புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

13 May 2020

புனித.அந்திரேயா ஹூபர்ட் பேர்னெட் (St.Andreas Hubert Fairnet)சபை நிறுவனர் May 13

இன்றைய புனிதர்
2020-05-13
புனித.அந்திரேயா ஹூபர்ட் பேர்னெட் (St.Andreas Hubert Fairnet)
சபை நிறுவனர்
பிறப்பு
6 டிசம்பர், 1752
வியன்னா (Wien)
இறப்பு
13 மே 1834
லா பூய் (La Puye)
புனிதர் பட்டம்: 4 ஜூன் 1933
திருத்தந்தை பதினோராம் பயஸ்

அந்திரேயா ஹூபர்ட் தன் குழந்தை பருவத்தையும் இளமை பருவத்தையும் மிகவும் கஷ்டப்பட்டு கடந்துவந்தார். இதனால் அவரால் சரியான விதத்தில் கல்வி படிப்பை முடிக்க முடியாமல் போனது. இவர் சிறுவயதிலிருந்தே குருவாக வேண்டுமென்று ஆசைப்பட்டார். ஒருநாள் முதன்மைகுரு அந்திரேயாவின் ஊருக்கு, பங்கு ஆலயத்தை பார்வையிடவந்தார். அச்சமயத்தில் முதன்மைகுரு திருப்பலி நிறைவேற்றினார். அத்திருப்பலிக்கு அந்திரேயா பூசைஉதவி செய்தார். திருப்பலி முடிந்தபிறகு வீடு செல்வதற்காக ஆலயத்திலிருந்து அந்திரேயா வெளியே வந்தார். அப்போது ஆலயத்தின் முன் ஒருவர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அவர் பெரிய பணக்காரரிடம் பிச்சை போடும்படி கெஞ்சினார். ஆனால் உதவிசெய்ய அப்பணக்காரர் மறுத்துவிட்டார். இதனை கவனித்த அந்திரேயா அப்பிச்சைக்காரரை தன் வீட்டிற்கு அழைத்துஸ் சென்று தன்னிடம் உள்ளதையெல்லாம் அவருக்கு கொடுத்தார். இதனை கவனித்த முதன்மைகுரு தன் உடைகள் மற்றும் தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் அப்பிச்சைக்காரரிடம் கொடுத்துவிட்டு, அந்திரேயாவை தன்னுடன் வரும்படியாக அழைப்பு விடுத்து, அவரின் விருப்பத்திற்கிணங்க குருக்களின் இல்லத்திற்கு அழைத்து சென்றார்.

அந்திரேயா தான் ஓர் குருவாக வேண்டுமென்று தனது விருப்பத்தை முதன்மை குருவிடம் தெரிவித்தார். பின்னர் அவர் குரு மடத்தில் சேர்ந்து முறைப்படி கற்று குருவானார். அந்திரேயா ஓர் உயர்ந்த, பலனளிக்கும் நல்ல இறை ஊழியரானார். இவர் ஏழைகளில் ஒருவராக வாழ்ந்தார். அப்போது ஏழை மக்களுக்கு பணிசெய்ய பிரான்சு நாட்டிற்கு சென்றார். அங்கு பல ஏழை மக்களின் வாழ்வை உயர்த்தியபின் 1792 ஆம் ஆண்டு மீண்டும் ஸ்பெயின் நாட்டிற்குஸ் சென்றார். அப்போது யோகன்னா எலிசபெத்து என்பவரின் உதவியுடன் ஏழைக்காக ஓர் சபையை தொடங்கினார். இச்சபைக்கு "அந்திரேயாவின் சகோதரிகள்" (Sisters of Andreas) என்று பெயர் சூட்டினார். இச்சபையை அந்திரேயா அவர்களே 1820- 1832 வரை தலைவராக பொறுப்பேற்று வழிநடத்தினார். சில ஆண்டுகள் கழித்து, இச்சபையானது பிரான்சு, இத்தாலி,ஸ்பெயின், கனடா என பல்வேறு நாடுகளுக்கு பரவியது. இச்சபையானது ஒரு சில ஆண்டுகளில் ஏழைகளுக்கென்று ஓர் மருத்துவமனையை கட்டியது. அதனைத் தொடர்ந்து நோயாளர்களை கவனிப்பதற்கென்று ஒரு செவிலிய பள்ளியையும் நிறுவியது. இப்பள்ளியையும், மருத்துவமனையையும் திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் அவர்கள் ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.


செபம்:
குணமளிப்பவரே எம் இறைவா! மருத்துவம் நாளுக்குநாள் வளர்ந்துவரும் இவ்வுலகில், நீரே அனைத்திற்கும் மேலாக, முதல்வராக, குணமளிப்பவராக உள்ளீர் என்பதை இவ்வுலக மக்கள் உணரவும் உமது அருளாலே எப்போதும் குணம் பெறவும் உமது வல்லமையை தாரும்.குணமளிப்பவரே எம் இறைவா! மருத்துவம் நாளுக்குநாள் வளர்ந்துவரும் இவ்வுலகில், நீரே அனைத்திற்கும் மேலாக, முதல்வராக, குணமளிப்பவராக உள்ளீர் என்பதை இவ்வுலக மக்கள் உணரவும் உமது அருளாலே எப்போதும் குணம் பெறவும் உமது வல்லமையை தாரும்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

துறவி ஜெரார்டு Gerhard von Villamagna
பிறப்பு: 1175 புளோரன்ஸ் Florenz, இத்தாலி
இறப்பு: 13 மே 1245 வில்லாமாக்னா, புளோரன்ஸ்


திருக்காட்சியாளர், துறவி மக்தலேனா அல்பிரிசி Magdalena Albrici
பிறப்பு: 14 ஆம் நூற்றாண்டு, கோமோ Como, இத்தாலி
இறப்பு: 13 மே 1465, கோமோ, இத்தாலி

No comments:

Post a Comment