புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

06 July 2020

புனிதர் நஸாரியா இக்னேஸியா மார்ச் மெசா ✠(St. Nazaria Ignacia March Mesa July 6

† இன்றைய புனிதர் †
(ஜூலை 6)

✠ புனிதர் நஸாரியா இக்னேஸியா மார்ச் மெசா ✠
(St. Nazaria Ignacia March Mesa)
மறைப்பணியாளர், நிறுவனர்:
(Religious and Founder)

பிறப்பு: ஜனவரி 10, 1889
மேட்ரிட், ஸ்பெயின் அரசு
(Madrid, Kingdom of Spain)

இறப்பு: ஜூலை 6, 1943 (வயது 54)
பினோஸ் எயர்ஸ், அர்ஜன்ட்டினா
(Buenos Aires, Argentina)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: செப்டம்பர் 27, 1992
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

புனிதர் பட்டம்: அக்டோபர் 14, 2018
திருத்தந்தை ஃபிரான்சிஸ்
(Pope Francis)

நினைவுத் திருநாள்: ஜூலை 6

பாதுகாவல்:
சிலுவைப் போர் மிஷனரிகள் (Missionaries of the Crusade)

அருளாளர் நஸாரியா இக்னேஸியா மார்ச் மெசா, ஒரு ஸ்பேனிஷ் ரோமன் கத்தோலிக்க (Spanish Roman Catholic Professed Religious) அருட்சகோதரியாவார். இவர், சிலுவைப் போர் மிஷனரிகள் (Missionaries of the Crusade) எனும் அமைப்பினை நிறுவியவருமாவார். ஸ்பெயின் நாட்டிலிருந்து மெக்ஸிகோ நாட்டிற்கு புலம்பெயர்ந்து குடியேறிய அவர் அங்கு ஒரு ஆன்மீக சபையில் சேர்ந்தார். “பொலீவியா” மாநிலத்தில் (Bolivia) தமது மறைப்பணிகளை தொடங்கிய அவர், தமது வாழ்நாளின் பெரும் பகுதியை அங்கேயே கழித்தார். ஸ்பெயினில் (Spain) தாம் உருவாக்கிய சமய சபையை பரப்புவதற்காக அவர் சுருக்கமாகச் செயல்பட்டார். பின்னர், தாம் நிறுவிய தமது சொந்த சபையை விட்டுவிட்டு அர்ஜென்ட்டினா (Argentina) நாட்டுக்கு சென்ற அவர், பின்னர் அங்கேயே மரித்தார்.

கி.பி. 1889ம் ஆண்டு, மேட்ரிட் (Madrid) நகரில், “ஜோஸ்” (José Alejandro March Reus) மற்றும் “நஸாரியா” (Nazaria de Mesa Ramos de Peralta) ஆகிய தம்பதியரின் பத்து குழந்தைகளில் நான்காவதாகப் பிறந்த இவர், தாம் பிறந்த அதே மாதத்தில் ஒரு நாள், தமது சொந்த பங்கான புனிதர் சூசையப்பர் ஆலயத்தில் திருமுழுக்கு பெற்றார். கி.பி. 1898ம் ஆண்டு, புதுநன்மை (First Communion) அருட்சாதனம் பெற்றார். அதே வருடம், “நஸாரியா, நீ என்னைப் பின்தொடர்ந்து வா” என்ற இயேசு கிறிஸ்துவின் குரல் இவருக்கு கேட்டது. ஆன்மீக வாழ்வில் நுழையும் இவரது எண்ணம், இவரது பெற்றோருக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. அதனை தடுத்த அவர்கள், அவர் அதற்கான அருட்சாதனங்களைப் பெறுவதையும் தடை செய்தனர். நஸாரியா, செவில் (Seville) நகரிலுள்ள தமது பாட்டியின் வீட்டில் தங்கி, “புனித அகுஸ்தினார் சபையின்” (Order of St. Augustine) மேற்பார்வையில் கல்வி கற்றார். கி.பி. 1901ம் ஆண்டு வீடு திரும்பிய இவர், 1902ம் ஆண்டு, அப்போதைய “செவில் பேராயரான” (Archbishop of Seville) அருளாளர் “மார்செலோ ஸ்பினோலா ஒய் மேஸ்ட்ரே” (Blessed Marcelo Spinola Maestre) என்பவரிடமிருந்து உறுதிப்பூசுதல் (Confirmation) அருட்சாதனம் பெற்றார். அவரது பாட்டி, அவர் தூய ஃபிரான்சிசின் மூன்றாம் நிலை சபையில் (The Order of Saint Francis) சேர அனுமதியளித்தார். அவளுடைய பெற்றோர்கள் தங்கள் மகள் மீது தாங்கள் விதித்திருந்த மத கட்டுப்பாடுகளைத் தளர்த்த ஆரம்பித்தார்கள்.

1904ம் ஆண்டில் அவரது தந்தை மெக்ஸிகோவுக்கு செல்ல விரும்பினார். ஆனால் இதற்கு முன்னர் அவரும் மூன்று சகோதரிகளும் தங்களுடைய பாட்டி வீட்டிற்கு குடிபெயர்ந்தனர். 1904ம் ஆண்டின் இறுதியில், கடுமையான பொருளாதார நிலைமைகள் காரணமாக, நஸாரியா பின்னர் மெக்ஸிகோவிற்கு இடம்பெயர்ந்தார். 1908ம் ஆண்டு, ஜூலை மாதம், 12ம் தேதி, “கைவிடப்பட்ட முதியோரின் சின்னஞ்சிறு சகோதரியர்” (Little Sisters of the Abandoned Elderly) இல்லத்தில் சேர்ந்தார். பொலிவியா (Bolivia) மாநிலத்திலுள்ள ஓரூரோ (Oruro) நகருக்கு அனுப்பப்பட்டார். 1908ம் ஆண்டு முதல் 1920ம் ஆண்டு வரையான காலகட்டத்தில், நோய்வாய்ப்பட்ட இவர், பலவீனமடைந்தார். 1909ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 9ம் நாளன்று, தமது சீருடைகளை பெற்றுக்கொண்ட இவர், “இயேசுவின் புனித தெரேசாவின் நஸாரியா” (Nazaria of Saint Teresa of Jesus) எனும் பெயரை தமது ஆன்மீகப் பெயராகப் பெற்றுக்கொண்டார்.

நஸாரியா, பின்னர் போலந்து நாட்டுக்கான அப்போஸ்தலிக்க பேராண்மைத் தூதரான (Apostolic Nuncio to Poland) “ஃபிலிப்போ கோர்டேசி” (Filippo Cortesi) என்பவரைச் சந்தித்தார். உலகை மறு கிறிஸ்தவ மயமாக்கல் சம்பந்தமாக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு ஆன்மீக சபையை நிறுவும் பணிகளில் அவர் ஆர்வமாய் இருந்தார். இவர்கள் பொலிவியா (Bolivia) மாநிலத்திலுள்ள ஓரூரோ (Oruro) நகரில் சந்தித்துக்கொண்டபோது இது சம்பந்தமாக விவாதித்தனர். இருவரும் 1924ம் ஆண்டு, ஜூன் மாதம், 22ம் தேதியன்று சந்தித்தனர். ஆகஸ்ட் மாதம் நஸாரியா காய்ச்சலில் வீழ்ந்தார். 1924ம் ஆண்டு, அன்னை கன்னி மரியாளின் விண்ணேற்பு விழா தினமான ஆகஸ்ட் மாதம், 15ம் தேதியன்று, அவரைச் சந்தித்த “ஃபிலிப்போ கோர்டேசி” (Filippo Cortesi), அவருக்கு அன்னை மரியாளின் திருஉருவப் படம் ஒன்றினை நல்லெண்ண அடையாளமாக கையளித்தார். நோயிலிருந்து குணமடைந்த நஸாரியா, 1925ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 2ம் நாளன்று, பொலிவியா (Bolivia) மாநிலத்தின் “லா பஸ்” (La Paz) நகர் சென்று, அவரது நண்பர் கோர்டெஸி உடன் மேலும் கலந்துரையாடலை நடத்தினார். 1925ம் ஆண்டு, மார்ச் மாதம், 23ம் தேதி, “ஃபிலிப்போ கோர்டேசி” ஐந்து புதிய ஆயர்களுக்கு அருட்பொழிவு செய்வித்த நிகழ்வில் கலந்துகொண்டார்.

1925ம் ஆண்டு, ஜூன் மாதம், 25ம் நாளன்று, புதிய சபை நிறுவும் பணிகளுக்காக தாம் இருந்த சபையை விட்டு விலகிய நஸாரியா, தம்முடன் பத்து பொலிவிய பெண்களை (Bolivian women) இம்முயற்சியில் இணைவதற்காக அழைத்து வந்தார். 1825ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 18ம் தேதி, கோர்டெஸி முதன்முதலில் அடிப்படை பணிகளை அங்கீகரித்தார். 1926ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 12ம் தேதி, “சிலுவைப் போர் மிஷனரிகள் சபை” (Missionaries of the Crusade) நிறுவப்பட்டது. 1927ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 12ம் நாளன்று, இது மறைமாவட்ட அங்கீகாரம் பெற்றது. பின்னர், இவர் மரித்து சரியாக நான்கு வருடங்களின் பின்னர், 1947ம் ஆண்டு, ஜூன் மாதம், 9ம் தேதி, திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ் (Pope Pius XII) இச்சபையை அங்கீகரித்தார்.

1930ம் ஆண்டு, ஜூன் மாதம் முதல் தேதி, சபையின் முதல் தலைவராக இவர் தேர்வு செய்யப்பட்டார். 1934ம் ஆண்டு, ரோம் நகரத்திற்கு புனித யாத்திரை மேற்கொண்ட நஸாரியா, அங்கே திருத்தந்தை பதினோராம் பயஸ் (Pope Pius XI) அவர்களை சந்தித்தார். 1935ம் ஆண்டில் மேட்ரிட் பயணித்த நஸாரியா, அங்கே அவர் ஆன்மீக பயிற்சிகளுக்காக ஒரு இல்லம் நிறுவினார். ஆனால் ஆபத்தான, மற்றும் மத-விரோத ஸ்பானிஷ் உள்நாட்டுப் போர் (Spanish Civil War) காரணமாக அவர் அங்கிருந்து வெளியேற நேர்ந்தது.

நஸாரியா, 1938ம் ஆண்டு, அர்ஜென்ட்டினா (Argentina) நாட்டிலுள்ள “பியூநோஸ் எயர்ஸ்” (Buenos Aires) நகர் போய் சேர்ந்தார். 1943ம் ஆண்டு, மே மாதம் முதல் நிமோனியா (Pneumonia) காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர், “ரிவாடாவியா” மருத்துவமனையில் (Rivadavia Hospital) அனுமதிக்கப்பட்டு, இரண்டு மாதம் நோய்ப் படுக்கையில் இருந்தார். “நுரையீரலில் இரத்தக் கசிவு” (Hemoptysis) நோய் காரணமாக, இவர் ஜூலை மாதம், 6ம் நாளன்று மரித்தார்.

1992ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 27ம் நாளன்று, திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் (Pope John Paul II) அவர்களால் இவருக்கு முக்திபேறு பட்டமளிக்கப்பட்டது. 2018ம் ஆண்டில், இவரால் நிகழ்ந்த அதிசயம் ஒன்றினை உறுதிப்படுத்திய திருத்தந்தை ஃபிரான்சிஸ் (Pope Francis) அவர்கள், 2018ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 14ம் நாளன்று இவரை புனிதராக உயர்த்தி அருட்பொழிவு செய்தார்.
† Saint of the Day †
(July 6)

✠ St. Nazaria Ignacia March Mesa ✠

Religious and Founder:

Born: January 10, 1889
Madrid, Kingdom of Spain

Died: July 6, 1943 (Aged 54)
Buenos Aires, Argentina

Venerated in: Roman Catholic Church

Beatified: September 27, 1992
Pope John Paul II

Canonized: October 14, 2018
Pope Francis

Feast: July 6

Patronage: Missionaries of the Crusade

Saint Nazaria Ignacia March Mesa – in religious Nazaria of Saint Teresa of Jesus – was a Spanish Roman Catholic professed religious and the founder of the Missionaries of the Crusade. Mesa immigrated from Spain to Mexico where she joined a religious order that saw her minister in Bolivia where she remained for most of her life. She served brief stints in Spain to spread the religious order she founded after she left her own order and relocated to Argentina where she later died.

St. Nazaria Ignacia, faced many obstacles in trying to follow God's will for her life. Nazaria Ignacia was born on January 10, 1889, to a fairly wealthy family with many children in Madrid. When she was not even ten years old, as she received her First Communion, Nazaria heard Christ's voice call out to her: "You, Nazaria—follow me." From that moment on, Nazaria had an intense desire to join the religious life, which, one would imagine, would have delighted her parents. Her parents were neither thrilled nor delighted by her religious fervor, but rather, they were both frustrated and annoyed with Nazaria's piety. Her parents grounded the young Nazaria from going to Mass and prevented her from receiving sacraments.

As a young girl, Nazaria was sent to study in Seville, and her grandmother ensured that Nazaria was raised in the Catholic faith, was confirmed, and even encouraged her to become a third order Franciscan. When Nazaria's father emigrated to Mexico, Nazaria and several of her younger sisters moved in with her grandmother before joining him later in the New World. Her father allowed Nazaria to join a religious order once she arrived and Nazaria promptly entered the order of the Little Sisters of the Abandoned Elderly in July of 1908. She was sent to Bolivia, and, despite a brief return to Spain for her novitiate, Nazaria lived in Bolivia as a Little Sister until 1925, when she began a new religious order with Filippo Cortesi.

Nazaria gathered together ten other women to found the Missionaries of the Crusade in Bolivia in December 1926. They received diocesan approval a few months later, and, when Nazaria traveled to Rome to meet Pope Pius XI in 1934, she received his blessing and praise for her work of founding the order. The Missionaries finally received papal approval from Pope Pius XII in 1947, after Nazaria's death.

Nazaria died in Buenos Aires, Argentina on May 14, 1943. Her order still operates throughout the Spanish-speaking world today, a living testament to Nazaria's great love for Christ and her desire to serve him wholeheartedly, with her whole life.

St. Nazaria Ignacia, who followed the voice of God with her whole heart, despite many obstacles—pray for us!

புனித நோயலா (ஆறாம் நூற்றாண்டு) July 6

ஜூலை 06 

புனித நோயலா (ஆறாம் நூற்றாண்டு)
இவர் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்தவர். இவருடைய தந்தை இங்கிலாந்து நாட்டின் வடமேற்குப் பகுதியை ஆண்டுவந்த கேம்பிரியன் என்ற மன்னன்.

நோயலா சிறுவயது முதலே இறைவன்மீது மிகுந்த பற்றுகொண்டு வாழ்ந்து வந்தார். மேலும் இறைவனுக்கே தன்னுடைய வாழ்வை அர்ப்பணிக்கவும் துணிந்தார்.

ஆனால் இவருடைய தந்தை இவரது விருப்பத்திற்கு மாறாக, இவரை ஒருவனுக்கு மணமுடித்துக் கொடுக்க நினைத்தார். இதை அறிந்த நோயலா தன்னுடைய பணிப்பெண்ணோடு பிரான்ஸ் நாட்டிற்குத் தப்பிச்சென்றார்.

போகும்வழியில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஓர் அரச அதிகாரி இவர்மீது காதல் கொண்டு இவரை மணந்து கொள்ள விரும்பினார். இவரோ அதற்கு மறுப்புத் தெரிவிக்க, அவர் தன்னுடைய படை வீரர்களோடு சேர்ந்து இவரைத் தலை வெட்டிக் கொன்று போட்டார்.

இவ்வாறு இவர் ஆண்டவர்மீதுகொண்டிருந்த பற்றில் இறுதிவரை உறுதியாக இருந்தார்.

புனித மரிய கொரற்றி (St.Maria Goretti)மறைசாட்சி July 6

இன்றைய புனிதர் :
(06-07-2020)

புனித மரிய கொரற்றி (St.Maria Goretti)
மறைசாட்சி

பிறப்பு 
1890
அங்கோனா (Ankona), இத்தாலி
    
இறப்பு 
1902 
புனிதர்பட்டம்: திருத்தந்தை 12 ஆம் பத்திநாதர்

இவரது புனிதர் பட்டமளிப்பு விழாவுக்கு உலகில் பல பகுதிகளிலிருந்தும் 2,50,000 மக்கள் உரோமைக்கு வருகைத் தந்தனர். கல்வி கற்குமளவுக்கு இவர் வீட்டில் வசதி இல்லாமல் போய்விட்டது. 12 வயதில் இவருக்கு புதுநன்மை கொடுக்கும்போது கூட மற்றவர்களைவிட ஏழையாக, எளிமையாக இருந்தார். ஆனால் தாய் இவருக்கு ஊட்டி வந்த ஞான சத்துணவு மிக உயர்ந்தது. இவர் 20 ஆம் நூற்றாண்டின் புனித ஆக்னஸ் என அழைக்கப்படுகிறார். புதுநன்மைக்குப் பின் 5 வாரங்கள்கூட ஆகவில்லை. அலெக்சான்ரோ வெரைனெல்லா என்ற 18 வயது இளைஞன் தவறான வழியில் மரியாவை அடைய முனைந்தான். மரியா பாவத்திற்கிணங்க மறுத்துவிட்டார். ஆத்திரத்தில் அவன் மரியாவை மாசற்ற மலர் போன்ற உடலை பலமுறை கத்தியால் குத்தி கிழித்தான். 

"இது பாவம்", இதற்காக நீ நரகத்திற்கு செல்வாய் என்று மரியா அவனை எச்சரித்து பயனில்லை. குற்றுயிராய் விடப்பட்ட அவர் மருத்துவமனையில் 24 மணிநேரம் கழித்து உயிர் நீத்தார். "மன்னித்துவிட்டேன் அவரை" என்று சொல்லிவிட்டு மடிந்தார். கொலை பாதகனுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. பலகாலமாக மனந்திரும்பி மனமில்லாதிருந்த அவன் எதிர்பாராமல் பாவமன்னிப்பை மன்றாடினான். "மரிய கொரற்றி விண்ணினின்று மலர்களை என் கை நிறைய கொடுத்தததாக கனவு கண்டேன்" என அறிவித்தான். 27 ஆண்டுகளுக்கு பின்னர் அவனது சிறை வாழ்வுக்கு முற்றுப்புள்ளியிடப்பட்டது. அப்போது மரியாவின் தாயிடம் சென்று மன்னிப்பு கேட்டான். 

இந்த அலெக்சான்ரோ தம் இறுதி நாட்களில் கப்புச்சின் 3ஆம் சபைத் துறவியாக வாழ்ந்தார். இவர் இறந்த 50 ஆண்டுகளுக்குள் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. மரியாவின் தாயும், 2 சகோதரிகளும், ஒரு சகோதரனும் உடனிருந்தனர். இலட்சக்கணக்கான மக்கள் புனிதர் பட்டம் கொடுப்பதை பார்க்க மண்டியிட்டு இருந்த கூட்டத்திலே அலெக்சான்ரோவும் கண்ணீர் சிந்தி பங்குபெற்றார். 


செபம்:

இந்நாட்களில் கற்பு என்றால் என்ன என்று அக்கறையின்றி கேட்கும் போதும், திரைப்படங்களிலும், சுவரொட்டிகளிலும் ஆபாசக் காட்சிகளை தெய்வாக்கும் சூழலில், நாங்கள் தூய ஆவியின் ஆலயமாக திகழ்ந்து, எம்மையும் பிறரையும் மதிக்கும் வரம் தாரும் இறைவா.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

Saint of the Day : (06-07-2020)

St. Maria Goretti

St. Maria Goretti was born on October 16, 1890 in Italy. Her father was Luigi Goretti and mother Assunta Carlini. Her full name was Maria Teresa Goretti. Her family became very poor and moved to other places to work for other farmers, for livelihood. Her father died of malaria when Goretti was nine years old. Maria Goretti used to cook, sew and watch her infant sister, when her mother and her brothers and sisters went out to work in the fields. Their family lived in a house named 'La Cascina Antica' in Le Ferriere and that house was also shared by another family consisting of Giovanni Serenella and his 19 year old son Alessando. On July 5, 1902, when Maria Goretti was in the house alone sewing, Alessando entered the house with the intention of raping her. But she did not submit to him and fought against him. Since she was only 11 years, old she could not withstood him but she shouted 'No. It is a sin. God does not want it' but he got angry and stabbed her 11 times. When the injured Maria Goretti tried to reach the door, he stopped her and stabbed her three more times and ran away. Maria’s mother and Alessando’s father came a little later and took her to the hospital at Nettuno. On her death bed she forgave her assassin Alessando and died on July 6, 1902 by clutching a crucifix to her chest. Alessando was arrested and sentenced for 30 years in jail. The local bishop Giovanni Blandini visited Alessando in the jail and Alessando told the bishop about a dream in which Maria Goretti gave him lily flowers but the flowers burned immediately in his hands. Maria Goretti’s family forgave the assassin after his release from jail. Alessando became a lay brother of the Order of Friars Minor Capuchin and prayed every day to Maria Goretti and referred to her as 'my little saint'. Many miracles reportedly happened at the intercession of St. Maria Goretti.

She was beatified on April 27, 1947 by pope Pius-XII and canonized on June 24, 1950 by pope Pius-XII. In both the ceremonies Maria Goretti’s mother Assunta was present. Her assassin Alessando was also present during her canonization ceremony. She is the patron of crime victims, teenage girls and modern youth.

---JDH---Jesus the Divine Healer---
† இன்றைய புனிதர் †
(ஜூலை 6)

✠ புனிதர் மரியா கொரெட்டி ✠
(St. Maria Goretti)

கன்னியர் மற்றும் மறைசாட்சி:
(Virgin and Martyr)

பிறப்பு: அக்டோபர் 16, 1890
கொரினல்டோ, அன்கோனா பிராந்தியம், மர்ச்சே, இத்தாலி அரசு
(Corinaldo, Province of Ancona, Marche, Kingdom of Italy)

இறப்பு: ஜூலை 6, 1902 (வயது 11)
நெட்டுனோ, ரோம் பிராந்தியம், லஸியோ, இத்தாலி அரசு
(Nettuno, Province of Rome, Lazio, Kingdom of Italy)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: ஏப்ரல் 27, 1947
திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ்
(Pope Pius XII) 

புனிதர் பட்டம் : ஜூன் 24, 1950
திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ்
(Pope Pius XII)

முக்கிய திருத்தலம்:
நெட்டுனோ, ரோம் பிராந்தியம், லஸியோ, இத்தாலி அரசு
(Nettuno, Province of Rome, Lazio, Italy)

நினைவுத் திருவிழா: ஜூலை 6

பாதுகாவல்: 
பாலியல் வன் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள், குற்ற செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள், இளம் பெண்கள், நவீனகால இளைஞர்கள், மரியாளின் குழந்தைகள்

புனிதர் மரியா கொரெட்டி, இத்தாலிய கன்னியரும், கத்தோலிக்க திருச்சபையின் மறைசாட்சியும், கத்தோலிக்க திருச்சபையில் அதிகாரபூர்வமாய் புனிதர் பட்டம் பெற்றவர்களுள் மிக இளையவரும் ஆவார். தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முனைந்தவனுக்கு மறுப்பு தெரிவித்ததால், அவனாலேயே பதினான்கு முறை கத்தியால் குத்தப்பட்டு இவர் இறந்தார்.

வரலாறு:
“மரியா தெரெசா கொரெட்டி” (Maria Teresa Goretti) எனும் இயற்பெயர் கொண்ட இவர், கல்வி கற்குமளவுக்கு வசதி இல்லாத ஏழைகுடும்பத்தில் பிறந்தவர் ஆவார். இவரது தந்தையின் பெயர், “லுய்கி கொரெட்டி” (Luigi Goretti) ஆகும். தாயாரின் பெயர், “அசுன்ட்டா நீ கர்லினி” (Assunta née Carlini) ஆகும். தமது பெற்றோரின் ஏழு குழந்தைகளில் மூன்றாவது குழந்தை ஆவார். மரியாவுக்கு ஐந்து வயதாகையில் வறுமை காரணமாக இவர்களது குடும்பம் கொஞ்ச நஞ்சமிருந்த நிலங்களை விற்றுவிட்டு ஊர் ஊராக சென்றனர். இறுதியில் கி.பி. 1899ம் ஆண்டு, “லீ ஃபெர்ரியர்” (Le Ferriere) என்ற ஊருக்கு சென்றனர். அங்கே அவர்கள், “லா கசினா அன்டிகா” (La Cascina Antica) என்ற பெயருள்ள வீட்டில் தங்கினர். அந்த வீட்டை “செரனெல்லி” (Serenelli) என்ற குடும்பத்தினருடன் பகிர்ந்துகொண்டனர். அந்த குடும்பத்தில், “ஜியோவன்னி செரனெல்லி” (Giovanni Serenelli) என்பவரும் அவரது மகனான “அலெஸ்ஸாண்ட்ரோ செரனெல்லி” (Alessandro Serenelli) என்ற 18 வயது இளைஞனும் வசித்தனர்.

விரைவில், மரியாவுக்கு ஒன்பது வயதாகையில் அவரது தந்தை மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மரித்தார். பகல் நேரங்களில் மரியாவின் தாயாரும் சகோதரர்களும் விவசாய கூலி வேலை செய்வதற்காக செல்ல, மரியா வீட்டில் தனது சின்னத் தங்கையை கவனிப்பதுவும், வீட்டை சுத்தம் செய்வதுவும், சமையல் பணிகளை செய்வதுமாக இருப்பார். 11 வயதில் இவருக்குப் புது நன்மை கொடுக்கப்பட்டது.

கி.பி. 1902ம் ஆண்டு, ஜூலை மாதம் 5ம் தேதி, மரியா தமது வீட்டின் வெளிப்புறம் அமைந்திருந்த படிக்கட்டில் அமர்ந்திருந்தார். அவர் தனித்திருந்ததை அறிந்து, சற்று நேரத்தில் அங்கு வந்த “அலெஸ்ஸாண்ட்ரோ” (Alessandro Serenelli), ஒரு கத்தியைக் காட்டி, தாம் சொன்னபடி கேட்கவில்லை என்றால் குத்தி விடுவதாக பயமுறுத்தினான். அவனுடைய நோக்கம், பாலியல் வன்கொடுமையால் மரியாவை அடைவதாகும். "இது சாவான பாவம், இதற்காக நீ நரகத்திற்குப் போவாய்”, என்று மரியா பலவிதமாக கதறி அழுதும் பயனில்லை. மரியா அதற்கிணங்க மறுத்ததால் அவரின் உடலைப் பலமுறை கத்தியால் குத்திக் கிழித்தான். குற்றுயிராய் மருத்துவமனை எடுத்துச் செல்லப்பட்ட மரியாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், 24 மணி நேரம் மரணப்படுக்கையில் இருந்த மரியா கொரெட்டி “மன்னித்துவிட்டேன் அவரை” என்று கூறிவிட்டு மரித்தார்.

கொலை செய்ததற்காக அலெஸ்ஸாண்ட்ரோவுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. பலகாலமாக மனந்திரும்ப மனமி்ல்லாதிருந்த அலெஸ்ஸாண்ட்ரோ, மரியா கொரெட்டி, விண்ணினின்று மலர்களை தன் கை நிறையக் கொடுத்ததாகக் கனவு கண்டதாகவும் அதனால் மனமாற்றம் அடைந்ததாகவும் அறிவித்தான். 27 ஆண்டுகளுக்குப் பின்னர் அவன் சிறையிலிருந்து விடுதலை பெற்றான். அப்போது மரியாவின் தாயிடம் சென்று மன்னிப்புக் கேட்டான். மன்னிப்பு பெற்ற அலெஸ்ஸாண்ட்ரோ, தமது இறுதி நாட்களில் கப்புச்சின் 3ம் சபையின் பொதுநிலை துறவியாக (Lay Brother) வாழ்ந்து கி.பி. 1970ம் ஆண்டு காலமானார்.

மரியா கொரெட்டி இறந்து 45 ஆண்டுகளுக்குள் மரியாவுக்கு திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ், புனிதர் பட்டமளித்தார். இந்த நிகழ்வுக்கு மரியாவின் தாயும், இரண்டு சகோதரிகளும், ஒரு சகோதரரும், அலெஸ்ஸாண்ட்ரோவும் வந்திருந்தனர். இவரது புனித பட்டமளிப்பு விழாவுக்கு உலகின் பல பகுதிகளிலிருந்தும் 2,50,000 மக்கள் ரோம் நகருக்கு வருகை தந்தனர்.