புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

01 June 2020

புனிதர் ஜஸ்டின் June 1

† இன்றைய புனிதர் †
(ஜூன் 1)

✠ புனிதர் ஜஸ்டின் ✠
(St. Justin)

மறைசாட்சி:
(Martyr)
பிறப்பு: கி.பி. 100
ஃபிளேவியா நேபோலிஸ், ஸமரியா (தற்போதைய நப்லஸ்)
(Flavia Neapolis, Samaria (modern-day Nablus)

இறப்பு: கி.பி. 165 (வயது 65)
ரோம், ரோமப் பேரரசு
(Rome, Roman Empire)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
லூதரனியம்
(Lutheranism)
ஓரியண்டல் மரபுவழி திருச்சபை
(Oriental Orthodoxy)

நினைவுத் திருநாள்: ஜூன் 1

புனிதர் ஜஸ்டின், ஆதிகால கிறிஸ்துவுக்காக வாதிடுபவரும், இரண்டாம் நூற்றாண்டின் இறை வார்த்தைக் கோட்பாடுகளின் தலைசிறந்த மொழி பெயர்ப்பாளரும் ஆவார். இவர் தமது சில மாணவர்களுடன் சேர்ந்து மறைசாட்சியாக உயிர்த் தியாகம் செய்தார். இவர் ரோமன் கத்தோலிக்கம், ஆங்கிலிக்கன் சமூகம், கிழக்கு மரபுவழி, லூதரனியம் மற்றும் ஓரியண்டல் மரபுவழி ஆகிய திருச்சபைகளால் புனிதராக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்.

இவர் கி.பி. 100ம் ஆண்டில் சமாரியா நாட்டிலுள்ள "ஃபிளேவியா நேபோலிஸ்" (Flavia Neapolis) என்னும் இடத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோர் ரோம் நாட்டைச் சேர்ந்தவர்கள். பாகனிய விசுவாசத்தை (Pagan family) சேர்ந்தவர்கள். இவர் தம்மைத் தாமே யூதரல்லாத புர இனத்தவரென வரையறுத்துக்கொண்டார். இவர் நல்ல கல்விப் பயிற்சி பெற்றார். இவரது காலத்தில் கல்வி ஸ்தாபனங்கள் ஒன்றுக்கொன்று மாறான போதனைகளைப் போதித்தன. இந்தப் போதனைகள் எதுவும் இவருக்கு திருப்தி அளிக்கவில்லை. இவரது சந்தேகங்களை அகற்றவில்லை.

பல்வேறு பாகன் தத்துவங்களை கற்றறிந்த இவர், கிறிஸ்தவராக மனம் மாறிய பிறகும் இவரது கற்றலும் தேடலும் முடிவுக்கு வரவில்லை. தமது இளமையில் முக்கியமாக “பிளேட்டோ பள்ளியால்” (School of Plato) ஈர்க்கப்பட்டார். கிறிஸ்தவம் வாழ்க்கையின் ஒவ்வொரு பெரிய கேள்விகளுக்கும் சிறப்பாக பதிலளித்ததையும், தத்துவவாதிகளை விட நன்றாகவே உள்ளதையும் கண்டறிந்தார்.

பாகனிய விசுவாசத்தை விட்டு கிறிஸ்தவ மதத்திற்கு மனம் மாறிய பிறகும் தமது பழைய தத்துவஞானியின் கையற்ற மேலாடையையே அணிந்து வந்தார். கிரேக்க மெய்யியலின் சிறந்த கூறுபாடுகளை அவர் கிறிஸ்தவ மதத்துடன் இணைத்தார்.

அவரைப் பொறுத்தவரை, தத்துவயியல் என்பது, கிறிஸ்தவ போதகர் என்றும், ஒருவனை கிறிஸ்துவை நோக்கி அழைத்துச் செல்லும் கல்வி என்றும் உணர்ந்திருந்தார்.

ஜஸ்டின், பாகன்களின் தவறான புரிந்துணர்வு மற்றும் கிறிஸ்தவத்திற்கெதிரான தாக்குதல்களை எதிர்த்து வக்காலத்து வாங்குபவராக அல்லது எதிர்த்து வாதிடுபவராக (Apologist) இருந்தார்.

கிறிஸ்தவ மதத்தின்பால் இவருக்குள்ள உறுதியான ஈடுபாடு காரணமாக, கி.பி. 165ம் ஆண்டு, ரோம் நகரில் இவர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

இன்றைய புனிதர்
2020-06-01
புனித ஜஸ்டின் (St.Justin)
மறைசாட்சி(Martyr), தத்துவமேதை

பிறப்பு
100 ஆம் ஆண்டு
சிரியா
இறப்பு
165
புனிதர்பட்டம்: 1035, திருத்தந்தை 9ஆம் பெனடிக்ட்

இவர் கிரேக்கமொழி பேசும் பெற்றோருக்கு மகனாக பிறந்தார். சிறு வயதிலிருந்தே தத்துவ கலையை ஆழமாகக் கற்றுத்தேர்ந்தார். இவரது காலத்தில் இருந்த ப்ளேட்டோ(Plato) போன்ற தத்துவமேதைகளுடன் நெருங்கிய தொடர்புகொண்டிருந்தார். எல்லாம் வல்ல இறைவனைப்பற்றி இந்த தத்துவ ஞானம் தனக்கு முழுமையான விளக்கம் அளிக்க இயலவில்லை என்றுணர்ந்தார். ஒருநாள் அலெக்சாண்டிரியா நகருக்கு அருகில் கடற்கரையில் நடந்து போய்கொண்டிருந்தார். தற்செயலாக ஒரு வயது முதிர்ந்த கிறிஸ்தவரை சந்தித்தார்.. அவருடன் நெடுநேரம் உரையாடினார். அதன்பயனாக விவிலியத்தில், இறைவாக்கினர்கள் எழுதிய இறைவாக்குகளைப்படித்தார். நாளடைவில் மீட்பரின் முன்னறிவிப்பு இறைவாக்கை சரியாக புரிந்துகொண்டார்.

கிறிஸ்தவர்கள் எத்தனை மனவலிமையுடன் கிறிஸ்துவிற்காக வேதனைகளை தாங்கிக்கொண்டார்கள். என்பதை உணர்ந்து வேதனைப்பட்டார். இறைவாக்கினர்களை நினைத்து வியப்படைந்தார். சாவைத் தழுவினாலும், இந்த மறைசாட்சிகளிடம் காணப்பட்ட முகமலர்ச்சியும், ஆர்வமும் அவரை மிக ஆழமாகத் தொட்டது. இவர்களின் வீரச்சாவும் இவர் திருநூலைப் படித்ததன் பயனுமாக கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார். கிறிஸ்துவுக்காக வாழ முடிவெடுத்தார். பின்னர் தமது தத்துவமேதைக்குரிய உடையிலேயே பல பயணங்களை மேற்கொண்டு, இறுதியாக உரோம் நகரை அடைந்தார். 4 நற்செய்தியாளர்களும் எழுதிய இறைவாக்குகளைப் பற்றி தெளிவாகப்படித்தார். முடிவில் அவர்கள் எழுதியவைகள் அனைத்தும் உண்மை என்பதை உணர்ந்து ஏற்றுக்கொண்டார். இதன் பயனாக, இவரது நாட்களில் ஞாயிறு திருவழிபாடு எவ்வாறு நடைபெற்று வந்தது என்பதைப்பற்றி விரிவாக எழுதிவைத்தார். அனைத்திற்கும் மேலாக, திவ்விய நற்கருணையில் இறைப்பிரசன்னத்தை பற்றியும் அதில் நாம் கொண்டிருக்கவேண்டிய விசுவாசப் பற்றுறுதி பற்றியும் மிகவும் ஆழமாக விவரித்து எழுதியுள்ளார்.

147 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டது போல, இனியும் துன்புறுத்தப்படக்கூடாது. என்று மன்னன் ஆன்றோனினுஸ் பயஸ்(Androninus Pius) ஆணை பிறப்பித்தான். ஜஸ்டின் எழுதிய பல நூல்களில் ஒன்றில் "உலகில் எப்பகுதியிலும், எக்காலத்திலும் உண்மையை சுட்டிக்காட்டிய ஞானிகள் அனைவரும் கிறிஸ்துவ சமுதாயத்தை சார்ந்தவர்கள் என்று மிக அழுத்தம், திருத்தமாக குறிப்பிட்டுள்ளார். 166 ல் ஜஸ்டின் எழுதிய மற்றொரு நூலில், நாம் பெற்றுக்கொண்ட விசுவாச பேருண்மைப்பற்றி தெளிவாக விளக்கியுள்ளார். இதனால் இந்நூல் அப்போதைய அரசன் மார்க்ஸ் அவுரேலியுசுக்கு(Marks Aureliyas) எரிச்சல் மூட்டியது. இதனால் கோபம்கொண்ட அரசன், கிறிஸ்துவ விசுவாசத்தையும், ஜஸ்டினையும் அழிக்க எண்ணி, அவரை சிறைப்பிடித்து சென்றான். அங்கு பல கொடுமைகளை அனுபவித்த ஜஸ்டின் தனது 67 ஆம் வயதில் தலைவெட்டப்பட்டு இறந்தான். அவர்தான் இறக்கும்வரை, எந்த ஒரு தத்துவக்கலையும், இறுதியில் கிறிஸ்துவிடம் மட்டுமே கொண்டு சேர்க்கமுடியும் என்பதை இடையூறாது போதித்தார்.


செபம்:
எங்கள் தந்தையாகிய இறைவா! இன்றைய உலகில் உள்ள தத்துவமேதைகளை நீர் கண்ணோக்கியருளும். ஒவ்வொருவரும் உம்மை மையமாக வைத்து செயல்படவும், தங்கள் பணிகளின் வழியாக உம்மை பறைசாற்றவும் புனித ஜஸ்டின் வழியாக உம் அருளைத்தந்து காத்து வழிநடத்தும்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

சபைத்தலைவி ஆக்னெஸ் எல்லன்பெர்கர் Agnes Ellenberger
பிறப்பு: 16 மார்ச் 1838, வெட்ஸ்லர் Wetzlar, ஹெஸ்ஸன் Hessen, ஜெர்மனி
இறப்பு: 1 ஜூன் 1906, கோப்லன்ஸ் Koblenz, ஜெர்மனி


ஓனா நகர் துறவி என்னேக்கோ Enneco von Ona
பிறப்பு: 10 ஆம் நூற்றாண்டு, ஸ்பெயின்
இறப்பு: 1 ஜூன் 1057, ஓனா Ona, ஸ்பெயின்


மறைசாட்சி, பேராயர் முதலாம் கொன்ராட் Konrad I von Trier
பிறப்பு: 1016, ப்ஃபுல்லிங்கன் Pfullingen, ஜெர்மனி
இறப்பு: 1 ஜூன் 1066, உர்சிக் Ürzig, ஜெர்மனி

Saint of the Day : (01-06-2020)

St. Justin

St. Justin was born in Flavia Neopolis in the modern day West Bank, Palestine in the year about 110 A.D. in a pagan family. His father was Priscos. St. Justin was influenced by the fearless conduct of the Christians facing execution for the cause of Christian faith. He was converted to Christianity in Ephesus in about the year 130 A.D. He adopted the dress of a philosopher and travelled to various places for preaching. He started a school in Rome to teach poor people, when Emperor Antonius Pius was reigning. When there was a dispute with another philosopher, the other philosopher informed the authorities about the conversion of Justin to Christianity and his preaching of Christian faith. Then St. Justin along with other six of his companions were arrested and tried by the urban Roman prefect Junius Rusticus during the reign of Emperor Marcus Aurelius. During the trial the Roman Prefect ordered St. Justin and others to worship the Roman Gods. But Justin and his companions boldly told the Perfect 'No one who is right thinking stoops from true worship to false worship'. When the Roman Prefect told St. Justin that he would be tortured to death mercilessly, if you refuse to sacrifice to the idols of the Roman Gods, he told 'We hope to suffer torment for the sake of our Lord Jesus Christ and so be saved' . All others also told that they would not offer sacrifices to the idols. St. Justin and the others were beheaded in the year 165 A.D. His relics are in the church of St. John the Baptist in Sacro