புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

29 May 2020

அருளாளர் ஜோசப் ஜெரார்டு ( 183-1914) May 29

மே 29 

அருளாளர் ஜோசப் ஜெரார்டு ( 183-1914)
இவர் பிரான்சில் உள்ள நான்சி மறை மாவட்டத்தைச் சார்ந்தவர்.

சிறுவயதில் தோட்டத் தொழிலை செய்துவந்த இவர், தனது இருபதாவது வயதில் இறை அழைத்தலை உணர்ந்தார். இதற்குப் பின்பு இவர் அமல மரி தியாகிகள் (OMI) சபையில் சேர்ந்தார்.

தனது 22 வது வயதில் தென் ஆப்பிரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட இவர், லெசோதோ என்ற இடத்திற்குச் சென்று, அங்கிருந்த ஜூலு என்ற மக்கள் நடுவில் பணி செய்தார். 

தொடக்கத்தில் இவர் அறிவித்த நற்செய்தியைக் கேட்டு யாரும் மனம் மாறவில்லை. ஆனாலும், இவர் மனந்தளராமல் நோயாளர்களையும் வயது முதிர்ந்தவர்களையும் கவனித்துக்கொண்டு, அதன் மூலமாக நற்செய்தி அறிவித்து வந்ததால், பலர் இவர் அறிவித்த நற்செய்தியை ஏற்றுக்கொள்ளத் தொடங்கினார்கள்.

சாலை வசதி அவ்வளவாக இல்லாத அந்தக் காலத்தில், இவர் கால்நடையாகவே அதுவும், காலில் செருப்பு அணியாமலேயே பல இடங்களுக்குச் சென்று பணி செய்தார். அர்ப்பண உள்ளத்தோடு பணிசெய்த இவருடைய வாழ்க்கையைப் பார்த்துவிட்டுப் பலரும் ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கைகொள்ளத் தொடங்கினார்கள்.

இவர் புனித கன்னி மரியாவிடம் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் அடிக்கடி உச்சரிக்கக் கூடிய வார்த்தைகள், "எல்லாச் சூழ்நிலையிலும் மக்களை அன்பு செய்யவேண்டும்" என்பதாகும். இவர் 1914 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

இவருக்கு 1988 ஆம் ஆண்டு புனித திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலால் புனிதர் பட்டம் கொடுத்தார்.

.

No comments:

Post a Comment