புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

03 June 2013

இயேசுவின் திருவுடல் திரு இரத்தப்பெருவிழா


திருப்பலி முன்னுரை
இன்று ஆண்டவர் இயேசு தம் திருவுடலையும்இரத்தத்தையும் நமக்குஉணவாகத் தரும் அவரது பேரன்பைப் பெருவிழாவாகக் கொண்டாடுகிறோம்.
இயேசுவின் திருவுடல் திரு இரத்தப்பெருவிழாவில் மகிழ்வோடு ஞாயிறுவழிபாட்டில் பங்கேற்க அணியமாகியிருக்கும் அன்புமக்கள் அனைவருக்கும்திருவிழாவின் அன்பு வாழ்த்தை உரியதாக்குகிறேன்.
நற்கருணை என்பது உறவின் சாட்சியமாகவும்உரையாடலின்சாத்தியமாகவும்உள்ளுணர்வுகளின் சங்கமமாகவும்உடன்படிக்கையின்சகாப்தமாகவும் திகழ்வதுதான் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடலும்இரத்தமும் ஆகும்நாம் உழைக்க வில்லையேல் நமக்கு உணவில்லை.இதைத்தான் உழைக்க மனமில்லாதவன் எவரும் உண்ணலாகாது என்றுபுனித பவுல் அடிகளார் கூறுகிறார்இந்த உழைப்பு இறைவனின்உள்ளத்திலும் இதயத்திலும்மனித உள்ளமும்மனித இதயமும்குடிக்கொள்வதற்காக தயாரிக்கும் உழைப்புவாழ்வின் உணவாகநற்கருணை வடிவில் வந்த இயேசு நமது ஆன்ம தாகத்தையும்பசியையும்போக்குகிறார்நம்மைக் குணப்படுத்துகிறார்நம் வாழ்வைப் புதுப்பிக்கிறார்.விசுவாச வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற ஆற்றல் தருகிறார்.நற்கருணை விருந்தில் நம்மீது இயேசு வைத்திருக்கும் அன்பின் ஆழஅகலத்தைப் புரிந்துக்கொள்ள வழிவகுக்கிறார்நம்மோடு நெருக்கமானஉறவுகொள்ள நற்கருணையில் வாழும் இயேசுவை ஆவலோடுவரவேற்போம்.
எனவேஇயேசுவின் உடலுக்காகஇரத்தத்துக்காக இன்று நன்றிசெலுத்துவோம்நமத உடலையும் இறைவனின் திருவுளத்தைநிறைவேற்றக் கையளிப்போம்நமது இரத்தத்தைச் சிந்தாவிட்டாலும்பிறர்வாழ தியாகங்கள் செய்ய முன்வருவோம்புதிய உடன்படிக்கையின் இந்தநினைவுத் திருப்பலியில் பங்கேற்கும் நாம்தகுந்த விதமாகஇத்திருப்பலியில் பங்கேற்று இறையாசீர் பெறுவோம் 
முதல் வாசகம்
"விண்ணுலகையும் மண்ணுலகையும் தோற்றுவித்த உன்னத கடவுள்ஆபிராமிற்கு ஆசி வழங்குவாராக! தொடக்கநூலில் இருந்து வாசகம் 14;18-20
18 அப்பொழுது சாலேம் அரசர் மெல்கிசெதேக்கு அப்பமும் திராட்சைஇரசமும் கொண்டு வந்தார்அவர் "உன்னத கடவுளின்அர்ச்சகராகஇருந்தார். 19 அவர் ஆபிராமை வாழ்த்தி, "விண்ணுலகையும்மண்ணுலகையும் தோற்றுவித்த உன்னத கடவுள் ஆபிராமிற்கு ஆசிவழங்குவாராக! 20 உன் எதிரிகளை உன்னிடம் ஒப்புவித்த உன்னத கடவுள்போற்றிபோற்றி!" என்றார்அப்பொழுது ஆபிராம் எல்லாவற்றிலிருந்தும்அவருக்குப் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தார்
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல்
பல்லவி: 'மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே 
திருப்பாடல்கள் 110;1-4

ஆண்டவர் என் தலைவரிடம் 'நான் உம் பகைவரை உமக்குப்கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்என்று உரைத்தார்.பல்லவி 

வலிமைமிகு உமது செங்கோலை ஆண்டவர் சீயோனிலிருந்துஒங்கச்செய்வார்உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்பல்லவி 

நீர் உமது படைக்குத் தலைமை தாங்கும் நாளில் தூய கோலத்துடன் உம்மக்கள் தம்மை உவந்தளிப்பர்;
வைகறை கருவுயிர்த்த பனியைப்போல உம் இளம் வீரர் உம்மைவந்தடைவர்பல்லவி 

4 '
மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவேஎன்று ஆண்டவர்ஆணையிட்டுச் சொன்னார்
அவர் தம் மனத்தை மாற்றிக் கொள்ளார்பல்லவி 

ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேனோ அதையேஉங்களிடம் ஒப்படைக்கிறேன்
புனித பவுல் 1கொரிந்தியருக்கு எழுதிய நிருபத்திலிருந்து வாசகம்11;23-26
23 ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேனோ அதையேஉங்களிடம் ஒப்படைக்கிறேன்அதாவதுஆண்டவராகிய இயேசுகாட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில்அப்பத்தை எடுத்து, 24 கடவுளுக்குநன்றி செலுத்திஅதைப்பிட்டு, "இது உங்களுக்கான என் உடல்என்நினைவாக இவ்வாறு செய்யுங்கள்என்றார். 25 அப்படியே உணவுஅருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, "இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால்நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கைநீங்கள் இதிலிருந்து பருகும்போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்என்றார். 26 ஆதலால்நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம்ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
இறைவா உமக்கு நன்றி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயாஅல்லேலூயா!, "நீங்களே அவர்களுக்கு உணவுகொடுங்கள்என்றார்.அல்லேலூயா 
நற்செய்தி வாசகம்
புனித லூக்காஸ் எழுதிய நற்செய்தியில் இருந்து வாசகம் 9;11-17

11 திரளான மக்கள் யேசுவை பின் தொடர்ந்தனர்அவர்களை அவர்வரவேற்று இறையாட்சியைப் பற்றி அவர்களோடு பேசிகுணமாகவேண்டியவர்களைக் குணப்படுத்தினார். 12 பொழுது சாயத் தொடங்கவேபன்னிருவரும் அவரிடம் வந்து, "இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே;சுற்றிலுமுள்ள ஊர்களுக்கும் பட்டிகளுக்கும் சென்று தங்கவும் உணவுவாங்கிக்கொள்ளவும் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும்என்றனர். 13 இயேசுஅவர்களிடம், "நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்என்றார்.அவர்கள், ";எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமே உள்ளன.நாங்கள் போய் இத்தனை பேருக்கும் உணவு வாங்கி வந்தால்தான் முடியும்"என்றார்கள். 14 ஏனெனில் ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் அங்குஇருந்தனர்இயேசு அவருடைய சீடர்களை நோக்கி, "இவர்களை ஐம்பதுஐம்பது பேராகப் பந்தியில் அமரச் செய்யுங்கள்என்றார். 15 அவர்சொன்னபடியே அனைவரையும் அவர்கள் பந்தியில் அமரச் செய்தார்கள். 16அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தைஅண்ணாந்து பார்த்துஅவற்றின் மீது ஆசிகூறிபிட்டுமக்களுக்குப்பரிமாறுவதற்காகச் சீடரிடம் கொடுத்தார். 17 அனைவரும் வயிறாரஉண்டனர்எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறையஎடுத்தனர்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
கிறிஸ்துவே உமக்கு புகழ்.

விசுவாசிகள் மன்றாட்டுகள்:
எருசலேமேஆண்டவரைப் போற்றுவாயாகசீயோனேஉன் கடவுளைப்புகழ்வாயாக!
பதில் ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்
“ எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடுஇணைந்திருப்பர் நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்” என்றுமொழிந்த எம் அன்பு இறைவா,
உம் திருச்சபையை வழிநடத்தும்எம் திருத்தந்தை பிரான்சிஸ்ஆயர்கள்,குருக்கள்கன்னியர் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் உம்நற்கருணை பிரசன்னத்திலேஉம் வார்த்தையிலே இணைந்திருந்து உம்திருச்சபையை சிறப்புற வழிநடத்தி செல்ல வேண்டுமென்று தயவாய்உம்மை மன்றாடுகிறோம்
அன்புத் தந்தையே இறைவா!
உம்மைப் போற்றுகிறோம்உமது திருவுடல்திருஇரத்தம் என்னும்கொடைகளுக்காக நன்றி கூறுகிறோம்எங்களை ஆசிர்வதித்தருளும்,உம்முடைய பிள்ளைகளாகிய நாமனைவரும் உமது திருமகனாம்இயேசுவின் திருவுடலாகிய நற்கருணைக்குரிய மாண்பையும் மதிப்பையும்உணர்ந்து வாழவும்இறைவார்த்தையாலும்நற்கருணையாலும் ஊட்டம்பெற்று உமது சாட்சிகளாக வாழ அருள் தர வேண்டுமென்று தயவாய் உம்மைமன்றாடுகின்றோம்
எனது சதை உண்மையான உணவுஎனது இரத்தம் உண்மையானபானம்” என்ற எம் தலைவனே,
எம் பங்கில் வசிக்கின்ற மக்கள் அனைவரும் உண்மையாகவேபாவங்களையும் உடல் உள்ள நோய்களையும் மன வேதனைகளையும் துன்பதுயரங்கள் அனைத்தையும் போக்குகின்றது என்பதனை உணர்ந்தவர்களாகஉம் நற்கருணை பிரசன்னத்தில் விசுவாசம் கொண்டவர்களாக சான்று பகரதயவாய் உம்மை மன்றாடுகிறோம்
வாழும் தந்தை என்னை அனுப்பினார் நானும் அவரால் வாழ்கிறேன்அதுபோல் என்னை உன்போரும் என்னால் வாழ்வர்” என்றுமொழிந்தவரே!
எம்பங்கில் உள்ள சிறுவர் சிறுமியர் இளையோர் பல்வேறுகுழுப்பொறுப்பாளர்கள்அனைவரும் உம்மால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள்;அனுப்பப்பட்டவர்கள் என்பதனை உணர்ந்தவர்களாக படிப்பிலும்நல்லொழுக்கத்திலும் விசுவாசத்திலும் உதவிபுரிபவர்களாகவும் தங்கள்பணிகளிலே பொறுப்பு மிக்கவர்களாகவும் வாழ்ந்தருள வேண்டுமென்றுதயவாய் உம்மை மன்றாடுகிறோம்
என்றென்றும் பேரன்பை நிலையாகக் கொண்டுள்ள தந்தையே!
பிரிவினைகளோடும்கசப்புணர்வுகளோடும்பழிவாங்கும்மனநிலையோடும்வேதனைகளோடும்விரக்தியோடும்கண்ணீரோடும்வாழும் கணவன் மனைவி அனைவர்மீதும் மனமிரங்கி அவர்களின் அன்புதூய்மையானதாகவும்நிலையானதாகவும் இருக்கவும்அவர்கள் தாங்கள்பெற்றுக்கொண்ட அழைப்பிற்கேற்ப பிரமாணிக்கமாய் வாழ்வதற்குவேண்டிய அருளை அளித்துக் காத்திடவேண்டுமென்று தயவாய் உம்மைமன்றாடுகின்றோம்
என்றென்றும் பேரன்பை நிலையாகக் கொண்டுள்ள தந்தையே!
நாங்கள் உமது வாக்கையும்நியமங்களையும் நீதி நெறிகளையும் நேரியமுறையில் நாம் கடைப்பிடித்துஅன்பிய சமூக வாழ்வு வாழ்வதற்குவேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மைமன்றாடுகின்றோம்.

இன்றைய சிந்தனை
உடலும்இரத்தமும்...
இயேசு துன்பங்கள் அனுபவித்துசிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்குமுன்னால் தம்மையே காணிக்கையாக்கிய நிகழ்ச்சியைத் திருச்சபைதொடர்ந்து கொண்டாடி வந்துள்ளதுஇதுவே நற்கருணைக் கொண்டாட்டம்என அழைக்கப்படுகிறதுஇயேசு இறுதி முறையாகத் தம் சீடர்களோடுஅமர்ந்து உணவருந்துகையில் அப்பத்தை எடுத்து அவர்களுக்குக் கொடுத்து, ''இது என் உடல்'' என்றும்இரசத்தை அவர்களுக்குக் கொடுத்து, ''இது என்இரத்தம்'' என்றும் கூறி அதை அவர்கள் அருந்தும்படிக் கொடுத்தார்இதுஇயேசு தம்மையே பலியாக்கியதைக் குறிக்கின்றதுநமக்காக வாழ்ந்தஇயேசு நமக்காக இறந்தது மட்டுமன்றிநம்மோடு என்றும் தங்கியிருப்பதன்அடையாளமாக நற்கருணைக் கொண்டாட்டத்தை நமக்குத் தந்துள்ளார்.இயேசுவின் உடலும் இரத்தமும் உண்மையாகவே நமக்குஉணவாக்கப்படுகிறது என்றால் அது நமக்கு அவர் தருகின்ற ஆன்மிகஉணவாக உள்ளதுநம்மில் கடவுளின் உயிர் குடிகொண்டிருப்பதற்குநற்கருணை அடையாளமும் காரணமுமாய் இருக்கிறது.
நற்கருணை என்பது ஒரு இயேசு நமக்காக எந்நாளும் இருக்கின்றார்என்பதை நாம் மீண்டும் மீண்டும் நினைவுகூர்கின்ற நிகழ்ச்சியாகும்அதேநேரத்தில் நற்கருணைக் கொண்டாட்டத்தின்போது நாம் கடவுளின்குடும்பமாக இணைகின்றோம்ஏன்நாமே கிறிஸ்துவின் உடலாகமாறுகின்றோம்ஆகவேநாம் உட்கொள்கின்ற அப்பமும் பருகுகின்றஇரசமும் இயேசுவோடு நம்மை இணைத்துகடவுளின் வாழ்வில் நம் வாழ்வுஇணைந்து ஒன்றிப்பதற்கும்அதன் வழியாக நாம் ஒருவர் ஒருவரோடுசகோதர அன்பில் இணைவதற்கும் வழியாகிறதுஇயேசுவை நம்பிவாழ்கின்ற மக்கள் இயேசுவில் வாழ்வு கண்டு மகிழ்வார்கள்அந்த வாழ்வுஅவர்களுடைய சிந்தனைசொல்செயல் அனைத்தையும் கடவுளிடம்ஈர்க்கின்றதுநற்கருணையில் இயேசு அருளடையாள முறையில்பிரசன்னமாகிறார் என்பது நம் நம்பிக்கைஅதாவது இயேசுவை நாம் நம்இதயத்தில் ஏற்றுஅவரோடு நம் வாழ்க்கையை ஒன்றித்து இணைகின்றபேறு நமக்கு அளிக்கப்படுகிறதுநமக்காகத் தம்மையே கையளித்தஇயேசுவைப் போல நாமும் ஒருவர் ஒருவருடைய வாழ்வு நலமடையவேண்டும் என்பதற்காக நம்மையே பலியாக்குவதற்கு நற்கருணை ஒருமுன் அடையாளமாகவும் அந்த பலி வாழ்வுக்கு நம்மைத் தூண்டுகின்றசக்தியாகவும் உள்ளதுஅன்பின் வெளிப்பாடு நற்கருணைஅதுவே நம்மைஅன்புக்குச் சாட்சிகளாக மாற்றிட வேண்டும்.

மன்றாட்டு:
இறைவாஉம் திருமகனை எங்களுக்கு உணவாக அளித்ததற்கு நன்றி!

31 May 2013


8ஆம் வாரம்

சனி


முதல் ஆண்டு

முதல் வாசகம்

 

எனக்கு ஞானம் புகட்டுகிறவர்களுக்கு நான் மாட்சி அளிப்பேன்.

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 51: 12-20b

மன்னராகிய ஆண்டவரே, உமக்கு நன்றி கூறுவேன்; உம்மைப் புகழ்வேன்; உம்முடைய பெயரைப் போற்றுவேன். நான் இளைஞனாய் இருந்தபோது, பயணம் மேற்கொள்ளுமுன் என்னுடைய வேண்டுதலில் வெளிப்படையாய் ஞானத்தைத் தேடினேன். கோவில் முன் அதற்காக மன்றாடினேன்; இறுதிவரை அதைத் தேடிக் கொண்டேயிருப்பேன். திராட்சை மலரும் காலத்திலிருந்து கனியும் காலம் வரை என் உள்ளம் ஞானத்தில் இன்புற்றிருந்தது. என் காலடிகள் நேரிய வழியில் சென்றன.

என் இளமையிலிருந்தே ஞானத்தைப் பின்தொடர்ந்தேன். சிறிது நேரமே செவிசாய்த்து அதைப் பெற்றுக் கொண்டேன்; மிகுந்த நற்பயிற்சியை எனக்கெனக் கண்டடைந்தேன். ஞானத்தில் நான் வளர்ச்சி அடைந்தேன். எனக்கு ஞானம் புகட்டுகிறவர்களுக்கு நான் மாட்சி அளிப்பேன். ஞானத்தைக் கடைப்பிடிக்க முடிவு செய்தேன்; நன்மை மீது பேரார்வம் கொண்டேன்; நான் ஒருபோதும் வெட்கமுறேன்.

நான் ஞானத்தை அடையப் போராடினேன்; திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் கண்டிப்புடன் இருந்தேன்; உயர் வானத்தை நோக்கி என் கைகளை உயர்த்தினேன்; ஞானத்தை நான் இதுவரை அறியாதிருந்தது பற்றிப் புலம்பினேன். அதன்பால் என் உள்ளத்தைச் செலுத்தினேன்; தூய்மையில் அதைக் கண்டுகொண்டேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் 

திபா 19: 7. 8. 9. 10 (பல்லவி: 8ய)

பல்லவி: ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; இதயத்தை மகிழ்விப்பவை. 7 ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. பல்லவி

8 ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. பல்லவி

9 ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதி நெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. பல்லவி

10 பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை; தேனினும், தேனைடையினின்று சிந்தும் தெளிதேனினும் இனிமையானவை. பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 

கொலோ 3: 16ய,17உ

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக! அவர் வழியாய்த் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்?

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 27-33

அக்காலத்தில் இயேசுவும் அவருடைய சீடர்களும் மீண்டும் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு கோவிலில் நடந்துகொண்டிருந்தபோது தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள், மூப்பர்கள் ஆகியோர் அவரிடம் வந்து, ``எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இவற்றைச் செய்ய உமக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்?'' என்று கேட்டனர்.

இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, ``நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்; நீங்கள் மறுமொழி கூறுங்கள். அப்போது எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என நான் உங்களுக்குச் சொல்வேன். திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் யோவானுக்கு விண்ணகத்திலிருந்து வந்ததா? அல்லது மனிதரிடமிருந்து வந்ததா? எனக்குப் பதில் சொல்லுங்கள்'' என்றார்.

அவர்கள், `` `விண்ணகத்திலிருந்து வந்தது' என்போமானால், `பின் ஏன் அவரை நம்பவில்லை' எனக் கேட்பார். எனவே `மனிதரிடமிருந்து வந்தது' என்போமா?'' என்று தங்களிடையே பேசிக்கொண்டிருந்தார்கள்.

ஆனால் மக்கள் அனைவரும் யோவானை ஓர் இறைவாக்கினராகக் கருதியதால் அவர்கள் அவர்களுக்கு அஞ்சினார்கள். எனவே, அவர்கள் இயேசுவிடம், ``எங்களுக்குத் தெரியாது'' என்று பதிலுரைத்தார்கள். இயேசுவும் அவர்களிடம், ``எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குக் கூறமாட்டேன்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மே 31

தூய கன்னி மரியா எலிசபெத்தைச் சந்தித்தல் விழா


முதல் வாசகம்

இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்.

இறைவாக்கினர் செப்பனியா நூலிலிருந்து வாசகம் 3: 14-18

மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி; இஸ்ரயேலே! ஆரவாரம் செய்; மகளே எருசலேம்! உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி. ஆண்டவர் உன் தண்டனைத் தீர்ப்பைத் தள்ளிவிட்டார்; உன் பகைவர்களை அப்புறப்படுத்தினார்; இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; நீ இனி எந்தத் தீங்கிற்கும் அஞ்சமாட்டாய்.

அந்நாளில் எருசலேமை நோக்கி இவ்வாறு கூறப்படும்: ``சீயோனே, அஞ்ச வேண்டாம்; உன் கைகள் சோர்வடைய வேண்டாம். உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; அவர் மாவீரர்; மீட்பு அளிப்பவர்; உன் பொருட்டு அவர் மகிழ்ந்து களிகூருவார்; தம் அன்பினால் உனக்குப் புத்துயிர் அளிப்பார்; உன்னைக் குறித்து மகிழ்ந்து ஆடிப்பாடுவார். அது திருவிழாக் காலம் போல் இருக்கும். உனது துன்பத்தை அகற்றிவிட்டேன்; ஆகவே, இனி நீ இழிவடைய மாட்டாய்.''

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



அல்லது

பகிர்ந்து கொள்ளுங்கள்; விருந்தோம்பலில் கருத்தாய் இருங்கள்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 12: 9-16b

சகோதரர் சகோதரிகளே, உங்கள் அன்பு கள்ளமற்றதாய் இருப்பதாக! தீமையை வெறுத்து நன்மையையே பற்றிக்கொள்ளுங்கள். உடன் பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் உளங்கனிந்த அன்பு காட்டுங்கள்; பிறர் உங்களை விட மதிப்புக்கு உரியவரென எண்ணுங்கள். விடா முயற்சியோடும் ஆர்வம் மிக்க உள்ளத்தோடும் ஆண்டவருக்குப் பணிபுரியுங்கள்.

எதிர்நோக்கி இருப்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்; துன்பத்தில் தளரா மனத்துடன் இருங்கள்; இறை வேண்டலில் நிலைத்திருங்கள்; வறுமையுற்ற இறைமக்களோடு உங்களிடம் உள்ளதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; விருந்தோம்பலில் கருத்தாய் இருங்கள்.

உங்களைத் துன்புறுத்துவோருக்கு ஆசி கூறுங்கள்; ஆம், ஆசி கூறுங்கள்; சபிக்க வேண்டாம். மகிழ்வாரோடு மகிழுங்கள்; அழுவாரோடு அழுங்கள். நீங்கள் ஒருமனத்தவராய் இருங்கள்; உயர்வு மனப்பான்மை கொள்ளாமல் தாழ்நிலையில் உள்ளவர்களோடு நன்கு பழகுங்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல் 

எசா 12: 2-3. 4bஉன. 5-6 (பல்லவி: 6b)

பல்லவி: இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார்.

2 இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்ச மாட்டேன்; ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே. 3 மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்து கொள்வீர்கள். பல்லவி

4bஉன ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்; மக்களினங்களிடையே அவர் செயல்களை அறிவியுங்கள்; அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள். பல்லவி

5 ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்; ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்; அனைத்துலகும் இதை அறிந்து கொள்வதாக. 6 சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரித்து அக்களியுங்கள்; இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 

லூக் 1: 45

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய மரியே, நீர் பேறுபெற்றவர். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 39-56

அக்காலத்தில் மரியா புறப்பட்டு யூதேய மலை நாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றில் இருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்.

அப்போது அவர் உரத்த குரலில், ``பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று.

ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்'' என்றார்.

அதைக் கேட்ட மரியா பின்வருமாறு கூறினார்: ``ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்.

ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். அவர் தம் தோள்வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார்.

வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார்.'' மரியா ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த பின்பு தம் வீடு திரும்பினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

வியாழன்


முதல் ஆண்டு

முதல் வாசகம்



ஆண்டவருடைய செயல் அவருடைய மாட்சியால் நிறைந்துள்ளது.

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 42: 15-25

ஆண்டவருடைய செயல்களை நினைவுபடுத்துவேன்; நான் கண்டவற்றை எடுத்துரைப்பேன். ஆண்டவருடைய சொல்லால் அவருடைய செயல்கள் உண்டாகின்றன. ஒளிரும் கதிரவன் அனைத்தையும் காண்கின்றான். ஆண்டவருடைய செயல் அவருடைய மாட்சியால் நிறைந்துள்ளது. அனைத்தையும் தமது மாட்சியில் நிலை நிறுத்திய எல்லாம் வல்ல ஆண்டவர், தம் வியத்தகு செயல்கள் எல்லாவற்றையும் எடுத்துரைக்கும்படி தம் தூயவர்களுக்கும் அதிகாரம் கொடுக்கவில்லை. படுகுழியையும் மனித உள்ளத்தையும் அவர் ஊடுருவி நோக்குகிறார்; மனிதர்களுடைய சூழ்ச்சி நிறை எண்ணங்களை ஆராய்கிறார். அறியக்கூடியவற்றை எல்லாம் உன்னத இறைவன் அறிவார்; காலத்தின் குறிகளை உற்றுநோக்குகிறார். நிகழ்ந்தவற்றையும் இனி நிகழ இருப்பவற்றையும் அவர் தெரியப்படுத்துகிறார்; மறைந்திருப்பவற்றின் தடயத்தை வெளிப்படுத்துகிறார்.

எவ்வகை எண்ணமும் அவருக்குத் தெரியாமல் இருப்பதில்லை; ஒரு சொல்கூட அவருக்கு மறைந்திருப்பதில்லை. அவர் தமது ஞானத்தின் அரும்பெரும் செயல்களை ஒழுங்குபடுத்தியுள்ளார்; அவரே என்றென்றும் இருக்கின்றவர். யாதொன்றும் கூட்டப்படுவதில்லை, குறைக்கப்படுவதுமில்லை; எவருடைய அறிவுரையும் அவருக்குத் தேவையில்லை. அவருடைய செயல்கள் அனைத்தும் எத்துணை விரும்பத்தக்கவை! பார்ப்பதற்கு எத்துணைப் பளபளப்பானவை! இவையெல்லாம் உயிரோடு இருக்கின்றன; எல்லாத் தேவைகளுக்காகவும் என்றும் நிலைத்திருக்கின்றன; எல்லாம் அடிபணிகின்றன. எல்லாம் இரட்டையாய் உள்ளன; ஒன்று மற்றொன்றுக்கு எதிராய் இருக்கிறது. யாதொன்றையும் அவர் குறைபடச் செய்யவில்லை. ஒன்று மற்றொன்றின் நன்மையை நிறைவு செய்கிறது. அவருடைய மாட்சியை நிறைவாகக் காண்பவர் எவர்?

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல் 

திபா 33: 2,3. 4-5. 6-7. 8-9 (பல்லவி: 6ய)

பல்லவி: ஆண்டவரது வாக்கினால் வானங்கள் உண்டாயின.

2 யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள். 3 புத்தம்புது பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்; திறம்பட இசைத்து மகிழ்ச்சிக் குரல் எழுப்புங்கள். பல்லவி

4 ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. 5 அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. பல்லவி

6 ஆண்டவரது வாக்கினால் வானங்கள் உண்டாயின; அவரது சொல்லின் ஆற்றலால் வான் கோள்கள் எல்லாம் உருவாயின. 7 அவர் கடல்நீரைக் குவியல்போல் சேர்த்து வைத்தார்; அந்நீரை ஆழ் நிலவறைகளில் சேமித்து வைத்தார். பல்லவி

8 அனைத்துலகும் ஆண்டவருக்கு அஞ்சுவதாக! உலகில் வாழ்வோர் அனைவரும் அவருக்கு அஞ்சி நடுங்குவராக! 9 அவர் சொல்லி உலகம் உண்டானது; அவர் கட்டளையிட, அது நிலைபெற்றது. பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 

யோவா 8: 12

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

ரபூனி, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 46-52

அக்காலத்தில் இயேசுவும் அவருடைய சீடரும் எரிகோவுக்கு வந்தனர். அவர்களும் திரளான மக்கள் கூட்டமும் எரிகோவை விட்டு வெளியே சென்றபோது, திமேயுவின் மகன் பர்த்திமேயு வழியோரம் அமர்ந்திருந்தார். பார்வையற்ற அவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். நாசரேத்து இயேசுதாம் போகிறார் என்று அவர் கேள்விப்பட்டு, ``இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்'' என்று கத்தத் தொடங்கினார்.

பேசாதிருக்குமாறு பலர் அவரை அதட்டினர்; ஆனால் அவர், ``தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்'' என்று இன்னும் உரக்கக் கத்தினார்.

இயேசு நின்று, ``அவரைக் கூப்பிடுங்கள்'' என்று கூறினார். அவர்கள் பார்வையற்ற அவரைக் கூப்பிட்டு, ``துணிவுடன் எழுந்து வாரும், இயேசு உம்மைக் கூப்பிடுகிறார்'' என்றார்கள்.

அவரும் தம் மேலுடையை எறிந்துவிட்டு, குதித்தெழுந்து இயேசுவிடம் வந்தார். இயேசு அவரைப் பார்த்து, ``உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?'' என்று கேட்டார்.

பார்வையற்றவர் அவரிடம், ``ரபூனி, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்'' என்றார். இயேசு அவரிடம், ``நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று'' என்றார். உடனே அவர் மீண்டும் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.