புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

27 August 2020

புனித யூத்தலியா (ஆகஸ்ட் 27)

புனித யூத்தலியா 

(ஆகஸ்ட் 27)

இவர் சிசிலியைச் சார்ந்தவர். இவருக்கு ஒரு சகோதரர் இருந்தார்.
இவருடைய தாயார் இரத்தப்போக்கினால் பாதிக்கப்பட்டிருந்தார். ஒரு நாள் அவர் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில் மூன்று புனிதர்கள் தோன்றி அவரிடம், "நீ கிறிஸ்துவின்மீது நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெற்றால், உன்னிடமுள்ள இரத்தப்போக்கு நின்றுவிடும்" என்று சொல்லிவிட்டு மறைந்து போனார்கள்.

கனவில் தோன்றிய மூன்று புனிதர்கள் தன்னிடம் சொன்னதுபோன்று யூத்தலியாவின் தாயார் ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டு, திருமுழுக்குப் பெற்றார். இதனால் அவருடைய இரத்தப்போக்கு நின்றுபோனது.

தன்னுடைய தாயிடமிருந்து இரத்தப்போக்கு நின்றதையும், அவர் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டதையும் நேரடியாகப் பார்த்த யூத்தலியாவும் இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டார்.

இச்செய்தி யூத்தலியாவின் சகோதரனுக்குத் தெரியவந்தது. அவன் தன் தாயிடம் "நீங்கள் கிறிஸ்துவை மறுதலியுங்கள்" என்று சொல்ல, அவர் அதற்கு முடியாது என்று சொல்ல, அவன் அவரைத் தாக்கத் தொடங்கினான்; ஆனால் அவர் அவனிடமிருந்து தப்பித்து ஓடிவிட்டார்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த யூத்தலியா, "நீ ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறாய்?" என்று கேட்ட பொழுது, பதிலுக்கு அவன் "அப்படியானால் நீயும் கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொண்டிருக்கிறாயா?" என்றான். இவர் "ஆமாம், நான் கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொண்டிருக்கிறேன்" என்று சொன்னதும், அவன் இவரைக் கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்தான்.

இவ்வாறு யூத்தலியா ஆண்டவர் இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கைக்காகத் தன்னுயிர் துறந்தார்

No comments:

Post a Comment