புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

29 April 2020

தூய சியென்னா கத்ரீன் (ஏப்ரல் 29)

இன்றைய புனிதர்
(29-04-2020) 

தூய சியென்னா கத்ரீன் (ஏப்ரல் 29)
நிகழ்வு

தூய சியென்னா கத்ரீன் தனிமையாக இருந்து ஜெபித்தபோது சாத்தான் அவரை அதிகமாகச் சோதித்தது. அப்படிப்பட்ட தருணத்தில் ஒருநாள் அவர் இயேசுவிடம், “ஆண்டவரே! நான் பலவாறாக சோதனைக்கு உட்படும்போது நீர் எங்கே சென்றீர்?” என்று கேட்டார். அதற்கு ஆண்டவர் அவரிடம், “நீ சோதனைகளை வெற்றிகொள்ள என்னுடைய அருளைத் தந்து, உனக்குள்ளேதான் இருக்கிறேன்” என்றார். இதைக் கேட்ட அவர் மிகவும் மகிழ்ந்து போனார். ஆண்டவராகிய கடவுள் தனக்குள் இருப்பதை இத்தனை நாளும் உணராமல் இருந்துவிட்டோமே என்று வருந்தினார். அதன்பிறகு தனக்கு வந்த சோதனைகளைத் துணிவோடு எதிர்கொண்டு வெற்றிகொண்டார்.

வாழ்க்கை வரலாறு

கத்ரீன் 1347 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் நாள் இத்தாலியில் உள்ள சியென்னா நகரில் பிறந்தார். இவருடைய பெற்றோர் ஜாகோபா மற்றும் லாபோ பெமினிகாசா என்பவர் ஆவார். இவர் குடும்பத்தில் இவர் இருபத்து ஐந்தாவது குழந்தை, கடைக்குட்டி.

கத்ரீன் சிறுவயதிலிருந்தே கடவுள் மீது, அன்னை மரியாவின் மீது அதிகமான பக்திகொண்டு வாழ்ந்து வந்தார். அவர் ஒவ்வொருமுறையும் வீட்டு மாடிப்படியை ஏறி இறங்குகின்றபோது ‘அருள் நிறைந்த மரியே வாழ்க’ என்ற மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருப்பார். இவர் அதிக அழகோடு இருந்தார். இதனால் இவருடைய தாய் இவரை சிறுவதிலேயே ஒரு பணக்கார இளைஞனுக்கு மணமுடித்துக் கொடுக்க நினைத்தார். ஆனால் இவரோ, தான் யாரையும் மணக்கப் போவதில்லை, கிறிஸ்துவுக்கே தன்னை முழுமையாய் அர்ப்பணிக்கப் போவதாகவும் இருக்கிறேன் என்று சொல்லி, தன்னுடைய இலட்சியத்தில் மிக உறுதியாக இருந்தார். இவருடைய தாய் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாலும், இவருடைய தந்தை கத்ரீனுடைய முடிவுக்கு ஆதரவு அளித்தார். அதனால் இவர் வீட்டில் இருந்த ஓர் அறையில் தன்னை அடைத்துக்கொண்டு ஜெபத்திலும், தவத்திலும் தன்னுடைய வாழ்க்கையை முழுமையாய் செலவழித்தார்.

கத்ரீன் தனியாய் இருந்து ஜெபித்தபோது நிறைய காட்சிகளைக் கண்டார். அதில் ஒரு காட்சியில் மரியாவும் இயேசுவும் அவரைப் பார்க்க வந்தனர். இயேசு அவருடைய கைகளைப் பிடித்துக்கொண்டு, அவருக்கு மோதிரம் ஒன்றை பரிசாக அளித்துவிட்டுச் சென்றார். அது கத்ரீனுடைய கண்களுக்குத் தவிர வேறு யார் கண்களுக்கும் தெரியவில்லை. இவர் தனியாய் இருந்து ஜெபித்த தருணங்களில் நற்கருணையை மட்டுமே உணவாக உட்கொண்டு பல ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். இவருக்கு பதினெட்டு வயதை அடைந்தபோது டொமினிகன் மூன்றாம் சபையில் உறுப்பினராகச் சேர்ந்து தனி அறைக்குள் தன்னை அடைத்துக்கொண்டு வாழ்வதை விடுத்து, வெளியுலக வாழ்க்கையிலும் தன்னை ஈடுபடித்திக்கொள்ளத் தொடங்கினாள்.

இவர் வாழ்ந்த காலத்தில் திருச்சபையில் நிறைய குளறுபடிகள் நடந்துகொண்டிருந்தன. அதில் முக்கியமானது திருத்தந்தை பதினோறாம் கிரகோரியார் பிரான்சில் உள்ள அவின்ஞன் என்ற இடத்தில் வீட்டுச் சிறையில் அடைப்பட்டுக் கிடந்தார். கத்ரீன்தான் பெருமுயற்சி எடுத்து, அவரை உரோமைக்கு கொண்டு வந்தார். இவருக்குப் பிறகு திருத்தந்ததை ஆறாம் அற்பன் வந்தார். அவருக்கும் இவர் பேருதவியாக இருந்து வந்தார். அந்த காலகட்டத்தில் திருச்சபையை மேலும் உலுக்கிய நிகழ்வு இயேசு வாழ்ந்த புனித பூமியான பாலஸ்தீன் இஸ்லாமியரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. எனவே இவர் திருத்தந்தையை அணுகி, எதிரிகள் மீது போர்தொடுத்து புனித நாடுகளை மீட்டுத்தர கேட்டுக்கொண்டார். அதன்படி எதிரி நாட்டவர்மீது சிலுவைப் போர்கள் தொடக்கப்பட்டு, புனித நாடுகளை மீட்கும் பணி தொடங்கியது.

கத்ரீன் நாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்துவதில் வல்லவராக இருந்தார். குறிப்பாக அவர் சண்டை போட்டுக்கொண்டிருக்கும் நாடுகளுக்கு இடையே அமைதி பேச்சு வார்த்தை நடத்தி, சுமூகமான நிலை ஏற்பட பெரிதும் பாடுபட்டார். ஒருமுறை இவரி பிசா என்ற நகரில் இருந்த ஆலயத்தில் அமர்ந்து இறைவனிடம் ஜெபித்துக்கொண்டிருந்தபோது ஐந்து காய வரங்களைப் பெற்றார். இதனால் இவர் பெரிதும் அவஸ்தைப் பட்டார். ஆண்டவரிடம் இதை தன்னிடமிருந்து நீக்கிவிடுமாறு கேட்டார். ஆனால் ஆண்டவரோ ஐந்து காயங்களும் அவருக்கு இருக்குமாறு பணித்தார். இவர் ஜெப வாழ்விற்கு அதிக முக்கியத்துவம் தந்தார். இவருடைய Dialogue என்ற புத்தகம் மிகவும் பிரசித்து பெற்றது.

இப்படி பல்வேறு பணிகளை திருச்சபைக்கு செய்த கத்ரீன் 1382 ஆம் ஆண்டு ரோம் நகரில் இறையடி சேர்ந்தார். 1461 ஆம் ஆண்டு இவர் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டார். 1970 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த ஆறாம் சின்னப்பர் இவரை திருச்சபையின் மறைவல்லுனராக உயர்த்தினார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய சியென்னா நகர் கத்ரீனின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் இவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. நற்கருணை ஆண்டவரிடம் பக்தி

இவருடைய வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்க்கும்போது இவர் எந்தளவுக்கு நற்கருணை ஆண்டவரிடத்தில் ஆழமான, அசைக்க முடியாத பக்தி கொண்டு வாழ்ந்தார் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். இவர் நற்கருணையை மட்டுமே உணவாக உட்கொண்டு பல ஆண்டுகள் வாழ்ந்தார். ‘நற்கருணையை வாழ்வளிக்கும் உணவாகப் பார்த்தார். இவருடைய விழாவைக் கொண்டாடும் நாம் நற்கருணை ஆண்டவரின் ஆழமான பக்திகொண்டு வாழ்கிறோமா? அவரை நம்முடைய வாழ்வில் உணர்கிறோமா? என்று சிந்தித்துப் பார்ப்போம்.

யோவான் நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு, இவ்வுணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார்” (யோவான் 6: 51). இயேசுவின் இவ்வார்த்தைகளில் உள்ள அர்த்தத்தை, வாழ்வளிக்கும் உணவாகிய நற்கருணை ஆண்டவரின் பிரசன்னத்தை நம்முடைய வாழ்வில் உணர்ந்திருக்கிறோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

1880 களில் ஓர் ஏழை குடும்பம் கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்து, பிரான்சு நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு செல்லும் ஒரு சொகுசுக் கப்பலில் பயணம் செய்யத் தீர்மானித்தது. அவர்கள் இந்த கப்பல் பயணத்திற்காக தங்களிடமிருந்த எல்லாவற்றையும் செலவு செய்திருந்தார்கள். செலவுக்கு என்று சிறிதளவே அவர்களிடத்தில் பணம் இருந்தது. அதனால் நீண்டநாட்கள் இருக்கும் கப்பல் பயணத்திற்கு என்று கப்பலில் வழங்கப்படும் உணவை வாங்கி உண்டால், அதிக செலவாகும் என்று நினைத்து, தங்களுடைய வீட்டிலிருந்து கொண்டுவந்த ரொட்டித் துண்டையே உண்டு வந்தார்கள். இதைக் கவனித்து வந்த அந்தக் கப்பலில் பயணம் செய்துவந்த சக பயணி ஒருவர், “எதற்காக இந்த ரொட்டித் துண்டை உண்டு வருகிறீர்கள். கப்பலில் வழங்கப்படும் உணவை உண்ணலாமே?” என்றார். அதற்கு அவர்கள், “இங்கே வழங்கப்படும் உணவு விலை அதிகமாக இருக்கம் அல்லவா, அதனால்தான் எங்களுடைய வீட்டிலிருந்து கொண்டு வந்த உணவை உண்கிறோம்” என்றார்கள். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட அந்த சக பயணி, “பயணத்திற்காக நீங்கள் செலுத்திய தொகையிலேயே உணவுக்காக பணமும் அடங்கியிருக்கிறது” என்றார். இதைக் கேட்டு அவர்கள் தங்களுடைய விதியை நொந்துகொண்டார்கள்.

கப்பலில் வழங்கப்படும் உணவு இலவசமாகத்தான் வழங்கப்படுகிறது என்ற உண்மை கூடத் தெரியாமல் இருந்த அந்த குடும்பத்தாரைப் போன்று, நாமும் இலவசமாக இறைவனின் அருளைத் தரும் நற்கருணைப் பிரசன்னத்தை நம்முடைய வாழ்க்கையில் உணராதவர்களாக இருக்கின்றோம். ஆகவே, தூய கத்ரீனைப் போன்று நற்கருணை ஆண்டவரின் பிரசன்னத்தை உணர்ந்தவர்களாக வாழ்வோம். அதனால் நாம் திடம்பெற்ற மக்களாய் வாழ்வோம்.

2. அமைதியின் தூதுவர்களாய் வாழவேண்டும்

தூய சியென்னா நகர் கத்ரீன் நாடுகளுக்கு இடையேயும், திருச்சபையிலும் அமைதியை ஏற்படுத்துவதற்கு மிகப்பெரிய காரணியாக இருந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. இவருடைய முயற்சியாலேயே பல்வேறு பிரச்சனைகள் முடிவுக்கு வந்தன. இவ்வாறு அவர் அமைதியின் தூதுவனாய் இந்த மண்ணுலகில் விளங்கினார். மலைப்பொழிவில் ஆண்டவர் இயேசு கூறுவார், “அமைதியை ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவார்கள்” (மத் 5:9). நாம் இயேசு காட்டும் வழியில், தூய கத்ரீன் அவர்களது வழியில் நடக்கின்றோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

மேலை நாட்டில் வாழ்ந்த மிகச் சிறந்த இசையமைப்பாளர் பாப்லோ காசல் என்பவர் ஆவார். இவர் அடிக்கடி சொல்லக்கூடிய செய்தி, “நான் அமைக்கும் இசை கோர்பு, பாடல்கள் அனைத்தும் இந்த உலகத்தில் அமைதியை ஏற்படுத்தவே. என் இசையைக் கேட்போரது இதயத்தில் ஒருவிதமான அமைதி பரவும். அந்த அமைதியே நான் இந்த உலகிற்கு கொடுக்க நினைத்தது”. பாம்லோ காசல் இந்த உலகத்தில் அமைதியை ஏற்படுத்த எடுத்த முயற்சி வித்தியாசமானதாக இருக்கலாம். ஆனாலும் அது சிறப்பான முயற்சியாகும். நாமும் நம்மாலான முயற்சிகளை மேற்கொண்டு இந்த உலகில் அமைதியை ஏற்படுத்த முயலவேண்டும்.

ஆகவே, தூய சியென்னா கத்ரீனின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் நாமும் அவரைப் போன்று நற்கருணை ஆண்டவரிடத்தில் அதிக பக்தி கொண்டு வாழ்வோம். இந்த உலகில் அமைதியை ஏற்படுத்தும் கருவிகளாவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

† இன்றைய புனிதர் †
(ஏப்ரல் 29)

✠ புனிதர் கேதரின் ✠
(St. Catherine of Siena)
கன்னியர், மறைவல்லுநர்:
(Virgin, Doctor of Church)

பிறப்பு: மார்ச் 25, 1347
சியென்னா, சியென்னா குடியரசு
(Siena, Republic of Siena)

இறப்பு: ஏப்ரல் 29, 1380 (வயது 33)
ரோம் நகரம், திருத்தந்தையர் மாநிலம்
(Rome, Papal States)

ஏற்கும் சமயம்: 
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)
லூதரனிய திருச்சபை
(Lutheranism)

புனிதர் பட்டம்: ஜூன் 29, 1461
திருத்தந்தை இரண்டாம் பயஸ்
(Pope Pius II)

முக்கிய திருத்தலம்:
புனித மரியா சோப்ரா மினெர்வா, ரோம் மற்றும் புனித கேதரின் பேராலயம், சியென்னா
(Santa Maria sopra Minerva, Rome and Shrine of Saint Catherine, Siena)

நினைவுத் திருவிழா: ஏப்ரல் 29

சித்தரிக்கப்படும் வகை: 
டோமினிக்கன் சபையினரின் ஆடை, லில்லி மலர், புத்தகம், சிலுவை, இதயம், முள் முடி, ஐந்து காயம், மோதிரம், புறா, ரோஜா, மண்டை ஓடு

பாதுகாவல்: 
பென்சில்வேனியா (Pennsylvania), ஐக்கிய அமெரிக்கா (USA), ஐரோப்பா (Europe), தீ விபத்துக்கெதிராக, இத்தாலி (Italy), கருச்சிதைவுகள், “அல்லன்டவுன் மறைமாவட்டம்” (Diocese of Allentown), தம் நம்பிக்கைக்காக அவதியுறும் மக்கள், செவிலியர், பாலியல் சோதனையுறுவோர், நோயுற்றவர்களுக்கு.

சியன்னா நகர புனிதர் கேதரின் ஒரு டோமினிக்கன் மூன்றாம் சபையின் உறுப்பினரும், இறையியலாளரும், மெய்யியலாளரும் ஆவார். இவர் அவிஞ்ஞோன் (Avignon) நகரில் தங்கியிருந்த திருத்தந்தை பதினொன்றாம் கிரகோரி (Pope Gregory XI) ரோம் நகருக்குத் திரும்பிச் செல்ல மிக முக்கிய காரணியாய் இருந்தார். 1970ம் ஆண்டு, இவர் கத்தோலிக்க திருச்சபையின் மறைவல்லுநராக அறிவிக்கப்பட்டார். அசிசியின் புனிதர் ஃபிரான்சிஸ் (St. Francis of Assisi) அவர்களுடன் இணைந்து இவரும் இத்தாலியின் பாதுகாவலராக கருதப்படுகின்றார்.

வாழ்க்கைக் குறிப்பு:
"கேதரீனா டி ஜியாகோமோ டி பெனின்கசா" (Caterina di Giacomo di Benincasa) எனும் இயற்பெயர் கொண்ட இவர், இத்தாலியில் உள்ள சியென்னா என்னும் ஊரில், "கியாகோமோ டி பெனின்கசா" (Giacomo di Benincasa) மற்றும் "லாப்பா பியகென்டி" (Lapa Piagenti) ஆகிய பெற்றோருக்கு பிறந்தவர். இவர் பிறந்த வருடமான கி.பி. 1347ம் ஆண்டு, கறுப்பு மரணங்களால் இத்தாலியின் சியென்னா மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது.

கேதரினுடையகு ஐந்து அல்லது ஆறு வயதின்போது கிறிஸ்து இயேசுவின் முதல் திருக்காட்சி கிடைக்கப்பெற்றார். அதில் இயேசு நாதருடன் அப்போஸ்தலர்கள் பேதுரு, பவுல் மற்றும் யோவான் ஆகியோரும் இருந்ததாகவும், இறைவன் தன்னை ஆசிர்வதித்தார் எனவும், இக்காட்சியின் முடிவில் தாம் பரவச நிலையை அடைந்ததாகவும் கூறியுள்ளார். ஏழு வயதில் இவர் கற்பு வார்த்தைப்பாட்டை அளித்தார்.

இவரின் மூத்த சகோதரியின் மறைவுக்கு பின்னர், மூத்த சகோதரியின் கணவரை மணக்க இவரின் பெற்றோர், இவரை கட்டாயப்படுத்தினர். இதனால் தன் பெற்றோர் மனம் மாறும்வரை உண்ணா நோன்பிருந்தார். அப்போது தன் அழகை குறைக்க தன் நீண்ட கூந்தலை வெட்டினார். புனித தோமினிக் அவரின் கனவில் தோன்றி அவரைத் தேற்றினார்.

கேதரின், தொமினிக்கன் சபையில் சேர்ந்தார். இதனை அச்சபை உறுப்பினர்கள் பலர் எதிர்த்தனர். ஏனெனில் அதுவரை விதவைகள் மட்டுமே அச்சபையில் சேர அனுமதி இருந்தது.

கி.பி. 1366ம் ஆண்டு, அவருக்கு கிடைத்த பரவச நிலையில் இயேசு தன்னை ஆன்மீக முறையில் மணந்து கொண்டதாக இவர் நம்பினார். அப்போது கிறிஸ்து இவரை, மறைந்த வாழ்வினை விடுத்து, பொது வாழ்க்கைக்கு போக சொன்னதாக இவர் தன் ஆன்மீக வழிகாட்டியிடம் கூறியுள்ளார். இவர் நோயுற்றோருக்கு உதவினார். இவரின் தொண்டு உள்ளம் சிலரைக் கவர்ந்ததால், மேலும் சிலரும் தொண்டு புரிவதில் இவரோடு இணைந்தனர். இதனால் கி.பி. 1374ம் ஆண்டு, தொமினிக்கன் சபைத் தலைவர்களால் ஃபிளாரன்ஸ் (Florence) நகரில் தப்பறைக் கொள்கைகளுக்காக விசாரிக்கப்பட்டு, குற்றமற்றவராக அறிவிக்கப்பட்டார். இதன் பின் வடக்கு மற்றும் மத்திய இத்தாலியில் பயணம் செய்து, கடவுளை அன்பு செய்து புரட்சி படைக்க மக்களை ஊக்குவித்தார்.

கி.பி. 1370ம் ஆண்டின் முன் பகுதில் அவர் பலருக்கு கடிதம் எழுதினார். இக்கடிதங்களினால் இத்தாலியின் பெருங்குடியினர் மத்தியில் அமைதி பிறக்க அரும்பாடுபட்டார். இவர் திருத்தந்தை பதினொன்றாம் கிரகோரியுடன் மிக நீண்ட கடித தொடர்பு வைத்திருந்தார். அதில் அவர் திருத்தந்தை நாடுகளின் மேலாளர்களையும், குருக்களையும் கண்டித்து வழிநடத்த அறிவுறுத்தினார்.

கி.பி. 1376 ம் ஆண்டு, ஜூன் மாதம், இவர் தாமாகவே முன்வந்து திருத்தந்தை நாடுகளில் அமைதி கொணர முயன்றார். அது பயன் அளிக்காததால், திருத்தந்தை பதினொன்றாம் கிரகோரியை மீண்டும் அவிஞ்ஞோனிலிருந்து ரோமுக்கு கி.பி. 1377ம் ஆண்டு, ஜனவரி மாதம், திரும்பி வரச் செய்தார். இத்திருத்தந்தையின் மறைவுக்குப் பின், யாரைத் திருத்தந்தையாக ஏற்பது என்பது குறித்து மேற்கு திருச்சபையில் பிளவு ஏற்பட்டது ("பெரும் பிளவு" அல்லது Western Schism of 1378). அப்போது இவர் திருத்தந்தை ஆறாம் அர்பனுக்கு (Pope Urban VI) துணை புரிய ரோம் நகரில் சென்று தங்கினார். அங்கேயே சாகும் வரை இருந்தார். இந்தப் பெரும் பிளவினால் ஏற்பட்ட துன்பங்களினால் அவர் சாகும் வரை வாடினார்.

புனித கேதரினின் கடிதங்கள் ஆரம்பகால டஸ்கான் இலக்கியத்தின் சிறந்த படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இக்கடிதங்களுல் 300 கிடைத்துள்ளன. திருத்தந்தைக்கான தனது கடிதங்களில், அவர் அடிக்கடி அவரை 'Papa' (இத்தாலிய மொழியில் "திருத்தந்தை") என்று அன்பாக குறிப்பிடுகின்றார். ஆன்ம குருக்கள், கபுவாவின் ரேமண்ட், ஃபிரான்ஸ் மற்றும் ஹங்கேரி அரசர்கள், கூலிப்படையினனான ஜான் ஹாக்வுட், நேபிள்ஸ் ராணி, மிலனின் விஸ்கோன்தி (Visconti) குடும்ப உறுப்பினர்கள், மற்றும் பலருக்கு இக்கடிதங்கள் எழுதப்பட்டன. அவரது கடிதங்கள் சுமார் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு எழுதப்பட்டது.

இவரின் "The Dialogue of Divine Providence" என்னும் நூல், கி.பி. 1377 - 1378 காலகட்டத்தில் இவர் சொல்லச் சொல்ல எழுதப்பட்டதாகும். பெரும்பாலும் படிப்பறிவில்லாதவராக கருதப்பட்டாலும், லத்தீன் மற்றும் இத்தாலிய மொழிகளை படிக்கும் திறன் இருந்ததாக அவரின் ஆன்ம குரு ரேமண்ட் கூறியுள்ளார், அவரது எழுத்துக்கள் பெரும்பாலும் மற்றவரால் சொல்லச் சொல்ல எழுதப்பட்டது என்றாலும் அவருக்கு எழுதத் தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இறப்பு:
புனிதர் கேதரின் முப்பத்திமூன்று வயதில் ரோம் நகரின் வசந்த காலத்தில், கி.பி. 1380ம் ஆண்டு மரித்தார். “தந்தையே, உம் கைகளில் என் உயிரையும் ஆவியையும் ஒப்படைக்கிறேன்” (Father, into Your Hands I commend my soul and my spirit) என்பதே அவருடைய இறுதி வார்த்தைகளாகும்.

கேதரின் உணவு குறைவாகவே உண்டார். அதற்கு பதிலாக அவர் தினசரி நற்கருணை பெற்றார். இதனால் குருக்கள் மற்றும் அவரது சொந்த சபை சகோதரிகள் கண்களிலும் ஆரோக்கியமற்று தோற்றமளித்தார். இவரின் ஆன்ம குரு, ரேமண்டு, இவரை சரியான உணவு உண்ண அறிவுறுத்தியபோது, தன்னால் உண்ண முடியவில்லை எனவும், அவ்வாறு உண்டால் கடுமையான வயிற்று வலியால் அவதியுறுவதாகவும் கூறினார் என்பர்.

மினெர்வா மேல் புனித மரியா கோவிலின் அருகில் உள்ள கல்லறையில் இவர் அடக்கம் செய்யப்பட்டார். அங்கே பல புதுமைகள் நிகழ்ந்ததாக மக்கள் கூறியதால் இவரின் உடல் கோயிலினுள் அடக்கம் செய்யப்பட்டது. இவரின் தலை, உடலிலிருந்து பிரித்து எடுக்கப்பட்டு சியன்னா நகரில் உள்ள தொமினிக்கன் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.

கி.பி. 1940ம் ஆண்டு, மே மாதம், ஐந்தாம் நாளன்று, திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ், புனிதர் அசிசியின் ஃபிரான்சிஸ் அவர்களுடன் சேர்த்து இவரையும் இத்தாலியின் பாதுகாவலராக அறிவித்தார். திருத்தந்தை ஆறாம் பவுல், 1970ம் ஆண்டு, இவரை மறைவல்லுநராக அறிவித்தார். அவிலாவின் புனித தெரேசாவுக்கு அடுத்தபடியாக ஒரு பெண் இப்பட்டத்தை பெறுவது இதுவே முதன் முறை. 1999ம் ஆண்டு, திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் இவரை ஐரோப்பிய நாடுகளின் பாதுகாவலராக அறிவித்தார்.

கேதரின் பசியற்ற நோயால் (Anorexia mirabilis) அவதிப்பட்டார் என்பர். இருப்பினும் இவர் தனது ஆன்மீக எழுத்துக்களுக்காகவும், அதிகாரம் உடையவர்களிடம் பணிந்து செல்லாமல் உண்மையை பேசியதற்காகவும் பெரிதும் மதிக்கப்படுகின்றார். இவரின் காலத்தில் இத்தகைய துணிச்சலோடு, ஒரு பெண் இருப்பது விதிவிலக்காகும். இதுவே இவர் அரசியல் மற்றும் உலக வரலாறு போன்றவற்றில் செல்வாக்கு செலுத்த முக்கிய காரணமாக இருந்தது.
Saint of the Day : (29-04-2020)

St. Catherine of Siena

She was born on March 25, 1347 in Siena, Italy. Her parents were Giacomo di Benincasa and Lapa Piagenti. Her mother gave birth to twin daughters when she was 40 years old named Catherine and Giovanna. Giovanna died early. It is reported that Catherine had her first vision of Jesus Christ when she was five years old, when Jesus smiled at her, blessed her and left her in ecstasy. She vowed chastity when she was seven years old. When her elder sister Bonaventura died at child birth, Catherine’s parents wanted Catherine to marry the widower of her elder sister. But she refused to do so and lived a secluded life of penance and constant prayer. On seeing the position of Catherine, her parents gave up the idea of her marriage. She then joined as a tertiary of the Third Order of Saint Dominic, wearing black and white habit. In about the year 1366 she experienced a mystical marriage with Jesus as per her biography written by Raymond of Capua. She also received stigmata in the year 1375 and received communion from Jesus himself. But the stigmata were visible only on her death. She took care of poor and sick people in homes and hospitals. When the popes were residing in Avignon instead of Rome due to the western schism, she personally met pope Gregory-XI at Avignon and convinced him to return to Rome, which the pope did in January 1377. She was illiterate and so she only dictated all his letters to religious people including the pope. She died on April 29, 1380 in Rome at 33 years of age. When the people of Siena wanted to take her head to Siena from Rome, they smuggled her head in a bag praying always to Catherine herself, to escape detection by guards. But the guards asked the person with the bag containing the head of Catherine to open the bag. But when the bag was opened, the bag was found to contain only rose petals and the guards could not see the head of Catherine. After reaching Siena, when they opened the bag, Catherine’s head was there. The head was inserted in a gilt bust of bronze and was taken around the city of Siena and the mother of Catherine walked behind the bust. Catherine was canonized by pope Pius-II in the year 1461. She was declared as the Doctor of the Church in 1970 by pope Paul-VI along with St. Teresa of Avila.

St. Catherine is the patron saint of Nurses and Fire-fighters. She is also invoked against fire, bodily ills, sexual temptation and sickness.

---JDH---Jesus the Divine Healer---