புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

20 March 2020

தூய கத்பர்ட் (மார்ச் 20)

இன்றைய புனிதர் :
(20-03-2020) 

தூய கத்பர்ட் (மார்ச் 20)
“என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்” (மத் 16: 24)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் கத்பர்ட், இங்கிலாந்து நாட்டில் உள்ள நார்த்தம்பிரியா என்னும் இடத்தில் 635 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் சிறுவயதிலே தன்னுடைய பெற்றோரை இழந்ததால், கென்ஸ்வித் என்பவருடைய பாதுகாப்பில்தான் வளர்ந்து வந்தார்.

கத்பர்ட், சிறுவயதில் பள்ளிக்குச் செல்லவில்லை, மாறாக ஆடுகளை ஓட்டிக்கொண்டு மெல்ரோஸ் என்ற மலைச்சரிவில் மேய்க்கச் சென்றார். அப்போது அங்கிருந்த ஆசிர்வாதப்பர் துறவற மடத்தைக் கண்டு, ஒருநாள் தானும் ஒரு துறவியாகவேண்டும் என்ற எண்ணம் கொண்டார். இதற்கிடையில் வயது வந்த இளைஞர்கள் யாவரும் நாட்டிற்காக இராணுவத்தில் சேர்ந்து போராடவேண்டும் என்றொரு நிலை உருவானது. எனவே, கத்பர்ட் இராணுவத்தில் சேர்ந்து நான்கு ஆண்டுகள் இராணுவத்தில் பணிபுரிந்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டுமாக தன்னுடைய சொந்த ஊருக்குத் திரும்பி வந்து, ஏற்கனவே செய்து வந்த வேலையைச் செய்து வந்தார்.

இச்சமயத்தில் ஒருநாள் தூய ஆர்டன் என்பவருடைய ஆன்மாவை வானதூதர்கள் தூக்கிக்கொண்டு போகும் காட்சியைக் கண்டார். இதனைக் கண்ட கத்பர்ட், தன்னுடைய ஆன்மாவையும் இவ்வுலக மாசுகளிலிருந்து காப்பாற்ற வேண்டும், அதற்கு நாம் துறவற வாழ்க்கையை மேற்கொள்வதே சரியானது என்று முடிவுசெய்து மெல்ரோஸ் மலைச்சரிவில் இருந்த தூய ஆசிர்வாதப்பர் சபையில் சேர்ந்து துறவியானார். கத்பர்ட், சிறுவயதில் பள்ளிக்குச் செல்லவில்லை என்றாலும் துறவற மடத்தில் சொல்லிக்கொடுக்கப்பட்ட பாடங்களை மிக எளிதாகக் கற்று, கல்வியில் சிறந்து விளங்கினார்.

இப்படி கத்பர்ட்டின் வாழ்க்கை மகிழ்ச்சியாய் போய்கொண்டிருந்த தருணத்தில், அவர் இருந்த துறவற மடத்தில் நிறையப் பேர் குறிப்பாக தலைமைப் பொறுப்பில் இருந்த தூய பாசில் உட்பட தொற்றுநோய் தாக்கி இறந்துபோனார்கள். அதனால் கத்பர்ட் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அக்காலத்தில் வழிபாடுகள் ஒழுகில்லாமல் நடைபெற்றுக்கொண்டிருந்தன. இதனைக் கவனித்த ஆயர் பேரவை உரோமை வழிபாட்டு முறையை எங்கும் அமுல்படுத்தக் கேட்டுக்கொண்டது. அதனடிப்படையில் கத்பர்ட் தான் இருந்த பகுதியில் உரோமை வழிபாட்டு முறையை அமுல்படுத்தினார். இது பிடிக்காத ஒருசிலர் அவருக்கு எதிராகக் கிளர்தெழுந்தார்கள். கத்பர்ட் அதற்கெல்லாம் அஞ்சாமல் மிகவும் துணிச்சலாக இருந்து இறைப்பணியைச் செய்து வந்தார்.

இதற்குப் பின்பு, அவர் பார்னா என்ற தீவிற்குச் சென்று, அங்கு தனிமையில் இறைவனிடம் ஜெபித்து வந்தார். அப்போது அவருக்கு லின்டிஸ்பர்னே என்னும் இடத்திற்கு ஆயராகப் பொறுபேற்க வேண்டும் என்றொரு அழைப்பு வந்தது. கத்பர்ட் அதனைக் கீழ்ப்படிதலோடு ஏற்றுக்கொண்டு சிறப்பான முறையில் இறைப்பணியைச் செய்து வந்தார். இப்படி அவர் ஓயாது பணிசெய்து வந்ததால் அவருடைய உடல் நலம் குன்றியது. இதனால் அவர் 686 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய கத்பர்ட்டின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. இறைவனின் அழைப்பை உணர்ந்து, அவர் பணி செய்ய விரைதல்

தூய கத்பர்ட்டின் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முதன்மையான பாடமே இறைவனின் அழைப்பை உணர்ந்து அவருடைய வழியினில் நடப்பதுதான். அவர் இளைஞனாக இருந்த சமயத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த போது வானத்தூதர்கள் தூய ஆர்டனின் ஆன்மாவை எடுத்துக்கொண்டு போவதைக் கண்டு அதை இறைவன் கொடுக்கின்ற அழைப்பாக உணர்ந்து, அவர் பணி செய்ய விரைந்தார் என்றும் தொடக்கத்தில் பார்த்தோம். இறைவன் அவரை அந்த நிகழ்வின் வழியாக அழைத்ததுபோல், நம்மையும் அவர் பல்வேறு நிகழ்வுகளின் வழியாக அழைக்கின்றார். நாம் அவரது குரலுக்கு செவிகொடுத்து, அவர் பணி செய்ய விரைகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பஞ்சாப் பகுதியில் நற்செய்திப் பணியைச் செய்து வந்த சாது சுந்தர் சிங் சொல்லக்கூடிய கதை. ஒரு ஊரில் ஒரு பணக்காரர் இருந்தார். அந்தப் பணக்காரருக்கு ஒரு மகன் இருந்தான். ஒருநாள் அவர் தன்னுடைய மகனிடம், “மகனே! நம்முடைய வயல் அறுவடைக்காக நெருங்கி இருக்கின்றது. அதனால் அதனைப் போய் பார்த்துக்கொள்” என்றார். அவனும் அதற்குச் சரியென்று சொல்லி, வயலுக்குச் சென்றான். அவன் சென்ற நேரத்தில் வயலில் பறவை இனங்கள் எல்லாம் கதிர்களைக் கொத்தித் தின்றுகொண்டிருந்தன. அவனோ அதையெல்லாம் கண்டுகொள்ளாது, தந்தை நம்மை வயலைப் பார்த்துக்கொள்ளத்தானே சொன்னார், பறவையினங்களை விரட்டச் சொல்லவில்லையே என்று பேசாதிருந்தான். இன்னும் சிறிது நேரத்தில் ஆடு மாடுகள் எல்லாம் அந்த வயலில் நுழைந்து அதனை நாசம் செய்தன. அப்போதும் அவன் ஒன்றும் செய்யாதிருந்தான்.

இதற்கிடையில் பணக்காரர் வயலுக்கு வந்தார். வந்தவர் வயலில் ஆடுமாடுகள் மேய்வதையும் பறவையினங்கள் கதிர்களைக் கொத்தித் தின்பதையும் பார்த்துவிட்டு, தன்னுடைய மகனைப் பார்த்து, “உன்னை வயலைப் பார்த்துக்கொள்ளச் சொன்னால், இப்படி ஒன்றும் செய்யாமல் இருகின்றாயே” என்றார். அதற்கு அவன், “அப்பா, நீங்கள் என்னை வயலைப் பார்த்துக்கொள்ளத்தான் சொன்னீர்களே ஒழிய, அதில் வந்து மேயும் ஆடுமாடுகளை விரட்டச் சொல்லவில்லை” என்றான். இதைக் கேட்ட அவனுடைய தந்தை, “வயலைப் பார்த்துக்கொள் என்று சொன்னால், வயலில் ஆடுமாடுகள் மேயாமல் பார்த்துக்கொள் என்பதுதானே அர்த்தம், இதுகூடத் தெரியாத மரமண்டையாக இருக்கின்றாயே” என்று அவனை அடியடி என அடித்தார்.

கதையில் வரும் முட்டாளைப் போன்றுதான் நாமும் கடவுள் தம்மை எவ்வளவோ வகையில் வெளிப்படுத்தினாலும் நாம் அதனைப் புரிந்துகொள்ளாமலே இருக்கின்றோம்.

ஆகவே, தூய கத்பர்ட்டின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரை போன்று இறைவனின் அழைப்பினை உணர்ந்து, அவருடைய பணியைச் செய்ய விரைவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Saint of the Day : (20-03-2020)

Saint Cuthbert of Lindisfarne

Orphaned at an early age. Shepherd. Received a vision of Saint Aidan of Lindesfarne entering heaven; the sight led Cuthbert to become a Benedictine monk at age 17 at the monastery of Melrose, which had been founded by Saint Aidan. Guest-master at Melrose where he was know for his charity to poor travellers; legend says that he once entertained an angel disguised as a beggar. Spiritual student of Saint Boswell. Prior of Melrose in 664.

Due to a dispute over liturgical practice, Cuthbert and other monks abandoned Melrose for Lindisfarne. There he worked with Saint Eata. Prior and then abbot of Lindesfarne until 676. Hermit on the Farnes Islands. Bishop of Hexham, England. Bishop of Lindesfarne in 685. Friend of Saint Ebbe the Elder. Worked with plague victims in 685. Noted (miraculous) healer. Had the gift of prophecy.

Evangelist in his diocese, often to the discomfort of local authorities both secular and ecclesiastical. Presided over his abbey and his diocese during the time when Roman rites were supplanting the Celtic, and all the churches in the British Isles were brought under a single authority.

Born :
634 somewhere in the British Isles

Died :
20 March 687 at Lindesfarne, England of natural causes
• interred with the head of Saint Oswald, which was buried with him for safe keeping
• body removed to Durham Cathedral at Lindesfarne in 1104
• his body, and the head of Saint Oswald, were incorrupt

Patronage :
against plague and epidemics
• boatmen, mariners, sailors, watermen
• shepherds
• England
• Hexham and Newcastle, England, diocese of
• Lancaster, England, diocese of
• Durham, England
• Northumbria, England

---JDH---Jesus the Divine Healer---

மார்ச் 19 - புனித சூசையப்பர் திருவிழா

மார்ச் 19 -  புனித சூசையப்பர் திருவிழா. மார்ச் மாதம் முழுவதும் இவருக்கு அர்பணிக்கப்பட்ட மாதம். இவரது பரிந்துரை பெற இவரை மன்றாடுவோம்.
புனித சூசையப்பர் (Saint Joseph), இயேசு கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தை ஆவார். புனித கன்னி மரியாவின் கணவரான இவர், பாரம்பரிய கிறிஸ்தவ பிரிவுகளில் மிகப் பெரிய புனிதராக வணங்கப்படுகிறார்; பெருந்தந்தையர்களில் (Patriarch) ஒருவராகவும் மதிக்கப்படுகிறார்.

பிறப்புகி.மு.39/38
இறப்புகி.பி.21/22
அர்ச்சியசிஷ்ட சூசையப்பர் தாவீது அரசரின் வழிமரபில் தோன்றியவர். இவரது தந்தையின் பெயர் ஏலி என்கிற யாக்கோபு ஆகும். நாசரேத்தில் வாழ்ந்து வந்த அர்ச்சியசிஷ்ட சூசையப்பர் தச்சுத் தொழில் செய்து வந்தார். தாவீது குலத்து கன்னிப் பெண்ணான நம் அன்னை மரியாளுடன் இவருக்கு திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டது. அவ்வேளையில், அன்னை மரியாள் தூய ஆவியின் வல்லமையால் இறைமகனைக் கருத்தாங்கும் பேறு பெற்றார். அன்னை மரியாள் திடீரென கருவுற்றதால் அர்ச்சியசிஷ்ட சூசையப்பர் குழப்பம் அடைந்தார். நேர்மையாளரான இவர் அன்னை மரியாளை இகழ்ச்சிக்கு உள்ளாக்காமல் மறைவாக விலக்கி விட நினைத்தார். அன்னை மரியாள் கடவுளின் திருவுளத்தால் இறைமகனை கருத்தாங்கி இருப்பதை சம்மனசு வழியாக அறிந்த இவர் அன்னை மரியாளை ஏற்றுக் கொண்டார்.

இயேசு பெத்லகேம் மாட்டுத் தொழுவத்தில் பிறந்த வேளையிலும், அவரைக் கோவிலில் ஒப்புக்கொடுக்க எருசலேம் சென்ற நேரத்திலும், ஏரோது அரசன் அவரைக் கொல்லத் தேடியபோதும் அன்னை மரியாளையும், குழந்தை இயேசுவையும் மிகுந்த அன்புடனும் அக்கறையுடனும் அர்ச்சியசிஷ்ட சூசையப்பர் பாதுகாத்தார். பன்னிரண்டு வயதில் இயேசு எருசலேம் கோவிலில் தங்கிவிட்ட பொழுது, அர்ச்சியசிஷ்ட சூசையப்பர் மிகுந்த கவலையுடன் தேடி அலைந்து அவரைக் கண்டுபிடித்தார். தச்சுத் தொழிலில் வந்த வருமானம் மூலம் குடும்பத்தைக் காப்பாற்றினார். அன்னை மரியாளும் நெசவுத் தொழில் மூலம் இவருக்கு உதவினார்.
அர்ச்சியசிஷ்ட சூசையப்பர் இயேசுவுக்கும் தச்சுத் தொழிலைக் கற்றுக்கொடுத்தார். அன்னை மரியாளுக்கு நல்ல கணவராகவும், இயேசுவுக்கு நல்ல தந்தையாகவும் அர்ச்சியசிஷ்ட சூசையப்பர் விளங்கினார். சிறந்த வாய்மையும் பொறுமையும் கொண்ட அர்ச்சியசிஷ்ட சூசையப்பர், திருக்குடும்பத்தை சிறப்பாகத் தலைமைதாங்கி வழிநடத்தினார். இயேசு தனது இறையரசுப் பணியைத் தொடங்குவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, இயேசுவும் அன்னை மரியாளும் அருகில் இருக்க அர்ச்சியசிஷ்ட சூசையப்பர் பாக்கியமான மரணம் அடைந்தார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------
தூய யோசேப்பு.

யோசேப்பை குறித்து சொல்லப்படும் ஒரு நிகழ்வு. மரியாளுக்கு மூன்று வயதானபோது அவருடைய பெற்றோர்கள் அவரை ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்துவிட்டுச் சென்றனர். அதன்பிறகு மரியாள் பதினான்கு வயது வரை அங்குதான் இருந்தார். அவருக்கு பதினான்கு வயது வந்தபோது ஆலயத்தில் இருந்த தலைமைக் குரு, “பதினான்கு வயது நிரம்பிய ஒவ்வொருவரும் தங்களுடைய இல்லங்களுக்குச் சென்று, தங்களுக்குப் பிடித்தமான கணவரை மணந்துகொள்ளுமாறு” சொன்னார். தலைமைக் குருவின் வார்தைகளுக்குக் கீழ்படிந்து மரியாவோடு இருந்த பதினான்கு வயது நிரம்பிய மற்ற பெண் குழந்தைகள் எல்லாம் தங்களுடைய இல்லங்களுக்குச் சென்றார்கள். மரியாள் மட்டும், “நான் ஆண்டவருக்கு அடிமை” என்று சொல்லி அங்கேயே இருந்தாள்.

இதற்கிடையில் ஆலயத்தில் இருந்த தலைமைக் குரு காட்சி ஒன்று கண்டார். அந்தக் காட்சியில், தாவீதின் குலத்தைச் சேர்ந்த ஆண்மகன்கள் தங்களுடைய கையில் தளிர் ஒன்றை ஏந்தி வந்து, அதனை தலைமைக் குருவிடம் கொடுப்பார்கள். யார் கொண்டுவந்த தளிர் மலர்ந்து பூப்பூக்கிறதோ அவரை மரியாள் கணவராக மணந்துகொள்ள வேண்டும் என்று வெளிப்படுத்தப்பட்டார். இச்செய்தியை தலைமைக் குரு மரியாளிடம் எடுத்துச்சொல்லி, குறிப்பிட்ட அந்த நாளுக்காக அவரும் மரியாவும் காத்திருந்தார்கள்.

காட்சியில் வெளிப்படுத்தப்பட்டது போன்று, ஒரு நாளில் தாவீதின் குலத்தைச் சேர்ந்த திருமண வயதில் இருந்த ஆண்மகன்கள் தங்களுடைய கையில் தளிர் ஒன்றை ஏந்தி வந்தார்கள். அந்தக் கூட்டத்தில் யோசேப்பும் வந்திருந்தார். எல்லாரும் தாங்கள் கொண்டுவந்த தளிர்களை தலைமைக் குருவிடம் கொண்டுவந்து கொடுத்தார்கள். யோசேப்பைத் தவிர. யோசேப்பு தான் வயது மிகுந்தவர் என்பதனால் அப்படிச் செய்யவில்லை. மாறாக அவர் தான் கொண்டு வந்த தளிரை பீடத்தில் போய் வைத்தார். நீண்ட நேரமாகியும் யாருடைய தளிரும் பூப்பூக்கவில்லை. இதனால் குழம்பிப் போன தலைமைக் குரு இறைவனிடத்தில் மன்றாடியபோது, “யார் தன்னுடைய தளிரை பீடத்தில் வைத்திருக்கிறாரோ அவரே மரியாளுக்கு கணவராக ஆக வேண்டியர். நீ சிறிது நேரம் பொறுத்திருந்து பார், அவருடைய தளிர் பூப்பூக்கும். அப்போது தூய ஆவியானவர் அதன்மேல் இறங்கி வருவார்” என்றார்.

இதனால் தலைமைக் குரு சிறிது நேரம் பொறுத்திருந்து பார்த்தார். காட்சியில் வெளிப்படுத்தப்பட்டது போன்று யோசேப்பு பீடத்தில் வைத்த தளிர் திடிரென்று பூப்பூத்தது. பின்னர் அதன்மேல் தூய ஆவியானவர் புறாவடிவில் இறங்கி வந்தார். இதைப் பார்த்த தலைமைக் குரு யோசேப்பை மரியாளுக்கு கணவராக மண ஒப்பந்தம் செய்தார். மண ஒப்பந்தத்திற்குப் பிறகு, யோசேப்பு தன்னுடைய சொந்த ஊரான பெத்லகேமிற்குச் சென்றார். மரியாள் நாசரேத்திற்குச் சென்றார். நாசரேத்தில் தான் வானதூதர் கபிரியேல் மரியாளுக்கு மங்கள வார்த்தை சொன்னார்.

வரலாற்றுப் பின்னணி

இன்று நாம் மரியாளின் கணவர் தூய யோசேப்பின் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். தாவீதின் வழிமரபில் தோன்றிய யோசேப்பு தன்னுடைய மனைவி மரியாவிற்கு ஒரு சிறந்த கணவராக விளங்கினார் என்று சொன்னால் அது மிகையாகாது. எப்படியென்றால் திருமணத்திற்கு முன்பாகவே மரியாள் கருவுற்றிருப்பது யோசேப்புக்கு தெரிய வந்ததும் அவளை கல்லால் எறிந்துகொல்ல முற்படவில்லை மாறாக பெருந்தன்மையோடு அவரைத் யாருக்கும் தெரியாமல் விளக்கி விட நினைக்கின்றார். பின்னர் கடவுளின் தூதர் அவருக்கு எல்லாவற்றையும் கனவில் வெளிப்படுத்திய பிறகு மரியாவை தன்னுடைய மனைவியாக ஏற்றுக்கொள்கிறார்.

மரியாவை தன்னுடைய மனைவியாக ஏற்றுக்கொண்ட பிறகு யோசேப்பு அவருக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கின்றார். குழந்தை இயேசுவை ஏரோது மன்னன் கொல்ல நினைத்தபோது, குழந்தையையும் தாய் மரியாவையும் தூக்கிக் கொண்டு எகிப்துக்கு ஓடுகிறார். பின்னர் கொடுங்கோலன் இறந்த பிறகு அவர்களைக் கூட்டிக்கொண்டு தன்னுடைய சொந்த ஊருக்குத் திரும்பி வருகிறார். இவ்வாறு மரியாளின் உணர்வுகளை மதிக்கின்ற, அவரை எல்லாவிதங்களிலும் சிறப்பாகப் பராமரிக்கின்ற ஒரு நல்ல கணவராக யோசேப்பு விளங்கினார் என்று சொன்னால் அது மிகையில்லை. யோசேப்பு, இயேசுவுக்கு ஒரு நல்ல வளர்ப்புத் தந்தையாக இருந்தும் செயல்பட்டார். இயேசுவை உடல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் வளர்த்தெடுத்ததில் யோசேப்பின் பங்கை நாம் மறந்து விட முடியாது.

இவ்வாறாக யோசேப்பு தன்னுடைய மனைவி மரியாவுக்கு ஒரு நல்ல கணவராகவும், இயேசுவுக்கு ஒரு நல்ல, சிறந்த முன்மாதிரியான வளர்ப்புத் தந்தையாவும் இருந்து செயல்பட்டு, ஒரு கணவர் எப்படி இருக்கவேண்டும், ஒரு தந்தை எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக விளங்குகின்றார்.