புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

06 February 2020

இன்றைய புனிதர் : (06-02-2020) மறைசாட்சியாளர் பவுல் மீகி மற்றும் தோழர்கள்

இன்றைய புனிதர் : 
(06-02-2020) 

மறைசாட்சியாளர் பவுல் மீகி மற்றும் தோழர்கள் Paul Miki und Gefährten SJ

பிறப்பு1565,சியோட்டோ Kyoto, ஜப்பான்

இறப்பு 5 பிப்ரவரி, 1597 நாகசாகி, ஜப்பான்

புனிதர்பட்டம்: 8 ஜூன் 1862, திருத்தந்தை 9 ஆம் பயஸ்

இவர் ஜப்பான் நாட்டில் வாழ்ந்த ஓர் கிறிஸ்தவ பெற்றோரின் மகனாகப் பிறந்தார். இவர் தனது 22 ஆம் வயதில் இயேசு சபையில் சேர்ந்தார். மிகச் சிறந்த மறையுரையாளரான இவர், ஜப்பான் நாட்டில் சிறப்பாக மறைப்பணியாற்றினார். 1587 ஆம் ஆண்டு சோகுண்டோயோடோமி ஹிடேயோஷி Shogun Toyotomi Hideyoshi என்பவர் இட்ட கட்டளையின் பேரில் இப்புனிதர் பிடிக்கப்பட்டு தனித்தீவிற்கு கொண்டுச் செல்லப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இருப்பினும் இவர் ஆற்றியப் பணி மக்களிடையே தீப்போல பரவியது. இவரின் தோழர்களும் மறைப்பணியை சிறப்பாக ஆற்றினர். கிறிஸ்தவ மக்கள் பெருகினர். இதனால் சோகுன் டோயோடோமி ஆத்திரமடைந்து 25 தோழர்களையும் பிடித்து சிறையிலடைத்தான். பின்னர் நாகசாகி நகருக்கு இழுத்துச் செல்லப்பட்டு சிலுவையில் அடித்து கொல்லப்பட்டார்கள்


செபம்:
ஆற்றல் வழங்கும் எம் தந்தையே! இன்றைய நாளில் நினைவுகூரும் இப்புனிதர்களுக்கு நீர் சிலுவையின் வழியாக உமது எல்லையில்லா பேரின்ப வாழ்வை அளித்தீர். நாங்கள் உமது விசுவாசத்தில் நிலையாக நிலைத்திருந்து, இறை நம்பிக்கையை எங்களின் இறுதி மூச்சுவரை பற்றிக்கொள்ள உம் அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சி மன்றாடுகின்றோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

இன்றைய புனிதர் (பெப்ரவரி 6) ✠புனிதர் கொன்சாலோ கார்ஸியா

† இன்றைய புனிதர் †
(ஃபெப்ரவரி 6)

✠ புனிதர் கொன்சாலோ கார்ஸியா ✠
(St. Gonsalo Garcia)

ஃபிரான்சிஸ்கன் சபையின் குருத்துவம் பெறாத பொதுநிலை சகோதரர் மற்றும் மறைசாட்சி:
(Franciscan Lay Brother and Martyr)

பிறப்பு: ஃபெப்ரவரி 5, 1557
வாசை, மும்பை, போர்ச்சுகீசிய இந்தியா
(Vasai, Mumbar, Portuguese India)

இறப்பு: ஃபெப்ரவரி 5, 1597
நாகசாகி, ஜப்பான்
(Nagasaki, Japan)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: செப்டம்பர் 14, 1627
திருத்தந்தை எட்டாம் அர்பன்
(Pope Urban VIII)

புனிதர் பட்டம்: ஜூன் 8, 1862
திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்
(Pope Pius IX)

நினைவுத் திருநாள்: ஃபெப்ரவரி 6

முக்கிய திருத்தலங்கள்:
புனிதர் கொன்சாலோ கார்ஸியா ஆலயம், காஸ், வாசை
(St. Gonsalo Garcia Church, Gass, Vasai, India)

பாதுகாவல்:
ரோமன் கத்தோலிக்க உயர் மறைமாவட்டம், மும்பை
(Roman Catholic Archdiocese of Bombay, East Indian Community)

புனிதர் கொன்சாலோ கார்ஸியா, போர்ச்சுகீசிய இந்தியாவில் பிறந்து, ஜப்பான் நாட்டில் மறை சாட்சியாக மரித்த ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் இருபத்தாறு புனிதர்களுள் ஒருவர் ஆவார். இவர் ஒரு ஃபிரான்சிஸ்கன் பொதுநிலையினர் சகோதரர் (Franciscan Lay Brother) ஆவார். இந்தியாவில் பிறந்து, அருட்பொழிவு செய்யப்பட்ட முதல் புனிதரும் இவரேயாவார். மும்பை நகரின் வடக்கே, சுமார் முப்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மேற்கத்திய கடற்கரை நகரான வாசை என்னுமிடத்தில் பிறந்தார். இவர் வாழ்ந்த அக்காலத்தில், அப்பகுதி போர்ச்சுகீசிய காலணித்துவ ஆட்சியின்கீழ் இருந்தது.

இவரது தந்தை ஒரு போர்ச்சுகீசிய படை வீரர் ஆவார். தாயார் “கொங்கண்” (Konkan) மொழி பேசும் ஒரு இந்தியப் பெண் ஆவார். இவர், ஜப்பான் ஃபிரான்சிஸ்கன் சபைத்தலைவரான புனிதர் பீட்டர் பாப்டிஸ்டின் வலக்கரமாக இருந்தார்.

"குன்டி ஸ்லாவுஸ் கார்ஸியா" எனும் இயற்பெயர் கொண்ட இவர், வாசையில் பணியாற்றிய 'செபஸ்தியோ கான்கால்வ்ஸ்' என்னும் இயேசு சபை குருவிடம் கல்வி பயின்றார். இயேசு சபையினரிடமே கி.பி. 1564 முதல் 1572 வரை எட்டு வருடம் பயின்றார். தனது 15ம் வயதில் குரு செபஸ்தியோவுடன் ஜப்பான் சென்றார். ஜப்பானிய மொழியை இவர் எளிதில் கற்றதால், அம்மக்களின் நன்மதிப்பைப் பெற்றார். இவர் அங்கிருந்து ஆல்கோ சென்று வணிகம் செய்தார். அது தென்கிழக்காசியா முழுவதும் பல கிளைகள் கொண்டு பரவியது.

இவரின் கனவான இயேசு சபை குருவாவது நிறைவடையாமலேயே இவர் ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மணிலாவுக்கு பொதுநிலை மறைப்பணியாளராய் சென்றார். அங்கே ஃபிரான்சிஸ்கன் சபைக் குருவான பீட்டர் பாப்டிஸ்டினால் தூண்டப்பட்டு அச்சபையில் பொதுநிலை சகோதரராக சேர்ந்தார். தொழு நோயாளர்களோடு அங்கே பணியாற்றினார். அப்போதே அவர் அச்சபையில் திருநிலைப்பாட்டினைப் பெற்றார்.

மே 26, 1592ல் ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் எசுபானிய ஆளுனரால் அரசு சார்பாக ஜப்பானுக்கு அனுப்பப்பட்டார். அங்கே நான்காண்டுகள் பணிபுரிந்த பின்னர், அப்போது ஜப்பானிய சர்வாதிகாரியால் ஆட்சி விரோதச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் தங்கியிருந்த மியாகோ (கியோத்தோ) என்னும் இடத்திலிருந்த மடத்திலேயே 8 டிசம்பர் 1596 அன்று சிறைவைக்கப்பட்டார். சிலநாட்களுக்கு பின் மாலை செபம் செய்து கொண்டிருந்தபோது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஜனவரி 3, 1597 அன்று கைது செய்யப்பட்ட 26 பேர்களுடைய இடது காதுகள் அறுத்தெறியப்பட்டன. அவற்றை கிறிஸ்தவர்கள் எடுத்து பாதுகாத்து வந்தனர்.

ஃபெப்ரவரி 5, 1597 அன்று அவர்களை சிலுவையில் அறைய ஆணை பிறப்பிக்கப்ப்பட்டது. சிலுவையில் அறையும் இடத்தை கார்சியா முதலில் அடைந்தார். அவர் முதலில் அங்கிருந்த ஒரு சிலுவையின் அருகில் சென்று, "இது எனக்கானதா?" என்றார். "இது இல்லை" என்று பதில் கூறி அவரை வேறு சிலுவையிடம் கூட்டிச்சென்றனர். சிலுவையை அடைந்ததும் முழந்தாள் பணிந்து அதனைத் தழுவினார். அவரோடு கைது செய்யப்பட்ட மற்றெல்லோரையும் சிலுவையில் அறைந்தார்கள். பின்பு அவரை இரண்டு ஈட்டி கொண்டு இதயத்தில் குத்தினர். இவர் சிலுவையில் சாகும்வரை இறை புகழ் பாடிக்கொண்டே இருந்தார். 

புனிதர் பட்டமளிப்பு:
கி.பி. 1927ல் கார்சியாவும் அவருடன் இரத்த சாட்சிகளானவர்களும் வணக்கத்திற்குரியவர்கள் என திருத்தந்தை எட்டாம் அர்பன் (Pope Urban VIII) அவர்களால் அறிவிக்கப்பட்டனர். ஜூன் 8, 1862 அன்று திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் (Pope Pius IX) அவர்களால் இவர்கள் அனைவரும் புனிதர்களாக அருட்பொழிவு செய்யப்பட்டது.

இவர் ஒரு போர்ச்சுகீசிய தந்தைக்கும், கொங்கண் தாய்க்கும் பிறந்தவராதலால் இவர் இந்தியப் புனிதராக கருதப்படுவதில்லை. இவர் கத்தோலிக்க திருச்சபையில் அதிகாரப்பூர்வ பட்டியலில் போர்ச்சுகீசிய புனிதராவார்.

இன்றைய புனிதர் † (ஃபெப்ரவரி 6) ✠ புனிதர் ஃபிரான்செஸ்கோ ஸ்பைனெல்லி

குரு:
(Priest)

பிறப்பு: ஏப்ரல் 14, 1853
மிலன், லொம்பார்டி-வெனீஷியா இராச்சியம்
(Milan, Kingdom of Lombardy-Venetia)

இறப்பு: ஃபெப்ரவரி 6, 1913 (வயது 59)
ரிவோல்டா டி'அ்டா, கிரெமோனா, இத்தாலி இராச்சியம்
(Rivolta d'Adda, Cremona, Kingdom of Italy)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திப்பேறு பட்டம்: ஜூன் 21, 1992
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

புனிதர் பட்டம்: அக்டோபர் 14, 2018
திருத்தந்தை ஃபிரான்சிஸ்
(Pope Francis)

நினைவுத் திருநாள்: ஃபெப்ரவரி 6

பாதுகாவல்:
ஆசிர்வதிக்கப்பட்ட அருட்சாதனத்தை ஆராதிக்கும் அருட்சகோதரியர் சபை
(Sisters Adorers of the Blessed Sacrament)

புனிதர் ஃபிரான்செஸ்கோ ஸ்பைனெல்லி, இத்தாலி நாட்டின் ரோமன் கத்தோலிக்க  திருச்சபையின் குருவும், "ஆசிர்வதிக்கப்பட்ட அருட்சாதனத்தை ஆராதிக்கும் அருட்சகோதரியர் சபை" (Sisters Adorers of the Blessed Sacrament) எனப்படும் சபையை நிறுவியவருமாவார். இவர், "புனிதர் கெல்ட்ரூட் காமன்சோலி"  (Saint Geltrude Comensoli) மற்றும் அருளாளர் "லுய்கி மரியா பலஸ்ஸோலோ" (Blessed Luigi Maria Palazzolo) ஆகியோரின் சமகாலத்தவராவார். மேலும், இவருக்கு காமன்சோலியுடன் முந்தைய ஒத்துழைப்பு இருந்தது. ஐவரும் காமன்சோலியும் இணைந்து "பெர்கமோ" (Bergamo) நகரில் ஒரு மத கல்வி நிறுவனத்தை நிறுவினார்கள். அதற்கு முன்னரே, இவர்களின் உறுப்பினர்களிடையே இரட்டை பிளவு காரணமாக, ஸ்பைனெல்லி தமது பணிகளை விட்டு விலக நேர்ந்தது.

கி.பி. 1853ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 14ம் நாளன்று, வடக்கு இத்தாலியின் "லொம்பார்டி" (Lombardy) பிராந்தியத்தின் தலைநகரான "மிலன்" (Milan) நகரில் பிறந்த ஃபிரான்செஸ்கோ ஸ்பைனெல்லிக்கு அவர் பிறந்த மறுதினம் திருமுழுக்கு தரப்பட்டது. அவர் தமது சிறு வயதில், தமது பெற்றோருடனும், உடன்பிறந்தோருடனும் மிலனிலிருந்து (Milan) "கிரெமோனா" (Cremona) நகருக்கு புலம்பெயர்ந்து சென்றனர். அவர், கி.பி. 1871ம் ஆண்டின் கோடை காலத்தில், "வர்கோ" நகரில், தமக்கிருந்த கடுமையான முதுகெலும்பு பிரச்சனைக்கு மருத்துவம் செய்து குணப்படுத்தினார். தனது குழந்தைப் பருவத்தில், ஏழை எளியவர்களுக்கும், நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் அடிக்கடி கிடைக்கும் சந்தர்ப்பங்களில் தமது அம்மாவுடன் சேர்ந்து, சக தோழர்களுக்கு பொம்மை நிகழ்ச்சிகளை நடத்திக் காட்ட விரும்பினார்.

அவரது ஆன்மீக வாழ்க்கைக்கான அழைப்புக்கு, அவரது தாயாரும், குருவாக இருந்த அவரது மாமா "பியேட்ரோ காக்ளியரொளி" (Pietro Cagliaroli) என்பவரும் அவருக்கு ஆதரவு அளித்தனர். பெர்கமோ நகரில் இறையியல் கற்கத் தொடங்கிய இவரை இவரது நண்பர் "அருளாளர் லுய்கி மரிய பலஸ்ஸோ"  (Blessed Luigi Maria Palazzolo) என்பவரும் ஊக்கப்படுத்தினார். கி.பி. 1875ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 14ம் தேதி, குருத்துவ அருட்பொழிவு பெற்றார். விரைவிலேயே, திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் (Pope Pius IX) அவர்களின் பொது அழைப்பினை ஏற்று, யூபிலி ஆண்டு நிகழ்வுகளில் பங்கேற்க ரோம் நகர் பயணமானார்.

அங்கே, மரிய அன்னை பேராலயத்திற்கும் சென்ற ஸ்பைநெல்லி, அங்கிருந்த குழந்தை இயேசு கெபியினருகே, மறையுரைச் சிந்தனைகளில் ஆழ்ந்தார். அத்துடன், நற்கருணை ஆராதணையில் பெண்கள் ஈடுபடுவதாக இவர் கண்ட திருக்காட்சி, தாம் சொந்தமாக ஒரு சபையை நிறுவ இவருக்கு உந்துசக்தியாக விளங்கியது. ரோமிலிருந்து திரும்பியதும் ஒரு மாலை பள்ளியில் கல்விப் பணிகளை நடத்தினார்.

கி.பி. 1882ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 15ம் தேதி, பெர்கமோ (Bergamo) நகரில், புனிதர் கெல்ட்ருட் காமென்சோலி (Saint Geltrude Comensoli) உடன் இணைந்து "நற்கருணை அருட்சகோதரியார்" (Sacramentine Sisters) சபையை தொடங்கினார். இது, நற்கருணைக்கு அர்ப்பணிக்கப்பட்ட இச்சபை, நற்கருணை ஆராதனைப் பணிகளில் மட்டுமே ஈடுபடும். சபையின் முதல் கான்வென்ட், "வயா சான் அன்டோனினோ'வில்" (Via San Antonino) திறக்கப்பட்டது. நகரில் ஏற்பட்ட தொடர் பேரழிவுகள் மற்றும் நிதி நெருக்கடிகளின் காரணமாக, இந்த இல்லம் தோல்வியடைந்த காரணத்தால், கி.பி. 1889ம் ஆண்டு, மார்ச் மாதம், 4ம் தேதியன்று, அதை விட்டுவிட வேண்டிய கட்டாயம் ஸ்பைநெல்லிக்கு ஏற்பட்டது.

பெர்மாமோவில் நடந்ததை எண்ணி மன வேதனையடைந்த ஸ்பைநெல்லி, "கிரெமோனா" (Cremona) நகரிலுள்ள "ரிவோல்டா டி'அ்ட்டா" (Rivolta d'Adda) எனும் இடத்துக்கு வந்து சேர்ந்தார். அவரது குருத்துவ கடமைகளை நிறைவேற்றுவதற்காக கிரெமோனாவுக்கு வருமாறும், மறைமாவட்ட ஆயர் அவரை அழைத்திருந்தார். கி.பி. 1892ம் ஆண்டு, அவர், "ஆசிர்வதிக்கப்பட்ட அருட்சாதனத்தை ஆராதிக்கும் அருட்சகோதரியர் சபையை" (Sisters Adorers of the Blessed Sacrament) நிறுவினார். இச்சபைக்கு, பின்னாளில் கி.பி. 1897ம் ஆண்டு, "கிரெமோனா ஆயர்" (Bishop of Cremona) "கெரேமியா பொனோமெல்லி" (Geremia Bonomelli) அவர்களின் மறைமாவட்ட அங்கீகாரம் கிட்டியது.

ஃபிரான்செஸ்கோ ஸ்பைனெல்லி, கி.பி. 1913ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 6ம் தேதி மரித்தார்.

கி.பி. 1926ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 11ம் நாளன்று, இவரது சபைக்கு, திருத்தந்தை அவையின் பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது. பின்னர், கி.பி. 1932ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 27ம் நாளன்று, திருத்தந்தை பதினோராம் பயஸ் (Pope Pius XI) முழு அங்கீகாரம் வழங்கினார். இவர்களது சபை, "அர்ஜென்ட்டினா" (Argentina) மற்றும் "செனெகல்" (Senegal) உள்ளிட்ட நாடுகளில் செயல்பாட்டில் உள்ளது. 2005ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, மொத்தமிருந்த 59 இல்லங்களில், 436 மறைப்பணியாளர்கள் இருந்தனர்.