புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

12 June 2020

போலந்து நாட்டைச் சார்ந்த 108 மறைச்சாட்சிகள். June 12

ஜூன் 12

போலந்து நாட்டைச் சார்ந்த 108 மறைச்சாட்சிகள்
இந்த 108 பேரும் இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லரின் நாசிப் படையினரால் கொல்லப்பட்டவர்கள்.

இவர்களில் 3 ஆயர்கள்
79 அருள்பணியாளர்கள் 
7 துறவிகள்
8 அருள் சகோதரிகள் 
11 பொதுநிலையினர் அடங்குவர்.

இந்த 108 மறைச்சாட்சிகளும்
ஆண்டவர் இயேசுவுக்காக
இரத்தம் சிந்தித்
தங்களுடைய இன்னுயிரை இழந்தவர்கள்.

இவர்களுக்கு 1999 ஆம் ஆண்டு 
ஜூன் திங்கள் 13 ஆம் நாள் 
புனித திருத்தந்தை 
இரண்டாம் யோவான் பவுலால்
அருளாளர் பட்டம் கொடுக்கப்பட்டது.

சிந்தனை: 

"மறைச்சாட்சிகளின் இரத்தம் திருஅவையின் வித்து" - புனித தெர்த்துலியன்

"கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்" - இயேசு

"கிறிஸ்துவின்மீது உண்மையான பற்றுக் கொண்டவர்களை யாரும் கொல்ல முடியாது. அவர்களது முகவரியை மண்ணகத்திலிருந்து விண்ணகத்திற்கு மாற்றலாம், அவ்வளவுதான்" - டுயூக் டான்ஸ்.

No comments:

Post a Comment