புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

19 August 2020

தூலூஸ் நகர்ப் புனித லூயிஸ் (1274-1297)ஆகஸ்ட் 19

தூலூஸ் நகர்ப் புனித லூயிஸ் (1274-1297)

ஆகஸ்ட் 19
இவர் இத்தாலியைச் சார்ந்தவர். இவரது தந்தை நேப்பிள்ஸை ஆண்டு வந்த இரண்டாம் சார்லஸ் என்பவராவார். இவர் ஹங்கேரி நாட்டைச் சார்ந்த புனித எலிசபெத்தின் நெருங்கிய உறவினரும் கூட.

வசதியான குடும்பத்தில் பிறந்தாலும், சிறிதும் ஆடம்பரமில்லாமல் வாழ்ந்து வந்த இவர், பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்து தனது இருபத்து மூன்றாம் வயதில் துறவியானார். 

பின்னர் தூலூஸ் நகரின் ஆயரான இவர், இறைப்பணியை மிகச் சிறப்பாகவும், அதே நேரத்தில் தாழ்ச்சியோடும் செய்து வந்தார். இந்நிலையில் இவர் ஆயரான ஆறாவது மாதத்தில் திடீரென நோய்வாய்ப்பட்டு இறைவனடி சேர்ந்தார்.

இவருக்கு 1317 ஆம் ஆண்டு திருத்தந்தை இருபத்து இரண்டாம் யோவானால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது

புனித ஜான் ஜுட் (Johannes Eudes CJM)சபை நிறுவுனர் August 19

இன்றைய புனிதர்
2020-08-19
புனித ஜான் ஜுட் (Johannes Eudes CJM)
சபை நிறுவுனர்
பிறப்பு
14 நவம்பர் 1601
ரீ Ri, அர்கெண்டான் Argentan, பிரான்ஸ்
இறப்பு
19 ஆகஸ்டு 1680
சேன் Caen, பிரான்ஸ்
முத்திபேறுபட்டம்: 1909 திருத்தந்தை பத்தாம் பயஸ்
புனிதர்பட்டம்: 31 மே 1925 திருத்தந்தை பதினோறாம் பயஸ்

இவர் ஓர் பக்தியுள்ள கிறிஸ்தவராக திகழ்ந்தார். மிக தாழ்ச்சியோடு ஒப்புரவு அருட்சாதனத்தை பெற்று வந்தார். பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட மக்களை, தன் சிறுவயதிலிருந்தே, அன்போடு பராமரித்து, தன்னால் இயன்ற உதவிகளை செய்து வந்தார். சிறுவயதிலிருந்தே அன்னைமரியிடமும், இயேசுவிடமும் மன்றாடி தன் கற்பை காத்து வந்தார். இயேசு சபை குருக்களிடம் கல்வி பயின்று தேர்ந்தார். தான் குருவாகி பணிபுரிய வேண்டுமென்ற ஆர்வம் இவரிடம் கொழுந்துவிட்டு எரிந்ததால் "பிரெஞ்ச் ஆரட்டரி" என்றழைக்கப்பட்ட சபையில் சேர்ந்து, குருத்துவ பயிற்சி பெற்றார். தியானங்கள் கொடுப்பதிலும், செபிப்பதிலும், வல்லவரான இவர் பல மணி நேரம், எவ்வித இடையூறும் இல்லாமல் இறைவனோடு ஒன்றிணைந்து செபித்தார்.

இவர் 1626 ஆம் ஆண்டு குருப்பட்டம் பெற்றார். பின்னர் மறைப்பணியாளராகி பங்குகளுக்கு சென்று பல ஆண்டுகள் பணியாற்றினார். மறைப்பணியாளர்களை உருவாக்கும் பணியை மேற்கொண்டு, சிறந்த மறைப்பணியாளர்களை உருவாக்கினார். வழிதவறி அலைந்த பெண்களை ஒன்றுதிரட்டி, நல்வழிகாட்டி, வாழ்வை மாற்றி அமைத்தார். அவர்களை கிறிஸ்துவ வாழ்வில் ஈடுபடுத்த ஒரு சபையை நிறுவினார். அச்சபைக்கு "இயேசுமரி"(Jesus Mary) என்று பெயர் சூட்டினார். இவர், இன்னும் சில குருக்களின் துணைகொண்டு, சில அநீத கொள்கைகளை எதிர்த்தனர். அவ்வேளையும் மீண்டும் "நல்லாயன் கன்னியர்"(Good Shepherd Sisters) என்ற சபையையும் நிறுவினார்.

இயேசுவின் திரு இதய பக்தியையும், மரியாவின் மாசற்ற இதய பக்தியையும் ஊக்குவித்து வளர்த்தார். புனித மர்கரீத் மரியாள் பிரான்சு நாட்டில் திரு இதய ஆண்டவரிடம் காட்சி பெறுவதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பாகவே, தன் துறவற இல்ல ஆலயத்தில் திரு இதய ஆண்டவரின் விழாவை கொண்டாடினார். இவர் குருமடத்தில் இருந்த காலத்தில் அனைவருக்கும் முன்மாதிரியான வாழ்வை, தன் செபத்தின் வழி வாழ்ந்தார். மறைப்பணியின்போது, பல தியானங்கள் கொடுப்பதன் வழியாக பலருக்கு ஆறுதல்படுத்தும் பணியையும், குணமளிக்கும் பணியையும், நற்செய்திப் பணியையும் ஆற்றினார். இதன் வழியாக எண்ணிடலங்கா மக்களை இறைவழி செல்ல வழிகாட்டினார்.


செபம்:
என்றும் வாழ்பவரே எம் இறைவா! இதயத்தில் தாழ்ச்சியும், சாந்தமும் உள்ளவர் நீர். உமது பக்தியை எம்மில் வளர்த்தருளும். இயேசுவின் திரு இதயத்தையும், அன்னைமரியின் மாசற்ற இதயத்தையும் நாங்கள் பெற்று வாழ, உமது ஆவியினால் எம்மை நிரப்பி வழிநடத்தியருளும்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

காரிட்டாஸ் பிர்க்ஹைமர் Charitas Pirchheimer OSCI
துறவி, முத்திபேறுபட்டத்திற்கான பணி 1962 ல் தொடங்கப்பட்டது.
பிறப்பு: 21 மார்ச் 1467, ஐஷ்டேட்Eichstätt, பவேரியா, ஜெர்மனி
இறப்பு: 19 ஆகஸ்டு 1532 நூரன்பெர்க்Nürnberg, பவேரியா. ஜெர்மனி


எசேக்கியேல் மொரெனா டயஸ் Ezechiel Moreno y Dias OESA
ஆயர்
பிறப்பு: 10 ஏப்ரல் 1848, அல்பாரோ, ஸ்பெயின்
துணை ஆயராக: 1894, கொலம்பியா
ஆயராக: 1895 பாஸ்டோPasto மறைமாவட்டம், தெற்கு கொலம்பியா
இறப்பு: 19 ஆகஸ்டு 1906 மொண்டேகூடோ Monteagudo, ஸ்பெயின்
புனிதர்பட்டம்: 11 அக்டோபர் 1992 திருத்தந்தை இரண்டாம் ஜான்பவுல்


புனித லூட்விக் Ludwig von Toulouse
பேராயர்
பிறப்பு: 1274 நொசேரா Nocera, பாகானிPagani நேயாபல், இத்தாலி
இறப்பு: 19 ஆகஸ்டு 1297 பிரிக்னோலஸ்Brignoles, பிரான்ஸ்
புனிதர்பட்டம்: 1317

Saint of the Day : (19-08-2050)

St. John Eudes

St. John was born at a place called Ri in Normandy in France on November 14, 1601 to a farmer. He joined in the congregation of Oratory of France on March 25, 1623, against the wishes of his parents. He was ordained a priest on December 20, 1625. He did social service and worked among the plague victims of Normandy during the years 1625 and 1631. He founded a congregation of the Sisters of Refuge in the year 1641 to provide refuge to prostitutes, who were willing to do penance. This organization was approved by Pope Alexander-VII on January 2, 1666. He also founded the Congregation of Jesus and Mary (The Eudists) at Caen on March 23, 1643. He wrote The Devotion to the Adorable Heart of Jesus and The Admirable Heart of the Most Holy Mother of God. He died on April 25, 1680. Pope Leo-XIII declared St. John as Author of the Liturgical Workshop of the Sacred Heart of Jesus and Holy Heart of Mary

He was beatified by Pope Pius-X on April 25, 1909 and was canonized in the year 1925.

---JDH---Jesus the Divine Healer---
† இன்றைய புனிதர் †
(ஆகஸ்ட் 19)

✠ புனிதர் ஜான் யூட்ஸ் ✠
(St. John Eudes)

கத்தோலிக்க குரு/ சபை நிறுவனர்:
(Catholic Priest and Founder)

பிறப்பு: நவம்பர் 14, 1601
ரி, நார்மண்டி, ஃபிரான்ஸ் அரசு
(Ri, Normandy, Kingdom of France)

இறப்பு: ஆகஸ்டு 19, 1680 (அகவை 78)
சேன், ஃபிரான்ஸ் அரசு
(Caen, Normandy, Kingdom of France)

ஏற்கும் சமயம்: 
ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: ஏப்ரல் 25, 1909
திருத்தந்தை பத்தாம் பயஸ்
(Pope Pius X)

புனிதர் பட்டம்: மே 31, 1925
திருத்தந்தை பதினோறாம் பயஸ்
(Pope Pius XI)

நினைவுத் திருநாள்: ஆகஸ்ட் 19

பாதுகாவல்:
இயேசு மரியாள் (யூடிஸ்ட்) தொண்டு நிறுவனம் (Eudists)
கருணை அன்னை சபை (Order of Our Lady of Charity)
பே-கோமியு மறைமாவட்டம் (Diocese of Baie-Comeau)
மறைப்பணியாளர்கள் (Missionaries)

புனித ஜான் யூட்ஸ், ஓரு ஃபிரெஞ்ச் மறைப்பணியாளரும், கத்தோலிக்க குருவும், “இயேசு மற்றும் மரியாளின் தொண்டு நிறுவனம் - யூடிஸ்ட்” (Congregation of Jesus and Mary - Eudists) மற்றும் “கருணை அன்னை சபை” (Order of Our Lady of Charity) ஆகியவற்றின் நிறுவனரும் ஆவார்.

ஃபிரான்ஸ் நாட்டின் “நார்மண்டி” (Normandy) என்ற இடத்தினருகேயுள்ள “ரி” (Ri) எனும் கிராமத்தில், 1601ம் ஆண்டு பிறந்த இவருடைய பெற்றோர், “ஐசாக் யூட்ஸ்” மற்றும் “மார்த்தா கோர்பின்” (Isaac Eudes and Martha Corbin) ஆவர். ஃபிரான்ஸின் வடமேற்கு பிராந்தியமான “சேன்” (Caen) எனுமிடத்தில், இயேசு சபையினரிடம் (Jesuits) கல்வி கற்ற இவர், 1623ம் ஆண்டு, மார்ச் மாதம் 25ம் தேதி, “ஃபிரெஞ்ச் ஒரேடரி” (Oratorians) என்றழைக்கப்படும் “இயேசு மற்றும் மாசற்ற மரியாளின் ஒற்றுமை” (Congregation of the Oratory of Jesus and Mary Immaculate) எனும் சபையினருடன் இணைந்தார். இவர், “பிரெஞ்ச் ஆன்மீக பள்ளியின்” (French School of Spirituality) உறுப்பினர் ஆவார். பிரெஞ்ச் ஆன்மீக பள்ளி என்பது, ஒரு அமைப்பு அல்லது தத்துவம் மட்டுமேயல்ல. மாறாக, அது ஒரு ஆவிக்குரிய உயர்ந்த கிறிஸ்தவ அணுகுமுறையும், உணர்வுகள் மூலம் வகைப்படுத்தப்படும் ஆராதனையும், இயேசுவுடனான தனிப்பட்ட உறவும், தூய ஆவியின் மறு கண்டுபிடிப்புமாகும்.

யூட்ஸ், 1625ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 2௦ம் தேதி குருத்துவ அருட்பொழிவு பெற்றார். குருத்துவம் பெற்றவுடனேயே நோயுற்ற இவர், கிட்டத்தட்ட ஒரு வருடம் வரை படுக்கையிலேயே இருந்தார். 1627 மற்றும் 1631 ஆகிய வருடங்களில் ஃபிரான்ஸ் முழுதும் பிளேக் எனும் கொள்ளை நோயால் தாக்குண்டபோது, தமது உடல்நிலையையும் பொருட்படுத்தாது பிளேக் நோயால் தாக்குண்டவர்களுக்கு சேவை புரிய நார்மண்டி (Normandy) சென்றார். நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நற்கருணை ஆராதனைகள் நிகழ்த்தினார். இறந்து போனவர்களை அடக்கம் செய்வதில் உதவிகள் செய்தார்.

தமது 32 வயதில் பங்கு மறைப்பணியாளராக பொறுப்பேற்ற இவர், “நார்மண்டி, ல்லெ-டே-ஃபிரான்ஸ், பர்கண்டி மற்றும் பிரிட்டனி” (Normandy, Ile-de-France, Burgundy and Brittany) ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பிரசங்கங்கள் ஆற்றினார்.

தமது பங்கு மறைப்பணிகளின்போது, வாழ்வில் வழி தவறிப்போன விபச்சாரப் பெண்களால் மிகவும் கலங்கினார். தமது பாவ வாழ்க்கையிலிருந்து மீண்டு வாழ விரும்பிய விபச்சார பெண்களுக்கு அடைக்கலம் தருவதற்காக, 1641ம் ஆண்டு, “கருணையின் அடைக்கல அன்னை” (Order of Our Lady of Charity of the Refuge) எனும் சபையை நார்மண்டியிலுள்ள “சேன்” (Caen) நகரில் நிறுவினார். “அன்னை மரியாளின் திருவருகை” (Visitation) சபையைச் சேர்ந்த மூன்று அருட்சகோதரியர் இவரது உதவிக்காக வந்தனர். கி.பி. 1644ம் ஆண்டு, சேன் நகரில் “கருணையின் அன்னை” (Our Lady of Charity) என்ற பெயரில் ஒரு இல்லம் தொடங்கினார். இவர்களது சபை, கி.பி. 1666ம் ஆண்டு, ஜனவரி மாதம், 2ம் தேதியன்று, திருத்தந்தை “ஏழாம் அலெக்சாண்டர்” (Pope Alexander VII) அவர்களால் அங்கீகரிக்கப்பட்டது.

கர்தினால் “ரிசெளியு” (Cardinal Richelieu) மற்றும் பல ஆயர்களின் ஆதரவுடன் “யூடிஸ்ட்ஸ்” என்றழைக்கப்படும் “இயேசு மற்றும் மரியாளின் தொண்டு நிறுவனத்தை” (Congregation of Jesus and Mary (Eudists) கி.பி. 1643ம் ஆண்டு, மார்ச் மாதம், 25ம் தேதியன்று, சேன் நகரில் நிறுவினார். இந்நிறுவனம், குருக்களின் கல்வி மற்றும் பங்கு மறைப்பணி ஆகியவற்றுக்கே அர்ப்பணிக்கப்பட்டதாகும்.

யூட்ஸ், இயேசுவின் திருஇருதய பக்தியையும், மரியாளின் மாசற்ற இருதய பக்தியையும் ஊக்குவித்து வளர்த்தார். மறைப்பணியின்போது, பல தியானங்கள் கொடுப்பதன் வழியாக பலருக்கு ஆறுதல்படுத்தும் பணியையும், குணமளிக்கும் பணியையும், நற்செய்திப் பணியையும் ஆற்றினார். இதன் வழியாக எண்ணிடலங்கா மக்களை இறைவழி செல்ல வழிகாட்டினார்.

நற்கருணையாண்டவர் பக்தி:
ஃபிரெஞ்ச் பள்ளி மற்றும் “புனிதர் ஃபிரான்சிஸ் டே சலேஸ்” (Saint Francis de Sales) ஆகியோரின் படிப்பினைகளின் செல்வாக்கினாலும் கடவுளின் அன்பினைப் பற்றிய உபதேசங்களாலும் ஈர்க்கப்பட்ட யூட்ஸ், நற்கருணையாண்டவரின் பக்தியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். சேன் நகரிலுள்ள குருத்துவ சிற்றாலயங்களை இயேசுவின் திருஇருதயத்திற்கு அர்ப்பணித்தார். யூட்ஸ், பல்வேறு செபங்களையும் செபமாலைகளையும் திருஇருதயத்திற்காக இயற்றினார். இவர் எழுதிய (Le Cœur Admirable de la Très Sainte Mère de Dieu) என்ற புத்தகம், திருஇருதயங்களின் பக்திக்காக எழுதப்பட்ட முதல் புத்தகமாகும். இயேசு மற்றும் மரியாளின் ஆத்மபலம் கொண்ட திருஇருதயங்களின் பக்தியை கற்பித்தார்.

அருட்தந்தை யூட்ஸ், பல்வேறு புத்தகங்களை எழுதினர். அவற்றுள் சில பின்வருமாறு:
1. இயேசுவின் வாழ்க்கை மற்றும் அரசு. (கி.பி. 1637)
(The Life and Kingdom of Jesus, 1637 AD)
2. திருமுழுக்கு மூலம் மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையேயான ஒப்பந்தம். (கி.பி. 1654)
(Contract of Man with God Through Holy Baptism, 1654 AD)
3. நல்ல பாவங்களை ஒப்புக்கொள்பவர் (கி.பி. 1666)
(The Good Confessor, 1666 AD)

அருட்தந்தை ஜான் யூட்ஸ், கி.பி. 1680ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 19ம் நாள், சேன் (Caen) நகரில் மரித்தார்.