புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

28 May 2020

மார்கரெட் போல் (1473-1541) May 28

மே 28 

மார்கரெட் போல் (1473-1541)
இவர் இங்கிலாந்தில் பிறந்தவர். இவர் இங்கிலாந்தை ஆண்டுவந்த நான்காம் எட்வர்ட் என்பவருக்கு நெருங்கிய சொந்தம்.

இவர் ரெஜினால்ட் போல் என்பவரை மணந்தார். இறைவன் இவர்களுக்கு ஐந்து குழந்தைகளைக் கொடுத்து ஆசி வழங்கினார். இப்படி இவர்களுடைய இல்லற வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்த  வேளையில், இவரது கணவர் திடீரென இறந்து போனார். இதனால் இவர் கைம்பெண் ஆனார்.

தன் கணவருடைய இறப்பிற்குப் பிறகு இவர்  தன்னுடைய குழந்தைகளை இறை நம்பிக்கையிலும் பிறர் அன்பிலும் சிறந்த விதமாய் வளர்த்து வந்தார். இதற்கு பின்பு இவர் சாலிபரி என்ற இடத்தில் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இவ்வேளையில் இங்கிலாந்தை ஆண்டு வந்த எட்டாம் ஹென்றி என்ற மன்னர் தன்னுடைய மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணந்தார். இத்தவற்றை மார்கரெட் போல் சுட்டிக் காட்டியதால், மன்னர் இவரைக் கைது செய்து இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்தார். 

பின்னர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட இவர், மன்னரால் தலை வெட்டிக் கொல்லப்பட்டார். இவருக்கு திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ 1886 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுத்தார்.

.

மான்ட்ஜூக்ஸ் நகர புனிதர் பெர்னார்ட் May 28

† இன்றைய புனிதர் †
(மே 28)

✠ மான்ட்ஜூக்ஸ் நகர புனிதர் பெர்னார்ட் ✠
(St. Bernard of Montjoux)
இத்தாலிய துறவி, மறைப்பணியாளர், புகழ்பெற்ற (Hospice) எனப்படும் நல்வாழ்வு சேவை மையம் மற்றும் மடத்தின் நிறுவனர்:
(Italian monk, Religious, and the Founder of the famed Hospice and Monastery)

பிறப்பு: கி.பி 1020
சேட்டோ டி மெந்தன், சவோய் கவுண்டி, ஆர்லஸ் இராச்சியம்
(Château de Menthon, County of Savoy, Kingdom of Arles)

இறப்பு: ஜூன் 1081
நோவாரா இம்பீரியல் சுதந்திர நகரம், தூய ரோமானியப் பேரரசு
(The Imperial Free City of Novara, Holy Roman Empire)

ஏற்கும் சமயம்:
கத்தோலிக்க திருச்சபை (Catholic Church)
(புனித அகஸ்டினின் சபை உறுப்பினர்கள்) (Canons Regular of St. Augustine)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

புனிதர் பட்டம்: கி.பி 1681
திருத்தந்தை பதினோராம் இன்னசென்ட்
(Pope Innocent XI)

நினைவுத் திருநாள்: மே 28

பாதுகாவல்:
மலையேறுபவர்கள், பனிச்சறுக்கு, பனிச்சறுக்குப் பலகை, மலையேறுபவர்கள் பின்னால் சுமக்கும் சுமை மற்றும் ஆல்ப்ஸ் மலை

மான்ட்ஜூக்ஸ் நகர புனிதர் பெர்னார்ட், ஒரு இத்தாலிய துறவியும், மறைப்பணியாளருமாவார். இவர், (Hospice) எனப்படும் புகழ்பெற்ற நல்வாழ்வு மையம் மற்றும் துறவு மடத்தின் நிறுவனரும் ஆவார். இது, கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டு காலமாக, மேற்கு ஆல்ப்ஸ் மலைத்தொடரின் மிகவும் ஆபத்தான பகுதிகளில் அடைக்கலமாகும் மலையேறும் பயணிகளை மீட்கும் பணி சேவை செய்திருக்கிறது. இவர்களது மீட்புப் பணி முழுதுமே, இவர்களது சபையினராலேயே செய்யப்பட்டு வந்துள்ளது. குளிர்கால புயல்களின் போது மீட்புப் பணிக்காக இவர் வளர்த்துவந்த புகழ்பெற்ற ஒருவகை இன நாய்கள், இவற்றின் சிறப்புக்காகவே, இவரது பெயராலேயே - "புனித பெர்னார்ட் நாய்கள்" (St. Bernard dogs) என்று அழைக்கப்படுகின்றன.

அக்கால "ஆர்லெஸ்" (Kingdom of Arles) இராச்சியத்தின் ஒரு பகுதியான "கௌன்டி சவோய்" (County of Savoy) எனப்படும் தூய ரோம மாநிலத்தின் "சேட்டோ டி மெந்தன்" (Château de Menthon) எனும் நகரில் பிறந்த பெர்னார்ட், ஒரு பணக்கார மற்றும் உன்னத குடும்பத்திலிருந்து வந்தவர் ஆவார். பாரிஸ் (Paris) நகரில் தமது முழுமையான கல்வியைப் பெற்றார். அவர் இளமைப் பருவத்தை அடைந்ததும், திருச்சபையின் சேவைக்காக தன்னை அர்ப்பணிக்க முடிவுசெய்தார். தனது தந்தை ஏற்பாடு செய்த கெளரவமான திருமணத்தை மறுத்துவிட்டார்.
(பிரபலமான புராணக்கதை ஓன்று, இவருக்கு ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்திற்கு முந்தைய இரவில் அவர் கோட்டையிலிருந்து வெளியேறினார் என்றும், ஜன்னலிலிருந்து தன்னைத் தூக்கி எறிந்து, தரையிலிருந்து சுமார் 40 அடி உயரத்தில் கோட்டையிலிருந்து பறக்கும்போது, தேவதூதர்களால் பிடிக்கப்பட்டு மெதுவாக, பாதுகாப்பாக இறக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இத்தாலிய ஆல்ப்ஸ் மலைகளில் (Italian Alps) உள்ள இருமொழிப் பகுதியான "ஆஸ்டா பள்ளத்தாக்கின்" (Aosta Valley) "ஆஸ்டா" (Aosta) நகரின் தலைமை திருத்தொண்டரான (Archdeacon of Aosta) "பீட்டரின்" (Peter) வழிகாட்டுதலின் கீழ் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அவருடைய வழிகாட்டுதலின் கீழ் அவர் வேகமாக முன்னேறினார். ஒரு குருவாக அருட்பொழிவு செய்யப்பட்ட பெர்னார்ட், மலை கிராமங்களில் மிஷனரியாக பணியாற்றினார். பின்னர், அவரது கற்றல் மற்றும் நல்லொழுக்கம் காரணமாக, அவர் தனது ஆலய தலைமை திருத்தொண்டராக நியமிக்கப்பட்டார். அவருக்கு நேரடியாக ஆயரின் கீழே, மறைமாவட்டத்தின் அதிகார பொறுப்புகளை வழங்கினர்.

42 ஆண்டுகளாக, அவர் தொடர்ந்து இந்த மக்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கித்தார். இத்தாலியின் வடமேற்குப் பிராந்தியமான லோம்பார்டியின் பல மண்டலங்களுக்குள் கூட, ஏராளமான மாற்றங்களைச் செய்தார். மற்றும் பல அற்புதங்களையும் செய்தார். புனித பெர்னார்ட்டின் வாழ்க்கையின் கடைசி செயல் இரண்டு பிரபுக்களின் இடையே இருந்த வேற்றுமைகளை அகற்றிச் சமரச நல்லிணக்கமாகும். அவர்களிடையே இருந்த சண்டை ஒரு அபாயகரமான அச்சுறுத்தியதலை விளைவிக்கக் கூடியதாய் இருந்தது.

அவர் கி.பி. 1081ம் ஆண்டு, ஜூன் மாதம், நோவாரா இம்பீரியல் சுதந்திர நகரில் இறந்தார். புனித லாரன்ஸ் மடத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

நியூயார்க் (New York) நகர "சரனாக்" (Saranac Lake) ஏரியில் உள்ள புனித பெர்னார்ட் கத்தோலிக்க தேவாலயம் (Saint Bernard's Catholic Church) அவரது பெயரில் அர்ப்பணிக்கப்பட்டதாகும்.

தூய ஜெர்மானுஸ் (மே 28)

இன்றைய புனிதர் :
(28-05-2020)

தூய ஜெர்மானுஸ் (மே 28)
“இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவார்கள் (மத் 5: 7)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் தூய ஜெர்மானுஸ் பிரான்ஸ் நாட்டில் உள்ள ஆட்டன் என்னும் இடத்தில் 496 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் வளரும்போதே ஞானத்திலும் அறிவிலும் சிறந்து விளங்கி வந்தார்.

இவர் வளர்ந்து இளைஞனாகியபோது குருவாகப் போகவேண்டும் என்ற எண்ணம் கொண்டார். எனவே இவர் துறவுமடத்தில் சேர்ந்து தன்னுடைய முப்பத்தி நான்காம் வயதில் குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டார். குருவாக மாறிய பின் இவர் சிம்போரியன்ஸ் என்ற துறவுமடத்தில் தங்கி தூய வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இயல்பிலே இரக்க குணம் கொண்ட ஜெர்மானுஸ் ஏழை எளியோருக்கு வாரி வாரி வழங்கினார். தன்னிடம் கேட்பவருக்கு முகம் கோணாமல் உதவி செய்து வந்தார். சில சமயங்களில் இவருடைய சபையில் இருந்த துறவிகள், எங்கே ஜெர்மானுஸ் துறவுமடத்தை விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிடுவாரோ என்றுகூட பயந்தார்கள். அந்தளவுக்கு இவர் தாரள உள்ளத்தினராய் வாழ்ந்து வந்தார்.

இதற்கிடையில் பாரிசில் இருந்த ஆயர் யூசேரியுஸ் இறந்துவிட, இவர் ஆயராக பதவி உயரும் சூழ்நிலை ஏற்பட்டது. ஆயராக உயர்ந்த ஜெர்மானுஸ் மிகச் சிறப்பான முறையில் ஆன்மீகப் பணிகளையும் மக்கள் பணியையும் ஆற்றிவந்தார்.

ஒரு சமயம் பிரான்ஸ் நாட்டு அரசர் கில்டபர்ட் நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையானர். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அனைவரும், அவர் உயிர் பிழைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று சொல்லி, கைநழுவிவிட்டு போய்விட்டனர். விஷயம் அறிந்த ஜெர்மானுஸ் அரசர் முன்பாகச் சென்று, முழந்தாள்படியிட்டு ஜெபிக்கத் தொடங்கினார். ஆச்சரியம் என்னவென்றால், அவர் இவ்வாறு ஜெபிக்கத் தொடங்கிய சில மணிநேரத்திலே அவர் உடல்நலம் தேறி பிழைத்துக்கொண்டார். இதனால் மகிழ்ந்து போன ஜெர்மானுசை தன்னுடைய ஆலோசகராக வைத்துக்கொண்டார். அது மட்டுமல்லாமல் அரசர் ஜெர்மானுசுக்கு வேண்டிய மட்டும் உதவி செய்து வந்தார்.

ஜெர்மானுஸ் பிரான்சில் நடைபெற்ற முதலாம் மற்றும் இரண்டாம் பொது சங்கங்களில் கலந்துகொண்டு, திருச்சபையை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்வதற்கு மிகவே உழைத்தார். அதோடு திருவழிபாட்டில் இருந்த தேவையற்ற சடங்குமுறைகளை எல்லாம் அகற்றி ஒரு வழிக்குக் கொண்டு வந்தார். இப்படி ஏழைகளின் ஏந்தலாய், திருச்சபையின் வளர்ச்சியில் பெரிதும் அக்கறை கொண்டு வாழ்ந்து வந்த ஜெர்மானுஸ் 576 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ஜெர்மானுசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. நன்மை செய்யும் வாழ்க்கை வாழ்தல்

தூய ஜெர்மானுசின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கும்போது மேலே சொல்லப்பட்ட தலைப்புதான் நம்முடைய நினைவுக்கு வந்து போகிறது. அவர் எல்லாருக்கும் அதிலும் குறிப்பாக ஏழை எளியவருக்கு நன்மை செய்வதில் மிகவும் கருத்தாய் இருந்தார். இவருடைய நினைவுநாளைக் கொண்டாடும் நாம் நன்மை செய்வதில் கருத்தாய் இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

திருத்தூதர் பணிகள் நூல் 10:38 ல் வாசிக்கின்றோம், “கடவுள் நாசரேத்து இயேசுவோடு இருந்ததால் அவர் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் விடுவித்தது எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார்” என்று. ஆம், இயேசு எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார். அவர் வழியில் நடக்கும் நாம் ஒவ்வொருவரும் நன்மை செய்துகொண்டே செல்வதுதான் சிறப்பாக ஒரு காரியமாகம்.

ஒரு சமயம் பிரான்சில் ஆயராக இருந்த மாசிலோன் (Massilon) என்பவர் இறைமக்களைப் பார்த்து இவ்வாறு குறிப்பிட்டார்: “என்னுடைய மறையுரையைக் கேட்டுவிட்டு, என்ன ஒரு அருமையான மறையுரை, இவர் எவ்வளவு சிறப்பாக போதிக்கின்றார் என்று சொல்வதை விடவும் மறையுரையைக் கேட்ட பின்பு ஏதாவது நல்லது செய்வேன் என்று சொல்வதே சிறப்பானது, அதுவே நான் விரும்புவது”.

ஆம், மறையுரை நன்றாக இருக்கின்றது, குருவானவர் நன்றாக மறையுரை ஆற்றுகிறார் என்று சொல்வதை விடவும் மறையுரையில் சொல்லப்பட்ட கருத்துகளின் வாழ்வேன் என்று சொல்வதே சிறப்பானது.

ஆகவே, தூய ஜெர்மானுசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று ஏழை எளியவரிடம் உண்மையான அன்பும் அக்கறையும் கொண்டு வாழ்வோம், நன்மை செய்வதில் கருத்தாய் இருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

இன்றைய புனிதர்

2020-05-28

புனித கெர்மானூஸ் (St.Germanus)

ஆயர் (Bishop)


பிறப்பு
496
அவுடன்(Autun), பிரான்சு

இறப்பு
28 மே 576


தனது இளமைப்பருவத்திலிருந்தே பலவற்றை படித்து தெரிந்துகொள்வதிலும், அவற்றை மக்களுக்காக பயன்படுத்துவதிலும் இவர் தனது நாட்களை கழித்தார். 530 ஆம் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். 540 ஆம் ஆண்டு அவுடன் என்ற ஊரில் புனித சிம்போரிஸ் (Symphorian) என்றழைக்கப்பட்ட ஓர் துறவற மடத்தைக் கட்டினார். 550 ல் பாரிஸ் நகரின் ஆயர் இறந்துவிடவே, அரசர் முதலாம் சில்டேபெர்ட் (Childebert I) அவர்களால் ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது கெர்மானூஸ், அரசர் குடும்பத்தின் ஆலோசகராக அமர்த்தப்பட்டார். அவர் ஓர் உயர்ந்த அரசரிடம் பணியாற்றியபோதும், ஏழ்மையான வாழ்வை ஒரு போதும், எக்காரணத்தை முன்னிட்டும் கைவிடவில்லை. தன்னுடைய ஒறுத்தல் வாழ்வினால் ஏராளமான ஏழைகளின் கண்ணீரைத் துடைத்தார். தனது அருமையான, எளிமையான மறையுரையால் மக்களை இறைவன்பால் ஈர்த்தார். இவரின் மறையுரையைக் கேட்கவே ஆங்காங்கே இருந்தவர்கள் அனைவரும் கூடி வந்து, பலமணி நேரம் காத்திருந்து, ஆயரின் மறையுரையைக் கேட்டு சென்றார்கள். இவர் வாழும் போதே பாரிஸ் மக்களால் புனிதராக போற்றப்பட்டது. இதனால் போலந்து நாட்டு அரசர் 5 ஆம் யோவான் கஸ்மீர் (Johann Kasmir) அவர்களாலும், மக்களாலும் கெர்மானூஸ் என்று, இவர் பெயராலேயே ஓர் ஆலயம் கட்டினர். இவ்வாலயத்தில் அவர் தனது இறுதிநாட்கள் வரை, வாழ வேண்டுமென்று மக்களால் அன்போடு கேட்டுக் கொள்ளப்பட்ட்டார். அவ்வாலயம் கட்டும்போதே அதன் அருகில், அவருக்கென்று ஓர் தங்கும் அறையையும் கட்டிக்கொடுத்தனர். அதில், அவர் தங்கும் அறையில், தனது தலைவைத்து படுக்குமிடத்தில் "28" என்ற எண்ணை எழுதிவைத்தார். அப்போது அவ்வெண்ணின் அர்த்தம் என்னவென்று யாவராலும் அறியமுடியவில்லை. அவர் இறந்தபோதுதான், அவ்வெண், அவரது இறப்பின் நாள் என்பதை அனைவரும் உணர்ந்தனர். இவ்வாறு இவர் வாழும் போதே தனது இறப்பிற்கான நாளை குறித்து, அதன்படியே இறந்தார்.

இவர் இறக்கும் வரை 6 ஆம் நூற்றாண்டில் தூனிக்கா (Tunika) நாட்டிலிருந்த புனித வின்செண்ட் அவர்களின் நம்பிக்கைக்குரிய மக்களுக்காக இவர் பெரிதும் பாடுபட்டார். அரசன் முதலாம் சில்டேபெர்ட் அவர்களின் உதவியுடன் மிகக் குறைந்த ஆண்டுகளிலேயே ஏராளமான பணிகளை செய்து, பிரான்சு நாட்டு திருச்சபையில் , ஓர் பெரிய தொண்டாற்றும் ஆயராக திகழ்ந்தார்.

இவர் மெய்யியலையும் கரைத்து குடித்தவராக இருந்தார். படித்தவைகளை தன் வாழ்வாக வாழ்ந்தார். இவர் ஓர் "மெய்யியல் அறிஞர்" என்றே மக்களால் அழைக்கப்பட்டார்.


செபம்:

ஏழைகளின் நண்பனே எம் இயேசுவே! செப, தவ முயற்சியினால் புனித கெர்மானூஸ், ஏழை மக்களுக்கு உதவினார். ஆனால் பல சமயங்களில் நாங்கள் ஆடம்பர வாழ்வை வாழ்ந்து, ஏழைகளுக்கு உதவி செய்ய மனம் இல்லாமல் இருந்திருக்கின்றோம். இப்புனிதரின் வழியாக நாங்கள் எங்களின் தவற்றை உணர உதவியிருக்கின்றீர். உமது உதவியினால் ஏழைமக்களை நாங்கள் நண்பர்களாக ஏற்று, உதவி செய்து, வாழ உமதருளை தந்தருளும்.



இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்


காண்டர்பரி பேராயர் லான்பிரான்சு Lanfranc von Canterbury

பிறப்பு:1005, பவியா Pavia, இத்தாலி
இறப்பு:28 மே 1089, காண்டர்பரி, இங்கிலாந்து


ரூத்ஹார்டு Ruthhard

பிறப்பு:11 ஆம் நூற்றாண்டு, பவேரியா
இறப்பு:1150, அவ் Au, பவேரியா


† இன்றைய புனிதர் †
(மே 28)

✠ பாரிஸ் நகர் புனிதர் ஜெர்மாய்ன் ✠
(St. Germain of Paris)

பாரிஸ் மறைமாவட்ட ஆயர்/ ஏழைகளின் தந்தை:
(Bishop of Paris/ Father of the Poor)

பிறப்பு: கி.பி. 496
அவுடன், ஃபிரான்ஸ்
(Autun, France) 

இறப்பு: மே 28, 576
பாரிஸ், ஃபிரான்ஸ்
(Paris, France)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

புனிதர் பட்டம்: கி.பி. 754
திருத்தந்தை இரண்டாம் ஸ்டீஃபன்
(Pope Stephen II)

நினைவுத் திருநாள்: மே 28

புனிதர் ஜெர்மாய்ன், பாரிஸ் மறை மாவட்ட ஆயரும் (Bishop of Paris) "ஏழைகளின் தந்தை" (Father of the Poor) என அறியப்படுபவரும் ஆவார்.

ஃபிரான்ஸ் நாட்டின் "அவுடன்" (Autun) என்ற இடத்தினருகே வசதியுள்ள "கல்லோ-ரோமன்" (Gallo-Roman) இன பெற்றோருக்குப் பிறந்த ஜெர்மாய்ன், "பர்கண்டியிலுள்ள" "அவல்லான்" (Avallon in Burgundy) என்ற இடத்தில் கல்வி கற்றார்.

தமது 35 வயதில் புனிதர் "அக்ரிப்பினா" (Saint Agrippina of Autun) என்பவரால் குருத்துவ அருட்பொழிவு செய்விக்கப்பட்டார். பின்னர், அருகாமையிலுள்ள "புனிதர் சிம்போரியன்" (Abbey of St. Symphorian) துறவு மடத்தின் மடாதிபதியானார். 

கி.பி. 555ம் ஆண்டு, பாரிஸ் நகரின் ஆயர் "சிபெலியஸ்" (Sibelius, the Bishop of Paris) இறந்துவிடவே, அரசர் "முதலாம் சில்டேபர்ட்" (Childebert I) ஜெர்மாய்னை ஆயராக தேர்ந்தெடுத்து அருட்பொழிவு செய்வித்தார்.

ஆயர் ஜெர்மாய்ன் அவர்களின் ஆலோசனைகளாலும், செல்வாக்கினாலும் அரச குடும்பமே ஒரு சிறப்பான சீர்திருத்த வாழ்க்கை வாழ்ந்தது. அரசவையில் பணியாற்றியபோதும், எளிமையையும், துறவு வாழ்வையும் ஒருபோதும் எக்காரணத்தை முன்னிட்டும் கைவிடவில்லை. தன்னுடைய ஒறுத்தல் வாழ்வினாலும், அருமையான, எளிமையான மறையுரையாலும் மக்களை இறைவன்பால் ஈர்த்தார். இவரது மறையுரையைக் கேட்கவே மக்கள் கூடி வந்து, காத்திருந்தனர்.

566ம் ஆண்டு, "டூர்ஸ்" நகரில் நடந்த கிறிஸ்தவ மாநாட்டில் (Second Council of Tours) பங்குபெற்றார். கி.பி. 557ம் ஆண்டு முதல் கி.பி. 573ம் ஆண்டு வரை பாரிஸ் நகரில் நடந்த மூன்றாம் மற்றும் நான்காம் மாநாடுகளிலும் (Third and Fourth Councils of Paris) கலந்துகொண்டார். "கௌல்" (Gaul) மாநிலத்தில் வழக்கத்திலிருந்த பாகனிய பழக்கங்களை முறித்துக் கொள்ளும்படி அரசனை அவர் தூண்டினார். பெரும்பாலான கிறிஸ்தவ திருவிழாக்களுடன் பாகன் கொண்டாட்டங்களைச் சேர்த்துக் கொள்ளும் அதிகாரம் தடைசெய்யப்பட்டது.

ஆயர் ஜெர்மாய்ன் கி.பி. 576ம் ஆண்டு, பாரிஸ் நகரில் மரித்தார்.