புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

28 June 2020

புனித வின்சென்ஸோ ஜெரோசா (1784-1847) June 28

புனித வின்சென்ஸோ ஜெரோசா (1784-1847)
இவர் இத்தாலியில் உள்ள லோவேரே என்ற இடத்தில் பிறந்தவர். 

இவர் தன்னுடைய பதின்வயதில் தனது பெற்றோரை இழந்து அனாதையானார். இதனால் இவருக்கு ஏழைகள்மீது தனிப்பட்ட அன்பு உண்டானது.

1824 ஆம் ஆண்டு இவருக்கு பர்த்தலமேயு கேபிடானியோ என்பவருடைய நட்பு கிடைத்தது. இவர்கள் இருவரும் இணைந்து 'அன்பின் பணியாளர்கள்' என்ற சபையைத் தோற்றுவித்தார்கள்.

இச்சபை மூலம் இவர்கள் இருவரும் நோயாளர்களைக் கவனித்தும், ஏழைகளுக்கு உதவிசெய்தும், வறிய நிலையிலிருந்த குழந்தைகளுக்கு கல்வியும் புகட்டி வந்தார்கள்.

1833ஆம் ஆண்டு பர்த்தலமேயு கேபிடானியோ திடீரென இறந்து விடவே, இவரே சபையை முன்னின்று வழி நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இதற்குப் பின்பு இவர் நோயாளர்களைக் கவனித்துகொள்வதிலும், ஏழைகளுக்கு உதவிசெய்வதிலும், வறியநிலையிலிருந்த குழந்தைகளுக்குக் கல்வி புகட்டுவதில் மிகுந்த ஈடுபாடு காட்டினார்.

இதனால் இவருடைய உடல்நலம் குன்றி 1847ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1975 ஆம் ஆண்டு திருத்தந்தை ஆறாம் பவுல் புனிதர் பட்டம் கொடுத்தார்

No comments:

Post a Comment