புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

05 November 2020

† இன்றைய புனிதர் †(நவம்பர் 5)✠ அருளாளர் பெர்னார்ட் லிச்டென்பெர்க் ✠(Blessed Bernhard Lichtenberg)

† இன்றைய புனிதர் †
(நவம்பர் 5)

✠ அருளாளர் பெர்னார்ட் லிச்டென்பெர்க் ✠
(Blessed Bernhard Lichtenberg)

கத்தோலிக்க குரு, இறையியலாளர் மற்றும் மறைசாட்சி:
(Catholic Priest, Theologian, and Martyr)
பிறப்பு: டிசம்பர் 3, 1875
ஓலாவ், புருஸ்ஸியன் சிலேசியா, புருஸ்ஸியா இராச்சியம், ஜெர்மன் பேரரசு
(Ohlau, Prussian Silesia, Kingdom of Prussia, German Empire)

இறப்பு: நவம்பர் 5, 1943 (வயது 67)
பெர்லினிலிருந்து ஜெர்மனியின் டச்சாவ் வதை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டபோது
(While being transported from Berlin to Dachau concentration camp, Germany)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை (ஜெர்மனி)
(Roman Catholic Church (Germany)

முக்திப்பேறு பட்டம்: ஜூன் 23, 1996
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

முக்கிய திருத்தலம்: 
செயின்ட் ஹெட்விக் கதீட்ரல், பெர்லின், ஜெர்மனி
(St. Hedwig's Cathedral, Berlin, Germany)

நினைவுத் திருவிழா: நவம்பர் 5

அருளாளர் பெர்னார்ட் லிச்டென்பெர்க், ஒரு கத்தோலிக்க குருவும், இறையியலாளரும், மற்றும் மறைசாட்சியுமாவார். கத்தோலிக்க திருச்சபையினால் முக்திப்பேறு பட்டமளிக்கப்பட்ட இவருக்கு, "நாடுகளிடையே நீதிமான்" (Righteous among the Nations) என்ற பட்டமும் வழங்கப்பட்டுள்ளது. ஜெர்மானிய நாட்டை சர்வாதிகாரியான அடால்ஃப் ஹிட்லரும், அவரது நாஜிக்களும் ஆண்ட காலத்தில், நாஜிக்களால் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்த இவர் மறைசாட்சியாக மரித்தார்.

"ஜெர்மன் பேரரசின்" (German Empire) "புருஸ்ஸியா இராச்சியத்தின்" (Kingdom of Prussia) "புருஸ்ஸியன் சிலேசியா" (Prussian Silesia) மாநிலத்தின் "ஓலாவ்" (Ohlau) எனுமிடத்தில், கி.பி. 1875ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 3ம் நாளன்று பிறந்த பெர்னார்ட் லிச்டென்பெர்க், மேற்கு ஆஸ்திரியாவின் (Western Austria) "டைரோல்" (Tyrol) மாநிலத்தின் தலைநகரான "இன்ஸ்ப்ரக்" (Innsbruck) நகரில் இறையியல் பயின்ற இவர், கி.பி. 1899ம் ஆண்டு, குருத்துவ அருட்பொழிவு பெற்றார். ஜெர்மனி (Germany) நாட்டின் தலைநகரான பெர்லின் (Berlin) நகரில், கி.பி. 1900ம் ஆண்டு, தமது மறைப்பணியை தொடங்கிய இவர், முதலாம் உலகப்போரின்போது, (World War I) இராணுவ குருவாக (Military Chaplain) சேவையாற்றினார்.

1932ம் ஆண்டில், பெர்லின் ஆயர், (Bishop of Berlin) அவரை புனித ஹெட்விக் கதீட்ரல் மறைப்பணியாளர்களின் கல்லூரியின் (Cathedral Chapter of St. Hedwig) சட்ட நியதியாக நியமித்தார்.

எரிச் மரியா ரெமார்க்ஸின் போர் எதிர்ப்பு திரைப்படமான "ஆல் க்யூட் ஆன் தி வெஸ்டர்ன் ஃப்ரண்ட்" (All Quiet on the Western Front) திரைப்பட பதிப்பைக் காண்பதற்கு கத்தோலிக்கர்களை அவர் ஊக்குவித்தது, ஜோசப் கோயபல்ஸின் (Joseph Goebbels) டெர் ஆங்ரிஃப் ஒரு மோசமான தாக்குதலைத் தூண்டியது. 1933ம் ஆண்டு, ஜெர்மனி நாட்டின் இரகசிய உளவுத்துறை காவல்துறையினர் முதன்முதலாக அவரது இல்லத்தை சோதனையிட்டார்கள்.

மத்திய கட்சியில் (Centre Pary) தீவிர செயல்பாட்டாளராக விளங்கிய இவர், 1935ம் ஆண்டு, ஜெர்மன் (Jerman) அரசியல் மற்றும் இராணுவ தலைவர்களில் ஒருவரும், நாஜிக்களின் முக்கிய பிரமுகருமான "ஹெர்மன் கோரிங்" (Hermann Göring) என்பவரின் முன்னிலையில், நாஜிக்களின் சித்திரவதை முகாம்களின் கொடுமைகளை எதிர்த்து போராடச்சென்றார்.

கதீட்ரலின் புரோவோஸ்ட் என்று பெயரிடப்பட்ட, 1938 ஆம் ஆண்டில், லிச்சன்பெர்க் பேர்லின் எபிஸ்கோபட்டின் நிவாரண அலுவலகத்தின் பொறுப்பில் வைக்கப்பட்டார், இது யூத வம்சாவளியைச் சேர்ந்த பல கத்தோலிக்கர்களுக்கு மூன்றாம் ரைச்சிலிருந்து குடியேற உதவியது. "கதீட்ரலின் புரோவோஸ்ட்" (Provost of the Cathedral) என்ற பதவியிலமர்த்தப்பட்ட இவர், 1938ம் ஆண்டில், எபிஸ்கோபட்டின் நிவாரண அலுவலகத்தின் பொறுப்பில் வைக்கப்பட்டார். இது யூத வம்சாவளியைச் சேர்ந்த பல கத்தோலிக்கர்களை நாஜிக்களின் ஜெர்மனியிலிருந்து புலம்பெயர்ந்து வெளியேற குடியேற உதவியது.

ஜெர்மனியில் முதன்முதலில் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்ட "நவம்பர் படுகொலை" (November Pogrom) அல்லது "கிறிஸ்டால்நாட்ச்" (Kristallnacht) படுகொலைகளின் பின்னர், லிச்சன்பெர்க், பெர்லின் நகரின் "செயிண்ட் ஹெட்விக்" தேவாலயத்தில் "வெளியே எரியும் ஜெப ஆலயமும் கடவுளின் வீடுதான்" என்று வெளிப்படையாக எச்சரித்தார். 1941ம் ஆண்டு, அக்டோபர் மாதம், தாம் கைது செய்யப்படும்வரை, லிச்சன்பெர்க் தினசரி வெஸ்பர்ஸ் சேவையில் (Vespers service) துன்புறுத்தப்பட்ட யூதர்களுக்காக பகிரங்கமாக ஜெபித்தார். ஆயர் "கொன்ராட் வான் ப்ரீசிங்" (Konrad von Preysing) பின்னர் நகரத்தின் யூத சமூகத்திற்கு உதவுவதற்கான பணியை அவரிடம் ஒப்படைத்தார்.

நோய்வாய்ப்பட்ட மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களையும், யூத மக்களையும், கைதுசெய்து துன்புறுத்துவதற்கும் கொலை செய்வதற்கும் எதிராக அவர் நாஜி அதிகாரிகளுக்கு நேரில் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அவர்களை எதிர்த்துப் போராடினார். முதலில், நாஜிக்கள் பாதிரியாரை ஒரு தொல்லை என்று தள்ளுபடி செய்தனர். தந்தை லிச்சன்பெர்க் தனது நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்படும் அபாயத்தில் இருப்பதாக எச்சரிக்கப்பட்டார். ஆனாலும் அவர் தமது போராட்டங்களை தொடர்ந்தார்.

"டச்சாவ்" (Dachau) போன்ற சித்திரவதை முகாம்களின் துன்புறுத்தல்கள் குறித்து, சில முகாம்களுக்கு வெளியே அவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தார்.

1941ம் ஆண்டில், லிச்சன்பெர்க், தன்னிச்சையான கருணைக்கொலை திட்டத்திற்கு எதிராக "ரீச்" நகரின் தலைமை மருத்துவர் (Chief Physician of the Reich), பொது சுகாதார அமைச்சர் (Minister of Public Health) "லியோனார்டோ கான்டி" (Leonardo Conti) (1900-1945) என்பவருக்கு எழுதிய கடிதத்தில் தமது எதிர்ப்பை பின்வருமாறு தெரிவித்தார்:
                             "நான், ஒரு மனிதனாக, ஒரு கிறிஸ்தவனாக, ஒரு பாதிரியாராக, மற்றும் ஒரு ஜேர்மனியனாக, உங்களுடைய ஆட்சியில் உங்கள் அதிகாரத்தாலும் ஒப்புதலாலும் நடைபெறும் குற்றம் - கொலைகளுக்கு நீங்கள் பதில் அளிக்கவேண்டுகிறேன். உங்களுடைய இத்தகைய பாவச் செயல்களால் ஜெர்மானிய மக்கள் இறைவனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்."

நாஜி ஜெர்மனியின் சுகாதார நிறுவனங்களில் நடைபெற்ற கருணைக்கொலைகளுக்கு எதிராக கிறிஸ்தவ திருச்சபைகள் எதிர்ப்பு தெரிவித்தவுடன் அத்தகைய செயல்கள் விரைவில் நிறுத்தப்பட்டது. முக்கிய, மிகவும் போற்றப்பட்ட மதகுருமார்கள் மற்றும் பிற எதிர்ப்பாளர்களை சிறையில் அடைக்க வேண்டும் என்ற நாஜி தலைவர்களின் முடிவினால், - அவர்கள் பெரிதும் அஞ்சிய எதிர்மறையான பொதுமக்களின் எதிர்பின் அடிப்படையில் விளைவுகளைக் கொண்ட ஒருநெறி - அல்லது திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார்கள்.

1941ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 23ம் நாளன்று, லிச்சன்பெர்க் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். திருத்தமுடியாத குற்றவாளி என்று அவரை தீர்மானித்ததால், அவரை அவர் "டச்சாவ் சித்திரவதை முகாமுக்கு" (Dachau Concentration Camp) அனுப்பினார்கள். ஆனால், பயணத்தின் நடுவே, 1943ம் ஆண்டு, நவம்பர் மாதம், 5ம் நாளன்று, "பவேரியா"வின் (Bavaria) "ஹோஃப்" (Hof) நகரில் அவர் சரிந்து விழுந்து மரித்தார்.

(நாஜி ஜெர்மனி பற்றின சிறு குறிப்பு):
நாஜி ஜெர்மனி என்பது, அடால்ப் ஹிட்லர் மற்றும் அவரது நாஜி கட்சியின் கீழ் இருந்த ஜெர்மனி நாட்டை குறிக்க வழங்கப்படும் ஆங்கிலப்பெயராகும். ஹிட்லர், ஜெர்மனியை 1933 முதல் 1945ம் ஆண்டுவரை சர்வாதிகாரியாக ஆண்டார். இவரது ஆட்சிக்காலத்தில் ஜெர்மனி உலகின் பெரிய பாசிச சக்தியாக உருவெடுத்தது.

ஹிட்லரின் நாடுபிடிக்கும் ஆசையால் ஐரோப்பா முழுவதும் பதட்டம் நிலவியது. இது இரண்டாம் உலகப் போருக்கு வித்திட்டது. போர் காலத்தில் இந்நாடு மனித குலத்துக்கு எதிரான குற்றச் செயல்களில் பெருமளவில் ஈடுபட்டது. நாஜி படைகள் இரண்டாம் உலகப்போரில் தோற்கடிக்கப்பட்ட பின்பு நாஜிக்களின் ஆட்சி ஜெர்மனியில் முடிவுக்கு வந்தது.

Saint of the Day: (05-11-2020)

Blessed Bernhard Lichtenberg

Feast Day: November 5
Beatified: June 23, 1996
Venerated: July 2, 1994

Bernhard Lichtenberg was a Catholic priest who served the people of Berlin at St. Hedwig’s Cathedral during a time of great crisis. Born in 1875 in the Prussian province of Silesia, Father Lichtenberg was ordained to the priesthood in 1899 and witnessed the growing power of the Nazi party and its persecution of the Jewish people. His faith in Jesus Christ gave him the courage to speak out.

Bernhard began to pray publicly for the Jewish people. He preached against the injustices he saw the Nazis committing on a daily basis. He even went in person to Nazi officers and officials to protest their actions. At first, the Nazis ignored Father Bernhard’s complaints.

Father Bernhard’s efforts to help the Jews and his calls to put an end to the immoral actions of the Nazis grew stronger. To silence him, Nazi soldiers arrested him. He was jailed for two years, but he never stopping protesting the evil he believed was destroying Germany.

The Nazis sentenced Bernhard to the concentration camp at Dachau. They threw him into one of the cattle cars used to transport innocent Jewish families and other protestors. Already in poor health, Father Lichtenberg never reached Dachau. He died on the train on November 5, 1943.

Pope St . John Paul II declared Bernhard Lichtenberg “Blessed” in 1996. He listened and responded to the voice of his conscience and acted to stop persecution in his country. We can follow Bernhard’s example by working to form our consciences so that we will make good choices in life.

---JDH---Jesus the Divine Healer---

No comments:

Post a Comment