புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

07 May 2020

புனித.கீசலா (St.Gisela, Queen of Hungary) May 7

இன்றைய புனிதர் : 
(07-05-2020) 
 
புனித.கீசலா (St.Gisela, Queen of Hungary) 
துறவி , ஹங்கேரி நாட்டு அரசி
பிறப்பு : 985 ரேகன்ஸ்பூர்க் (Regensburg), ஜெர்மனி

இறப்பு : 7 மே 1060 பாசாவ் (Passau), ஜெர்மனி
இவர் ஹங்கேரி நாட்டு அரசர் இரண்டாம் ஹென்றியின் மகளாக பிறந்தார். இவரது பெற்றோர் இவரை ஹங்கேரி நாட்டை சேர்ந்த அரசர் முதலாம் ஸ்டீபன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். 1003 ஆம் ஆண்டு இவர்களுக்கு எமரிச் (Emmerich) என்ற ஓர் மகன் பிறந்தார். கீசலா ஆன்மீக காரியங்களில் மிகவும் அக்கறை காட்டிவந்தார். ஹங்கேரியில் இருந்தபோது தினமும் தவறாமல் திருப்பலிக்கு செல்வதிலும், ஆலய பணிகளில் ஈடுபடுவதிலும் முழுகவனம் செலுத்திவந்தார். அப்போது அவர் தனது அரண்மனை அருகிலேயே ஓர் ஆலயம் எழுப்பினார்.

1038 ஆம் ஆண்டு கீசலாவின் கணவர் அரசர் முதலாம் ஸ்டீபன் இறந்துவிட்டார். இதனால் கீசலா விதவையாக ஆனார். அச்சமயத்தில் அவரை அரண்மனையில் இருந்த ஆண்கள் பலர், தங்களது ஆசைகளுக்கு இணங்க வற்புறுத்தினர். இதனை மறுத்த கீசலா பல்வேறு துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டார். சில வெறியர்களால் கீசலா ஹங்கேரி நாட்டிலிருந்து, ஜெர்மனி நாட்டிலுள்ள பாசாவ் என்ற ஊருக்கு அழைத்துவரப்பட்டு, அரசர் மூன்றாம் ஹென்றியின் அரண்மனையில் இருந்த சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அங்கு பெனடிக்ட் துறவற சபையை சார்ந்த துறவற இல்லம் இருந்தது. கீசலா 1045 ல் இத்துறவற சபையில் சேர்ந்து முறைப்படி பயிற்சிகள் பெற்று, ஒரு சிறந்த துறவியானார். துறவி கீசலா மிகவும் மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும் இறைவனின் பாதையில் தன் காலத்தை கழித்தார். தனது ஜெப வாழ்வினாலும், தவ வாழ்வினாலும் மற்றவர்களை கவர்ந்தார். இதனால் மறைசாட்சியாக கொல்லப்பட்டார்.

1060 ல் இறந்தபோது அடக்கம் செய்யப்பட்ட இவரது கல்லறை, 1908 ஆம் ஆண்டு மீண்டும் திறக்கப்பட்டது. பல ஆண்டுகள் கழித்தும், இவரது உடல் அழியாமல் காணப்பட்டது.

செபம்:
வாழ்வின் வழிகாட்டியே எம் இறைவா! திருமணமானபோதும், உம்மில் விசுவாசம் கொண்டு பின்னர் துறவியாக தன்னை அர்ப்பணித்து, உமக்காக உயிர்விட்ட புனித கீசலாவைப்போல, இல்லற வாழ்வில் உள்ள ஒவ்வொரு பெண்களும், எல்லாஸ் சூழலிலும் உம்மில் விசுவாசம் கொண்டு வாழ, நீர் அவர்களோடு இருந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்
1038 ஆம் ஆண்டு கீசலாவின் கணவர் அரசர் முதலாம் ஸ்டீபன் இறந்துவிட்டார். இதனால் கீசலா விதவையாக ஆனார். அச்சமயத்தில் அவரை அரண்மனையில் இருந்த ஆண்கள் பலர், தங்களது ஆசைகளுக்கு இணங்க வற்புறுத்தினர். இதனை மறுத்த கீசலா பல்வேறு துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டார். சில வெறியர்களால் கீசலா ஹங்கேரி நாட்டிலிருந்து, ஜெர்மனி நாட்டிலுள்ள பாசாவ் என்ற ஊருக்கு அழைத்துவரப்பட்டு, அரசர் மூன்றாம் ஹென்றியின் அரண்மனையில் இருந்த சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அங்கு பெனடிக்ட் துறவற சபையை சார்ந்த துறவற இல்லம் இருந்தது. கீசலா 1045 ல் இத்துறவற சபையில் சேர்ந்து முறைப்படி பயிற்சிகள் பெற்று, ஒரு சிறந்த துறவியானார். துறவி கீசலா மிகவும் மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும் இறைவனின் பாதையில் தன் காலத்தை கழித்தார். தனது ஜெப வாழ்வினாலும், தவ வாழ்வினாலும் மற்றவர்களை கவர்ந்தார். இதனால் மறைசாட்சியாக கொல்லப்பட்டார்.

1060 ல் இறந்தபோது அடக்கம் செய்யப்பட்ட இவரது கல்லறை, 1908 ஆம் ஆண்டு மீண்டும் திறக்கப்பட்டது. பல ஆண்டுகள் கழித்தும், இவரது உடல் அழியாமல் காணப்பட்டது.

செபம்:
வாழ்வின் வழிகாட்டியே எம் இறைவா! திருமணமானபோதும், உம்மில் விசுவாசம் கொண்டு பின்னர் துறவியாக தன்னை அர்ப்பணித்து, உமக்காக உயிர்விட்ட புனித கீசலாவைப்போல, இல்லற வாழ்வில் உள்ள ஒவ்வொரு பெண்களும், எல்லாஸ் சூழலிலும் உம்மில் விசுவாசம் கொண்டு வாழ, நீர் அவர்களோடு இருந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

No comments:

Post a Comment