புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

12 February 2020

ஃபெப்ரவரி 11 புனிதர் முதலாம் பாஸ்கால் St. Paschal

† இன்றைய புனிதர் †
(ஃபெப்ரவரி 11)

✠ புனிதர் முதலாம் பாஸ்கால் ✠
(St. Paschal I)
98ம் திருத்தந்தை:
(98th Pope)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

பிறப்பு: கி.பி. 775
ரோம், திருத்தந்தை மாநிலம்
(Rome, Papal States)

இறப்பு: ஃபெப்ரவரி 11, 824
ரோம், திருத்தந்தையர் மாநிலங்கள்
(Rome, Papal States)

நினைவுத் திருவிழா: ஃபெப்ரவரி 11

புனிதர் முதலாம் பாஸ்கால், கி.பி. 817ம் ஆண்டு, ஜனவரி மாதம், 25ம் நாள் முதல், கி.பி. 824ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 11ம் நாள்வரை, கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக இருந்த இவர், கத்தோலிக்க திருச்சபையின் 98ம் திருத்தந்தை ஆவார். பாஸ்கால் என்னும் பெயர் எபிரேயம், கிரேக்கம், இலத்தீன். ஆகிய மொழிகளில் "உயிர்த்தெழுதல் சார்ந்த" என்று பொருள்படும்.

ஆரம்ப வாழ்க்கை:
“பாஸ்கால் டேய் மஸ்ஸிமி” (Pasquale dei Massimi) எனும் இயற்பெயர் கொண்ட பாஸ்கால், பிறப்பினால் ரோம் நகரைச் சார்ந்தவர். அவருடைய தந்தை பெயர் “போனோசஸ்” (Bonosus). தாயார் "எபிஸ்கோபா தியோடரா" (Episcopa Theodora) ஆவார். இளமைப் பருவத்திலேயே அவர் ரோம குருகுலத்தில் சேர்ந்தார். இலாத்தரன் அரண்மனையில் இருந்த கல்விக்கூடத்தில் திருப்பணியிலும் விவிலியப் படிப்பிலும் தேர்ச்சி பெற்றார். துணைத் திருத்தொண்டராக துறவு வாழ்க்கையை ஆரம்பித்த இவர், கத்தோலிக்க குருவாகவும், திருத்தந்தை மூன்றாம் லியோ (Pope Leo III) காலத்தில் "புனித ஸ்டீஃபன் துறவு மடத்தின்" (Monastery of St. Stephen of the Abyssinians) மடாதிபதியாகவும் பணியாற்றினார். அப்போது ரோமுக்கு திருப்பயணமாக வந்த மக்களுக்கு அவர் பணிபுரிந்தார். திருத்தந்தை “மூன்றாம் லியோ” (Pope Leo III) இவரை கர்தினாலாக (Cardinal of Santa Prassede) உயர்த்தினார்.

திருத்தந்தையாக நியமனம்:
திருத்தந்தை நான்காம் ஸ்தேவான் (Stephen IV) காலமான (ஜனவரி 24, 817) உடனேயே பாஸ்கால் திருத்தந்தையாக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மறுநாள் (கி.பி. 817 ஜனவரி 25) அவர் ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்; திருத்தந்தையாகப் பதவி ஏற்றார்.

பேரரசரோடு உறவு:
பேரரசர் லூயிஸுடன் (Emperor Louis the Pious) தமக்கு நெருங்கிய உறவு உண்டு என்பதைக் காட்டும் வகையில் திருத்தந்தை பாஸ்கால் பல தூதுவர்களை அனுப்பினார். பேரரசர் லூயிஸும் கி.பி. 817ல் "லூயிஸ் ஒப்பந்தம்" என்னும் ஆவணத்தை எழுதி, திருத்தந்தைக்கு அனுப்பி, திருத்தந்தை தம் ஆட்சிப்பீடத்தை முறையாக ஏற்றுக்கொண்டார் என்று அங்கீகாரம் வழங்கினார். அந்த ஆவணம் இன்றும் உள்ளது.

லூயிஸ் மகன் “லோத்தேர்” (Lothair) திருமணம் செய்துகொண்டபோது, திருத்தந்தை தூதுவர்கள் வழியாக அவருக்குப் பரிசுகள் அனுப்பினார். கி.பி. 823ம் ஆண்டு வசந்த காலத்தில் “முதலாம் லோத்தேர்” (Lothair I) ரோமுக்குச் சென்றார். அங்கு ஏப்ரல் மாதம், 5ம் நாள் திருத்தந்தை பாஸ்கால், முதலாம் லோத்தேரை இத்தாலியின் அரசனாக அறிவித்து, ஆடம்பரமாக அவருக்கு முடிசூட்டினார்.

சுருப வணக்கம் முறையானது என்னும் போதனை:
பாஸ்காலின் ஆட்சி காலத்தில், ரோம் நகரத்தில் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவியது. “பைசன்டைன் பேரரசில்” (Byzantine Empire) சொரூப வணக்கத்தை எதிர்ப்போரை எதிர்த்ததன் காரணத்தாலும், “மொசைக் கலைஞர்களை” (Mosaic artists) ரோம் வரவழைத்து தேவாலயங்களை அலங்கரிக்க ஏற்பாடு செய்தனர். இதனை அறிந்த ““பைசன்டைன் பேரரசன் இரண்டாம் மைக்கேல் (Byzantine Emperor Michael II), இவற்றை நிறுத்த முயற்சிக்குமாறு ஃப்ரான்கிஷ் மன்னன் லூயிசுக்கு (Frankish King Louis the Pious) கடிதம் எழுதினான்.

இதன் காரணத்தால், துன்புறுத்தப்பட்ட துறவியர் நாடுகடத்தப்பட்டனர். லியோவால் சட்டமுறைக்கு எதிராக காண்ஸ்டாண்டிநோபுளின் மறை முதுவராக நியமிக்கப்பட்ட தியோடோசியுஸ் என்பவர் அரசனின் ஆணைக்குப் பணிந்தார். ஆனால் தியொடோர் என்னும் தலைமைத் துறவி (Theodore of Studium) சுருப வணக்கம் முறையானதே என்று வலியுறுத்திக் கூறினார்.

இதை விரும்பாத மன்னன் லியோ தியொடோரை நாடு கடத்தி கொடுமைப்படுத்தினார். அதே சமயத்தில் தியோடோசியுசும் திருத்தந்தைக்குத் தூதுவர்களை அனுப்பினார். ஆனால் திருத்தந்தை அவருடைய போக்கினை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, தியொடோருக்கு ஆதரவு தெரிவித்ததோடு, அவர் துன்பங்களுக்கு நடுவிலும் உண்மையான கொள்கையைக் கடைப்பிடிப்பதில் உறுதியாக இருக்கவேண்டும் என்று ஊக்குவித்தார்.

நாடுகடத்தப்பட்ட துறவியருக்கு ஆதரவு:
சுருப வணக்கம் முறையானதே என்று கூறிய பல துறவியரை மன்னன் லியோ கிரேக்க நாட்டிலிருந்து துரத்திவிட்டார். அத்துறவியரைத் திருத்தந்தை பாஸ்கால் மனமுவந்து வரவேற்றார். ரோமில் புதிதாக நிறுவப்பட்ட புனித பிராக்சேதிஸ், புனித செசிலியா, புனிதர்கள் செர்ஜியுஸ் மற்று பாக்குஸ் ஆகிய துறவியர் இல்லங்களில் அத்துறவியரை உறுப்பினர்களாக ஏற்றுக் கொண்டார்.

ஆலயங்களைச் சீரமைத்தல்:
திருத்தந்தை முதலாம் பாஸ்கால் பல ஆலயங்களைப் புதுப்பித்துச் சீரமைத்தார். எடுத்துக்காட்டாக, “தூய பிராஸ்செட்” (Santa Prassede), “டிரஸ்டேவரிலுள்ள தூய செசிலியா” (Santa Cecilia in Trastevere), “டொமினிக்காவிலுள்ள தூய மரியா” (Santa Maria in Domnica) ஆகிய ஆலயங்களை முற்றிலும் புதுப்பித்துக் கட்டியதைக் குறிப்பிடலாம்.

மரணம்:
ஏழாண்டு திருஆட்சிக்கு பின் கி.பி. 824ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 11ம் நாள், திருத்தந்தை முதலாம் பாஸ்கால் காலமானார். அவருடைய உடல் புனித பிராக்சேதிஸ் ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

திருத்தந்தை முதலாம் பாஸ்காலின் நினைவுத் திருவிழா, ஃபெப்ரவரி மாதம், 11ம் நாள் கொண்டாடப்படுகிறது.

துறவி ஹீம்பலீனா Humbelina OSB 2020-02-12

இன்றைய புனிதர்
2020-02-12
துறவி ஹீம்பலீனா Humbelina OSB

பிறப்பு
11 ஆம் நூற்றாண்டு,
பிரான்சு
இறப்பு
1130,
ஜூலி-சுர்-சார்சே Jully-sur-Sarce

இவர் கிளேர்வாக்ஸ் Clairvaux நகரைச் சேர்ந்த்த புனித பெர்னார்டு Bernhard அவர்களின் சகோதரி. இவர் தன் இளம் வயதிலேயே தன் குடும்பத்தை விட்டு வெளியேறி, துறவற மடத்தில் வாழ்ந்து வந்தார். பின்னர் தன்னை முழுவதுமாக இறைவனுக்கு அர்ப்பணித்து துறவியானார். மேலும் இவரைப்பற்றிய வரலாறு, அதிகம் கொடுக்கப்படவில்லை. இவர் தனது இறுதிவரை துறவியாகவே வாழ்ந்து இறந்தார் என்று சொல்லப்படுகின்றது. இவர் புனித பெனடிக்ட் துறவற சபையில் தலைமை பொறுப்பில் ஈடுபட்டார் என்றும் கூறப்படுகின்றது. இவரது கல்லறையின் மேல் சிறிய கெபி ஒன்று கட்டப்பட்டு வணக்கம் செலுத்தப்படுகின்றது. இவர் துறவிகளின் முன்மாதிரி என்று சொல்லப்பட்டார்


செபம்:
அன்புத் தந்தையே! வாழ்வது நானல்ல, என்னில் வாழ்வது கிறிஸ்துவே என்று தன்னை இறுதிவரை உமக்காக அர்ப்பணித்து வாழ்ந்த புனித ஹிம்பலீனாவை எமக்குக் கொடையாகக் கொடுத்தமைக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். அவரின் வேண்டுதலால் துறவிகள் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டான வாழ்வை வாழ உதவி செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

லூடானுஸ்
பிறப்பு : 12 ஆம் நூற்றாண்டு, ஸ்காட்லாந்து (?)
இறப்பு : 12 பிப்ரவரி 1202, எல்சாஸ் Elsaß, பிரான்சு

புனித பெனடிக்ட் பிஸ்கோப் ஜனவரி - 12

ஜனவரி - 12
புனித பெனடிக்ட் பிஸ்கோப்

ஓவியர்களின் பாதுகாவலர்

மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டு கொண்டன (லூக்.2:31)

       திருப்பயணங்களின் வழியாக திருச்சபையின் தவிர்க்க முடியாத நபராக மாறியிருக்கிறவர் பெனடிக்ட். 628ஆம் ஆண்டு, வடக்கு இங்கிலாந்தில் உள்ள நார்த்தம்பிரியா  என்னும் இடத்தில் உயர்குடிமகனாக உதித்தவர். இவரின் இயற்பெயர்  பிஸ்கோப் பாடூசிங். அதிகாரத் தோரணையுடன் வலம் வந்தவர் இவர். இளமையில் அரசர் ஓஸ்வே-யின் அரண்மனையில் அமைச்சராக அலுவலாற்றினார். இதற்காகத் தரப்பட்ட பெருதோட்டத்தில் மரியாதையுடனும், பெரும்புகழுடனும் வாழ்ந்தார்.
இந்நிலையில், எருசலேம் நோக்கி தமது முதலாவது திருப்பயணத்தைத் தொடங்கினார். எருசலேமில் இருந்து திரும்பி வந்தவுடன் தான் எருசலேமில் கண்ட வழிபாட்டு முறைகளையும், அவைகளைக் கொண்டாடிய முறைகளையும் நினைத்தபடியே இருந்தார். வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் அதனை நடைமுறைப்படுத்தவும் செய்தார். அரசர் ஓஸ்வே-யிடம்  பேசினார். அவரும் தமது ஐரிஸ் பேரரசு முழுவதும் உரோமை வழிபாட்டு முறைமைகளை நடைமுறைப்படுத்த அரசாணை பிறப்பித்தார்.

           இரண்டாவது திருப்பயணம் மேற்கொண்ட பெனடிக்ட் திரும்பி வரும் வழியில் 666இல், பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள  லெரின்ஸ் தீவில் இறங்கினார். இங்குள்ள துறவு மடத்தில்  தனது பெயரை பெனடிக்ட் என்று மாற்றிக்கொண்டார்.துறவு  மடத்தைப் பற்றியும், உரோமை வழிபாட்டு முறைகள் பற்றியும் மேலதிக விபரங்களைச்  சேகரிக்க விரும்பினார். எனவே இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும்  உரோமை சென்றார். அப்போது, திருத்தந்தை விட்டாலியன், தார்சுஸ் பேராயர் தியோடோருக்கு உறுதுணையாக இருக்க அட்ரியானுடன் இங்கிலாந்துக்கு அனுப்பினார். தம்மிடம் வந்துசேர்ந்த பெனடிக்ட்டை 669இல் புனித பேதுரு மற்றும் பவுல் துறவுமடத்திற்கு மடாதிபராக தியோடோர் நியமித்தார்.
இரண்டு ஆண்டுகளில் அப்பொறுப்பை  உதறிவிட்டு மீண்டும் எருசலேமிற்கு திருப்பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்திலும் இதன் பிறகு மேற்கொண்ட இரண்டு பயணத்திற்குப்  பிறகும் திரும்பி வரும்போது, எண்ணிலடங்கா புனிதப் பொருள்கள், புகழ்பெற்ற புத்தகங்கள், வரலாற்று ஆவணங்கள் மற்றும் விலைமதிக்க முடியாத  ஓவியங்களுடன் வந்தார். திருச்சபையின் பொக்கிசங்களால்  இங்கிலாந்துக்குப் பெருமை சேர்த்தார்.

 புதிதாக துறவு மடம் ஆரம்பிக்க ஆவல் கொண்ட பெனடிக்ட் அரசர் ஓஸ்வே-க்குப் பிறகு அரியணைக்கு வந்த அரசர் இக்ஃபிரித்திடம் அனுமதி வேண்டினார். அரசரின் அனுமதியுடன் தமது முதல் துறவு மடத்தைப் புனித பேதுருவின் பெயரில் 674இல் வேர்மத் என்னும் இடத்தில் ஆரம்பித்தார். பிறகு 681ஆம் ஆண்டு இதே இடத்திலும் மற்றும் ஜாரோ-விலும் புனித பவுலின் பெயரில் இரண்டு துறவுமடங்களைத்  தொடங்கினார்.

           தமது துறவு மடத்தில் பல புதிய முயற்சிகளை மேற்கொண்ட பெனடிக்ட் புனித பேதுரு திருப்பேராலயத்தின்  தலைமைப் பாடகரும் மடாதிபதியுமான  யோவான் என்பவரை அழைத்து வந்து தமது மடத்தில் பாடல்கள் கற்றுக்கொடுக்கச் செய்தார். முதன் முதலில் இங்கிலாந்தில் அழகுமிளிரும் கற்களால் உரோமை அமைப்பில் ஆலயம் எழுப்பியதும், வண்ண வேலைப்பாடுடைய  கண்ணாடிகளால் ஜன்னல்கள் அமைத்ததுவும்  இவர்தான்.
தமது திருப்பயணங்களால் திருச்சபையின் பாரம்பரியங்களையும், வழிபாடுகளையும் நற்செய்தியாகப்  பரப்பிய பெனடிக்ட், வேர்மத்தில் உள்ள தமது துறவு மடத்தில் 690, ஜனவரி, 12ஆம் நாளில் இறந்தார்.

 மகிழ்ச்சிச் சுற்றுப்பயணமாக, வருடாந்திரக் கடமையாக இல்லாது 
திருப்பயணங்கள் அமையுமானால் திருத்தலங்களின் தூய்மையும்,
 தூயகமும் இறைவனின் இல்லமாவதைக்  காணமுடியும்

11 February 2020

தூய லூர்தன்னை விழா (பிப்ரவரி 11)

தூய லூர்தன்னை விழா (பிப்ரவரி 11)

வரலாற்றுப் பின்னணி

1850 ஆம் ஆண்டு வரை பிரான்சில் இருக்கும் லூர்து நகர் ஒரு சாதாரண நகர்தான். அங்கே வாழ்ந்த மக்கள் அனைவரும் ஏழை எளியவர்கள்தான். லூர்தன்னை காட்சி கொடுத்த பெர்னதத் என்ற சிறுமியும்கூட ஒரு சாதாரண ஆடுமேய்க்கும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணிதான். அப்படிப்பட்ட ஒரு சாதாரண 14 வயது மதிக்கத்தக்க சிறுமிக்குத்தான் 1858 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதியிலிருந்து ஜூலை 16 ஆம் தேதி வரை பிரனீஸ் என்ற மலையில் உள்ள மசபெல் குகையில் பதினெட்டு முறை மரியன்னை காட்சி கொடுத்தார்.

முதல் மூன்று காட்களில் மரியன்னை, பெர்னதத் என்ற அந்த சிறுமியிடம் எதுவும் பேசவில்லை. வானத்திலிருந்து ஒளிமயமான பெண் ஒருத்தி வெள்ளைநிற உடையில் நீலநிற இடைக்கச்சையுடன் அந்த சிறுமிக்குக் காட்சி அளித்தார். இக்காட்சியானது பெர்னதத்தோடு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுமிகளுக்குக் கிடைக்கவில்லை, அவர்கள் ஏதோ ஓர் ஒளி தோன்றி மறைவதைத் தான் பார்த்தார்கள். பெர்னதத்தான் அந்த அற்புதக் காட்சியைக் கண்டாள்.

ஒன்பதாம் முறையாக மரியன்னை பெர்னதத்துக்கு காட்சி கொடுக்கும்போது, அவளிடம் மசபெல் குகைக்கு முன்பாக ஓரிடத்தில் கைகளை வைத்துத் தோண்டுமாறு கேட்டுக்கொண்டார். பெர்னதத்தும் அங்கே தோண்டியபோது தண்ணீர் மெதுவாக வந்தது. ஆனால் அது தெளிவில்லாமல் இருந்தது. அடுத்த இருபத்து நான்கு நேரத்திற்குள் அத்தண்ணீர் வற்றாத ஜீவ நதியாகப் பிறப்பெடுத்தது. ஏறக்குறைய 160 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த ஜீவ ஊற்று வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. 13 ஆம் முறையாக மரியன்னை பெர்னத்துக்குத் தோன்றியபோது, அவ்விடத்தில் தனக்கு ஓர் ஆலயம் கட்டுமாறு கேட்டுக்கொண்டார். உடனே சிறுமி தன்னுடைய பங்குத் தந்தையாம் பெயர்மேல் (Peyermale) என்பவரைச் சந்தித்து, இச்செய்தியைச் சொன்னார். தொடக்கத்தில் சிறுமி இச்செய்தியைச் சொன்னபோது, அவர் நம்பவில்லை. பின்னர் அதனை நம்பினார்.

பதினாறாம் முறையாக அதாவது மார்ச் 25 ஆம் நாள் (கபிரியேல் அதிதூதர் மரியாளுக்கு மங்கள வார்த்தை சொன்னதினம்), மரியன்னை காட்சி கொடுத்தபோது அவ்விடத்தில் ஊரே கூடியிருந்தது. அப்போது அங்கே கூடியிருந்தவர்கள் பெர்னதத்திடம், அவருடைய பெயர் என்ன என்று கேட்கச் சொன்னார்கள். அச்சிறுமி அப்படியே கேட்க, “நாமே அமல உற்பவம்” என்று பதிலுரைத்தார். உடனே மக்கள் அனைவரும் மகிழ்ந்து ஆரவாரம் செய்தார்கள். ஏனென்றால் அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் அதாவது 1854 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் நாள்தான், திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் ‘மரியாள் அமல உற்பவி’ என்ற விசுவாசப் பிரகடனத்தை அறிவித்திருந்தார். இப்போது மரியாளே தன்னை ‘நாமே அமல உற்பவம்’ என்று சொல்லியதால், திருச்சபையின் விசுவாச சத்தியத்தை மரியாளின் கூற்று உறுதி செய்துவிட்டது என்பதை நினைத்து அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

மரியன்னை பெர்னதத் என்ற அந்த சிறுமிக்கு அதன்பிறகும் காட்சியளித்தார். அப்போதெல்லாம் மரியாள் அவளிடம், “குருக்களுக்காக ஜெபியுங்கள், பாவத்திற்கு பொருத்தனைகள் செய்யுங்கள்” என்று கேட்டுக்கொண்டார். மேலும் பெர்னதத்திடம், “நான் உனக்குக் உனக்குக் காட்சி தந்ததனால், உனக்குத் துன்பங்கள் இல்லாமல் இருக்கப்போவதில்லை. இந்த மண்ணுலக வாழ்வில் உனக்குத் துன்பங்கள் உண்டு. ஆனால் விண்ணுலகில் உனக்கு பேரானந்தம் உண்டு” என்று சொல்வார். பெர்னதத் என்ற அந்தச் சிறுமி, அருட்சகோதரியாக மாறி, இறக்கும்வரைக்கும் அவர் துன்பங்களைச் சந்தித்தார் என்று அவருடைய வாழ்க்கை வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம் .

இன்றைக்கு லூர்து நகரில் எத்தனையோ புதுமைகள், அதிசயங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. லூயிஸ் பிரிட்டோ என்பவருக்கு கண்பார்வை கிடைத்திருக்கிறது, அதே போன்று மூன்றாம் நெப்போலியனின் மகனுக்கு நோயிலிருந்து நலம் கிடைத்திருக்கிறது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அன்னையின் அருளால் லூர்து நகரில் நடக்கும் அதிசயங்கள் ஏராளம். அவற்றைச் சொல்ல வார்த்தைகள் இல்லை.


Our Lady of LourdesFebruary 11

Our Lady of Lourdes

February 11—Optional Memorial
Liturgical Color: White (Purple if Lenten Weekday)
Patroness of bodily ills

Mary appears when and where she is needed and speaks our language

In 1858, 14-year-old Bernadette Soubirous told her friends that a beautiful young lady was appearing to her in a rock formation on the outskirts of her small town of Lourdes. A friend asked Bernadette to do her a favor—to take her rosary along the next time she knelt before the beautiful young lady. Bernadette obliged. Later, Bernadette told her friend how the lady had reacted: the lady had noticed that Bernadette was not holding her own rosary, said that she was not there to make relics, and told Bernadette to return next time with her own rosary, not someone else’s.

Bernadette’s unvarnished recounting of the lady’s reaction was blunt, but reasonable and, more importantly, authentic. This plainspokenness fit a pattern. Over and over again, whenever little, uneducated Bernadette was asked about the beautiful young lady she saw in the grotto, her answers never changed and also included startling but authentic details. Bernadette reported that when she and the lady prayed the rosary together, the lady only said the Our Father and the Glory Be. Mary didn’t pray the Hail Mary. How could she pray to herself? Would she say “Hail Me?” Bernadette reported that the lady spoke to her in the Lourdes’ dialect which Bernadette herself grew up with, slightly different from standard French. Bernadette stated that a golden rose rested on each of the lady’s feet. Of course! And when Bernadette respectfully asked the lady her name, she didn’t understand the big words in the response: “I am the Immaculate Conception.”

In addition to the miraculous cures associated with the healing waters of Lourdes, the very character of Bernadette, as well as the tone and content of her accounts, removed all doubt that the beautiful young lady she saw was indeed the Virgin Mary. Our Lady of Lourdes is perhaps the most powerful and prolific physical healer in the history of the Church after Christ himself. Through her intercession, and through the waters that flow in her magnificent shrine, many thousands have been cured of their infirmities, as medical records prove beyond any doubt. Holy Mary has appeared at various times and in various places, but mostly to the simple and mostly in the country. She loves the faith of the simple, and speaks to them in simple language. In this, Mary reflects the words of her Son Jesus. He speaks plainly. His message is clear. And Mary’s simple words always point to the simple words of her own Son.

God is like the sun whose fiery brilliance scorches the eyes of all who look right at Him. Get too close and you’ll be burned. Like the sun, the Creator of the world can be distant, mysterious, and intimidating. But Mary is like the moon, bathed in a soft, pleasant glow. She’s close to us, and easy on the eyes. The sun’s heat and light may make life possible, but the sun itself is dangerous and remote. But Mary can be approached by man. And like the moon, she doesn’t produce her own light, but just reflects in a softer tone the powerful rays of the enormous star whose light generates life itself.

Our Lady of Lourdes, give physical healing to all who invoke your intercession. The saving waters at your shrine have healed thousands of pilgrims. May all the prayers and supplications directed to you be immersed in the waters of your holy baths, so that what is asked may be granted through your intercession and according to God’s will.

10 February 2020

தூய ஸ்கொலாஸ்டிகா (பிப்ரவரி 10)

இன்றைய புனிதர் : 
(10-02-2020) 

தூய ஸ்கொலாஸ்டிகா (பிப்ரவரி 10)

“நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்” - இயேசு

வாழ்க்கை வரலாறு

ஸ்கொலாஸ்டிகா, கி.பி. 480 ஆம் ஆண்டு இத்தாலியில் பிறந்தார். இவருடைய உடன்பிறந்த சகோதார் தூய பெனடிக் (ஆசிர்வாதப்பர்) என்பவர் ஆவார். ஸ்கொலாஸ்டிகாவும் ஆசிர்வாதப்பரும் இரட்டைக் குழந்தைகள் என்பது இன்னொரு முக்கியமான விஷயம். ஸ்கொலாஸ்டிகாவின் குடும்பம் மிக வசதியான குடும்பம். பெற்றோரின் இறப்புக்குப் பிறகு, எல்லாவற்றையும் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, மொன்டே காசினோ என்ற இடத்தில் இருந்த ஒரு துறவற மடத்தில் துறவியாக சேர்ந்தார். இவருடைய சகோதரர் ஆசிர்வாதப்பரோ உரோமை நகருக்குச் சென்று மேற்படிப்பைக் கற்றுக்கொண்டு சுபியாக்கோவு என்னும் இடத்தில் துறவற சபையை நிறுவினார். இது ஸ்கொலாஸ்டிகா இருந்த துறவற மடத்திற்கு வெகு அருகில் இருந்தது.

ஸ்கொலாஸ்டிகாவும் ஆசிர்வாதிப்பரும் ஒருவர் மற்றவர் மீதான சகோதர பாசத்தில் மிகச் சிறப்பாக வளர்ந்து வந்தார்கள். அவர்கள் இருவரும் ஒவ்வொரு ஆண்டும் தவக்காலத்திற்கு முன்பாக ஒரு நாள் கூடி, அன்றைய நாள் முழுவதும் ஆன்மீகக் காரியங்களைக் குறித்தும் சபையின் செயல்பாடுகள் குறித்தும் மணிக்கணக்காகப் பேசிவிட்டு, அதன்பிறகு தங்களுடைய துறவற மடத்திற்குப் போய்விடுவார்கள்.

இப்படித்தான் ஒரு முறை அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது மாலை நேரம், அதாவது அவர்கள் இருவரும் பிரிந்துபோகவேண்டிய நேரம் வந்துவிட்டது. ஸ்கொலாஸ்டிகாவுக்கு தன்னுடைய சகோதரனை விட்டுப் பிரிய மனமில்லை. ஏனென்றால், அவருடைய இறப்பு நெருங்கிய வந்துவிட்டது என்பதை உணர்ந்தார். அதனால் அவர் தன்னுடைய சகோதரனோடு இன்னும் சிறுதுநேரம் பேசவேண்டும் என்று நினைத்தார். ஆனால், அவரோ நேரம் கடந்து பேசுவது சபை ஒழுக்கத்திற்கு எதிரானது என்று சொன்னார். ஸ்கொலாஸ்டிகாவோ தன்னுடைய சகோதரோடு எப்படியாவது இருக்கவேண்டும் என்று நினைத்தார். அதனால், அவர் இறைவனிடம், “என்னுடைய சகோதரன் இந்த நாள் முழுவதும் என்னோடு இருக்கவேண்டும். அதற்கு நீர்தான் வழிவகை செய்யவேண்டும்” என்று ஜெபித்தார்.

அவர் இவ்வாறு ஜெபித்த சில நிமிடங்களில் இறைவன் இடியுடன் கூடிய மழை பெய்யச் செய்தார். அதைக் கண்ட ஆசிர்வாதப்பர் அவரிடம், “என்ன காரியம் செய்தாய்?, எதற்காக இப்போது மழைக்காக ஜெபித்தாய்?. நாம் இருவரும் இப்படி நேரம் கடந்து இங்கே இருப்பது நம்முடைய சபை ஒழுக்கத்திற்கு எதிரானது என்பது உனக்குத் தெரியாதா?” என்றார். அதற்கு ஸ்கொலாஸ்டிகா அவரிடம், “என்னுடைய இறப்பு நெருங்கி வருவதை நான் உணர்ந்தேன். அதனால் நீ என்னோடு இருக்கவேண்டும் என்று நினைத்தேன். இதை நான் உன்னிடத்தில் சொன்னபோது, நீ அதற்குச் செவிமடுக்கவில்லை, ஆனால், இறைவன் என்னுடைய குரலுக்கு செவி மடுத்தார்” என்றார். அவர் இவ்வாறு சொன்னதைக் கேட்டபின்பு ஆசிர்வாதப்பரால் ஒன்றும் பேசமுடியவில்லை. அதன்பிறகு அந்த நாள் இரவு முழுவதும் ஆன்மீகக் காரியங்களைக் குறித்துப் பேசினார்கள். பொழுது விடிந்ததும் இருவரும் தங்களுடைய துறவற மடத்திற்குச் திரும்பிச் சென்றார்கள்.

இதற்குப் பின் ஒருசில நாட்கள் கழித்து ஆசிர்வாதப்பர் தன்னுடைய துறவற மடத்தில் இருந்த ஆலயத்தில் ஜெபித்துக்கொண்டிருந்தபோது ஸ்கொலாஸ்டிகாவின் ஆன்மா புறா வடிவில் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதை உணர்ந்தார். எனவே, அவர் தன்னுடைய சகோதரி இறந்துவிட்டார் என்பதை உணர்ந்து, அவர் இருந்த துறவற மடத்திற்குச் சென்று, அவரை நல்லடக்கம் செய்தார். ஸ்கொலாஸ்டிகா இறந்த ஆண்டு 543 ஆகும்.


09 February 2020

பிப்ரவரி- 09 புனித மிக்வெல் கோர்டேரோ

பிப்ரவரி- 09

புனித மிக்வெல் கோர்டேரோ
என் அருள் உனக்குப் போதும்:வலுவின்மையில் தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும் (2 கோரி 12:9) 
ஈக்குவேடார் நாட்டின் முதல் புனிதரான மிக்வெல், குவன்கா எனும் இடத்தில் 1854, நவம்பர் ஏழாம் தேதி பிறந்தார். பிரான்சிஸ்கோ என்பது இவரின் இயற்பெயராகும். சமூகத்தில் தலைநிமிர்ந்து நின்ற பெற்றோருக்குப் பிறந்த இவர் ஐந்து வயது வரை நிற்க முடியாதபடி ஊனமாக இருந்தார். மெல்ல மெல்ல கால் தாங்கி நடக்க ஆரம்பித்தார் .புனித தெலசாலின்,கிறிஸ்தவ பள்ளிகளின் சகோதரர்கள் சபையினர் நடத்திய பள்ளியில் 1864 ஆம் ஆண்டு சேர்ந்து படிக்க ஆரம்பித்தார் . இச்சபையினர் அப்போதுதான் ஈக்குவேடார் நாட்டிற்கு வந்து பணியைத் தொடங்கி இருந்தார்கள்.
படிப்பில் கவனம் செலுத்தியதுடன் இறைவனின் திருவுளம் அறிந்து வாழ்ந்தார் .தமது 13-ஆம் வயதில், குருத்துவப் பயிற்சி பெற 1868, மார்ச் 24-ஆம் தேதி கிறிஸ்தவ பள்ளிகளின் சகோதரர்கள் சபையில் சேர்ந்தார். சபையில் சேர்ந்த பிறகு தமது பெயரை மிக்வெல் என்று மாற்றிக்கொண்டார். ஆசிரியப் பணியைத் தமது பணியின் இலக்காகக் கொண்டு பயிற்சி பெற்றார்.
பயிற்சி முடிந்து, எல் செபோலார் என்னும் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். தமது சிறப்பான அனுபவங்களுடன் அப்பள்ளியில் 32 ஆண்டுகள் சேவையாற்றினார். இனிமையாகப் பழகும் குணத்தால் எல்லாருக்கும் நண்பரானார். "ஆண்டவருக்காக எப்போதும் மகிழ்ச்சியுடன் வேலை செய்யுங்கள் " என்று கூறி எல்லாரையும் ஊக்கப்படுத்தினார் .தமது 17 ஆம் வயதிலேயே மாணவர்களுக்காகத் தாமே பாடப் புத்தகங்களை எழுதிக் தயார் செய்தார் .இவர் எழுதிய சில பாடங்களை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு நாடு முழுமைக்கும் பயன்படுத்தியது .பாடம் நடத்தும் முறை, விளையாட்டுகள், நாடகங்கள், தியான உரைகள் மற்றும் எழுச்சியூட்டும் எழுத்துக்களால், எல்லாரையும் ஈர்த்தார்.

மறைக்கல்வி மாணவர்களுக்குப் பாடம் நடத்துவதில் மிக்வெல் அதிக ஆனந்தம் அடைந்தார் .அதிலும் முதல் முதலாக இறை உணவு பெற இருக்கும் மாணவ, மாணவிகளைப் பயிற்றுவிக்கும்போது. தன்னையே மறந்து இறைவனின் பிரசன்னத்திற்கு வழிநடத்துவார். இவருடைய காலத்தில் திருச்சபை மற்றும் குருக்களுக்கு எதிராகச் சிலர் கிளர்ந்தெழுந்து கொலைசெய்தும், ஆலயங்களைத் தீக்கிரையாக்கியும் கொடூர தாண்டவம் ஆடினார். அப்போது அவர்களின் கையிலிருந்து நற்கருணையைக் காப்பாற்ற அதனை எடுத்துக்கொண்டு ஊனமான காலுடன் எட்டு கிலோமீட்டர் நடந்தே சென்றார்.
நவதுறவிகளுக்குப் பயிற்சியாளராக 1896- 1905 வரை இருந்த மிக்வெல்,1907-ஆம் ஆண்டு ஐரோப்பாவிற்கு அனுப்பப்பட்டார் .அங்கே ஏற்கனவே இச்சபையினர் பணி செய்துகொண்டு இருந்தார்கள் . ஜப்பான் சென்று சபையின் பயன்பாட்டிற்குத் தேவையான எழுத்துக் கருவூலங்களை பிரெஞ்சு மொழியிலிருந்து ஸ்பானிய மொழிக்கு மொழிமாற்றம் செய்தார்.
ஸ்பெயினில் பார்சிலோனா அருகில் இருந்த பள்ளிக்கு அனுப்பப்பட்ட மிக்வெல் தொடர்ந்த வேலைப் பளுவால் உடல்நிலை பாதிக்கப்பட்டார். இந்நிலையில் நிமோனியா காய்ச்சலும் சேர்ந்துகொள்ள உடல் நிலை மேலும் மோசமானது. கடைசியில் 1910, பிப்ரவரி ஒன்பதாம் தேதி இறைவனடி சேர்ந்தார் .திருத்தந்தை ஆறாம் பவுல் 1977, அக்டோபர் 30 அன்று அருளாளர் பட்டம் வழங்கினார் .திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் 1984,அக்டோபர் 21-இல் புனித நிலைக்கு இவரை உயர்த்தினார் .சமயம் சார்ந்து மட்டுமல்ல; ஈக்குவேடார் நாட்டின் அனைவருக்கும் முன்மாதிரியாக விளங்குகிறார் மிக்வெல்.
மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான வாய்ப்புகளையும், உரிமைகளையும் பெற்றுக்கொள்ள நாம் உழைக்கத் தயாரானால் குறையின்றி அவர்களுக்கு குதூகலிப்பார்கள்.

அருளாளர் அன்னி கேத்தரீன் எம்மெரிச் பெப்ருவரி 9

† இன்றைய புனிதர் †
(ஃபெப்ரவரி 9)

✠ அருளாளர் அன்னி கேத்தரீன் எம்மெரிச் ✠
(Blessed Anne Catherine Emmerich)

திருக்காட்சியாளர்/ கன்னியர்/ மாற்றுத்திறனாளி:
(Marian Visionary/ Virgin/ Physically challenged)

பிறப்பு: செப்டம்பர் 8, 1774
கோயெஸ்ஃபெல்ட், வெஸ்ட்ஃபாலியா, தூய ரோம பேரரசு
(Coesfeld, Westphalia, Holy Roman Empire)

இறப்பு: ஃபிப்ரவரி 9, 1824 (வயது 49)
டூல்மென், வெஸ்ட்ஃபாலியா, ஜெர்மனி கூட்டமைப்பு
(Dülmen, Westphalia, German Confederation)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முத்திபேறு பட்டம்: அக்டோபர் 3, 2004
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
(Pope John Paul II)

நினைவுத் திருநாள்: ஃபெப்ரவரி 9

அருளாளர் அன்னி கேத்தரீன் எம்மெரிச், ரோமன் கத்தோலிக்க “அகுஸ்தினிய துறவற சபையைச்" (Augustinian Canoness) சார்ந்தவர் ஆவார். இவர், ஜெர்மனியின் "மூன்ஸ்ட்டர்" மறை மாவட்டத்தைச் (Diocese of Münster) சேர்ந்தவர். எம்மெரிச், "ஃப்ளாம்ச்சென்" (Flamschen) எனப்படும் ஜெர்மனிய விவசாய சமூகத்து குடும்பமொன்றில் பிறந்தவர் ஆவார். தமது வாழ்க்கையின் இறுதி காலத்தை படுத்த படுக்கையாக கழித்த இவர், தமது 49 வயதில், தாம் அருட்கன்னியராக வாழ்ந்த "டுல்மேன்" (Dülmen) என்ற இடத்தில் மரித்தார்.

எம்மெரிச், ஆண்டவர் இயேசுவின் வாழ்க்கையையும், பாடுகளையும், திருக்காட்சியாகக் கண்டவர். இவருக்கு அர்ச்சிஷ்ட அன்னை கன்னி மரியாளின் தரிசனம் திருக்காட்சியாக கிடைத்ததால் பிரபலமும், புளகாங்கிதமும் அடைந்தார். இதனால், நகரின் பல பிரபலங்கள் இவரைக் காண ஆர்வமாயிருந்தனர். "க்ளேமேன்ஸ் ப்ரேன்ட்டனோ" (Clemens Brentano) எனும் பிரபல கவிஞர் இவரை மிக நீண்ட நேரம் பேட்டி கண்டு, இவரின் திருக்காட்சிகளின் அடிப்படையில் இரண்டு புத்தகங்களை எழுதினர். இப்புத்தகங்கள் இரண்டும் அந்நாளில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாயின.

வாழ்க்கை:
"அன்னா கேதரீனா" (Anna Katharina) என்ற இயற்பெயர் கொண்ட எம்மெரிச், ஏழை விவசாய பெற்றோரின் ஒன்பது குழந்தைகளின் ஒருவராவார். சிறு வயதிலிருந்தே வீட்டிலும் விவசாய பண்ணையிலும் பணி செய்ய வேண்டியிருந்தது. அவரது பள்ளி வாழ்க்கை மிகவும் சுருக்கமாக இருந்தாலும் அவர் மிகவும் சிறு வயதிலேயே செபிப்பதில் ஈர்க்கப்பட்டவராக இருந்தார்.

தமது பன்னிரண்டு வயதில் அருகாமையிலுள்ள பெரிய பண்ணையொன்றில் பணி செய்ய ஆரம்பித்தார். இங்கே மூன்று வருடங்கள் பணி செய்தார். அதன்பின்னர், ஆடை தயாரிக்கும் பணியை கற்றுக்கொண்ட எம்மெரிச், பல வருடங்கள் அந்த பணியையே செய்து வந்தார்.

எம்மெரிச் பல்வேறு பள்ளிகளில் சேர்வதற்கு விண்ணப்பித்தார். ஆனால், எதிர்ஜாமீனாக கொடுப்பதற்கு அவரிடம் பணமில்லாத காரணத்தால் அவர் எல்லா இடங்களிலும் நிராகரிக்கப்பட்டார். இறுதியில், “எளிய கிளாரா” (Poor Clares) எனப்படும் துறவற சபையினர் அவரை ஏற்றுக்கொள்வதாக கூறினர். ஆனாலும் அவரை "ஆர்கன்" எனும் இசைக்கருவியை வாசிக்க கற்றுக்கொண்டு வரச்சொன்னார்கள். எம்மெரிச் சங்கீதம் கற்பதற்காகவும், "ஆர்கன்" இசைக்கருவியை வாசிக்க கற்கவும் "ஸோன்ட்ஜென்" (Söntgen) எனும் சங்கீதம் வாசிப்பவரை அணுகினார். ஆனால், ஏழையான காரணத்தால் அவர் அதனை கற்க இயலவில்லை. "ஸோன்ட்ஜென்" (Söntgen) குடும்பத்தினர் அவரை வீட்டு வேலை செய்ய வலியுறுத்தினர். பின்னர், "ஸோன்ட்ஜென்" குடும்பத்தின் மகளான "கிளாரா" (Klara Söntgen) என்பவருடன் எம்மெரிச் பள்ளியில் சேர்ந்தார்.

ஆன்மீக வாழ்க்கை:
கி.பி. 1802ம் ஆண்டு, தமது இருபத்தெட்டு வயதில் எம்மெரிச் தமது சிநேகிதியான "கிளாராவுடன்" (Klara Söntgen) "டுல்மென்" (Dülmen) நகரிலுள்ள "அகுஸ்தீனிய துறவு சபையில்" (Augustinian nuns) இணைந்தார். அடுத்த வருடமே அவர் தமது சமய உறுதிமொழி எடுத்தார். துறவு மடத்தில், சபையின் விதிமுறைகளை கண்டிப்புடன் ஏற்று நடந்தார். அதே வேளை, அவர் அடிக்கடி நோய்வாய்ப்பட ஆரம்பித்தார். அதனால் ஏற்பட்ட வலி வேதனைகளை பெரும் துன்பங்களுடன் தாங்கிக்கொண்டார். அவ்வளவு வேதனைகளிலும் அவர் மடத்தின் நியதி மற்றும் விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றுவதில் வைராக்கியமாக இருந்தார். இவரது கண்டிப்புகளால் வெறுப்பு கொண்டிருந்த அருட்சகோதரியர்கூட இவரது வலி தாங்கும் வன்மை கண்டு வியந்தனர்.

கி.பி. 1812ம் ஆண்டு, "வெஸ்ட்ஃபாலியாவின்" அரசன் (King of Westphalia) "ஜெரோம் போனபார்ட்" (Jérôme Bonaparte) இவர்களின் மடத்தை வலுக்கட்டாயமாக மூடினான். இதனால் வேறு வழியற்ற எம்மெரிச், அங்குள்ள ஒரு விதவைப் பெண்ணொருவரின் இல்லத்தில் அடைக்கலம் புகுந்தார்.

நோய்வாய்ப்படுதல்:
கி.பி. 1813ம் ஆண்டின் ஆரம்பத்தில் எம்மெரிச்சின் உடலில் அபூர்வமான அடையாளங்கள் தோன்ற ஆரம்பித்தன; அதிசயிக்கத்தக்க காயங்கள் தோன்றின. அங்கிருந்த பங்குத்தந்தை இரண்டு மருத்துவர்களை அழைத்து எம்மெரிச்சை பரிசோதிக்க சொன்னார். இந்த விவரங்களும் தகவல்களும் வெளியே பரவுமுன்னே, பங்குத்தந்தை இதனை அங்குள்ள (Vicar General) என்றழைக்கப்படும் ஆங்கிலிக்கன் சமூகத்தின் ஆயர் அல்லது பேராயரின் துணை அதிகாரிக்கு தகவல் சொன்னார். திருச்சபை அதிகாரிகள் நீண்ட விசாரணை நடத்தினர். அநேக மருத்துவர்கள் இதனை ஆய்வு செய்ய ஆர்வமாக இருந்தனர். இந்த வேளையில்தான் கவிஞர் "க்ளேமேன்ஸ் ப்ரேன்ட்டனோ" (Clemens Brentano) முதன்முதலில் வருகை தந்தார்.

கி.பி. 1818ம் ஆண்டின் இறுதியில் எம்மெரிச்சின் கைகள் மற்றும் கால்களின் காயங்களிலிருந்து இரத்தம் வருவது நின்றுப்போனது. காயங்கள் மூடிக்கொண்டன. எம்மெரிச்சின் உடலிலிருந்த காயங்களை நகரின் பலரும் நேரில் கண்டிருந்தும், பலர் இவரை ஏளனம் செய்தனர். இவர் பொய்யாக நடிப்பதாகவும், சதி செய்கிறார் என்றும், மோசடி பேர்வழி என்றும் நிந்தித்தனர். இதனால் கி.பி. 1819ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், அரசு அதிகாரிகள் தலையிட்டு எம்மெரிச்சை வேறொரு வீட்டுக்கு கொண்டு சென்று மூன்று வாரங்கள் வைத்திருந்து கண்காணித்தனர். அவர்களால் மோசடிக்கான ஆதாரங்களாக எதனையும் கண்டுபிடிக்க இயலவில்லை.

எம்மெரிச்சின் மார்பக எலும்பின்மீது இருந்த சிலுவை அடையாளம் வித்தியாசமாக "Y" வடிவில் இருந்தது. "கோயெஸ்ஃபெல்ட்" (Coesfeld) நகரின் ஆங்கிலிக்கன் தேவாலயத்திலிருந்த சிலுவையும் அதுபோலவே இருந்தது.

திருக்காட்சிகள்:
சிறு வயதில் தமக்கு ஆண்டவர் இயேசுவானவர் தரிசனம் தந்ததாகவும், அவரது திருக்காட்சியில் தாம் இயேசுவுடன் பேசியதாகவும் எம்மேரிச் கூறினார். அவர் இறந்த பிறகு ஆத்மாவைப் புனிதப்படுத்தும் இடமான "உத்தரிய ஸ்தலத்தில்" (Purgatory) ஆன்மாக்களை பார்த்ததாகவும் கூறினார். அடர்ந்த கோள வடிவில் மூவொரு இறைவனை தரிசித்ததாகவும் கூறினார்.

எம்மெரிச்சின் கீர்த்தி மென்மேலும் ஓங்கி பரவுகையில், கிறிஸ்தவ மதத்தின் செல்வாக்கு பெற்ற பெரியோர் அநேகர் அவரை வந்து சந்தித்துச் சென்றனர். அவர்களில், "கொலோன் உயர்மறைமாவட்ட" (Archbishop of Cologne) பேராயரான "க்லெமென்ஸ்" (Clemens von Vischering), "ரேடிஸ்பொன்" மறைமாவட்ட" ஆயரான (Bishop of Ratisbon) "ஜோஹன்" (Johann Michael Sailer) "பெர்னார்ட்" (Bernhard Overberg) மற்றும் எழுத்தாளர்கள் "லூயிஸ்" மற்றும் ஃபிரெடெரிச்" (Luise Hensel and Friedrich Stolberg) ஆகியோரும் அடங்குவர். பேராயர் "க்லெமென்ஸ்" பின்னாளில் "ஸ்டோல்பெர்க்" (Stolberg) நகருக்கு எழுதிய கடிதமொன்றில் எம்மெரிச் பற்றி குறிப்பிடுகையில், "எம்மெரிச் கடவுளின் ஒரு விசேடமான சிநேகிதி" என்று குறிப்பிட்டார்.

ஜெர்மன் கவிஞரும் எழுத்தாளருமான "கிலெமென்ஸ் ப்ரெண்டானோ" (Clemens Brentano) கி.பி. 1819ம் ஆண்டு, எம்மெரிச்சை சந்திக்க வந்தபோது, அவருக்கு இரண்டாவது மருத்துவ பரிசோதனைகள் நடந்துகொண்டிருந்தன. எம்மெரிச் உடனடியாக கிலேமென்சை அடையாளம் கண்டுகொண்டார். இறைவனின் கட்டளைகளையும் வெளிப்பாடுகளையும் நிறைவேற்றுவதில் தமது எழுத்துக்கள் மூலம் தமக்கு உதவவே கடவுள் கிலெமென்சை அனுப்பியுள்ளதாக அவர் கூறியதாக பின்னர் அவர் கூறினார். அந்நாளில் எம்மெரிச்சின் முக்கிய ஆதரவாளர்களில் கிலெமேன்சும் ஒருவராவார். அவர், "எம்மெரிச் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மணப்பெண்" என்று கூறினார்.

கி.பி. 1819ம் ஆண்டு முதல், 1824ம் ஆண்டில் எம்மெரிச் மரிக்கும்வரை, கிலெமென்ஸ் எழுதிய பல நூல்களில், புதிய ஏற்பாட்டின் காட்சிகள் பல உள்ளிட்ட எம்மெரிச் கண்ட திருக்காட்சிகள் மற்றும் அதிதூய கன்னி மரியாளின் வாழ்க்கை பற்றிய திருக்காட்சிகளைப்பற்றியும் எழுதினார்.

எம்மெரிச் "வெஸ்ட்ஃபாலியன்" (Westphalian) மொழியையே பேசியதால், அவரது பேச்சுக்களை உடனடியாக ஜெர்மனியில் மொழியாக்கம் செய்ய இயலாமல் கிலெமென்ஸ் திணறினார். எம்மெரிச் பேசுவதை குறிப்பெடுத்துக்கொண்டு, பின்னர் தமது வீட்டுக்கு சென்று ஜெர்மனியில் மொழியாக்கம் செய்ய பிரயத்தனம் செய்தார். இதனால், எம்மெரிச் மரித்தபிறக்கும் பல காலம் வரை அவரைப் பற்றிய கிலெமென்ஸின் நூல்கள் வெளிவந்தன.

கி.பி. 1823ம் ஆண்டு மரணமடைந்த எம்மெரிச்சின் உடல் ஊருக்கு வெளியேயிருந்த கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. பின்னர், 1975ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், அவரது உடலின் மிச்சங்கள் "டுல்மேன்" நகரிலுள்ள தூய சிலுவையார் (Holy Cross Church in Dülmen) பேராலய வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

08 February 2020

புனிதர் ஜோசஃபின் மார்கரெட் பகிட்டா பெப்ரவரி 08

† இன்றைய புனிதர் †
(ஃபெப்ரவரி 8)

✠ புனிதர் ஜோசஃபின் மார்கரெட் பகிட்டா ✠
(St. Josephine Margaret Bakhita)

சூடானில் பிறந்த முன்னாள் அடிமைப்பெண்/ கனோஸ்ஸியன் சபை அருட்சகோதரி:
(Sudanese-born Former Slave/ Canossian Religious Sister)

பிறப்பு: கி.பி. 1869
ஒல்கொஸ்ஸா, டர்ஃபுர், சூடான்
(Olgossa, Darfur, Sudan)

இறப்பு: ஃபெப்ரவரி 8, 1947
ஸ்ச்சியோ, வெனேடோ, இத்தாலி குடியரசு
(Schio, Veneto, Republic of Italy)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திப்பேறு பட்டம்: மே 17, 1992
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
(Pope John Paul II)

புனிதர் பட்டம்: அக்டோபர் 1, 2000
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
(Pope John Paul II)

நினைவுத் திருநாள்: ஃபெப்ரவரி 8

பாதுகாவல்:
சூடான்
(Sudan)

புனிதர் ஜோசஃபின் மார்கரெட் பகிட்டா, சூடான் நாட்டில் பிறந்த ஒரு முன்னாள் அடிமைப்பெண்ணும், பின்னர், "கனோஸ்ஸியன் அருட்சகோதரிகள்" (Canossian Religious Sister) சபையின் உறுப்பினராக இத்தாலியில் வாழ்ந்து, பணியாற்றிய ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் புனிதருமாவார்.

ஆரம்ப கால வாழ்க்கை:
கி.பி. 1869ம் ஆண்டு, “மேற்கத்திய சூடான்” (Western Sudanese Region) நாட்டின் "டர்ஃபுர்" (Darfur) பிராந்தியத்தின் “ஒல்கொஸ்ஸா” (Olgossa) கிராமத்தில் பிறந்த ஜோசஃபின், ஒரு வசதியான - கௌரவமிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். அன்புமிக்க மூன்று சகோதரர்களுடனும், சகோதரிகளுடனும் பிறந்த இவர், கஷ்டம் என்றாலே என்னவென்று அறியாமல் வளர்ந்தார்.

இவருக்கு சுமார் எட்டு வயதாகையில், கி.பி. 1877ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், இவர் அரேபிய அடிமை வர்த்தகர்களால் கடத்தப்பட்டார். இவர்கள் ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்னர், இவரது மூத்த சகோதரியையும் கடத்தியிருந்தனர். மிகவும் குரூரமான முறையில், சுமார் 960 கிலோமீட்டர் தூரம் வெறும் கால்களுடன் "இய் ஒபேய்ட்" (El Obeid) என்ற நகரம் நோக்கி நடக்க வைக்கப்பட்டார். அந்நகரத்துக்கு சேரும்முன்னேயே அவர் இரண்டு தடவை விற்கப்பட்டார். அடிமையாக இருந்த சுமார் பன்னிரண்டு வருட காலத்தில் மீண்டும் மீண்டுமாக மூன்று முறை அவர் விற்கப்பட்டார். அவருக்கு நேர்ந்த கடத்தல்களும், அதன் காரணமான அதிர்ச்சிகளும், அவரது சொந்த பெயரைக் கூட அவர் மறக்க காரணமாயின. எதோ ஒரு அடிமை வியாபாரி அவருக்கு இட்ட பெயரான "பகிட்டா" (Bakhita) என்ற பெயரையே அவரும் தேர்ந்துகொண்டார். "பகிட்டா" (Bakhita) என்றால் அரபு மொழியில் அதிர்ஷ்டசாலி என்று அர்த்தமாம். ஜோசஃபின் வலுக்கட்டாயமாக இஸ்லாம் (Islam) மதத்துக்கும் மாற்றப்பட்டார்.

அடிமை வாழ்க்கை:
"இய் ஒபேய்ட்" (El Obeid) நகரில் ஜோசஃபின் ஒரு பணக்கார அரேபியரால் அடிமை வர்த்தகர்களிடமிருந்து வாங்கப்பட்டார். அவர் அங்கே அரேபியரின் இரண்டு மகள்களுக்கு சேவை செய்யும் பணியில் அமர்த்தப்பட்டார். அவர்கள் பகிட்டாவை நல்ல முறையில் கவனித்தனர். ஆனால், ஒரு தடவை குவளையொன்று உடைந்து போன ஒரு காரணத்துக்காக, அந்த அரேபியனின் மகன்களில் ஒருவன் பகிட்டாவை மிகவும் மோசமாக அடித்து உதைத்து துன்புறுத்தினான். மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகிட்டா, ஒரு மாதத்துக்கும் மேலாக தமது வைக்கோல் படுக்கையிலிருந்து நகர இயலாமலிருந்தார்.

நான்காவது தடவியாக, இவரை ஒரு துருக்கிய இராணுவ அதிகாரி (Turkish General) வாங்கினார். இவர் தமது மனைவி மற்றும் மாமியாருக்கு சேவை செய்ய பகிட்டாவை நியமித்தார். இவரது மனைவியும், மாமியாரும் பகிட்டாவுக்கு செய்த கொடுமைகளுக்கு அளவே இல்லை. தாம் அந்த வீட்டிலிருந்த வருடங்களில், அடியோ காயமோ படாமல் கழிந்த ஒருநாளைக் கூட என்னால் நினைவு படுத்தி பார்க்க இயலவில்லை என்று ஜோசஃபின் கூறுகிறார். சாட்டை அடியால் பட்ட ஒரு காயம் ஆற ஆரம்பிக்கும் முன்னேயே அடுத்த காயம் வந்துவிடும் என்கிறார்.

தமக்கு நேர்ந்த மிகவும் திகிலூட்டும் சம்பவத்தை ஜோசஃபின் பின்வருமாறு விவரிக்கிறார்:
உடலில் பச்சை குத்துவதற்கான வடிவங்களை அமைத்து தமது எஜமானியரிடம் காண்பிப்பது இவரது அன்றாட பணிகளுள் ஒன்று. வேறொரு அடிமைப்பெண் ஒரு கிண்ணத்தில் வெண்ணிற மாவும், மற்றொரு கிண்ணத்தில் உப்புத்தூளும், மிகவும் கூரிய (பிளேடு) போன்ற கத்தியும் கொண்டு வருவார். பகிட்டா, வெண்ணிற மாவினால் தம் உடலில் பச்சை குத்துவதற்கான வடிவங்களை வரைவார். உடனே கூறிய கத்தியால் மாவு கோலங்களின் கோடுகள் மீது ஆழமாக கீறுவார். இரத்தம் வெளியேறும் முன்னேயே, ஆழமான தழும்புகளுக்காக உப்புத் தூளை அதில் நிரப்ப வேண்டும். ஜோசஃபினின் உடம்பில் மார்பகங்கள், வயிறு, மற்றும் வலது கரத்தில் மொத்தம் 114 சிக்கலான வடிவங்கள் இருந்தன.

கி.பி. 1882ம் ஆண்டின் இறுதியில் "இய் ஒபேய்ட்" (El Obeid) நகரம் "மாஹ்டிஸ்ட் புரட்சியாளர்களின்" (Mahdist Revolutionaries) தாக்குதலுக்கு உட்படும் அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதன்காரணமாக, நகரை விட்டு குடும்பத்துடன் கிளம்பிய துருக்கிய இராணுவ அதிகாரி, பத்து அடிமைகளை மட்டும் தம்முடன் வைத்துக்கொண்டு பிறரை அங்கேயே விற்றுவிட்டான். தம்முடனிருந்தவர்களை வழியில் விற்றுவிட முடிவு செய்திருந்தான். கி.பி. 1883ம் ஆண்டு, பகிட்டாவை இத்தாலிய நாட்டின் பிரதிநிதியான (Italian Vice Consul) "கல்லிஸ்டோ லெக்னானி" (Callisto Legnani) என்பவர் வாங்கினார். அவர் பகிட்டாவை மிகவும் பிரியமாகவும் கௌரவமாகவும் நடத்தினார்.

இரண்டு வருடங்களின் பின்னர் "கல்லிஸ்டோ லெக்னானி" இத்தாலி திரும்ப முடிவெடுத்தபோது, பகிட்டா தாமும் அவருடன் வருவதாக கெஞ்சினார். கி.பி. 1884ம் ஆண்டின் இறுதியில், "அகஸ்டோ மிச்சியெலி" (Augusto Michieli) என்ற நண்பரின் உதவியால் முற்றுகையிடப்பட்டிருந்த "கார்ட்டும்" (Khartoum) நகரிலிருந்து அவர்கள் தப்பிச் சென்றார்கள். 650 கி.மீ. தூரம் ஒரு ஒட்டகத்தின்மீது ஆபத்தான பயணம் செய்து, அப்போதைய சூடான் நாட்டின் துறைமுக நகரான "சுவகின்" (Suakin) சென்றடைந்தனர். கி.பி. 1885ம் ஆண்டு, மார்ச் மாதம், அங்கிருந்து கிளம்பி ஏப்ரல் மாதம், இத்தாலிய துறைமுக நகரான ஜெனோவா (Genoa) சென்றடைந்தனர். அவர்கள் அங்கே "அகஸ்டோ மிச்சியெலியின்" மனைவி "சிக்னோரா மரியா டுரினா மிச்சியெலியை" (Signora Maria Turina Michieli) சந்தித்தனர். "கல்லிஸ்டோ லெக்னானி" பகிட்டாவை "சிக்னோரா மரியாவிடம்" கையளித்தார்.

பகிட்டா தமது புதிய எஜமானருடன் அவரது இருப்பிடமான "ஸியானிகோ" (Zianigo) சென்றார். அங்கே மிச்சியெலியின் புதிதாய் பிறந்த குழந்தை "அலைஸுக்கு" (Alice) செவிலித்தாயாக மூன்று வருடம் பணிபுரிந்தார். மிச்சியெலி இத்தாலி திரும்புவதன் முன்னர், ஒன்பது மாதங்களுக்காக பகிட்டாவையும் தம்முடன் சூடான் அழைத்து வந்தார்.

கத்தோலிக்க மனமாற்றமும் சுதந்திரமும்:
சூடான் நாட்டின் "சுவக்கின்" (Suakin) முற்றுகையிடப்பட்டிருந்தது. ஆனால் அது இன்னமும் "ஆங்கிலோ-எகிப்தியர்களின்" (Anglo-Egyptian) கைகளிலேயே இருந்தது. "அகஸ்டோ மிச்சியெலி" அங்கே ஒரு பெரிய ஓட்டலை வாங்கினார். அவர் இத்தாலியிலுள்ள தமது மொத்த சொத்துக்களையும் விற்றுவிட்டு தமது குடும்பத்துடன் சுவக்கினில் தங்கிவிட முடிவு செய்தார். சொத்துக்களை விற்பது அவருக்கு அவ்வளவு சுலபமாக இல்லை. அவரது மனைவி சிக்னோரா அவர்களது "ஸியானிகோ" இல்லத்தை விற்றுவிட்டார். மீதமுள்ள சொத்துக்களை விற்குமுன் அவர் தமது கணவரை காண சுவக்கின் சென்றார். செல்லுமுன் தமது குழந்தையையும் பகிட்டாவையும் “வெனிஸ்” (Venice) நகரிலுள்ள "கனோஸ்ஸியன் சகோதரிகள் சபையின்" (Canossian Sisters) பாதுகாப்பில் விட்டுச் சென்றார்.

சுவக்கினிலிருந்து திரும்பிய சிக்னோரா, பகிட்டாவுடன் தமது குழந்தையை அழைத்துச் செல்ல வந்தார். பகிட்டா அங்கிருந்து வெளியேற தீர்க்கமாக மறுத்துவிட்டார். மூன்று நாட்கள் முழுதாக அன்பாகவும், அதட்டியும், மிரட்டியும், முயற்சித்த சிக்னோரா தோற்றுப்போனார். "கனோஸ்ஸியன் சகோதரிகள் சபையின்" தலைமைச் சகோதரி, பிரச்சினையை இத்தாலிய அரசு அதிகாரிகளிடம் கொண்டு சென்று புகார் செய்தார். கி.பி. 1889ம் ஆண்டு, நவம்பர் மாதம், 29ம் தேதி, இத்தாலிய நீதிமன்றமொன்று, ஏற்கனவே பிரிட்டிஷ் அடிமைத்தளைக்கு தடை விதிக்குமாறு சூடான் நாட்டை தூண்டிஇருந்தது. அத்துடன், இத்தாலி நாட்டில் அடிமைகளுக்கு அங்கீகாரம் கிடையாது. ஆகவே பகிட்டா அடிமை இல்லை என்று தீர்ப்பு வழங்கியது.

தமது வாழ்க்கையில் முதன்முதலாக சுதந்திரத்தை பகிட்டா அனுபவித்தார். அவர் "கனோஸ்ஸியன் சகோதரிகள் சபையிலேயே" இருக்க விரும்பினார். கி.பி. 1890ம் ஆண்டு, ஜனவரி மாதம், ஒன்பதாம் நாள், பகிட்டா, "ஜோசஃபின் மார்கரெட் மற்றும் ஃபோர்டுனடா" (Josephine Margaret and Fortunata) ஆகிய பெயர்களுடன் திருமுழுக்கு பெற்றார். “வெனிஸ் பேராயர்-கர்தினால்” (Cardinal Patriarch of Venice) "ஜியுசெப் சர்டோ" (Giuseppe Sarto) (எதிர்கால திருத்தந்தை பத்தாம் பயஸ் - Future Pope Pius X) அவர்களது திருக்கரங்களால் உறுதிப்பூசுதலும் புதுநன்மையும் பெற்றார். 

கனோஸ்ஸியன் அருட்சகோதரி:
ஜோசஃபின் கி.பி. 1893ம் ஆண்டு, டிசம்பர் மாதம், ஏழாம் நாள், "கனோஸ்ஸியன் சகோதரியர் துறவற" சபையில் இணைந்தார். கி.பி. 1896ம் ஆண்டு, டிசம்பர் மாதம், எட்டாம் நாள், தமது பிரமாணங்களை ஏற்றார். அவர் இத்தாலியின் வடக்குப் பிராந்தியமான "விசென்ஸாவின்" (Vicenza) "ஸ்ச்சியோ" (Schio) என்னுமிடத்திலுள்ள கனோஸ்ஸியன் பள்ளியில் சேவை செய்ய பணிக்கப்பட்டார். அவர் தமது மீதமிருந்த வாழ்நாள் முழுவதும் அங்கேயே செலவிட்டார். ஜோசஃபின் அங்கிருந்த 42 வருடங்களும் ஒரு சமையல்கார பெண்ணாகவும், தேவாலயத்தில் உள்ள புனிதப் பொருட்களைக் காப்பவராகவும், சுமை சுமப்பவராகவும், காவல்காரராகவும், வாயிற்காக்கும் பெண்ணாகவும், உள்ளூர் சமூகத்தினரிடம் அடிக்கடி தொடர்புகொள்ளும் பணியையும் செய்தார். இவ்வருட்சகோதரியின் மேன்மையான மென்மை, அமைதியான குரல் மற்றும் அவரது வதனத்திலே தங்கிவிட்ட நிரந்தர புன்னகை ஆகியன, அவரை “விசென்ஸா” (Vicenza) நகர மக்களுடன் நீக்கமற இணைத்தன. இந்நகர மக்கள் இன்றளவும் இவரை “சின்னஞ்சிறு பழுப்பு சகோதரி” (“Sor Moretta” - Little Brown Sister) என்றும், “கருப்பு அன்னை” ("Madre Moretta" - Black Mother) என்றும் குறிப்பிடுகின்றனர்.

கடவுளால் அருளப்பட்ட கொடையான இவருடைய அதிர்ந்து பேசாத சிறப்பும், புனிதமான புகழும், இவர் சார்ந்திருந்த துறவற சபையால் குறிக்கப்பட்டது. கி.பி. 1931ம் ஆண்டு வெளிவந்த அவரது சுயசரிதம் தொடர்பான பதிப்பு அவரது புகழை இத்தாலி முழுதும் பரவச் செய்தது. இரண்டாம் உலகப்போரின்போது, (கி.பி. 1939–1945) நகர மக்களின் பயத்தை போக்க ஆறுதலாக இருந்தார். நகர மக்கள் இவரின் அருகாமை, ஒரு புனிதரின் பாதுகாப்பாக உணர்வதாக கூறினர். "ஸ்ச்சியோ" (Schio) நகரமும் குண்டு வீச்சிலிருந்து தப்பவில்லை. ஆனால் இரண்டாம் உலகப்போர், ஒரு விபத்தோ அல்லது எவருக்கேனும் ஒரு காயமோ இன்றி கடந்து போனது.

ஜோசஃபினுடைய இறுதி ஆண்டுகள் நோயாலும், வேதனையாகவும் இருந்தன. அவர் ஒரு சக்கர நாற்காலியை உபயோகித்தார். ஆனால் எப்போதும் புன்முறுவலுடன் இருந்தார். எப்படி இருக்கிறீர்கள் என்று யார் கேட்டாலும் புன்முறுவலுடன் "இறைவனின் விருப்பப்படி" (As the Master’s desires) என்றே பதிலளிப்பார்.

அவரது இறுதி மணித்துளிகளில் அவர் தமது ஆரம்ப கால அடிமை வாழ்க்கையை நினைத்து மிகவும் வருந்தினார். "சங்கிலிகள் மிகவும் இறுக்குகின்றன, கொஞ்சம் தளர்த்துங்களேன்" என்று சொல்லி அழுதார்.

எவரோ ஒருவர், "இன்று சனிக்கிழமை; எப்படி இருக்கிறீர்கள்?" என்று கேட்டதற்கு ஜோசஃபின், "ஆமாம், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்; என் அன்னையே, என் அன்னையே" என்றார். அவரிடமிருந்து கேட்ட இறுதி வார்த்தைகள் இவையே ஆகும்.

1947ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், எட்டாம் நாளன்று, இரவு 8:10 மணிக்கு, ஜோசஃபின் மார்கரெட் பகிட்டா, நித்திய வாழ்வில் சயனித்தார். அன்னாரது பூவுடல், மூன்று நாட்கள் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

"சிறு வயதில் உங்களை கடத்தியவரகளை நீங்கள் சந்திக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள்?" என்று, ஒருமுறை, ஒரு இளம் மாணவன் ஜோசஃபினை நோக்கி கேட்டான்.
சிறிதும் தயங்காமலும் யோசிக்காமலும் ஜோசஃபின் கூறிய பதில்:
“என்னை கடத்தியவர்கள் மட்டுமல்லாது, என்னை துன்புறுத்தி வதைத்தவர்களையும் நான் காண நேரிட்டால், நான் அவர்கள் முன்னே முழங்கால்படியிட்டு, அவர்களின் கரங்களைப் பற்றி முத்திசெய்வேன். இவைகள் என் வாழ்வில் நிகழ்ந்திராவிடில், நான் இன்று ஒரு கிறிஸ்தவளாகவோ, மறைப்பணியாளாகவோ ஆகியிருக்க மாட்டேன்!"

தூய ஜெரோம் எமிலியானி (பிப்ரவரி 08)

இன்றைய புனிதர் : 
(08-02-2020) 

தூய ஜெரோம் எமிலியானி (பிப்ரவரி 08)

நிகழ்வு

வெனிஸ் நகரை மீட்பதற்காக இராணுவத்தில் சேர்ந்து போராடிய ஜெரோம் போரின்போது எதிரிகளால் பிடிக்கப்பட்டு கைதியாக சிறையில் அடைக்கப்பட்டார். அதுவரைக்கும் உலகப்போக்கிலான வாழ்க்கை வாழ்ந்த ஜெரோம் சிறையில் தனிமையாக இருந்த நேரங்களில் இறைவனிடம் ஜெபிக்கத் தொடங்கினார்; தன்னுடைய மனதை ஆண்டவருக்ககாத் திறந்துவைத்தார்; அன்னை மரியாவிடம் அளவுகடந்த பக்தி கொள்ளத் தொடங்கினார்.

ஒருநாள் அவர் அன்னை மரியாவிடம் ஜெபித்துக்கொண்டிருந்தபோது அன்னை அவருக்குக் காட்சி தந்து, அற்புதமாக அவரை சிறையிலிருந்து மீட்டு வெளியே கொண்டுபோய் நிறுத்தினார். தன்னுடைய வாழ்க்கையே சிறையில் முடிந்தது என்று நினைத்துக்கொண்டிருந்த ஜெரோமிற்கு அன்னை மரியாவின் இவ்வுதவி பேருதவியாக அமைந்தது. அன்றிலிருந்தே அவர் இறைவனுக்காக தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணிக்கத் தொடங்கினார்.

வாழ்க்கை வரலாறு

ஜெரோம் எமிலியானி இத்தாலியில் உள்ள வெனிஸ் நகரில் 1481 ஆம் ஆண்டு ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தார். இளம் வயதில் எல்லா இளைஞர்களையும் போன்று உலகப்போக்கிலான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அப்போது தான் வெனிஸ் நகரை எதிரிகளிடமிருந்து மீட்பதற்காக இராணுவத்தில் ஆட்கள் எடுக்கும் வேலை நடந்தது. ஜெரோம் எமிலியானியும் இராணுவத்தில் சேர்ந்து வெனிஸ் நகரை மீட்டெடுக்கும் பணியில் இறங்கினார். ஆனால் துரதிஸ்டவசமாக அவர் எதிரிகளால் கைதியாக சிறைபிடிக்கப்பட்டார். சிறையில் அவர் அன்னை மரியாவினால் அற்புதமாக மீட்டெடுக்கப்பட்டு வெளியே கொண்டுவரப்பட்டார். இறைவனின் அருளால் தான் சிறையிலிருந்து மீட்கப்பட்டதால், இறைவனுக்கே தன்னுடைய வாழ்வை முழுதாய் அர்ப்பணிக்கத் தொடங்கினார்.

இதற்கிடையில் தென் வெனிசில் கொள்ளை நோய் ஏற்பட்டது. அந்நோயினால் ஏராளமான பேர் உயிரிழந்தார்கள். ஜெரோம் எமிலியானியோ நோயினால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பதும் அவர்களுக்கு வேண்டியதைச் செய்துகொடுப்பதுமாய் இருந்தார். மட்டுமல்லாமல் இறந்தவர்களை நல்லடக்கம் செய்வதுமாய், பெற்றோர்கள், உற்றார் உறவினர்களை இழந்து தவித்த குழந்தைகளுக்கு தன்னுடைய இல்லத்தில் ஆதரவு தந்து அவர்களைப் பராமரித்து வந்தார். இதனால் மக்கள் மத்தியில் அவருடைய புகழ் ஓங்கியது.

கொள்ளைநோயின் தாக்குதல் முற்றிலுமாக ஓய்ந்தபின்னும் கூட ஜெரோம் எமிலியானி தன்னுடைய இரக்கச் செயல்களை நிறுத்தவில்லை. நகரின் பல்வேறு பகுதிகளில் அனாதை இல்லங்களைத் திறந்துவைத்து ஆதரவற்றோருக்கு பேராதரவாய் விளங்கினார். 1531 ஆம் ஆண்டு அவர் தன்னோடு மேலும் இரண்டு குருக்களை சேர்த்துக்கொண்டு ‘Company of the servants of the Poor’ என்னும் சபையை நிறுவினார். இதன்மூலம் அவர் ஆன்மீகப் பணிகளைச் செய்ததோடு மட்டுமல்லாமல், அதாரவற்ற, நோய்வாய்ப்பட்ட அனாதைக் குழந்தைகளுக்கு இல்லங்கள் திறந்து அவர்களுக்கும் சேவைகள் செய்து வந்தார். இப்படி அவர் பணிசெய்துகொண்டிருக்கும்போதுதான் நோயினால் தாக்கப்பட்டு 1537 ஆம் ஆண்டு உயிரழ்ந்தார்.

ஏழைகளின் ஏந்தலால், நோயிற்றோருக்கு அருமருந்தாய் விளங்கிய ஜெரோம் எமிலியானி 1928 ஆம் ஆண்டு புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ஜெரோம் எமிலியானியின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

ஏழை எளியவர்மீது அக்கறை

தூய ஜெரோம் எமிலியானியிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய முதன்மையான பாடமே அவர் ஏழை எளியவர், நோயாளிகள்மீது கொண்ட அன்பும் அக்கறையும்தான். அவரிடமிருந்த அதே அன்பும் அக்கறையும் நம்மிடம் இருக்கின்றதா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இன்றைய உலகம் ஏழை எளியவர்களை, நோயாளிகளை இழிவானவர்களாக கருதுகின்ற ஒருநிலைதான் இருக்கின்றது. ஆனால் ஆண்டவர் இயேசுவும் நம் புனிதர் ஜெரோம் எமிலியானியும் இவர்களுக்குத் தான் கடவுளின் அன்பும் அக்கறையும் அதிகமாகத் தேவைப்படுகின்றது என்று அவர்களுக்கு தங்களுடைய வாழ்வில் அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தார்கள். அவர்கள் வழியில் நடக்கின்ற நாம் நம்மோடு வாழக்கூடிய ஏழை எளியவர்களுக்கு நோயாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நீதிமொழிகள் புத்தகம் 19:17 ல் வாசிக்கின்றோம், “ஏழைகளுக்கு இரங்கி உதவி செய்கிறவர் ஆண்டவருக்குக் கடன்கொடுக்கிறார். அவர் கொடுத்ததை ஆண்டவரே திருப்பித் தருகின்றார்” என்று. ஆம், நாம் ஏழைகளுக்கு இரங்கி உதவி செய்கின்றபோது இறைவன் நமக்கு தக்க உதவி செய்வார் என்பது உறுதி.

அந்த நகரில் பிரபல மருத்துவர் ஒருவர் இருந்தார். அவருக்கு வயது அறுபதுக்கும் மேல் இருக்கும். அப்படியிருந்தாலும் அவர் தன்னிடம் வரக்கூடிய எல்லா நோயாளிகளிடமும் எந்தவொரு பேதமும் பார்க்காமல் மருத்துவம் செய்து வந்தார். இதனால் அவரை நாடிவரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிகப் போனதே ஒழிய, ஒருபோதும் குறையவில்லை. இதற்கிடையில் அவருக்கு வயது கூடிக்கொண்டே போனதால் எல்லாருக்கும் மருத்துவம் செய்ய முடியாமல் போனது.

ஒருநாள் இரவு அவர் அசதியில் தூங்கிக்கொண்டிருந்தபோது தொலைபேசி மணி ஒலித்தது. அவர் அதை எடுத்துப் பேசியபோது மறுமுனையில் ஓர் ஆண் குரல் கேட்டது. மருத்துவர் அந்த மனிதரிடம் பேசியதிலிருந்து புரிந்துகொண்டது அவருக்கு தலைவலி என்பதும் அவர் கொஞ்சம் வசதியானவர் என்பதுதான். உடனே மருத்துவர் அவரிடம், “ஐயா என்னால் படுக்கையில் இருந்து எழமுடியாத சூழல். மேலும் உங்களால்தான் வேறு ஒருத்தவரிடம் சென்று மருத்துவ உதவிபெற போதிய பணம் இருக்கின்றது அல்லவா. அதனால் சிரமம் பார்க்காமல் இன்னொரு மருத்துவரைப் பார்த்துக்கொள்ளுங்களேன்” என்று தொலைபேசியை வைத்துவிட்டார். தொலைப்பேசியை வைத்தபின்னர் தன்னுடைய இயலாமையை நினைத்துப் பெரிதும் வருந்தினார்.

தனக்கு முடியாத சூழலிலும் எல்லா மக்களுக்கும் அதிலும் குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ உதவிகளைச் செய்து வந்த அந்த மருத்துவர் உண்மையிலே நம்முடைய பாராட்டுக்குரியவர். நாமும் நம்மோடு வாழக்கூடிய நோயாளிகள், அனாதைகள்மீது அன்பும் அக்கறையும் கொண்டு வாழவேண்டும் என்பதுதான் இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்க்கின்ற ஒன்றாக இருக்கின்றது.

ஆகவே, தூய ஜெரோம் எமிலியானியின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று ஏழை எளியவர், நோயாளிகள்மீது உண்மையான அக்கறை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

07 February 2020

பிப்ரவரி -07 புனித ஜூலியானா ஃபால்கோனியேரி

பிப்ரவரி -07 
புனித ஜூலியானா ஃபால்கோனியேரி
உடல் நோய் உள்ளவர்களுக்குப் பாதுகாவலர்
நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள் (1 கொரி. 11:26)
வானதூதர் மங்கள வார்த்தையை உரைத்ததன் நினைவாக பிளாரன்ஸ் நகரில் ஆலயம், எழுப்பிய சியாரிசிமோ மற்றும் ரிகுர்டாடா ஃபால்கோனியேரி தம்பதியினருக்கு அவர்களின் முதுமைக் காலத்தில் 1270-ஆம் ஆண்டு இந்த மகள் பிறந்தார் .இவர்களது குடும்பம் பிளாரன்ஸ் நகரின் மதிப்பு மிக்க குடும்பமாகும்.
மகிழ்வுடன் தம் சிறுவயதைக் கழித்த ஜூலியானா தன்னுடைய இளவயதில் தந்தையை இழந்தார் .இருப்பினும், மற்ற யுவதிகளைப் போல உலக நாட்டங்களில் ஈடுபாடு கொள்ளாமல் இறைவனுக்கே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தார். திருமணத்திற்குத் தாய் ஏற்பாடு செய்தபோதும் மறுத்தார் .15 வயது நடைபெற்றபோது அருள்சகோதரியாகி பணியாற்ற விருப்பம் கொண்டார் .தமது மகளை விட்டுப் பிரிய மனமில்லாத தாய் இதனை விரும்பவில்லை.

தாய்க்குக் கீழ்ப்படிதலுடன் இருந்த ஜூலியானா தமது பெரியப்பாவிடம் தன் அழைத்தலைக் கூறினார். தூய மரியின் ஊழியர் சபையைத் தோற்றுவித்த ஏழு பேரில் ஒருவரான புனித அலெக்சிஸ் தனது தம்பி மகனின் ஏக்கத்தைப் போக்க அவள் தாயிடம் பேசினார். பேசி தூய மரியின் ஊழியர் சபையின் மூன்றாம் சபை போல வீட்டிலேயே துறவியாக இருப்பது என்று முடிவுக்கு வந்தார்கள் .அதன் படி துறவிக்கு உரிய உடை அணிந்து வீட்டிலேயே இறைவனின் அன்புப் பிள்ளையாக ஜூலியானா வாழ்ந்தார். தாயும் மகளும் ஒருவருக்கொருவர் ஆன்ம வழிகாட்டிகளாகவும் நல்ல தோழிகளாகவும் வாழ்ந்து மகிழ்ந்தார்கள்.  

திடீரென்று 1304 ஆம் ஆண்டு தாய் இறந்ததும் தனது உற்ற தோழியைப் பிரிந்த துயரை ஜூலியானா அனுபவித்தார் .கவலை மறைய வேறொரு வீட்டில் குடியேறினார் .தூய மரியின் ஊழியர் சபையின் பணி நோக்கத்தை தமது வாழ்வில் செயல்படுத்தி, இறைவனின் அன்பைப் பிறருக்கு தமது வாழ்வால் வாழ்ந்து காட்டிய ஜூலியானா மீது பலர் நேசம் கொண்டனர். தங்களை இவருடன் இணைத்துக் கொண்டனர். அவர்களுடன் இணைந்து தூய மரியின் ஊழியர் சபை பெண்கள் பிரிவை, மூன்றாம் சபையாக ஆரம்பித்தார்.
சபையின் முக்கிய நோக்கங்களாக,"இரக்கச் செயல்பாடுகள், தாராளமாக உதவுதல் , செப வாழ்வு, நற்செய்தியின்படி வாழ்தல்" என்பதாக வடிவமைத்தார். எழைகளின் முன்னேற்றத்திற்காக உழைத்தார். ஏழைகளிலும் ஏழைகளின் மீது அன்பு காட்டினார் .வசதியுள்ளவர்களுக்கு மட்டும் மற்றவர்கள் காட்டிய நெயத்தை இவர்களுக்கும் வெளிப்படுத்தினார். இதனால் பலர் இவருடன் சேர்ந்தார்கள் .35 ஆண்டுகளாக ஜூலியானா வைத் தலைவராகத் தொடர்ந்து தேர்ந்தெடுத்து மகிழ்ந்தார்கள்.
தொடர்ந்து பணி, ஒறுத்தல் முயற்சிகளால் ஜூலியானா உடல்நலமுற்றார் .சாப்பிட முடியாதபடி, நற்கருணை பெற முடியாதபடி மிகவும் பாதிக்கப்பட்டார். இயேசுவின் திருவுடலைப் பெற முடியாதமைக்யாக வருந்தினார் .தான் இறக்கப் போகும் நேரம் வந்தவுடன் திருப்பலி நிறைவேற்ற வந்த குருவிடம் நற்கருணையை தமது நெஞ்சின் மேல் வைக்கச் சொன்னார். குருவும் இசைந்தார். வைத்தவுடன் அற்புதமாக நற்கருணை மறைந்தது.
மிகுந்த சிலுவையிணை அனுபவித்த பிறகு, 1341 ஜூன் 12 அன்று தமது 71 ஆம் வயதில் ஜூலியானா இறைவனடி சேர்ந்தார். இறந்த பிறகு இவரின் நெஞ்சின் மீது நற்கருணையில் உள்ள சிலுவை அடையாளம் பதிந்திருந்ததை அருள் சகோதரிகள் பார்த்து ஆண்டவரைப் புகழ்ந்தார்கள். திருத்தந்தை 11 ஆம் இன்னொசென்ட் 1678, ஜூலை 26 அன்று அருளாளராக அறிவித்தார். திருத்தந்தை 12-ஆம் கிளமென்ட் 1737 ஜுன் 16 அன்று புனித நிலைக்கு உயர்த்தினார் .இவர் நற்கருணைப் புனிதர் என அழைக்கப்படுகிறார்

நற்கருணை ஆண்டவரின் நல்லாசி பெற்று நலிந்தோருக்கு உதவுகிறவர்கள் நாளெல்லாம் இறையருள் பெறுகிறார்கள்.

திருத்தந்தை 9 ஆம் பயஸ் Pope Pius IX 07-02-2020

இன்றைய புனிதர் : 
(07-02-2020) 

திருத்தந்தை 9 ஆம் பயஸ் Pope Pius IX 

திருத்தந்தை 9 ஆம் பயஸ் Pope Pius IX

பிறப்பு 13 மே 1792,செனிகாலியா Senigallia, இத்தாலி

இறப்பு 7 பிப்ரவரி 1878, உரோம்

முத்திபேறுபட்டம் : 1907, திருத்தந்தை 10 ஆம் பயஸ்
புனிதர்பட்டம் : திருத்தந்தை 12 ஆம் பயஸ்

இவர் தனது 26 ஆம் வயதில் குருப்பட்டம் பெற்றார். பிறகு இவர் "மக்களின் பணியாளர்" என்றழைக்கப்பட்டு, மறைப்பணியா ற்றினார். பின்னர் இவர் மக்களின் தூதுவராக சிலே Chile நாட்டிற்கு அனுப்பப்பட்டார். அங்குச் சென்ற சில ஆண்டுகளிலே ஸ்போலேட்டோ என்ற மறைமாவட்டத்திற்கு பேராயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.1833 ஆம் ஆண்டு இமோலாவிற்கு Imola பேராயராக அனுப்பப்பட்டார். 1840 ஆம் ஆண்டு கர்தினாலாக உயர்த்தப்பட்டார். பின்னர் 16 ஜூன் 1846 ஆம் ஆண்டு 9 ஆம் பயஸ் என்ற பெயருடன் திருத்தந்தையாக உயர்த்தப்பட்டார். இவர் தனது பதவிக்காலத்தில் ஏராளமான பிரச்சனைகளை சந்தித்தார்.

இவர் மிகப் பொறுமையுடன் அனைத்துப் பிரச்சனைகளையும் மேற்கொண்டார். இவர் வாழும்போதே, புனிதராகப் புகழப்பட் டார். இவர் வாழ்ந்தபோது பல நோயாளிகளை குணமாக்கியுள் ளார். ஏறக்குறைய 32 ஆண்டுகள் திருத்தந்தையாக பணியாற் றிய இவர் இறைவாக்கினராகக் கருதப்பட்டார்.† இன்றைய புனிதர் †
(ஃபெப்ரவரி 7)

✠ அருளாளர் ஒன்பதாம் பயஸ் ✠
(Blessed Pius IX)

255வது திருத்தந்தை:
(255th Pope)

பிறப்பு: மே 13, 1792
செனிகல்லியா, மார்ச்சே, திருத்தந்தை நாடுகள்
(Senigallia, Marche, Papal States)

இறப்பு: பெப்ரவரி 7, 1878 (வயது 85)
திருத்தூதரக அரண்மனை, ரோம் நகரம், இத்தாலி
(Apostolic Palace, Rome, Italy)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திப்பேறு பட்டம்: செப்டம்பர் 3, 2000
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
(Pope John Paul II)

"ஜியோவன்னி மரிய மஸ்டாய் ஃபெர்ரெட்டி" (Giovanni Maria Mastai Ferretti) எனும் இயற்பெயர் கொண்ட அருளாளர் ஒன்பதாம் பயஸ், கத்தோலிக்க திருச்சபையின் 255வது திருத்தந்தையாக கி.பி. 1846ம் ஆண்டு, ஜூன் மாதம், 16ம் நாள் முதல், 1878ல் தமது மரணம்வரை ஆட்சி புரிந்தவர் ஆவார்.

கி.பி. 1792ம் ஆண்டும், மே மாதம், 13ம் நாள், “செனிகல்லியா” (Senigallia) என்னுமிடத்தில், "கிரோலமோ டேய் கொண்டி ஃபெர்ரெட்டி" (Girolamo dei conti Ferretti) எனப்படும் பிரபுக்கள் குடும்பத்தில் ஒன்பதாவது குழந்தையாகப் பிறந்த இவர், பிறந்த அன்றே திருமுழுக்கும் பெற்றார். "வோல்டேர்ரா" மற்றும் ரோம் (Volterra and in Rome) நகரிலுள்ள "பியாரிஸ்ட்" (Piarist College) கல்லூரியில் கல்வி கற்றார். தமது சொந்த ஊரான 'செனிகல்லியாவில்' (Senigallia) இறையியல் கற்ற இவர், கி.பி. 1814ம் ஆண்டு, ஃபிரெஞ்ச் சிறையிருப்பிலிருந்து (French captivity) திரும்பியிருந்த திருத்தந்தை ஏழாம் பயசை (Pope Pius VII) சந்தித்தார். கி.பி. 1815ம் ஆண்டு, திருத்தந்தையின் உயர் காவலராக இணைந்த இவர், திடீரென தமக்கு ஏற்பட்ட வலிப்பு நோய் காரணமாக வி்ரைவிலேயே அதிலிருந்து நீக்கப்பட்டார். திருத்தந்தையின் கால்களில் தஞ்சமடைந்த இவரை எழுப்பிய திருத்தந்தை இவர் இறையியல் படிப்பைத் தொடர ஆதரவு தந்தார்.

கி.பி. 1819ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 10ம் தேதி, இவர் குருத்துவம் பெற்றார்.
கி.பி. 1827ம் ஆண்டு, தமது 35 வயதில் மஸ்டாய் திருத்தந்தை பன்னிரெண்டாம் லியோவால் (Pope Leo XII) "ஸ்போலேட்டோ" (Spoleto) உயர் மறைமாவட்டத்தின் பேராயராக நியமிக்கப்பட்டார். கி.பி. 1840ம் ஆண்டு, "புனித மர்செல்லினோ ஈ பியெட்ரோவின்" கர்தினால் குருவாக (Cardinal-Priest of Santi Marcellino e Pietro) அறிவிக்கப்பட்டார்.

கி.பி. 1846ம் ஆண்டு, திருத்தந்தை பதினாறாம் கிரகோரியின் (Pope Gregory XVI ) மரணத்தின் பின்னர் நடந்த திருத்தந்தை தேர்தலில் மஸ்டாய் தேர்ந்தெடுக்கப்பட்டு, திருத்தந்தையாக அருட்பொழிவு செய்யப்பட்டார். தமது பெயரையும் ஒன்பதாம் பயஸ் (Pius IX) என்று ஏற்றுக்கொண்டார். 

32 ஆண்டுகள் திருத்தந்தையாக இருந்த இவரே அதிக காலம் இப்பதவியினை வகித்தவ திருத்தந்தை ஆவார். இவர் கூட்டிய “முதல் வத்திக்கான் பொதுச்சங்கம்” (The First Vatican Council) (கி.பி. 1869-1870) திருத்தந்தையின் தவறா வரம் ஒரு விசுவாசக் கோட்பாடு என அறிக்கையிட்டது.

தூய கன்னி மரியாளின் அமலோற்பவத்தை இவர் ஆதரித்தார். மரியாளுக்கு இடைவிடா சகாய மாதா என்னும் பட்டத்தையும் அளித்தார். இப்பட்டத்துக்கு காரணமான கிரீட் தீவு பைசாந்திய ஓவியத்தை உலக இரட்சகர் சபை குருக்களின் பாதுகாவலில் ஒப்படைத்தார்.

திருத்தந்தை நாடுகளின் அரசராக இருந்த இறுதி திருத்தந்தை இவர் ஆவார். 1870ம் ஆண்டு, அது இத்தாலிய தேசியவாத படையினரால் கைப்பற்றப்பட்டு இத்தாலிய பேரரசுடன் இணைக்கப்பட்டது.

இவருக்கு முக்திபேறு பட்டம் வழங்குவதற்கான நடைமுறைகளின் ஆரம்ப கட்டத்திலே, அதனை இத்தாலிய அரசு தீவிரமாக எதிர்த்தது. அவருடைய சர்வாதிகாரமான மற்றும் பிற்போக்குத்தனமான அரசியலை காரணம் காட்டி, சில யூதர்களும் கிறிஸ்தவர்களும் விமர்சித்ததால், அவரது முக்திபேறு பட்டம் சர்ச்சைக்குரியதாகவே இருந்தது. திருத்தந்தை “இரண்டாம் ஜான் பவுல்” (Pope John Paul II) கி.பி. 1985ம் ஆண்டு, ஜூலை மாதம், ஆறாம் நாளன்று, இவரை வணக்கத்திற்குரியவர் என அறிவித்தார்.

கி.பி. 2000ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், மூன்றாம் தேதி, திருத்தந்தை “இருபத்திமூன்றாம் யோவானோடு” (Pope John XXIII) இவருக்கும் அருளாளர் பட்டம் அளிக்கப்பட்டது.

இவரது நினைவுத் திருவிழா நாள் ஃபெப்ரவரி 7 ஆகும்.



06 February 2020

இன்றைய புனிதர் : (06-02-2020) மறைசாட்சியாளர் பவுல் மீகி மற்றும் தோழர்கள்

இன்றைய புனிதர் : 
(06-02-2020) 

மறைசாட்சியாளர் பவுல் மீகி மற்றும் தோழர்கள் Paul Miki und Gefährten SJ

பிறப்பு1565,சியோட்டோ Kyoto, ஜப்பான்

இறப்பு 5 பிப்ரவரி, 1597 நாகசாகி, ஜப்பான்

புனிதர்பட்டம்: 8 ஜூன் 1862, திருத்தந்தை 9 ஆம் பயஸ்

இவர் ஜப்பான் நாட்டில் வாழ்ந்த ஓர் கிறிஸ்தவ பெற்றோரின் மகனாகப் பிறந்தார். இவர் தனது 22 ஆம் வயதில் இயேசு சபையில் சேர்ந்தார். மிகச் சிறந்த மறையுரையாளரான இவர், ஜப்பான் நாட்டில் சிறப்பாக மறைப்பணியாற்றினார். 1587 ஆம் ஆண்டு சோகுண்டோயோடோமி ஹிடேயோஷி Shogun Toyotomi Hideyoshi என்பவர் இட்ட கட்டளையின் பேரில் இப்புனிதர் பிடிக்கப்பட்டு தனித்தீவிற்கு கொண்டுச் செல்லப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இருப்பினும் இவர் ஆற்றியப் பணி மக்களிடையே தீப்போல பரவியது. இவரின் தோழர்களும் மறைப்பணியை சிறப்பாக ஆற்றினர். கிறிஸ்தவ மக்கள் பெருகினர். இதனால் சோகுன் டோயோடோமி ஆத்திரமடைந்து 25 தோழர்களையும் பிடித்து சிறையிலடைத்தான். பின்னர் நாகசாகி நகருக்கு இழுத்துச் செல்லப்பட்டு சிலுவையில் அடித்து கொல்லப்பட்டார்கள்


செபம்:
ஆற்றல் வழங்கும் எம் தந்தையே! இன்றைய நாளில் நினைவுகூரும் இப்புனிதர்களுக்கு நீர் சிலுவையின் வழியாக உமது எல்லையில்லா பேரின்ப வாழ்வை அளித்தீர். நாங்கள் உமது விசுவாசத்தில் நிலையாக நிலைத்திருந்து, இறை நம்பிக்கையை எங்களின் இறுதி மூச்சுவரை பற்றிக்கொள்ள உம் அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சி மன்றாடுகின்றோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

இன்றைய புனிதர் (பெப்ரவரி 6) ✠புனிதர் கொன்சாலோ கார்ஸியா

† இன்றைய புனிதர் †
(ஃபெப்ரவரி 6)

✠ புனிதர் கொன்சாலோ கார்ஸியா ✠
(St. Gonsalo Garcia)

ஃபிரான்சிஸ்கன் சபையின் குருத்துவம் பெறாத பொதுநிலை சகோதரர் மற்றும் மறைசாட்சி:
(Franciscan Lay Brother and Martyr)

பிறப்பு: ஃபெப்ரவரி 5, 1557
வாசை, மும்பை, போர்ச்சுகீசிய இந்தியா
(Vasai, Mumbar, Portuguese India)

இறப்பு: ஃபெப்ரவரி 5, 1597
நாகசாகி, ஜப்பான்
(Nagasaki, Japan)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: செப்டம்பர் 14, 1627
திருத்தந்தை எட்டாம் அர்பன்
(Pope Urban VIII)

புனிதர் பட்டம்: ஜூன் 8, 1862
திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்
(Pope Pius IX)

நினைவுத் திருநாள்: ஃபெப்ரவரி 6

முக்கிய திருத்தலங்கள்:
புனிதர் கொன்சாலோ கார்ஸியா ஆலயம், காஸ், வாசை
(St. Gonsalo Garcia Church, Gass, Vasai, India)

பாதுகாவல்:
ரோமன் கத்தோலிக்க உயர் மறைமாவட்டம், மும்பை
(Roman Catholic Archdiocese of Bombay, East Indian Community)

புனிதர் கொன்சாலோ கார்ஸியா, போர்ச்சுகீசிய இந்தியாவில் பிறந்து, ஜப்பான் நாட்டில் மறை சாட்சியாக மரித்த ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் இருபத்தாறு புனிதர்களுள் ஒருவர் ஆவார். இவர் ஒரு ஃபிரான்சிஸ்கன் பொதுநிலையினர் சகோதரர் (Franciscan Lay Brother) ஆவார். இந்தியாவில் பிறந்து, அருட்பொழிவு செய்யப்பட்ட முதல் புனிதரும் இவரேயாவார். மும்பை நகரின் வடக்கே, சுமார் முப்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மேற்கத்திய கடற்கரை நகரான வாசை என்னுமிடத்தில் பிறந்தார். இவர் வாழ்ந்த அக்காலத்தில், அப்பகுதி போர்ச்சுகீசிய காலணித்துவ ஆட்சியின்கீழ் இருந்தது.

இவரது தந்தை ஒரு போர்ச்சுகீசிய படை வீரர் ஆவார். தாயார் “கொங்கண்” (Konkan) மொழி பேசும் ஒரு இந்தியப் பெண் ஆவார். இவர், ஜப்பான் ஃபிரான்சிஸ்கன் சபைத்தலைவரான புனிதர் பீட்டர் பாப்டிஸ்டின் வலக்கரமாக இருந்தார்.

"குன்டி ஸ்லாவுஸ் கார்ஸியா" எனும் இயற்பெயர் கொண்ட இவர், வாசையில் பணியாற்றிய 'செபஸ்தியோ கான்கால்வ்ஸ்' என்னும் இயேசு சபை குருவிடம் கல்வி பயின்றார். இயேசு சபையினரிடமே கி.பி. 1564 முதல் 1572 வரை எட்டு வருடம் பயின்றார். தனது 15ம் வயதில் குரு செபஸ்தியோவுடன் ஜப்பான் சென்றார். ஜப்பானிய மொழியை இவர் எளிதில் கற்றதால், அம்மக்களின் நன்மதிப்பைப் பெற்றார். இவர் அங்கிருந்து ஆல்கோ சென்று வணிகம் செய்தார். அது தென்கிழக்காசியா முழுவதும் பல கிளைகள் கொண்டு பரவியது.

இவரின் கனவான இயேசு சபை குருவாவது நிறைவடையாமலேயே இவர் ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மணிலாவுக்கு பொதுநிலை மறைப்பணியாளராய் சென்றார். அங்கே ஃபிரான்சிஸ்கன் சபைக் குருவான பீட்டர் பாப்டிஸ்டினால் தூண்டப்பட்டு அச்சபையில் பொதுநிலை சகோதரராக சேர்ந்தார். தொழு நோயாளர்களோடு அங்கே பணியாற்றினார். அப்போதே அவர் அச்சபையில் திருநிலைப்பாட்டினைப் பெற்றார்.

மே 26, 1592ல் ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் எசுபானிய ஆளுனரால் அரசு சார்பாக ஜப்பானுக்கு அனுப்பப்பட்டார். அங்கே நான்காண்டுகள் பணிபுரிந்த பின்னர், அப்போது ஜப்பானிய சர்வாதிகாரியால் ஆட்சி விரோதச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் தங்கியிருந்த மியாகோ (கியோத்தோ) என்னும் இடத்திலிருந்த மடத்திலேயே 8 டிசம்பர் 1596 அன்று சிறைவைக்கப்பட்டார். சிலநாட்களுக்கு பின் மாலை செபம் செய்து கொண்டிருந்தபோது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஜனவரி 3, 1597 அன்று கைது செய்யப்பட்ட 26 பேர்களுடைய இடது காதுகள் அறுத்தெறியப்பட்டன. அவற்றை கிறிஸ்தவர்கள் எடுத்து பாதுகாத்து வந்தனர்.

ஃபெப்ரவரி 5, 1597 அன்று அவர்களை சிலுவையில் அறைய ஆணை பிறப்பிக்கப்ப்பட்டது. சிலுவையில் அறையும் இடத்தை கார்சியா முதலில் அடைந்தார். அவர் முதலில் அங்கிருந்த ஒரு சிலுவையின் அருகில் சென்று, "இது எனக்கானதா?" என்றார். "இது இல்லை" என்று பதில் கூறி அவரை வேறு சிலுவையிடம் கூட்டிச்சென்றனர். சிலுவையை அடைந்ததும் முழந்தாள் பணிந்து அதனைத் தழுவினார். அவரோடு கைது செய்யப்பட்ட மற்றெல்லோரையும் சிலுவையில் அறைந்தார்கள். பின்பு அவரை இரண்டு ஈட்டி கொண்டு இதயத்தில் குத்தினர். இவர் சிலுவையில் சாகும்வரை இறை புகழ் பாடிக்கொண்டே இருந்தார். 

புனிதர் பட்டமளிப்பு:
கி.பி. 1927ல் கார்சியாவும் அவருடன் இரத்த சாட்சிகளானவர்களும் வணக்கத்திற்குரியவர்கள் என திருத்தந்தை எட்டாம் அர்பன் (Pope Urban VIII) அவர்களால் அறிவிக்கப்பட்டனர். ஜூன் 8, 1862 அன்று திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் (Pope Pius IX) அவர்களால் இவர்கள் அனைவரும் புனிதர்களாக அருட்பொழிவு செய்யப்பட்டது.

இவர் ஒரு போர்ச்சுகீசிய தந்தைக்கும், கொங்கண் தாய்க்கும் பிறந்தவராதலால் இவர் இந்தியப் புனிதராக கருதப்படுவதில்லை. இவர் கத்தோலிக்க திருச்சபையில் அதிகாரப்பூர்வ பட்டியலில் போர்ச்சுகீசிய புனிதராவார்.

இன்றைய புனிதர் † (ஃபெப்ரவரி 6) ✠ புனிதர் ஃபிரான்செஸ்கோ ஸ்பைனெல்லி

குரு:
(Priest)

பிறப்பு: ஏப்ரல் 14, 1853
மிலன், லொம்பார்டி-வெனீஷியா இராச்சியம்
(Milan, Kingdom of Lombardy-Venetia)

இறப்பு: ஃபெப்ரவரி 6, 1913 (வயது 59)
ரிவோல்டா டி'அ்டா, கிரெமோனா, இத்தாலி இராச்சியம்
(Rivolta d'Adda, Cremona, Kingdom of Italy)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திப்பேறு பட்டம்: ஜூன் 21, 1992
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

புனிதர் பட்டம்: அக்டோபர் 14, 2018
திருத்தந்தை ஃபிரான்சிஸ்
(Pope Francis)

நினைவுத் திருநாள்: ஃபெப்ரவரி 6

பாதுகாவல்:
ஆசிர்வதிக்கப்பட்ட அருட்சாதனத்தை ஆராதிக்கும் அருட்சகோதரியர் சபை
(Sisters Adorers of the Blessed Sacrament)

புனிதர் ஃபிரான்செஸ்கோ ஸ்பைனெல்லி, இத்தாலி நாட்டின் ரோமன் கத்தோலிக்க  திருச்சபையின் குருவும், "ஆசிர்வதிக்கப்பட்ட அருட்சாதனத்தை ஆராதிக்கும் அருட்சகோதரியர் சபை" (Sisters Adorers of the Blessed Sacrament) எனப்படும் சபையை நிறுவியவருமாவார். இவர், "புனிதர் கெல்ட்ரூட் காமன்சோலி"  (Saint Geltrude Comensoli) மற்றும் அருளாளர் "லுய்கி மரியா பலஸ்ஸோலோ" (Blessed Luigi Maria Palazzolo) ஆகியோரின் சமகாலத்தவராவார். மேலும், இவருக்கு காமன்சோலியுடன் முந்தைய ஒத்துழைப்பு இருந்தது. ஐவரும் காமன்சோலியும் இணைந்து "பெர்கமோ" (Bergamo) நகரில் ஒரு மத கல்வி நிறுவனத்தை நிறுவினார்கள். அதற்கு முன்னரே, இவர்களின் உறுப்பினர்களிடையே இரட்டை பிளவு காரணமாக, ஸ்பைனெல்லி தமது பணிகளை விட்டு விலக நேர்ந்தது.

கி.பி. 1853ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 14ம் நாளன்று, வடக்கு இத்தாலியின் "லொம்பார்டி" (Lombardy) பிராந்தியத்தின் தலைநகரான "மிலன்" (Milan) நகரில் பிறந்த ஃபிரான்செஸ்கோ ஸ்பைனெல்லிக்கு அவர் பிறந்த மறுதினம் திருமுழுக்கு தரப்பட்டது. அவர் தமது சிறு வயதில், தமது பெற்றோருடனும், உடன்பிறந்தோருடனும் மிலனிலிருந்து (Milan) "கிரெமோனா" (Cremona) நகருக்கு புலம்பெயர்ந்து சென்றனர். அவர், கி.பி. 1871ம் ஆண்டின் கோடை காலத்தில், "வர்கோ" நகரில், தமக்கிருந்த கடுமையான முதுகெலும்பு பிரச்சனைக்கு மருத்துவம் செய்து குணப்படுத்தினார். தனது குழந்தைப் பருவத்தில், ஏழை எளியவர்களுக்கும், நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் அடிக்கடி கிடைக்கும் சந்தர்ப்பங்களில் தமது அம்மாவுடன் சேர்ந்து, சக தோழர்களுக்கு பொம்மை நிகழ்ச்சிகளை நடத்திக் காட்ட விரும்பினார்.

அவரது ஆன்மீக வாழ்க்கைக்கான அழைப்புக்கு, அவரது தாயாரும், குருவாக இருந்த அவரது மாமா "பியேட்ரோ காக்ளியரொளி" (Pietro Cagliaroli) என்பவரும் அவருக்கு ஆதரவு அளித்தனர். பெர்கமோ நகரில் இறையியல் கற்கத் தொடங்கிய இவரை இவரது நண்பர் "அருளாளர் லுய்கி மரிய பலஸ்ஸோ"  (Blessed Luigi Maria Palazzolo) என்பவரும் ஊக்கப்படுத்தினார். கி.பி. 1875ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 14ம் தேதி, குருத்துவ அருட்பொழிவு பெற்றார். விரைவிலேயே, திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் (Pope Pius IX) அவர்களின் பொது அழைப்பினை ஏற்று, யூபிலி ஆண்டு நிகழ்வுகளில் பங்கேற்க ரோம் நகர் பயணமானார்.

அங்கே, மரிய அன்னை பேராலயத்திற்கும் சென்ற ஸ்பைநெல்லி, அங்கிருந்த குழந்தை இயேசு கெபியினருகே, மறையுரைச் சிந்தனைகளில் ஆழ்ந்தார். அத்துடன், நற்கருணை ஆராதணையில் பெண்கள் ஈடுபடுவதாக இவர் கண்ட திருக்காட்சி, தாம் சொந்தமாக ஒரு சபையை நிறுவ இவருக்கு உந்துசக்தியாக விளங்கியது. ரோமிலிருந்து திரும்பியதும் ஒரு மாலை பள்ளியில் கல்விப் பணிகளை நடத்தினார்.

கி.பி. 1882ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 15ம் தேதி, பெர்கமோ (Bergamo) நகரில், புனிதர் கெல்ட்ருட் காமென்சோலி (Saint Geltrude Comensoli) உடன் இணைந்து "நற்கருணை அருட்சகோதரியார்" (Sacramentine Sisters) சபையை தொடங்கினார். இது, நற்கருணைக்கு அர்ப்பணிக்கப்பட்ட இச்சபை, நற்கருணை ஆராதனைப் பணிகளில் மட்டுமே ஈடுபடும். சபையின் முதல் கான்வென்ட், "வயா சான் அன்டோனினோ'வில்" (Via San Antonino) திறக்கப்பட்டது. நகரில் ஏற்பட்ட தொடர் பேரழிவுகள் மற்றும் நிதி நெருக்கடிகளின் காரணமாக, இந்த இல்லம் தோல்வியடைந்த காரணத்தால், கி.பி. 1889ம் ஆண்டு, மார்ச் மாதம், 4ம் தேதியன்று, அதை விட்டுவிட வேண்டிய கட்டாயம் ஸ்பைநெல்லிக்கு ஏற்பட்டது.

பெர்மாமோவில் நடந்ததை எண்ணி மன வேதனையடைந்த ஸ்பைநெல்லி, "கிரெமோனா" (Cremona) நகரிலுள்ள "ரிவோல்டா டி'அ்ட்டா" (Rivolta d'Adda) எனும் இடத்துக்கு வந்து சேர்ந்தார். அவரது குருத்துவ கடமைகளை நிறைவேற்றுவதற்காக கிரெமோனாவுக்கு வருமாறும், மறைமாவட்ட ஆயர் அவரை அழைத்திருந்தார். கி.பி. 1892ம் ஆண்டு, அவர், "ஆசிர்வதிக்கப்பட்ட அருட்சாதனத்தை ஆராதிக்கும் அருட்சகோதரியர் சபையை" (Sisters Adorers of the Blessed Sacrament) நிறுவினார். இச்சபைக்கு, பின்னாளில் கி.பி. 1897ம் ஆண்டு, "கிரெமோனா ஆயர்" (Bishop of Cremona) "கெரேமியா பொனோமெல்லி" (Geremia Bonomelli) அவர்களின் மறைமாவட்ட அங்கீகாரம் கிட்டியது.

ஃபிரான்செஸ்கோ ஸ்பைனெல்லி, கி.பி. 1913ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 6ம் தேதி மரித்தார்.

கி.பி. 1926ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 11ம் நாளன்று, இவரது சபைக்கு, திருத்தந்தை அவையின் பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது. பின்னர், கி.பி. 1932ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 27ம் நாளன்று, திருத்தந்தை பதினோராம் பயஸ் (Pope Pius XI) முழு அங்கீகாரம் வழங்கினார். இவர்களது சபை, "அர்ஜென்ட்டினா" (Argentina) மற்றும் "செனெகல்" (Senegal) உள்ளிட்ட நாடுகளில் செயல்பாட்டில் உள்ளது. 2005ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, மொத்தமிருந்த 59 இல்லங்களில், 436 மறைப்பணியாளர்கள் இருந்தனர்.