புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

29 May 2020

அருளாளர் ஜோசப் ஜெரார்டு ( 183-1914) May 29

மே 29 

அருளாளர் ஜோசப் ஜெரார்டு ( 183-1914)
இவர் பிரான்சில் உள்ள நான்சி மறை மாவட்டத்தைச் சார்ந்தவர்.

சிறுவயதில் தோட்டத் தொழிலை செய்துவந்த இவர், தனது இருபதாவது வயதில் இறை அழைத்தலை உணர்ந்தார். இதற்குப் பின்பு இவர் அமல மரி தியாகிகள் (OMI) சபையில் சேர்ந்தார்.

தனது 22 வது வயதில் தென் ஆப்பிரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட இவர், லெசோதோ என்ற இடத்திற்குச் சென்று, அங்கிருந்த ஜூலு என்ற மக்கள் நடுவில் பணி செய்தார். 

தொடக்கத்தில் இவர் அறிவித்த நற்செய்தியைக் கேட்டு யாரும் மனம் மாறவில்லை. ஆனாலும், இவர் மனந்தளராமல் நோயாளர்களையும் வயது முதிர்ந்தவர்களையும் கவனித்துக்கொண்டு, அதன் மூலமாக நற்செய்தி அறிவித்து வந்ததால், பலர் இவர் அறிவித்த நற்செய்தியை ஏற்றுக்கொள்ளத் தொடங்கினார்கள்.

சாலை வசதி அவ்வளவாக இல்லாத அந்தக் காலத்தில், இவர் கால்நடையாகவே அதுவும், காலில் செருப்பு அணியாமலேயே பல இடங்களுக்குச் சென்று பணி செய்தார். அர்ப்பண உள்ளத்தோடு பணிசெய்த இவருடைய வாழ்க்கையைப் பார்த்துவிட்டுப் பலரும் ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கைகொள்ளத் தொடங்கினார்கள்.

இவர் புனித கன்னி மரியாவிடம் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் அடிக்கடி உச்சரிக்கக் கூடிய வார்த்தைகள், "எல்லாச் சூழ்நிலையிலும் மக்களை அன்பு செய்யவேண்டும்" என்பதாகும். இவர் 1914 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

இவருக்கு 1988 ஆம் ஆண்டு புனித திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலால் புனிதர் பட்டம் கொடுத்தார்.

.

✠ புனிதர் மரிய மகதலின் டி பஸ்ஸிMay 24

† இன்றைய புனிதர் †
(மே 24)

✠ புனிதர் மரிய மகதலின் டி பஸ்ஸி ✠
(St. Mary Magdalene de' Pazzi)
கன்னியர்:
(Virgin)

பிறப்பு: ஏப்ரல் 2, 1566
ஃப்ளாரன்ஸ், இத்தாலி
(Florence, Duchy of Florence)

இறப்பு: மே 25, 1607 (வயது 41)
ஃப்ளாரன்ஸ், இத்தாலி
(Florence, Grand Duchy of Tuscany)

ஏற்கும் சமயம்: 
ரோமன் கத்தோலிக்கம்
(Roman Catholic Church)

அருளாளர் பட்டம்: கி.பி. 1626
திருத்தந்தை எட்டாம் அர்பன்
(Pope Urban VIII)

புனிதர் பட்டம்: ஏப்ரல் 28, 1669 
திருத்தந்தை பத்தாம் கிளமெண்ட்
(Pope Clement X)

முக்கிய திருத்தலம்:
புனிதர் மரிய மகதலின் டி பஸ்ஸி துறவு மடம், கரேக்கி, ஃப்ளாரன்ஸ், இத்தாலி
(Monastery of Santa Maria Maddalena de' Pazzi, Careggi, Florence, Italy)

நினைவுத் திருவிழா: மே 24

பாதுகாவல்: 
நேப்பிள்ஸ் (துணை பாதுகாவலர்) (Naples (co-patron), நோய்களுக்கெதிராக (Against bodily ills), பாலின தூண்டுதளுக்கே எதிராக (Against sexual temptation), நோயாளிகள் (Sick people)

புனிதர் மரிய மகதலின் டி பஸ்ஸி, ஒரு இத்தாலிய ரோமன் கத்தோலிக்க புனிதரும், கார்மேல் சபை துறவியும், கிறிஸ்தவ சித்தரும் ஆவார்.

“கதெரீனா” (Caterina) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் மரிய மகதலின் டி பஸ்ஸி, கி.பி. 1566ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 2ம் நாளன்று, ஃப்ளாரென்ஸ் நகரில் பிறந்தார். இவரது தந்தை நகரின் புகழ்பெற்ற செல்வந்தர் ஆவார். அவரது பெயர், “கமிலோ டி கெரி டே பஸ்ஸி” (Camillo di Geri de' Pazzi) ஆகும். இவரது தாயாரின் பெயர், “மரிய பௌன்டெல்மொன்டி” (Maria Buondelmonti) ஆகும். பஸ்ஸி சிறுமியாக இருக்கையிலேயே ஆன்மீக மற்றும் பக்தி மார்க்கத்தின்பால் ஈர்க்கப்பட்டிருந்தார். ஒன்பது வயதிலேயே பஸ்ஸி இறைவனின் திருப்பாடுகளை தியானிக்கக் கற்றுக்கொண்டார். தமது பத்து வயதிலேயே புது நன்மை பெற்றுக்கொண்ட அவர், தமது கன்னிமைக்காக பிரமாணம் செய்துகொண்டார்.

அவரது பன்னிரண்டு வயதில் தமது தாயாரின் முன்னிலையிலேயே இறைவனின் திருக்காட்சியைக் காணும் பேறு பெற்றார். அதுமுதலே பலவித அற்புத திருக்காட்சிகளைக் கண்டார்.

கி.பி. 1580ம் ஆண்டு, பஸ்ஸி “மால்டா சபையினர்” (Order of Malta) நடத்தும் பெண் துறவியரின் மடத்தில் கல்வி கற்க அவரது தந்தையால் அனுப்பப்பட்டார். ஆனால் விரைவிலேயே திரும்ப அழைத்துக்கொள்ளப்பட்ட பஸ்ஸி, ஒரு பிரபுக் குடும்ப இளைஞனை திருமணம் செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டார். ஆனால், தாம் தமது கன்னிமைக்காக இறைவனிடம் பிரமாணம் எடுத்துக்கொண்டதை தந்தையிடம் எடுத்துக்கூறினார். இறுதியில், தமது சம்மதத்தை தெரிவித்த தந்தையார், பஸ்ஸியின் துறவு வாழ்க்கைக்கு சம்மதம் தெரிவித்தார். பஸ்ஸி, “தூய மரியாளின் கார்மேல் துறவு மடத்தை” (Carmelite Monastery of St. Mary) தேர்ந்துகொண்டார். கி.பி. 1583ம் ஆண்டு, புகுமுக (Novice) துறவறம் பெற்ற பஸ்ஸி, “அருட்சகோதரி மேரி மகதலின்” (Sister Mary Magdalene) என்ற துறவற பெயரை ஏற்றுக்கொண்டார்.

புகுமுக (Novice) துறவறத்தில் ஒருவருட காலம் இருந்த பஸ்ஸி, ஒருமுறை மிகவும் மோசமாக நோயால் பாதிக்கப்பட்டார். வேதனைகளை வெளிக்காட்டாத பஸ்ஸியின் இருதயம் கிறிஸ்துவின் அன்பில் நிறைந்திருந்தது. இதனைக் கண்ட மடத்தின் அருட்சகோதரி ஒருவர் பஸ்ஸியிடம், “சிறு முணுமுணுத்தல் கூட இல்லாமல் எப்படி உங்களால் வேதனைகளை பொறுத்துக்கொள்ள முடிகிறது” என்று கேட்டார். அதற்கு பதிலளித்த பஸ்ஸி, இறைவனின் பாடுபட்ட சொரூபத்தைச் சுட்டிக்காட்டியபடி, “கிறிஸ்துவின் பாடுகளை அனுபவிக்க அழைக்கப்பட்ட எவருக்குமே வலிகளும் வேதனைகளும் இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்” என்றார்.

இதுபோன்ற இவரது எண்ணங்களும் கிறிஸ்துவுக்குள்ளான இவரது அன்பும் இவருக்கு தொடர்ந்த இறைவனின் திருப்பாடுகளின் திருக்காட்சிகளை காண கிட்டியது. இறைவனின் பெயரால் இவர் நிகழ்த்திய அற்புதங்கள் எண்ணிலடங்காதவை ஆகும். பிறரின் எண்ணங்களைக் கூட அறிந்து கூறும் வல்லமை பெற்றவராக இவர் திகழ்ந்தார் என்பர். அதுபோலவே, எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தியும் இவர் பெற்றிருந்தார். உதாரணத்துக்கு, “கர்தினால் அலெஸ்ஸான்ட்ரோ டே மெடிசி” (Cardinal Alessandro de' Medici) அடுத்த திருத்தந்தை ஆவார் என்றார். அதுபோலவே அவர் திருத்தந்தையாக தேர்வு செய்யப்பட்டு, “பதினோராம் லியோ” (Pope Leo XI) ஆனார்.

அவரது வாழ்நாளில், தூர தொலைவு நாடுகளிலிருந்த பலருக்கு நேரில் காட்சியளித்து அவர்களது நோய்களை குணமாக்கியதாக கூறப்படுகிறது.

கி.பி. 1607ம் ஆண்டு, தமது 41 வயதில் மரித்த இப்புனிதரின் உடல், கெட்டுப்போகாத நிலையிலேயே இருப்பதாக கூறப்படுகிறது.

புனிதர் பட்டமளிப்பு:
இவரின் இறப்புக்குப் பின், பல புதுமைகள் நிகழ்ந்ததால், இவருக்கு முக்திபேறு பட்டம் அளிப்பதற்கான முயற்சிகள் திருத்தந்தை ஐந்தாம் பவுலின் (Pope Paul V) ஆட்சியில் தொடங்கி திருத்தந்தை எட்டாம் அர்பனின் (Pope Urbun VIII) ஆட்சியில் கி.பி. 1626ம் ஆண்டு, வழங்கப்பட்டது. எனினும் 62 ஆண்டுகளுக்குப் பின்னரே திருத்தந்தை பத்தாம் கிளமெண்டால் (Pope Clement VIII), கி.பி. 1669ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 28ம் நாளன்று, புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது. 

நினைவுத் திருவிழா நாள்:
இவரின் புனிதர் பட்டமளிப்பின் போது, இவரது விழா நாள், இவரின் இறந்த நாள் ஆகிய, மே மாதம், 25ம் நாள் எனக் குறிக்கப்பட்டது. ஆனால் கி.பி. 1725ம் ஆண்டு, அந்நாள் புனித திருத்தந்தை ஏழாம் கிரகோரிக்கு (Pope Gregory VII) ஒதுக்கப்பட்டதால், மே மாதம், 29ம் தேதிக்கு நகர்த்தப்பட்டது. கி.பி. 1969ம் ஆண்டு நடந்த மாற்றத்தில் மீண்டும் மே மாதம், 24ம் தேதிக்கு நகர்த்தப்பட்டது.

✠ புனிதர் மரிய மகதலின் டி பஸ்ஸிMay 24

† இன்றைய புனிதர் †
(மே 24)

✠ புனிதர் மரிய மகதலின் டி பஸ்ஸி ✠
(St. Mary Magdalene de' Pazzi)
கன்னியர்:
(Virgin)

பிறப்பு: ஏப்ரல் 2, 1566
ஃப்ளாரன்ஸ், இத்தாலி
(Florence, Duchy of Florence)

இறப்பு: மே 25, 1607 (வயது 41)
ஃப்ளாரன்ஸ், இத்தாலி
(Florence, Grand Duchy of Tuscany)

ஏற்கும் சமயம்: 
ரோமன் கத்தோலிக்கம்
(Roman Catholic Church)

அருளாளர் பட்டம்: கி.பி. 1626
திருத்தந்தை எட்டாம் அர்பன்
(Pope Urban VIII)

புனிதர் பட்டம்: ஏப்ரல் 28, 1669 
திருத்தந்தை பத்தாம் கிளமெண்ட்
(Pope Clement X)

முக்கிய திருத்தலம்:
புனிதர் மரிய மகதலின் டி பஸ்ஸி துறவு மடம், கரேக்கி, ஃப்ளாரன்ஸ், இத்தாலி
(Monastery of Santa Maria Maddalena de' Pazzi, Careggi, Florence, Italy)

நினைவுத் திருவிழா: மே 24

பாதுகாவல்: 
நேப்பிள்ஸ் (துணை பாதுகாவலர்) (Naples (co-patron), நோய்களுக்கெதிராக (Against bodily ills), பாலின தூண்டுதளுக்கே எதிராக (Against sexual temptation), நோயாளிகள் (Sick people)

புனிதர் மரிய மகதலின் டி பஸ்ஸி, ஒரு இத்தாலிய ரோமன் கத்தோலிக்க புனிதரும், கார்மேல் சபை துறவியும், கிறிஸ்தவ சித்தரும் ஆவார்.

“கதெரீனா” (Caterina) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் மரிய மகதலின் டி பஸ்ஸி, கி.பி. 1566ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 2ம் நாளன்று, ஃப்ளாரென்ஸ் நகரில் பிறந்தார். இவரது தந்தை நகரின் புகழ்பெற்ற செல்வந்தர் ஆவார். அவரது பெயர், “கமிலோ டி கெரி டே பஸ்ஸி” (Camillo di Geri de' Pazzi) ஆகும். இவரது தாயாரின் பெயர், “மரிய பௌன்டெல்மொன்டி” (Maria Buondelmonti) ஆகும். பஸ்ஸி சிறுமியாக இருக்கையிலேயே ஆன்மீக மற்றும் பக்தி மார்க்கத்தின்பால் ஈர்க்கப்பட்டிருந்தார். ஒன்பது வயதிலேயே பஸ்ஸி இறைவனின் திருப்பாடுகளை தியானிக்கக் கற்றுக்கொண்டார். தமது பத்து வயதிலேயே புது நன்மை பெற்றுக்கொண்ட அவர், தமது கன்னிமைக்காக பிரமாணம் செய்துகொண்டார்.

அவரது பன்னிரண்டு வயதில் தமது தாயாரின் முன்னிலையிலேயே இறைவனின் திருக்காட்சியைக் காணும் பேறு பெற்றார். அதுமுதலே பலவித அற்புத திருக்காட்சிகளைக் கண்டார்.

கி.பி. 1580ம் ஆண்டு, பஸ்ஸி “மால்டா சபையினர்” (Order of Malta) நடத்தும் பெண் துறவியரின் மடத்தில் கல்வி கற்க அவரது தந்தையால் அனுப்பப்பட்டார். ஆனால் விரைவிலேயே திரும்ப அழைத்துக்கொள்ளப்பட்ட பஸ்ஸி, ஒரு பிரபுக் குடும்ப இளைஞனை திருமணம் செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டார். ஆனால், தாம் தமது கன்னிமைக்காக இறைவனிடம் பிரமாணம் எடுத்துக்கொண்டதை தந்தையிடம் எடுத்துக்கூறினார். இறுதியில், தமது சம்மதத்தை தெரிவித்த தந்தையார், பஸ்ஸியின் துறவு வாழ்க்கைக்கு சம்மதம் தெரிவித்தார். பஸ்ஸி, “தூய மரியாளின் கார்மேல் துறவு மடத்தை” (Carmelite Monastery of St. Mary) தேர்ந்துகொண்டார். கி.பி. 1583ம் ஆண்டு, புகுமுக (Novice) துறவறம் பெற்ற பஸ்ஸி, “அருட்சகோதரி மேரி மகதலின்” (Sister Mary Magdalene) என்ற துறவற பெயரை ஏற்றுக்கொண்டார்.

புகுமுக (Novice) துறவறத்தில் ஒருவருட காலம் இருந்த பஸ்ஸி, ஒருமுறை மிகவும் மோசமாக நோயால் பாதிக்கப்பட்டார். வேதனைகளை வெளிக்காட்டாத பஸ்ஸியின் இருதயம் கிறிஸ்துவின் அன்பில் நிறைந்திருந்தது. இதனைக் கண்ட மடத்தின் அருட்சகோதரி ஒருவர் பஸ்ஸியிடம், “சிறு முணுமுணுத்தல் கூட இல்லாமல் எப்படி உங்களால் வேதனைகளை பொறுத்துக்கொள்ள முடிகிறது” என்று கேட்டார். அதற்கு பதிலளித்த பஸ்ஸி, இறைவனின் பாடுபட்ட சொரூபத்தைச் சுட்டிக்காட்டியபடி, “கிறிஸ்துவின் பாடுகளை அனுபவிக்க அழைக்கப்பட்ட எவருக்குமே வலிகளும் வேதனைகளும் இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்” என்றார்.

இதுபோன்ற இவரது எண்ணங்களும் கிறிஸ்துவுக்குள்ளான இவரது அன்பும் இவருக்கு தொடர்ந்த இறைவனின் திருப்பாடுகளின் திருக்காட்சிகளை காண கிட்டியது. இறைவனின் பெயரால் இவர் நிகழ்த்திய அற்புதங்கள் எண்ணிலடங்காதவை ஆகும். பிறரின் எண்ணங்களைக் கூட அறிந்து கூறும் வல்லமை பெற்றவராக இவர் திகழ்ந்தார் என்பர். அதுபோலவே, எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தியும் இவர் பெற்றிருந்தார். உதாரணத்துக்கு, “கர்தினால் அலெஸ்ஸான்ட்ரோ டே மெடிசி” (Cardinal Alessandro de' Medici) அடுத்த திருத்தந்தை ஆவார் என்றார். அதுபோலவே அவர் திருத்தந்தையாக தேர்வு செய்யப்பட்டு, “பதினோராம் லியோ” (Pope Leo XI) ஆனார்.

அவரது வாழ்நாளில், தூர தொலைவு நாடுகளிலிருந்த பலருக்கு நேரில் காட்சியளித்து அவர்களது நோய்களை குணமாக்கியதாக கூறப்படுகிறது.

கி.பி. 1607ம் ஆண்டு, தமது 41 வயதில் மரித்த இப்புனிதரின் உடல், கெட்டுப்போகாத நிலையிலேயே இருப்பதாக கூறப்படுகிறது.

புனிதர் பட்டமளிப்பு:
இவரின் இறப்புக்குப் பின், பல புதுமைகள் நிகழ்ந்ததால், இவருக்கு முக்திபேறு பட்டம் அளிப்பதற்கான முயற்சிகள் திருத்தந்தை ஐந்தாம் பவுலின் (Pope Paul V) ஆட்சியில் தொடங்கி திருத்தந்தை எட்டாம் அர்பனின் (Pope Urbun VIII) ஆட்சியில் கி.பி. 1626ம் ஆண்டு, வழங்கப்பட்டது. எனினும் 62 ஆண்டுகளுக்குப் பின்னரே திருத்தந்தை பத்தாம் கிளமெண்டால் (Pope Clement VIII), கி.பி. 1669ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 28ம் நாளன்று, புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது. 

நினைவுத் திருவிழா நாள்:
இவரின் புனிதர் பட்டமளிப்பின் போது, இவரது விழா நாள், இவரின் இறந்த நாள் ஆகிய, மே மாதம், 25ம் நாள் எனக் குறிக்கப்பட்டது. ஆனால் கி.பி. 1725ம் ஆண்டு, அந்நாள் புனித திருத்தந்தை ஏழாம் கிரகோரிக்கு (Pope Gregory VII) ஒதுக்கப்பட்டதால், மே மாதம், 29ம் தேதிக்கு நகர்த்தப்பட்டது. கி.பி. 1969ம் ஆண்டு நடந்த மாற்றத்தில் மீண்டும் மே மாதம், 24ம் தேதிக்கு நகர்த்தப்பட்டது.

புனிதர் மாடலின் சோஃபி பாரட் May 29

† இன்றைய புனிதர் †
(மே 29)
✠ புனிதர் மாடலின் சோஃபி பாரட் ✠
(St. Madeleine Sophie Barat)

திருஇருதய சபை நிறுவனர்:
(Founder of the Society of the Sacred Heart)

பிறப்பு: டிசம்பர் 12, 1779
ஜோய்க்னி, பர்கண்டி ஃபிரான்ஸ்
(Joigny, Burgundy, France) 

இறப்பு: மே 25, 1865 (வயது 85)
பாரிஸ், ஃபிரான்ஸ்
(Paris, France)

ஏற்கும் சமயம்: 
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

அருளாளர் பட்டம்: மே 24, 1908
திருத்தந்தை பத்தாம் பயஸ் 
(Pope Pius X)

புனிதர் பட்டம்: மே 24, 1925
திருத்தந்தை பதினொன்றாம் பயஸ்
(Pope Pius XI)

நினைவுத் திருநாள்: மே 29

புனிதர் மாடலின் சோஃபி பாரட், ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஃபிரெஞ்ச் புனிதரும், "திருஇருதய சபை" (Founder of the Society of the Sacred Heart) நிறுவனரும் ஆவார்.

புனிதர் மாடலின் சோஃபி பாரட், அவரது பெற்றோருக்கு மூன்றாம் குழந்தையாவார். இவரது தந்தையார், திராட்சை வளர்க்கும் தொழில் புரியும் "ஜாக்குவெஸ் பாராட்" (Jacques Barat) என்பவராவார். இவரது தாயாரின் பெயர், "மேடம் மடலின் ஃபௌஃப் பாரட்" (Madame Madeleine Fouffé Barat) ஆகும். கி.பி. 1779ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 12ம் தேதி நள்ளிவு, அவர்களது அண்டை வீடு தீ பிடித்து எரிந்தது. தீ விபத்தின் காரணமாக பதற்றமடைந்த அவரது தாயார் எட்டு மாத கர்ப்பத்திலேயே மாடலின் சோஃபியை குறை மாத குழந்தையாக பிரசவித்தார். பிறந்தவுடன் ஆரோக்கியமற்று மிகவும் நலிவடைந்திருந்த மாடலின் சோஃபி'க்கு, மறுநாளே திருமுழுக்கு அளிக்கப்பட்டது. அவரது வீட்டின் அருகாமையிலேயே உள்ள புனித "திபௌல்ட்" (St. Thibault Church) ஆலயத்தில் விடியற்காலை ஐந்து மணிக்கே திருமுழுக்கு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அவரது பெற்றோர் அவருக்காக ஞானப்பெற்றோரை ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், அவசரம் காரணமாக அவர்களை அழைக்க இயலவில்லை. ஆலயத்திற்கு தற்செயலாக வந்த "சோஃபி செடோர்" (Sophie Cédor) என்ற உள்ளூர் பெண் ஒருவரும், அவரது மூத்த சகோதரர் லூயிசும் அவரது ஞானப்பெற்றோராக நிறுத்தப்பட்டனர்.

பதினாறு வயதினிலே, கத்தோலிக்க குருவாக வேண்டி கல்வி கற்ற அவரது தமையன் லூயிஸ், இருபத்தொரு வயதுக்கு முன் குருத்துவம் பெற இயலாத காரணத்தால் வீட்டுக்கு திரும்பினார். அவர் தமது தங்கை மாடலின் சோஃபி பாரட்'டின் கல்வியில் கவனம் செலுத்தினார். அக்காலத்தில் இளம்பெண்களுக்கு கல்வி கற்பதில் பல இன்னல்கள் இருந்தன. ஆனாலும் அவர் தமது தங்கைக்கு இலத்தீன், கிரேக்கம், ஸ்பேனிஷ், இத்தாலியன் ஆகிய மொழிகளையும், இயற்கை அறிவியல் மற்றும் சரித்திரம் ஆகிய பாடங்களையும் கற்பித்தார்.

கி.பி. 1789ம் ஆண்டு, ஃபிரெஞ்ச் புரட்சியின்போது, மதகுருமார்களின் சிவில் அரசியலமைப்பு சம்பந்தமான விவாதங்களில் ஈடுபட்டு, கைது செய்யப்படும் நிலை வந்தபோது, பாரிஸ் நகருக்கு தப்பிச் சென்றார். கி.பி. 1793ம் ஆண்டு, மே மாதம், பாரிஸ் நகரில் கைது செய்யப்பட்ட லூயிஸ் இரண்டு வருடம் சிறையிலிருந்தார். கி.பி. 1795ம் ஆண்டு, விடுதலை பெற்று வீடு வந்து, தமது தங்கையையும் அழைத்துக்கொண்டு மீண்டும் பாரிஸ் நகர் வந்தார். அங்கே மாடலின் சோஃபி பாரட் ஐந்து வருடங்கள் வரை செப வாழ்க்கை வாழ்வதிலும், கல்வி கற்பதிலும், ரகசியமாக சிறார்களுக்கு மறைக் கல்வி கற்பிப்பதிலும் கழித்தார்.

பாரிஸ் நகரில் இவருக்கு “ஜோசப் வேரின்” (Joseph Varin) என்ற கத்தோலிக்க குரு அறிமுகமானார். ஜோசப் வேரின், இளம்பெண்களின் கல்வியில் ஈடுபாடு கொண்ட, இயேசுவின் திருஇருதயத்திற்கு அர்ப்பணிப்பு கொண்ட பெண்களுக்கான ஒரு சமூகத்தை நிறுவ விரும்பினார். கார்மேல் சபையில் சேரும் கனவுடனிருந்த மாடலின் சோஃபி பாரட், தமது கனவைக் கைவிட்டு, பாரிஸ் நகரில் மூன்று இளம்பெண்களுடன் இணைந்து புதிய "திருஇருதய சமூகத்தை" நிறுவினார். ஆரம்பத்தில், ஃபிரெஞ்ச் அதிகார வர்க்கம் இயேசுவின் திருஇருதயத்தை பூஜிப்பதை தடை செய்திருந்த காரணத்தால் இந்த புதிய சமூகம் "விசுவாசமுள்ள பெண்கள்" (Women of Faith) என்ற பெயரில் இயங்கியது.

ஃபிரான்சின் வட பிராந்தியத்தில் கி.பி. 1801ம் ஆண்டு, இச்சமூகத்தினரால் முதல் பள்ளிக்கூடம் ஆரம்பிக்கப்பட்டது. "திருஇருதய சமூகமும்" பள்ளியும் வேகமாக வளர்ந்தன. தமது 23 வயதில் "திருஇருதய சமூகத்தின்" தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

ஜோசப் வேரின் துணையுடன் இவரது பள்ளிகள் வளர ஆரம்பித்தன. ஃபிரான்ஸில் பல பள்ளிகள் தொடங்கப்பட்டன. இவை, வட அமெரிக்கா, இத்தாலி, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், அல்ஜியர்ஸ், இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்பெயின், ஹாலந்து, ஜெர்மனி, தென் அமெரிக்கா, ஆஸ்திரியா மற்றும் போலந்து ஆகிய நாடுகளிலும் தோற்றுவிக்கப்பட்டன.

கி.பி. 1832ம் ஆண்டு, “லியோன்ஸ்” (Lyons) நகரில், "மரியாளின் குழந்தைகள்" (Congregation of the Children of Mary) எனும் சபையை தோற்றுவித்தார்.

கி.பி. 1840ம் ஆண்டு, சோஃபியின் முயற்சியால் வத்திக்கான் (Vatican) மற்றும் பாரிசின் பேராயர் (Archbishop of Paris) ஆகியோருக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள் தவிர்க்கப்பட்டன. வத்திக்கான் அல்லது பாரிஸ் பேராயர் பக்கங்களைத் தேர்வு செய்யும்படி அவருடைய எல்லா சகோதரிகளும் அழுத்தம் கொடுத்திருந்தாலும், சோஃபி அவ்வாறு செய்ய மறுத்துவிட்டார். அவரால் மீறுதலைக் குணப்படுத்த முடிந்தது. 65 வருடங்களுக்கும் மேலாக சோஃபியின் தலைமையில் அவரது சமூகம் நெப்போலியனின் ஆட்சி பிழைத்திருந்தது. பிரான்ஸ் இன்னும் இரண்டு புரட்சிகளை சந்தித்ததோடு, இத்தாலியின் போராட்டம் காரணமாக, முழுக்க முழுக்க தனி தேசமாக மாறியது.

திருஇருதய பள்ளிகள் விரைவில் ஒரு சிறந்த நற்பெயரைப் பெற்றன. குழந்தைகளின் பெற்றோரின் நிதி வசதிகளையெல்லாம் பொருட்படுத்தாமல் எல்லா குழந்தைகளையும் கல்வி கற்பிக்கும் கனவு கண்டார். அவர் நிறுவிய ஒவ்வொரு பள்ளிக்கும் ஈடாக ஒரு இலவச பள்ளியும் நிறுவப்பட்டது. ஒவ்வொரு ஏழைக் குழந்தைக்கும் உயர்தர கல்வி கிடைக்க உறுதிகொண்டிருந்தார்.

இவரது அறுபத்தைந்து வருடகால தலைமையில், இவரது சபை பெண்களுக்கு கல்வி கற்பிக்கும் பணியில் 3500க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன், ஐரோப்பா (Europe), வட ஆபிரிக்கா (North Africa), வடக்கு மற்றும் தென் அமெரிக்க (North and South America) நாடுகளில் பரவியது.

85 வயதான மாடலின் சோஃபி பாரட், கி.பி. 1865ம் ஆண்டு, பாரிஸ் நகரிலுள்ள தலைமை இல்லத்தில், இயேசுவின் விண்ணேற்ற தினத்தன்று மரித்தார்.

பிசா நகர் புனிதர் போநா May 29

† இன்றைய புனிதர் †
(மே 29)

✠ பிசா நகர் புனிதர் போநா ✠
(St. Bona of Pisa)
கன்னியர்:
(Virgin)

பிறப்பு: கி.பி 1156
பிசா, இத்தாலி
(Pisa, Italy)

இறப்பு: கி.பி 1207
பிசா, இத்தாலி
(Pisa, Italy)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

புனிதர் பட்டம்: கி.பி 1962
திருத்தந்தை இருபத்துமூன்றாம் ஜான்
(Pope John XXIII)

நினைவுத் திருநாள்: மே 29

பாதுகாவல்:
பயணிகள், கூரியர்கள், வழிகாட்டிகள், யாத்ரீகர்கள், விமான பணிப்பெண்கள், பிசா

பிசா நகர் புனிதர் போநா, அகஸ்தீனிய மூன்றாம் நிலை (Third Order of the Augustinian nuns) கன்னியர் சபையின் உறுப்பினர் ஆவார். அவர் பயணிகளை யாத்திரைகளுக்கு வழிநடத்த உதவினார். கி.பி. 1962ம் ஆண்டில், திருத்தந்தை இருபத்துமூன்றாம் ஜான் இவரை கத்தோலிக்க திருச்சபையில் ஒரு புனிதராக அருட்பொழிவு செய்தார். அவர் பயணிகளின் பாதுகாவல் புனிதராக கருதப்படுகிறார். குறிப்பாக கூரியர்கள், வழிகாட்டிகள், யாத்ரீகர்கள், விமான பணிப்பெண்கள் மற்றும் பிசா நகரம் ஆகியவற்றின் பாதுகாவலராவார்.

வாழ்க்கை:
பிசா நகரை பூர்வீகமாகக் கொண்ட இவருக்கு சிறு வயதிலிருந்தே தெய்வீக தரிசனங்கள் காணும் அனுபவங்கள் வாய்த்ததாக கூறப்படுகிறது. ஒரு சந்தர்ப்பத்தில், தூய கல்லறை தேவாலயத்தில் (Holy Sepulchre Church) சிலுவையில் அறையப்பட்ட திருச்சொரூபம் ஓன்று, அவளுக்கு கையில் கிட்டியது.

மற்றொரு தேவாலயத்தில், இயேசு, அன்னை கன்னி மரியாள், மற்றும் புனிதர் பெரிய யாக்கோபு (James the Greater) உள்ளிட்ட மூன்று புனிதர்களின் தரிசனத்தைக் கண்டார். இவர்களைச் சுற்றியிருந்த ஒளியால் அவள் பயந்து ஓடிப்போனாள். புனிதர் பெரிய யாக்கோபு, அவளைப் பின்தொடர்ந்து சென்று, அவளை இயேசுவின் திருச்சொரூபத்திடம் அழைத்துச் சென்றார். போநா, தமது வாழ்நாள் முழுதும், புனிதர் பெரிய யாக்கோபுவிடம் தீவிர பக்தி கொண்டிருந்தார். தமது பத்து வயதில், அவர் தன்னை ஒரு அகஸ்தீனிய மூன்றாம் நிலை கன்னியர் (Augustinian tertiary) சபையில் அர்ப்பணித்தார். சிறு வயதிலிருந்தே தவறாமல் உண்ணாவிரதம் இருந்தார். வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும், ரொட்டியும் தண்ணீரும் மட்டுமே தமது உணவாக எடுத்துக் கொண்டார்.

இவர் மேற்கொண்ட பல பயணங்களின் முதல் பயணமாக, நான்கு வருடங்கள் கழித்து, ஜெருசலேமுக்கு (Jerusalem) அருகே நடந்துவந்த சிலுவைப் போரில் (Crusades) சண்டையிட்டுக் கொண்டிருந்த தனது தந்தையைக் காண பயணப்பட்டார். வீட்டிற்கு செல்லும் பயணத்தில், அவர் மத்தியதரைக் கடலில் (Mediterranean Sea) முஸ்லீம் கடற்கொள்ளையர்களால் (Muslim pirates) சிறைபிடிக்கப்பட்டார். அதில் காயமடைந்த அவர், பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் அவர் தனது நாட்டு மக்களில் சிலரால் மீட்கப்பட்டு, வீட்டிற்கு செல்லும் தனது பயணத்தை முடித்தார்.

அதன்பிறகு, அவர் மற்றொரு புனித யாத்திரைக்கு புறப்பட்டார். இந்த முறை புனிதர் பெரிய யாக்கோபு கௌரவிக்கப்படும் இடமான, வடமேற்கு ஸ்பெய்ன் (Northwestern Spain) நாட்டிலுள்ள, "கலீசியா" (Galicia) பிராந்தியத்திலுள்ள, "சாண்டியாகோ டி காம்போஸ்டெலா" (Santiago de Compostela) நகருக்கு, நீண்ட மற்றும் ஆபத்தான ஆயிரம் மைல் பயணத்தில் ஏராளமான யாத்ரீகர்களை வழிநடத்தினார். இதற்குப் பிறகு, "நைட்ஸ் ஆஃப் செயிண்ட் ஜேம்ஸ்" (Knights of Saint James) என்றழைக்கப்படும், அப்போஸ்தலர் பெரிய யாக்கோபுவால் உருவாக்கப்பட்ட ஆன்மீக சபையினரால், இந்த யாத்திரை வழிப்பாதைகளில், அதிகாரப்பூர்வ வழிகாட்டிகளில் ஒருவராக அவர் நியமிக்கப்பட்டார். அவர், ஒன்பது தடவை, இந்த வழிப்பாதைகளில் வெற்றிகரமாக பயணங்களை நடத்தி முடித்தார்.

பின்னர், தமது உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதிலும், அவர் பத்தாவது பயணத்தை மேற்கொண்டு முடித்து, பிசா நகருக்குத் திரும்பினார். சிறிது காலத்திலேயே அவர் பிசா நகரில், உள்ள "சான் மார்டினோ" தேவாலயத்திற்கு (Church of San Martino) அருகில் தாம் தங்கியிருந்த அறையில் மரித்தார். அங்கு அவரது உடல் இன்றுவரை பாதுகாக்கப்படுகிறது.

புனிதர் ஆறாம் பவுல் ✠(St. Paul VI)MAY 29

† இன்றைய புனிதர் †
(மே 29)

✠ புனிதர் ஆறாம் பவுல் ✠
(St. Paul VI)
262ம் திருத்தந்தை:
(262nd Pope)

பிறப்பு: செப்டம்பர் 26, 1897
கொன்சேசியோ, ப்ரேசியா, இத்தாலி அரசு
(Concesio, Brescia, Kingdom of Italy)

இறப்பு: ஆகஸ்ட் 6, 1978 (வயது 80)
கன்டோல்ஃபோ கோட்டை, இத்தாலி
(Castel Gandolfo, Italy)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

திருப்பட்டங்கள்:
குருத்துவத் அருட்பொழிவு (Ordination) : மே 29, 1920
ஜாச்சிந்தோ காஜ்ஜியா (Giacinto Gaggia)

ஆயர்நிலை திருப்பொழிவு (Consecration): டிசம்பர் 12, 1954
யூஜீன் டிஸ்செரன்ட் (Eugène Tisserant)

கர்தினாலாக உயர்த்தப்பட்டது: டிசம்பர் 15, 1958
திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான்
(Pope Saint John XXIII)

முத்திப்பேறு பட்டம்: அக்டோபர் 19, 2014
திருத்தந்தை ஃபிரான்சிஸ்
(Pope Francis)

புனிதர் பட்டம்: அக்டோபர் 14, 2018
திருத்தந்தை ஃபிரான்சிஸ்
(Pope Francis)

நினைவுத் திருவிழா: மே 29

பாதுகாவல்:
மிலன் உயர்மறைமாவட்டம் (Archdiocese of Milan)
ஆறாம் பால் “போண்டிஃபிகல்” இன்ஸ்டிடியூட் (Paul VI Pontifical Institute)
இரண்டாம் வத்திக்கான் கவுன்சில் (Second Vatican Council)
ப்ரெஸ்ஸியா மறைமாவட்டம் (Diocese of Brescia)
“கான்செஸியோ” (Concesio)
“மெஜந்தா” (Magenta)
“பதர்னோ டுக்னானோ” (Paderno Dugnano)

திருத்தந்தை ஆறாம் பவுல், கி.பி. 1963ம் ஆண்டு முதல் 1978ம் ஆண்டு வரையான காலத்தின் கத்தோலிக்க திருச்சபையின் 262ம் திருத்தந்தையும், ரோம் ஆயரும் ஆவார். "ஜியோவன்னி பட்டிஸ்டா என்ரிக்கோ அன்டோனியோ மரிய மோன்டினி" (Giovanni Battista Enrico Antonio Maria Montini) என்னும் நீண்ட திருமுழுக்கு பெயர் கொண்ட இவர், 1962ம் ஆண்டு, கூட்டியிருந்த இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தை (Second Vatican Council) தொடர்ந்து நடத்தி நிறைவுக்குக் கொணர்ந்தார். மரபுவழி கிறிஸ்தவ சபையோடும், எதிர் திருச்சபைகளோடும் கத்தோலிக்க திருச்சபை நல்லுறவுகளை வளர்க்க இவர் பாடுபட்டார். இக்குறிக்கோளை அடைய இவர் பல திருச்சபைகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசியதோடு அச்சபைகளோடு பல ஒப்பந்தங்களையும் செய்தார்.

2018ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 14ம் நாள் அன்று, வத்திக்கான் நகரின் புனித பேதுரு சதுக்கத்தில் திருத்தந்தை ஃபிரான்சிஸ் அவர்கள், இவருக்கு புனிதர் பட்டம் அளித்தார். கடந்த 2019ம் ஆண்டுவரை, இவரின் நினைவுத் திருவிழா நாள், இவரின் பிறந்த நாளான செப்டம்பர் 26ம் தேதி நினைவுகூரப்பட்டது. 2020ம் ஆண்டுமுதல், இவரது நினைவுத் திருநாள் மே மாதம் 29ம் நாளன்று நினைவுகூரப்படும்.

திருத்தந்தை ஆவார் என்னும் எதிர்பார்ப்பு:
குருத்துவப் பட்டம் பெற்றதும் தந்தை “மோன்டினி" (Montini) வத்திக்கான் நகரத்தின் வெளியுறவுத் துறையில் 1922ம் ஆண்டு முதல் 1954ம் ஆண்டு வரை பணியாற்றினார். அப்போது மோன்டினியும், (Domenico Tardini) “டோமினிக்கோ டர்டினி” என்னும் மற்றொரு குருவும் அன்று ஆட்சியிலிருந்த திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் என்பவருக்கு மிக நெருக்கமான உடனுழைப்பாளர்களாகக் கருதப்பட்டார்கள். பன்னிரண்டாம் பயஸ், மோன்டினியை மிலான் நகரத்தின் பேராயராக உயர்த்தினார். வழக்கமாக, மிலான் உயர் மறைமாவட்டத்தின் ஆயர் கர்தினால் நிலைக்கு உயர்த்தப்படுவதுண்டு. ஆனால் பன்னிரண்டாம் பயசின் ஆட்சிக்காலம் முழுவதும் மோன்டினி கர்தினாலாக நியமிக்கப்படவில்லை. திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் இறந்தபின்னர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இருபத்திமூன்றாம் யோவான் பேராயர் மோன்டினியை 1958ல் கர்தினால் நிலைக்கு உயர்த்தினார். 1962ல் திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் இறந்ததும் கர்தினால் மோன்டினி அவருக்குப் பின் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்னும் எதிர்பார்ப்பு வலுவாக இருந்தது.

பவுல் என்னும் பெயரைத் தேர்ந்தெடுத்தல்:
கர்தினால் மோன்டினி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் "பவுல்" என்னும் பெயரைத் தெரிந்துகொண்டார். கி.பி. முதல் நூற்றாண்டில் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிப்பதில் அயராது உழைத்த புனிதர் பவுலைப் போல, தாமும் கிறிஸ்துவின் நற்செய்தியை உலகெங்கும் அறிவிக்க அழைக்கப்பட்டதாகப் புதிய திருத்தந்தை உணர்ந்ததால் "பவுல்" என்னும் பெயரைத் தமதாக்கிக் கொண்டார். அவரது ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலேயே அவர் எடுத்த முக்கியமான முடிவு, அவரது முன்னோடியாகிய இருபத்திமூன்றாம் யோவான் தொடங்கியிருந்த இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தைத் தாம் தொடர்ந்து நடத்தப்போவதாக அறிவித்ததுதான்.

1965ம் ஆண்டு, பொதுச்சங்கம் நிறைவுற்றதும் அச்சங்கம் எடுத்த முடிவுகளையும், பரிந்துரைத்த கருத்துகளையும், செயல்படுத்தும் பெரும் பொறுப்பு ஆறாம் பவுல் கைகளில் சேர்ந்தது. பொதுச்சங்கம் முன்மொழிந்த சீர்திருத்தங்கள் யாவை என்று வரையறுப்பதில் கருத்துவேறுபாடுகள் எழுந்த பின்னணியில் ஆறாம் பவுல் தீவிரப் போக்குகளைத் தவிர்த்து நடுநிலை நின்று செயல்பட்டார்.

அன்னை மரியாள் மீது பக்தி:
ஆறாம் பவுல், அன்னை மரியாள் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். மரியாளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட திருத்தலங்களை அவர் சென்று சந்தித்து, அங்கு பல முறை உரையாற்றினார். அன்னை மரியாளைப் பற்றிச் சுற்றுமடல்கள் எழுதினார். அவருக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன், மிலான் நகரின் ஆயராக இருந்த புனித அம்புரோசு என்பவரைப் போல, ஆறாம் பவுலும் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின்போது மரியாளைத் "திருச்சபையின் தாய்" என்னும் சிறப்புப் பெயரால் அழைத்து பெருமைப்படுத்தினார்.

உலக மக்களோடு உரையாடல்:
ஆறாம் பவுல் உலக மக்களோடும், கத்தோலிக்கரல்லாத பிற கிறிஸ்தவர்களோடும், பிற சமயத்தவரோடும், ஏன், கடவுள் நம்பிக்கையற்றவர்களோடு கூட உரையாடலில் ஈடுபட முன்வந்தார். அவருடைய அணுகுமுறை எந்த மனிதரையும் விலக்கிவைக்கவில்லை. துன்பத்தில் உழல்கின்ற மனித இனத்திற்குப் பணிசெய்யும் எளிய ஊழியனாகக் கடவுள் தம்மைத் தேர்ந்தெடுத்ததாக அவர் உணர்ந்தார். எனவே "மூன்றாம் உலகம்" (Third World) என்று அழைக்கப்பட்ட ஏழை நாடுகளின் வளர்ச்சிக்குச் செல்வம் படைத்த நாடுகள் மனமுவந்து உதவிட வேண்டும் என்று அவர் அடிக்கடி கோரிக்கை விடுத்தார். செயற்கை முறைகளைப் பயன்படுத்தி குடும்பக் கட்டுப்பாடு செய்வது அறநெறிக்கு மாறானது என்று திருத்தந்தை 1968ம் ஆண்டு, தாம் எழுதிய "மானிட உயிர்" (Humanae Vitae) என்னும் சுற்றுமடலில் போதித்தார். அது மேற்கு ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் பலத்த எதிர்ப்பைச் சந்தித்தது. ஆயினும் கிழக்கு ஐரோப்பா, தெற்கு ஐரோப்பா, தென் அமெரிக்கா போன்ற பகுதிகளில் அப்போதனைக்கு ஆதரவும் தெரிவிக்கப்பட்டது.

உலக நாடுகளில் நிகழ்ந்த பெரும் மாற்றங்கள்:
ஆறாம் பவுல் திருத்தந்தையாகப் பணியாற்றிய காலம் அரசியல், கலாச்சாரம், சமூக உறவுகள் ஆகிய பல துறைகளிலும் பெரிய மாற்றங்களைச் சந்தித்த காலம் ஆகும். 1960களில் வெடித்த மாணவர் போராட்டம், வியட்நாம் போருக்கு எதிர்ப்பு, மூன்றாம் உலக நாடுகளில் ஏற்பட்ட போராட்டங்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவற்றிற்கு நடுவே கத்தோலிக்க திருச்சபையின் போதனையை எடுத்துரைத்து, மக்களை வழிநடத்தும் பொறுப்பை ஆறாம் பவுல் ஆற்ற வேண்டியிருந்தது.

மரணம்:
திருத்தந்தை ஆறாம் பவுல் 1978ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 6ம் நாள், இயேசு கிறிஸ்து தோற்றம் மாறிய திருவிழாவன்று மரித்தார்.

புனித சிசினியுஸ், புனித அலெக்சாண்டர் (St.Sicinnius, St.Alexander). May 29

இன்றைய புனிதர்
2020-05-29
புனித சிசினியுஸ், புனித அலெக்சாண்டர் (St.Sicinnius, St.Alexander)
மறைசாட்சிகள் (Martyrius)
இறப்பு
29 மே 397
தென் டிரோல்(Südtirol), இத்தாலி

இவர்கள் மூவரும் தென் டிரோலிலுள்ள பேராலயத்தில் மறைசாட்சிகளானார்கள். இவர்கள் மூவருமே மிலான் பேராயர் அம்புரோஸ் அவர்களால் திருநிலைப்படுத்தப்பட்டு, தமத்திருத்துவர்கள் என்றழைக்கப்பட்டார்கள். பிறகு ஆயர் விஜிலியஸ்(Vigilius) அவர்களால் மிஷினரியாக அனுப்பப்பட்டார்கள். மூன்று பேரும் இறைவனின் வார்த்தைகளை இடைவிடாமல் பரப்பினார்கள். கடவுளுக்கென்று நோனிஸ்பெர்க்(Nonsberg) என்ற ஊரில் ஓர் ஆலயம் எழுப்பினார்கள். இவர்களின் மறைபரப்பு பணிகளை பார்த்தவர்களும், இதனால் ஈர்க்கப்பட்டவர்களுள் ஏராளமானோர் மனந்திரும்பி இறைவனை நம்பினர். அவ்வாறு அவர்கள் தொடர்ந்து போதிக்கும்போது ஒருநாள், மூவரும் அறுவடை திருநாளை சிறப்பிக்கும்விதமாக ஆலயத்தில் கூடி ஜெபிக்கும் வேளையில், கடவுளை நம்பாதவர்களில் சிலர், அதிரடியாக ஆலயத்திற்குள் நுழைந்து மூவரையும் தாக்கினார்கள். அதில் அலெக்சாண்டர் உயிருடன் எரிக்கப்பட்டார். உயிருடன் எரித்த அலெக்சாண்டரின் சாம்பலை கொண்டுவந்து சிசினியுஸ், மார்டீரியசின் மேல் தூவி ஏளனம் செய்து, அவர்கள் இருவரையும் கொலை செய்தார்கள். இவ்வாறு மூவருமே கொடியவர்களின் அகோர செயல்களால், மறைசாட்சிகளாக அவ்வாலயத்திலேயே இறந்தார்கள்.


செபம்:
அன்புத் தந்தையே இறைவா! அன்று இன்றைய புனிதர்கள் மூவரும் மறைசாட்சிகளாக மரித்தார்கள். அவர்களைப்போல இன்றும் எத்தனையோ மக்கள், தங்கள் அன்றாட வாழ்வில் மறைசாட்சிகளாக மரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் நீர் நிறைவாக ஆசீர்வதித்து, அவர்கள் இம்மண்ணில் செய்த பாவங்களை மன்னித்து, உம் வான்வீட்டில் சேர்த்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

பீசா நகர் திருக்காட்சியாளர் போனா Bona von Pisa
பிறப்பு: 1156, பீசா Pisa, இத்தாலி
இறப்பு: 1208, பீசா, இத்தாலி
பாதுகாவல்: பீசா நகர்


கோர்ன்வால் நகர் அரசி எர்பின் Erbin von Cornwall
பிறப்பு: 410, இங்கிலாந்து
இறப்பு: 480 கோர்ன்வால், இங்கிலாந்து


பியோரே நகர் சபைநிறுவுநர் யோவாக்கிம் Joachim von Fiore
பிறப்பு: 1130, செலிகோ Celico, இத்தாலி
இறப்பு: 30 மார்ச் 1202, பியோரே Fiore, இத்தாலி
புனிதர்பட்டம்: 1346

தூய சிரில் (மே 29)

இன்றைய புனிதர் :
(29-05-2020)

தூய சிரில் (மே 29)
“நீங்கள் மனந்திரும்பி சிறு பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால், விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இந்த சிறு பிள்ளையைப் போல் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப்பெரியவர்” (மத் 18: 4)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் சிரில் ஒரு கிறிஸ்தவத் தாய்க்கும், பிற தெய்வத்தை வழிபடும் ஒரு தந்தைக்கும் பிறந்தார். சிரிலின் தாயார் கிறிஸ்தவ நெறியில் சிறந்து விளங்கியவர். அதனால் அவர் தன்னுடைய அன்பு மகனுக்கு கிறிஸ்தவ நெறியை தொடக்க முதலே புகட்டி வந்தார். சிரிலும் தன்னுடைய தாய் தனக்குக் கற்றுக்கொடுத்த எல்லாவற்றையும் நல்ல முறையில் கற்றுக்கொண்டு கிறிஸ்துவின்மீது ஆழமான விசுவாசம் கொண்டு வாழ்ந்து வந்தார்.

சிரில், கிறிஸ்தவ நெறியின்மீது ஆழமான பற்றுகொண்டு வாழ்ந்து வந்தது அவருடைய தந்தைக்குப் பிடிக்கவில்லை. எனவே அவர் சிரிலை பலவாறாக சித்திரவதைப் படுத்தினார்; நீ கிறிஸ்துவை மறுதலித்துவிட்டு உரோமைக் கடவுளை வழிபடு என்று கட்டாயப்படுத்தினார். ஆனால் சிரில் எதற்கும் பயப்படாமல் கிறிஸ்துவின் மீது மிக உறுதியாக நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வந்தார். இதனால் கடுப்பான சிரிலின் தந்தை வீட்டை விட்டே துரத்திவிட்டார். அப்போது அவர் தன் தந்தையைப் பார்த்துச் சொன்னார், “இப்போது நான் இழப்பதோ மிகக் குறைவுதான். ஆனால் எதிர்காலத்தில் விண்ணகத்தில் நான் பெறக்கூடிய கைமாறோ மிகுதியாகும்”. இவ்வாறு சொல்லிவிட்டு அவர் வீட்டைவிட்டு வெளியேறினார்.

இதற்கிடையில் சிரில், கிறிஸ்தவ விசுவாசகத்தில் ஆழமாக வேரூன்றி இருக்கின்றார் என்ற செய்தி செசாரியாவின் ஆளுநனுக்குத் தெரிய வந்தது. அவன் படைவீரர்களை அனுப்பி, சிரிலை பிடித்து வரச் சொன்னான். அவரைப் பிடிக்க வந்த படைவீரர்கள், சிரில் வயதில் மிகவும் சிறியவராக இருப்பதைப் பார்த்துவிட்டு அவரிடம், “நீ தயதுசெய்து கிறிஸ்தவை மறுதலித்துவிடு, இல்லையென்றால் நீ பலவாறாக சித்ரவதை செய்யப்படுவாய்” என்றார்கள். இதைக் கேட்டு சிரில் பயப்படாமல் மிகவும் மனவுறுதியோடு இருந்தார். பின்னர் அவர் ஆளுநன் முன்பாக இழுத்துச் செல்லப்பட்டார்.

ஆளுநன் அவரைப் பார்த்துவிட்டு, “உனக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்கிறேன், நீ கிறிஸ்துவை மறுதலித்து விடு. அப்படிச் செய்தால் உன்னை நான் வீட்டுக்கு அனுப்பிவிடுகிறேன். இல்லையென்று சொன்னால், நீ வாளுக்கோ அல்லது தீயிக்கோ இரையாவாய்” என்றார். ஆளுநன் சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்டு சிறிதும் பயப்படாமல், “நான் கிறிஸ்துவுக்காக உயிர் துறப்பேனோ தவிர, உரோமைக் கடவுளை ஒருபோதும் வணங்க மாட்டேன். அதற்காக என் உயிர் போனாலும் பரவாயில்லை” என்றார்.

இதைக் கேட்டு ஆளுநன் கடுப்பானான். பின்னர் படைவீரன் ஒருவனிடமிருந்து வாளை வாங்கி சிரிலை வெட்டிக் கொன்றுபோட்டான். இவ்வாறு சிரில் தன்னுடைய சிறி வயதில் ஆண்டவர் இயேசுவுக்காக இரத்தம் சிந்தி மறைசாட்சியானார்.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

தூய சிரிலின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

. 1. ஆண்டவர் இயேசுவுக்கு சான்று பகர்ந்து வாழ்தல்

தூய சிரிலின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது நம் மனதில் தோன்றக்கூடிய சிந்தனை, நாமும் ஆண்டவர் இயேசுவுக்கு சான்று பகர்ந்து வாழவேண்டும் என்பதுதான். சிரில் தன்னுடைய சிறுவதிலே ஆண்டவர் இயேசுவுக்கு சான்று பகர்ந்து அவருக்காகத் தன் உயிரையும் தந்தார். வளர்ந்து பெரியவர்களாக இருக்கக்கூடிய நாம் இயேசுவுக்கு சான்று பகர்ந்து வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பா கண்டத்தில் ஜான் வார் (John Warr) என்ற செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவருடைய விருப்பமெல்லாம் முடிந்தமட்டும் ஆண்டவரின் நற்செய்தியை தனக்குத் தெரிந்தவர்களுக்கு அறிவிக்கவேண்டும் என்பதுதான். ஜான் வாருக்குக் கீழ் சிறுவன் ஒருவன் வேலை பார்த்து வந்தான். ஒரு சமயம் அவன் ஒரு திருட்டு வேலையில் ஈடுபட்டு, ஜான் வாரிடம் கையும் மெய்யுமாகப் பிடிபட்டான். அதற்காக அவன் மன்னிப்பும் கேட்டான். அப்போது ஜான் வார் அவரிடம், “நீ மன்னிப்புக் கேட்பது இருக்கட்டும். ஆண்டவருக்குச் சான்று பகர்ந்து வாழ்வாயா?” என்று கேட்டார். அவனும் சரியென்று சொல்ல, அவனுக்கு அவர் ஆண்டவரின் நற்செய்தியை எடுத்துரைத்தார்.

இதனால் அவன் தொடப்பட்டு, இந்திய நாட்டிற்கு நற்செய்தி அறிவிக்க வந்தான். இங்கே வந்து பலரும் ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிந்துகொள்ள தன் உடல் பொருள் ஆவி அத்தனையும் கொடுத்தான். அந்தச் சிறுவன்தான் வில்லியம் காரே (William Carey) என்பவராகும். இவர்தான் இந்தியாவில் நவீன காலத்தின் நற்செய்தி அறிவிப்பின் தந்தையாக இருக்கின்றார்.

ஜான் வாரின் சாட்சிய வாழ்வு வில்லியம் காரேயை கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள வைத்தது. வில்லியம் காரியின் சாட்சிய வாழ்வோ பலரும் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள வைத்தது. நம்முடைய வாழ்வும் பலரை கிறிஸ்துவை ஏற்றுகொள்ள செய்வதுதான் உண்மையான சாட்சிய வாழ்வாக இருக்கும்.

ஆகவே, தூய சிரிலின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று இயேசுவுக்கு சான்று பகர்ந்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.