புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

04 April 2020

புனித பவோலா பிரான்சிஸ்(Francis of Paola)வனத்துறவி April 2

இன்றைய புனிதர் : 
(02-04-2020) 

புனித பவோலா பிரான்சிஸ்(Francis of Paola)
வனத்துறவி
பிறப்பு 1416 கலாப்பிரியா (Calabria

இறப்பு 02 ஏப்ரல் 1507 தூர்ஸ் (Tours)
                                         புனிதர் பட்டம் : 1529
                      திருத்தந்தை 10 ஆம் சிங்கராயர் (Leo X)
இத்தாலியில் கலாப்பிரியா என்னும் பகுதியில் பவோலா என் னுமிடத்தில் 1416 ஆம் ஆண்டில் பிறந்தார். மிகவும் பக்தியுள்ள இவரது பெற்றோர், ராபர்ட் என்ற பெயரை இச்சிறுவனுக்குச் சூட்டினர். புனித அசிசியாரின் மன்றாட்டினால் பிறந்த இவரை அவருடைய மடத்தில் ஓர் ஆண்டு ஒப்படைத்திருந்தபோது, இச்சிறுவனுக்கு அசிசியார் துறவு உடைஉடுத்தியிருந்தார்கள். அப்போது இச்சிறுவனுக்கு வயது 13. செபத்தில் ஆழ்ந்த பற்றும், மிகவும் தாழ்ச்சியும், ஒறுத்தலும் கொண்டு விளங்கினார். உரோமை நகர், அசிசி திருத்தலங்களுக்குச் சென்று திரும்பிய பின் தன்பெயரை "பிரான்சிஸ்" என்று மாற்றிக்கொண்டார். அதன்பிறகு 6 ஆண்டுகள் வரை தனிமையை நாடி குகைக்குச் சென்று அங்கு தவவாழ்வில் தன் நாட்களைச் செலவழித்தார். இவரின் தவவாழ்வினால் தூண்டப்பட்டு மேலும் இரு தோழ ர்கள் 1435-ல் இவரை வந்தடைந்தனர். 1454-ல் பலரும் இவரைப் பின்பற்றியதால் ஒரு துறவு மடமும், ஆலயமும் கட்டப்பட்டன. இப்பணியை சிறப்பான முறையில் நிறைவேற்ற, சாதாரண மக் களும், அதிகம் பணம் கொண்டவர்களும், தாராளமான முறை யில் உதவினர். பிரான்சிஸ், மக்களின் இதயச் சிந்தனைகளை அறியும் வரத்தையும், இறைவாக்குரைக்கும் வரத்தையும் பெற் றிருந்தார். பாறை போன்ற இதயம் படைத்த பல ஆன்மாக்களை மனந்திருப்பி இறைவனை நாடச் செய்தார். பிளேக் நோய் அதி கம் இருந்த அக்காலத்தில், இந்நோய்க்கு முற்றுப்புள்ளி வைப் பதற்கு இடைவிடாமல் செபித்ததில் இப்புனிதரின் புனிதம் காணப்பட்டது.

இப்புனிதரால் தொடங்கப்பட்ட புதிய துறவற சபைக்கு " இறை வனின் இல்லத்தில் மிகச்சிறியோர்" என்று பொருள் தரும் "மினிம்ஸ்" (Minims) என்ற பெயரைச் சூட்டினார். இது “மிகத் தாழ்நிலையினரின் சபை” என்று பிற்காலத்தில் பெயர் பெற் றது. இச்சபையைத் திருத்தந்தை பீடம் 1506 ஆம் ஆண்டில் உறுதி ப்படுத்தியது. பிறரன்பு, தாழ்ச்சி, கடுமையான ஏழ்மை இவை களே இச்சபைக்கு ஆணிவேராக அமைந்தது. இப்புனிதர் பெண் களுக்கென்றும் 3 ஆம் சபையை நிறுவினார்.

இவர் இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன் தனிமையில் இருந்து செபித்தார். இறுதியில் தனது 91 ஆம் வயதில் 1507 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் நாள் புனித வெள்ளிக்கிழமையன்று பிரான்சிலுள்ள தூர்ஸ் (Tours)நகரில் இறைவனடி சேர்ந்தார். இறந்த 12 ஆண்டுகளுக்குப் பிறகு திருத்தந்தை 10 ஆம் சிங்கராயர் (Leo X)அவர்களால் புனிதர் பட்டம் கொடுக்க ப்பட்டது. இவரது இறப்பிற்குப்பின், மிக விரைவில் இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் நாடுகளில் 400 துறவற மடங் கள் பலுகிப் பெருகின. 1562-ல் இவரது உடல் அழியாதிருந்த நிலையில் காட்டுமிராண்டிகளான யூகனாட்ஸ் (Youganats) என்றழைக்கப்பட்டவர்கள், இவரது கல்லறையைத் தோண்டி புனிதரின் உடலை வெளிக்கொணர்ந்து அதைச் சுட்டெரித்தனர்.


செபம்:
எங்கள் தாயும், தந்தையுமான மூவொரு இறைவா! புனித பவோலா பிரான்சிஸைப் போல நாங்களும் செப, தவ வாழ்வினால் தூண்டப்பட்டு, அவரின் உன்னதமான முன்மாதிரியைப் பின்பற்றி, பல ஆன்மாக்களை மனந்திருப்பி, உமக்கு சான்று பகர்ந்து வாழ வரம் தாரும்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

No comments:

Post a Comment