புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

16 August 2020

ஆகஸ்ட் 16)✠ புனிதர் ஆரோக்கியநாதர் ✠(St. Roch)

† இன்றைய புனிதர் †
(ஆகஸ்ட் 16)

✠ புனிதர் ஆரோக்கியநாதர் ✠
(St. Roch)

ஒப்புரவாளர்/ யாத்திரி :
(Confesser/ Pilgrim)
பிறப்பு: கி.பி 1348
மான்ட்பெல்லியர், மஜோர்கா இராச்சியம்
(Montpellier, Kingdom of Majorca)

இறப்பு: ஆகஸ்ட் 16, 1376/1379
வோகெரா, சவோய் கவுண்டி
(Voghera, County of Savoy)

ஏற்கும் சமயம்/ சபை:
கத்தோலிக்க திருச்சபை (தூய ஃபிரான்சிஸின் மூன்றாம் வரிசை)
(Catholic Church (Third Order of Saint Francis))
ஆங்கிலிக்கன் ஒன்றியம்
(Anglican Communion)
அக்லிபயன் திருச்சபை
(Aglipayan Church)

புனிதர் பட்டம்:
பிரபலமான ஆர்வத்தால்; திருத்தந்தை பதினான்காம் கிரகோரி (Pope Gregory XIV) அவர்களால் "ரோமானிய தியாகவியலில்" (Roman Martyrology) சேர்க்கப்பட்டது

முக்கிய திருத்தலம்: சான் ரோகோ (San Rocco), வெனிஸ் (Venice), இத்தாலி (Italy)

நினைவுத் திருநாள்: ஆகஸ்ட் 16

பாதுகாவல்:
சர்மாடோ (Sarmato), அல்தரே இ கிரிஃபல்கோ (Altare e Girifalco), இத்தாலி (Italy). காலரா (Invoked against Cholera), தொற்றுநோய் (Epidemics), முழங்கால் பிரச்சினைகள் (Knee problems), பிளேக் (Plague), தோல் நோய்கள் (Skin diseases. மணமாகாத இளைஞர்களின் பாதுகாவலர் (Patron Saint of Bachelors), நோயுற்ற கால்நடைகள் (Diseased cattle), நாய்கள் (Dogs), பொய்யாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் (Falsely accused people), செல்லாதவை (Invalids), இஸ்தான்புல் (Istanbul), அறுவை சிகிச்சை நிபுணர்கள் (Surgeons), ஓடு தயாரிப்பாளர்கள் (Tile-makers), கல்லறைகள் (Gravediggers), பழைய பொருட்கள் விற்பனையாளர்கள் (Second-hand dealers), யாத்ரீகர்கள் (Pilgrims), வக்கீல்கள் (Apothecaries), கலூக்கன் ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டம் (Roman Catholic Diocese of Kalookan)

புனிதர் ஆரோக்கியநாதர் அல்லது புனிதர் ரோச் அல்லது புனிதர் ராக், ஒரு கிறிஸ்தவப் புனிதர் ஆவார். இவரின் விழா நாள் ஆகஸ்ட் மாதம், 16ம் நாளாகும். ஆங்கிலத்தில் இவரை ராக் என்றும் கிளாஸ்கோ என்றும்,, ஸ்காட்லாந்தில் ரோலோக்ஸ் என்றும் அழைப்பர். இவர் குறிப்பாக கறுப்புச் சாவுக்கு எதிராகப்பாதுகாவல் அளிப்பவராக நம்பப்படுகின்றார். மேலும் இவர் நாய்களுக்கும், தவறாகக்குற்றம் சாட்டப்பட்டோருக்கும் பாதுகாவலராவார்.

வாழ்க்கைச் சுருக்கம்:
இவர் மஜோர்க்கா பேரரசின் (Kingdom of Majorca) மொன்ட் பெலியரில் (Montpellier) கி.பி. சுமார் 1295ம் ஆண்டு பிறந்திருக்கக்கூடும். இவரின் தந்தை அந்த நகரின் ஆளுனராவார். இவரின் பிறப்பின்போது இவரின் மார்பில் ஒரு சிலுவை வடிவில் சிவப்பு நிற மச்சம் இருந்ததாக நம்பப்படுகின்றது. இவரின் இருபதாம் அகவைக்குள் இவரின் பெற்றோர் இருவரும் இறந்தனர். இவரின் தந்தை, தாம் இறப்பதற்கு முன், இவரை நகரின் ஆளுனராக்கினார். ஆயினும் தந்தையின் இறப்புக்குப்பின்பு தன் சொத்துக்களை விற்று ஏழைகளுக்கு அளித்தார். தனது ஆளுனர் பதவியினை தன் மாமாவுக்கு அளித்துவிட்டு இத்தாலிக்கு திருப்பயணம் மேற்கொண்டார். அச்சமயம் இத்தாலி கறுப்புச் சாவினால் பாதிக்கப்பட்டிருந்தது. அங்கே பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இவர் பணிபுரிந்தார். பலரை அச்சமயத்தில் சிலுவை அடையாளம் வரைந்து குணமாக்கினார் என்பர். இத்தாலியினை சுற்றியுள்ள பல ஊர்களில் இவர் சேவை செய்தார்.

பியாசென்சா (Piacenza) என்னும் ஊரில் பணியாற்றியபோது இவருக்கு அந்த நோய் பிடித்தது. இதனால் இவர் ஊருக்கு வெளியே காட்டில் வனவாசியாக வாழ்ந்தார். ஒரு புதுமையால் இவரின் வசிப்பிடத்தை அறிந்த காத்ஹார்ட் (Gothard Palastrelli) என்பவர் இவருக்கு உதவினார். நலமடைந்தப்பின்னர், தன் சொந்த ஊர் திரும்பினார். அங்கே தாம் யார் என வெளிப்படுத்தாததால் அவரை ஒற்றர் என தவறாகக் கருதிய அவரின் மாமா இவரை சிறையிலடைத்தார். அச்சிறையிலேயே ஐந்தாண்டுகளுக்குப்பின்னர் இவர் இறந்தார். இவரின் மார்பில் இருந்த மச்சமும், இவரிடம் இருந்த ஒரு ஆவணமும் இவரை நகர மக்களுக்கு அடையாளம் காட்டியது. இவரின் அடக்கச்சடங்கு பொதுநிகழ்வாக நடத்தப்பட்டது. இவரின் இறப்புக்குப்பின்பு பல புதுமைகள் இவரின் பெயரால் நிகழ்ந்தன என்பர்.

கி.பி. 1414ம் ஆண்டு, காண்ஸ்தான்சு பொதுச்சங்கம் (Council of Constance) கூடியபோது பிளேக் (Plague) நோய் அந்த நகரினை தாக்கியது. அதனால் அச்சங்கத்தினர் மக்கள் அனைவரும் இவரை நோக்கி மன்றாடப்பணித்தனர். இதனால் விரைவாக நோய் நீங்கியது என்பர். 1485ம் ஆண்டு, இவரின் மீப்பொருட்கள் வெனிஸ் (Venice ) நகருக்கு கொணரப்பட்டது. அங்கேயே அவை இன்றளவும் உள்ளது.

இவர் பொதுவாக ஃபிரான்சிஸ்கன் மூன்றாம் (Third Order of Saint Francis) சபையின் உறுப்பினர் எனக்கருதப்பட்டாலும், அதனை நிருவ எவ்வகைச்சான்றும் இல்லை. உரோமை புனிதர்கள் பட்டியலில் இவரின் பெயர் திருத்தந்தை பதினான்காம் கிரகோரியால் (Pope Gregory XIV) சேர்க்கப்பட்டது. ஆகஸ்ட் மாதம், 16ம் தேதிக்கான திருப்புகழ்மாலையில் இவருக்குறியப்பகுதிக்கு அனுமதியளித்தார்.

நமது நாட்டில், தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இவரது பெயரால் தேவாலயங்கள் உள்ளன.
† Saint of the Day †
(August 16)

✠ St. Roch ✠

Pilgrim:

Born: 1348 AD
Montpellier, Kingdom of Majorca

Died: August 16, 1376,/ 1379
Voghera, County of Savoy

Venerated in:
Catholic Church (Third Order of Saint Francis)
Anglican Communion
Aglipayan Church

Canonized:
By popular fervor; added to the Roman Martyrology by Pope Gregory XIV

Major shrine: San Rocco, Venice, Italy

Feast: August 16

Patronage:
Sarmato, Altare e Girifalco, Italy. Invoked against Cholera, Epidemics, Knee problems, Plague, Skin diseases. Patron Saint of bachelors, Diseased cattle, Dogs, Falsely accused people, Invalids, Istanbul, Surgeons, tile-makers, Gravediggers, Second-hand dealers, Pilgrims, Apothecaries, Roman Catholic Diocese of Kalookan

Saint Roch or Rocco was a Catholic saint, a confessor whose death is commemorated on 16 August and 9 September in Italy; he is especially invoked against the plague. He may also be called Rock in English, and has the designation of St Rollox in Glasgow, Scotland, said to be a corruption of St Roch's Loch, which referred to a small loch once near a chapel dedicated to St. Roch in 1506.

He is a patron saint of dogs, falsely accused people, bachelors, and several other things. He is the patron saint of Dolo (near Venice) and Parma. He's also the patron of Casamassima, Cisterna di Latina and Palagiano, Italy.

Saint Roch is known as "San Roque" in Spanish, including in many now-English-speaking areas, such as the Philippines.

St. Roch was born with an unusual and deep red mark on his chest in the shape of a cross, a sign that the Blessed Virgin Mary had heard and answered his mother's prayers for her barrenness to be healed. As a child St. Roch was deeply religious, fasting twice a week after the example of his pious mother. His parents died when he was twenty years of age, after which he gave his inheritance to the poor, handed the government of the city over to his uncle, and began a new life as a poor mendicant pilgrim.

Free from all earthly cares, St. Roch joined the Third Order Franciscans, donned the familiar pilgrim's garb (a common practice of popular piety at the time), and set out on a pilgrimage to visit and pray at the holy places in Rome.

When he came upon the town of Acquapendente near Viterbo, he saw that it was badly struck by the black plague which was wreaking havoc across Europe. He sojourned there for a time to care for the sick both in private homes and in the hospitals—even though doing so was dangerous for himself.

Instead of contracting the highly contagious disease, St. Roch cured many people by simply making the Sign of the Cross over them. He continued his charitable work until the disease was halted from spreading further in the village, after which he continued on his pilgrimage. His miraculous healing power evidenced itself in the same manner in every plague-infested town that he passed through on his way to Rome, and also in Rome itself.

When his travels brought him to the owner of Piacenza, he discovered that he was no longer spared from the deadly disease and finally contracted it in the leg. Instead of burdening anyone with his sickness, he commended himself to God and awaited his death in a remote and abandoned forest hut. Providentially, a local count's hunting dog found and befriended him, bringing him food daily and licking his wounds. A spring arose nearby providing St. Roch with fresh water.

The count, one day following his dog into the woods, discovered and aided the holy pilgrim. Slowly St. Roch's health was restored, after which he received divine inspiration that he should return to his native Montpellier.

Once there he found the city at war. He refused to disclose his identity to the soldiers so that he could remain poor and unknown, having renounced his former life as the son of the governor. But his obfuscation aroused suspicion, and he was accused of being a spy disguised as a pilgrim. St. Roch did not defend himself against these charges, not wishing to reveal his true identity, and instead entrusted himself completely to God's will.

St. Roch was cast into prison by his own uncle, who failed to recognize his nephew's altered appearance. According to legend, St. Roch was forgotten and abandoned in prison, but not by God, who sent angels to minister to him while he was held in captivity. He died there five years later.

As told by a Franciscan hagiographer, Marion A. Habig, O.F.M.:

      "When he felt that his end was drawing near, Saint Roch asked that a priest might come and administer the last sacraments. The priest, on entering the prison, beheld it supernaturally lighted up and the poor captive surrounded with a special radiance. As death claimed its victim, a tablet appeared on the wall on which an angelic hand wrote in golden letters the name of Roch and the prediction that all who would invoke his intercession would be delivered from the plague. Informed of all that took place, Saint Roch's uncle came to the prison and, shortly after, also the governor's mother, that is, Roch's grandmother. She identified the dead man as her grandson by the birthmark of the red cross on his breast. They gave him a magnificent funeral and had a church built in his honor, in which his body was entombed. His veneration was approved by several popes and soon spread throughout Europe."

Later, during the Council of Constance in 1414, the plague broke out again in Rome. The Council Fathers turned to St. Roch, the patron against the plague, and arranged that prayers and public processions be held in his honor, after which the plague ceased.

Because of his patronage against infectious disease, St. Roch was a highly-regarded saint in the late Middle Ages, especially in those Italian towns in which he exercised his healing powers. Many of this town have chosen him as their patron.

St. Roch is often depicted as a pilgrim with a walking staff and seashell (the symbol of a pilgrim), an open sore on his leg, an angel by his side, and a dog at his feet. He is the patron saint of dogs, dog owners, knee problems, surgeons, invalids, bachelors, diseased cattle, and against cholera, plague, skin rashes and diseases, contagious diseases, pestilence, and epidemics.

அரசர் முதலாம் ஸ்டீபன் Stephen I von Ungarnஹங்கேரியின் தேசிய புனிதர் August 16

இன்றைய புனிதர் :
(16-08-2020)

அரசர் முதலாம் ஸ்டீபன் Stephen I von Ungarn
ஹங்கேரியின் தேசிய புனிதர்
பிறப்பு : 969 
கிரான் Gran, ஹங்கேரி
    
இறப்பு : 15 ஆகஸ்டு 1038,
ஹங்கேரி
பாதுகாவல்: ஹங்கேரி

இவர் ஏறக்குறைய 1000 ஆம் ஆண்டில் திருமுழுக்கு பெற்று, ஹங்கேரி நாட்டு மன்னராக முடிசூட்டப்பட்டார். தனது 20 ஆம் வயதில் பவேரியா நாட்டு அரசர் புனித 2 ஆம் ஹென்றியின் சகோதரி கிசேலா(Giesela) என்பவரை திருமணம் செய்துகொண்டார். தன் தந்தையின் இறப்பிற்குப்பின் "மாகியர்" (Magiar) என்ற சாதியினருக்கு தலைவராக பொறுப்பேற்றார். தம் மக்களை ஆட்சிபுரிவதில் நீதியும், நல்லிணக்கமும், இறைப்பற்றும் கொண்டு விளங்கினார். திருச்சபையின் சட்டதிட்டங்களை மிக நுணுக்கமாக கடைபிடித்தார். தன் நாட்டு மக்களின் நலனில் அக்கறை கொண்டு, அவர்களின் தேவைகளை நிறைவேற்றி வாழ்ந்தார். 

இவர் அனுமதியின்றி தவித்த மற்ற நாடுகளுடன் தொடர்புகொண்டு, அமைதியை ஏற்படுத்தினார். தன் நாட்டு மக்களை இறையுணர்வில் வளர்த்தெடுத்தார். நாடு முழுவதும் பல புதிய மறைமாவட்டங்களை உருவாக்கினார். பல துறவற சபையினரை தன் நாட்டிற்கு வரவழைத்து, கிறிஸ்துவ விசுவாசத்தைப் பரப்பினார். பல துறவற மடங்களையும், ஆலயங்களையும் கட்டினார். தன் நாட்டு மக்கள் அனைவரும் கிறிஸ்துவர்களாக வாழ வழிவகுத்தார். கிறிஸ்துவர் அல்லாதவர்களுடன் தொடர்புகொள்வதை தடுத்தார். செபம், தவம், இவைகளில் வளர நாட்டு மக்களை துறவிகள், குருக்களின் வழியாக தூண்டினார். 

ஸ்டீபன் தன் நாடு முழுவதிலும் பல குருக்களையும், கன்னியர்களையும், ஆயர்கலையும் உருவாக்கினார். நாடு முழுவதிலுமே திருச்சபையின் வாழ்வை பெரிதும் ஊக்கப்படுத்தி வளர்த்தார். ஹங்கேரி நாட்டில் திருச்சபை வளர அன்று இவர் இட்ட உரமானது. இன்றும் தளைத்து வளர்ந்து கிறிஸ்துவ நாடாக திகழ்கின்றது. இவரிடம் இறைவன் ஒப்படைத்த மக்களை, அவர் வழியில் நடத்தி சென்றார். இவர் செய்த இறைப்பணியால் இவர் இறந்தபிறகும் இவரின் வலது கையானது. அழியாமல் இருந்தது. தன் வாழ்நாள் முழுவதுமே தாழ்ச்சியிலும், நீதியை கடைப்பிடிப்பதிலும், அமைதியிலும் மிக சிறந்தவராக திகழ்ந்தார். 


செபம்:
முதலும் முடிவுமான இறைவா! உம்மையே முழுமுதலாக கொண்டு, உம்மை மட்டுமே தன் நாட்டு மக்களில் மையமாக வைத்து, வாழ்ந்த புனித ஸ்டீபனின் அருஞ்செயல்களை நினைத்து, உமக்கு நன்றி நவில்கின்றோம், அவர் காட்டிய இறைவழியில் அம்மக்களை நீர் எந்நாளும் உடனிருந்து வழிநடத்தியருள் வேண்டுமாய் இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Saint of the Day : (16-08-2020)

St. Stephen of Hungary

St. Stephen was from a very noble family and was born in the year 997 to father Prince Geza and mother Sarolt of Hungary. He married Giselle, the daughter of Duke Henry-Ii of Bavaria. He took very sincere efforts to spread Christianity and extended patronage to Church leaders. St. Stephen was anointed as king of Hungary by Pope Sylvester-II on the Christmas day in the year 1001, with the consent of the Holy Roman Emperor Otto-III. St. Stephen dedicated his crown to Holy Mary, during the coronation. His only son Emeric died after being wounded in a hunting expedition in the year 1031. Therefore St. Stephen was having no son left to rule his Kingdom. So in his death bed he raised the Holy Crown by his right hand and prayed to the Holy Mary to take the Hungarians as Her subjects and to become the Queen of Hungarians. He died on August 15, 1038, on the commemoration day of the Assumption of Mary.

St. Stephen’s right hand is kept as a relic and is called as the Holy Right by Hungarians. His right hand remains uncorrupted due to the reason that with this hand he raised the Holy Crown towards heaven and prayed to the Virgin Mary. The right hand is now in the Basilica of King Saint Stephen in Budapest.

He is venerated as the patron saint of masons, stone cutters and brick layers. He was canonized by Pope Gregory-VII on August 20, 1083.

---JDH---Jesus the Divine Healer---
† இன்றைய புனிதர் †
(ஆகஸ்ட் 16)

✠ ஹங்கேரியின் புனிதர் முதலாம் ஸ்டீஃபன்  ✠
(St. Stephen I of Hungary)

ஹங்கேரியின் அரசர்:
(King of Hungary)

பிறப்பு: கி.பி. 975
எஸ்டர்காம், ஹங்கேரி
(Esztergom, Principality of Hungary)

இறப்பு : ஆகஸ்டு 15, 1038,
எஸ்டர்காம், ஹங்கேரி அரசு
(Esztergom or Székesfehérvár, Kingdom of Hungary)

புனிதர் பட்டம் : 1083
திருத்தந்தை ஏழாம் கிரகோரி
(Pope Gregory VII)

பாதுகாவல்: ஹங்கேரி

நினைவுத் திருநாள் : ஆகஸ்ட் 16

புனிதர் முதலாம் ஸ்டீஃபன், கி.பி. 997ம் ஆண்டு முதல் கி.பி. 1000 அல்லது 1001ம் ஆண்டு வரையான காலத்தில் பதவியிலிருந்த ஹங்கேரியர்களின் கடைசி மகா இளவரசரும் (Grand Prince of the Hungarians), கி.பி. 1000 அல்லது 1001ம் ஆண்டு முதல், 1038ம் ஆண்டில் அவர் இறக்கும் வரை ஆட்சியிலிருந்த ஹங்கேரியின் முதல் அரசனும் (First King of Hungary) ஆவார். இவர் பிறந்தபோது, இவருக்கு பேகனிய பெயரான (Pagan name) “வஜ்க்” (Vajk) என்ற பெயர் இடப்பட்டது. இவரது திருமுழுக்கு பற்றின விவரங்கள் தெரியவில்லை. ஹங்கேரி நாட்டின் மகா இளவரசர் “கேஸா” மற்றும் “சரோல்ட்” (Grand Prince Géza and Sarolt) ஆகியோர் இவரது பெற்றோர் ஆவர். இவரது பெற்றோர் இருவருமே திருமுழுக்கு பெற்றிருப்பினும், இவர்களது குடும்ப உறுப்பினர்களில், பக்தியுள்ள கிறிஸ்தவரான முதல் உறுப்பினர் ஸ்டீஃபன் ஆவார். தூய ரோம பேரரசன் “இரண்டாம் ஹென்றியின்” (Henry II, Holy Roman Emperor) சகோதரியான “கிசேலாவை” (Gisela of Bavaria) திருமணம் செய்துகொண்டார்.

கி.பி. 997ம் ஆண்டு, தமது தந்தை இறந்ததன் பிறகு, ஆட்சி கட்டிலில் அமர்வதற்காக (Pagan warriors) என்ற படை வீரர்களின் துணை கொண்டிருந்த 'கொப்பாணி' (Koppány) என்ற தமது உறவினர்களுக்கெதிராக போராட வேண்டியிருந்தது. தமது உறவினர்களான கொப்பாணியை வென்ற ஸ்டீஃபன், திருத்தந்தை இரண்டாம் சில்வெஸ்ட்டர் (Pope Sylvester II) அவர்கள் அனுப்பிய கிரீடத்தை அணிந்து ஹங்கேரி நாட்டு மன்னராக முடிசூட்டப்பட்டார். ஹங்கேரி நாட்டின் கடைசி இளவரசரும் முதலாம் அரசரும் இவரேயாவார்.

தன் தந்தையின் மரணத்தின்பின் "மாகியர்" (Magiar) என்ற சாதியினருக்கு தலைவராக பொறுப்பேற்றார். தம் மக்களை ஆட்சி புரிவதில் நீதியும், நல்லிணக்கமும், இறைப்பற்றும் கொண்டு விளங்கினார். திருச்சபையின் சட்டதிட்டங்களை மிக நுணுக்கமாக கடைபிடித்தார். தன் நாட்டு மக்களின் நலனில் அக்கறை கொண்டு, அவர்களின் தேவைகளை நிறைவேற்றி வாழ்ந்தார்.

இவர் அமைதியின்றி தவித்த மற்ற நாடுகளுடன் தொடர்புகொண்டு, அமைதியை ஏற்படுத்தினார். தன் நாட்டு மக்களை இறையுணர்வில் வளர்த்தெடுத்தார். நாடு முழுவதும் பல புதிய மறைமாவட்டங்களையும், மூன்று பெனடிக்டின் மடாலயங்களையும் உருவாக்கினார். பல துறவற சபையினரை தன் நாட்டிற்கு வரவழைத்து, கிறிஸ்தவ விசுவாசத்தைப் பரப்பினார். பல துறவற மடங்களையும், ஆலயங்களையும் கட்டினார். தன் நாட்டு மக்கள் அனைவரும் கிறிஸ்தவர்களாக வாழ வழிவகுத்தார். கிறிஸ்தவர் அல்லாதவர்களுடன் தொடர்புகொள்வதை தடுத்தார். செபம், தவம், இவைகளில் வளர நாட்டு மக்களை துறவிகள், குருக்களின் வழியாக தூண்டினார்.

ஸ்டீஃபன் தன் நாடு முழுவதிலும் பல குருக்களையும், கன்னியர்களையும், ஆயர்களையும் உருவாக்கினார். நாடு முழுவதிலுமே திருச்சபையின் வாழ்வை பெரிதும் ஊக்கப்படுத்தி வளர்த்தார். ஹங்கேரி நாட்டில் திருச்சபை வளர அன்று இவர் இட்ட உரமானது. இன்றும் தளைத்து வளர்ந்து கிறிஸ்தவ நாடாக திகழ்கின்றது. இவரிடம் இறைவன் ஒப்படைத்த மக்களை, அவர் வழியில் நடத்தி சென்றார். தன் வாழ்நாள் முழுவதுமே தாழ்ச்சியிலும், நீதியை கடைப்பிடிப்பதிலும், அமைதியிலும் மிகச் சிறந்தவராக திகழ்ந்தார். 

கி.பி. 1038ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 15ம் நாளன்று மரித்த ஸ்டீஃபன், “ஸ்செக்ஸ்ஃபெர்வர்” (Székesfehérvár) எனுமிடத்தில் கட்டப்பட்டு, அன்னை மரியாளுக்கு அர்ப்பணித்திருந்த பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார். அவருடைய இறப்பு, பல தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டுப் போர்களை ஏற்படுத்தியது. கி.பி. 1083ம் ஆண்டில், முதலாம் ஸ்டீஃபனும், அவரது மகனான “எமெரிக்கும்” (Emeric), “க்ஸனாட்” (Csanád) மறைமாவட்டத்தின் ஆயர் “கெரார்ட்” (Gerard) ஆகிய மூவரும் திருத்தந்தை “ஏழாம் கிரகோரியால்” (Pope Gregory VII) புனிதர்களாக அருட்பொழிவு செய்விக்கப்பட்டனர். ஸ்டீஃபன், ஹங்கேரி மற்றும் அண்டை பிரதேசங்களில் பிரபலமான புனிதர் ஆவார். ஹங்கேரியில், அவருடைய நினைவுத் திருவிழா (ஆகஸ்ட் 20 அன்று கொண்டாடப்படுகிறது) மாநிலம் உருவாக்கப்பட்டதை நினைவுகூரும் ஒரு பொது விடுமுறை நாளுமாகும்.

கன்னி மரியாவின் விண்ணேற்புப் பெருவிழா August 15

இன்று திருஅவையானது புனித கன்னி மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. புனித கன்னி மரியா தனது மண்ணக வாழ்வை முடித்துகொண்டவுடன், உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை இவ்விழா நமக்கு எடுத்துரைக்கிறது.

வரலாற்றுப் பின்னணி:
கி.பி.நான்காம் நூற்றாண்டிலிருந்து கீழைத் திருஅவையில் இவ்விழா டார்மிஷன் என்ற பெயரில் அதாவது ‘அன்னை ஆண்டவரில் துயில் கொள்கிறார்’ என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருவதற்கான வரலாற்றுக் குறிப்புகள் இருக்கின்றன. அதன்பிறகு எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த யோவான் டமாசின் என்பவர், “அன்னை மரியா ஆண்டவர் இயேசுவைப் பெற்றெடுப்பதன் பொருட்டு, கருவிலே பாவக்கறையின்றி உதித்ததால், அவர் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்” என்று கூறுவார்.

1568 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த ஐந்தாம் பயஸ் என்பவர் மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவை உலகம் முழுவதும் கொண்டாடப் பணித்தார். 1950 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் நாள், மரியா உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்ற நம்பிக்கைப் பிரகடனமானது இயற்றப்பட்டது. பின்னர் இரண்டாம் வத்திக்கான் சங்கமானது, “மாசற்ற புனித கன்னி மரியா மண்ணக வாழ்வை முடித்ததும், உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்று கட்டியம் கூறியது (திச 59). இவ்வாறுதான் புனித கன்னி மரியாவின் விண்ணேற்புப் பெருவிழா உலக முழுவதும் கொண்டாடும் நிலை உருவானது.

ஆகஸ்ட் 15)✠ புனிதர் டார்ஸிசியஸ் ✠(St. Tarcisius)

† இன்றைய புனிதர் †
(ஆகஸ்ட் 15)

✠ புனிதர் டார்ஸிசியஸ் ✠
(St. Tarcisius)

நற்கருணை மறைசாட்சி:
(Martyr of the Eucharist)
பிறப்பு: தெரியவில்லை

இறப்பு: கி.பி. 3ம் நூற்றாண்டு
ரோம் (Rome)

ஏற்கும் சபைகள்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
ஆங்கிலிக்கன் ஒன்றியம்
(Anglicanism)

முக்கிய திருத்தலம்:
கேபிட்டில் இருக்கும் சான் சில்வெஸ்ட்ரோ, ரோம்
(San Silvestro in Capite, Rome)

நினைவுத் திருநாள்: ஆகஸ்ட் 15 (ரோமன் தியாகவியல்)

பாதுகாவல்: பலிபீட சிறுவர்கள் (Altar Servers) மற்றும் புதுநன்மை அல்லது, முதல் நற்கருணை (First Communicants) வாங்குவோர்

புனிதர் டார்ஸிசியஸ், கி.பி. 3ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த, ஆதிகால கிறிஸ்தவ திருச்சபையின் மறைசாட்சி ஆவார். அவரைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை எனினும், கி.பி. 4ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆட்சிபுரிந்த,  "திருத்தந்தை முதலாம் டமாஸஸ்" (Pope Damasus I) அவர்களது கவிதைத் தொகுப்புக்களிலிருந்து இவரைப்பற்றின விபரங்கள் வெளிப்பட்டன.

டார்ஸிசியஸ் ஒரு சிறுவனாக இருந்தபோது, ரோமப் பேரரசு, பேரரசன் வலேரியன் (Valerian) என்பவனால் ஆளப்பட்டது. கிறிஸ்தவர்கள் இயேசுவை நேசிப்பதாலும், அவருடைய போதனையினாலும் அவர் வெறுத்தார். நிலைமைகள் மோசமாக இருந்த அழுக்கு சிறைகளில் அவர்கள் தூக்கி எறியப்பட்டனர். தியாகிகளாக இருந்த அவர்களில் பலர், அவர்களின் கிறிஸ்தவ நம்பிக்கைகளுக்காக கொல்லப்பட்டனர்.

இந்த கிறிஸ்தவர்கள் எவ்வாறு மறைசாட்சிகள் ஆனார்கள்? அவர்களில் சிலர் அடித்து கொல்லப்பட்டனர். மற்றவர்கள் எரிக்கப்பட்டனர். மற்றும், அனைத்தையும் விட மிகக் கொடூரமானது, அவர்களில் பலர் "கொலிசியம்" (Coliseum) என்று அழைக்கப்படும் ஒரு பெரிய அரங்கில் வீசப்பட்டனர் (இது இன்றும் உள்ளது). அங்கே அவர்கள் சிங்கங்களால் உண்ணப்பட்டனர். இந்த கொடூரமான கொடுமையைப் பார்த்து அதை ரசித்த சக்கரவர்த்திக்கும் அவரது நண்பர்களுக்கும் இது ஒரு விளையாட்டு போல இருந்தது. இருப்பினும், கிறிஸ்தவர்கள் இயேசுவை விசுவாசிப்பதனால், இவை அனைத்தையும் சகித்தார்கள்.

பேரரசனின் ஆட்களிடம் பிடிபடுவதைத் தவிர்ப்பதற்கு, கிறிஸ்தவர்கள் ஜெபிக்க விரும்பினால், தங்கள் வீடுகளில் ரகசியமாக சந்திக்க வேண்டியிருந்தது. நிலைமை மிகவும் ஆபத்தானதாக மாறியபோது, அவர்கள் நிலத்தடி அறைகள் மற்றும் "கேடகோம்ப்ஸ்" (Catacombs) எனப்படும் பத்திகளைக் கட்டினர். இதனால் அவர்கள் பாதுகாப்புடன், ஒன்றாக சந்திக்க முடிந்தது. திருப்பலிகளை ரகசியமாக கொண்டாட, அவர்கள் "கிரிப்ட்கள்" (Crypts) என்று அழைக்கப்படும் தரையில் கீழே பெரிய அறைகளை கட்ட வேண்டியிருந்தது. அங்கு அவர்கள் இறந்தவர்களையும் அடக்கம் செய்தனர்.

கேடகோம்ப்களுக்கான நுழைவாயில்கள் மறைக்கப்பட்டிருந்தன. அவை வழக்கமாக நகரத்திற்கு வெளியே கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் இருந்தன. இதே கேடகோம்ப்கள் இன்றும் உள்ளன. அவற்றை ரோம் செல்லும் பார்வையாளர்கள் காணலாம்.

அங்கேதான் அவர்கள் ஜெபிக்கவும், தங்கள் விசுவாசத்தைப் படிக்கவும், திருப்பலி கேட்கவும், புனித ஒற்றுமையைப் பெறவும் கூடினர். தைரியமான ஆயர்கள் மற்றும் பாதிரியார்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்ததால் இது சாத்தியமானது. இதனால் மக்கள் இயேசுவின் உடலையும் இரத்தத்தையும் நற்கருணைக்குள் பெற முடிந்தது. கேடகோம்ப்களின் நுழைவாயில்களை அறிவதை இரகசியமாக பாதுகாப்பதில் கிறிஸ்தவர்கள் எவ்வளவு கவனமாக இருந்தபோதிலும், சில சமயங்களில் புறமதத்தினர் அவற்றைக் கண்டுபிடித்தனர். எனவே, ஏராளமான கிறிஸ்தவர்கள் பிடிபட்டனர் அல்லது சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கு, ஒவ்வொரு நாளும், அவர்கள் கொல்லப்படுவார்கள் என்று எதிர்பார்த்தார்கள். அவர்கள் அனுபவித்த துன்பங்கள் ஏராளமாக இருந்தபோதிலும், அவர்கள் நற்கருணை இயேசுவைப் பெற விரும்பினார்கள்.

ஒரு நாள், ஆயர் ஒருவர், இதுபோன்ற ஒரு கேடகோம்ப்பில், ஒரு மாபெரும் புனித திருப்பலியினை கொண்டாடவிருந்தபோது, சிறையில் கைதிகளாயிருந்த அவரது சக ஆயர்கள் மற்றும் பாதிரியார்களிடமிருந்து அவருக்கு ஒரு கடிதம் வந்தது. தயவுசெய்து புனித நற்கருணையை அவர்களுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டனர். இயேசு அவர்களுடன் இருந்தால், அவர்களது அச்சம் குறைவாக இருக்கும், அவரை நேசிக்கும் காரணத்துக்காக ஒரு தியாகியின் மரணத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வார்கள் என்பதை அவர்கள் அறிந்தார்கள். புனித நற்கருணையை கைதிகளிடமும் நோயுற்றவர்களிடமும் எடுத்துச் செல்வது மிகவும் ஆபத்தானது என்பதால், ஆயருக்கு இது ஒரு பிரச்சினையாக இருந்தது.

புனித திருப்பலியினை தொடங்குவதற்கு முன், ஆயர் அங்குள்ள மக்களிடம், நற்கருணை இயேசுவை கைதிகளுக்கு எடுத்துச் செல்ல சிறந்த நபரைத் தேர்வுசெய்ய ஜெபிக்கும்படி கேட்டார். பாதிரியார்கள் அவ்வாறு செய்வது இப்போதுள்ள காலகட்டத்தில் மிகவும் ஆபத்தானது என்பதால், சந்தேகத்தைத் தூண்டாத வேறு சில நல்லவர்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியம் என்றார்.

திருப்பலி முடிந்தவுடன், ஆயர், ‘இந்த துணிச்சலான பணியை யார் செய்ய தயாராக இருக்கிறீர்கள்’ என்று கேட்டார்.  டார்ஸிசியஸ் என்ற பலிபீட சேவை சிறுவன் ஒருவன் எழுந்து நின்று, “என்னை அனுப்புங்கள்” என்றான். சிறுவன் மிகவும் இளமையாக இருந்ததால், அது ஆபத்தில் முடியக்கூடும் என்று ஆயர் நினைத்தார். ஆனால் டார்ஸிசியஸ், தாம் மிகவும் இளமையாக இருப்பதால் யாரும் தம்மை சந்தேகிக்க மாட்டார்கள் என்று, ஆயரை நம்ப வைத்தான். நற்கருணையில் வாழும் இயேசுவிடம் டார்ஸிசியஸ் வைத்திருந்த ஆழ்ந்த அன்பை எல்லா கிறிஸ்தவர்களும் அறிந்திருந்தனர். எனவே ஆயர், சிறுவனின் வாய்ப்பை தர ஒப்புக்கொண்டார்.

ஒரு துணியில் பொதியப்பட்டு, சிறு பேழை ஒன்றினுள் வைக்கப்பட்ட சில நற்கருணைகள்,  டார்ஸிசியசிடம் ஒப்படைக்கப்பட்டன. டார்ஸிசியஸ் அதனை, தமது மார்புக்கு மேலாக உள்ள அங்கியினுள்ளே மறைத்துக்கொண்டார். தன்னுடைய பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்ட பரலோக பொக்கிஷங்களை நினைவில் கொள்ளும்படி ஆயர் கேட்டுக்கொண்டார். உண்மையாகவே இயேசு வாழும் இந்த புனிதமான அருட்பிரசாதனங்களை உண்மையுடனும் பாத்திரமாகவும் பாதுகாக்க, நெரிசலான தெருக்களைத் தவிர்க்குமாறு வேண்டினார். அவற்றை விட்டுவிடுவதைவிட,  தாம் தமது உயிரையே விட்டுவிடுவதாக கூறிய டார்ஸிசியஸ் புனிதப் புதையலான அவற்றை பற்றிக்கொண்டு சிறை நோக்கி புறப்பட்டார்.

"நோட்ரே டேமின்" (Notre Dame) அருட்சகோதரி ஒருவர், இங்கிருந்து கதையை எடுத்துக்கொள்கிறார்:

ஓ, எங்கள் ஆசீர்வதிக்கப்பட்ட இறைவனை தனது இதயத்திற்கு மிக நெருக்கமாக சுமந்தபோது டார்ஸிசியஸ் எவ்வளவு மகிழ்ச்சியையும், பெருமையையும் உணர்ந்தார்! அவர் கடந்து வந்த இடங்களையோ மக்களையோ விட்டுவிடும் எண்ணங்கள் அவருக்கு இல்லை. அவர் சுமந்த இயேசுவைப் பற்றி மட்டுமே நினைத்திருந்தார்.

"ஓ, அன்புள்ள இயேசுவே, நான் உன்னை எப்படி நேசிக்கிறேன்," என்று அவர் கிசுகிசுத்தார். "உங்கள் சின்னஞ்சிறிய தூதராக என்னைத் தேர்ந்தெடுத்திருப்பது எவ்வளவு நல்லது. சிறையில் இருக்கும் இந்த நல்ல மனிதர்களைப் போல நானும் உங்களுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் மனமுவந்து துன்பப்படுவேன், இறப்பேன். ஒருவேளை, ஒரு நாள், நீங்களும் என் உயிரை உங்களுக்காக அர்ப்பணிக்க அனுமதிப்பீர்கள்.”

இது போன்ற நேசமிகு வார்த்தைகளை கிசுகிசுத்தவாறு, அவர் விரைவாகச் சென்றார். அவர் இப்போது நெடுஞ்சாலையிலிருந்து வெளியேறி கேடகோம்ப் சாலையில் இருந்தார். அங்கு அவர் தனது பள்ளித் தோழர்கள் உள்ள ஒரு குழுவைக் கடந்தார். விளையாடுவதற்கு ஒரு அணியை உருவாக்க எண்ணிய அவர்களுக்கு ஒரே ஒரு நபர் தேவைப்பட்டார். டார்ஸிசியஸைப் பார்த்த அவர்கள், அவரை நிறுத்தி அவர்களுடன் சேர அழைத்தனர்.

"நான் வருந்துகிறேன், ஆனால் நான் ஒரு முக்கியமான செய்தி கொண்டுபோகிறேன்" என்ற அவர், விரைந்து சென்றார். ஆனால் அவரைப் பிடித்துக்கொண்ட சிறுவர்கள், அவரை விட மறுத்தனர்.

டார்ஸிசியஸ் தனது கைகளை மார்பகத்துடன் இறுக்கமாகப் பிடித்திருப்பதைப் பார்த்த ஒருவன், "உன்னிடம் என்ன இருக்கிறது நான் பார்க்கிறேன்" என்றான்.

"இல்லை, இல்லை," என்று டார்ஸிசியஸ் அழுதார். தன்னை விடுவிக்க போராடினார். அவரது கவலை அவர்கள் அனைவரையும் ஆர்வமாக்கியது. மேலும் அவர்கள் அனைவரும் ஒன்றாக அவரது கைகளை இழுக்க முயன்றனர்.

"என் இயேசுவே, என்னை பலப்படுத்துங்கள்" என்று டார்ஸிசியஸ் கிட்டத்தட்ட மூச்சைப் பிடித்து முணுமுணுத்தார். ஆனால், அவரது வார்த்தைகளைக் கேட்டுவிட்ட ஒரு சிறுவன், “அவன் ஒரு கிறிஸ்தவன். அவன் மர்மமான ஏதோ சில கிறிஸ்தவ பொருளை அங்கே மறைக்கிறான்” என்று, மற்றவர்களிடம் கூக்குரலிட்டான்.

இதனால் ஆர்வம் அதிகமான சிறுவர்கள், டார்ஸிசியஸ் என்னதான் வைத்திருக்கிறார் என்று பார்த்துவிடுவது என்று தீர்மானித்தார்கள். எனவே அவர்கள் கல்லெறிந்து, உதைத்து, அவரைத் தாக்கினார்கள். அவருடைய கைகளை விலக்க தங்களால் முடிந்ததைச் செய்தார்கள். ஆனால் அவர்களால் அவரது பிடியைத் தளர்த்த முடியவில்லை.

அந்த வழியாகச் சென்ற வழிப்போக்கன் ஒருவர், என்ன விஷயம் என்று கேட்டார். "அவன் ஒரு கிறிஸ்தவன், மர்மமான சில கிறிஸ்தவ பொருளை சுமந்து வருகிறான். நாங்கள் அவனிடமிருந்து அதைப் பெற முயற்சிக்கிறோம்" என்று சிறுவர்களில் ஒருவன் கத்தினான்.

"அவன் ஒரு கிறிஸ்தவன் என்றா சொன்னாய்?" என்ற வழிப்போக்கன், டார்ஸிசியஸை கொடூரமாக அடித்து கீழே தள்ளினான்.

இந்த தருணத்தில், அந்த வழியாக வந்த ஒரு படை வீரன், கூட்டத்தை நோக்கி விரைந்து சென்று, அவர்களை வலது மற்றும் இடதுபுறமாக சிதறடித்து விரட்டினான். பின்னர், குனிந்து டார்ஸிசியஸை தனது கைகளில் தூக்கினான்.

"கோழைகளே” என்று கத்திய படை வீரன், "ஒரு சிறிய பையனை எல்லாரும் சேர்ந்து அடிக்கிறீர்களே" என்ற அவர் விரைவாக வீதியில் இறங்கி அமைதியான பாதையில் விரைந்தார். டார்ஸிசியஸின் தலைமுடியை கோதிய அவர், "டார்ஸிசியஸ் பையா" என்று செல்லமாக அழைத்தார். கண்களைத் திறந்து பார்த்த டார்ஸிசியஸ், அவர், கேட்டக்கோம்பில் தாம் அடிக்கடி சந்தித்துள்ள ஒரு கிறிஸ்தவர் என்பதை உணர்ந்தார்.

"நான் இறந்து கொண்டிருக்கிறேன், ஆனால் நான் என் கடவுளை அவர்களிடமிருந்து பாதுகாத்துவிட்டேன்" என்று அவர் கூறினார். அவர் தனது விலைமதிப்பற்ற புதையலை படைவீரனிடம் ஒப்படைத்தார். அவர் அதை தனது அங்கிக்குள் பயபக்தியுடன் வைத்துக்கொண்டார். "எனக்காக அவரை சிறைக்குள் அழைத்துச் செல்லுங்கள்" என்று டார்ஸிசியஸ் கூறினார். ஒரு மென்மையான பெருமூச்சுடன் அவர் மீண்டும் சிப்பாயின் கைகளில் விழுந்தார். அவருடைய சிறிய ஆத்மா ஏற்கனவே கடவுளோடு ஒன்றிப்போயிருந்தது. அவருக்காக அவர் விருப்பத்துடன் தமது உயிரைக் கொடுத்தார். ஏனென்றால், "ஒரு மனிதன் தன் நண்பனுக்காக உயிரைக் கொடுப்பதைவிட, பெரிய அன்பு வேறு எதுவுமில்லை" என்று இயேசு ஒருமுறை சொல்லியிருக்கிறார்.

சின்னஞ்சிறு டார்ஸிசியஸ் நண்பர்களின் நண்பரான இயேசு கிறிஸ்துவுக்காக தனது உயிரைக் கொடுத்தார்!

டமாஸிசியஸை, திருத்தொண்டர் புனிதர் ஸ்தேவானுடன் (Deacon, Protomartyr of The Faith, Saint Stephen) ஒப்பிடும் திருத்தந்தை முதலாம் டமாசுஸ், (Pope Damasus I), "ஸ்தேவான் ஒரு கூட்டத்தினரால் கல்லெறியப்பட்டு கொல்லப்பட்டதை போலவே, டமாஸிசியஸும் ஆசீர்வதிக்கப்பட்ட நற்கருணையைச் சுமந்த காரணத்துக்காக கல்லெறியப்பட்டு கொல்லப்பட்டார்" என்கிறார்.

ஆகஸ்ட் மாதம் 15ம் நாளன்று இவரது நினைவுத் திருநாள் நினைவுகூரப்படுகிறது. இந்நாளானது, அன்னை மரியாளுடைய (Feast of the Assumption) விண்ணேற்பு தின விழாவாக கொண்டாடப்படுவதால், இவருடைய நினைவுத் திருநாள், பொது ரோமானிய நாட்காட்டியில் (General Roman Calendar) குறிப்பிடப்படவில்லை. ஆனால் ரோமானிய தியாகவியலில் (Roman Martyrology) மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.