புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

16 March 2020

march 16

இன்றைய புனிதர் : 
(16-03-2020) 
கொலோன் நகர் பேராயர் ஹெரிபெர்ட் Herbert von Köln

பிறப்பு 970, வோர்ம்ஸ் Worms, ஜெர்மனி

இறப்பு 16 மார்ச் 1021,கொலோன் Köln, ஜெர்மனி

இவர் அரசர் ஹூயூகோபின் Hugo மகன். அரசர் 3 ஆம் ஒட்டோ அவர்களால் 994 ல் இவரின் 24 ஆம் வயதில் இத்தாலி நாட்டில் பேராலயக் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அப்பொறுப்பை ஜெர்மனி நாட்டிலும் ஏற்றார். இவர் அரசர் ஒட்டோவின் நெருங்கிய நண்பரானார். பின்னர் இவர் 995 ல் குருப்பட்டம் பெற்றார். பிறகு999 ஆம் ஆண்டு கொலோன் நகரின் பேராயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது ஒருமுறை 1002 ஆம் ஆண்டு ஒட்டோ பயணம் ஒன்றை மேற்கொண்டபோது, திடீரென்று இறந்து போனார்.

இவ்விறப்பால் பேராயர் ஹெர்பெர்ட் பெரிதும் பாதிக்கபட்டார். இதனால் பல துன்பங்களை அனுபவித்தார். பல்வேறுபட்ட பிரச்சனைகளைச் சந்தித்தார். இவர் ஒட்டோவின் உடலை ஆஹனிற்கு Aachen கொண்டு வரப்பட்டு, அங்கு அடக்கம் செய்யப்பட்டார். ஒட்டோ இறந்ததால் அரசர் 2 ஆம் ஹென்றி பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்ற நாளிலிருந்து ஆயருக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தான். இதனால் ஆயரை கவுன்சிலர் பதவியிலிருந்து விலக வைத்தான்.

ஆயர் ஹெரிபெர்ட் தான் மேற்கொண்ட அனைத்து துன்பங்களையும் இறைவனின் அருளால் பொறுமையோடு ஏற்றார். தன் பணியை தளராமல் சிறப்பாக ஆற்றினார். ஏழைகளின் மேல் இரக்கங் கொண்டுச் செயல்பட்டார். இவர் இறந்தபிறகு கொலொனிலேயே அடக்கம் செய்யப்பட்டார்.


செபம்:
குறைவில்லா நிறைபொருளாம் ஆண்டவராகிய இறைவா! உமது அன்பின் வழியில் இன்றைய புனிதரை வழிநடத்தினீர். உம் மகன் இயேசுவின் பெயரால் அவர் செய்த அனைத்து பணிகளிலும் நிறைவைத் தந்தீர். வாழ்வு முழுவதும் உடனிருந்து பாதுகாத்தீர். அவரின் வழியாக வோர்ம்ஸ் நகரில் வாழும் மக்களையும் கொலோன் நகரில் உள்ள மக்களையும் ஆசீர்வதித்து வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Saint of the Day : (16-03-2020)

Saint Heribert of Cologne

Son of Duke Hugo of Worms, Germany. Educated at the cathedral school at Worms. Provost of the cathedral. Ordained in 994. Chancellor for Italy under King Otto III in 994. Chancellor for Germany in 997. Archbishop of Cologne, Germany on 9 July 999. Attended the death-bed of King Otto at Paterno. Initially opposed the ascension of King Henry II, and was imprisoned by him. However, when Henry was elected king on 7 June 1002, Heribert immediately acknowledged him as king, and became one of his advisors. Founded and endowed the Benedictine monastery and church of Deutz, Germany. Obtained miracles by prayer, including the end of a drought. Honoured as a saint even during his lifetime.

Born :
c.970 at Worms, Germany

Died :
16 March 1021 at Cologne, Germany of natural causes
• relics in the church at Deutz, Germany (part of modern Cologne

Canonized :
1075 by Pope Saint Gregory VII

Patronage :
against drought
• for rain
• Deutz, Germany

---JDH---Jesus the Divine Healer---

பொப்பி நகர தூய டோரெல்லா (மார்ச் 16)

இன்றைய புனிதர்

பொப்பி நகர தூய டோரெல்லா (மார்ச் 16)
நிகழ்வு

டோரெல்லாவின் இறப்புக்குப் பிறகு அவருடைய கல்லறைக்கு ஒருவர் வந்தார். வந்தவரோ சியென்னாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர். அவர் டோரெல்லாவிடம், “எப்படியாவது நான் எனது சொந்த நாட்டிற்குத் திருப்பிச் செல்ல உதவியருளும். அப்படி நீர் எனக்கு உதவும்பட்சத்தில், நான் இங்கே இருக்கின்ற பாறையில் உம்முடைய திருவுருவத்தை வரைவேன்” என்று வேண்டினார். அவர் இந்த வேண்டுதலை பல நாட்களாகச் செய்துவந்தார். அவருடைய வேண்டுதல் வீண்போகவில்லை. ஆம், தூய டோரெல்லாவின் உதவியால் அம்மனிதர் தம் சொந்த நாட்டிற்கு வேற்று உருவில் சென்றார்.

இந்த நன்றிப்பெருக்கின் அடையாளமாக அந்த மனிதர் ஒருசில மாதங்கள் கழித்து, மீண்டுமாக டோரெல்லாவின் கல்லறைக்கு வந்து, அதற்குப் பக்கத்தில் இருந்த பாறையில் அவருடைய திருவுருவத்தை வரைந்துவிட்டுப் போனார்.

தூய டோரெல்லா இறைவனின் கையில் வல்லமையுள்ள கருவி என்பதற்கு இந்தப் புதுமை ஒரு சான்றாக இருக்கின்றது.

வாழ்க்கை வரலாறு

டோரெல்லா, இத்தாலியில் உள்ள பொப்பி என்னும் ஊரில் 1202 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய குடும்பம் மிகவும் வசதியான குடும்பம். எனவே, இவர் எல்லா வசதிகளும் கிடைக்கப்பெற்று மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். டோரெல்லாவுக்கு 18 வயது நடக்கும்போது அவருடைய தந்தை அவரைவிட்டுப் பிரிந்தார். ஏற்கனவே அவருடைய தாயார் சிறுவயதிலே அவரை விட்டுப் பிரிந்ததால் அவர் தனிமரமானார். எனவே, அவர் தன்னுடைய உடைமைகளை எல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு துறவற வாழ்வை மேற்கொள்ள நினைத்தார். இத்தகைய சமயத்தில் அவரோடு இருந்த இரண்டு தீய நண்பர்கள், “உலகில் அனுபவிக்க எவ்வளவோ இருக்கின்றது, அதைவிடுத்து துறவற வாழ்க்கையை மேற்கொள்வது சுத்தப் பைத்தியக்காரத்தனம்” என்று சொல்லி அவருடைய மனதை மாற்றினார்கள். இதனால் அவர் நண்பர்கள் சொல்வதுதான் சரியென்று நினைத்து, எல்லாத் தீயப் பழக்கவழக்கங்களுக்கும் அடிமையாகி தன்னுடைய வாழ்வைத் தொலைத்தார்.

டோரெல்லாவுக்கு 36 வயது நடந்துகொண்டிருக்கும்போது அவர் தன்னுடைய (தீய)நண்பர்களோடு ஒரு மைதானத்தில் விளையாடிக்கொண்டிருக்கும்போது, காகம் ஒன்று அவருடைய கையில் அமர்ந்து மூன்றுமுறை கத்தியது. இதனை அவர் இறைவனின் அழைப்பாக இருக்குமோ என்னவோ (பேதுரு இயேசுவை மும்முறை மறுதலித்தபோது சேவல் கூவியதே அதுபோன்று இது இருக்குமோ) என்று நினைத்து அவர் உலக மாயையிலிருந்து விடுபட்டு, சான் பிடலியில் இருந்த ஒரு துறவியிடம் சென்று, பாவ சங்கீர்த்தனம் செய்தார். பின்னர் அவர் பொப்பிக்கு அருகே இருந்த கொன்சாண்டினோ மலைக்குச் சென்று, அங்கே இருந்த ஒரு குகையில் தவவாழ்க்கை வாழத் தொடங்கினார்.

டோரெல்லா, கொண்டாண்டினோ மலையில் தவ வாழ்க்கை வாழ்ந்து வருவதைக் கேள்விப்பட்ட நிறையப் பேர் அவரிடத்தில் வந்து, ஆசிர் பெற்றுச் சென்றார்கள். டோரெல்லா மிகவும் குறைவான உணவையே உண்டு, மிகக் கடுமையான ஒறுத்தல் முயற்சிகளைச் செய்து வந்தார். சில நேரங்களில் அவருக்குச் சோதனைகள் வந்தபோது உறைபனியில் அப்படியே படுத்துக்கிடந்தது சோதனைகளை வெற்றி கொண்டார். டோரெல்லா வாழ்ந்து வந்த மலைப்பகுதியில் ஓநாய்களின் தொல்லைகள் அதிகமாக இருந்தன. சில நேரங்களில் ஓநாய்கள் அந்த வழியாக வரக்கூடிய சிறு பிள்ளைகளைப் பிடித்துச் சென்றபோது டோரெல்லா அற்புதமாக அக்குழந்தைகளைக் காப்பிற்றினார். இதனால் எல்லாரும் அவரை சின்ன அசிசியார் என்றே அவரை அழைத்து வந்தார்கள். டோரெல்லா தன்னுடைய வாழ்வின் கடைசிக் காலத்தில் பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையில் சேர்ந்து தூய வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இவர் 1282 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

தூய டோரெல்லாவின் நினைவு நாளைக் கொண்டாடும் இன்று அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. இறைவனின் அழைப்பை உணர்தல்

தூய டோரெல்லா ஒருகாலத்தில் கடவுளை மறந்து உலகப் போக்கிலான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அப்படிப்பட்டவர் ஒரு சமயம் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருக்கும்போது காகம் வந்து அவருடைய கையில் அமர்ந்து, மூன்று முறை கரைந்தபோது அதனை கடவுளின் அழைப்பாக உணர்ந்து, எல்லாவற்றையும் துறந்து துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். காகத்தின் வழியாக இறைவன் டோரெல்லாவை அழைத்தபோது, அவர் உடனே செவிமடுத்தி, இறைவழியில் நடந்தது போன்று, பல்வேறு வழிகளில் நம்மை அழைக்கின்றபோது இறைவனின் குரலுக்கு நாம் செவி மடுத்து வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நிறைய நேரங்களில் இறைவன் நம்மை நேரடியாக அழைத்தால்கூட அதனைக் கண்டும் காணாமல் இருந்துவிடுகின்றோம். இத்தகைய நிலை மாற வேண்டும்.

ஆகவே, தூய டோரெல்லாவின் விழாவைக் கொண்டாடும் நாம், இறைவனின் அழைப்பை நம்முடைய வாழ்வில் உணர்ந்து, அவர் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.