புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

07 February 2020

பிப்ரவரி -07 புனித ஜூலியானா ஃபால்கோனியேரி

பிப்ரவரி -07 
புனித ஜூலியானா ஃபால்கோனியேரி
உடல் நோய் உள்ளவர்களுக்குப் பாதுகாவலர்
நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள் (1 கொரி. 11:26)
வானதூதர் மங்கள வார்த்தையை உரைத்ததன் நினைவாக பிளாரன்ஸ் நகரில் ஆலயம், எழுப்பிய சியாரிசிமோ மற்றும் ரிகுர்டாடா ஃபால்கோனியேரி தம்பதியினருக்கு அவர்களின் முதுமைக் காலத்தில் 1270-ஆம் ஆண்டு இந்த மகள் பிறந்தார் .இவர்களது குடும்பம் பிளாரன்ஸ் நகரின் மதிப்பு மிக்க குடும்பமாகும்.
மகிழ்வுடன் தம் சிறுவயதைக் கழித்த ஜூலியானா தன்னுடைய இளவயதில் தந்தையை இழந்தார் .இருப்பினும், மற்ற யுவதிகளைப் போல உலக நாட்டங்களில் ஈடுபாடு கொள்ளாமல் இறைவனுக்கே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தார். திருமணத்திற்குத் தாய் ஏற்பாடு செய்தபோதும் மறுத்தார் .15 வயது நடைபெற்றபோது அருள்சகோதரியாகி பணியாற்ற விருப்பம் கொண்டார் .தமது மகளை விட்டுப் பிரிய மனமில்லாத தாய் இதனை விரும்பவில்லை.

தாய்க்குக் கீழ்ப்படிதலுடன் இருந்த ஜூலியானா தமது பெரியப்பாவிடம் தன் அழைத்தலைக் கூறினார். தூய மரியின் ஊழியர் சபையைத் தோற்றுவித்த ஏழு பேரில் ஒருவரான புனித அலெக்சிஸ் தனது தம்பி மகனின் ஏக்கத்தைப் போக்க அவள் தாயிடம் பேசினார். பேசி தூய மரியின் ஊழியர் சபையின் மூன்றாம் சபை போல வீட்டிலேயே துறவியாக இருப்பது என்று முடிவுக்கு வந்தார்கள் .அதன் படி துறவிக்கு உரிய உடை அணிந்து வீட்டிலேயே இறைவனின் அன்புப் பிள்ளையாக ஜூலியானா வாழ்ந்தார். தாயும் மகளும் ஒருவருக்கொருவர் ஆன்ம வழிகாட்டிகளாகவும் நல்ல தோழிகளாகவும் வாழ்ந்து மகிழ்ந்தார்கள்.  

திடீரென்று 1304 ஆம் ஆண்டு தாய் இறந்ததும் தனது உற்ற தோழியைப் பிரிந்த துயரை ஜூலியானா அனுபவித்தார் .கவலை மறைய வேறொரு வீட்டில் குடியேறினார் .தூய மரியின் ஊழியர் சபையின் பணி நோக்கத்தை தமது வாழ்வில் செயல்படுத்தி, இறைவனின் அன்பைப் பிறருக்கு தமது வாழ்வால் வாழ்ந்து காட்டிய ஜூலியானா மீது பலர் நேசம் கொண்டனர். தங்களை இவருடன் இணைத்துக் கொண்டனர். அவர்களுடன் இணைந்து தூய மரியின் ஊழியர் சபை பெண்கள் பிரிவை, மூன்றாம் சபையாக ஆரம்பித்தார்.
சபையின் முக்கிய நோக்கங்களாக,"இரக்கச் செயல்பாடுகள், தாராளமாக உதவுதல் , செப வாழ்வு, நற்செய்தியின்படி வாழ்தல்" என்பதாக வடிவமைத்தார். எழைகளின் முன்னேற்றத்திற்காக உழைத்தார். ஏழைகளிலும் ஏழைகளின் மீது அன்பு காட்டினார் .வசதியுள்ளவர்களுக்கு மட்டும் மற்றவர்கள் காட்டிய நெயத்தை இவர்களுக்கும் வெளிப்படுத்தினார். இதனால் பலர் இவருடன் சேர்ந்தார்கள் .35 ஆண்டுகளாக ஜூலியானா வைத் தலைவராகத் தொடர்ந்து தேர்ந்தெடுத்து மகிழ்ந்தார்கள்.
தொடர்ந்து பணி, ஒறுத்தல் முயற்சிகளால் ஜூலியானா உடல்நலமுற்றார் .சாப்பிட முடியாதபடி, நற்கருணை பெற முடியாதபடி மிகவும் பாதிக்கப்பட்டார். இயேசுவின் திருவுடலைப் பெற முடியாதமைக்யாக வருந்தினார் .தான் இறக்கப் போகும் நேரம் வந்தவுடன் திருப்பலி நிறைவேற்ற வந்த குருவிடம் நற்கருணையை தமது நெஞ்சின் மேல் வைக்கச் சொன்னார். குருவும் இசைந்தார். வைத்தவுடன் அற்புதமாக நற்கருணை மறைந்தது.
மிகுந்த சிலுவையிணை அனுபவித்த பிறகு, 1341 ஜூன் 12 அன்று தமது 71 ஆம் வயதில் ஜூலியானா இறைவனடி சேர்ந்தார். இறந்த பிறகு இவரின் நெஞ்சின் மீது நற்கருணையில் உள்ள சிலுவை அடையாளம் பதிந்திருந்ததை அருள் சகோதரிகள் பார்த்து ஆண்டவரைப் புகழ்ந்தார்கள். திருத்தந்தை 11 ஆம் இன்னொசென்ட் 1678, ஜூலை 26 அன்று அருளாளராக அறிவித்தார். திருத்தந்தை 12-ஆம் கிளமென்ட் 1737 ஜுன் 16 அன்று புனித நிலைக்கு உயர்த்தினார் .இவர் நற்கருணைப் புனிதர் என அழைக்கப்படுகிறார்

நற்கருணை ஆண்டவரின் நல்லாசி பெற்று நலிந்தோருக்கு உதவுகிறவர்கள் நாளெல்லாம் இறையருள் பெறுகிறார்கள்.

திருத்தந்தை 9 ஆம் பயஸ் Pope Pius IX 07-02-2020

இன்றைய புனிதர் : 
(07-02-2020) 

திருத்தந்தை 9 ஆம் பயஸ் Pope Pius IX 

திருத்தந்தை 9 ஆம் பயஸ் Pope Pius IX

பிறப்பு 13 மே 1792,செனிகாலியா Senigallia, இத்தாலி

இறப்பு 7 பிப்ரவரி 1878, உரோம்

முத்திபேறுபட்டம் : 1907, திருத்தந்தை 10 ஆம் பயஸ்
புனிதர்பட்டம் : திருத்தந்தை 12 ஆம் பயஸ்

இவர் தனது 26 ஆம் வயதில் குருப்பட்டம் பெற்றார். பிறகு இவர் "மக்களின் பணியாளர்" என்றழைக்கப்பட்டு, மறைப்பணியா ற்றினார். பின்னர் இவர் மக்களின் தூதுவராக சிலே Chile நாட்டிற்கு அனுப்பப்பட்டார். அங்குச் சென்ற சில ஆண்டுகளிலே ஸ்போலேட்டோ என்ற மறைமாவட்டத்திற்கு பேராயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.1833 ஆம் ஆண்டு இமோலாவிற்கு Imola பேராயராக அனுப்பப்பட்டார். 1840 ஆம் ஆண்டு கர்தினாலாக உயர்த்தப்பட்டார். பின்னர் 16 ஜூன் 1846 ஆம் ஆண்டு 9 ஆம் பயஸ் என்ற பெயருடன் திருத்தந்தையாக உயர்த்தப்பட்டார். இவர் தனது பதவிக்காலத்தில் ஏராளமான பிரச்சனைகளை சந்தித்தார்.

இவர் மிகப் பொறுமையுடன் அனைத்துப் பிரச்சனைகளையும் மேற்கொண்டார். இவர் வாழும்போதே, புனிதராகப் புகழப்பட் டார். இவர் வாழ்ந்தபோது பல நோயாளிகளை குணமாக்கியுள் ளார். ஏறக்குறைய 32 ஆண்டுகள் திருத்தந்தையாக பணியாற் றிய இவர் இறைவாக்கினராகக் கருதப்பட்டார்.† இன்றைய புனிதர் †
(ஃபெப்ரவரி 7)

✠ அருளாளர் ஒன்பதாம் பயஸ் ✠
(Blessed Pius IX)

255வது திருத்தந்தை:
(255th Pope)

பிறப்பு: மே 13, 1792
செனிகல்லியா, மார்ச்சே, திருத்தந்தை நாடுகள்
(Senigallia, Marche, Papal States)

இறப்பு: பெப்ரவரி 7, 1878 (வயது 85)
திருத்தூதரக அரண்மனை, ரோம் நகரம், இத்தாலி
(Apostolic Palace, Rome, Italy)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திப்பேறு பட்டம்: செப்டம்பர் 3, 2000
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
(Pope John Paul II)

"ஜியோவன்னி மரிய மஸ்டாய் ஃபெர்ரெட்டி" (Giovanni Maria Mastai Ferretti) எனும் இயற்பெயர் கொண்ட அருளாளர் ஒன்பதாம் பயஸ், கத்தோலிக்க திருச்சபையின் 255வது திருத்தந்தையாக கி.பி. 1846ம் ஆண்டு, ஜூன் மாதம், 16ம் நாள் முதல், 1878ல் தமது மரணம்வரை ஆட்சி புரிந்தவர் ஆவார்.

கி.பி. 1792ம் ஆண்டும், மே மாதம், 13ம் நாள், “செனிகல்லியா” (Senigallia) என்னுமிடத்தில், "கிரோலமோ டேய் கொண்டி ஃபெர்ரெட்டி" (Girolamo dei conti Ferretti) எனப்படும் பிரபுக்கள் குடும்பத்தில் ஒன்பதாவது குழந்தையாகப் பிறந்த இவர், பிறந்த அன்றே திருமுழுக்கும் பெற்றார். "வோல்டேர்ரா" மற்றும் ரோம் (Volterra and in Rome) நகரிலுள்ள "பியாரிஸ்ட்" (Piarist College) கல்லூரியில் கல்வி கற்றார். தமது சொந்த ஊரான 'செனிகல்லியாவில்' (Senigallia) இறையியல் கற்ற இவர், கி.பி. 1814ம் ஆண்டு, ஃபிரெஞ்ச் சிறையிருப்பிலிருந்து (French captivity) திரும்பியிருந்த திருத்தந்தை ஏழாம் பயசை (Pope Pius VII) சந்தித்தார். கி.பி. 1815ம் ஆண்டு, திருத்தந்தையின் உயர் காவலராக இணைந்த இவர், திடீரென தமக்கு ஏற்பட்ட வலிப்பு நோய் காரணமாக வி்ரைவிலேயே அதிலிருந்து நீக்கப்பட்டார். திருத்தந்தையின் கால்களில் தஞ்சமடைந்த இவரை எழுப்பிய திருத்தந்தை இவர் இறையியல் படிப்பைத் தொடர ஆதரவு தந்தார்.

கி.பி. 1819ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 10ம் தேதி, இவர் குருத்துவம் பெற்றார்.
கி.பி. 1827ம் ஆண்டு, தமது 35 வயதில் மஸ்டாய் திருத்தந்தை பன்னிரெண்டாம் லியோவால் (Pope Leo XII) "ஸ்போலேட்டோ" (Spoleto) உயர் மறைமாவட்டத்தின் பேராயராக நியமிக்கப்பட்டார். கி.பி. 1840ம் ஆண்டு, "புனித மர்செல்லினோ ஈ பியெட்ரோவின்" கர்தினால் குருவாக (Cardinal-Priest of Santi Marcellino e Pietro) அறிவிக்கப்பட்டார்.

கி.பி. 1846ம் ஆண்டு, திருத்தந்தை பதினாறாம் கிரகோரியின் (Pope Gregory XVI ) மரணத்தின் பின்னர் நடந்த திருத்தந்தை தேர்தலில் மஸ்டாய் தேர்ந்தெடுக்கப்பட்டு, திருத்தந்தையாக அருட்பொழிவு செய்யப்பட்டார். தமது பெயரையும் ஒன்பதாம் பயஸ் (Pius IX) என்று ஏற்றுக்கொண்டார். 

32 ஆண்டுகள் திருத்தந்தையாக இருந்த இவரே அதிக காலம் இப்பதவியினை வகித்தவ திருத்தந்தை ஆவார். இவர் கூட்டிய “முதல் வத்திக்கான் பொதுச்சங்கம்” (The First Vatican Council) (கி.பி. 1869-1870) திருத்தந்தையின் தவறா வரம் ஒரு விசுவாசக் கோட்பாடு என அறிக்கையிட்டது.

தூய கன்னி மரியாளின் அமலோற்பவத்தை இவர் ஆதரித்தார். மரியாளுக்கு இடைவிடா சகாய மாதா என்னும் பட்டத்தையும் அளித்தார். இப்பட்டத்துக்கு காரணமான கிரீட் தீவு பைசாந்திய ஓவியத்தை உலக இரட்சகர் சபை குருக்களின் பாதுகாவலில் ஒப்படைத்தார்.

திருத்தந்தை நாடுகளின் அரசராக இருந்த இறுதி திருத்தந்தை இவர் ஆவார். 1870ம் ஆண்டு, அது இத்தாலிய தேசியவாத படையினரால் கைப்பற்றப்பட்டு இத்தாலிய பேரரசுடன் இணைக்கப்பட்டது.

இவருக்கு முக்திபேறு பட்டம் வழங்குவதற்கான நடைமுறைகளின் ஆரம்ப கட்டத்திலே, அதனை இத்தாலிய அரசு தீவிரமாக எதிர்த்தது. அவருடைய சர்வாதிகாரமான மற்றும் பிற்போக்குத்தனமான அரசியலை காரணம் காட்டி, சில யூதர்களும் கிறிஸ்தவர்களும் விமர்சித்ததால், அவரது முக்திபேறு பட்டம் சர்ச்சைக்குரியதாகவே இருந்தது. திருத்தந்தை “இரண்டாம் ஜான் பவுல்” (Pope John Paul II) கி.பி. 1985ம் ஆண்டு, ஜூலை மாதம், ஆறாம் நாளன்று, இவரை வணக்கத்திற்குரியவர் என அறிவித்தார்.

கி.பி. 2000ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், மூன்றாம் தேதி, திருத்தந்தை “இருபத்திமூன்றாம் யோவானோடு” (Pope John XXIII) இவருக்கும் அருளாளர் பட்டம் அளிக்கப்பட்டது.

இவரது நினைவுத் திருவிழா நாள் ஃபெப்ரவரி 7 ஆகும்.