புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

25 August 2020

புனித பேட்ரிசியா (-665)(ஆகஸ்ட் 25)

புனித பேட்ரிசியா (-665)

(ஆகஸ்ட் 25)

இவர் கான்ஸ்டான்டிநோப்பிளை ஆண்டு வந்த இரண்டாம் கான்ஸ்டன்டைன் என்ற மன்னனின் மகள்.
இவர் வளர்ந்து பெரியவளானபோது இவரது தந்தை இவரை ஒருவருக்கு மணம்முடித்துக் கொடுக்க முடிவு செய்தார். அப்பொழுது இவர் தன் தந்தையிடம், "நான் என்னை ஏற்கெனவே கடவுளுக்கு அர்ப்பணித்து விட்டேன்; அதனால் நான் யாரையும் மணப்பதாக இல்லை" என்று சொல்லி எருசலேமிற்கும், அதன் பின்னர் உரோமைக்கும் தப்பியோடினார்.

உரோமையில் திருத்தந்தை லிபேரியுசைத் சந்தித்த இவர், அவரிடம் தன் விருப்பத்தைச் சொன்னபொழுது, அவர் இவருக்குத் துறவிக்கான ஆடையைக் கொடுத்து, இவருக்கு ஆசி வழங்கி அனுப்பி வைத்தார்.

அந்த ஆடையோடு தன் சொந்த நாட்டிற்குத் திரும்பி வந்த இவர் தனக்குச் சேரவேண்டிய உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, இத்தாலியில் உள்ள நோப்பில்ஸ் நகர் நோக்கிக் கப்பலில் வந்தார். 

அவ்வாறு இவர் வரும் வழியில் இவர் பயணம் செய்த கப்பல் புயலில் சிக்கிக் கொள்ள, இவர் கப்பலில் இறந்தார். 

இவர் நோப்பில்ஸ் நகரின் பாதுகாவலியாக இருக்கிறார்.

No comments:

Post a Comment