புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

15 March 2020

தூய லூயிஸ் தே மரிலாக் (மார்ச் 15)

இன்றைய புனிதர் : 
(15-03-2020) 

தூய லூயிஸ் தே மரிலாக் (மார்ச் 15)
“சமூகத்தில் விளிம்பு நிலையிலிருப்பவர்களுக்கு சேவை புரிவதில் தீவிரம் காட்டுங்கள்; அவர்கள்மீது அன்பு மழை பொழியுங்கள்; அவர்களுக்குரிய மதிப்புக் கொடுங்கள்; கிறிஸ்துவுக்கு நீங்கள் காட்டும் மரியாதைப் போல் இவர்களுக்கும் காட்டுங்கள்” - தூய லூயிஸ் தே மரிலாக்

வாழ்க்கை வரலாறு

லூயிஸ் தே மரிலாக், 1591 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் திங்கள் 12 ஆம் நாள், பாரிஸ் நகரிலிருந்த ஒரு தளபதிக்கு மகளாகப் பிறந்தார். இவர் பிறந்த உடனே இவருடைய தாயார் இறந்துபோக, இவருடைய தந்தை வேறொரு பெண்ணை மணந்தார். இதனால் லூயிஸ் தே மரிலாக் சிற்றன்னையின் கண்காணிப்பில் வளரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சிற்றன்னை இவரைக் கடுமையாகச் சித்ரவதை செய்தார். இதையெல்லாம் பார்த்த இவருடைய தந்தை, இவரை பார்சி நகரில் இருந்த சாமிநாதர் துறவுமடத்திற்கு அனுப்பி வைத்து கல்வி கற்க வைத்தார். லூயிஸ் தே மரிலாக்கும் அங்கு சிறந்த முறையில் கல்வி கற்றுவந்தார்.

நாட்கள் செல்லச் செல்ல லூயிஸ் தே மரிலாக்குக்கு தானும் துறவியாக மாறவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. எனவே, அவர் கிளாரிஸ்ட் சபை தலைமை அருட்சகோதரியிடம் சென்று, தன்னை அவர்களுடைய சபையில் சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், அந்த தலைமை அருட்சகோதரியோ, “உன்னைப் பார்க்கின்றபோது கடவுள் உனக்கென்று வேறொரு திட்டம் வைத்திருக்கிறார் என்பதுபோல் தோன்றுகிறது. ஆகவே, உன்னுடைய வாழ்வை சுய ஆய்வுக்கு உட்படுத்தி, அதன்பின் ஒருவேளை கடவுள் உன்னை இந்தப் பணிக்கென அழைத்திருந்தால் இங்கு வா” என்று சொல்லி அனுப்பி வைத்தார். லூயிஸ் தே மரிலாக்கும் தன்னுடைய வாழ்வை சுய ஆய்வுக்கு உட்படுத்திப் பார்த்தார். இதற்கிடையில் பிரான்ஸ் நாட்டு அரசி, இவரை தன்னுடைய அரசாங்கத்தின் ஆவணக் காப்பாளராக இருக்கக் கேட்டுக்கொண்டார். லூயிஸ் தே மரிலாக்கும் அதற்குச் சரியென்று சொல்லி, அங்கேயே பணிசெய்து வந்தார். அப்போதுதான் அவர் அன்றோய்ன் என்ற உயர்குடி இளைஞரைச் சந்தித்தார். அவர் இவர்மீது ஆழமான அன்பு கொண்டிருந்தார். எனவே இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமண வாழ்வில் மகிழ்ந்திருந்த லூயிஸ் தே மரிலாக், மிசெல் என்ற குழந்தையைப் பெற்றெடுத்தார். இப்படி வாழ்க்கை இன்பமயமாகப் போய்க்கொண்டிருக்க திடிரென்று ஒருநாள் லூயிஸ் தே மரிலாக்கின் கணவர் இறந்துபோனார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த இவர், சமூகத்தில் விளிம்பு நிலையில் இருந்தவர்களின் முன்னேற்றத்திற்காக தன்னுடைய வாழ்வினை அர்ப்பணிக்கத் தொடங்கினார்.

இந்த சமயத்தில்தான் ஏற்கனவே அன்புப் பணிகளை ‘அன்புப் பணிக் குழுவினர்’ என்ற பெயரில் செய்துகொண்டிருந்த தூய வின்சென்ட் தே பவுலின் தோழமை கிடைத்தது. அவர் லூயிஸ் தே மரிலாக்கை வாஞ்சையோடு ஏற்றுக்கொண்டு தன்னோடு பணிசெய்ய இணைத்துக்கொண்டார். இப்படி நாட்கள் போய்கொண்டிருந்த சமயத்தில் ஒருநாள் ஆண்களுக்களு சேவை செய்ய ஏராளமான சபைகள் இருக்கின்றனவே, ஏன் பெண்களுக்கு சேவை செய்ய ஒரு சபையைத் தொடங்கக்கூடாது என்ற யோசனை வின்சென்ட் தே பவுலுக்குத் தோன்றியது. அதனடிப்படையில் அவர் லூயிஸ் தே மரிலாக்கிடம் பெண்களுக்கென்று ஒரு சபையைத் தொடங்கச் சொன்னார். அப்படித் தொடங்கப்பட்டதுதான் ‘அன்பின் பணியாளர் சபை’ (Sisters of Charity). இந்தச் சபையின் வழியாக, ஏழைக் குழந்தைகள், அனாதைகள், வயது முதிர்ந்தோர் இவர்களுக்குத் தொண்டு செய்யப்பட்டன. லூயிஸ் தே மரிலாக், இப்பணிகளை எல்லாம் செய்வதறிப் பார்த்து, நிறையப் பேர் இவருடைய சபையில் சேர்ந்தார்கள். இன்னொரு சமயம் போலந்து நாட்டு அரசி, லூயிஸ் தே மரிலாக்கை தன்னுடைய நாட்டிற்கு அழைத்து, சேவைகள் செய்யப் பணித்தார். அவரும் அங்கு சேவை செய்து நல்லதொரு பெயரோடு நாட்டிற்குத் திரும்பி வந்தார்.

இப்படி இறைப்பணியையும் மக்கள் பணியையும் செய்துவந்த லூயிஸ் தே மரிலாக் 1660 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1934 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய லூயிஸ் தே மரிலாக்கின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. சேவை செய்து வாழ்வோம்

தூய லூயிஸ் தே மரிலாக்கின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்க்கும்போது அவர் சமூகத்தில் விளிம்பு நிலையில் இருந்த மக்களுக்கு சேவை செய்து வாழ்வதை தன்னுடைய இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்தார் என்பது நமக்குப் புரியும். அவரைப் போன்று நாம் நம்மோடு வாழக்கூடிய எளியவர், வறியவருக்கு சேவை செய்ய முன்வருகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். மத்தேயு நற்செய்தி 25 ஆம் அதிகாரத்தில் வருகின்ற இறுதித் தீர்ப்பு உவமையில் ஆண்டவர் இயேசு, ‘மிகச் சிறிய சகோதர சகோதரிகளுக்குச் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்’ என்பார். ஆம், நாம் நம்மோடு வாழக்கூடிய எளிய எளியவருக்குச் செய்கின்ற உதவிகள் எல்லாம் இறைவனுக்குச் செய்யப்படக்கூடியவையே ஆகும்.

ஆகவே, தூய லூயிஸ் தே மரிலாக்கின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று ஏழை எளியவரில் இறைவனைக் கண்டு, அவர்களுக்குச் சேவை செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Saint of the Day : (15-03-2020)

St. Louise de Marillac

She was born on August 15, 1591 in Paris was said to be born out of wedlock. She lived among the affluent society people of Paris. She wanted to become a Capuchin nun and to do social service. But her request was rejected by the family. She was then married off to one Antoine Le Gras, secretary to Queen Marie on February 5, 1617. She lived a happy life with Antoine and they had a boy child Michael. But her husband died of some illness some years later. She thought that she can now fulfill her desire to become a religious woman. She met St. Vincent de Paul and sought his advice to become a religious worker. She was the co-founder of Daughters of Charity with St. Vincent de Paul, in the year 1633. She became the head of the Daughters of Charity later. The association Daughters of Charity was having more than forty houses in France when she died on March 15, 1660. As a wife, mother, widow, teacher, nurse, social worker and religious founder, she stands as a model for all women.

She was beatified by pope Benedict-XV on May 9, 1920 and canonized by pope Pius-XI on March 11, 1934. Declared the Patron of Social Workers by pope John-XXIII, in the year 1960. She is venerated as the patroness of disappointing children, loss of parents, people rejected by religious orders, sick people, social workers and widows.

---JDH---Jesus the Divine Healer---

14 March 2020

தூய மெட்டில்டா (மார்ச் 14)

இன்றைய புனிதர் : 
(14-03-2020) 

தூய மெட்டில்டா (மார்ச் 14)
வாழ்க்கை வரலாறு

மெட்டில்டா 895 ஆம் ஆண்டு ஜெர்மனியை ஆண்டுவந்த அரசகுடும்பத்தில் (Dietrich) மகளாக பிறந்தார். இவருக்குப் பதினான்கு வயது நடந்துகொண்டிருந்த போதே இவருடைய பெற்றோர் இவரை ஹென்றி என்பவருக்கு மணமுடித்துக் கொடுத்துவிட்டனர். அப்படி இருந்தாலும் திருமண வாழ்க்கையில் இவர் தன்னுடைய கணவருக்கு மிகவும் பிரமாணிக்கமாக இருந்தார்.

மெட்டில்டாவிற்கு ஆடம்பரமான வாழ்க்கை வாய்க்கப்பட்டிருந்தாலும் இவருடைய மனம் அதில் நாட்டம் கொள்ளவில்லை. மாறாக, கடவுளோடு ஜெப தவ வாழ்க்கையில் ஈடுபடுவதிலும் விதவைகளை, கைவிடப்பட்டோர், அனாதைகள் இவர்களுக்கு சேவை செய்வதிலுமே மனம் அதிக ஈடுபாடு கொண்டது. அதனால் இவர் தன்னுடைய நாட்டில் வாழ்ந்துவந்த ஏழைகள், கைவிடப்பட்டோர், அனாதைகள், விதவைகள் போன்றோருக்கு உதவிசெய்வதில் மும்முரமாக இருந்தார். இவருடைய கணவரும் இதற்கு மறுப்பேதும் சொல்லாமல், இவரைத் தட்டிக் கொடுத்துக்கொண்டே வந்தார். கடவுள் இந்தத் தம்பதியினருக்கு இரண்டு ஆண் குழந்தைகளைக் கொடுத்து ஆசிர்வதித்திருந்தார்.

இப்படி எல்லாமே நன்றாகப் போய்க்கொண்டிருந்த தருணத்தில் 936 ஆம் ஆண்டு மெட்டில்டாவின் கணவர் ஹென்றி திடிரென்று நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையாகி அப்படியே இறந்துபோய்விட்டார். இதனால் மெட்டில்டா அடைந்த துயருக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. அவர் அந்தத் துயரத்திலிருந்து மீண்டு வருவதற்கு வெகுநாட்கள் ஆனது. கணவரின் இறப்புக்குப் பிறகு மெட்டில்டாதான் ஜெர்மனியின் அரசியாக உயர்ந்தார். மக்களை நீதிவழியில் வழிநடத்திச் சென்றதோடு மட்டுமல்லாமல், ஏழைகள், அனாதைகள், கைவிடப்பட்டோர் கைம்பெண்கள் இவர்களுக்கு ஆற்றி வந்த சேவையினைத் தொடர்ந்து செய்து வந்தார்.

இதற்கிடையில் மெட்டில்டாவின் இரண்டு புதல்வர்களும் வளர்ந்து பெரியவர்கள் ஆனார்கள். அவர்கள் இருவரும் வளர்ந்த பின்னர் அரசியான மெட்டில்டா – தங்களுடைய தாய் – அரசாங்கச் சொத்துகளை தேவையில்லாமல் விரையம் செய்கின்றார் என்று குற்றம் சுமத்தி அவரை அரசாங்கப் பொறுப்பிலிருந்து நீக்கி, பதவியை தங்கள் வசமாக்கிக் கொண்டார்கள். தன்னுடைய பதவி போனதைப் பற்றிக்கூட கவலைப்படாத மெட்டில்டா தன்னுடைய பிள்ளைகள் அப்படி நடந்து கொண்டதை நினைத்துப் பெரிதும் வருந்தினார். மெட்டில்டா தன்னுடைய கடைசி நாட்களை எல்லாவற்றையும் துறந்து ஒரு துறவற மடத்தில் கழித்து 968 ஆம் ஆண்டு அங்கேயே தன்னுடைய ஆவியை இறைவனிடம் ஒப்படைத்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய மெட்டில்டாவின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. நாமும் ஒருநாள் புனிதர் ஆகலாம்

தூய மெட்டில்டாவின் வாழ்வை ஒருகணம் நாம் சிந்தித்துப் பார்க்கும்போது மேலே இருக்கும் தலைப்புதான் நமக்கு நினைவுக்கு வருகின்றது. மெட்டில்டா ஓர் அரசியாக, செல்வச்செழிப்பான வாழ்க்கை அமையப் பெற்றவர். அப்படியிருந்தாலும் அவர் அதில் நாட்டம் கொள்ளாமல், கடவுளுக்குத் தன்னை முற்றிலுமாக ஒப்புக்கொடுத்து, ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்வதில் தன்னுடைய வாழ்வைச் செலவழித்தார். இந்தப் பாடத்தைத் தான் நாம் இவரிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும். நாம் எந்த நிலையில் இருந்தாலும் பணக்காரராகவோ, ஏழையாகவோ இருந்தாலும் நம்மாலும் புனிதராக முடியும் என்பதைத்தான் தூய மெட்டில்டா நமக்குக் கற்றுத் தருகின்றார்.

2. தாழ்ச்சியோடு சேவை

தூய மெட்டில்டாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய இரண்டாவது பாடம் தாழ்ச்சியோடு சேவை செய்வதாகும். மெட்டிலா ஓர் மிகப்பெரிய சாம்ராஜியத்தின் அரசியாக இருந்தபோதும் அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாமல் தாழ்ச்சியோடு சேவைசெய்து, கிறிஸ்துவின் விழுமியங்களின்படி வாழ்ந்தார். அவருடைய விழாவைக் கொண்டாடும் நாம் தாழ்ச்சியோடு சேவை செய்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராய் இருக்கட்டும். இவ்வாறே மானிட மகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுக்க வந்தார்” என்று (மத் 20: 26-28). ஆம், இயேசுவைப் பொறுத்தளவில் ஒரு தலைவர் என்றால் அவர் தொண்டரே, பணியாளரே. இயேசுவின் இத்தகைய மனநிலையைப் புரிந்தவராய் தூய மெட்டில்டா ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்து வந்தார். அவரைப் போன்று நாமும் ஏழை எளிய மக்களுக்கு தாழ்ச்சியோடு சேவை செய்வதுதான் இன்றைய நாளில் இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பதாக இருக்கின்றது.

ஆகவே, தூய மெட்டில்டாவின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று தாழ்ச்சியோடு சேவை செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்
Saint of the Day : (14-03-2020) 

Saint Matilda of Saxony

Daughter of Count Dietrich of Westphalia and Reinhild of Denmark; she was raised by her grandmother, abbess of the Eufurt. In 913, Matilda left the abbey, and married King Henry the Fowler of Saxony (Henry I), who had received an annulment from a previous marriage. Queen of Germany. Mother of Otto, Holy Roman Emperor; Henry the Quarrelsome, Duke of Bavaria; Saint Bruno the Great, Archbishop of Cologne, Germany; Gerberga, wife of King Louis IV of France; Hedwig, mother of Hugh Capet. Founded several Benedictine abbeys. Well known throughout the realm for her generosity, she taught the ignorant, comforted the sick, and visited prisoners. Betrayed by Otto after Henry's death when he falsely accused her of financial mismanagement.

Born :
c.895 at Engern, Westphalia, Germany

Died : 
14 March 968 at Quedlinburg, Germany of natural causes
• buried in the monastery at Quedlinburg

Patronage :
death of children
• disappointing children
• falsely accused people
• large families
• people ridiculed for their piety
• queens
• second marriages
• widows

---JDH---Jesus the Divine Healer---

13 March 2020

கான்ஸ்டான்டினோபிள் நகர்புனித யூப்ரசியா march 13

கான்ஸ்டான்டினோபிள் நகர்
புனித யூப்ரசியா
பிறப்பு:
380, கான்ஸ்டான்டினோபிள், கிழக்கு ரோம பேரரசு.

இறப்பு:
மார்ச் 13, 410, தீபைட், எகிப்து, இயற்கை மரணம்.
ஏற்கும் சபை/சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை,
கிழக்கு மரபுவழி திருச்சபை.
சித்தரிப்பு:
கல்லைப் பிடித்தாற்போல் அல்லது சுமப்பதுபோல்
புனித யூப்ரசியா, 380 ஆம் ஆண்டு, கான்ஸ்டான்டினோபிளைச் சார்ந்த அன்றிகோனஸ் என்பவருக்கு மகளாகப் பிறந்தார். இவர் மன்னர் தியோடசியஸ் என்பவருக்கு நெருங்கிய உறவினர்.
சிறுவயதிலே புனித யூப்ரசியாவின் தந்தை இறந்துவிட, அவரும் அவருடைய தாயாரும் அவருடைய உறவினராகிய மன்னர் தியோடசிசின் கண்காணிப்புக்குக் கீழ் வந்தார்கள். தியோடசிசோ, இளமையாக இருந்த புனித யூப்ரசியாவின் தாயை வேறொருவருக்கு மணமுடித்துக் கொடுக்கவும், புனித யூப்ரசியாவை இளைஞன் ஒருவனுக்கு மணமுடித்துக் கொடுக்கவும் திட்டம் தீட்டினார். விஷயம் அறிந்தப் புனித யூப்ரசியாவின் தாயார் புனித யூப்ரசியாவை தன்னோடு தூக்கிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போனார். அப்போது புனித யூப்ரசியாக்கு வயது வெறும் ஒன்பதுதான். எகிப்துக்கு ஓடிப்போன புனித யூப்ரசியாவும் அவருடைய தாயாரும் ஒரு துறவற மடத்தில் தஞ்சம் புகுந்தார்கள்.
துறவற மடத்திலிருந்த சமயத்தில் அங்கிருந்த துறவிகளின் வாழும் முறையைப் பார்த்துவிட்டு புனித யூப்ரசியா தானும் ஒரு துறவியாக மாறவேண்டும் என்ற எண்ணம் கொண்டு, அவர்களைப் போன்றே வாழத் தொடங்கினார். ஒரு சமயம் மடத்திலிருந்த தலைமைச் சகோதரி புனித யூப்ரசியாவுக்கு துறவற ஆடையைக் கொடுத்தபோது, அதனை அணிந்துகொண்டு தன்னுடைய தாயிடம், “அம்மா! என்னுடைய திருமண ஆடை எப்படி இருக்கின்றது?” என்று கேட்டார். தாய் அவளிடம் ஒன்றும் சொல்லாமல், தன் மகளுக்குத் துறவற வாழ்வின்மீது எவ்வளவு ஆர்வம் இருக்கின்றது என்று மனதிற்குள்ளாகவே நினைத்துப் பெருமிதம் கொண்டார். இதுநடந்துச் சில நாட்கள் கழித்து, புனித யூப்ரசியாயின் தாயார் அவரை விட்டுப் பிரிந்து இறைவனடி சேர்ந்தார். இதனால் பெரிதும் வருத்தமடைந்த புனித யூப்ரசியா, அதன்பிறகு தன் வாழ்வு முழுவதையும் இறைவனுக்கு அர்ப்பணிக்கத் தொடங்கினார்.
இதற்கிடையில் புனித யூப்ரசியா எங்கு இருக்கின்றார் என்ற செய்தியும், அவருடைய தாயார் இறந்த போன செய்தியையும் கேள்விப்பட்ட மன்னர் தியோடசியஸ், ஆள் அனுப்பிப் புனித யூப்ரசியாவைக் கூட்டி வரச் சொன்னான். ஆனால், புனித யூப்ரசியாவோ கடிதமொன்றில், ‘நான் என்னை ஆண்டவருக்கு அர்ப்பணித்துவிட்டேன், அதனால் வேறு யாரையும் மணப்பதாக இல்லை என்றும், சொத்துக்களை எல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிடுங்கள் என்றும், தோட்டத்தில் அடிமைகளாக இருப்பவர்களை விடுதலைச் செய்து அனுப்பிவிடவும்” என்று எழுதி அதனை மன்னரிடத்தில் அனுப்பி வைத்தார். அதனைப் படித்துப் பார்த்த தியோடசியஸ், அதன்பிறகு புனித யூப்ரசியாவைத் தொந்தரவுச் செய்யவில்லை.
புனித யூப்ரசியா, துறவு மடத்திலிருந்த சமயங்களில் மிகவும் தாழ்ச்சியோடும் பொறுமையோடும் தனக்குக் கொடுக்கப்பட்ட பணிகளைச் செய்து வந்தார். சாத்தான் அவரைப் பலவிதங்களில் சோதித்துப் பார்த்தது. அத்தகைய தருணங்களில் எல்லாம் அவர் மிகவும் மனவுறுதியாக இருந்து, சாத்தனை வெற்றிகொண்டார். புனித யூப்ரசியாவிடம் நிறைய நோயாளிகள் அழைத்து வரப்பட்டார்கள். புனித யூப்ரசியா அவர்கள்மீது சிலுவை அடையாளம் வரைய, அவர்கள் நோய் நீங்கி நலம்பெற்றார்கள். இப்படி இறைவனுக்கு உகந்த அடியவராக வாழ்ந்து வந்த புனித யூப்ரசியா, 410 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

2020-03-13செவிலா நகர் பேராயர் லேயாண்டர் Leander von Sevilla OSB

இன்றைய புனிதர்
2020-03-13
செவிலா நகர் பேராயர் லேயாண்டர் Leander von Sevilla OSB
பிறப்பு
540,
கார்டாகெனா Cartagena, ஸ்பெயின்
இறப்பு
13 மார்ச்,
600, செவிலா Sevilla, ஸ்பெயின்
பாதுகாவல் : செவிலா நகர், மூட்டுவலியிலிருந்து

இவர் உரோமையர் ஒருவரின் குடும்பத்தில் பிறந்தார். இவரின் சகோதரர் புனித இசிதோர் Isidor. லேயாண்டர் புனித பெனடிக்ட சபையில் சேர்ந்து குருவானார். இவர் அரசர் மகன் ஒருவனுக்கு ஆலோசகராக இருந்தார். அரசரின் மகனின் உதவியுடன், அந்நாடு முழுவதும் விசுவாசத்தை பரப்பினார். இவர் கான்ஸ்டாண்டிநோபிளில் இறைவார்த்தையை எடுத்துரைத்தார். பிறகு திருத்தந்தை பெரிய கிரகோரி அவர்களின் நட்பைப் பெற்றார்.

இவர் ஏறக்குறைய 583 ஆம் ஆண்டில் செவிலா நகரின் பேராயராக திருநிலைப்படுத்தப்பட்டார். இவர் தனது பதவி காலத்தில் தன் மறைமாவட்ட மக்களை கிறிஸ்துவ விசுவாசத்தில் வளரச் செய்தார். இவர் ஆரியன் கொள்கைகளை எதிர்த்து போரிட்டார். சில பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு வெளிப்படையாகவே கிறிஸ்துவ விசுவாசத்தில் வளரச் செய்தார். இவர் ஆரியன் கொள்கைகளை எதிர்த்து போரிட்டார். சில பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு வெளிப்படையாகவே கிறிஸ்துவைப்பற்றி போதித்தார்.


செபம்:
உலகை படைத்து பராமரித்தாளும் பரம்பொருளே எம் இறைவா! உம்மை இவ்வுலகில் பறைசாற்ற, பலவிதங்களில் பணியாற்றிய உம் இறையடியார்களை நினைவுகூறும். உமக்கெதிராக செயல்படும் மக்களை ஆசீர்வதியும். உம் மக்களை நீர் ஆசீர்வதியும். தூய ஆவியால் நிரப்பியருளும். உம்மேல் அன்பும் அக்கறையும் கொண்டு வாழச் செய்தருளும்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

துறவி நோவாலெசே நகர் எல்ட்ராட் Eldrad von Novalese OSB
பிறப்பு : 8 ஆம் நூற்றாண்டு, பிரான்சு
இறப்பு : 13 மார்ச் 840, நோவாலெசே Novalese, இத்தாலி


மாயோ நகர் ஜெரால்டு Gerald von Mayo OSB
பிறப்பு : 642, இங்கிலாந்து
இறப்பு : 13 மார்ச் 732 மயோ, இத்தாலி
பாதுகாவல் : கொள்ளை நோயிலிருந்து

12 March 2020

2020-03-12கன்னி ஃபீனா Fina

இன்றைய புனிதர்
2020-03-12
கன்னி ஃபீனா Fina
பிறப்பு
1238,
சான் கிமிக்னானோ San Gimignano, இத்தாலி
இறப்பு
12 மார்ச் 1253,
இத்தாலி
பாதுகாவல் : சான் கிமிக்னானோ நகர்

இவர் ஓர் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர். ஒருவேளை உணவு கூட வயிறார உண்ணமுடியாத அளவிற்கு ஏழ்மையாக வாழ்ந்தவர். அவ்வாறு இருந்தபோதிலும், தன்னிடம் உள்ள உணவில் சிறிதளவை மற்ற ஏழைகளுடன் பகிர்ந்து வாழ்ந்தார். இவர் நோயால் தாக்கப்பட்டு, மிகக் கொடுமையான வேதனைகளை அனுபவித்தார். தாங்கமுடியாமல் நோயால் துடித்தபோதும், பொறுமையை இழக்காமல், இறைவனை இறுக பற்றி வாழ்ந்தார். தான் பெறும் வலிகளை இறைவனுக்காக அனுபவிக்கிறேன் என்று புன்னகையோடு ஏற்றார். இவர் வாழும் போதே புனிதர் என்று போற்றப்பட்டார். இவர் தனது இறுதி நாட்களை சான் கிமிக்னானோவில் இருந்த பேராலயத்தில் கழித்தார். இவர் இறந்தபிறகும் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார். அப்பேராலயத்தின் அருகில் இவர் பெயரில் ஆலயம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.


செபம்:
மருத்துவர் நோயற்றவர்க்கு அன்று, மாறாக நோயுற்றவர்க்கே என்று மொழிந்த எம் இறைவா! நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நண்பர்களை ஆசீர்வதியும். புனித ஃபீனாவைப் போல தங்களின் வலியிலும் உம்மை பற்றுக்கொண்டு, பொறுமையைக் கடைபிடிக்க செய்தருளும். நீரே குணமளிப்பவராக இருந்து, உமக்கு விருப்பமானால் நோய்களை குணமாக்கி நலமளித்திட வேண்டுமென்று தந்தையே உம்மை மன்றாடுகின்றோம்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

துறவி ஏங்கல்கார்டு Engelhard OFM
பிறப்பு : 12 ஆம் நூற்றாண்டு, இத்தாலி
இறப்பு : 1230, ஆக்ஸ்போர்டு, இங்கிலாந்து
புனிதர்பட்டம்: 1230


மறைபணியாளர் பவுலூஸ் அவ்ரேலியானூஸ் Paulus Aurelianus
பிறப்பு : 5 ஆம் நூற்றாண்டு, வேல்ஸ் Wales
இறப்பு : 573, பிரெட்டக்னே Bretagne, பிரான்சு

11 March 2020

குரு யோஹானஸ் பாப்டிஸ்டா ரீகி Johannes Baptista Righi OFM march 11

இன்றைய புனிதர்
2020-03-11
குரு யோஹானஸ் பாப்டிஸ்டா ரீகி Johannes Baptista Righi OFM
பிறப்பு
1469,
பாப்ரியானோ Fabriano, இத்தாலி
இறப்பு
11 மார்ச் 1539,
அன்கோனா Ancona, இத்தாலி

இவர் ஓர் உயர்தர குடும்பத்தில் பிறந்தார். இவர் இவ்வுலக வாழ்வில் சிறிதும் ஈடுபாடு இல்லாமல் வாழ்ந்தார். இவர் தான் ஓர் குருவாக வேண்டுமென்று சிறுவயதிலிருந்தே ஆசைக்கொண்டார். இதனால் இவர் தனது 15 ஆம் வயதில் புனித பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்து குருப்பட்டம் பெற்றார். அதன்பிறகு பிரான்சிஸ்கன் சபையிலும் முழு திருப்தி இல்லாமல் போகவே, மீண்டும் அன்கோனா திரும்பினார். அங்கு அவர் தான் இறப்பின் வரை மறைப்பணியாற்றினார்.

இவர் சிறப்பாக நோயாளிகளை சந்தித்து, ஆறுதல் கூறி நோயில் பூசுதல் வழங்கி, ஒவ்வொரு நோயாளிகளையும் இறைவனோடு ஒன்றிக்கச் செய்தார். இவர் தான் இறந்த பிறகு எண்ணிலடங்கா புதுமைகளைச் செய்தார்.


செபம்:
அருளை வாரி வழங்குபவரே இறைவா! ஏழைகளிடத்தில் அன்பு கொண்டு மறைப்பணியாற்றிய அருட்தந்தை யோஹானஸ் பாப்டிஸ்டாவைப் போல, நாங்களும் ஏழைகளின் மேல் அக்கறை கொண்டு வாழச் செய்தருளும். ஏழை மக்களின் வாழ்வின் முன்னேற்றத்திற்காக உழைக்க எமக்கு நல்ல மனதைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

மறைசாட்சி கன்னி ரோசினா Rosina
இறப்பு : அல்காய் Allgau, பவேரியா


எருசலேம் நாட்டின் சோப்ரோனியஸ் Sophronius von Jerusalem
பிறப்பு : 6 ஆம் நூற்றாண்டு, தமஸ்கு Damaskus
இறப்பு : 11 மார்ச் 638, எருசலேம்

தூய யூலோசியஸ் (மார்ச் 11)

இன்றைய புனிதர் :
(11-03-2020) 

தூய யூலோசியஸ் (மார்ச் 11)
“கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்” (யோவா 12: 24)

வாழ்க்கை வரலாறு

யூலோசியஸ், ஸ்பெயின் நாட்டில் உள்ள கோர்டோவா என்னும் இடத்தில் இருந்த ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தார். இவர் ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிறந்திருக்கலாம் என்று சொல்வர்.

தொடக்கக் கல்வியை யூலோசியஸ், சோய்லஸ் என்பவரிடத்தில் கற்றார். இந்த சோய்லஸ் பின்னாளில் மறைசாட்சியாக உயிர்துறந்தார் என்பது வரலாறு. கல்வியை தகுந்தமுறையில் கற்றுக்கொண்ட பிறகு யூலோசியஸ் திருமறையைப் போதிக்கும் பள்ளிக்கூடத்திற்கு தலைமைப் பொறுப்பை ஏற்றார். தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டாலும் யூலோசியஸ் எப்போதும் தாழ்ச்சியோடும் பொறுமையோடும் உண்மையான அன்போடும் வாழ்ந்து வந்தார். அதனால் எல்லாரும் அவர்மீது நன்மதிப்பு கொண்டிருந்தார்கள். யூலோசியஸ் எப்போதும் விவிலிய அறிவில் சிறந்து விளங்கி வந்தார். பல நேரங்களில் அவர் விவிலியத்தை வாசிக்கும்போது இறைவனின் வல்லமையை உணர்ந்தார்.

850 - களில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வேதகலாபனை நடைபெறத் தொடங்கியது. நிறையக் கிறிஸ்தவர்கள் மூர் இனத்தவரால் சிறைபிடிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டார்கள். அந்நேரத்தில் யூலோசியசும் சிறைபிடிக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்தபோது ‘கிறிஸ்தவ விசுவாசத்தில்’ நம்பிக்கை தளர்வுற்று இருந்த நிறைய கிறிஸ்தவர்களை நம்பிக்கையில் தேற்றினார். அப்படி அவரால் நம்பிக்கையில் தேற்றப்பட்ட ப்ளோராவும் மரியாவும் 851 ஆம் ஆண்டு கிறிஸ்துவுக்காக தங்களுடைய இன்னுயிரைத் தந்தார்கள். அவர்களைப் போன்று இன்னும் பலர் ஆண்டவர் இயேசுவுக்காக மறைசாட்சிகளானார்கள். யூலோசியஸ், சிறையில் இருந்துகொண்டே ‘Memorial of the Saints’ என்னும் நூலை எழுதினார். இந்நூல் விசுவாசத்திற்காக வேதசாட்சிகளாக உயிர்துறந்தவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி எடுத்துக்கூறுவதாக இருந்தது. இந்நூலின் வழியாக யூலோசியஸ், கிறிஸ்தவ விசுவாசத்தில் தளர்வுற்றிருந்த கிறிஸ்தவர்களைத் தேற்றி, நம்பிக்கையில் உறுதிபடுத்தினார்.

ஒருசில ஆண்டுகள் சிறைவாழ்விற்குப் பிறகு யூலோசியஸ் விடுதலை செய்யப்பட்டார். அதன்பின்பு அவர் டோலேடோ நகரின் ஆயராக நியமிக்கப்பட்டர். ஆயர் பொறுப்பினை ஏற்றுக்கொள்வதற்காக யூலோசியஸ் டோலோடோ நகருக்குச் சென்றுகொண்டிருக்கும்போது அவர் லூக்ரசியா என்ற இஸ்லாமியரை மதம்மாற்றிவிட்டார் என்ற குற்றத்திற்காக மீண்டுமாகக் கைதுசெய்யப் பட்டு, நீதிமன்றத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டார். நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக விசாரணை நடைபெற்றது. விசாரணை சமயத்திலும் யூலோசியஸ் அங்கிருந்தவர்களுக்கு ஆண்டவரின் நற்செய்தியை எடுத்துரைத்தார். இதனால் சினம் கொண்ட அதிகாரிகள் யூலோசியசையும் அவரோடு இருந்த லூக்ரசியாவையும் தலைவெட்டிக் கொன்றுபோட்டார்கள். இவ்வாறு யூலோசியஸ் ஆண்டவர் இயேசுவுக்காக இரத்தம் சிந்தி மறைசாட்சியானார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய யூலோசியசின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. விவிலியம் வாசித்து வேதத்தில் வேரூன்றி இருப்போம்

தூய யூலோசியசின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கும்போது, விவிலியத்தில் அவர் கொண்டிருந்த ஆர்வமும் பற்றும்தான் நம்மை வியக்க வைப்பதாக இருக்கின்றது. கிறிஸ்தவர்கள் எல்லாம் உயிருக்குப் பயந்து, கிறிஸ்தவ மறையை மறுதலித்தபோது, அவர்களையெல்லாம் நம்பிக்கையில் உறுதிபடுத்துவதற்கு யூலோசியசிற்கு விவிலியம்தான் தூண்டுகோலாக இருந்தது. யூலோசியசின் விழாவைக் கொண்டாடுகின்ற நாம், விவிலியம் வாசிப்பதில் ஆர்வம் கொண்டிருக்கின்றோமா? அதில் ஆழமான பற்று கொண்டிருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

சிலநூறு ஆண்டுகளுக்கு முன்பாக அதாவது விவிலியத்தில் இருக்கின்ற எல்லா நூல்களும் ஒன்றாகத் தொகுக்கப்படுவதற்கு முந்தைய கால கட்டத்தில், சிசிலியைச் சார்ந்த ஒருவர் விவிலியத்தில் இருக்கின்ற ஒவ்வொரு நூலையும் தனித்தனியாக விற்றுக்கொண்டு வந்தார். ஒருநாள் அவர் தன்னுடைய விற்பனையை முடித்துவிட்டு ஒரு காட்டுப் பாதை வழியாக போய்க்கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த கொள்ளைக் கும்பல், “பையில் என்ன இருக்கின்றது?” என்று கேட்டது. அதற்கு அவர், “விவிலிய நூல்கள்” என்று சொல்ல, உடனே அந்த கொள்ளைக் குப்பல், “எல்லாவற்றையும் தீயிலிட்டுப் பொசுக்கு, இல்லையென்றால் நீ உயிரோடு ஊருக்குப் போகமுடியாது” என்று மிரட்டியது. அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. சிறிதுநேர யோசனைக்குப் பின் அவர் அவர்களிடம், “ஐயா! இந்த நூல்களையெல்லாம் எரித்துவிடுகின்றேன். அதற்கு முன்னதாக இந்த நூல்களிலிருந்து ஒருசில பகுதிகளை வாசிக்கின்றேன். அவை உங்களுக்குப் பிடித்திருந்தால் வைத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் இதனை தீயிலிட்டு எரித்துவிடுகிறேன்” என்றார். அவர்களும் அதற்குச் சரியென்று சொல்ல, அவர் ஒவ்வொரு நூலிருந்தும் ஒரு பகுதியை எடுத்து வாசித்தார்.

முதலில் அவர் ஒருநூலிருந்து ‘திருப்பாடல் 23 யையும், இன்னொரு நூலிலிருந்து மலைப்பொழிவையும், மற்றறொரு நூலிருந்து நல்ல சமாரியன் உவமையையும் வேறொரு நூலிருந்து அன்பைப் பற்றிய கவிதையையும் (1 கொரிந்தியர் 13) வாசித்தார். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு அந்தக் கொள்ளைக் கும்பல், இவையெல்லாம் சாதாரண நூல்கள் மாதிரித் தெரியவில்லை, நல்ல நூல்களாகத் தெரிகின்றன. அதனால் இவற்றை எரிக்கவேண்டாம். எல்லாவற்றையும் எம்மிடத்தில் கொடுத்துவிடு” என்றது. அவரும் அதற்குச் சரியென்று சொல்லி, நூல்கள் அனைத்தையும் அந்தக் கொள்ளைக் கூட்டத்திடம் கொடுத்துவிட்டு வீடு திரும்பினார். சில ஆண்டுகள் கழித்து, அந்த நூல்களை எல்லாம் படித்துப் பார்த்துவிட்டு, தாங்கள் செய்துவந்த கொள்ளையடிக்கும் தொழிலை விட்டுவிட்டு அவர்கள் குருக்களாக மாறினார்கள்.

விவிலியம் ஒருவருடைய வாழ்வில் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று. இன்று நாம் நினைவுகூறும் யூலோசியசும் விவிலியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அதனைப் படித்துப் படித்து ஆற்றலையும் வல்லமையையும் பெற்றார்.
Saint of the Day : (11-03-2020)

Saint Eulogius of Cordoba

Son of a senatorial family from Cordoba, Spain. Well educated. Priest. Head of an ecclesiastical school. Worked to comfort and support Christian martyrs and their survivors during Islamic persecutions in Moorish occupied Spain. Arrested several times for his faith, he wrote Exhortation to Martyrdom while during one of his imprisonments. Appointed to succeed the Archbishop of Toledo, Spain, but was never consecrated. Imprisoned after he gave shelter to Saint Leocritia of Cordoba, he preached the Gospel in court, then in front of the king's counsel. Martyr.

Died :
scourged and beheaded 11 March 859 at Cordoba, Spain
• some relics translated to Paris, France in the early 860's

Patronage :
carpenters
• coppersmiths

---JDH---Jesus the Divine Healer---

ஆகவே, யூலோசியசின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று ஆண்டவருக்குச் சான்று பகர்ந்து வாழ்வோம், விவிலியம் வாசிப்பப்பதில் ஆர்வம் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

10 March 2020

மறைசாட்சி யோஹானஸ் ஒகில்வீ Johannes Ogilvie SJ march 10

இன்றைய புனிதர் : 
(10-03-2020) 

மறைசாட்சி யோஹானஸ் ஒகில்வீ Johannes Ogilvie SJ
பிறப்பு 1580, டுரும் Drum, ஸ்காட்லாந்து

இறப்பு 10 மார்ச் 1615, கிளாஸ்கோவ் Glasgow, ஸ்காட்லாந்து

புனிதர்பட்டம்: 17 அக்டோபர் 1976, திருத்தந்தை 6 ஆம் பவுல்

இவர் உயர்தர குடும்பத்தில் பிறந்தவர். இவர் தந்தை மரியா ஸ்டூவர்ட் Maria Stuart என்றதோர் பணியகத்தில் மேனேஜராகப் புரிந்தார். இவர் மிகத் திறமையானவர். யோஹானஸ் தனது 17 வயதிற்குள்ளேயே ஏராளமான பள்ளிகளில் படித்து பட்டம் பெற்றார். தனது 17 ஆம் வயதில் கத்தோலிக்க விசுவாசத்தில் திளைந்தார். இவர் திருத்தந்தையர்கள் கற்கும் பள்ளியில் சேர்ந்து தனது துறவற பயிற்சிகளைப் பெற்றார். பின்னர் 1599 ல் இயேசு சபையில் சேர்ந்தார். ஏறக்குறைய 10 ஆண்டுகள் கிராஸ் Graz, ஆஸ்திரியா Austria நாடுகளில் மிக முக்கிய பணிகளுக்கு பொறுப்பேற்றார். 1610 ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் குருப்பட்டம் பெற்றார். அதன்பிறகு மீண்டும் தன் தாய்நாடான ஸ்காட்லாந்திற்கு திரும்பினார். அதன்பிறகு எடின்பூர்க் என்ற இடத்தில் வழக்கறிஞர் பணியாற்றிய ஒருவரின் மகனுக்கு கல்விக் கற்றுக்கொடுத்தார். இவர் கத்தோலிக்க விசுவாசத்தை கண்ணும் கருத்துமாக இருந்து பரப்பினார். இதனால் பலமுறை சிறைபிடித்துச் செல்லப்பட்டார். இவர் 1614 ஆம் ஆண்டு கிளாஸ்கோவில் மறைப்பரப்புப்பணியில் ஈடுபட்டிருக்கும் போது மீண்டும் சிறைபிடித்து செல்லப்பட்டார். கத்தோலிக்க் விசுவாசத்தை கைவிடும்படி வற்புறுத்தப்பட்டார். ஆனால் இவர் அவ்விசுவாசத்தில் சிறிதும் தளராமல் சிறையிலும் போதித்தார். இதனால் இவர்மீது பொய் குற்றம் சுமத்தப்பட்டு, இறப்பதர்கு ஆணை பிறப்பிக்கபட்டது. அவ்வாணையின் பேரில் இவர் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார். இவர்தான் இறக்கும்போது கடவுளை வழிப்பட்டு விட்டு மரித்தார்.


செபம்:
தேர்ந்து கொண்டவரோடு உடன்படிக்கை செய்து கொண்ட எம் இறைவா! தனது இறுதி மூச்சுவரை உம்மீது கொண்ட இறை விசுவாசத்தில் சிறிதும் தளராமல் உம்மை பற்றிகொள்ள புனித யோஹானசிற்கு அருள் கூர்ந்தீர். அவர் கொண்ட அவ்விசுவாச த்தை நாங்களும் எம் வாழ்வில் பிரதிபலிக்க செய்தருள வாய் ப்பளிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Saint of the Day : (10-03-2020)

Saint John Ogilvie

Walter Ogilvie was a Scottish noble who raised his son John in the state religion of Scotland, Calvinism. John converted to Catholicism at age 17 at Louvain, Belgium, and then attended several Catholic educational institutions. He joined the Jesuits soon after in 1597, and was ordained in Paris, France in 1610. Sent to work in Rouen, France.

It was a time of great persecution of Catholicism in Scotland. "Send only those," wrote the Earl of Angus to the Jesuit General, "who wish for this mission and are strong enough to bear the heat of the day, for they will be in exceeding danger." Wholesale massacres of Catholics had taken place in the past, but by this point the hunters concentrated on priests and those who attended Mass. The Jesuits were determined to minister to the oppressed Catholic laity, but when captured, they were tortured for information, then hanged, drawn, and quartered.

Ogilvie repeatedly requested assignment to his home Scotland, and it was finally granted; he returned in November 1613. He worked as an underground missionary in Edinburgh and Glasgow, dodging the Queen's priest-hunters, disguised as a soldier named Watson. After 11 months in the field (and on the run), John was betrayed by a phony Catholic, imprisoned, interrogated, then tortured for the names of active Catholics. He gave no information. "Your threats cheer me; I mind them no more than the cackling of geese," he told his captors. Asked if he feared to die Father John replied, "No more than you do to dine."

After three trials he was convicted of treason for being loyal to the Pope, and denying the king's supremacy in spiritual matters. He is the Church's only officially recorded Scottish martyr.

Born :
1579 or (1580) at Drum, Grampian, Scotland

Died :
hanged 10 March 1615 at Glasgow, Scotland
• no relic of his body has survived

Canonized :
17 October 1976 by Pope Paul VI

---JDH---Jesus the Divine Healer---

09 March 2020

உரோமை நகர தூய பிரான்செஸ் (மார்ச் 09)

இன்றைய புனிதர் : 
(09-03-2020) 

உரோமை நகர தூய பிரான்செஸ் (மார்ச் 09)

“மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” (மத் 25: 40)
வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் பிரான்செஸ், 1384 ஆம் ஆண்டு இத்தாலியில் இருந்த ஒரு செல்வச்செழிப்பான குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு சிறுவயதிலே துறவியாகப் போகவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், இவர் வளர்ந்து பெரியவரானபோது இவருடைய பெற்றோர் இவருடைய விருப்பத்திற்கு மாறாக லொரென்சோ என்பவருக்கு மணமுடித்துக் கொடுத்துவிட்டனர். தன்னுடைய வாழ்க்கை இப்படி மாறிவிட்டதே என முதலில் வருத்தப்பட்ட பிரான்செஸ், பின்னாளில் அதனை இறைத்திருவுளம் என ஏற்றுக்கொண்டார்.

திருமண வாழ்க்கையில் தன்னுடைய கணவருக்கு மிகவும் பிரமாணிக்கமாகவும் எடுத்துக்காட்டான ஒரு பெண்மணியாகவும் வாழ்ந்துவந்தார். குறிப்பாக இவர் ஏழை எளிய மக்களிடத்தில் காட்டிய அன்பு எல்லாரையும் வியக்க வைத்தது. ஒரு சமயம் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டபோது, பிரான்செஸ் தன்னுடைய நகைகளையெல்லாம் விற்று ஏழை எளிய மக்களுக்குக் கொடுத்து உதவி செய்தார். இன்னொரு சமயம் நாட்டில் கொள்ளை நோய் ஏற்பட்டபோது, வீடு வீடாகச் சென்று எல்லாரிடத்திலும் உணவுப் பொருட்களை வாங்கி, அதனைத் தேவையில் இருநத மக்களுக்குக் கொடுத்து உதவினார். இந்தக் கொள்ளைநோயில் பிரான்செசின் இரு பிள்ளைகளும் இறந்து போனார்கள். அப்போது அவர் அடைந்த துயரை வார்த்தைகளால் விவரித்துச் சொல்ல முடியாது.

பிரான்செஸ், எப்போதுமே தன்னுடைய வாழ்வில் ஜெபத்திற்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்துவந்தார். அவர் செய்துவந்த ஜெபம் எல்லாப் பணிகளையும் சிறப்புடன் செய்ய உதவி புரிந்தது. ஏழை நோயாளிகள் தங்க இடமில்லாமல் தவித்தபோது அவர்களையெல்லாம் தன்னுடைய வீட்டில் தங்குவதற்கு அனுமதித்தார். இப்படி அவர் எந்நேரமும் ஏழைகளைக் குறித்தே சிந்தித்துக் கொண்டிருந்தார். அவருடைய கணவர் அவருக்கு எந்தவொரு எதிர்ப்பையும் தெரிவிக்காமல், அத்தகைய செயல்களைத் தொடர்ந்து செய்வதற்கான எல்லா ஊக்கத்தையும் அளித்தார். எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்த தருணத்தில் பிரான்செசின் கணவர் அவரை விட்டுப் பிரிந்தார். இதனால் தனிமரமான பிரான்செஸ் தன்னுடைய உடமைகள் அனைத்தையும் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, ஏழைகளுக்குப் பணிசெய்வதையே தன்னுடைய முழுநேரப் பணியாக மாற்றிக்கொண்டார்.

இப்படி எந்நேரமும் ஏழைகளைப் பற்றியே கவலைப்பட்டுக்கொண்டிருந்த பிரான்செஸ், அவர்களுக்காக ஒரு சபையை நிறுவினார். அந்த சபையின்மூலம் அவர் தன்னாலான உதவிகளை ஏழைகளுக்குச் செய்து வந்தார். இப்படி ஏழைகள் வாழ்வுபெற தன்னையே கரைத்துக்கொண்ட பிரான்செஸ், 1440 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய பிரான்செசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. ஏழை எளியவரிடத்தில் அக்கறை

தூய பிரான்செசின் வாழ்வை ஒருமுறை படித்துப் பார்க்கும்போது அவர் ஏழை எளியவரிடத்தில் கொண்டிருந்த அன்பும் அக்கறையும் நமக்குப் புரியும். அவரது நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று ஏழை எளியவரிடம் உண்மையான் அன்பும் அக்கறையும் கொண்டு வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு ஏழைகளுக்கு நற்செய்தி, ஏழைகளே நீங்கள் பேறுபெற்றோர் என்று ஏழைகளை மையப்படுத்திய வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். அவரைப் போன்று நாமும் ஏழைகளை மையப்படுத்திய வாழ்கையை வாழ்கின்றபோது, அவரது அன்புச் சீடர்களாவோம் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது.

அன்னைத் தெரசா அவர்களுடைய வாழ்வில் நடைபெற்ற ஓர் அருமையான நிகழ்ச்சி. அன்னைத் தெரசா கன்னியர் மடத்தை விட்டுவிட்டு, கல்கத்தாவின் சேரிப் பகுதிகளில் பணிசெய்யத் தொடங்கிய முதல் நாளன்று, சாலையோரத்தில் உடல் முழுவதும் புண்களாக இருந்த ஒருவர் கவனிப்பாரற்றுக் கிடந்தார். அவரைப் பார்த்த அன்னைத் தெரசா அவரைத் தூக்கி எடுத்துக் குளிப்பாட்டி, அவருக்கு புத்தாடை அணிவித்தார். இவற்றையெல்லாம் பார்த்த அந்த நோயாளி, “அம்மா! என்னை நீங்கள் இந்தளவுக்குப் பரிமாரித்துக் கொள்கின்றீர்களே. எது உங்களை இவற்றையெல்லாம் எனக்கு செய்யத் தூண்டியது?” என்று கேட்டார். அதற்கு அன்னை அவரிடத்தில், “உன்மீது நான் வைத்திருக்கும் அன்புதான் என்னை இவ்வளவு காரியங்களையும் செய்யத் தூண்டியது” என்றார்.

ஆம், அன்னைத் தெரசா ஏழைகள், அனாதைகள், நோயாளிகள் போன்றோரிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். அந்த அன்புதான் அவரை எல்லாப் பணிகளையெல்லாம் சிறப்பாகச் செய்ய தூண்டியது. நாமும் அன்னைத் தெரசாவைப் போன்று, இன்று நாம் நினைவுகூரும் தூய பிரான்செஸ் போன்று ஏழை எளியவரிடம் உண்மையான அன்பு கொண்டிருக்கும்போது, நம்மால் அவர்களுக்காக எதையும் செய்ய முடியும் என்பது உறுதி.

ஆகவே, பிரான்செசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று ஏழை எளியவரிடம் அன்பும் அக்கறையும் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Saint of the Day : (09-03-2020)

St. Frances of Rome
Frances was born in the year 1384 in a wealthy family. Her parents were Paolo Bussa and lacobella dei Roffredeschi. Her parents forced her to marry Lorenzo Ponziani, commander of the Papal Troops of Rome and she also obliged. They lived a very happy life for forty years. She with the consent of her husband exercise abstinence from sexual activities. When Rome was occupied by Neapolitan forces, her husband was severely wounded in the battle and died in 1436. Frances was gifted with powers of doing miracles and ecstasy. She founded the Olivetan Oblates of Mary on August 15, 1425, a confraternity of pious women. But the women were not cloistered or bound by any vows. When some of the women in the confraternity desired to live in a community, Frances started a monastery to allow such women to live a common life. This monastery was approved by pope Eugene-IV on July 4, 1433 and this monastery was later became known as the Oblates of Saint Frances of Rome. Frances also moved into a monastery and became the group’s president, after the death of her husband. She died on March 9, 1440.

There is a story that when Frances was alive, an angel used to light the road before her with a lantern, when she travelled outside, to safeguard her from hazards. She was canonized by pope Paul-V on May 9, 1608. She is the patron saint of all automobile drivers and all Oblates.

---JDH---Jesus the Divine Healer---

08 March 2020

தூய இறை யோவான் (மார்ச் 08)

இன்றைய புனிதர் : 
(08-03-2020) 

தூய இறை யோவான் (மார்ச் 08)
நிகழ்வு

நகரில் இருந்த நோயாளிகள், அனாதைகள், விதவைகள் போன்றோரை எல்லாம் தன்னுடைய இல்லத்திற்குக் கொண்டுவந்து, அவர்களுக்கு மருத்துவ உதவிகளைச் செய்து வந்தார் நம் புனிதர் யோவான். இதனால் மக்களுக்கு மத்தியில் அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது.

இதற்கிடையில் யோவானின் வளர்ச்சி பிடிக்காத யாரோ ஒருவர் அவர் ஆற்றிவந்த இந்த சேவையை தவறாக அந்நகரின் ஆயருக்குத் தெரிவித்திருந்தார்கள். இதனால் ஆயர் யோவானைக் கூப்பிட்டு, “நீ உன்னுடைய இல்லத்தில் பாவிகளையும் விலைமகள்களையுமா கூட்டிக்கொண்டு வைத்து பணி செய்கின்றாய்?” என்று கேட்டார். அதற்கு யோவான் மிகவும் பொறுமையாக, “ஆம் ஆயர் அவர்களே! ஆண்டவர் இயேசு பாவிகளைத் தேடித்தானே இந்த மண்ணுலகிற்கு வந்தார். அது போன்று நானும் பாவிகளைத் தேடிச்சென்று அவர்களுக்கு என்னுடைய சேவையைச் செய்கின்றேன். மட்டுமல்லாமல், என்னை விட பெரிய பாவி இவ்வுலகில் இருக்க முடியுமா?” என்றார். ஆயரால் பதிலுக்கு எதுவும் பேசமுடியவில்லை. பின்னர் ஆயர் யோவானுக்கு மனப்பூர்வ சம்மதம் அளித்து, அவர் தன்னுடைய பணியைத் தொடர்ந்து செய்திட அனுமதி அளித்தார்.

வாழ்க்கை வரலாறு

யோவான் போர்ச்சுகல் நாட்டில் 1495 ஆம் ஆண்டு பிறந்தார். சிறு வயதிலே வீட்டை விட்டு ஸ்பெயின் நாட்டிற்கு ஓடிப் போய் அங்கிருந்த பண்ணையார் ஒருவருடைய ஆடுகளை மேய்த்து வந்தார். சிறுது காலத்தில் அதுவும் பிடிக்காமல் போய் பிரான்சு நாட்டிற்குச் சென்று இராணுவத்தில் பணியாற்றினார். அங்கேயும் அவர் நிரந்தரமாக இல்லை. மீண்டுமாக அவர் ஸ்பெயின் நாட்டிற்குச் சென்று நாடோடியாய் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார்.

ஒருநாள் அவர் அவிலா நகரைச் சார்ந்த யோவானுடைய போதனையைக் கேட்ட நேர்ந்தது. அவருடைய போதனை யோவானின் உள்ளத்தைத் தொட்டது. உடனே அவர் தன்னுடைய கடந்தகால பாவங்களை எல்லாம் நினைத்துப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். அது மட்டுமல்லாமல் ஒரு சாட்டை எடுத்து, அதனைக்கொண்டு தன்னுடைய உடல் முழுவதும் பலமாக அடித்து தன்னையே அவர் காயப்படுத்திக்கொண்டார். இதைக்கண்ட அவிலா நகர யோவானை அவரைத் தனியாக அழைத்துக்கொண்டு பொய் ஆற்றுப்படுத்தினார். “உன்னுடைய மனமாற்றத்தை வெளிப்படுத்த இது சரியான வழியல்ல, நீ மனம்மாறிவிட்டேன் என்பதைக் காட்ட விரும்பினால், உன்னுடைய பகுதியில் இருக்கும் நோயாளிகளையும் கைவிடப்பட்டோரையும் கவனித்துக் கொள்” என்றார். அவர் சொன்ன அறிவுரை யோவானின் வாழ்வில் புது ஒளியை ஏற்றியது.

அடுத்த நாளே யோவான் தன்னுடைய பகுதியில் இருந்த நோயாளிகளுக்கு உதவிகள் செய்யத் தொடங்கினார். முடியாதவர்களை எல்லாம் தன்னுடைய தோள்மேல் சுமந்துகொண்டு வந்து அவர்களுக்கு மருத்துவ உதவிகளைச் செய்துவந்தார். குடும்பத்தாரால் கைவிடப்பட்ட முதியவர்களைக் குளிப்பாட்டி அவர்களுக்கு வேண்டியதெல்லாம் செய்துவந்தார். இத்தகைய அறப்பணிகளுக்கு அவர் தன்னுடைய சொத்துகளை எல்லாம் பயன்படுத்தினார். முடியாத பட்சத்தில் அவர் அந்நகரில் இருந்த பெரும் செல்வந்தர்களிடம் பண உதவி பெற்றுக்கொண்டார்.

யோவானின் இத்தகைய இரக்கச் செயல்களைப் பார்த்துவிட்டு நிறையப் பேர் அவரோடு சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார்கள். யோவான் அவர்கள் அனைவரையும் ஒன்றுசேர்த்து, ‘நன்மை செய்யும் சகோதரர்கள்’ என்னும் சபையை நிறுவினார். அச்சபை இன்றைக்கு நூறு நாடுகளுக்கும் மேல் பரவி துன்புறும் நோயாளிகளுக்கு பல்வேறு உதவிகளையும் மருத்துவச் சேவையும் செய்து வருகின்றது. இப்படி நோயாளிகளுக்கு மத்தியில் பணிசெய்து அவர்களுக்காகவே தன்னுடைய வாழ்வினை அர்ப்பணம் செய்த ‘இறை’ யோவான் 1550 ஆம் ஆண்டு தன்னுடைய ஐம்பத்து ஐந்தாம் வயதில் காலமானார். இவருக்கு 1690 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. இறை யோவான் என்று அழைக்கப்படும் இவர் நோயாளிகள், மருத்துவர்கள் போன்றோருக்குப் பாதுகாவலாக இருக்கின்றார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய இறை யோவானின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

நோயாளிகள் மீது அக்கறை

தூய இறை யோவான் தன்னுடைய பகுதியில் இருந்த நோயாளிகளை, கைவிடப்பட்டவர்களை சிறந்த விதமாய் கவனித்துக்கொண்டு அவர்களுக்கு கடவுளுடைய அன்பினை வெளிப்படுத்தினார் என்று அவருடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்று அறிகின்றோம். அவருடைய விழாவைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று நோயாளிகளிடம் உண்மையான அன்பும் அக்கறையும் கொண்டு வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நம்மோடு வாழக்கூடிய நோயாளிகளையும் கைவிடப்பட்டவர்களையும் கண்டும் காணாமலும்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “நான் நோயுற்று இருந்தேன், என்னைக் கவனித்துக்கொண்டாயா?” என்று. ஆம். நம்மோடு வாழக்கூடிய நோயாளிகளை, கைவிடப்பட்டவர்களை நாம் கவனித்துக்கொள்கின்றபோது நாம் நம் ஆண்டவர் இயேசுயே கவனித்துக்கொள்கின்றோம் என்பதுதான் உம்மை.

அமெரிக்காவில் தாமஸ் பிஷர் என்னும் பெரியவர் ஒருவர் இருந்தார். அவருடைய மனைவி அவரை விட்டுப்பிரிந்து பல ஆண்டுகள் ஆனதால் அவர் தனியாகயே வாழ்ந்து வந்தார். ஆனாலும் அவரிடம் ஏராளமான சொத்துகள் இருந்ததால், அவருடைய மனைவியின் பிரிவு அவருக்கு அவ்வளவு ஒன்றும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இதற்கிடையில் ஒருநாள் மாலைவேளையில் அவர் தன்னுடைய வீட்டில் அமர்ந்து செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருந்தார். அப்போது அவருடைய வீட்டின் கதவு தட்டப்பட்டது. உடனே அவர் எழுந்துசென்று கதவைத் திறந்தார். கதவைத் திறந்து பார்த்தபோது அவருக்கு எதிரில் கையில் கைத்தடியுடன் (Walking Stick) ஜோ நின்றுகொண்டிருந்தார். இந்த ஜோ ஒரு தெருவோர பிச்சைக்காரார். அவ்வப்போது அவர் தாமஸ் பிஷரின் வீட்டிற்கு வருவார். அவரும் கொஞ்சம் கொடுத்து அவரை அனுப்பி வைத்தார். அன்றைக்கும் தாமஸ் பிஷர் அவருக்குக் கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்பிவைத்தார். அன்றைக்குக் குளிர் வழக்கத்திற்கு மாறாகவே இருந்தது.

மறுநாள் தாமஸ் பிஷர் தன்னுடைய வீட்டிலிருந்து இறங்கி தெருவில் நடந்து வந்துகொண்டிருந்தபோது ஓரிடத்தில் மக்கள் கூட்டமாய் இருந்தார்கள். எல்லாரையும் விலகிக்கொண்டு அவர் உள்ளே சென்று பார்த்தபோதுதான் தெரிந்தது அங்கே இறந்து கிடந்தது முந்தைய தினத்தில் தன்னுடைய வீட்டிற்கு வந்துபோன ஜோ என்று. ஜோவின் உடல் குளிருக்கு நன்றாக விறைத்துபோயிருந்தது. அப்போதுதான் தாமஸ் பிஷருக்கு மண்டையில் உரைத்தது, நேற்றைய நாளில் அவர் தன்னுடைய வீட்டிற்கு வந்தபோது அவருக்கு வீட்டில் தங்க இடம் கொடுத்திருக்கலாமே என்று.

அவருக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. என்ன செய்வதென்று தெரியாமல் விழித்த அவர், கனத்த இதயத்தோடு ஜோவை கல்லறைக்குத் தூக்கிக் கொண்டு போய் நல்லடக்கம் செய்தார்.

மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் ஜோவைப் போன்று எத்தனையோ ‘ஜோக்கள் உறவுகள் இன்றி, கைவிடப்பட்டவர்களாய், நோய் வாய்ப்பட்டவர்களாய் இருக்கின்றார்கள். இவர்களுக்கெல்லாம் நம்முடைய அன்பும் கரிசனையும் நிச்சயம் தேவைப்படுகின்றது.

ஆகவே, தூய இறை யோவானின் விழாவைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று நோயாளிகளிடமும் கைவிடப்பட்டவர்களிடமும் உண்மையான அன்பும் அக்கறையும் கரிசனையும் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

07 March 2020

பெர்பெத்துவா, பெலிசித்தம்மாள் (மார்ச் 07)

இன்றைய புனிதர் : 
(07-03-2020) 
பெர்பெத்துவா, பெலிசித்தம்மாள் (மார்ச் 07)

கிறிஸ்தவ நெறியைக் கடைப்பிடித்ததற்காக பெர்பெத்துவாவும், அவருடைய பணிப்பெண்ணான பெலிசித்தம்மாளும் சிறையில் அடைபட்டு இருந்தார்கள். அப்போது ஒருநாள் பெர்பெத்துவா ஒரு காட்சி கண்டார். அந்தக் காட்சியில் தங்கமயமான ஓர் ஏணி விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே இருப்பதைக் கண்டார். உடனே அவர் அந்த ஏணியில் வேகவேகமாக ஏறினார். இடையே ஓரிடத்தில் கொடிய பாம்பொன்று இருப்பதையும் கண்டார். அந்த பாம்பைக் கண்டதும் அவர் பயந்து நடுங்கினார். இருந்தாலும், அவர் மனதிலே தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அந்தப் பாம்போடு போராடி இறுதியில் வெற்றியும் கண்டார். பின்னர் அவர் தொடர்ந்து ஏறி, விண்ணகத்தை அடைந்தார். விண்ணகத்தில் தந்தையாம் கடவுள் அவரை இன்முகத்தோடு வரவேற்றார்.

பெர்பெத்துவா இந்தக் காட்சியை தனக்கு வேதம் போதித்து, திருமுழுக்குக் கொடுத்து, தன்னோடு சிறையில் அடைபட்டுக் கிடந்த வேதியர் சட்டைரஸ் என்பவரிடம் எடுத்துச் சொன்னபோது அவர் அவளிடம், “இந்தக் காட்சி, கிறிஸ்துவுக்காக உயிர்துறக்கத் துணிந்திருக்கும் உனக்கு, அவர் உனக்குக் கொடுக்க இருக்கும் பரிசை எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது” என்று எடுத்துச் சொன்னார்.

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் விழாக் கொண்டாடும் தூய பெர்பெத்துவா, ஒரு கிறிஸ்தவ தாய்க்குப் பிறந்து, பின்னாளில் துனிசியாவில் இருந்த ஓர் உரோமை அதிகாரிக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டவர். அப்போது இவருக்கு 22 வயது. இவருடைய பணிப்பெண்தான் பெலிசித்தம்மாள். இவர்கள் வாழ்ந்த காலம் மூன்றாம் நூற்றாண்டு. இவர்களுடைய காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறையும் வேதகலாபனையும் அதிகமாக நிகழ்ந்தன. கிறிஸ்தவ நெறியை பின்பற்றியவர்கள் கொடிய விலங்குகளுக்கு இரையாக்கப்பட்டார்கள்.

அப்போது உரோமையை ஆண்ட செப்டிமஸ் செவேருஸ் என்ற கொடுங்கோலன் பெர்பெத்துவாவையும் பெலிசித்தம்மாளையும் இன்னும் அவர்களோடு இருந்த ஒருசில கிறிஸ்தவப் பெண்களையும் சிறையில் அடைத்து சித்ரவதை செய்தான். அந்நேரத்தில் பெர்பெத்துவாவின் தந்தை, (அவர் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றாதவர்) பெர்பெத்துவாவிடம் வந்து, “தயவுசெய்து நீ கிறிஸ்துவை மறுதலித்துவிடு, அரசன் உன்னை விடுதலை செய்துவிடுவான். இல்லையென்றால் நீ அழிந்துவிடுவாய்” என்று எவ்வளவோ கெஞ்சிக் கேட்டார். அதற்கு அவர், அருகே இருந்த ஒரு பாத்திரத்தைச் சுட்டிக்காட்டி, “இந்தப் பாத்திரம் இருக்கிறதே, இதைப் பாத்திரம் என்றுதான் அழைக்கவேண்டும், வேறு எப்பெயராலும் அழைக்க முடியாது. அதைப் போன்றுதான் நான் கிறிஸ்தவள் என்றே அழைக்கப்படவேண்டும். அதில்தான் எனக்கு பெருமை இருக்கின்றது” என்று சொல்லி அவரை அங்கிருந்து அனுப்பி விட்டார்.

அதன்பிறகு அரசன் பெர்பெத்துவாவையும் பெலிசித்தம்மாளையும் இன்னும் அவர்களோடு இருந்த ஒரு சில பெண்களையும் கொடிய விலங்குகளுக்கு முன்பாகத் தூக்கி எறிந்தான். ஆனால் அவை அவர்களை ஒன்றுமே செய்யவில்லை. இதைக் கண்டு அரசன் வியப்புற்றான். பின்னர் அவன் அவர்களை எரியும் தீப்பிழம்பில் தூக்கி எறிந்தான். அப்போதும் அந்தத் தீப்பிழம்பு அவர்களை ஒன்றும் செய்யவில்லை. அவர்கள் அந்தத் தீப்பிழம்பின் நடுவே இறைவனைப் பாடி புகழ்ந்துகொண்டிருந்தார்கள். இதைக் கண்டு சினமுற்ற அரசன் அவர்களை வாளுக்கு இரையாக்கி கொன்றுபோட்டான். அவர்கள் தங்களுடைய வாழ்வினாலும் இறப்பினாலும் கிறிஸ்துவுக்கு சான்று பகர்ந்து இறந்தார்கள்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய பெர்பெத்துவா மற்றும் பெலிசித்தம்மாளின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவர்களிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. கிறிஸ்துவுக்காக துன்பங்களை ஏற்றல்

தூய பெர்பெத்துவாவும் பெலிசித்தம்மாளும் கிறிஸ்துவுக்காக எதையும் ஏற்கத் தயாராக இருந்தார்கள். இதை நாம் அவர்களுடைய வாழ்க்கையிலிருந்து எளிதாகக் கண்டுணரலாம். அவர்கள் அரசனைக் குறித்தோ, சாவைக் குறித்தோ பயப்படவே இல்லை. எல்லாவற்றிற்கும் துணிவுடன் தயாராக இருந்தார்கள். அதனால்தான் அவர்கள் புனிதர்கள் கூட்டத்தில் இடம்பெறுகிறார்கள்.

இன்றைக்கு அவர்களுடைய விழாவைக் கொண்டாடும் நமக்கு அவர்களிடமிருந்த துன்பத்தை, சவால்களை துணிவுடன் ஏற்றுக்கொள்ளும் மனநிலை இருக்கிறதா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் துன்பமா அது எதற்கு?, அது வேண்டவே வேண்டாம் என்று நினைக்கிறோம். துன்பங்கள்தான் இன்பத்திற்கான நுழைவாயில் என்பதை மறந்துபோய்விடுகிறோம்.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னுடைய சீடர்களிடம் பாடுகளைக் குறித்து சொன்னபோது பேதுரு, “ஆண்டவரே இது உமக்கு வேண்டாம்” என்று சொல்கிறார் (மத் 16: 22). காரணம் அவர் துன்பமில்லா இன்பமான வாழ்வு வாழ நினைத்தார். ஆனால் இயேசுவின் பார்வை வித்தியாசமாக இருக்கின்றது. அவர் துன்பங்கள் தான் தூயகத்திற்கான நுழைவாயில், மீட்புக்கான வழி என்பதை நன்கு உணர்ந்திருந்தார். அதனால்தான் அவர் தன்னுடைய இன்னுயிரையும் இழக்கத் துணிந்தார். இன்றைக்கு நாம் துன்பத்தை எத்தகைய மனநிலையோடு பார்க்கிறோம் என சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஆப்பிள் அதிகமாக உற்பத்தியாகும் அமெரிக்காவில் உள்ள மெயினி (Maine) என்ற இடத்தின் வழியாக ஒருவர் நடந்துசென்றுகொண்டிருந்தார். அப்போது ஓர் ஆப்பிள் தோட்டத்தில் பழங்கள் அதிகமாக விளைந்திருந்தன. இதைப் பார்த்த அம்மனிதருக்கு ஆச்சரியம் தாங்க முடியில்லை. எனவே, அவர் அந்த ஆப்பிள் தோட்டத்திற்குள் சென்று, அங்கே இருந்த விவசாயியிடம், “எப்படி ஐயா! உங்களுடைய தோட்டத்தில் மட்டும் அதிகமாக பழங்கள் ஓர் மரத்தில் காய்த்திருக்கின்றன?, இதன் இரகசியம் என்ன?” என்று கேட்டார். அதற்கு அவர், ஆப்பிள் மரத்தின் அடிப்பகுதியில் ஆங்கங்கே கொத்தி எடுக்கப்பட்டிபருப்பதைச் சுட்டிக்காட்டினார். பின்னர் அவரிடத்தில், “இப்படி ஒவ்வொரு மரத்திலும் கொத்தப்பட்டிருப்பதன் காரணம், இவை இன்னும் நன்றாக கனிகொடுப்பதற்காகவே ஆகும். ஒருவேளை இம்மரத்தின் அடிப்பகுதியைக் கொத்தாமல் விட்டுவிட்டால், அவை நன்றாக கணிகொடுக்காமலே போய்விடும்” என்றார்.

மரம் மட்டுமல்ல, மனிதர்களும் கூட தங்களுடைய வாழ்க்கையில் வலிகளைத் தாங்கிக் கொள்கிறபோதுதான், துன்பங்களை ஏற்றுக்கொள்கிறபோதுதான் உன்னதமான நிலையை அடைய முடியும் என்பது உண்மை.

தூய பெர்பெத்துவாவும், பெலிசித்தம்மாளும் கிறிஸ்துவுக்காக துன்பங்களையும் பாடுகளையும், அவமானங்களையும் ஏன் இறப்பையும் ஏற்றுக்கொண்டார்கள். அதனால்தான் அவர்கள் புனிதர்களாக உயர்ந்து நிற்கிறார்கள். நாமும் நம்முடைய வாழ்வில் கிறிஸ்துவுக்காக துன்பங்களை ஏற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Saints Perpetua and Felicity, Martyrs
Late Second Century–203

March 7—Memorial (Optional Memorial if Lenten Weekday)
Liturgical Color: Red (Purple if Lenten Weekday)
Patron Saints of expectant mothers, widows, and butchers

Young mothers bleed to death in the arena as pagan eyes drink in the spectacle

Many centuries ago, in the desert lands of North Africa now populated by tens of millions of adherents of Islam, there was once a thriving Catholic Church. Dioceses, bishops, theologians, shrines, cemeteries, schools, monasteries, convents, and saints filled the towns hugging the southern coast of the Mediterranean Sea. This vibrant Catholicism gave birth to, and was inspired by, the witness of numerous martyrs. Many of their names are known, among them today’s saints, Felicity and Perpetua. Few documents in Church history can match the raw power of the first person, eye-witness account of the assassination of Perpetua and Felicity. It is a gripping narrative filled with breathtaking dramatic detail. The reader can almost feel the hot sand of the arena warming his feet, a gentle sea breeze caressing his cheeks, and the sweaty crowd pressing against him, their roar for bloodlust echoing through the dry air.

Vivia Perpetua, twenty-two years old, was married, a noblewoman, and a new mother whose baby was still nursing. Her pagan father begged his favorite daughter to renounce her Christian faith, but to no avail. Felicity was a slave and pregnant when jailed. She gave birth a few days before her martyrdom. Her child would be raised by Christian women in Carthage. Perpetua, in her own hand, recorded the events leading up to her martyrdom, while an eye-witness to her death completed the text later. When they were first thrown into the arena, Perpetua and Felicity were attacked by a rabid heifer, which was chosen because it shared the same sex as its victims. The young women were grievously injured by the mad cow and then momentarily removed from the arena until gladiators were brought in to conclude the day’s spectacle. The executioners carried out their duties quickly, though Perpetua had to guide the gladiator’s sword to her throat after he first painfully struck a bone instead of a vein. As the narration states, “Perhaps such a woman…could not die unless she herself had willed it.” Perpetua and Felicity were imprisoned together, suffered together, and died together in 203 A.D. in Carthage, North Africa, along with other noble martyrs whose names are preserved in the same account.  

The vivid description of their deaths was so moving that it was faithfully preserved down through the centuries and has come to us largely intact. Apart from the New Testament writings themselves, only a few documents from the early Church pre-date the passion narrative of Perpetua and Felicity. It invites tantalizing reflection on how many similar first hand testimonies of famous martyrdoms from the early Church have been lost! What could have been known about the final moments of Saints Paul, Cecilia, Irenaeus, and so many apostles and popes! The accounts of Perpetua, Felicity, and Polycarp must fire our imagination for all the rest. The Church in North Africa so often read the account of Perpetua and Felicity in its public liturgies that Saint Augustine, a North African bishop living two hundred years after their martyrdoms, had to remind his faithful that the narrative was not on a par with Scripture itself.

The fact that women and slaves, both mothers who loved their children, were willing to die rather than renounce their faith, is a testament to the revolutionary message of Jesus Christ. The Son of God gave us a true religion. But He also gave us a true anthropology. He has revealed to man his true origins, his high dignity, and his ultimate purpose. Jesus reveals man to himself. So when early Christians, or even present-day Christians, understand that they are made in God’s image and likeness, and that His Son died for them as much as He died for anyone else, they stand a little taller. If a Christian is told he is garbage, property, a slave, old, a prisoner, or a foreigner, he shouldn’t flinch at the insult, because under such denigrations is a deeper identity: “child of God,” “made in God’s image and likeness,” and “worthy of the blood of the Lamb.” These are the titles of a citizen of the Kingdom of God, whose shadow covers the earth and comforts all those who live in its shade. Felicity and Perpetua clung to their identity as Christians in the face of imprisonment, ridicule, torture, and pain. The newness of the faith, and the dignity it imparted, fortified them to accept death rather than a return to rough paganism. May our faith be as fresh to us today.

Saints Felicity and Perpetua, your martyrdom was an act of bravery, which moved the Christians of your age and continues to move us today. Give all who invoke your names similar courage, fortitude, and faith to overcome timidity in witnessing to Christ in difficult circumstances.

06 March 2020

தூய கொலேட் (மார்ச் 06)

இன்றைய புனிதர் :
(06-03-2020) 

தூய கொலேட் (மார்ச் 06)
நிகழ்வு

ஒரு சமயம் கொலேட் இருந்த பகுதியில் இருந்த ஒரு விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த பெண்ணொருத்திக்கு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தை குறைமாதக் குழந்தையாக பிறந்து உடல் நலம் குன்றியிருந்தது. இதைப் பார்த்த அந்தக் குழந்தையின் தந்தை, குழந்தைக்குத் திருமுழுக்குக் கொடுத்தால் உடல் நலம் தேறிவிடும் என்ற நம்பிக்கையில், குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஆலயத்திற்கு ஓடினார். ஆலயத்திற்கு சென்று, அங்கிருந்த குருவானவரிடம் காட்டியபோது, அக்குழந்தை ஏற்கனவே இறந்திருந்தது குருவானவருக்குத் தெரியவந்தது. எனவே குருவானார், குழந்தையின் தந்தையிடம், “குழந்தை ஏற்கனவே இறந்துபோய்விட்டது. இறந்த குழந்தைக்கு திருமுழுக்குக் கொடுப்பது நல்லதல்ல” என்றார். இதைக் கேட்டு அந்த குழந்தை தந்தை கதறி அழுதார்.

அவருடைய அழுகையைப் பார்த்து மனமுருகிப் போன குருவானவர் அவரிடம், “பக்கத்தில் கொலேட் என்ற பெண் துறவி ஒருவர் இருக்கின்றார். உன்னுடைய குழந்தையை அந்தத் துறவியிடம் நீ எடுத்துக்கொண்டு போனால், கட்டாயம் அவர் உன்னுடைய குழந்தையை உயிர்பித்துத் தருவார்” என்றார். குருவானார் சொன்னதை நம்பி, அவர் தன்னுடைய குழந்தையைத் தூக்கிக்கொண்டு கொலேடிடம் ஓடினார். அவரைச் சென்று சந்தித்து நடந்தவற்றையெல்லாம் விளக்கிச் சொன்னார். உடனே அவர் தான் அணிந்திருந்த மேலாடையை (Habit) எடுத்து, அந்தக் குழந்தையின் மீது போர்த்தி, அந்தக் குழந்தைக்காக இறைவனிடம் ஜெபித்தார். பின்னர் அவர் அந்த மனிதரிடம், “உன்னுடைய குழந்தை நிச்சயம் பிழைத்துக்கொள்ளும். அதனால் இக்குழந்தையை எடுத்துக்கொண்டு போய் குருவானவரிடம் காட்டி, திருமுழுக்குக் கொடு” என்றார்.

கொலேட் சொன்ன வார்த்தைகளை நம்பி, அந்த மனிதர் குழந்தையைத் தூக்கிக்கொண்டு குருவானவரிடத்தில் சென்றார். ஆச்சரியம் என்னவென்றால், குழந்தை போகிற வழியிலே பிழைத்துக்கொண்டது. உயிர்பிழைத்த அந்தக் குழந்தையை குருவானவரிடத்தில் காட்டி, திருமுழுக்குக் கொடுத்தார். பின்னாளில் அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவளாகி, கொலேட்டின் சபையில் சேர்ந்து துறவியானது.

வாழ்க்கை வரலாறு

கொலேட், 1381 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13 ஆம் தேதி, பிரான்சில் உள்ள கார்பி என்ற கிராமத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோருக்கு நீண்ட நாட்களாகக் குழந்தையே இல்லை. எனவே, அவர்கள் தூய நிக்கோலாசிடம் இடைவிடாது ஜெபித்துவந்தார்கள். ஒருகட்டத்தில் அவர்களது ஜெபம் கேட்கப்பட்டது. ஆம், அவர்களது ஜெபத்தின் பயனாக கொலேட் பிறந்தார். கொலேட் பிறக்கும்போது அவருடைய தந்தைக்கு 60 வயது.

கொலேட் வளரும்போதே பக்தியோடும் ஒழுக்கத்தோடும் வளர்ந்து வந்தார். அவருடைய வளர்ச்சியைக் கண்டு, அவருடைய பெற்றோர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். இப்படி எல்லாமே நன்றாகப் போய்கொண்டிருந்த தருணத்தில், கொலேட்டின் பெற்றோர் இருவரும் இறந்துபோனார்கள். இதனால் கொலேட் அடைந்த துயரத்திற்கு அளவே இல்லை. ஆனாலும் அவர் மனம்தளராமல், தனக்குச் சொந்தமான சொத்துகளை எல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையில் சேர்ந்து துறவியானார்.

துறவற மடத்தில் இருந்த சமயத்தில், ஒருநாள் அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது தூய அசிசியார் அவருக்குக் காட்சி கொடுத்தார். அந்தக் காட்சியில் அசிசியார் கொலேட்டிடம், கிளாரா சபையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டு மறைந்துபோனார். கொலேட்டுக்கு தொடக்கத்தில் ஒன்றும் புரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் எல்லாம் புரிந்தது. உடனே அவர் கிளாரா மடத்தில் மாற்றங்களைக் கொண்டு வரத் தொடங்கினார். அதற்கு பலரிடமிருந்தும் எதிர்ப்புகள் வந்தன. ஆனாலும் கொலேட் அதனை எல்லாம் பொருட்படுத்தாமல், சபையை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டார். இறுதியில் அதில் வெற்றியும் பெற்றார்.

கொலேட் சபையை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசென்ற அதே வேளையில், ஏழை எளியவரிடத்திலும் மிகவும் அக்கறை கொண்டு வாழ்ந்துவந்தார். சபையில் யாரும் செய்யத் துணியாத மிகவும் சாதாரண பணிகளையும் செய்தார். இதனால் எல்லாருடைய நன்மதிப்பையும் பெற்றார். இப்படிப்பட்டவர் 1447 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1807 ஆம் ஆண்டு திருத்தந்தை ஆறாம் பயஸ் புனிதர் பட்டம் கொடுத்தார்.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

தூய கொலேட்டின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்தல்

தூய கொலேட்டின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்க்கும்போது அவர் எப்போதும் இறைவனுக்கு உகந்த வாழ்க்கையை வாழ்ந்துவந்தார் என்பது நமக்குப் புரியும். அவர் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்து வந்ததால், இறைவன் அவர் வழியாக பல வல்ல செயல்களைச் செய்தார் என்பதை அவருடைய வாழ்க்கை குறிப்பிலிருந்து நாம் அறிந்துகொள்கின்றோம்.

ஒருமுறை அவர் திருத்தந்தை பெனடிக்டைச் சந்திக்க நைசை நோக்கிப் பயணம் செய்தபோது, நண்பர் ஒருவரது வீட்டில் தங்கினார். அந்த நண்பரின் மனைவியோ எப்போது வேண்டுமானால் குழந்தையைப் பிரசவிக்கும் தருணத்தில் இருந்தார். இரவில் எல்லாரும் தூங்கப் போன சிறிதுநேரத்தில் நண்பரின் மனைவி பிரசவ வேதனையில் அலறினார். உடனே கொலேட் அருகில் இருந்த ஆலயத்திற்குச் சென்று அந்தப் பெண்ணுக்கு சுகப் பிரசவம் நடக்க வேண்டும் என்று இறைவனிடம் ஜெபித்தார். அவர் ஜெபித்துக் கொண்டதற்கு ஏற்ப அந்தப் பெண்ணுக்கு சுகப் பிரசவம் நடைபெற்றது. அதனால் எல்லாரும் இறைவனைப் போன்று மகிழ்ந்தார்கள்.

இப்படி பல்வேறு நிகழ்வுகளின் வழியாக கொலேட் ஆண்டவரின் கைவன்மையைப் பெற்றவராய் இந்த உலகில் வலம்வந்தார். தூய கொலேட்டைப் போன்று நாமும் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்கின்றபோது, இறைவனால் ஆசிர்வதிக்கப்படும் என்பது உறுதி.

ஆகவே, தூய கொலேட்டைப் போன்று நாமும் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

05 March 2020

சபை நிறுவுநர் ராபர்ட் ஸ்பைஸ்கே Robert Spiske march 5

இன்றைய புனிதர்
2020-03-05
சபை நிறுவுநர் ராபர்ட் ஸ்பைஸ்கே Robert Spiske
பிறப்பு
29 ஜனவரி 1821,
பிரேஸ்லவ் Breslau, போலந்து
இறப்பு
5 மார்ச் 1888,
பிரேஸ்லவ் Breslau, போலந்து

இவர் தான் ஓர் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்ட பின்பு ஊர் ஊராகச் சென்று மறைப்பணியை ஆற்றினார். பேராலயங்களில் சிறப்பான மறையுரை ஆற்றி, பலரை மனந்திருப்பினார். திருப்பலிக்கு வராத மக்களையும் தன் அழகிய மறையுரையால் கவர்ந்து இறை இல்லம் நாடி வரச் செய்தார். இளைஞர்களின் மனதை மிக எளிதாகக் கவர்ந்தார், கைவிடப்பட்ட இளைஞர்களுக்கு இல்லம் ஒன்றை எழுப்பி, அவர்களை பராமரித்து வந்தார்.

இவர் அக்குழந்தைகள் மற்றும் இளைஞர்களை கவனித்து பராமரிப்பதற்கென்று, எட்விக் சகோதரிகள் என்ற பெயரில் சபை ஒன்றை நிறுவினார். 1892 ஆம் ஆண்டு இச்சபை, திருத்தந்தை அவர்களால் துறவறச் சபை என்ற அங்கீகாரம் அளிக்கப்பட்டது. ராபர்ட் ஸ்பைஸ்கே "காரித்தாஸ் அப்போஸ்தலர்" (Apostel Caritas) என்று மக்களால் அழைக்கப்பட்டார். இவர் இறந்தபிறகு, இவரால் தொடங்கப்பட்ட சபையிலேயே அடக்கம் செய்யப்பட்டார்.


செபம்:
படைப்பனைத்திற்கும் பாதுகாவலே! இன்றைய உலகில் வாழும் இளைஞர்களை ஆசீர்வதியும். இவர்கள் தெளிந்த சிந்தனையுடன் தங்களது வாழ்வை வாழ உதவி செய்யும். நல்லதோர் எதிர்காலத்தைப் பெற்று, நாட்டிற்கும் வீட்டிற்கும் எம் திருச்சபைக்கும் பிரமாணிக்கமுள்ளவர்களாக வாழ வழிகாட்டிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

திருக்காட்சியாளர் ஒலிவியா Olivia
பிறப்பு : 2 ஆம் நூற்றாண்டு, பிரேசியா Brescia, இத்தாலி
இறப்பு : 2 ஆம் நூற்றாண்டு, பிரேசியா Brescia, இத்தாலி


துறவி கொன்ராட் ஷோய்பர் Konrad Scheuber
பிறப்பு : 1481, ஆல்ட்பெல்லன் Altfellen
இறப்பு : 5 மார்ச் 1559 ஒல்ஃபன்சீசன் Wolfenschießen, சுவிஸ்

தூய சிலுவை யோவான் ஜோசப் (மார்ச் 05)

இன்றைய புனிதர் : 
(05-03-2020) 

தூய சிலுவை யோவான் ஜோசப் (மார்ச் 05)
“மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” (மத் 20:28)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் சிலுவை யோவான் ஜோசப், இத்தாலியில் உள்ள இஸ்கியா என்னும் இடத்தில் இருந்த ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் 1654 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15 ஆம் நாள் பிறந்தார். சிறுவயதிலே பக்தியிலும் நற்பண்புகளிலும் சிறந்து விளங்கிய இவர், தனது பதினாறு வயதில் பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்து, 1677 ஆம் ஆண்டு குருவானார். குருவானவராக மாறிய இவர் அதிகமான ஒறுத்தல் முயற்சிகளை மேற்கொண்டார். அதோடு நீண்டநேரம் இறைவனிடத்தில் ஜெபித்து வந்தார். இவருடைய ஜெபவாழ்க்கை இவரை மேலும் மேலும் உயர்த்தியது. எந்தளவுக்கு என்றால் தொடக்கத்தில் நவதுறவிகளுக்கு பொறுப்பாளராக இருந்த இவர், படிப்படியாக உயர்ந்து துறவற மடத்தின் தலைவரானார்.

துறவுவாழ்க்கையில் இயேசுவைப் போல வாழ முயற்சி செய்தார். பணிவிடை பெறுவதல்ல, பணிவிடை புரிவதே மேலானது என்றும் தன்னையே இறைவனுக்கு முழுமையாகக் கையளிப்பதும்தான் துறவற வாழ்வின் மேலான குறிக்கோள்கள் என்பதை உணர்ந்து, அதற்கேற்ப வாழ்ந்து வந்தார். இவருடைய கைகளால் நிறைய வல்ல செயல்கள் நடைபெற்றன. தீராத நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இவரிடத்தில் வந்தபோது, இவர் தனது கைகளை வைத்து ஜெபித்தபோது அவர்கள் நோய் நீங்கி நலமடைந்தார்கள். இவர் வசதியான குடும்பத்திலிருந்து வந்தபோதுகூட எப்போதும் ஏழ்மையையே கடைப்பிடித்து வந்தார்.

ஏழ்மை, தாழ்ச்சி போன்ற புண்ணியங்களில் சிறந்துவிளங்கிய சிலுவை யோவான் ஜோசப் மரியன்னையிடம் மிகுந்த பக்திகொண்டு வாழ்ந்து வந்தார். தன்னுடைய வாழ்க்கையில் துன்பங்களும் இன்னல்களும் சூழ்ந்த நேரத்தில் மரியாளிடத்தில்தான் இவர் மிகுந்த பக்திகொண்டு ஜெபித்துவந்தார். மரியாவும் இவருக்கு மிகப்பெரிய ஆறுதலாய் இருந்து வந்தார். இப்படிப் பல்வேறு பணிகளைச் செய்துவந்த சிலுவை யோவான் ஜோசப் 1734 ஆம் ஆண்டு உடல்நலம் குன்றி, மரணப்படுக்கையில் விழுந்து அப்படியே இறந்து போனார். இவருக்கு 1839 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த எட்டாம் பயஸ் என்பவரால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய சிலுவை யோவான் ஜோசப்பின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. சேவை செய்து வாழ்தல்

தூய சிலுவை யோவான் ஜோசப்பிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடம், சேவை செய்து வாழ்ந்த வாழ்க்கையாகும். ஆண்டவர் இயேசு சொன்ன, ‘மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றவும் பலருடைய மீட்புக்காக தம் உயிரையும் கொடுக்க வந்தார்’ என்ற வார்த்தைகளை அடிக்கடிச் சொல்லி அதன்படியே இவர் வாழ்வதற்கு முயற்சிகள் செய்து வந்தார். இவருடைய விழாவைக் கொண்டாடும் நாம் நல்ல மனதோடு, அர்ப்பண உள்ளத்தோடு சேவை செய்ய முயற்சி செய்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் அடுத்தவர் நமக்குச் செய்ய வேண்டும் என்ற நினைப்பில் இருக்கின்றோமோ ஒழிய, நாம் அடுத்தவருக்குச் சேவை செய்ய முன்வருவதில்லை. இத்தகைய சூழ்நிலையில்தான் தூய சிலுவை யோவான் ஜோசப் நமக்கு மிகச் சிறந்த முன்மாதிரியாக இருக்கின்றார்.

ஒருசமயம் ரோட்னி ஸ்மித் என்ற வெளிநாட்டுக்காரர், அன்னை தெரசா நடத்தி வந்த அனாதை இல்லத்திற்கு சென்றிருந்தார். அங்கே அவர் கண்ட காட்சி அவரை ஆச்சரியப்பட வைத்தது. ஏனென்றால், அனாதை இல்லத்தில் இருந்த ஒரு பணியாளர், அங்கிருந்த நோயாளி ஒருவர் வாந்தி எடுத்து வைத்ததை கழுவிச் சுத்தம் செய்துகொண்டிருந்தார். இதைப் பார்த்த ரோட்னி ஸ்மித் அந்தப் பணியாளரிடம் சென்று, “எப்படி உங்களால் இந்த வேலையெல்லாம் செய்ய முடிகின்றது?” என்று கேட்டார். அதற்கு அந்தப் பணியாளர், “யாராவது பிள்ளைகள் ‘அசுத்தம்’ செய்து வைத்ததை சுத்தம் செய்யும்போது அதனை வேலை என்று சொல்வார்களா? இல்லைதானே... அதுபோன்றுதான் நானும் இதை வேலையாகச் செய்யாமல் கடமையாகச் செய்கின்றேன்” என்றார். அந்தப் பணியாளர் பேசும்போது வார்த்தைகளில் வெளிப்பட்ட அன்பையும் கண்களில் தெரிந்த ஒளியையும் கண்டு வியந்துபோய் நின்றார்.

தான் செய்த ‘பணியை’ ஏதோ கடமைக்காகச் செய்யாமல், உள்ளார்ந்த அன்புடன் செய்ய, அந்தப் பணியாளரின் செயல் உண்மையில் நமது பாராட்டுக்குரியதாக இருக்கின்றது. நாமும் அர்ப்பண உள்ளத்தோடு சேவை செய்யவேண்டும் என்பதுதான் ஆண்டவர் நம்மிடமிருந்து எதிர்பார்க்கின்ற ஒன்றாக இருக்கின்றது.

ஆகவே, தூய சிலுவை யோவான் ஜோசப்பின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று அர்ப்பண உள்ளத்தோடு ஆண்டவருக்கும் அவரது அன்பு மக்களுக்கும் சேவை செய்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.Saint of the Day : (05-03-2020)

St. John Joseph of the Cross

He was born on August 15, 1654, on the date of the Feast of Assumption, in the island of Ischia near Naples. His father was Joseph Calosirio and mother Garguilo. His birth name was Carlo Gaetano. He entered in to the Franciscan Order of the strictest observance or Reform of St. Peter of Alcantara, at Naples at the age of 16 years. He was happy in performing menial offices in the convent. Even at his young age he was devoted to poverty and fasting. His obedience brought him good name in the convent. He was chosen as the Master of the Novices at the young age of 24 years. He devised a cross about a foot length set with rows of sharp nails and fastened the cross tight over his shoulder so that it gives much pain to the shoulder, as a means of penance. He was appointed Vicar Province of the Alcantarine Reform of Italy in the year 1702. It seems he also knew his date of death. One week before his death, when he talked to his brother, John Joseph requested his brother to specially pray for him without fail on next Friday and he actually died on that very Friday on March 5, 1739.

St. John Joseph of the Cross was beatified in the year 1789 and canonized by pope Gregory-XVI on May 26, 1839.

---JDH---Jesus the Divine Healer---

04 March 2020

தூய கசிமிர் (மார்ச் 04)

இன்றைய புனிதர் : 
(04-03-2020) 
தூய கசிமிர் (மார்ச் 04)

“மனிதன் உலகம் முழுவதும் தனதாக்கிக் கொண்டாலும் தன் ஆன்மாவை இழப்பானெனில் அதனால் வரும் பயனென்ன? (மத் 16: 26)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் கசிமிர், போலந்து நாட்டு மன்னர் நான்காம் கசிமிர் என்பவருக்கு மகனாக 1458 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 3 ஆம் நாள் பிறந்தார். சிறு வயதிலே மிகுந்த பக்தியோடு வளர்ந்து வந்த கசிமிர், துளுகோஸ் என்பவரிடம் அனுப்பி வைக்கப்பட்டபோது பாடங்களை கற்று வந்தார்.

இந்த சமயத்தில் துருக்கி நாட்டவரால், ஹங்கேரி நாட்டு மக்களுக்கு பயங்கர அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதனால் ஹங்கேரி நாட்டு மக்கள், மன்னர் நான்காம் கசிமிரை அணுகி வந்து அவருடைய மகனான கசிமிரை தங்களுக்குத் தலைமை தாங்குமாறு கேட்டுக்கொண்டார்கள். மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க மன்னர் தன் மகன் கசிமிரை அவர்களுக்குத் தலைமை தாங்கப் பணித்தார். சில ஆண்டுகள் கசிமிர் ஹங்கேரி நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்று சீரும் சிறப்புமாக மக்களை வழிநடத்தி வந்தார். அப்போது அவருக்கு வயது வெறும் 13 தான். அந்த சிறிய வயதிலும் ஒரு நாட்டை தலைமை தாங்கி வழிநடத்தக்கூடிய திறமையை இறைவன் கசிமிருக்குக் கொடுத்திருந்தார்.

ஒருசில ஆண்டுகள் ஹங்கேரியில் இருந்து பணியாற்றிவிட்டு, கசிமிர் தன்னுடைய சொந்த நாட்டிற்குத் திரும்பினார். ஹங்கேரிக்கு வந்த சமயத்தில் அவருடைய தந்தை, லித்துவேனியாவில் இருக்கின்ற பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக, அரச பதவியை கசிமிரிடம் கொடுத்துவிட்டு அங்கு சென்றார். அவர் திரும்பி வரும்வரை கசிமிர் மக்களை நல்லமுறையில் வழி நடத்திச் சென்றார். தன் மகனுக்கு இருக்கின்ற இந்த அசாதாரண திறமையைப் பார்த்துவிட்டு மன்னர், அவரை ஜெர்மன் நாட்டு மன்னரின் மகளுக்கு மணமுடித்துக் கொடுக்கத் திட்டமிட்டார். ஆனால், அவரோ அதற்கு இசையாது, ஆண்டவருக்கு தன்னை முழுமையாய் அர்ப்பணித்து வாழத் தொடங்கினார்.

கசிமிர், ஜெப வாழ்க்கையிலும் மேலோங்கி விளங்கினார். குறிப்பாக மரியன்னையிடம் மிகுந்த பக்திகொண்டு விளங்கினார். ‘தினமும் வாழ்த்துவோம், ஓ அன்னையே’ என்ற பாடலை அவர் எப்போதும் பாடி ஜெபித்துக்கொண்டே இருந்தார். சில நேரங்களில் அவர் இரவில் தூங்காமல் ஜெபித்துவந்தார். இப்படி இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்து வந்த கசிமிர், மிகக் குறைந்த வயதிலே, அதாவது அவருக்கு 24 வயது நடந்துகொண்டிருக்கும்போதே இறைவனடி சேர்ந்தார். கசிமிர் இறந்து 122 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய கல்லறையைத் தோண்டிப் பார்த்தபோது அவருடைய உடல் அழியாது இருப்பது கண்டு மக்களெல்லாம் ஆச்சரியப்பட்டு நின்றார்கள். அவர் தன்னோடு வைத்திருந்த ஜெபப்புத்தகம் கூட அழியாமல் இருந்தது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய கசிமிரின் நினைவுநாளைக் கொண்டாடும் இன்று அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. மரியன்னையிடம் பக்தி

தூய கசிமிரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்க்கின்றபோது அவர் மரியன்னையின் மீது கொண்டிருந்த பக்தி, அந்த பக்தியினால் அவர் வாழ்ந்த தூய வாழ்க்கை நம்மை வியக்க வைக்கின்றது. புனிதரைப் போன்று நாமும் மரியன்னையிடம் ஆழமான பக்தி கொண்டு வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இந்த இடத்தில் ஒரு வரலாற்று நிகழ்வை இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். இடைக்காலத்தில் உரோமையில் பத்திரிசியா அருளப்பர் என்ற பெரும் செல்வந்தர் வாழ்ந்து வந்தார். அவர் மரியன்னையிடம் மிகுந்த பக்தி கொண்டவர். அதன் பொருட்டு அவர் ஏழைகளுக்கும் பிச்சைகாரர்களுக்கும் நிறைய தான தர்மங்களைச் செய்து வந்தார். அப்படிப்பட்டவர் ஒருசில தீய பழக்க வழக்கங்களுக்கும் அடிமையாய் இருந்தார். சில ஆண்டுகள் கழித்து அவர் மூப்பெய்தி இறந்துபோனார்.

இதற்கிடையில் உரோமையில் இருந்த செசிலியம்மாள் ஆலயத்தில் குருவானவர் ஒருவர் ஜெபித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் ஒரு காட்சி கண்டார். அந்தக் காட்சியில், விண்ணகத்தில் மரியன்னை வானதூதர்கள் புடைசூழ அரியணையில் வீற்றிருக்க, அவருக்கு முன்பாக ஒரு பிச்சைக்காரி அழுது புரண்டு மன்றாடினாள். “அன்னையே! உன் அடியாராகிய பத்திரிசியா அருளப்பர், மண்ணுலகில் செய்த ஒருசில தீயச் செயல்களுக்காக இப்போது உத்தரிக்க தளத்தில் வேதனையை அனுபவித்துக்கொண்டிருக்கின்றார். அவர் நிறைய தான தர்மங்களைச் செய்தவர். இதோ நான் போர்த்தியிருக்கின்றனே இந்த போர்வை, இதுகூட அவர் போர்த்தியதுதான்” என்றார். உடனே மரியன்னை அவரிடம், “பத்திரிசிய அருளப்பரை எனக்குக் காட்டும்” என்றார். அந்தப் பிச்சைக்காரியும் அவரை மரியன்னையிடம் காட்ட, மரியன்னை அவர்மீது இரக்கம்கொண்டு அவருக்கு விண்ணகத்தில் இடமளிக்க தன் மகனை வேண்ட, அவரும் அவருக்கு விண்ணகத்தில் இடமளித்தார்.

மரியன்னையிடம் வேண்டுவோருக்கும் அவரிடம் உண்மையான பக்தி கொண்டு வாழ்வோருக்கும் இறைவன் அளப்பெரிய காரியங்களைச் செய்வார் என்பதை இந்த நிகழ்வின் வழியாக அறிந்துகொள்ளலாம். இன்று நாம் நினைவுகூரும் கசிமிர், மரியன்னையியம் மிகுந்த பக்தி கொண்டிருந்ததால்தான் என்னவோ அவருடைய உடல் நீண்ட நாட்கள் அழியாமல் இருக்க மரியா துணைபுரிந்தார் என்று நம்பத் தோன்றுகின்றது.

ஆகவே, தூய கசிமிரின் விழாவைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று மரியன்னையிடமும் அவர் மகன் இயேசுவிடமும் மிகுந்த பக்தி கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Saint of the Day : (04-03-2020)

St. Casimir

St. Casimir was born on October 3, 1458 in Krakow, Poland. He was the crown prince of the Kingdom of Poland and of the Grand Duchy of Lithuania. He was the second son of King Casimir-IV of Poland and Grand Duke of Lithuania and Queen Elizabeth Habsburg of Hungary. He was educated by the Polish priest Jan Dlugosz. His father tried to arrange the marriage of Casimir with Kunigunde of Austria but Casimir refused to marry to live a life of celibacy. In October 1471 prince Casimir with his father king Casimir-IV invaded Hungary to install Casimir as the king of Hungary. But due to unforeseen circumstances the campaign failed. This defeat pushed Casimir to religious life. As a prince Casimir rejected comforts, slept little and spend nights in prayers. He used to sleep on floor and not on royal bed. He died on March 4, 1484 of tuberculosis at the young age of 25 years.

His first miracle was his appearance before the Lithuanian Army during the siege of Polotsk in 1518, where St. Casimir showed where the Lithuanian troops could safely cross the Daugava River and relieve the city besieged by the army of Grand Duchy of Moscow. This miracle was reported to the pope by King Sigismund-I the Old, of Poland and the pope Adrian-VI canonized Casimir in the year 1522. Pope Pius-XII named saint Casimir the special patron of all youth on June 11, 1948.

---JDH---Jesus the Divine Healer---