புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

08 June 2020

​புனித.மேடர்டாஸ் (St. Medardaus)ஆயர் June 8

இன்றைய புனிதர் :
(08-06-2020)

​புனித.மேடர்டாஸ் (St. Medardaus)
ஆயர்

பிறப்பு 
456
வாலெண்சியென்னா(Valencienne), ஆப்பிரிக்கா
   
இறப்பு 
545
பிரான்சு

இவர் தன் இளம் வயதில், ஒரு நாள் புல்வெளியில் நடந்து கொண்டிருக்கும்போது, இடி மின்னலுடன் கூடிய மழை வந்தது. அப்போது ஒரு பெரிய பருந்து வந்து இளைஞனை அப்படியே தூக்கிக்கொண்டு பிறந்தது. இளைஞன் மழையில் நனையாமல் இருக்க தன் சிறகுகளை அடர்ந்து விரித்து, தன் சிறகுகளின் நிழலில் வைத்து காத்தது. இதனால் மழை இல்லாமல் இயற்கை வளம் கருகும்போது இவரின் பெயரை கூறி ஜெபித்தால் மழை வரும் என்ற நம்பிக்கை பரவியது. அதேபோல் மக்கள் இவரின் பெயரால் ஜெபிக்கும்போது, பலமுறை மழையைபெற்று கொண்டனர். இதனால் ஜூன் 8 ஆம் நாள் மழைக்கான நாள் என்று குறிப்பிட்டுள்ளனர். இறைவனின் அருளால் நிரப்பப்பட்டு இவர் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார். இவர் சிரித்தாலே, இவரின் வாயில் உள்ள மொத்தப் பற்களையும் பார்க்கலாம். அவ்வாறு அவர் வாய்விட்டு சிரிப்பார். 

505 ஆம் ஆண்டு இவர் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். 530 ஆம் ஆண்டு பாரிசிலிருந்த நையன் (Noyon) என்ற மறைமாநிலத்திற்கு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ரைம்ஸ் (Reims) பேராயர் ரெமிஜியுஸ் என்பவரால் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார். ஆயர் மேடர்டாஸ் – ன்(Medardaus) பணி அம்மறைமாநிலத்தில் ஆல் போல் தழைத்து வளர்ந்தது. அப்போது அவர் தூரின் நாட்டு அரசின் ராடேகுண்டீஸ் என்பவரால் வதைக்கப்பட்டு கொல்லப்பட்டார். இவரது உடல் "புனித மடோனா" என்ற துறவற மடத்திற்கு சொந்தமான கல்லறையில் புதைக்கப்பட்டது. இன்று இக்கல்லறையின் மேல் ஒரு சிறிய கெபி கட்டப்பட்டுள்ளது. 

செபம்:
அற்புதங்களையும், அதிசயங்களையும் செய்து வரும் எம் இறைவா! உமது பெயரால் நம்பிக்கையோடு செபிக்கிறவர்களுக்கு எல்லாவிதங்களிலும் உதவி செய்து வருகின்றீர். ஆம் இறைவா! உம்மால் படைக்கப்பட்ட இயற்கை வாடும்போது, உமது வல்லமையில், அவைகள் மீண்டும் புத்துயிர் பெற உதவும்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

Saint of the Day : (08-06-2020)

St. Medardus

Bishop of Noyon, b. at Salency (Oise) about 456; d. in his episcopal city 8 June, about 545. His father, Nectardus, was of Frankish origin, while his mother, named Protagia, was Gallo-Roman. It is believed that St. Gildardus, Bishop of Rouen, was his brother. His youth was entirely consecrated to the practise of Christian virtues and to the study of sacred and profane letters. He often accompanied his father on business to Vermand and to Tournai, and frequented the schools, carefully avoiding all worldly dissipation. His exemplary piety and his knowledge, considerable for that time, decided the Bishop of Vermand (d. 530) to confer on him Holy Orders, and caused him to be chosen as his successor. Forced, in spite of his objections, to accept this heavy charge, he devoted himself zealously to his new duties, and to accomplish them in greater security, since Vermand and the northern part of France in general were then generally troubled by wars and exposed to the incursions of the barbarians, he removed his episcopal see in 531 from Vermand, a little city without defence, to Noyon, the strongest place in that region. The year following, St. Eleutherius, Bishop of Tournai, having died, St. Medardus was invited to assume the direction of that diocese also. He refused at first, but being urged by Clotaire himself he at last accepted. This union of the two dioceses lasted until 1146, when they were again separated. Clotaire, who had paid him a last visit at Noyon, had his body transferred to the royal manor of Crouy at the gates of the city of Soissons. Over the tomb of St. Medardus was erected the celebrated Benedictine abbey which bears his name. St. Medardus was one of the most honoured bishops of his time, his memory has always been popularly venerated in the north of France, and he soon became the hero of numerous legends. The Church celebrates his feast on 8 June.
---JDH---Jesus the Divine Healer---

† இன்றைய புனிதர் †
(ஜூன் 8)

✠ புனிதர் மேடர்டஸ் ✠
(St. Medardus)

ஆயர் மற்றும் ஒப்புரவாளர்:
(Bishop and Confessor)

பிறப்பு: கி.பி. 456
சாலேன்சி, ஒய்ஸ், பிகார்டி, ஃபிரான்ஸ்
(Salency, Oise, Picardy, France)

இறப்பு: ஜூன் 8, 525
நோயொன், ஒய்ஸ், பிகார்டி, ஃபிரான்ஸ்
(Noyon, Oise, Picardy, France)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்கிய திருத்தலங்கள்:
“புனிதர் மேடர்டஸ் துறவு மடம், சோய்ஸ்சொன்ஸ், ஃபிரான்ஸ்
(Abbey of Saint-Médard, Soissons, France)

நினைவுத் திருநாள்: ஜூன் 8

பாதுகாவல்:
பருவநிலை, பல் வலிக்கெதிராக, திராட்சைத் தோட்டங்கள், குடிபானங்கள், கைதிகள், விவசாயிகள் மற்றும் மன நோயாளிகள்.

“புனிதர் மேடர்டஸ்” அல்லது “புனிதர் மேடர்ட்” (Saint Medardus or St Medard) என அறியப்படும் இப்புனிதர், வெர்மண்டோய்ஸ்” மறைமாவட்ட ஆயர் (Bishop of Vermandois) ஆவார். இவர், தமது மறைமாவட்ட ஆயரகத்தை “நோவோன்” (Noyon) நகருக்கு மாற்றினார்.

ஃபிரான்ஸ் நாட்டின் "பிகார்டியில்" (Picardy in France) பிறந்த இவரது தந்தையார் “ஃபிராங்கிஷ்” (Frankish) இனத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரது பெயர் “நேக்டாரிடஸ்” (Nectaridus) ஆகும். “கல்லோ-ரோமன்” (Gallo-Roman) இனத்தைச் சேர்ந்த இவரது தாயாரின் பெயர் “புரோடோகியா” (Protagia) ஆகும்.

“ரோவென்” மறைமாவட்ட ஆயராக (Bishop of Rouen) இருந்த புனிதர் “கில்டர்ட்” (Saint Gildard) இவரது சகோதரர் ஆவார். இதில் அதிசயிக்கத்தக்க விடயம் என்னவென்றால், இச்சகோதரர்கள் இருவரும் பிறந்தது, ஆயராக அருட்பொழிவு செய்விக்கப்பட்டது, இவ்வுலக வாழ்வை விட்டு நித்திய வாழ்வுக்கு சென்றது யாவும் ஒன்றாகவேயாகும்.

சிறு வயதில், “வெர்மான்ட்” மற்றும் “டௌர்ணாய்” (Vermand and Tournai) ஆகிய இடங்களில் கல்வி கற்ற இவர், சீரழிவிற்கு வழி வகுக்கும் இவ்வுலக ஆர்வங்களை கவனமுடன் தவிர்த்து வந்தார்.

தமது சிறு வயதில், ஒரு நாள் புல்வெளியில் நடந்து கொண்டிருக்கும்போது, இடி மின்னலுடன் கூடிய கன மழை வந்தது. அப்போது ஒரு பருந்து இவர் மழையில் நனையாமல் இருக்க தனது சிறகுகளை அகல விரித்தபடி இவர் போகும் பாதையில் பறந்து வந்து இவரை மழையிலிருந்து காத்தது என கூறுவார். இதனாலேயே இவர் பருவநிலைகளின் பாதுகாவலராக அறியப்படுகிறார்.

இவருக்கு 33 வயதாகையில் “வெர்மான்ட்” (Vermand) மறைமாவட்ட ஆயர் “அலோமேர்” (Bishop Alomer) மரண படுக்கையிலிருந்தார். அறிவிலும் பக்தியிலும் முன்மாதிரியான மேடர்டஸ் ஆயர் பதவிக்கு முற்றிலும் தகுதியானவர் என தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலில் சம்மதம் தெரிவிக்காத இவர், பிறகு தம்மேல் ஆயருக்குள்ள நம்பிக்கையை காக்கும் விதமாக சம்மதித்தார்.

ஆயராக இவரது பணிகள் பற்றின தகவல்களும் ஆதாரங்களும் அதிகம் இல்லை. இரண்டு வருடங்களின் பின்னர், “டௌர்ணாய்” மறைமாவட்ட ஆயரான (Bishop of Tournai) “புனிதர் எலூதெரியஸ்” (Saint Eleutherius) அவர்களின் மரண வேளையில் ஆயர் பொறுப்பினை ஏற்பதற்காக மேடர்டஸ் அங்கே வரவழைக்கப்பட்டார். வேறு வழியின்றி “டௌர்ணாய்” மறைமாவட்ட ஆயர் பதவியையும் ஏற்றுக்கொண்ட மேடர்டஸ், இரண்டு மறைமாவட்டங்களுக்கு ஆயராக பணியாற்றினார். கி.பி. 1146ம் ஆண்டு வரை ஒன்றாகவே இருந்த “நோயொன்” மற்றும் “டௌர்ணாய்” (Noyon and Tournai) ஆகிய இரு மறைமாவட்டங்களும் அதன்பின்னர் பிரிந்தன.

“நோயொன்” நகரில் 525ம் ஆண்டு, ஜூன் மாதம், 8ம் நாளன்று, மரித்த ஆயர் மேடர்டஸ், அவரது காலத்தில் மிகவும் போற்றப்பட்ட ஆயர் ஆவார். முதலில் ஃபிரான்ஸ் நாட்டிலும், அதன் பின்னர் “கொலோனிலும்” (Cologne), மேற்கு ஜெர்மனியிலும் (western Germany) இவரது புகழ் பரவியிருந்தது. பிள்ளைப்பேறு வேண்டியும், மழை வேண்டியும், சிறை வாசம் மற்றும் மோசமான வானிலைக்கெதிராகவும் இவர் அழைக்கப்பட்டார். திராட்சைத் தோட்டங்கள், குடிபானங்கள், கைதிகள், விவசாயிகள் மற்றும் மன நோயாளிகள் ஆகியோரின் பாதுகாவலராகவும் இவர் அழைக்கப்படுகிறார்.

No comments:

Post a Comment