை ஏமாற்றி விட்டதாகக் கூறி, அவரை அரசர் சிறையில் அடைத்தார். அப்போது, அரசரின் தம்பி காத் திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். அவருக்கு இறுதிச் சடங்குகள் நடத்த ஏற்பாடு செய்து கொண்டிருந்த வேளையில், அவர் திடீரென எழுந்து விண்ணகத்தில் தமது அண்ணன் பெயரில் உள்ள மாளிகையைத் தமக்கு தருமாறு கேட்டார். இதையடுத்து, தோமா மாளிகை கட்டுவதாக கூறியது உண்மை என்று நம்பிய அரசர் கொண்டபோரஸ், அவரது குடும்பத்துடன் திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவரானார். அதன் பிறகு, சிறிது காலம் அந்த நாட்டில் உள்ள மக்களுக்கு இயேசுவைப் பற்றிய நற்செய்தி அறிவித்து, பலரை மனந்திருப்பினார்.

பின்னர் மற்றொரு நாட்டுக்கு (மயிலாப்பூர்) சென்ற தோமா, காரிஷ் (தமிழ்: காரி) என்ற அரசவை பணியாளரின் மனைவியின் நோயை குணப்படுத்தினார். இதையடுத்து, தோமா அப்பகுதியில் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை மக்களுக்கு அறிவித்து பல்வேறு அற்புதங்கள் செய்து வந்தார். இதை அறிந்த அரசர் மஸ்டாயின் (தமிழ்: மகாதேவன்) மனைவி மிக்தோனியா (தமிழ்: மகதோனி) தோமாவின் போதனைகளை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவராக மனந்திரும்பினார். மிக்தோனியா கிறிஸ்தவ நம்பிக்கையை கைவிட அரசர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அரசர், தோமாவைக் கொலை செய்ய ஆணையிட்டார். அதன்படி, அரசரின் காவலர்கள் தோமாவை ஈட்டியால் குத்தி கொலை செய்தனர். அவரது உடல் புதைக்கப்பட்ட இடத்திலும் அற்புதங்கள் நிகழ்ந்ததைக் கண்ட அரசர் மஸ்டாயும் இறுதியில் கிறிஸ்தவரானார்.

சென்னையில் உள்ள புனித தோமையார் மலையே, தோமா குத்தி கொல்லப்பட்ட இடம் என்றும், சாந்தோம் ஆலயம் உள்ள இடத்திலேயே அவர் அடக்கம் செய்யப்பட்டார் என்றும் மரபுகள், வரலாற்றுக் குறிப்புகள் மற்றும் அகழ்வாய்வுகள் மூலம் அறிகிறோம்.


இன்றைய புனிதர் : (03-07-2020)

புனித தோமா ( St. Thomas )
திருத்தூதர்

பிறப்பு : கி. பி 1 (முற்பகுதி)
கலிலேயா

இறப்பு : டிசம்பர் 21, 72 கி. பி
சென்னை, இந்தியா (நம்பப்படுகிறது)
ஏற்கும் சபை/ சமயம் : எல்லா கிறிஸ்தவப் பிரிவுகளும்

முக்கிய திருத்தலங்கள் : 
சாந்தோம் தேவாலயம், சென்னை

நினைவுத் திருவிழா : 
ஜூலை 3 - கத்தோலிக்கம்
அக்டோபர் 6 அல்லது ஜூன் 30 - கிழக்கு மரபு
உயிர்ப்பு விழாவை தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை - பொது
சித்தரிக்கப்படும் வகை : இயேசுவின் விலாவில் கையை இடுபவராக, வேல்
பாதுகாவல் : கட்டட கலைஞர், இந்தியா, மற்றும் பல
திருத்தூதர் புனித தோமா (அல்லது) புனித தோமையார், 1ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். கிறிஸ்தவ புனிதராவார். இவர் இயேசுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிரு திருத்தூதர்களுள் (அப்போஸ்தலர்களுள்) ஒருவர்.
"நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!" (யோவான் 20:28) என்று உயிர்த்த இயேசுவை நோக்கி இவர் கூறிய வார்த்தைகள் மிகவும் புகழ்பெற்றவை.
திருத்தூதரின் கல்லறைப் பீடத்தில் இந்த வார்த்தைகளே பொறிக்கப்பட்டுள்ளன.
இயேசு உயிர்த்துவிட்டார் என மற்ற திருத்தூதர்கள் சொன்னதை முதலில் நம்ப மறுத்ததால் இவர் 'சந்தேக தோமா' (Doubting Thomas) என்ற பெயராலும் அழைக்கப்படுகிறார்.
இந்தியாவில் இயேசுவின் நற்செய்தியை முதன்முதலில் அறிவித்தவர் இவரே என்று பழங்கால கிறிஸ்தவ மரபும், ஏடுகளும் சான்று பகர்கின்றன. கேரளாவில் வாழும் தோமையார் கிறிஸ்தவர்களும் இதற்கு சான்றாக உள்ளனர்.
பெயரும் அடையாளமும் :
பெயர் மரபு :
இயேசுவின் திருத்தூதர்களுள் ஒருவரான இவரை நற்செய்தி நூல்கள் தோமா என்ற பெயருடனேயே அடையாளப்படுத்துகின்றன. 'தோமா' என்னும் அரமேய மொழிச் சொல்லுக்கு இரட்டையர் என்பது பொருள். இதற்கு இணையான திதைமுஸ் (Didymus, தமிழ் ஒலிப்பெயர்ப்பு: திதிம்) என்ற கிரேக்க மொழிச் சொல் யோவான் நற்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
இந்த பெயரின் அடிப்படையில் இவருடன் இரட்டையராகப் பிறந்த ஒரு சகோதரரோ, சகோதரியோ இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பழங்கால சிரிய மரபின்படி, திருத்தூதரின் முழுப்பெயர் யூதா தோமா என்று அறியப்படுகிறது.
இந்தியாவில் கிறிஸ்தவப் பணி :
இந்தியாவில் தோமையார் முதன் முதலில் பண்டைய சேர துறைமுகமான முசிறியில் (தற்போது கேரளாவிலுள்ள) கி.பி. 52-ல் பாதம் பதித்தார். தென் இந்தியாவின் கடற்கறை ஓரமாக நற்செய்தி பணியாற்றிய இவர், ஏழரை ஆலயங்களை நிறுவினார். அவை கொடுங்கல்லூர், பழவூர், கொட்டகாவு, கொக்கமங்கலம், நிரனம், நிலக்கல், கொல்லம் மற்றும் திருவிதாங்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்) ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.
இறப்பு :
தோமையார் கி.பி 72-ல் சென்னை மயிலாப்பூரில் மரித்தார் என நம்பப்படுகிறது. 13-ம் நூற்றாண்டில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த மார்கோ-போலோ குறிப்புப்படி சென்னை அருகே அம்புகளால் குத்தப்பட்டு இறந்தார். அவரது மீப்பொருட்கள் சென்னை சாந்தோம் தேவாலயத்தில் உள்ளன.
விழா நாட்கள் :
9ம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட ரோமன் நாள்காட்டியில், புனித தோமாவின் விழா நாளாக டிசம்பர் 21ம் தேதி குறிக்கப்பட்டிருந்தது.
1969ம் ஆண்டு ரோமன் நாள்காட்டி திருத்தி அமைக்கப்பட்டபோது, புனித ஜெரோமின் மறைசாட்சிகள் நினைவுநாள் குறிப்பின் அடிப்படையில் திருத்தூதர் தோமாவின் விழா ஜூலை 3ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இருப்பினும், பெரும்பாலான ஆங்கிலிக்கத் திருச்சபைகள் டிசம்பர் 21ம் தேதியே புனிதரின் விழாவை சிறப்பிக்கின்றன. கிழக்கு மரபு வழி திருச்சபையைச் சேர்ந்தவர்கள் புனித தோமாவின் விழாவை அக்டோபர் 19ம் தேதி (ஜூலியன் நாட்காட்டியில் அக்டோபர் 6ம் தேதி) கொண்டாடுகின்றனர்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

புனிதர் அனடோலியஸ் ✠(St. Anatolius of Alexandria) July 3

† இன்றைய புனிதர் †
(ஜூலை 3)

✠ புனிதர் அனடோலியஸ் ✠
(St. Anatolius of Alexandria)

ஆயர், ஒப்புரவாளர்:
(Bishop and Confessor)
பிறப்பு: கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்க காலம்
அலெக்சாண்ட்ரியா, டோலேமெய்க் அரசு, எகிப்து
(Alexandria, Ptolemaic Egypt)

இறப்பு: ஜூலை 3, 283
லாவோடிசியா, ரோம சிரியா (தற்போதைய சிரியாவிலுள்ள லடகியா)
(Laodicea, Roman Syria (Now Latakia, Syria)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

நினைவுத் திருநாள்: ஜூலை 3

“லாவோடிசியா’வின் அனடோலியஸ்” (Anatolius of Laodicea) என்றும், “அலெக்சாண்ட்ரியா’வின் அனடோலியஸ்” (Anatolius of Alexandria) என்றும் அழைக்கப்படும் இப்புனிதர், ரோம சிரியாவின் (Roman Syria) மத்தியதரைக் கடலோரமுள்ள (Mediterranean) துறைமுக நகரான “லாவோடிசியா” (Laodicea) நகரின் ஆயர் ஆவார். அத்துடன், இயல்பியல் (Physical sciences) மற்றும் “அரிஸ்டோடிலியன் தத்துவத்தில்” (Aristotelean philosophy) அக்காலத்தைய முன்னோடி அறிஞர்களில் ஒருவராகவும் இருந்தார். ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Churches) மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபைகள் (Eastern Orthodox) இவரை புனிதராக ஏற்கின்றன.

புனிதர் அனடோலியஸ், கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில், எகிப்து (Egypt) நாட்டின் இரண்டாம் பெரிய நகரான அலெக்சாண்ட்ரியாவில் (Alexandria) பிறந்து வளர்ந்தவர் ஆவார். திருச்சபையின் பெரும் விளக்குகளில் ஒன்றாக மாறுவதற்கு முன்பு, அனடோலியஸ் அலெக்ஸாண்ட்ரியாவில் கணிசமான கௌரவமுள்ள பெரிய மனிதராக வாழ்ந்தார். கணிதம், வடிவவியல் (Geometry), இயற்பியல் (Physics), சொல்லாட்சிக் கலை (Rhetoric), “வாதமுறை ஆராய்ச்சி” (Dialectic) மற்றும் வானியல் (Astronomy) ஆகியவற்றைப் பற்றிய ஒரு பெரும் அறிவைப் பெற்றிருந்தார். கிறிஸ்தவ சரித்திர ஆசிரியரான “யூசேபியஸ்” (Eusebius of Caesarea) என்பவரின்படி, அலெக்ஸாண்டிரியாவிலுள்ள அரிஸ்டாட்டிலின் அடுத்தடுத்த பள்ளியைத் தக்கவைத்துக்கொள்ள அனடோலியஸ் தகுதியுடையவராக கருதப்பட்டார். புறமத பாகன் தத்துவவாதியான “இம்பம்லிகஸ்” (Pagan Philosopher) என்பவர், சிறிது காலம் இவரது சீடர்களிடையே கல்வி கற்றார்.

அவரால் எழுதப்பட்ட பத்து கணிதப் புத்தகங்களின் துண்டுகளும், இயேசுநாதர் உயிர்த்தெழுந்த கொண்டாட்ட நாள் பற்றிய (Paschal celebration) கட்டுரைகளும் இன்றளவும் உள்ளன.

அக்காலத்தில், அலெக்ஸாண்டிரியாவின் ஒரு பகுதியாயிருந்த “புருச்சியம்” (Bruchium) பிராந்தியத்தில் நடந்த கலகத்தை அனடோலியாஸ் எவ்வாறு உடைத்தெறிந்தார் என்பதையும் யூசெபிசியஸ் எழுதியுள்ளார். ஜெனோபியாவின் (Zenobia) படைகளால் நடத்தப்பட்ட அந்த கலகம், ரோமர்களால் கடுமையாக பாதிக்கப்பட்டு பட்டினியாய் இருந்தது. அந்த நேரத்தில் புரூச்சியத்தில் (Bruchium) வாழ்ந்த துறவி, எல்லா பெண்களையும் குழந்தைகளையும், வயதான மற்றும் நோயாளிகளையும் அங்கிருந்து தப்பிப்பதற்கு ஏற்பாடு செய்தார். அது பாதுகாப்பு மற்றும் கிளர்ச்சியாளர்களை சரணடைய வைத்தது. இது, பாதிக்கப்பட்ட பல மக்களை காப்பாற்றியது, இத்துறவியின் நாட்டுப் பற்றுள்ள நடவடிக்கையாக அமைந்தது.

“லாவோடிசியா” (Laodicea) புறப்பட்ட அவரை, மக்கள் பிடித்து ஆயராக்கினார்கள். அவரது நண்பர் யூசேபியஸ் இறந்துவிட்டாரா அல்லது அவர்கள் இருவரும் சேர்ந்தே சேவை செய்தார்களா என்பது விவாதத்திற்குரிய விஷயமாகவே இருந்தது.