புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

30 April 2020

புனிதர் ஜோசஃப் பெனடிக்ட் கொட்டலேங்கோ April 30

† இன்றைய புனிதர் †
(ஏப்ரல் 30)

✠ புனிதர் ஜோசஃப் பெனடிக்ட் கொட்டலேங்கோ ✠
(St. Joseph Benedict Cottolengo)
ஒப்புரவாளர் மற்றும் நிறுவனர்:
(Confessor, and Founder)

பிறப்பு: மே 3, 1786
ப்ரா, குனியோ மாகாணம், பீட்மாண்ட், சர்தீனியா இராச்சியம்
(Bra, Province of Cuneo, Piedmont, Kingdom of Sardinia)

இறப்பு: ஏப்ரல் 30, 1842 (வயது 55)
சியரி, டுரின் மாகாணம், பீட்மாண்ட், சர்தீனியா இராச்சியம் (தற்போதைய இத்தாலி)
(Chieri, Province of Turin, Piedmont, Kingdom of Sardinia (Now Italy))

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திப்பேறு பட்டம்: ஏப்ரல் 29, 1917
திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட்
(Pope Benedict XV)

புனிதர் பட்டம்: மார்ச் 19, 1934
திருத்தந்தை பதினோராம் பயஸ்
(Pope Pius XI)

நினைவுத் திருநாள்: ஏப்ரல் 30

புனிதர் ஜோசப் பெனடிக்ட் கொட்டலேங்கோ, "தெய்வீக உறுதியின் சிறு இல்லம்" (Little House of Divine Providence) எனும் அமைப்பின் நிறுவனரும், ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார்.

ஜோசப் பெனடிக்ட் கொட்டலேங்கோ, கி.பி. 1786ம் ஆண்டு, மே மாதம், 3ம் நாளன்று, அன்றைய சர்தீனியா இராச்சியத்தின் (Kingdom of Sardinia) "ப்ரா" (Bra) நகரில் வாழ்ந்திருந்த ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தின் பன்னிரண்டு குழந்தைகளில் மூத்த குழந்தையாக பிறந்தார். (அவர்களில் ஆறு பேர் குழந்தை பருவத்திலேயே இறந்தனர்). பின்னர் கி.பி. 1802ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 2ம் தேதி, அவர் ஒரு பிரான்சிஸ்கன் மூன்றாம் நிலை (Franciscan Tertiary) உறுப்பினர் ஆனார். கி.பி. 1805ம் ஆண்டு, அவர் "அஸ்தி" (Asti) நகரில் உள்ள செமினரியில் (குரு மட பள்ளியில்) இணைந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அது மூடப்பட்டது. மேலும் அவர் தனது படிப்பை வீட்டிலேயே தொடர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கொட்டலேங்கோ, கி.பி. 1811ம் ஆண்டு, ஜூன் மாதம், 8ம் தேதி, குருத்துவ அருட்பொழிவு பெற்றார்.

"கொர்னேலியானோ டி ஆல்பா" (Corneliano D'Alba) பங்கு ஆலய துணை பாதிரியாராக நியமிக்கப்பட்ட அவர், டுரின் (Turin) நகரில் இறையியலில் முனைவர் பட்டம் பெற்றார். மேலும் கி.பி. 1818ம் ஆண்டு, டுரின் நகரில் உள்ள "கார்பஸ் டொமினி பேராலயத்தின்" (Basilica of Corpus Domini in Turin) தலைமை குருவாக (Canon) ஏற்றுக்கொள்ளப்பட்டார். கொட்டலேங்கோ, தமக்கு கிடைத்த பரிசுகள், நன்கொடைகள், பிரசங்கத்திற்கான கட்டணம், மற்றும் திருப்பலி நடத்துவதற்காக தமக்கு வழங்கப்பட்ட உதவித்தொகை ஆகியவற்றினை ஏழைகளுக்கு நன்கொடையாக வழங்கினார்.

டுரின் நகரம், ஃபிரெஞ்சு ஆக்கிரமிப்பிலிருந்து மீண்டு வந்துகொண்டிருந்த அந்த காலகட்டத்தில், கிராமப்புறங்களிலிருந்து தீவிரமான குடியேற்றத்தின் அழுத்தம் இருந்தது. இது கடுமையான சமூக பிரச்சினைகள் மற்றும் வறுமையை ஏற்படுத்தியது. மோசமான பஞ்சம், மற்றும் வறுமை, பிச்சைக்காரர்கள், கல்வியறிவு இல்லாமை, மற்றும் தொடர்ச்சியான தொற்றுநோய்கள், ஏராளமான சட்டவிரோத குழந்தை பிறப்புகள் மற்றும் அதிக குழந்தை இறப்பு விகிதம் ஆகியவற்றால் டுரின் நகர் நிறைந்திருந்தது. "புனித வின்சென்ட் டி பாலின்" (St. Vincent de Paul) வாழ்க்கை வரலாற்றினை படித்து அறிந்த கொட்டலேங்கோ, தனது நாற்பத்தொன்றாவது வயதில், தமது உண்மையான தொழில் தர்மம், கருணை என்பதை புரிந்துகொண்டார்.

இந்த நேரத்தில், "லியோன்ஸ்" (Lyons) நகரிலிருந்து "மிலன்" (Milan) நகருக்கு பயணிக்கும் ஒரு குடும்பத்தில் கொட்டலேங்கோ கலந்து கொண்டார். கர்ப்பிணித் தாய் ஒருவர், உடல்நிலை சரியில்லாமல் இருந்த காரணத்தாலும், அவருக்கு காசநோய் இருந்ததாலும், மாகியோர் மருத்துவமனையில் (Maggiore Hospital) அவர் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவர் காய்ச்சலால் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் மகப்பேறு மருத்துவமனைக்குச் செல்லவும் முடியவில்லை. மேலும் நோய்த்தொற்று ஏற்படக்கூடிய எவரையும் மருத்துவமனையில் அனுமதிக்க விதிமுறைகள் தடை விதித்தன. மரண தருவாயிலிருந்த அந்த தாய்க்கு கொட்டலேங்கோ இறுதி அருட்சாதனங்களை வழங்கினார். மற்றும் பிறந்த அந்த குழந்தைக்கு, இறப்பதற்கு முன்பு திருமுழுக்கு அள்ளித்தார். மரித்துப்போன அந்த தாயின் மற்ற குழந்தைகளின் அழுகையும் அரற்றலும் நிறைந்த காட்சிகள், கொட்டலேங்கோவை வெகுவாக பாதித்தன. உடனடியாக சென்ற அவர், தனது உடை உட்பட தனக்குச் சொந்தமான அனைத்தையும் விற்று, இரண்டு அறைகளை வாடகைக்கு எடுத்தார். வயதான பக்கவாத நோயாளி ஒருவருக்கு இலவச தங்குமிடம் வழங்கினார். கி.பி. 1828ம் ஆண்டு, ஜனவரி மாதம், 17ம் தேதி, அவர் தனது புதிய பணியைத் தொடங்கினார். மருத்துவமனைகளில் ஏற்றுக்கொள்ளப்படாத மக்களுக்கு, நீண்ட காலத்திற்கு இந்த வளாகங்கள் விருந்தோம்பல் மையமாக மாறியது. நோய்வாய்ப்பட்டவர்களைப் பார்வையிட்ட பணக்கார விதவைப் பெண்ணான "மரியானா நாஸி" (Marianna Nasi) என்பவரின் வழிகாட்டுதலின் பேரில், அவருக்கு மருத்துவர் "லோரென்சோ கிரானெட்டி" (Doctor Lorenzo Granetti), மருந்தாளர் (Pharmacist) "பால் ராயல் ஆங்லெசியோ" (Paul Royal Anglesio), மற்றும் "கருணையின் மகளிர்" (Ladies of Charity) அமைப்பின் பன்னிரண்டு பெண்கள் ஆகியோர் உதவி செய்தனர்.

கி.பி. 1831ம் ஆண்டில் காலரா நோய்த் தொற்று வெடித்தபோது, தொற்று பயம் காரணமாக முன்னெச்சரிக்கையாக இவரது சிறிய மருத்துவமனை அதிகாரிகளால் மூடப்பட்டது. கொட்டலேங்கோ நகரின் புறநகரில் உள்ள "வால்டோக்கோ" (Valdocco) எனும் இடத்தில் ஒரு வீட்டை வாங்கி, இரண்டு கன்னியாஸ்திரிகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியுடன் அங்கு இடம் பெயர்ந்தார். இது "தெய்வீக உறுதியின் சிறு இல்லம்" அமைப்பின் தொடக்கமாகும். "காவலியர் ஃபெர்ரெரோ" (Cavalier Ferrero) என்பவர் உள்ளிட்ட பல பயனாளிகளின் தாராள மனப்பான்மை காரணமாக, அவரால் விரைவில் ஒரு அனாதை இல்லத்தை நிறுவ முடிந்தது.

அவர், பல்வேறு துறவு மடங்கள், பள்ளிகள், குருக்களின் சமூகங்கள் (Communities of Priests), சகோதரர்களின் சமூகங்கள் (Communities of Brothers) மற்றும் பொதுநிலை தன்னார்வலர்களின் குழுக்களை (Groups of Lay Volunteers) நிறுவினார். அவரது தொண்டு மரபு, இன்று டுரின் நகரின் மையத்தில், சுவிசேஷ வழியில் பிறரை நேசிப்பதும் சேவை செய்வதும் என்ன என்பதற்கான அடையாளமாக உள்ளது.

இன்றும் கொட்டலேங்கோ அருட்தந்தையர், சகோதரிகள் மற்றும் சகோதரர்கள், ஏழை எளிய மக்களிடம் கடவுளின் அன்பைத் தொடர்புகொள்வதில் கவனம் செலுத்தும் செயல்களில் ஒன்றாக இணைந்து செயல்படுகிறார்கள். இந்த அமைப்புகள், இன்று உலகம் முழுவதுமுள்ள ஈக்வடார் (Ecuador), இந்தியா (India), இத்தாலி (Italy), கென்யா (Kenya), சுவிட்சர்லாந்து (Switzerland), தான்சானியா (Tanzania), மற்றும் அமெரிக்கா (United States) ஆகிய நாடுகளில் பரவியுள்ளன.

கொட்டலேங்கோ தனது நோயாளிகளுக்கு உதவும்போது டைபாய்டு (Typhoid) நோயால் பாதிக்கப்பட்டு, கி.பி. 1842ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 30ம் தேதி, வடமேற்கு இத்தாலியின் (Northwestern Italy) "பீட்மாண்ட்" (Piedmont) பிராந்தியத்திலுள்ள "சியரி" (Chieri) நகரில் மரித்தார்.

புனித ஜோசப் பெனடிக்ட் கொட்டலேங்கோவின் பங்கு ஆலயம் (The Parish of Saint Joseph Benedict Cottolengo), "டஸ்கனியின் மத்திய இத்தாலிய பிராந்தியமான" (Central Italian Region of Tuscany), "க்ரோசெட்டோ" (Grosseto) நகரில் அமைந்துள்ளது.

தூய ஐந்தாம் பத்திநாதர் (ஏப்ரல் 30)

இன்றைய புனிதர் : 
(30-04-2020) 

தூய ஐந்தாம் பத்திநாதர் (ஏப்ரல் 30)
நாம் வெற்றியாளர்களாக மாற அல்ல, நம்பிக்கைக்குரியவர்களாக வாழவே இறைவன் நம்மைப் படைத்துள்ளார்” (அன்னை தெரசா)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் ஐந்தாம் பத்திநாதர் எனப்படும் அந்தோனி மைக்கேல் 1504 ஆம் ஆண்டு, ஜனவரி திங்கள் 17 ஆம் நாள், இத்தாலியில் உள்ள போஸ்கோ என்னும் இடத்தில் வாழ்ந்து வந்த ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு சிறு வயதிலிருந்தே குருவாக மாறவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. எனவே இவர் தன்னுடைய பதினான்கு வயதில் டொமினிக்கன் சபையில் சேர்ந்து, அடுத்த பத்தாண்டுகளில் குருவாகவும், அதன்பின் வந்த ஆண்டுகளில் ஆயராகவும் கர்தினாலாகவும் 1566 ஆம் ஆண்டு, ஜனவரி 7 ஆம் நாள் திருத்தந்தையாகவும் மாறினார்.

அந்தோனி மைக்கேல் திருத்தந்தையாக உயர்ந்தபின் ஐந்தாம் பத்திநாதர் என்ற பெயரைத் தாங்கியவராய் திருச்சபைக்கு பல்வேறு பணிகளைச் செய்தார். குறிப்பாக 1545 லிருந்து 1563 வரை நடைபெற்ற திரிதெந்திய (Council of Trent) சபையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மிகத் துணிச்சலாக நடைமுறைப் படுத்தினார். அது மட்டுமல்லாமல் திருச்சபைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்துவந்த பிரிவினை சபைகளின் கோட்பாடுகளை மிகக் கடுமையாக எதிர்த்தார். இதனால் இவருக்குப் பயங்கர எதிர்ப்புகள் கிளம்பின. அவற்றையெல்லாம் இவர் கண்டுகொள்ளாமல், மிகத் துணிச்சலாக திருச்சபைக்காக உழைத்து வந்தார்.

திருத்தந்தை ஐந்தாம் பத்திநாதர் அவர்கள் நாடுகளிடையே ஒற்றுமை ஏற்படுவதற்கும் கடுமையாக உழைத்தார். குறிப்பாக இங்கிலாந்து அரசியான முதலாம் எலிசபெத்தை திருச்சபையோடு இணைப்பதற்கு அரும்பாடுபட்டார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. அது மட்டுமல்லாமல், ஐரோப்பா கண்டத்தில் இருந்த ஏனைய நாடுகளையும் திருச்சபையோடு இணைப்பதற்கு பாடுபட்டார் அதுவும் தோல்வியிலேதான் முடிந்தது. இப்படி பல்வேறு தோல்விகளை அவர் சந்தித்தாலும் திருச்சபைக்காக எதையும் செய்யத் துணிந்து வந்தார்.

1571 ஆம் ஆண்டு, அக்டோபர் 7 ஆம் நாள் துருக்கியப் படைகள் ஐரோப்பிய நாடுகள்மீது படையெடுத்து வந்தன. இதனை உணர்ந்த திருத்தந்தை அவர்கள் கிறிஸ்தவப் படைகள் அனைத்தையும் ஒன்று திரட்டி எதிரிகளை ஓட ஓட விரட்டியடித்து, கிறிஸ்தவ நாடுகளைக் காப்பாற்றினார். திருத்தந்தை அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தளவில் அவர் எப்போதும் டொமினிக்கன் சபையிலிருந்து கற்றுக்கொண்டு அனைத்துப் புண்ணியங்களையும் தன்னுடைய வாழ்வில் கடைப்பிடித்து வந்தார். இரவில் நீண்டநேரம் முழந்தாள் படியிட்டு ஜெபித்தார்; கடுமையான ஒறுத்தல் முயற்சிகளை மேற்கொண்டார்; ஏழை எளியவருக்கு தான தர்மங்களை நிறைய வழங்கினார்; நோயாளிகளைச் சந்தித்து ஆறுதல் படுத்தினார்.

இப்படி திருச்சபைக்காக பல்வேறு பணிகளைச் செய்துவந்த திருத்தந்தை ஐந்தாம் பத்திநாதர் 1572 ஆம் ஆண்டு, மே திங்கள் 1 ஆம் நாள் இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

திருத்தந்தை தூய ஐந்தாம் பத்திநாதருடைய நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. தோல்விகள் என்பவை வெறும் தோல்விகள் அல்ல, அவை வெற்றிக்கான படிக்கட்டுகள்

தூய ஐந்தாம் பத்திநாதருடைய வாழக்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்ற நம்முடைய மனதில் எழுகின்ற ஒரே சிந்தனை, வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற தோல்விகளை வெறும் தோல்விகளாக மட்டும் எடுத்துக்கொள்ளாமல், அவற்றை வெற்றிக்கான படிக்கட்டுகளாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதாகும்.

திருத்தந்தை அவர்கள் நாடுகளை ஒருங்கிணைப்பதிலும் அவர்களிடத்தில் ஒற்றுமையை ஏற்படுத்துவதிலும் பல தோல்விகளைச் சந்தித்தார். அந்தத் தோல்விகளை எல்லாம் கண்டு மனமுடைந்து போகாமல், தொடர்ந்து இயேசுவுக்காகவும் அவருடைய திருச்சபைக்காகவும் உழைத்துக் கொண்டே இருந்தார். அதனால்தான் கடைசியில் துருக்கியர்களுக்கு எதிரான போரில் வெற்றிகண்டார். நாமும் நம்முடைய வாழ்வில் சந்திக்கின்ற தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாமல், தொடர்ந்து போராடி வெற்றிபெறுவதுதான் சிறப்பான ஒரு காரியமாகும்.

இந்த இடத்தில் கவிஞர் வைரமுத்து அவர்கள் தோல்வியைக் குறித்து சொல்கின்ற கருத்துகளையும் சிந்தனைக்கு உட்படுத்திப் பார்ப்பது பொருத்தமானது “என்னுடைய பார்வையில் வெற்றி என்றும் தோல்வி என்றும் ஒன்று கிடையாது. இவை இரண்டுமே இரு வேறு சம்பவங்கள். வாழ்க்கை என்பது சம்பவங்களால் ஆனது. அவ்வளவுதான்”. தோல்வி என்பது ஒரு சம்பவம்தான், அதை நினைத்து வருந்துவதால் ஒன்றும் ஆகபோவதில்லை என்ற வைரமுத்துவின் வார்த்தைகள் கவனிக்கப்படவேண்டியவை.

ஆகவே, தூய ஐந்தாம் பத்திநாதருடைய நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று தொடர்ந்து இறைவனுக்காகவும் அவருடைய திருச்சபைக்காகவும் உழைப்போம். தோல்விகளைக் கண்டு துவளாமல், அவற்றிலிருந்து பாடம் கற்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

29 April 2020

தூய சியென்னா கத்ரீன் (ஏப்ரல் 29)

இன்றைய புனிதர்
(29-04-2020) 

தூய சியென்னா கத்ரீன் (ஏப்ரல் 29)
நிகழ்வு

தூய சியென்னா கத்ரீன் தனிமையாக இருந்து ஜெபித்தபோது சாத்தான் அவரை அதிகமாகச் சோதித்தது. அப்படிப்பட்ட தருணத்தில் ஒருநாள் அவர் இயேசுவிடம், “ஆண்டவரே! நான் பலவாறாக சோதனைக்கு உட்படும்போது நீர் எங்கே சென்றீர்?” என்று கேட்டார். அதற்கு ஆண்டவர் அவரிடம், “நீ சோதனைகளை வெற்றிகொள்ள என்னுடைய அருளைத் தந்து, உனக்குள்ளேதான் இருக்கிறேன்” என்றார். இதைக் கேட்ட அவர் மிகவும் மகிழ்ந்து போனார். ஆண்டவராகிய கடவுள் தனக்குள் இருப்பதை இத்தனை நாளும் உணராமல் இருந்துவிட்டோமே என்று வருந்தினார். அதன்பிறகு தனக்கு வந்த சோதனைகளைத் துணிவோடு எதிர்கொண்டு வெற்றிகொண்டார்.

வாழ்க்கை வரலாறு

கத்ரீன் 1347 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் நாள் இத்தாலியில் உள்ள சியென்னா நகரில் பிறந்தார். இவருடைய பெற்றோர் ஜாகோபா மற்றும் லாபோ பெமினிகாசா என்பவர் ஆவார். இவர் குடும்பத்தில் இவர் இருபத்து ஐந்தாவது குழந்தை, கடைக்குட்டி.

கத்ரீன் சிறுவயதிலிருந்தே கடவுள் மீது, அன்னை மரியாவின் மீது அதிகமான பக்திகொண்டு வாழ்ந்து வந்தார். அவர் ஒவ்வொருமுறையும் வீட்டு மாடிப்படியை ஏறி இறங்குகின்றபோது ‘அருள் நிறைந்த மரியே வாழ்க’ என்ற மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருப்பார். இவர் அதிக அழகோடு இருந்தார். இதனால் இவருடைய தாய் இவரை சிறுவதிலேயே ஒரு பணக்கார இளைஞனுக்கு மணமுடித்துக் கொடுக்க நினைத்தார். ஆனால் இவரோ, தான் யாரையும் மணக்கப் போவதில்லை, கிறிஸ்துவுக்கே தன்னை முழுமையாய் அர்ப்பணிக்கப் போவதாகவும் இருக்கிறேன் என்று சொல்லி, தன்னுடைய இலட்சியத்தில் மிக உறுதியாக இருந்தார். இவருடைய தாய் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாலும், இவருடைய தந்தை கத்ரீனுடைய முடிவுக்கு ஆதரவு அளித்தார். அதனால் இவர் வீட்டில் இருந்த ஓர் அறையில் தன்னை அடைத்துக்கொண்டு ஜெபத்திலும், தவத்திலும் தன்னுடைய வாழ்க்கையை முழுமையாய் செலவழித்தார்.

கத்ரீன் தனியாய் இருந்து ஜெபித்தபோது நிறைய காட்சிகளைக் கண்டார். அதில் ஒரு காட்சியில் மரியாவும் இயேசுவும் அவரைப் பார்க்க வந்தனர். இயேசு அவருடைய கைகளைப் பிடித்துக்கொண்டு, அவருக்கு மோதிரம் ஒன்றை பரிசாக அளித்துவிட்டுச் சென்றார். அது கத்ரீனுடைய கண்களுக்குத் தவிர வேறு யார் கண்களுக்கும் தெரியவில்லை. இவர் தனியாய் இருந்து ஜெபித்த தருணங்களில் நற்கருணையை மட்டுமே உணவாக உட்கொண்டு பல ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். இவருக்கு பதினெட்டு வயதை அடைந்தபோது டொமினிகன் மூன்றாம் சபையில் உறுப்பினராகச் சேர்ந்து தனி அறைக்குள் தன்னை அடைத்துக்கொண்டு வாழ்வதை விடுத்து, வெளியுலக வாழ்க்கையிலும் தன்னை ஈடுபடித்திக்கொள்ளத் தொடங்கினாள்.

இவர் வாழ்ந்த காலத்தில் திருச்சபையில் நிறைய குளறுபடிகள் நடந்துகொண்டிருந்தன. அதில் முக்கியமானது திருத்தந்தை பதினோறாம் கிரகோரியார் பிரான்சில் உள்ள அவின்ஞன் என்ற இடத்தில் வீட்டுச் சிறையில் அடைப்பட்டுக் கிடந்தார். கத்ரீன்தான் பெருமுயற்சி எடுத்து, அவரை உரோமைக்கு கொண்டு வந்தார். இவருக்குப் பிறகு திருத்தந்ததை ஆறாம் அற்பன் வந்தார். அவருக்கும் இவர் பேருதவியாக இருந்து வந்தார். அந்த காலகட்டத்தில் திருச்சபையை மேலும் உலுக்கிய நிகழ்வு இயேசு வாழ்ந்த புனித பூமியான பாலஸ்தீன் இஸ்லாமியரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. எனவே இவர் திருத்தந்தையை அணுகி, எதிரிகள் மீது போர்தொடுத்து புனித நாடுகளை மீட்டுத்தர கேட்டுக்கொண்டார். அதன்படி எதிரி நாட்டவர்மீது சிலுவைப் போர்கள் தொடக்கப்பட்டு, புனித நாடுகளை மீட்கும் பணி தொடங்கியது.

கத்ரீன் நாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்துவதில் வல்லவராக இருந்தார். குறிப்பாக அவர் சண்டை போட்டுக்கொண்டிருக்கும் நாடுகளுக்கு இடையே அமைதி பேச்சு வார்த்தை நடத்தி, சுமூகமான நிலை ஏற்பட பெரிதும் பாடுபட்டார். ஒருமுறை இவரி பிசா என்ற நகரில் இருந்த ஆலயத்தில் அமர்ந்து இறைவனிடம் ஜெபித்துக்கொண்டிருந்தபோது ஐந்து காய வரங்களைப் பெற்றார். இதனால் இவர் பெரிதும் அவஸ்தைப் பட்டார். ஆண்டவரிடம் இதை தன்னிடமிருந்து நீக்கிவிடுமாறு கேட்டார். ஆனால் ஆண்டவரோ ஐந்து காயங்களும் அவருக்கு இருக்குமாறு பணித்தார். இவர் ஜெப வாழ்விற்கு அதிக முக்கியத்துவம் தந்தார். இவருடைய Dialogue என்ற புத்தகம் மிகவும் பிரசித்து பெற்றது.

இப்படி பல்வேறு பணிகளை திருச்சபைக்கு செய்த கத்ரீன் 1382 ஆம் ஆண்டு ரோம் நகரில் இறையடி சேர்ந்தார். 1461 ஆம் ஆண்டு இவர் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டார். 1970 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த ஆறாம் சின்னப்பர் இவரை திருச்சபையின் மறைவல்லுனராக உயர்த்தினார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய சியென்னா நகர் கத்ரீனின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் இவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. நற்கருணை ஆண்டவரிடம் பக்தி

இவருடைய வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்க்கும்போது இவர் எந்தளவுக்கு நற்கருணை ஆண்டவரிடத்தில் ஆழமான, அசைக்க முடியாத பக்தி கொண்டு வாழ்ந்தார் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். இவர் நற்கருணையை மட்டுமே உணவாக உட்கொண்டு பல ஆண்டுகள் வாழ்ந்தார். ‘நற்கருணையை வாழ்வளிக்கும் உணவாகப் பார்த்தார். இவருடைய விழாவைக் கொண்டாடும் நாம் நற்கருணை ஆண்டவரின் ஆழமான பக்திகொண்டு வாழ்கிறோமா? அவரை நம்முடைய வாழ்வில் உணர்கிறோமா? என்று சிந்தித்துப் பார்ப்போம்.

யோவான் நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு, இவ்வுணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார்” (யோவான் 6: 51). இயேசுவின் இவ்வார்த்தைகளில் உள்ள அர்த்தத்தை, வாழ்வளிக்கும் உணவாகிய நற்கருணை ஆண்டவரின் பிரசன்னத்தை நம்முடைய வாழ்வில் உணர்ந்திருக்கிறோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

1880 களில் ஓர் ஏழை குடும்பம் கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்து, பிரான்சு நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு செல்லும் ஒரு சொகுசுக் கப்பலில் பயணம் செய்யத் தீர்மானித்தது. அவர்கள் இந்த கப்பல் பயணத்திற்காக தங்களிடமிருந்த எல்லாவற்றையும் செலவு செய்திருந்தார்கள். செலவுக்கு என்று சிறிதளவே அவர்களிடத்தில் பணம் இருந்தது. அதனால் நீண்டநாட்கள் இருக்கும் கப்பல் பயணத்திற்கு என்று கப்பலில் வழங்கப்படும் உணவை வாங்கி உண்டால், அதிக செலவாகும் என்று நினைத்து, தங்களுடைய வீட்டிலிருந்து கொண்டுவந்த ரொட்டித் துண்டையே உண்டு வந்தார்கள். இதைக் கவனித்து வந்த அந்தக் கப்பலில் பயணம் செய்துவந்த சக பயணி ஒருவர், “எதற்காக இந்த ரொட்டித் துண்டை உண்டு வருகிறீர்கள். கப்பலில் வழங்கப்படும் உணவை உண்ணலாமே?” என்றார். அதற்கு அவர்கள், “இங்கே வழங்கப்படும் உணவு விலை அதிகமாக இருக்கம் அல்லவா, அதனால்தான் எங்களுடைய வீட்டிலிருந்து கொண்டு வந்த உணவை உண்கிறோம்” என்றார்கள். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட அந்த சக பயணி, “பயணத்திற்காக நீங்கள் செலுத்திய தொகையிலேயே உணவுக்காக பணமும் அடங்கியிருக்கிறது” என்றார். இதைக் கேட்டு அவர்கள் தங்களுடைய விதியை நொந்துகொண்டார்கள்.

கப்பலில் வழங்கப்படும் உணவு இலவசமாகத்தான் வழங்கப்படுகிறது என்ற உண்மை கூடத் தெரியாமல் இருந்த அந்த குடும்பத்தாரைப் போன்று, நாமும் இலவசமாக இறைவனின் அருளைத் தரும் நற்கருணைப் பிரசன்னத்தை நம்முடைய வாழ்க்கையில் உணராதவர்களாக இருக்கின்றோம். ஆகவே, தூய கத்ரீனைப் போன்று நற்கருணை ஆண்டவரின் பிரசன்னத்தை உணர்ந்தவர்களாக வாழ்வோம். அதனால் நாம் திடம்பெற்ற மக்களாய் வாழ்வோம்.

2. அமைதியின் தூதுவர்களாய் வாழவேண்டும்

தூய சியென்னா நகர் கத்ரீன் நாடுகளுக்கு இடையேயும், திருச்சபையிலும் அமைதியை ஏற்படுத்துவதற்கு மிகப்பெரிய காரணியாக இருந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. இவருடைய முயற்சியாலேயே பல்வேறு பிரச்சனைகள் முடிவுக்கு வந்தன. இவ்வாறு அவர் அமைதியின் தூதுவனாய் இந்த மண்ணுலகில் விளங்கினார். மலைப்பொழிவில் ஆண்டவர் இயேசு கூறுவார், “அமைதியை ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவார்கள்” (மத் 5:9). நாம் இயேசு காட்டும் வழியில், தூய கத்ரீன் அவர்களது வழியில் நடக்கின்றோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

மேலை நாட்டில் வாழ்ந்த மிகச் சிறந்த இசையமைப்பாளர் பாப்லோ காசல் என்பவர் ஆவார். இவர் அடிக்கடி சொல்லக்கூடிய செய்தி, “நான் அமைக்கும் இசை கோர்பு, பாடல்கள் அனைத்தும் இந்த உலகத்தில் அமைதியை ஏற்படுத்தவே. என் இசையைக் கேட்போரது இதயத்தில் ஒருவிதமான அமைதி பரவும். அந்த அமைதியே நான் இந்த உலகிற்கு கொடுக்க நினைத்தது”. பாம்லோ காசல் இந்த உலகத்தில் அமைதியை ஏற்படுத்த எடுத்த முயற்சி வித்தியாசமானதாக இருக்கலாம். ஆனாலும் அது சிறப்பான முயற்சியாகும். நாமும் நம்மாலான முயற்சிகளை மேற்கொண்டு இந்த உலகில் அமைதியை ஏற்படுத்த முயலவேண்டும்.

ஆகவே, தூய சியென்னா கத்ரீனின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் நாமும் அவரைப் போன்று நற்கருணை ஆண்டவரிடத்தில் அதிக பக்தி கொண்டு வாழ்வோம். இந்த உலகில் அமைதியை ஏற்படுத்தும் கருவிகளாவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

† இன்றைய புனிதர் †
(ஏப்ரல் 29)

✠ புனிதர் கேதரின் ✠
(St. Catherine of Siena)
கன்னியர், மறைவல்லுநர்:
(Virgin, Doctor of Church)

பிறப்பு: மார்ச் 25, 1347
சியென்னா, சியென்னா குடியரசு
(Siena, Republic of Siena)

இறப்பு: ஏப்ரல் 29, 1380 (வயது 33)
ரோம் நகரம், திருத்தந்தையர் மாநிலம்
(Rome, Papal States)

ஏற்கும் சமயம்: 
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)
லூதரனிய திருச்சபை
(Lutheranism)

புனிதர் பட்டம்: ஜூன் 29, 1461
திருத்தந்தை இரண்டாம் பயஸ்
(Pope Pius II)

முக்கிய திருத்தலம்:
புனித மரியா சோப்ரா மினெர்வா, ரோம் மற்றும் புனித கேதரின் பேராலயம், சியென்னா
(Santa Maria sopra Minerva, Rome and Shrine of Saint Catherine, Siena)

நினைவுத் திருவிழா: ஏப்ரல் 29

சித்தரிக்கப்படும் வகை: 
டோமினிக்கன் சபையினரின் ஆடை, லில்லி மலர், புத்தகம், சிலுவை, இதயம், முள் முடி, ஐந்து காயம், மோதிரம், புறா, ரோஜா, மண்டை ஓடு

பாதுகாவல்: 
பென்சில்வேனியா (Pennsylvania), ஐக்கிய அமெரிக்கா (USA), ஐரோப்பா (Europe), தீ விபத்துக்கெதிராக, இத்தாலி (Italy), கருச்சிதைவுகள், “அல்லன்டவுன் மறைமாவட்டம்” (Diocese of Allentown), தம் நம்பிக்கைக்காக அவதியுறும் மக்கள், செவிலியர், பாலியல் சோதனையுறுவோர், நோயுற்றவர்களுக்கு.

சியன்னா நகர புனிதர் கேதரின் ஒரு டோமினிக்கன் மூன்றாம் சபையின் உறுப்பினரும், இறையியலாளரும், மெய்யியலாளரும் ஆவார். இவர் அவிஞ்ஞோன் (Avignon) நகரில் தங்கியிருந்த திருத்தந்தை பதினொன்றாம் கிரகோரி (Pope Gregory XI) ரோம் நகருக்குத் திரும்பிச் செல்ல மிக முக்கிய காரணியாய் இருந்தார். 1970ம் ஆண்டு, இவர் கத்தோலிக்க திருச்சபையின் மறைவல்லுநராக அறிவிக்கப்பட்டார். அசிசியின் புனிதர் ஃபிரான்சிஸ் (St. Francis of Assisi) அவர்களுடன் இணைந்து இவரும் இத்தாலியின் பாதுகாவலராக கருதப்படுகின்றார்.

வாழ்க்கைக் குறிப்பு:
"கேதரீனா டி ஜியாகோமோ டி பெனின்கசா" (Caterina di Giacomo di Benincasa) எனும் இயற்பெயர் கொண்ட இவர், இத்தாலியில் உள்ள சியென்னா என்னும் ஊரில், "கியாகோமோ டி பெனின்கசா" (Giacomo di Benincasa) மற்றும் "லாப்பா பியகென்டி" (Lapa Piagenti) ஆகிய பெற்றோருக்கு பிறந்தவர். இவர் பிறந்த வருடமான கி.பி. 1347ம் ஆண்டு, கறுப்பு மரணங்களால் இத்தாலியின் சியென்னா மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது.

கேதரினுடையகு ஐந்து அல்லது ஆறு வயதின்போது கிறிஸ்து இயேசுவின் முதல் திருக்காட்சி கிடைக்கப்பெற்றார். அதில் இயேசு நாதருடன் அப்போஸ்தலர்கள் பேதுரு, பவுல் மற்றும் யோவான் ஆகியோரும் இருந்ததாகவும், இறைவன் தன்னை ஆசிர்வதித்தார் எனவும், இக்காட்சியின் முடிவில் தாம் பரவச நிலையை அடைந்ததாகவும் கூறியுள்ளார். ஏழு வயதில் இவர் கற்பு வார்த்தைப்பாட்டை அளித்தார்.

இவரின் மூத்த சகோதரியின் மறைவுக்கு பின்னர், மூத்த சகோதரியின் கணவரை மணக்க இவரின் பெற்றோர், இவரை கட்டாயப்படுத்தினர். இதனால் தன் பெற்றோர் மனம் மாறும்வரை உண்ணா நோன்பிருந்தார். அப்போது தன் அழகை குறைக்க தன் நீண்ட கூந்தலை வெட்டினார். புனித தோமினிக் அவரின் கனவில் தோன்றி அவரைத் தேற்றினார்.

கேதரின், தொமினிக்கன் சபையில் சேர்ந்தார். இதனை அச்சபை உறுப்பினர்கள் பலர் எதிர்த்தனர். ஏனெனில் அதுவரை விதவைகள் மட்டுமே அச்சபையில் சேர அனுமதி இருந்தது.

கி.பி. 1366ம் ஆண்டு, அவருக்கு கிடைத்த பரவச நிலையில் இயேசு தன்னை ஆன்மீக முறையில் மணந்து கொண்டதாக இவர் நம்பினார். அப்போது கிறிஸ்து இவரை, மறைந்த வாழ்வினை விடுத்து, பொது வாழ்க்கைக்கு போக சொன்னதாக இவர் தன் ஆன்மீக வழிகாட்டியிடம் கூறியுள்ளார். இவர் நோயுற்றோருக்கு உதவினார். இவரின் தொண்டு உள்ளம் சிலரைக் கவர்ந்ததால், மேலும் சிலரும் தொண்டு புரிவதில் இவரோடு இணைந்தனர். இதனால் கி.பி. 1374ம் ஆண்டு, தொமினிக்கன் சபைத் தலைவர்களால் ஃபிளாரன்ஸ் (Florence) நகரில் தப்பறைக் கொள்கைகளுக்காக விசாரிக்கப்பட்டு, குற்றமற்றவராக அறிவிக்கப்பட்டார். இதன் பின் வடக்கு மற்றும் மத்திய இத்தாலியில் பயணம் செய்து, கடவுளை அன்பு செய்து புரட்சி படைக்க மக்களை ஊக்குவித்தார்.

கி.பி. 1370ம் ஆண்டின் முன் பகுதில் அவர் பலருக்கு கடிதம் எழுதினார். இக்கடிதங்களினால் இத்தாலியின் பெருங்குடியினர் மத்தியில் அமைதி பிறக்க அரும்பாடுபட்டார். இவர் திருத்தந்தை பதினொன்றாம் கிரகோரியுடன் மிக நீண்ட கடித தொடர்பு வைத்திருந்தார். அதில் அவர் திருத்தந்தை நாடுகளின் மேலாளர்களையும், குருக்களையும் கண்டித்து வழிநடத்த அறிவுறுத்தினார்.

கி.பி. 1376 ம் ஆண்டு, ஜூன் மாதம், இவர் தாமாகவே முன்வந்து திருத்தந்தை நாடுகளில் அமைதி கொணர முயன்றார். அது பயன் அளிக்காததால், திருத்தந்தை பதினொன்றாம் கிரகோரியை மீண்டும் அவிஞ்ஞோனிலிருந்து ரோமுக்கு கி.பி. 1377ம் ஆண்டு, ஜனவரி மாதம், திரும்பி வரச் செய்தார். இத்திருத்தந்தையின் மறைவுக்குப் பின், யாரைத் திருத்தந்தையாக ஏற்பது என்பது குறித்து மேற்கு திருச்சபையில் பிளவு ஏற்பட்டது ("பெரும் பிளவு" அல்லது Western Schism of 1378). அப்போது இவர் திருத்தந்தை ஆறாம் அர்பனுக்கு (Pope Urban VI) துணை புரிய ரோம் நகரில் சென்று தங்கினார். அங்கேயே சாகும் வரை இருந்தார். இந்தப் பெரும் பிளவினால் ஏற்பட்ட துன்பங்களினால் அவர் சாகும் வரை வாடினார்.

புனித கேதரினின் கடிதங்கள் ஆரம்பகால டஸ்கான் இலக்கியத்தின் சிறந்த படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இக்கடிதங்களுல் 300 கிடைத்துள்ளன. திருத்தந்தைக்கான தனது கடிதங்களில், அவர் அடிக்கடி அவரை 'Papa' (இத்தாலிய மொழியில் "திருத்தந்தை") என்று அன்பாக குறிப்பிடுகின்றார். ஆன்ம குருக்கள், கபுவாவின் ரேமண்ட், ஃபிரான்ஸ் மற்றும் ஹங்கேரி அரசர்கள், கூலிப்படையினனான ஜான் ஹாக்வுட், நேபிள்ஸ் ராணி, மிலனின் விஸ்கோன்தி (Visconti) குடும்ப உறுப்பினர்கள், மற்றும் பலருக்கு இக்கடிதங்கள் எழுதப்பட்டன. அவரது கடிதங்கள் சுமார் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு எழுதப்பட்டது.

இவரின் "The Dialogue of Divine Providence" என்னும் நூல், கி.பி. 1377 - 1378 காலகட்டத்தில் இவர் சொல்லச் சொல்ல எழுதப்பட்டதாகும். பெரும்பாலும் படிப்பறிவில்லாதவராக கருதப்பட்டாலும், லத்தீன் மற்றும் இத்தாலிய மொழிகளை படிக்கும் திறன் இருந்ததாக அவரின் ஆன்ம குரு ரேமண்ட் கூறியுள்ளார், அவரது எழுத்துக்கள் பெரும்பாலும் மற்றவரால் சொல்லச் சொல்ல எழுதப்பட்டது என்றாலும் அவருக்கு எழுதத் தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இறப்பு:
புனிதர் கேதரின் முப்பத்திமூன்று வயதில் ரோம் நகரின் வசந்த காலத்தில், கி.பி. 1380ம் ஆண்டு மரித்தார். “தந்தையே, உம் கைகளில் என் உயிரையும் ஆவியையும் ஒப்படைக்கிறேன்” (Father, into Your Hands I commend my soul and my spirit) என்பதே அவருடைய இறுதி வார்த்தைகளாகும்.

கேதரின் உணவு குறைவாகவே உண்டார். அதற்கு பதிலாக அவர் தினசரி நற்கருணை பெற்றார். இதனால் குருக்கள் மற்றும் அவரது சொந்த சபை சகோதரிகள் கண்களிலும் ஆரோக்கியமற்று தோற்றமளித்தார். இவரின் ஆன்ம குரு, ரேமண்டு, இவரை சரியான உணவு உண்ண அறிவுறுத்தியபோது, தன்னால் உண்ண முடியவில்லை எனவும், அவ்வாறு உண்டால் கடுமையான வயிற்று வலியால் அவதியுறுவதாகவும் கூறினார் என்பர்.

மினெர்வா மேல் புனித மரியா கோவிலின் அருகில் உள்ள கல்லறையில் இவர் அடக்கம் செய்யப்பட்டார். அங்கே பல புதுமைகள் நிகழ்ந்ததாக மக்கள் கூறியதால் இவரின் உடல் கோயிலினுள் அடக்கம் செய்யப்பட்டது. இவரின் தலை, உடலிலிருந்து பிரித்து எடுக்கப்பட்டு சியன்னா நகரில் உள்ள தொமினிக்கன் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.

கி.பி. 1940ம் ஆண்டு, மே மாதம், ஐந்தாம் நாளன்று, திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ், புனிதர் அசிசியின் ஃபிரான்சிஸ் அவர்களுடன் சேர்த்து இவரையும் இத்தாலியின் பாதுகாவலராக அறிவித்தார். திருத்தந்தை ஆறாம் பவுல், 1970ம் ஆண்டு, இவரை மறைவல்லுநராக அறிவித்தார். அவிலாவின் புனித தெரேசாவுக்கு அடுத்தபடியாக ஒரு பெண் இப்பட்டத்தை பெறுவது இதுவே முதன் முறை. 1999ம் ஆண்டு, திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் இவரை ஐரோப்பிய நாடுகளின் பாதுகாவலராக அறிவித்தார்.

கேதரின் பசியற்ற நோயால் (Anorexia mirabilis) அவதிப்பட்டார் என்பர். இருப்பினும் இவர் தனது ஆன்மீக எழுத்துக்களுக்காகவும், அதிகாரம் உடையவர்களிடம் பணிந்து செல்லாமல் உண்மையை பேசியதற்காகவும் பெரிதும் மதிக்கப்படுகின்றார். இவரின் காலத்தில் இத்தகைய துணிச்சலோடு, ஒரு பெண் இருப்பது விதிவிலக்காகும். இதுவே இவர் அரசியல் மற்றும் உலக வரலாறு போன்றவற்றில் செல்வாக்கு செலுத்த முக்கிய காரணமாக இருந்தது.
Saint of the Day : (29-04-2020)

St. Catherine of Siena

She was born on March 25, 1347 in Siena, Italy. Her parents were Giacomo di Benincasa and Lapa Piagenti. Her mother gave birth to twin daughters when she was 40 years old named Catherine and Giovanna. Giovanna died early. It is reported that Catherine had her first vision of Jesus Christ when she was five years old, when Jesus smiled at her, blessed her and left her in ecstasy. She vowed chastity when she was seven years old. When her elder sister Bonaventura died at child birth, Catherine’s parents wanted Catherine to marry the widower of her elder sister. But she refused to do so and lived a secluded life of penance and constant prayer. On seeing the position of Catherine, her parents gave up the idea of her marriage. She then joined as a tertiary of the Third Order of Saint Dominic, wearing black and white habit. In about the year 1366 she experienced a mystical marriage with Jesus as per her biography written by Raymond of Capua. She also received stigmata in the year 1375 and received communion from Jesus himself. But the stigmata were visible only on her death. She took care of poor and sick people in homes and hospitals. When the popes were residing in Avignon instead of Rome due to the western schism, she personally met pope Gregory-XI at Avignon and convinced him to return to Rome, which the pope did in January 1377. She was illiterate and so she only dictated all his letters to religious people including the pope. She died on April 29, 1380 in Rome at 33 years of age. When the people of Siena wanted to take her head to Siena from Rome, they smuggled her head in a bag praying always to Catherine herself, to escape detection by guards. But the guards asked the person with the bag containing the head of Catherine to open the bag. But when the bag was opened, the bag was found to contain only rose petals and the guards could not see the head of Catherine. After reaching Siena, when they opened the bag, Catherine’s head was there. The head was inserted in a gilt bust of bronze and was taken around the city of Siena and the mother of Catherine walked behind the bust. Catherine was canonized by pope Pius-II in the year 1461. She was declared as the Doctor of the Church in 1970 by pope Paul-VI along with St. Teresa of Avila.

St. Catherine is the patron saint of Nurses and Fire-fighters. She is also invoked against fire, bodily ills, sexual temptation and sickness.

---JDH---Jesus the Divine Healer---

28 April 2020

புனிதர் கியேன்னா பெரேட்டா மொல்லா April 28

† இன்றைய புனிதர் †
(ஏப்ரல் 28)

✠ புனிதர் கியேன்னா பெரேட்டா மொல்லா ✠
(St. Gianna Beretta Molla)
மனைவி, தாய், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், கருக்கலைப்பு மற்றும் கருணைக் கொலை ஆகியவற்றுக்கு எதிரானவர், பொதுநிலைப் பெண்மணி
(Wife, Mother, Pediatrician, Pro-life Witness and Laywoman)

பிறப்பு: அக்டோபர் 4, 1922
மெஜந்தா, இத்தாலி அரசு
(Magenta, Kingdom of Italy)

இறப்பு: ஏப்ரல் 28, 1962 (வயது 39)
மோன்ஸா, இத்தாலி
(Monza, Italy)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: ஏப்ரல் 24, 1994
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

புனிதர் பட்டம்: மே 16, 2004
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

நினைவுத் திருநாள்: ஏப்ரல் 28

பாதுகாவல்:
மெஜந்தா (Magenta)
தாய்மார்கள் (Mothers)
மருத்துவர்கள் (Physicians)
மனைவிகள் (Wives)
குடும்பங்கள் (Families)
பிறக்காத குழந்தைகள் (Unborn Children)
குடும்பங்களின் உலகக் கூட்டம் 2015 (இணை-பாதுகாவலர்) (World Meeting of Families 2015 (Co-Patron)

புனிதர் கியேன்னா பெரேட்டா மொல்லா, இத்தாலிய ரோமன் கத்தோலிக்க சிறுவர் நல சிறப்பு மருத்துவர் (Italian Roman Catholic pediatrician) ஆவார். தமது நான்காவது குழந்தையை கருத்தாங்கியிருந்த காலத்தில், அதனை கருக்கலைப்பு (Abortion) செய்யவும், தமது கருப்பையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றவும் (Hysterectomy) மறுத்துவிட்டார். இதன் காரணத்தால், பின்னர் தமக்கு மரணம் நேரிடும் என்று நன்கு அறிந்திருந்தும் அவர் அதனை மறுத்துவிட்டார்.

மொல்லாவின் மருத்துவ சேவை வாழ்க்கை, திருச்சபையின் படிப்பினைகளுடன் இணைந்து கைகோர்த்திருந்தது. அது தேவைப்படும் பிறரின் உதவிக்கு வரும் சமயத்தில் அவரது மனசாட்சியைப் பின்பற்றுவதற்கான தனது உறுதியை பலப்படுத்தியது. தமது உயிருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தினையும் நினையாமல், தாம் கருக்கொண்ட மகவின் உயிரை காக்கவேண்டும் என இவர் எடுத்த முடிவால், இவரது மனசாட்சியும் இலட்சியமும் தீவிரமாக வெளிப்பட்டது. இவர், வயது முதிர்ந்த மக்களிடையே தர்மசிந்தையுள்ள நற்பணிகளில் தம்மை அர்ப்பணித்திருந்தார். மேலும், கத்தோலிக்க செயல்பாடுகளிலும் தம்மை ஈடுபடுத்தியிருந்தார். அவர் தூய “வின்சென்ட் டி பவுல் குழு” (St. Vincent de Paul group) மூலமாக, உள்ளூரிலுள்ள ஏழைகளுக்கும் அதிர்ஷ்டமற்ற மக்களுக்கும் உதவினார். இக்குழு, கத்தோலிக்க திருச்சபையின் ஒரு சர்வதேச தன்னார்வ அமைப்பு ஆகும். இது, ஏழைகளின் தனிப்பட்ட சேவையின் மூலம் அதன் உறுப்பினர்கள் பரிசுத்தப்படுத்தப்படுவதற்காக 1833ம் ஆண்டு நிறுவப்பட்டதாகும்.

1994ம் ஆண்டு, முக்திபேறு பட்டமளிக்கப்பட்ட இவருக்கு, பத்து வருடங்கள் கழித்து, 2004ம் ஆண்டின் மத்தியில், "தூய பேதுரு சதுக்கத்தில்," (Saint Peter's Square) திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் (Pope John Paul II) அவர்களால் புனிதராக அருட்பொழிவு செய்விக்கப்பட்டார். 

1922ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 4ம் தேதி, இத்தாலி அரசின் அஜெந்தா (Magenta) நகரில் பிறந்த கியேன்னா பெரேட்டா மொல்லா, தமது பெற்றோருக்குப் பிறந்த பதின்மூன்று குழந்தைகளில் பத்தாவது குழந்தை ஆவார். இவரது தந்தையான "அல்பெர்ட்டோ பெரேட்டா" (Alberto Beretta), மற்றும் தாயாரான "மரியா டி மிச்சேலி" (Maria de Micheli) இருவரும், "தூய ஃபிரான்சிசின் மூன்றாம் நிலை சபையின்" (Third Order of Saint Francis) உறுப்பினர்கள் ஆவர். இவரது சகோதரர்களில் அநேகரும், குடும்பத்தினர் பலரும் கத்தோலிக்க மறைப்பணியாளர்களாவர். இதன் காரணமாக, இவரும் கத்தோலிக்க பின்புலம் கொண்டவராவார்.

இவருக்கு மூன்று வயதாகையில் இவரது குடும்பம் வடக்கு இத்தாலியிலுள்ள “லொம்பார்டி” (Lombardy) மாகாணத்திலுள்ள “பெர்கமோ” (Bergamo) நகருக்கு புலம்பெயர்ந்து சென்றது. அங்கேயே இவர் வளர்ந்தார். புதுநன்மை மற்றும் உறுதிப்பூசுதல் உள்ளிட்ட அருட்சாதனங்கள் இவருக்கு பெர்கமோ ஆலயத்திலேயே (Bergamo Cathedral) தரப்பட்டது. இவருக்கு பதினைந்து வயதாகையில், இவரது சகோதரியான “அமலியா” (Amalia) மரணமடைந்ததால், இவர்களது குடும்பம் மீண்டும் புலம்பெயர்ந்து, இத்தாலியின் “லிகுரியா” (Liguria) மாகாணத்தின் தலைநகரான ஜெனோவா (Genoa) சென்று, “குயின்டோ அல் மேர்” (Quinto al Mare) எனும் குடியிருப்பில் குடியேறியது. அங்கேயே கியேன்னா தமது கல்வியை தொடர்ந்தார். மற்றும், தமது தூய பேதுரு பங்கின் (Parish of Saint Peter) நடவடிக்கைகளில் இவர் முழு ஈடுபாடு கொண்டிருந்தார்.

1941ம் ஆண்டு, “பெர்கமோவின்” (Bergamo) “சேன் விஜிலோ” (San Vigilio) நகரிலுள்ள தமது தாத்தா – பாட்டியுடன் வாழ்வதற்காக கியேன்னா சென்றார். 1942ம் ஆண்டு, “மிலன்” (Milan) நகரில் தமது மருத்துவ கல்வியை தொடங்கினார். தமது மருத்துவ கல்வியல்லாது, இத்தாலியின் “அஸியோன் கடோலிக்கா” (Azione Cattolica movement) எனப்படும் கத்தோலிக்க செயல்பாடுகளிலும் முழு வீச்சில் ஈடுபட்டிருந்தார். 1949ம் ஆண்டு, “பவியா பல்கலையில்” (University of Pavia) மருத்துவ பட்டம் வென்ற இவர், 1950ம் ஆண்டு, “குழந்தைகள் மருத்துவ அறிவியலில்” (Pediatrics) சிறப்பு பட்டம் வென்றார். பிரேசில் நாட்டில் மறைப்பணியில் (Brazilian missions) இருந்த கத்தோலிக்க குருவான தமது சகோதரரிடமே சென்று, அங்கேயுள்ள ஏழைப் பெண்களுக்கு “மகளிர் நோய் மருத்துவ இயல்” (Gynecological Services) சேவை புரிய எண்ணினார். இருப்பினும் அவரது நீண்டகால உடல்நலக் குறைபாடு காரணமாக, இது ஒரு நடைமுறை சாத்தியமற்ற கனவாகிப்போனது. ஆனாலும் அவர் தமது பணியைத் தொடர்ந்தார். 1952ம் ஆண்டு ஜூலை மாதம் முதல், “மிலன் பல்கலையில்” (University of Milan) குழந்தைகள் நல சிறப்பு மருத்துவராக பணியாற்றத் தொடங்கினார்.

1954ம் ஆண்டு டிசம்பர் மாதம், ஒரு பொறியாளரான “பியெட்ரோ மொல்லா” (Pietro Molla) என்பவரை கியேன்னா பெரேட்டா சந்தித்தார். 1955ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 11ம் நாளன்று, இருவருக்கும் திருமண நிச்சயம் நடந்தது. அதே வருடம் செப்டம்பர் மாதம், மெஜந்தா நகரிலுள்ள “சேன் மார்ட்டினோ” (Basilica di San Martino in Magenta) ஆலயத்தில் இருவரதும் திருமணம் நடந்தது. இத்தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன.

1961ம் ஆண்டு, அவரது நான்காவது - கடைசி குழந்தை கர்ப்பத்திலிருந்த இரண்டாவது மாதம், அவரது கர்ப்பப்பையில் “ஃபைப்ரோமா” (Fibroma) எனப்படும் கட்டி உருவானது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு மூன்று தேர்வுகளை அளித்தனர். முதலாவது, கருக்கலைப்பு. இரண்டாவது, அவரது கர்ப்பப்பையை அறுவை மூலம் நீக்குதல். மூன்றாவதும், வளர்ந்திருந்த கட்டியை அறுவை மூலம் நீக்குதல். திருச்சபை எல்லா நேரடி கருக்கலைப்புக்கும் தடையாக இருந்தது. ஆனால் இரட்டை விளைவு கொள்கையில் போதனைகள் அவருக்கு கருப்பை நீக்கம் செய்ய அனுமதித்தது. ஆனால், அதிலும் அவரது பிறக்காத குழந்தை மரித்துப்போகும். ஆகையால் குழந்தையின் உயிரை காப்பாற்ற விரும்பிய பெரேட்டா, இவற்றை மறுத்தார். தமது கர்ப்பப்பையில் இருந்த கட்டியை மட்டும் அகற்ற சம்மதம் தெரிவித்தார். தமது உயிரைவிட குழந்தையின் உயிர் மிகவும் முக்கியமானது என்று அவர் மருத்துவர்களிடம் தெரிவித்தார்.

1962ம் வருடம், ஏப்ரல் மாதம், 21ம் தேதி, புனித சனிக்கிழமையன்று (Holy Saturday), மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே, அறுவை சிகிச்சை (Caesarean) மூலம் அவரது பெண் குழந்தை ”ஜியன்னா இமானுவேலா’வை” (Gianna Emanuela) பிரசவித்தார். தொடர்ந்த வலியால் அவஸ்தையுற்ற பெரேட்டா, வயிற்றின் உட்பாகங்கள் நச்சுத் தன்மை (Septic Peritonitis) அடைந்ததால் பிரசவித்த ஒரு வாரம் கழித்து, ஏப்ரல் மாதம் 28ம் தேதி, காலை எட்டு மணியளவில் மரித்துப்போனார். அவரது பெண் குழந்தையான “ஜியன்னா இமானுவேலா” இன்னமும் வாழ்ந்து வருகிறது. அவர், தற்போது “முதியோர் நல சிறப்பு மருத்துவராக” (Geriatrics) சேவை செய்கிறார்.

அவரது கணவர் 1971ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், தனது மனைவியின் வாழ்க்கையை பற்றிய ஒரு வாழ்க்கை வரலாற்றை எழுதி, அதனை தனது குழந்தைகளுக்கு அர்ப்பணித்தார். அவர், அடிக்கடி தமது மகள் ஜியன்னா இமானுவேலாவிடம், “அவரது அம்மாவின் தேர்வு, ஒரு தாய் மற்றும் ஒரு மருத்துவர் ஆகியோரின் மனசாட்சியாக இருந்தது” என்பார்.

புனித பீட்டர் ஷானல்(Peter Chanel)குரு, மறைசாட்சி April 28

இன்றைய புனிதர்
2020-04-28
புனித பீட்டர் ஷானல்(Peter Chanel)
குரு, மறைசாட்சி
பிறப்பு
1803
குவேட்(Cuet), பிரான்ஸ்
இறப்பு
1841
புத்துனா தீவு(Island of Futuna)
புனிதர் பட்டம்: 13 ஜூன் 1954
திருத்தந்தை பனிரெண்டாம் பயஸ்

பீட்டர் ஷானல் தன் பிறந்த ஊரில், சிறுவயதிலேயே புதுநன்மை வாங்கினார். அன்றிலிருந்தே மறைபரப்புப் பணியில் ஈடுபட்டார். ஆனால் இவர் தொடர்ந்து கல்வி கற்க வேண்டுமென்பதால் மறைபரப்புப் பணியை விடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் மரியன்னையிடம் இடைவிடாமல் செபித்தார். இதன் பயனாக கல்வியைக் கற்றுக்கொண்டே, மறைபரப்புப் பணியில் ஈடுபட்டார். பின்னர் தம் 16 ஆம் வயதில் குருமடத்தில் சேர்ந்து குருவானார். அதன்பிறகு நான்காம் ஆண்டுகள் கழித்து "மேரிஸ்ட் குருக்கள் துறவற சபையில் சேர்ந்தார். பின்னர் 1837 ஆம் ஆண்டு தனது 34 ஆம் வயதில் தம் சபைத்தோழர் ஒருவருடன் ஒசினியாத் தீவுக்கு மறைபரப்பு பணிக்காக புறப்பட்டுஸ் சென்றார். அப்போது பசிபிக் பெருங்கடலை ஒட்டிய புத்தினா தீவை அடைந்தார். அங்கு தட்பவெப்ப நிலையினால் மிகவும் கஷ்டப்பட்டார். கடுமையான வெயிலால் சுட்டெரிக்கப்பட்டார். உணவின்றி பட்டினியால் தவித்தார். மறைபரப்பு பணியை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது, தன் உடலில் வலுவிழந்தவராக காணப்பட்டார். இருப்பினும் தன் பணியை மகிழ்ச்சியோடு செய்தார். மக்களுக்கு போதிப்பது சிரமமாக இருந்தபோதிலும் ஒரு சிலரையேனும் மனந்திருப்பி கிறிஸ்துவின் பாதையில் சேர்த்தார். இதனால் நம்பிக்கையின் மீது வெறுப்புக்கொண்ட கொலைகாரர்களால் மிகவும் மோசமாக வதைக்கப்பட்டார். ஆனால் இவர்களின் மேல் சிறுதுளிகூட வெறுப்பு காட்டாமல் அவர்களையும் அன்பு செய்தார் பீட்டர் ஷானல். இதனை அறிந்து, இவரின் பாசத்தை சுவைத்த புத்தினா தீவினர் இவரை "உயர்ந்த உள்ளம் கொண்ட பீட்டர்" என்றே அழைத்தனர். இவர் மறையுரை ஆற்றும் போது "விதைப்பவன் ஒருவன், அறுப்பவன் ஒருவன்" என்பதை அடிக்கடி கூறுவார். மரியன்னை பக்தியில் சிறந்து விளங்கிய இவர், மரியன்னையின் முன் பல மணிநேரம் மண்டியிட்டு செபிப்பார்.

அப்போது புத்துனாதீவை ஆட்சி செய்த அரசனின் மகன் அருட்தந்தையிடம் அதிகம் பாசமாக இருந்தான். இதனால் தானும் ஞானஸ்நானம் பெற விரும்பினான். இதனால் கோபமுற்ற தீவின் அரசன், தன் படையாட்களை அனுப்பி பீட்டர் ஷானலை கொடுமையாக கொல்லக்கூறினான். அதனால் அக்கொடிய மனிதமிருகங்கள் அருட்தந்தை பீட்டர் ஷானலை 1842 ஆம் ஆண்டு தடிகளால் அடித்தே கொன்றனர். இவரோடு சேர்ந்து புத்தினா தீவில் கிறிஸ்தவம் அழிந்துவிடும் என்று அரசன் கருதினான். ஆனால் இதற்கு எதிர்மாறாக அருட்தந்தை இறந்த இரண்டே ஆண்டுகளில் புத்தினா தீவு முழுவதும் கிறிஸ்தவ மறை பரவியது. ஒசியானியாத் தீவுகள் (Ozeanien) முழுவதும் இன்றுவரை கிறித்தவ மறை செழித்து வளர்ந்து வருகிறது. இப்புனிதரை இப்பகுதியில் வாழ்பவர்கள் தங்களின் முதல் மறைசாட்சி என்று கூறி வாழ்த்தி மகிழ்கின்றனர்.


செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்ல் இறைவா! புனித பீட்டர் ஷானலின் வழியாக நாங்கள் உமதன்பையும், பராமரிப்பையும், உணர்கின்றோம். இப்புனிதரைப் போல, நாங்களும் எங்களால் இயன்றவரை மறைபரப்பு பணியில் ஈடுபட, எமக்கு உம் அருளையும், வழிகாட்டுதலையும் தந்து வழிநடத்தியருளும்.என்றும் வாழும் எல்லாம் வல்ல் இறைவா! புனித பீட்டர் ஷானலின் வழியாக நாங்கள் உமதன்பையும், பராமரிப்பையும், உணர்கின்றோம். இப்புனிதரைப் போல, நாங்களும் எங்களால் இயன்றவரை மறைபரப்பு பணியில் ஈடுபட, எமக்கு உம் அருளையும், வழிகாட்டுதலையும் தந்து வழிநடத்தியருளும்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

துறவி கேர்பிரீட் Gerfried von St.Maur
பிறப்பு: 8 ஆம் நூற்றாண்டு, பிரான்சு
இறப்பு: 9 ஆம் நூற்றாண்டு, செயிண்ட் மௌவர், பிரான்ஸ்


குளுனி துறவி ஹூகோ Hugo von Cluny OSB
பிறப்பு: 1024 பிரான்ஸ்
இறப்பு: 28 ஏப்ரல் 1109, பிரான்ஸ்
பாதுகாவல்: காய்ச்சலிலிருந்து

லூயிஸ் கிரிக்னன் (ஏப்ரல் 28)

இன்றைய புனிதர் : 
(28-04-2020) 

லூயிஸ் கிரிக்னன் (ஏப்ரல் 28)
“நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அருமடையாளங்களைச் செய்வர்: அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்” (மாற் 16: 17 -18)

வாழ்க்கை வரலாறு

லூயிஸ் மேரி என அழைக்கப்படும் லூயிஸ் கிரிக்னன் 1673 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் உள்ள மான்ட்போர்ட் என்னும் இடத்தில் பிறந்தார். இவர் வளரும்போதே மறையன்னையிடம் மிகவும் பக்திகொண்டு வளர்ந்து வந்தார். அது மட்டுமல்லாமல் இவர் அக்கம் பக்கத்து வீட்டில் இருந்தோரை ஒன்று சேர்த்துக்கொண்டு ‘Rosary Society’ என்ற பெயரில் ஜெபமாலை சொல்லிவந்தார்.

லூயிஸ் கிரிக்னன் வளர்ந்து வந்தபோது குருவாக மாறவேண்டும் என்ற ஆசை கொண்டார். எனவே, அவர் குருமடத்தில் சேர்ந்து 1700 ஆம் ஆண்டு குருவாக மாறினார். ஒருசில ஆண்டுகளுக்கு கழித்து இவர் டொமினிக்கன் மூன்றாம் சபையில் சேர்ந்து, மேற்கு பிரான்ஸ் முழுவதும் நற்செய்தியை அறிவிக்கத் தொடங்கினார். மேலும் அவர் எங்கெல்லாம் நற்செய்தியை அறிவிக்கச் சென்றாரோ அங்கெல்லாம் மரியாவின்மீது உள்ள பக்தியை வளர்த்து வந்தார்.

இவர் ஆற்றி வந்த நற்செய்திப் பணிக்கு நிறைந்த பலன் கிடைத்தது. ஆம், ஏராளாமான மக்கள் கிறிஸ்தவ நெறியைப் பின்பற்றத் தொடங்கினார்கள். இது பிடிக்காத ஒருசிலர் அவருடைய உணவில் விஷம் வைத்து கொல்லப்பார்த்தனர். ஆனால், இறைவனின் அருள்துணை இவருக்கு இருந்ததால் அந்த விஷம் இவரை ஒன்றும் செய்யவில்லை. லூயின் கிரிக்னன் திருச்சபைக்கு செய்த மற்றொரு மிகப்பெரிய பங்களிப்பு என்னவென்றால் ‘True Devotion to the Blessed Virgin’ என்ற புத்தகத்தை எழுதியதுதான். இப்புத்தகம் கன்னி மரியாவின் மீது நாம் கொள்ளவேண்டிய பக்தி முயற்சியைக் குறித்துப் பேசுகின்றது.

காலப் போக்கில் லூயிஸ் கிரிக்னன் The Missionaries of he Company of Mary என்ற சபையை இருபாலருக்கும் ஏற்படுத்தி, மரியாவின் புகழும் ஆண்டவர் இயேசுவின் புகழும் எங்கும் பரவுவதற்குக் காரணமாக இருந்தார். இப்படிப்பட்ட ஓர் இறையடியார் 1716 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய லூயிஸ் கிரிக்னனின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. மரியன்னையிடம் பக்தி

தூய லூயிஸ் கிரிக்னனின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கும்போது நம்முடைய மனதில் எழக்கூடிய சிந்தனை எல்லாம், அவரிடமிருந்த மரியன்னை மீதான பக்திதான். தூய லூயிஸ் கிரிக்னன் மரியன்னையை தன்னுடைய உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தார், அவரிடத்தில் இருந்த மரியன்னையின் மீதான பக்தி நம்மிடத்தில் இருக்கின்றதா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஒருமுறை தூய பெர்னார்துவிடம் அவரது துறவறக் குழுமத்தில் வாழ்ந்து வந்த துறவி ஒருவர், “மரியாவுக்கு வேறு ஏதாவது பெயர் உண்டா?” என்று கேட்டார். அதற்கு தூய பெர்னார்து அவரிடம், “Ascendens, Descendens” என்றார். இதைக் கேட்டு அந்தத் துறவி புரியவில்லையே என்று விழிபிதுங்கி நின்றபோது பெர்னார்து அவரிடம், “மரியன்னை நமது மன்றாட்டுகளுடன் விண்ணகம் செல்வதும், அருள்வரங்களை நமக்கெனப் பெற்றுக்கொண்டு மண்ணகம் இறங்குவதுமாக இருப்பதனாலே அவரை அப்படிக் குறிப்பிட்டேன்” என்றார்.

இது உண்மையிலும் உண்மை. ஏனென்றால் மரியா நாம் அவரிடத்தில் எழுப்புகின்ற ஜெபத்தை இறைவனிடத்தில் எடுத்துச் சென்று, அதற்கான அருள்வரங்களை அங்கிருந்து நமக்கு பெற்றுக்கொண்டு வருகின்றார். அதனால் நாம் அவரை அவ்வாறு அழைப்பதில் தவறொன்றும் இல்லை. மறைந்த திருத்தந்தை தூய இரண்டாம் யோவான் பவுல் மரியன்னையக் குறித்து, “தாய் மரியே நான் உமக்கே முழுவதும் சொந்தம்” என்றார். அவரைப் போன்று நாம் நம்மை அன்னையிடம் ஒப்படைத்து வாழும்போது நமக்கு ஒரு குறையும் வராது என்பது உண்மை.

ஆகவே, இப்படிப்பட்ட அன்னையிடம் நாம் பக்திகொண்டு வாழ்கின்றபோது, அவரை நம் தஞ்சமென நினைத்து வாழ்கின்றபோது, அவருடைய பரிந்துரையால் நாம் இறைவனிடமிருந்து ஏராளமான நன்மைகளைப் பெற்றுக்கொள்வோம் உறுதி.

ஆகவே, தூய லூயின் கிரிக்னனைப் போன்று, அன்னையின் ஆழமான பக்தி கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

27 April 2020

பீட்டர் கனிசியுஸ்(Peter Kanisius), சே.ச.குரு, மறைவல்லுநர் April 27

இன்றைய புனிதர்
2020-04-27
பீட்டர் கனிசியுஸ்(Peter Kanisius), சே.ச.
குரு, மறைவல்லுநர்
பிறப்பு
8 மே 1521
நிம்வேகன்(Nimwegen), ஹாலந்து
இறப்பு
21 டிசம்பர் 1597
சுவிட்சர்லாந்து
புனிதர் பட்டம்: 21 மே 1925
திருத்தந்தை பதினோறாம் பயஸ்

இவர் ஜெர்மனியிலுள்ள கொலோன் நகரில் பள்ளி சென்று தன் படிப்பை முடித்தார். அதன்பிறகு இயேசு சபையில் சேர்ந்து குருவாக பயிற்சி பெற்று 1546 ஆம் ஆண்டு குருப்பட்டம் பெற்றார். பிறகு இறையியல் மற்றும் மெய்யியல் படித்து பட்டம் பெற்றார். பின்னர் ஜெர்மனி நாட்டிலும், சுவிட்சர்லாந்திலும் பல்வேறு இடங்களில் ஆன்மீக குருவாக பணியாற்றி, சிறப்பான மறையுரைகளை வழங்கினார். இவரின் மறையுரை மக்களின் விசுவாசத்தை காக்கவும், உறுதிப்படுத்தவும் உதவியாக இருந்தது. இப்பணியில் இருந்தபோது பல நூல்களை எழுதினார். இவர் எழுதிய "மறைக்கல்வி" என்ற நூல் மிகவும் புகழ் பெற்றது. புனித போனிப்பாஸ் ஜெர்மனியின் முதல் அப்போஸ்தலர் என்றால், புனித கனிசியுஸ் இரண்டாம் அப்போஸ்தலர் ஆவார். இவர் எழுதிய "ஆன்மீகப் பயிற்சிகள்" என்னும் நூல் இயேசு சபையில் பயிற்சியில் இருந்தவர்களுக்கு, தியானம் செய்ய பெரிதும் உதவியது. அப்போதுதான் இவர் இயேசு சபையில் "ஒரு மாத தியான முறையை" அறிமுகப்படுத்தினார்.

அதன்பிறகு ஜெர்மனியிலுள்ள, இங்கோல்ஸ்டாட் என்ற இடத்திலுருந்த பல்கலைக்கழகத்தில் இறையியல், மெய்யியல் கற்றுக்கொடுக்கும் பேராசிரியராக பணியாற்றினார். அப்போது நாட்டை ஆண்டு வந்த அரசி, இவரை ஆஸ்திரிய நாட்டிற்கு பேராயராக உயர்த்த முயன்றார். இதற்கு கனிசியுசும், இவரின் சபைத்தலைவர் இனிகோவும் இணங்கவில்லை. இதனால் அரசி கோபமுற்று வியன்னாவில் குருமட பயிற்சியில் இருந்த மாணவர்களை, குருவாகக்கூடாது என்று கட்டளைப்பிறப்பித்தார். இதன் விளைவாக 20 ஆண்டுகள் எவராலும் குருவாக முடியவில்லை. அப்போது இச்சிக்கலை தவிர்க்கவே குருமட மாணவர்களை பல நூல்களை எழுத வேண்டினார். அவர்களும் பல நல்ல ஞான நூல்களை எழுதினார்கள். நூல் எழுதும் ஒவ்வொருவரும் 10 பேராசிரியர்களுக்கு சமமானவர்கள் என்று கூறி அம்மாணவர்களை இறைவழியில் கொண்டு சென்றார். பிறகு சுவிட்சர்லாந்தில் புகழ் வாய்ந்த ப்ரைபூர்க் பல்கலைக்கழகத்திற்கு அடித்தளமிட்டார்.

அப்போது இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் ஒளியில் பிரிந்துபோன கிறிஸ்தவர்களிடம் உரையாடல் நடத்தவும், கிறிஸ்துவ ஒற்றுமையைக் காக்கவும், "எங்கும் ஒரே மந்தையும், ஒரே மேய்ப்பனும்" என்ற நிலை நடைமுறைக்கு வரும் நாளுக்காகவும் திருச்சபை மிகுதியாகஸ் செபிக்கும்படி, திருத்தந்தை அழைப்பு விடுத்துக்கொண்டே இருந்தார். இதனால் புனித கனிசியுஸ் இவ்வறிய வாய்ப்பை பயன்படுத்தி, தான் தொடங்கிய புதிய கல்லூரியில் புரொட்டாஸ்டாண்டு கிறிஸ்துவர்களுக்கும் இடமளித்து அனைவரையும் ஒன்று சேர்த்தார். அப்போது 1557 -ல் வேர்ம்ஸ் என்ற நகரில் நடைபெற்ற புரொட்டாஸ்ட்ண்ட், கத்தோலிக்க கலந்துரையாடலுக்கு அழைப்புப்பெற்றார். இவ்வுரையாடலில் கனிசியுஸ் திருச்சபைக்காகவும், குருமடமாணவர்களுக்காகவும் பரிந்து பேசினார். ஆனால் இதனால் பயனேதும் இல்லாமல் போனது. தொடர்ந்து தனது மறையுரையாலும், கல்வி கற்றுகொடுக்கும் பணியாலும் கிறிஸ்துவை இவ்வுலகிற்கு எடுத்துரைத்தார். இவர் தனது இறுதி நாட்களை தான் தொடங்கிய கல்லூரியில் இருந்த ஆலயத்திலேயே கழித்து உயிர்துறந்தார்.


செபம்:
எல்லாம் வல்ல இறைவா! புனித கனிசியுசை, மறையுரைகளால் உமது நற்செய்தியை போதிக்க தேர்ந்தெடுத்து, உயர்த்தினீர். அவருடைய போதனையால் நாங்களும் ஆன்ம வளர்ச்சி பெற்று, கிறிஸ்துவின் அடிச்சுவடுகளில் நம்பிக்கையுடன் நடக்குமாறு செய்தருளும்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

திருத்தந்தை முதலாம் அன்ஸ்தாசியுஸ் Anastasius I
பிறப்பு: 4 ஆம் நூற்றாண்டு, உரோம்
இறப்பு: 19 டிசம்பர் 401 உரோம்
திருத்தந்தையாக: 399-401


துறவி தூடிலோ Tutilo von St.Gallen OSB
பிறப்பு: 850
இறப்பு: 27 ஏப்ரல் 912 செயிண்ட் காலன், சுவிஸ்

தூய சிட்டா (ஏப்ரல் 27)

இன்றைய புனிதர் : 
(27-04-2020) 

தூய சிட்டா (ஏப்ரல் 27)
“உங்களிடையே அப்படி இருக்கக்கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களிடையே முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும். இவ்வாறே மானிட மகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார் (மத் 20: 26 – 28).

வாழ்க்கை வரலாறு

இத்தாலியில் உள்ள லூக்கா என்னும் இடத்திற்கு அருகில் உள்ள மொந்தேசக்ராத்தி என்னும் இடத்தில் 1218 ஆம் ஆண்டு, சிட்டா பிறந்தார். இவர் பிறந்த ஒருசில ஆண்டுகளிலே இவருடைய தந்தை இறந்து போனார். அதனால் இவர் தனது தாயின் அரவணைப்பிலே வளர்ந்து வந்தார்.

சிட்டாவிற்கு 12 வயது நடக்கும்போது இவர் பட்டிநெர்லி என்பவருடைய வீட்டில் வேலைக்காரப் பெண்ணாகச் சேர்ந்தார். வேலைக்குச் சேர்ந்த இடத்தில் சிட்டா மிகவும் பொறுப்புடனும் அதே நேரத்தில் கவனத்துடனும் வேலை பார்த்து வந்தார். தனது தாயிடமிருந்து கற்றுக்கொண்ட பக்தியையும் பொறுமையையும் சிட்டா தன்னுடைய பணியில் நடைமுறைப்படுத்தி எல்லாருக்கும் எடுத்துக்காட்டன ஒரு பெண்மணியாக வாழ்ந்து வந்தார். இவருடைய பணிகளைப் பார்த்த வீட்டுப் பொறுப்பாளருக்கு இவரை மிகவும் பிடித்துப் போனது. அதே நேரத்தில் இவரோடு வேலை பார்த்து வந்த பணியாளர்களோ இவர்மீது எப்போதும் பகமையோடும் வெறுப்போடும் இருந்தார்கள்.

ஒருமுறை வீட்டு உரிமையாளர் கொடுத்த வேலையை சிட்டா சிறப்புடன் செய்ததால், அவர் அவரை முக்கியப் பொறுப்பில் அமர்த்தினார். இதைக் கண்டு சிட்டாவின் மீது வெறுப்போடு இருந்தவர்கள், எங்கே சீட்டா நம்மைப் பழிவாங்குவாளோ என்று பயந்துபோனார்கள். ஆனால் சிட்டா அப்படிச் செய்யவில்லை, தன்னை வெறுத்தவர்கள் மீது அன்புமழை பொழிந்தார். அவர்களைக் கருணையோடு நடத்தினார். இதனால் அவர்கள் சீட்டாவின்மீது நல்மதிப்பும் மரியாதையும் கொள்ளத் தொடங்கினார்கள். சீட்டா முக்கியப் பொறுப்பில் இருந்தாலும் அவர் எப்போதும் தாழ்ச்சியோடும் பொறுமையோடும் நடந்துகொண்டார். இதனால் எல்லாருக்கும் அவரைப் பிடித்துப் போனது.

சிட்டா ஏழைகள்மீது தனிப்பட்ட அன்பு கொண்டிருந்தார். அவர் தன்னுடைய வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஏழைகளுக்குக் கொடுத்து உதவினார். அது மட்டுமல்லாமல், அவர்களுக்காக எப்போதும் ஜெபித்து வந்தார். இப்படிப் பட்ட சிட்டா 1271 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவர் இறந்த பிறகு இவருடைய கல்லறைக்கு நிறையப் பேர் வந்து மன்றாடினார்கள். அவர்களுடைய மன்றாட்டுகள் அனைத்தும் கேட்கப் பட்டன. இதனால் இவருக்கு 1696 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.. 1933 ஆம் ஆண்டு இவர் ‘வீட்டுவேலை பார்ப்பவர்களுடைய பாதுகாவலர்’ என்று அறிவிக்கப்பட்டார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய சிட்டாவின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. தாழ்ச்சி

தூய சிட்டாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடமே, அவரிடத்தில் இருந்த தாழ்ச்சிதான். இன்றைக்குப் பலர் தாங்கள் வந்த வழியை – கடந்த கால வாழ்வை – மறப்பவர்களாகவே இருக்கிறார்கள். இவர்களுக்கு மத்தியில் தன்னுடைய கடந்த கால வாழ்க்கையை மறக்காமல் தூய சிட்டா மிகவும் தாழ்ச்சியோடும் பணிவோடும் பணிசெய்து வந்தார். தூய சிட்டாவைப் போன்று நாமும் தாழ்ச்சியோடு பணி செய்கின்றோமா? அல்லது தாழ்ச்சியோடு வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஒருசமயம் சூழ்கொண்ட மேகமானது நீரை – மழையை - வார்த்தது. அப்போது அதிலிருந்த ஒரு மழைத்துளி மட்டும் பரந்த வானத்தையும் அகன்ற கடலையும் பார்த்து, “எவ்வளவு பெரிய வானம்! எவ்வளவு பெரிய கடல்! இவர்கள் முன்னால் நான் ஒரு துரும்புதானே! இருந்தாலும், இறைவன் என்னை ஒரு மழைத்துளியாய்ப் படைத்திருக்கின்றாரே, அதற்கு நன்றி” என்றது. மழைத் துளி இவ்வாறு பேசிக்கொண்டதைக் கேட்ட கடல் சிப்பி ஒன்று அதனை உயர்த்த நினைத்தது. எனவே அது தன் நாவைப் பிளந்து அதனை ஏற்றுக்கொண்டது. நாவில் போன மழைத்துளியும் பணிவு மாறாமல் பல வருடங்களாய் உள்ளேயே கிடந்தது. கனிந்த நாள் வந்தபோது அது விலையுயர்ந்த முத்தாக மாறி வெளியே வந்தது.

தாழ்ச்சியோடு வாழ்கின்ற ஒருவர் எப்படி உயர்த்தப்படுகின்றார் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று. தூய சிட்டாவும் தாழ்ச்சியோடு வாழ்ந்தார். அதனால்தான் அவரை ஒரு புனிதையாக இறைவன் உயர்த்தினார்.

ஆகவே, தூய சிட்டாவின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தினராய் வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

26 April 2020

தூய சூசையப்பரின் புனிதர் பீட்டர் ✠(St. Peter Of St. Joseph De Betancur April 26

† இன்றைய புனிதர் †
(ஏப்ரல் 26)

✠ தூய சூசையப்பரின் புனிதர் பீட்டர் ✠
(St. Peter Of St. Joseph De Betancur)
மறைப்பணியாளர், நிறுவனர்:
(Religious and Founder)

பிறப்பு: மார்ச் 21, 1626
விலாஃப்லோர், டெனேரிஃப், ஸ்பேனிஷ் பேரரசு
(Vilaflor, Tenerife, Spanish Empire)

இறப்பு: ஏப்ரல் 25, 1667
என்டிகுவா குவாட்மலா, ஸ்பேனிஷ் பேரரசு
(Antigua Guatemala, Captaincy General of Guatemala, Spanish Empire)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(கெனரி தீவுகள் மற்றும் குவாட்மலா)
(Roman Catholic Church)
(Canary Islands & Guatemala)

முக்திபேறு பட்டம்: ஜூன் 22, 1980
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

புனிதர் பட்டம்: ஜூலை 30, 2002
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

முக்கிய திருத்தலங்கள்:
சேன்டோ ஹெர்மனோ பெட்ரோ குகை மற்றும் ஹெர்மனோ பெட்ரோ சரணாலயம் மற்றும் சேன் ஃபிரான்சிஸ்கோ ஆலயம், என்ட்டிகுவா, குவாட்மலா
(Cave of Santo Hermano Pedro and Sanctuary of the Santo Hermano Pedro (Tenerife) and San Francisco Church in Antigua, Guatemala)

நினைவுத் திருநாள்: ஏப்ரல் 26

பாதுகாவல்:
கெனரி தீவுகள் (Canary Islands), குவாட்மலா (Guatemala), மத்திய அமெரிக்கா (Central America), குவாட்மலா’வின் மறைக்கல்வி ஆசிரியர்கள் (Catechists of Guatemala), தென் டெநெரிஃப் நாட்டிலுள்ள நகரசபைகளின் கௌரவ மேயர்கள் (Honorary Mayor of municipalities in the South of Tenerife), என்ட்டிகுவா, குவாட்மலா நகரசபையின் கௌரவ மேயர் (Honorary Mayor of Antigua Guatemala), வீடற்ற மக்கள் (The homeless)

தூய சூசையப்பரின் புனிதர் பீட்டர், மத்திய அமெரிக்க நாடுகளிலுள்ள “குவாட்மலா குடியரசின்” (Republic of Guatemala) மறைப்பணியாளரும், ஒரு ஸ்பேனிஷ் புனிதருமாவார். இவர், (St. Francis of Assisi of the Americas) “அமெரிக்காக்களின் புனிதர் அசிசியின் ஃபிரான்சிஸ்” என்றும் அறியப்படுகின்றார். கேனரி (Canary Islands) தீவுக்களின் முதல் புனிதரான இவர், குவாட்மலா (Guatemala) மற்றும் மத்திய அமெரிக்க நாடுகள் (Central America) ஆகியவற்றினதும் முதல் புனிதராகக் கருதப்படுகின்றார். இவர், “பெத்தலமைட் சகோதரர்கள்” (Bethlehemite Brothers) என்றழைக்கப்படும் “பெத்தலஹெம் அன்னையின் சபையின்” (Order of Our Lady of Bethlehem) நிறுவனர் ஆவார்.

“ஹெர்மனோ பெட்ரோ டி சேன் ஜோஸ் பெடன்கர்ட்” (Hermano Pedro de San José Betancurt) என்றும், “ஹெர்மனோ பெட்ரோ” (Hermano Pedro) என்றும், “சேன்ட்டோ ஹெர்மனோ பெட்ரோ” (Santo Hermano Pedro) என்றும், “சேன் பெட்ரோ டி விலஃலோர்” (San Pedro de Vilaflor) என்றும் பல பெயர்களால் அழைக்கப்படும் இவர், கி.பி. 1626ம் ஆண்டு, “டெனேரிஃப்” (Island of Tenerife) தீவிலுள்ள “விலாஃப்லோர்” (Vilaflor) எனுமிடத்தில் பிறந்தார். இவரது தந்தை, “ஜீன் டி பெத்தென்கார்ட்டின் வம்சாவளியினரான” (Descendant of Jean de Béthencourt) “அமடோர் பெடன்கோர்ட்” (Amador Betancourt) ஆவார். இவரது தாயார், “ஆனா கொன்சேல்ஸ் பெடன்கோர்ட்” (Ana Gonzáles Betancurt) ஆவார்.

சிறுவயதில், பீட்டர் தமது குடும்பத்தின் ஒரே வருமானமான சிறு பண்ணையில் கால்நடைகளை மேய்க்கும் பணி செய்தார். கி.பி. 1638ம் ஆண்டு ஒருமுறை, தமது குடும்பத்துக்கு கடன் கொடுத்தவர், கடனுக்காக, தமது பண்ணை நிலங்களை பறிமுதல் செய்தார். குடும்பத்தின் கடனை அடைக்கும் முயற்சியாக, அந்த நிலச் சுவான்தாரிடம் சம்பளமில்லா வேலைக்காரனாக வேலை செய்தார். இந்த காலகட்டத்தில், இவரது சகோதரரான “மடேயோ” (Mateo) என்பவர், ஸ்பெயின் நாட்டின் காலனியாட்சி நடைபெறும் “ஈகுவேடார்” (Ecuador) காலனிக்கு புலம்பெயர்ந்து சென்றார்.

கி.பி. 1649ம் ஆண்டு, தமது 23 வயதில், குடும்ப கடனுக்காக கூலி வேலை செய்துவந்த பீட்டர், அப்பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவரும் தமது சகோதரரைப் போலவே வெளிநாடு செல்ல முடிவு செய்தார். அங்கிருக்கும் ஏதாவது ஒரு சொந்தம் மூலமாக ஏதேனும் ஒரு அரசு பணியில் சேரும் நோக்கில், புதிய ஸ்பெயின் நாட்டின் (New Spain) தலைநகரான குவாட்மலா (Guatemala) பயணித்தார். அவர் கியூபாவிலுள்ள (Cuba) ஹவானா (Havana) சென்று சேர்ந்தபோது, அவரிடம் கையில் பணம் ஏதும் கிடையாது. பின்னர், ஒரு வருடம் அங்கிருந்த குருவிடம் பணியாற்றினார்.

பீட்டர், கி.பி. 1653ம் ஆண்டு, குருத்துவக் கல்வி கற்பதற்காக “சேன் போர்ஜியா” (San Borgia) எனும் இடத்திலுள்ள இயேசுசபை (Jesuit College) கல்லூரியில் சேர்ந்தார். மூன்று வருடங்களின் பின்னர், கல்லூரியின் தேர்வுகளில் தோல்வியடைந்ததால், கல்லூரியிலிருந்து விலகினார். பின்னர், குருவாகும் யோசனையை கைவிட்டார். அங்குள்ள அன்னை மரியாளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தேவாலயம் ஒன்றில் சாக்ரஸ்டனின் நிலையை வகித்தபின் (Sacristan - கிறிஸ்தவ ஆலயங்களில் உள்ள புனிதப் பொருட்களைக் காப்பவர்), “கல்வாரி” (Calvary) என்றழைக்கப்படும் புறநகர்ப் பகுதியொன்றில் வீடு ஒன்றினை வாடகைக்கு எடுத்து, சிறிது காலம் அங்கே ஏழைச் சிறார்களுக்கு படிக்கவும், மறைக் கல்வியும் கற்பித்தார்.

“என்ட்டிகுவா குவாட்மலா’வின்” (Antigua Guatemala) “கோஸ்டா ரிக்கா” (Costa Rica) ஃபிரான்சிஸ்கன் துறவற மடத்தில் இணைந்து துறவியானார். “புனிதர் சூசையப்பரின் பீட்டர்” (Peter of Saint Joseph) எனும் பெயரை தமது ஆன்மீகப் பெயராக ஏற்றுக்கொண்டார். அவர் மருத்துவமனைகள், சிறைச்சாலைகள் மற்றும் வேலையற்றோர் ஆகியோரைக் காணச் சென்றார். அவர்களுக்கு ஆறுதலும் தேறுதலும் கூறினார். கி.பி. 1658ம் ஆண்டு, தமக்கு தரப்பட்ட குடில் ஒன்றினை சிறு மருத்துவமனையாக மாற்றினார். நகரின் பெரிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, இன்னமும் ஓய்வும் உடல்நிலையில் முன்னேற்றமும் தேவைப்பட்ட ஏழை நோயாளிகளை அங்கே தங்கவைத்து சிகிச்சையும் சேவையும் செய்தார். அவரது ஆர்வம் அவரைச் சுற்றியிருந்தவர்களிடமிருந்து வந்த பலன்களையும் பெற்றது. ஆயரும் ஆளுநரும் அவருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அவருக்கு வழங்கினார்கள்.

மூன்று வருடங்களுக்குப் பின்னர், பீட்டரின் குடிலைச் சுற்றியிருந்த பல வீடுகளை வாங்குவதற்காக பலர் உதவிகள் செய்தனர். பின்னர் அவர்களது தளத்தில் ஒரு மருத்துவமனை நிறுவப்பட்டது. அதில் அவரால் சிறப்பாக பணியாற்ற முடிந்தது. அவர், தாமே கட்டிடப் பணியாளர்களுடன் சேர்ந்து வேலை செய்தார். அது அனைத்து வசதிகள் கொண்ட மருத்துவமனையாக இருந்தது. ஏழை நோயாளிகளுக்கான மருத்துவமனையும் நிறுவனமும் பெத்தலஹெம் அன்னை மரியாளின் (Our Lady of Bethlehem) பாதுகாவலில் அர்ப்பணிக்கப்பட்டது. விரைவிலேயே வீடற்றவர்களுக்கு ஒரு தங்குமிடமும், ஏழை சிறுவர்களுக்கு ஒரு பள்ளியும், குருக்கள் மற்றும் துறவியர்க்கு ஒரு சிற்றாலயமும், தங்கும் இல்லமும் கட்டப்பட்டது.

பிற சபை மற்றும் மடங்களின் துறவியர் வந்து பீட்டருடன் இணைய தொடங்கினர். பீட்டர், துறவியர் சமூகம் ஒன்றோ, அல்லது சபையோ நிறுவும் எண்ணமேதுமில்லாதிருந்தார். ஆனால், தமது மருத்துவமனையை நிறுவுவதில் தீவிரமாக இருந்தார். தமது முதல் உதவியாளர்களை திறம்பட பயிற்றுவித்தார். தாம் ஒரு ஃபிரான்சிஸ்கன் (Franciscan) சபையைச் சேர்ந்த துறவியாயிருந்தும், தமது மருத்துவமனை சமூகத்திற்கு, விரைவிலேயே “தூய அகுஸ்தினாரின் சட்டதிட்டங்களை” (Rule of St. Augustine) எழுதினார். பெண்களுக்கான இவரது சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், சிறார்களுக்கு கல்வி கற்பிக்கும் பணியைச் செய்தனர். இவர்களது இச்சமூகம் விரைவிலேயே “பெத்தலஹெம் அன்னையின் சபை” (Order of Our Lady of Bethlehem) அல்லது “பெத்தலமைட் சகோதரர்கள்” (Bethlehemite Brothers) என்றானது. இச்சபையில் இணைந்த ஆண்களும் பெண்களும், இவர்களுடைய மருத்துவமனை மட்டுமல்லாது, நகரின் வேறு இரண்டு மருத்துவமனைகளிலும் பணி புரிந்தனர். பீட்ட வழக்கம் போல ஏழைச் சிறுவர்களின் கல்வியில் கவனம் செலுத்தினார். இவர்களது “பெத்தலமைட்” சபை, ஃபிரான்சிஸ்கன் சமூகத்திற்கு சொந்தமானதாகும்.

பின் வரும் வருடங்கள்:
சிறைச்சாலைக் கைதிகளும்கூட பீட்டரின் இரக்கத்தினால் உணர்ச்சி வசப்பட்டு உற்சாகம் கொண்டனர். ஒவ்வொரு வியாழக்கிழமையும், அவர் நகர் முழுதும் சென்று சிறைக் கைதிகளுக்காக யாசகம் பெற்றார். அதனை சிறைச்சாலை சென்று அவர்களுக்கு கொடுத்தார். ஏழை எளிய குருவானவர்களால் நடத்தப்படும் திருப்பலிகளுக்காகவும், அவற்றில் பங்கேற்கும் ஏழை மக்களுக்காகவும் நகர் முழுதும் சென்று யாசகம் பெற்று அவற்றை அவர்களுக்கு அளித்தார். கத்தோலிக்க பாரம்பரியம் மற்றும் மரபுகளின்படி, ஒருவர் மரித்ததன் பின்னர் ஆத்துமாக்களை புனிதப்படுத்தும் இடமான “உத்தரிய ஸ்தலத்தில்” (Purgatory) காத்திருக்கும் புறக்கணிக்கப்பட்ட ஆத்துமாக்கள் மீது அக்கறையும் கவலையும் கொண்டிருந்தார். இரவு நேரங்களில், நகரின் தெருக்களில் மணியடித்தவாறு பயணித்து, உத்தரிய ஸ்தலத்திளிருக்கும் ஆத்துமாக்களுக்காக செபிக்குமாறு மக்களிடம் பரிந்துரைத்தார்.

உழைப்பு மற்றும் நோன்பு, தவம் ஆகியவற்றினால் முற்றிலும் சோர்வடைந்து, நலிந்து போன பீட்டர், கி.பி. 1667ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 25ம் நாளன்று, தமது 41 வயதில், “என்ட்டிகுவா குவாட்மலா” (Antigua Guatemala) நகரில் மரித்துப்போனார். கபுச்சின் (Capuchin Friars) துறவியரது வேண்டுகோளின்படி, அவர்களது ஆலயத்தில் பீட்டர் அடக்கம் செய்யப்பட்டார்.

பீட்டர் தமது வாழ்க்கையை தேவைப்படும் மக்களுக்காக அர்ப்பணித்தார். நோயாளிகளுக்காக – முக்கியமாக தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்காகவும், சிறைக் கைதிகளுக்காகவும், அடிமைகளுக்காகவும், இந்தியர்களுக்காகவும் மனித உரிமைகளின் முன்னோடியாக பணியாற்றினார்.

புனிதர் அனக்லேட்டஸ் ✠(St. Anacletus) April 26

† இன்றைய புனிதர் †
(ஏப்ரல் 26)

✠ புனிதர் அனக்லேட்டஸ் ✠
(St. Anacletus)
3ம் திருத்தந்தை:
(3rd Pope)

பிறப்பு: கி. பி. 25
ரோம், இத்தாலி, ரோம பேரரசு
(Rome, Italy, Roman Empire)

இறப்பு: ஏப்ரல் 26, 88
ரோம், இத்தாலி, ரோம பேரரசு
(Rome, Italy, Roman Empire)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

நினைவுத் திருநாள்: ஏப்ரல் 26

புனிதர் அனக்லேட்டஸ் கத்தோலிக்க திருச்சபையின் மூன்றாம் திருத்தந்தையாவார். அவருக்கு முன் திருத்தந்தையராக இருந்தவர்கள் முதலில் "பேதுரு" (St. Peter), அதன்பின் "புனிதர் லைனஸ்" (Saint Linus) ஆவர். இவர் கத்தோலிக்க திருச்சபையால் புனிதராகக் மதிக்கப்படுகிறார்.

பதவிக் காலம் பற்றிய செய்திகள்:
மரபுச் செய்திகளின்படி, அனக்லேட்டஸ் ரோமைச் சார்ந்தவர் என்றும், பன்னிரு ஆண்டுகள் ஆட்சி செய்தார் என்றும் கூறப்படுகிறது. வத்திக்கான் வெளியிடுகின்ற "ஆண்டு ஏடு" (Annuario Pontificio), "முதல் இரு நூற்றாண்டுகளைப் பொறுத்தமட்டில், ஒரு குறிப்பிட்ட திருத்தந்தை எப்போது பதவி ஏற்றார், எப்போது அவரது பதவிக்காலம் முடிந்தது என்பது பற்றி உறுதியாகக் கூறுவது கடினம்" என்றுரைக்கிறது. அந்த ஏட்டின்படி, அனக்லேட்டஸ் கி.பி. 80 முதல் கி.பி. 92 வரை பதவியிலிருந்தார். வேறு சில ஏடுகள் அப்பதவிக்காலம் கி.பி. 77 முதல் கி.பி. 88 என்று கூறுகின்றன.

திருத்தந்தை அனக்லேட்டஸ் ரோம் மறைமாவட்டத்தை 25 பங்குத்தளங்களாகப் பிரித்தார் என்றும், ஒரு சிலரைக் குருக்களாகத் திருநிலைப்படுத்தினார் என்றும் சில பண்டைய ஏடுகள் கூறுகின்றன.

வத்திக்கானில் கல்லறை:
திருத்தந்தை அனக்லேட்டஸ் இன்றைய வத்திக்கான் நகரில் அமைந்துள்ள புனித பேதுரு பேராலயத்தில் அவருக்குமுன் பதவியிலிருந்த "திருத்தந்தை லைனஸ்" (Saint Linus) என்பவரின் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். அனக்லேட்டஸ் என்னும் திருத்தந்தையின் பெயர் ரோம் வழிபாட்டு முறைத் திருப்பலியில் உள்ள நற்கருணை வழிபாட்டு வேண்டுதலில் சேர்க்கப்பட்டுள்ளது.

நினைவுத் திருவிழா:
கத்தோலிக்க திருச்சபையின் பழைய நாட்காட்டியாகிய "திரிதெந்தீன் நாட்காட்டியில்" ஏப்ரல் 26ஆம் நாள் புனித அனக்லேட்டஸ் மற்றும் புனித மார்செல்லீனுஸ் ஆகியோரின் விழா கொண்டாடப் பணிக்கப்பட்டது. அந்நாட்காட்டியில் ஜூலை 13ம் நாள் புனித அனக்லேட்டஸ் திருவிழா அமைந்தது.

1960ம் ஆண்டில் திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் ஜூலை மாதம், 13ம் நாளில் இருந்த விழாவை அகற்றினார். அதே நேரத்தில், ஏப்ரல் மாதம், 26ம் நாள் புனித அனக்லேட்டஸ் விழாவாக அமையும் என்று பணித்தார். அனக்லேட்டஸ் என்னும் பெயர் ரோம் நற்கருணை வழிபாட்டு வேண்டுதலில் உள்ளது.

1969ம் ஆண்டு முதல் ஏப்ரல் 26 விழா கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டியில் இல்லை. திருத்தந்தை அனக்லேட்டஸ் எந்த நாளில் இறந்தார் என்பது உறுதியாகத் தெரியாவிட்டாலும், "ரோம் மறைச்சாட்சியர் நூல்" (Roman Martyrology) என்னும் ஏடு, அவர் ஏப்ரல் மாதம், 26ம் நாள் இறந்ததாகக் குறிப்பிடுகிறது.

✠ புனிதர் மர்செல்லீனஸ் ✠(St. Marcellinus) April 26

† இன்றைய புனிதர் †
(ஏப்ரல் 26)

✠ புனிதர் மர்செல்லீனஸ் ✠
(St. Marcellinus)
29ம் திருத்தந்தை:
(29th Pope)

பிறப்பு: தெரியவில்லை 
ரோம், மேற்கு ரோமப் பேரரசு
(Rome, Western Roman Empire)

இறப்பு: கி.பி. 304
ரோம், மேற்கு ரோமப் பேரரசு
(Rome, Western Roman Empire)

நினைவுத் திருநாள்: ஏப்ரல் 26

திருத்தந்தை மர்செல்லீனஸ், ரோம் ஆயராகவும், திருத்தந்தையாகவும் 296ம் ஆண்டு, ஜூன் மாதம், 30ம் நாள் முதல், கி.பி. 304ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 25ம் நாள்வரை ஆட்சி செய்தார். இவருக்கு முன் திருத்தந்தையாக இருந்தவர் “காயுஸ்” (Pope Caius) என்பவர் ஆவார். திருத்தந்தை புனித மர்செல்லீனஸ் கத்தோலிக்க திருச்சபையின் 29ம் திருத்தந்தை ஆவார். மர்செல்லீனஸ் என்பது பண்டைய உரோமைக் குடும்பப் பெயர்களுள் ஒன்றாகும்.

ரோமப் பேரரசன் (Roman Emperor) “டையோக்ளேசியன்” (Diocletian) ஆண்ட காலத்தில் மர்செல்லீனஸ் திருத்தந்தையாகப் பொறுப்பேற்றார். அப்போது கிறிஸ்தவர்கள் தம் மதத்தைச் சுதந்திரமாகக் கடைப்பிடித்தனர். அவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது.

ஆனால் கி.பி. 302ம் ஆண்டு, மன்னனன் டையோக்ளேசியன் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தத் தொடங்கினார். கிறிஸ்தவப் போர்வீரர்கள் படையிலிருந்து விலக்கப்பட்டனர். பின்னர் கிறிஸ்தவர்களின் சொத்துக்கள் பறிக்கப்பட்டன. அவர்களுடைய நூல்களும் அழிக்கப்பட்டன. மன்னனின் அரண்மனை இரு முறை தீப்பற்றி எரிந்ததும், மன்னனின் செயல்பாடு இன்னும் அதிகக் கொடூரமானது. கிறிஸ்தவத்தைக் கைவிடாவிட்டால் சாவுதான் முடிவு என்றாயிற்று.

இந்த நெருக்கடியின்போது, மர்செல்லீனஸ் விவிலியம் மற்றும் கிறிஸ்தவ சமய நூல்களை மன்னனின் ஆணைக்கு ஏற்ப கையளித்தார் என்றும், கிறிஸ்தவ நம்பிக்கையை விட்டு விலகினார் என்றும், பின்னர் மனம் வருந்தி கிறிஸ்தவத்துக்குத் திரும்பினார் என்றும், அதன் பொருட்டு மறைச்சாட்சியாக உயிர்துறந்தார் என்றும் திருத்தந்தையர் நூல் (Liber Pontificalis) கூறுகிறது. அச்செய்தி தற்போது கைவசம் கிடைக்காத "புனித மர்செல்லீனசின் சாவு வரலாறு" (Acts of St. Marcellinus) என்னும் பண்டைய ஏட்டிலிருந்து பெறப்பட்டது.

திருத்தந்தை மர்செல்லீனுஸ் கி.பி. 304ம் ஆண்டு ஏப்ரல் மாதம், 26ம் நாள், அவர் இறந்து 25 நாள்களுக்குப் பின், ரோம் சலாரியா சாலையில் உள்ள பிரிசில்லா கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டார். இச்செய்தி திருத்தந்தையர் நூலில் உள்ளது.

கி.பி. 13ம் நூற்றாண்டில் மர்செல்லீனஸ் நினைவாக விழாக் கொண்டாடப்பட்டது. ஏப்ரல் 26ம் நாள் அவருடைய விழா புனிதர் கிலேட்டஸ் (Saint Cletus) விழாவோடு இணைத்துக் கொண்டாடப்பட்டது. ஆனால் இந்த இரு திருத்தந்தையரின் மறைச்சாட்சிச் சாவு பற்றியும் வரலாற்றுத் தெளிவு இல்லாமையால் 1969ம் ஆண்டு வெளியான புனிதர் நாள்காட்டியில் அவ்விழா குறிக்கப்படவில்லை.

வழிவந்த திருத்தந்தை:
மர்செல்லீனசின் மரணத்தின் பிறகு, கிறிஸ்தவ சபை துன்புறுத்தப்பட்ட நிலையில் இருந்ததால், சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னரே புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பெயர் முதலாம் மர்செல்லஸ் (Pope Marcellus) ஆகும்.

ட்ரூட்பெர்ட் (Trutpert)மறைசாட்சி April 26

இன்றைய புனிதர்
2020-04-26
ட்ரூட்பெர்ட் (Trutpert)
மறைசாட்சி
பிறப்பு

அயர்லாந்து அல்லது ஜெர்மனி
இறப்பு
607 அல்லது 644

ஏழாம் நூற்றாண்டில் பிறந்த இவர் ஜெர்மனியில் ஒரு மதபோதகராக இருந்தார். இவர் அயர்லாந்தில் செல்டிக் துறவி (Celtic monk) என்றழைக்கப்பட்டார். இவர் மறைபரப்பு பணியை தொடர்ந்து செய்ய, திருத்தந்தையின் அதிகாரம் பெற ரோம் சென்றார். அங்கிருந்து மீண்டும் ஜெர்மனிக்கு திரும்பி வர ப்ரெய்ஸ்கவ்(Breisgau) நாட்டிலுள்ள ஆலமனி (Alamanni) வழியாக நாடு திரும்பினார். அப்போது ரைனில்(Rhein) பயணம் செய்யும்போது, ப்ரைபூர்க்-ஐ ( Freiburg) சேர்ந்த ஒருவர் தன்னிடம் இருந்த நிலத்தில், சுமார் 25 கிலோமீட்டர், மறைபரப்பு பணிக்காக கொடுத்தார்.

அப்போது ட்ரூட்பெர்ட் அந்நிலத்திலிருந்த மரங்களை அழித்துவிட்டு புனித பீட்டர் மற்றும் பவுல் தேவாலயத்தை கட்டினார். அங்கு ஓர் வேலையாள் போலவே, துறவி ட்ரூட்பெர்ட் உழைத்தார். ஒரு நாள் வேலை முடித்துவிட்டு களைப்பாக தூங்கும்போது, தெரியாத நபர் ஒருவர் வந்து அவரை கொன்ற்விட்டான். பின்னர் ஓட்பெர்க்(Otbert) என்பவரால், ட்ரூட்பெர்ட் புதைக்கப்பட்ட இடத்தில், அவர் பெயரில் ஒரு பேராலயத்தை கட்டினார். இவர் வாழ்ந்த குறுகிய காலத்தில் குழந்தைப் பருவத்திலிருந்தே எண்ணிலடங்கா, வேலையை செய்துள்ளார். அவர் 640 - 643 வரை ப்ரெய்ஸ்கவ்-இல் வாழ்ந்தார் என்று வரலாறு கூறுகின்றது. ஆனால் இவ்வாண்டுகளில் அங்கே வாழ்ந்த பவர் (Baur) என்பவர் ட்ரூட்பெர்ட் 607 - ல் இறந்துவிட்டார் என்று கூறியுள்ளார்.

அதன்பிறகு 815 ஆம் ஆண்டு அவரின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் வாழும் போது எழுதிய அவரின் வாழ்க்கை வரலாற்றை 10 மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டு, அதை சரிசெய்து பாதுகாக்கப்படுகின்றது. முன்ஸ்டரில் (Münster) உள்ள ஆசீர்வாதப்பர் மடத்தில் இவரது எலும்புகளும், வரலாற்று ஆவணங்களும் வைக்கப்பட்டது. அங்கு இப்புனிதருக்கென்று பேராலயமும் உள்ளது


செபம்:
அன்பின் உருவமே எம் இறைவா! உமது சாட்சியாக மரித்த ட்ரூட்பெர்ட்டைப்போல, நாங்களும் எங்கள் வாழ்வின் வழியாக உமக்கு சான்று பகிர்ந்திட உம் அருள் தந்து எம்மை வழிநடத்தும்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

குரு ரிச்சாரியுஸ் Richarius
பிறப்பு: 6 ஆம் நூற்றாண்டு, சென்லோ Centula, பிரான்சு
இறப்பு: 26 ஏப்ரல் 645 ரிக்குயர் Riquier


சபைநிறுவுநர் பேதுரூஸ் டே பெண்டாங்கூர் Petrus de Betancur
பிறப்பு: 21 மார்ச் 1626, ஸ்பெயின்
இறப்பு: 26 ஏப்ரல் 1667 குவாடமாலா Guatemala

ஏப்ரல் 26புனித ஆல்தோ (1249-1309)

ஏப்ரல் 26

புனித ஆல்தோ (1249-1309)
இவர் இத்தாலியில் உள்ள சியன்னாவில்  பிறந்தவர்.

திருமணமாகி ஒருசில மாதங்களிலேயே இவர் தன்னுடைய கணவரை இழந்தார். இதனால் இவர் தன்னுடைய உடைமைகளை எல்லாம்  விற்று, ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, சியன்னா நகருக்கு வெளியே ஒரு குடிசை அமைத்துத் தவமிருக்கத் தொடங்கினார். 

சில காலம் இப்படித் தவமிருந்து வந்த இவர், மருத்துவமனையில் உள்ள நோயாளர்களுக்கு உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்து, அதன்படி மருத்துவமனையில் உள்ளவர்களுக்கு உதவி செய்து வந்தார்.

இறைவன் இவரோடு இருந்ததால், இவர் யார் மீதெல்லாம் சிலுவை அடையாளம் வரைந்து மன்றாடினாரோ, அவர்கள் எல்லாரும் விரைவில் நலம்பெற்றார்கள். 

இதனால் இவருடைய புகழ் எங்கும் பரவியது. இது ஏற்கெனவே மருத்துவமனையில் பணிசெய்து வந்தவர்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் இவர்மீது கொண்ட பொறாமையால், இவரைக் குண்டூசியால் குத்தித் துன்புறுத்தினார்கள். அவற்றை எல்லாம் இவர் பொறுத்துக் கொண்டது மட்டுமல்லாமல், அவர்களை மனதார மன்னித்தார். 

இப்படி இவர் நோயாளர்களுக்கு நடுவில் பணிசெய்யும் போதே இவர் உயிர் பிரிந்தது.

சிந்தனை:

தன்னை வெட்டுவோருக்கும் நிழல் தருமாம் மரம். அதுபோல் நாம் நமக்குத் தீமை செய்வோரை மன்னித்து, நன்மை செய்வோம். 

அடுத்த வீட்டுக்காரன் வெற்றியடைவதைக் கண்டு, பொறாமைக்காரன் உடல் மெலிவான் (ஹொரேஸ்).

நான் நோயுற்று இருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டாரா? (இயேசு)

- மரிய அந்தோனிராஜ்

தூய ராட்பெர்துஸ் பஸ்காசியஸ் ஏப்ரல் 26

இன்றைய புனிதர் : 
(26-04-2020) 

தூய ராட்பெர்துஸ் பஸ்காசியஸ் (ஏப்ரல் 26)
“நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்குகொள்ளும்” மத் 25: 23.

வாழ்க்கை வரலாறு

790 ஆம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டில் உள்ள நோட்ரே தாமே (Nonte Dame) என்ற இடத்தில் இருந்த கன்னியர் மடத்திற்கு முன்பாக ஒரு குழந்தை அனாதையாகக் கிடந்தது. அந்தக் குழந்தையை எடுத்த கன்னியர் மடத்தில் இருந்த அருட்சகோதரிகள் அதற்கு ராட்பெர்துஸ் பஸ்காசியசிஸ் என்று பெயர் வைத்தார்கள். அவர் தான் இன்று நாம் நினைவுகூருகின்ற ராட்பெர்துஸ் பஸ்காசியஸ்.

ராட்பெர்துஸ் பஸ்காசியஸ் தன்னுடைய தொடக்கக் கல்வியை நோட்ரே தாமேவில் இருந்த ஒரு பள்ளியில் கற்றார். படித்துக்கொண்டிருக்கும்போது அங்கிருந்த துறவிகளின் வாழ்வால் தொடப்பட்டு பின்னாளில் துறவியாக மாறினார். இவருக்கு துறவிகளான அடல்ஹால்து என்பவரும் வாலா என்பவரும் மிகப்பெரிய உந்து சக்தியாக இருந்து வந்தார்கள். ராட்பெர்துஸ் பஸ்காசியஸ் சில ஆண்டுகளிலே தான் இருந்த துறவற மடத்தின் தலைவராக மாறினார்.

ராட்பெர்துஸ் பஸ்காசியஸ் விவிலியத்தில் புலமை பெற்றிருந்தார். அதைக் கொண்டு அவர் நிறைய புத்தங்களை எழுதினார். குறிப்பாக மத்தேயு நற்செய்திக்கு விளக்கவுரையாக 12 பாகங்களை எழுதினார் அது போன்று கன்னியான மரியாவைக் குறித்தும் ஆண்டவர் இயேசுவைக் குறித்தும் நிறைய எழுதினார். இவர் எழுதிய புத்தகங்களிலே மிகவும் சிறப்பு வாய்ந்தது ‘The Body and Blood of Christ” என்பதாகும். இப்புத்தகம் இன்றளவும் சிறந்த ஒரு புத்தகமாகக் கருதப்படுகின்றது. இப்படி பல்வேறு புத்தங்களை அவர் எழுதி வந்தாலும் ஜெபத்திற்கும் தியானத்திற்கும் அதிகமான நேரத்தை அவர் ஒதுக்கினார். அவர் செய்து வந்த ஜெபமே பல நேரங்களில் அவருக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்து வந்தது. இப்படிப்பட்ட ஓர் இறையடியார் 860 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் நாள் இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ராட்பெர்துஸ் பஸ்காசியசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. மிகுந்த கனிதரும் வாழ்க்கை வாழ்வோம்.

தூய ராட்பெர்துஸ் பஸ்காசியசின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கும் நம்முடைய மனதில் தோன்றக்கூடிய ஒரே சிந்தனை, அவர் கடவுள் தனக்குக் கொடுத்த வாழ்வினை அர்த்தமுள்ள முறையில் வாழ்ந்தார் என்பதுதான். தூய ராட்பெர்துஸ் பஸ்காசியசை நினைவுகூரக்கூடிய நாம், அவரைப் போன்று அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ முயற்சி எடுக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஏனெனில் யோவான் நற்செய்தி 15: 8 ல் இயேசு கூறுவார், “நீங்கள் மிகுந்த கனிதந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கின்றது என்று. நாம் கனிதரக்கூடிய வாழ்க்கையினை வாழ்கின்றபோதுதான் இறைவனுக்குப் பெருமை சேர்க்க முடியும்.

சமீபத்தில் பார்த்த விளம்பரம் இது. பறவை ஒன்று, அனாதையாகக் கிடைக்கும் குழந்தையை எடுத்துக்கொண்டு ஆறு, மலை, கடல், பாலைவனம் எல்லாவற்றையும் தாண்டிப் பறக்கும். நடுவில் அக்குழந்தைக்கு வரும் ஆபத்துகளையும், மழையையும் திறமையாக எதிர்கொண்டு கடைசியில் குழந்தையைப் பத்திரமாக ஒரு வீட்டில் கொண்டு சேர்க்கும்.

பல ஆண்டுகள் கழித்து அனாதையாக விட்டுவிட்டு வந்த குழந்தை எப்படி இருக்கின்றது என்று பார்க்க, பறவை அந்த வீட்டுக்கு மறுபடி வரும். இப்போது குழந்தை இருப்பத்தைந்து வயது இளைஞனாகியிருக்கும். பறவை அந்த இளைஞனை ஆர்வத்தோடு பார்க்கும். அவன் சோம்பேறித் தனமாக கொட்டாவி விட்டுக்கொண்டிருப்பான். சுவாஸ்ரயமில்லாமல் ஏதோ வேலையை செய்து கொண்டிருப்பான். சுருக்கமாகச் சொன்னால் அவன் அவன் சராசரி மனிதனாக இருப்பான். இதைப் பார்க்கும் அந்தப் பறவை வருத்தப்பட்டு மிகவும் ஏமாற்றத்தோடு செல்லும். இத்தோடு அந்த விளம்பரம் நிறைவுபெறும்.

இந்த விளம்பரம் உணர்த்தும் செய்தி மிக எளிது. நன்றாக இருக்கவேண்டிய அந்தப் பையன், சராசரியாக இருக்கின்றான். அதுதான் அந்தப் பறவைக்கு வருத்தம். கடவுளும் அப்படித்தான் நம்மை பலன் தரக்கூடிய வாழ்வு வாழ இந்த உலகில் படைத்திருக்கின்றோம். நாம் பலன்தரவில்லை என்றால், அது அவருக்கு வருத்தம்தான்.

ஆகவே, தூய ராட்பெர்துஸ் பஸ்காசியசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரை போன்று, அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

25 April 2020

தூய மாற்கு (ஏப்ரல் 25)

இன்றைய புனிதர் : 
(25-04-2020) 

தூய மாற்கு (ஏப்ரல் 25)
நிகழ்வு

மாற்கு அலெக்ஸாண்ட்ரியா நகருக்கு நற்செய்தி அறிவிக்க அனுப்பப்பட்டார். அவர் அந்நகருக்குள் நுழையும்போது அவருடைய காலணிகளில் ஒன்று அறுந்துபோய்விட்டது. எனவே, அவர் அருகே இருந்த ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் சென்று தன்னுடைய காலணியைத் தைத்துத் தருமாறு கேட்டுக்கொண்டார். செருப்பு தைக்கும் தொழிலாளி மாற்குவின் காலணியைத் தைக்கும்போது தவறுதலாக அவர் பயன்படுத்திய ஊசி அவருடைய இடது கையில் பட இரத்தம் கொப்பளித்துக்கொண்டு வெளியே வந்தது. அப்போது அவர் ‘கடவுள் ஒருவரே’ என்று சத்தமாகக் கத்தினார். உடனே மாற்கு அருகே கிடந்த மணலைக் குழப்பி சேறு உண்டாக்கி, அதனை எடுத்து அந்த செருப்பு தைக்கும் தொழிலாளியின் காயம்பட்ட கையில் வைத்தார். அவருடைய கையிலிருந்து வழிந்த இரத்தம் முற்றிலுமாக நின்றுபோனது, அவருக்கு இருந்த வலியும் காணாமல் போனது. இதைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போன அம்மனிதர் மாற்குவிடம், “நீர் யார்?” என்று கேட்டார். அதற்கு மாற்கு, “நான் ஆண்டவர் இயேசுவின் ஊழியர், அவருடைய நற்செய்தியை அறிவிப்பதற்காக இங்கே வந்தவர்” என எடுத்துரைத்தார்.

மாற்குவின் வார்த்தைகளால் தொடப்பட்ட செருப்பும் தைக்கும் தொழிலாளி இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளத் தொடங்கினார். அவர் பெயர் அணியானுஸ் என்பதாகும். அவர் மட்டுமல்ல, அவருடைய குடும்பம் முழுவதும் இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளத் தொடங்கியது. இதனால் அவர்கள் அனைவரும் திருமுழுக்குப் பெற்றார்கள். இதற்கிடையில் இச்செய்தி எப்படியோ நகரத்தவர் காதுகளை எட்ட அவர்கள் மாற்குவை கொல்லத் தீர்மானித்தார்கள். இதனால் மாற்கு அணியானுசை அலெக்ஸாண்ட்ரிய நகரின் ஆயராக திருப்பொழிவு செய்துவிட்டு வேறொரு நகருக்கு நற்செய்தி அறிவிக்கச் சென்றார்.

வாழ்க்கை வரலாறு

மாற்கு எருசலேமில் வாழ்ந்த மரியா (திப 12: 12-16) என்பவருடைய மகன். இவருடைய குடும்பம் செல்வச் செழிப்பான குடும்பம். சிறையில் இருந்த பேதுரு அற்புதமாக தப்பித்து வெளியே வந்தபோது இவருடைய இல்லத்தில்தான் அடைக்கலம் புகுந்தார். இவருடைய நெருங்கிய உறவினர் பர்னபாஸ் என்பவர் ஆவார். விவிலியத்தில் இவர் ஒருசில இடங்களில் ஜான் என்றும் அழைக்கப்படுகின்றார். ஜான் என்பது இவருடைய யூதப் பெயர். மாற்கு என்பது இவருடைய உரோமைப் பெயர்.

மாற்கு கி.பி. 46 ஆம் ஆண்டு பவுல் மேற்கொண்ட அந்தியோக்கு நகர் நோக்கி முதலாவது திருத்தூது பயணத்தில் உடன் சென்றார். ஆனால் பெர்கே என்ற நகரில் பவுலுக்கும் மாற்குவுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மாற்கு தனியாகப் பிரிந்துபோனார். கி.பி. 60 ஆம் ஆண்டு பவுல் உரோமை நகருக்கு வந்தபோது, மாற்கு மீண்டுமாக அவரோடு சேர்ந்துகொண்டார். பவுல் இவரைக் குறித்து குறிப்பிடும் போது “என்னுடைய பணிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர்” (2 திமோ 4:11) என்று குறிப்பிடுகின்றார். மாற்கு பேதுருவின் சீடராகவும், செயலராகவும், விரிவுரையாளராகவும் இருந்து செயல்பட்டு இருக்கிறார். அதனால்தான் பேதுரு இவரை, “மாற்கு என்னுடைய அன்பிற்குரிய மகன்” என்று குறிப்பிடுகின்றார் (1 பேதுரு 5:13). பேதுருவிடமிருந்துதான் மாற்கு கிறிஸ்துவைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொண்டார்.

மாற்கு, இரண்டாம் நற்செய்தி எனப்படும் ‘மாற்கு நற்செய்தியை’ எழுதியிருக்கிறார். இச்செய்தியை அவர் உரோமையில் இருந்த காலகட்டங்களில் உரோமைக் கிறிஸ்தவர்கள் கேட்டுக்கொண்டதால் எழுதினார். இது எழுதப்பட்ட காலம் கி.பி. 65 ஆகும். இந்நற்செய்தி பல்வேறு சிறப்புகளைக் கொண்டிருக்கின்றன. முதலாவது இந்நற்செய்தி நூல் மிகச் சிறியதாக இருந்தாலும் இதில் வருகின்ற நிகழ்வுகள் தத்தூரூபமாக, கண்முன்னே நடப்பது போன்று எழுதப்பட்டிருக்கும். மாற்கு அத்தகைய ஒரு சிறப்பாற்றலைப் பெற்றிருந்தார். இரண்டாவதாக மாற்கு, ஆண்டவர் இயேசுவை ஒரு துன்புறும் ஊழியராக, இறைமகனாகச் சுட்டிக்காட்டுகின்றார். இது வேறு எந்த ஒரு நற்செய்தி நூலுக்கும் இல்லாத ஒரு தனிச் சிறப்பாகும். மூன்றாக மாற்கு திருமுழுக்குக் யோவானை ‘பாலைவனத்தில் ஒலிக்கின்ற குரலாக’ சுட்டிக்காட்டுகின்றார். அதனால்தான் மாற்கு நற்செய்தியாளருக்கு ‘சிங்கம்’ சின்னமாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

மாற்கு அலெக்ஸ்சாண்ட்ரியா, எகிப்து போன்று இடங்களில் நற்செய்தியை அறிவித்தார். இவர் அலெக்ஸ்சாண்ட்ரியா நகரில் நற்செய்தி அறிவிக்கும்போது கயவர்கள் சிலர் இவரைப் பிடித்து சிறையில் அடைத்தார்கள். அடுத்த நாள் இவருடைய கழுத்தில் கயிற்றைக் கட்டி தெருவெங்கும் இழுத்துச் சென்றார்கள். அவர் அப்படி இழுத்துச் செல்லப்படும் போதே உயிர் துறந்தார். அவர் தன்னுடைய உயிரைத் துறந்த நாள் கிபி 68 ஆண்டு, ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதியாகும். பின்னர் மாற்குவின் பணியாளர்கள் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று, வெனிஸ் நகரில் அடக்கம் செய்தார்கள். அவருடைய கல்லறை வெனிஸ் நகரில் இருக்கின்றது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

நற்செய்தியாளர் தூய மாற்குவின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. நற்செய்தி அறிவிப்பில் ஆர்வம்

மாற்கு நற்செய்தியாளர் ஒரு மிகச் சிறந்த நற்செய்தி அறிவிப்பு பணியாளர் என்று சொன்னால் அது மிகையாகாது. எப்படியென்றால் முதலில் அவர் பவுலோடு சேர்ந்து நற்செய்தி அறிவித்தார். அதன்பிறகு தூய பேதுருவோடு நற்செய்தி அறிவிப்புப் பணியைச் செய்தார். இறுதியாக இவர் அலெக்ஸ்சாண்ட்ரிய நகரின் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்ட பிறகு தன்னுடைய உடல், பொருள் ஆவி அத்தனையும் ஒப்புக்கொடுத்து, ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவித்தார். அதற்காகத் தன்னுடைய உயிரையும் கொடுத்தார். அவருடைய விழாவைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிக்கின்றோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஆண்டவர் இயேசு கூறியதாக மாற்கு நற்செய்தியாளர் கூறுவார், “உலகெங்கும் சென்று, படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” (மாற்கு 16:15). ஆகவே, ஆண்டவர் இயேசு சொன்ன கட்டளையை, மாற்கு நற்செய்தியாளர் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை நெறியை நம்முடைய வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ முயல்வோம்.

ஐரோப்பாக் கண்டத்தில் ருட்டெல் நோரிஸ் (Ruddell Norris) என்ற இளைஞர் ஒருவர் இருந்தார். அவருக்கு இயேசுவைப் பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிக்கவேண்டும் என்ற ஆர்வம்தான். இருந்தாலும் அவரிடத்தில் எல்லாரிடத்திலும் எப்படிச் சென்று பேசுவது, அறிவிப்பது என்ற கூச்ச சுபாவம் இருந்தது. அதனால் அவர் ஒரு வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டார். அதாவது விவிலியத்தின் சில பகுதிகளையும், அதன் விளக்க உரைகளையும் துண்டுப் பிரசுரத்தில் அச்சடித்து, அதனை மக்கள் அதிகமாகக் கூடக்கூடிய மருத்தவமனைகள், வழிபாட்டு மையங்கள், பேருந்து நிலையங்கள் போன்றவற்றில் வைத்துவிட்டுச் சென்றார். இதனை எடுத்து படித்தவர்கள் கிறிஸ்துவைப் பற்றியும் அவருடைய போதனையைப் பற்றியும் அதிகமாக அறிந்துகொண்டார்கள்.

ஒருநாள் இவர் துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து, மருத்துவமனையின் ஓர் ஓரத்தில் வைத்துவிட்டுத் போகும்போது பின்னாலிருந்து, “யாரோ ஒரு புண்ணியவாளன் செய்யக்கூடிய இந்த நல்ல காரியத்தினால் நான் கிறிஸ்துவைப் பற்றிய அதிகமாக அறிந்துகொண்டேன்” என்றது. இதைக் கேட்ட ருட்டெல் நோரிஸ் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். தான் செய்யக்கூடிய இந்த சிறிய நற்செயலால் ஒருசிலராவது கிறிஸ்துவைப் பற்றி அறிந்துகொள்கிறார்களே என்று அவர் தன்னுடைய மனதிற்குள் பெருமிதம் கொண்டார்.

கடல் கடந்து சென்று நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்பது இல்லை. நாம் இருக்கும் இடத்தில், நம்மால் முடிந்த அளவு நற்செய்தி அறிவிக்கலாம். அதற்கு மேலே சொல்லப்பட்ட நிகழ்வு ஒரு சான்று.

ஆகவே, தூய மாற்குவின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரைப் போன்று ஆண்டவர் இயேசு பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் எடுத்துரைப்போம். நற்செய்தியாகவே வாழ்வோம். அதன்வழியாக இறைவன் தரக்கூடிய முடிவில்லா வாழ்வைக் கொடையாகப் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

புனித எம்மா (-1038). ஏப்ரல் 19

ஏப்ரல் 19

புனித எம்மா (-1038)
இவர் பதினொன்றாம் நூற்றாண்டில், தற்போதைய பரேமன் என்ற இடத்தில் இருந்த ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தார்.

இளம்வயதில் கடுஞ்சினம் கொள்ளக்கூடிய வராக இருந்தார் இவர்.

இவர் லியூட்ஜர் என்பவருக்கு மணம் முடித்துக் கொடுக்கப்பட்டார். இவர்கள் இருவருக்கும் இறைவன் ஓர் ஆண்குழந்தையைத் தந்தார்.

இப்படி வாழ்க்கை நகர்கையில், இரஷ்யாவிற்குச் சென்ற இவருடைய கணவர் இறந்து போனார். இது இவருடைய வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

இதனால் முன்கோபியாக இருந்த இவர், அமைதியின் வடிவாய் மாறினார்; தன்னிடம் இருந்ததை ஏழைகளுக்கும் பல கோயில்களுக்கும் வாரி வாரி வழங்கத் தொடங்கினார். 

இறுதியாக இவருடைய மகனை இறைப்பணிக்கு அர்ப்பணித்துவிட்டு, நிம்மதியாக இறையடி சேர்ந்தார்.

பல ஆண்டுகளுக்குப் பின் இவருடைய உடல் தோண்டி எடுக்கப்பட்டபோது, இவரது உடல் முழுவதும் சிதைந்து போயிருக்க, கொடுத்துக் கொடுத்துச் சிவந்த இவரது கைகள் மட்டும் அழியாமல் இருந்தன.

சிந்தனை:

கொடுப்பதில் இன்பம், பெறுவதில் இல்லை.

பிறருக்குக் கொடுத்து வாழும்போது, கொடுத்ததைவிட மிகுதியாக நாம் பெறுகிறோம்.

சினம் எழுகிறபோது, அதன் விளைவுகளை எண்ணிப்பார்.

- மரிய அந்தோனிராஜ்

24 April 2020

தூய பிதேலிஸ் (ஏப்ரல் 24)

24 ஏப்ரல் 2020, வெள்ளி 
இன்றைய புனிதர்

தூய பிதேலிஸ் (ஏப்ரல் 24)
வாழ்க்கை வரலாறு

தூய பிதேலிஸ், 1577 ஆம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள சிக்மரின்ஞன் என்னும் இடத்தில் பிறந்தார். இவர் வளர்ந்து ரேபர்க் நகரில் இருந்த பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். பின்னாளில் தான் எங்கு கல்வி பயின்றாரோ அங்கேயே அவர் பேராசிரியராகப் பணிசெய்தார். ஒருசில ஆண்டுகளில் இவர் சட்டம் பயின்று வழக்குரைஞராகவும் பணியாற்றத் தொடங்கினார். அந்தக் காலத்தில் நிறைய ஏழைகள் வழக்குகளைத் தீர்த்து வைக்க போதிய பணமில்லாமல், மிகவும் கஷ்டப்பட்டார்கள். இவற்றையெல்லாம் பார்த்த பிதேலிஸ் அவர்களுக்கு இலவசமாகவே வழக்குகளைத் தீர்த்து வைத்தார். இப்படி அவர் பணம் வாங்காமலே, ஏழைகளின் வழக்குகளை எல்லாம் தீர்த்து வைத்ததால், ‘ஏழைகளின் வழக்குரைஞர்’ என அழைக்கப்படவும் தொடங்கினார். 

தொடர்ந்து வழக்குரைஞர் பணியை செவ்வனே செய்துவந்த பிதேலிஸ், ஒரு கட்டத்தில் இறைவனின் அழைப்பை உணர்ந்தார். எனவே, அவர் 1617 ஆம் ஆண்டு, எல்லாவற்றையும் துறந்து, கப்புசியன் சபையில் துறவியாக வாழத் தொடங்கினார். வழக்குரைஞர் பணியைவிட்டு துறவியாக வாழத் தொடங்கிய காலகட்டங்களில் தான் பெரிய பதவியில் இருந்தோம் என்ற மமதையில் எல்லாம் அவர் இருக்காமல், மிகவும் தாழ்ச்சியோடு பணிசெய்தார். இதனால் சபையில் இருந்த எல்லாருடைய நன்மதிப்பையும் பெற்றார். 

இவருடைய காலத்தில் கால்வினியன், ஸ்விங்கிளியன் போன்ற தப்பறைக் கொள்கைகள் திருச்சபைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகவே இருந்து வந்தன. பிதேலிஸ் அதனைக் கடுமையாக எதிர்த்தார். கால்வினியனிசமோ முன்விதிப்படியே எல்லாமும் நடக்கும், அதாவது யார் யார் விண்ணகம் செல்வார், யார் யார் நரகம் செல்வார் என்பதெல்லாம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டுப்விட்டது என்று சொல்லி வந்தது. அதோடு திருமுழுக்கு, நற்கருணை ஆகிய இரண்டு மட்டும் திருவருட்சாதனங்கள் என்று போதித்து வந்தது. இதனை பிதேலிஸ் மிகக் கடுமையாக எதிர்த்தார். எனவே அந்த தப்பறைக் கொள்கையைப் பரப்பி வந்தவர்கள் பிதேலிசுக்கு எதிரான சதி வேளையில் இறங்கினார்கள். அந்த அடிப்படையில் 1622 ஆம் ஆண்டு, அவரைக் கொலை செய்தார்கள். பிதேலிசுக்கு 1746 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

23 April 2020

புனிதர் அடால்பர்ட். April 23

† இன்றைய புனிதர் †
(ஏப்ரல் 23)

✠ புனிதர் அடால்பர்ட் ✠
(St. Adalbert of Prague)
ஆயர் மற்றும் மறைசாட்சி:
(Bishop and Martyr)

பிறப்பு: 956
லிபைஸ் நாட் ஸிட்லினோ, பொஹேமியா, ஸ்செச்சியா
(Libice nad Cidlinou, Bohemia, Czechia)

இறப்பு: ஏப்ரல் 23, 997
ட்ரூசோ, ப்ருஷியா
(Truso, Prussia)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

புனிதர் பட்டம்: 999
திருத்தந்தை இரண்டாம் சில்வஸ்ட்டர்
(Pope Sylvester II)

முக்கிய திருத்தலம்: 
க்நீஸ்னோ, ப்ராக்
(Gniezno, Prague)

நினைவுத் திருநாள்: ஏப்ரல் 23

பாதுகாவல்:
போலந்து, பொஹேமியா, எஸ்டேர்கோம் உயர்மறைமாவட்டம்
(Poland, Bohemia, Archdiocese of Esztergom)

"வோஜ்டெக்" (Vojtěch) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் அடால்பர்ட், பொஹேமியா'வின் மறை பணியாளரும், "ப்ராக்" மறைமாவட்ட ஆயரும் (Bishop of Prague), "ஹங்கேரிய" (Hungarians), "போல்ஸ்" (Poles) மற்றும் "ப்ருஷியன்" (Prussians) மக்களின் மறைபோதகரும் ஆவார். இவர், "பால்டிக் ப்ருஷியன்" (Baltic Prussians) இன மக்களை கிறிஸ்தவத்திற்கு மனம் மாற்றும் முயற்சியில் மறைசாட்சியாக கொல்லப்பட்டார்.

தற்போது, "செக் குடியரசு” (Czech Republic), “போலந்து” (Poland), “ஹங்கேரி” (Hungary) மற்றும் “ஜெர்மனி” (Germany) ஆகிய நாடுகளால் பெரிதும் போற்றப்படும் புனிதரான அடால்பர்ட், அக்காலத்தில் கிறிஸ்துவின் நற்செய்திகளின் எதிர்ப்பு ஒருபோதும் இவரை சோர்வடையச் செய்யவில்லை.

பொஹெமியாவின் (Bohemia) பிரபுத்துவ குடும்பமொன்றில் பிறந்த இவருடைய தந்தையார் “ஸ்லாவ்னிக்” (Slavník) ஆவார். இவரது தாயார் “ஸ்ட்ரேசிஸ்லாவா” (Střezislava) ஆவார். சிறு வயதிலேயே பெரும் நோயோன்றினால் பாதிக்கப்பட்டு பிழைத்த இவரை கடவுளின் சேவையில் அர்ப்பணித்திட இவரது பெற்றோர் தீர்மானித்திருந்தனர்.

சிறந்த கல்விமானான இவர், தமது ஆரம்ப கல்வியை "புனிதர் அடால்பர்ட்" (Saint Adalbert of Magdeburg) எனும் புனிதரிடம் கற்றார். தமது “உறுதிப்பூசுதல்” (Confirmation) திருவருட்சாதனம் பெரும் நிகழ்வின்போது, தமது ஆசிரியருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ஆசிரியரது பெயரையே தமது ஆன்மீக பெயராக ஏற்றார். 

981ம் ஆண்டு, இவரது ஆசிரியரான "புனிதர் அடால்பர்ட்" (Saint Adalbert of Magdeburg) மரித்ததும், இவர் பொஹேமியா திரும்பினார். பிறகு, "ப்ராக்" மறைமாவட்ட ஆயரும் (Bishop of Prague) “டயட்மார்” (Dietmar of Prague) என்பவர், இவரை கத்தோலிக்க குருவாக அருட்பொழிவு செய்வித்தார். 982ம் ஆண்டு, ஆயர் “டயட்மார்” (Dietmar of Prague) மரித்துப் போகவே, தமது 27 வயதிலேயே ப்ராக் (Prague) மறைமாவட்டத்தின் ஆயராக இவர் தேர்வு செய்யப்பட்டார். அவரது நற்பணிகளை எதிர்த்தவர்களின் வற்புறுத்தலால் எட்டு வருடங்களின் பின்னர் நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது.

காலப்போக்கில், ப்ராக் மக்கள் அவரை தங்களது ஆயராக திரும்பி வர வேண்டினார்கள். ஆனால், குறுகிய காலத்திலேயே ஆலயத்தின் பரிசுத்தம் கெடும் வகையில், விபச்சார குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண்ணை கையை பிடித்து இழுத்து மான பங்கம் செய்ததாக பொய்க்குற்றம் சாட்டப்பட்டு மீண்டும் நாடு கடத்தப்பட்டார்.

ஹங்கேரியில் சிறிது காலம் மறைபோதனை செய்த பின்னர், "பால்டிக்" கடற்கரையோரம் (Baltic Sea) வசித்த மக்களுக்கு நற்செய்தி போதிக்க சென்றார். அவரும் அவருடன் சென்ற இரு நண்பர்களும் "பாகனீய குருக்களால்" (Pagan Priests) மறைசாட்சியாக கொல்லப்பட்டனர்.