புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

16 August 2020

அரசர் முதலாம் ஸ்டீபன் Stephen I von Ungarnஹங்கேரியின் தேசிய புனிதர் August 16

இன்றைய புனிதர் :
(16-08-2020)

அரசர் முதலாம் ஸ்டீபன் Stephen I von Ungarn
ஹங்கேரியின் தேசிய புனிதர்
பிறப்பு : 969 
கிரான் Gran, ஹங்கேரி
    
இறப்பு : 15 ஆகஸ்டு 1038,
ஹங்கேரி
பாதுகாவல்: ஹங்கேரி

இவர் ஏறக்குறைய 1000 ஆம் ஆண்டில் திருமுழுக்கு பெற்று, ஹங்கேரி நாட்டு மன்னராக முடிசூட்டப்பட்டார். தனது 20 ஆம் வயதில் பவேரியா நாட்டு அரசர் புனித 2 ஆம் ஹென்றியின் சகோதரி கிசேலா(Giesela) என்பவரை திருமணம் செய்துகொண்டார். தன் தந்தையின் இறப்பிற்குப்பின் "மாகியர்" (Magiar) என்ற சாதியினருக்கு தலைவராக பொறுப்பேற்றார். தம் மக்களை ஆட்சிபுரிவதில் நீதியும், நல்லிணக்கமும், இறைப்பற்றும் கொண்டு விளங்கினார். திருச்சபையின் சட்டதிட்டங்களை மிக நுணுக்கமாக கடைபிடித்தார். தன் நாட்டு மக்களின் நலனில் அக்கறை கொண்டு, அவர்களின் தேவைகளை நிறைவேற்றி வாழ்ந்தார். 

இவர் அனுமதியின்றி தவித்த மற்ற நாடுகளுடன் தொடர்புகொண்டு, அமைதியை ஏற்படுத்தினார். தன் நாட்டு மக்களை இறையுணர்வில் வளர்த்தெடுத்தார். நாடு முழுவதும் பல புதிய மறைமாவட்டங்களை உருவாக்கினார். பல துறவற சபையினரை தன் நாட்டிற்கு வரவழைத்து, கிறிஸ்துவ விசுவாசத்தைப் பரப்பினார். பல துறவற மடங்களையும், ஆலயங்களையும் கட்டினார். தன் நாட்டு மக்கள் அனைவரும் கிறிஸ்துவர்களாக வாழ வழிவகுத்தார். கிறிஸ்துவர் அல்லாதவர்களுடன் தொடர்புகொள்வதை தடுத்தார். செபம், தவம், இவைகளில் வளர நாட்டு மக்களை துறவிகள், குருக்களின் வழியாக தூண்டினார். 

ஸ்டீபன் தன் நாடு முழுவதிலும் பல குருக்களையும், கன்னியர்களையும், ஆயர்கலையும் உருவாக்கினார். நாடு முழுவதிலுமே திருச்சபையின் வாழ்வை பெரிதும் ஊக்கப்படுத்தி வளர்த்தார். ஹங்கேரி நாட்டில் திருச்சபை வளர அன்று இவர் இட்ட உரமானது. இன்றும் தளைத்து வளர்ந்து கிறிஸ்துவ நாடாக திகழ்கின்றது. இவரிடம் இறைவன் ஒப்படைத்த மக்களை, அவர் வழியில் நடத்தி சென்றார். இவர் செய்த இறைப்பணியால் இவர் இறந்தபிறகும் இவரின் வலது கையானது. அழியாமல் இருந்தது. தன் வாழ்நாள் முழுவதுமே தாழ்ச்சியிலும், நீதியை கடைப்பிடிப்பதிலும், அமைதியிலும் மிக சிறந்தவராக திகழ்ந்தார். 


செபம்:
முதலும் முடிவுமான இறைவா! உம்மையே முழுமுதலாக கொண்டு, உம்மை மட்டுமே தன் நாட்டு மக்களில் மையமாக வைத்து, வாழ்ந்த புனித ஸ்டீபனின் அருஞ்செயல்களை நினைத்து, உமக்கு நன்றி நவில்கின்றோம், அவர் காட்டிய இறைவழியில் அம்மக்களை நீர் எந்நாளும் உடனிருந்து வழிநடத்தியருள் வேண்டுமாய் இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Saint of the Day : (16-08-2020)

St. Stephen of Hungary

St. Stephen was from a very noble family and was born in the year 997 to father Prince Geza and mother Sarolt of Hungary. He married Giselle, the daughter of Duke Henry-Ii of Bavaria. He took very sincere efforts to spread Christianity and extended patronage to Church leaders. St. Stephen was anointed as king of Hungary by Pope Sylvester-II on the Christmas day in the year 1001, with the consent of the Holy Roman Emperor Otto-III. St. Stephen dedicated his crown to Holy Mary, during the coronation. His only son Emeric died after being wounded in a hunting expedition in the year 1031. Therefore St. Stephen was having no son left to rule his Kingdom. So in his death bed he raised the Holy Crown by his right hand and prayed to the Holy Mary to take the Hungarians as Her subjects and to become the Queen of Hungarians. He died on August 15, 1038, on the commemoration day of the Assumption of Mary.

St. Stephen’s right hand is kept as a relic and is called as the Holy Right by Hungarians. His right hand remains uncorrupted due to the reason that with this hand he raised the Holy Crown towards heaven and prayed to the Virgin Mary. The right hand is now in the Basilica of King Saint Stephen in Budapest.

He is venerated as the patron saint of masons, stone cutters and brick layers. He was canonized by Pope Gregory-VII on August 20, 1083.

---JDH---Jesus the Divine Healer---
† இன்றைய புனிதர் †
(ஆகஸ்ட் 16)

✠ ஹங்கேரியின் புனிதர் முதலாம் ஸ்டீஃபன்  ✠
(St. Stephen I of Hungary)

ஹங்கேரியின் அரசர்:
(King of Hungary)

பிறப்பு: கி.பி. 975
எஸ்டர்காம், ஹங்கேரி
(Esztergom, Principality of Hungary)

இறப்பு : ஆகஸ்டு 15, 1038,
எஸ்டர்காம், ஹங்கேரி அரசு
(Esztergom or Székesfehérvár, Kingdom of Hungary)

புனிதர் பட்டம் : 1083
திருத்தந்தை ஏழாம் கிரகோரி
(Pope Gregory VII)

பாதுகாவல்: ஹங்கேரி

நினைவுத் திருநாள் : ஆகஸ்ட் 16

புனிதர் முதலாம் ஸ்டீஃபன், கி.பி. 997ம் ஆண்டு முதல் கி.பி. 1000 அல்லது 1001ம் ஆண்டு வரையான காலத்தில் பதவியிலிருந்த ஹங்கேரியர்களின் கடைசி மகா இளவரசரும் (Grand Prince of the Hungarians), கி.பி. 1000 அல்லது 1001ம் ஆண்டு முதல், 1038ம் ஆண்டில் அவர் இறக்கும் வரை ஆட்சியிலிருந்த ஹங்கேரியின் முதல் அரசனும் (First King of Hungary) ஆவார். இவர் பிறந்தபோது, இவருக்கு பேகனிய பெயரான (Pagan name) “வஜ்க்” (Vajk) என்ற பெயர் இடப்பட்டது. இவரது திருமுழுக்கு பற்றின விவரங்கள் தெரியவில்லை. ஹங்கேரி நாட்டின் மகா இளவரசர் “கேஸா” மற்றும் “சரோல்ட்” (Grand Prince Géza and Sarolt) ஆகியோர் இவரது பெற்றோர் ஆவர். இவரது பெற்றோர் இருவருமே திருமுழுக்கு பெற்றிருப்பினும், இவர்களது குடும்ப உறுப்பினர்களில், பக்தியுள்ள கிறிஸ்தவரான முதல் உறுப்பினர் ஸ்டீஃபன் ஆவார். தூய ரோம பேரரசன் “இரண்டாம் ஹென்றியின்” (Henry II, Holy Roman Emperor) சகோதரியான “கிசேலாவை” (Gisela of Bavaria) திருமணம் செய்துகொண்டார்.

கி.பி. 997ம் ஆண்டு, தமது தந்தை இறந்ததன் பிறகு, ஆட்சி கட்டிலில் அமர்வதற்காக (Pagan warriors) என்ற படை வீரர்களின் துணை கொண்டிருந்த 'கொப்பாணி' (Koppány) என்ற தமது உறவினர்களுக்கெதிராக போராட வேண்டியிருந்தது. தமது உறவினர்களான கொப்பாணியை வென்ற ஸ்டீஃபன், திருத்தந்தை இரண்டாம் சில்வெஸ்ட்டர் (Pope Sylvester II) அவர்கள் அனுப்பிய கிரீடத்தை அணிந்து ஹங்கேரி நாட்டு மன்னராக முடிசூட்டப்பட்டார். ஹங்கேரி நாட்டின் கடைசி இளவரசரும் முதலாம் அரசரும் இவரேயாவார்.

தன் தந்தையின் மரணத்தின்பின் "மாகியர்" (Magiar) என்ற சாதியினருக்கு தலைவராக பொறுப்பேற்றார். தம் மக்களை ஆட்சி புரிவதில் நீதியும், நல்லிணக்கமும், இறைப்பற்றும் கொண்டு விளங்கினார். திருச்சபையின் சட்டதிட்டங்களை மிக நுணுக்கமாக கடைபிடித்தார். தன் நாட்டு மக்களின் நலனில் அக்கறை கொண்டு, அவர்களின் தேவைகளை நிறைவேற்றி வாழ்ந்தார்.

இவர் அமைதியின்றி தவித்த மற்ற நாடுகளுடன் தொடர்புகொண்டு, அமைதியை ஏற்படுத்தினார். தன் நாட்டு மக்களை இறையுணர்வில் வளர்த்தெடுத்தார். நாடு முழுவதும் பல புதிய மறைமாவட்டங்களையும், மூன்று பெனடிக்டின் மடாலயங்களையும் உருவாக்கினார். பல துறவற சபையினரை தன் நாட்டிற்கு வரவழைத்து, கிறிஸ்தவ விசுவாசத்தைப் பரப்பினார். பல துறவற மடங்களையும், ஆலயங்களையும் கட்டினார். தன் நாட்டு மக்கள் அனைவரும் கிறிஸ்தவர்களாக வாழ வழிவகுத்தார். கிறிஸ்தவர் அல்லாதவர்களுடன் தொடர்புகொள்வதை தடுத்தார். செபம், தவம், இவைகளில் வளர நாட்டு மக்களை துறவிகள், குருக்களின் வழியாக தூண்டினார்.

ஸ்டீஃபன் தன் நாடு முழுவதிலும் பல குருக்களையும், கன்னியர்களையும், ஆயர்களையும் உருவாக்கினார். நாடு முழுவதிலுமே திருச்சபையின் வாழ்வை பெரிதும் ஊக்கப்படுத்தி வளர்த்தார். ஹங்கேரி நாட்டில் திருச்சபை வளர அன்று இவர் இட்ட உரமானது. இன்றும் தளைத்து வளர்ந்து கிறிஸ்தவ நாடாக திகழ்கின்றது. இவரிடம் இறைவன் ஒப்படைத்த மக்களை, அவர் வழியில் நடத்தி சென்றார். தன் வாழ்நாள் முழுவதுமே தாழ்ச்சியிலும், நீதியை கடைப்பிடிப்பதிலும், அமைதியிலும் மிகச் சிறந்தவராக திகழ்ந்தார். 

கி.பி. 1038ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 15ம் நாளன்று மரித்த ஸ்டீஃபன், “ஸ்செக்ஸ்ஃபெர்வர்” (Székesfehérvár) எனுமிடத்தில் கட்டப்பட்டு, அன்னை மரியாளுக்கு அர்ப்பணித்திருந்த பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார். அவருடைய இறப்பு, பல தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டுப் போர்களை ஏற்படுத்தியது. கி.பி. 1083ம் ஆண்டில், முதலாம் ஸ்டீஃபனும், அவரது மகனான “எமெரிக்கும்” (Emeric), “க்ஸனாட்” (Csanád) மறைமாவட்டத்தின் ஆயர் “கெரார்ட்” (Gerard) ஆகிய மூவரும் திருத்தந்தை “ஏழாம் கிரகோரியால்” (Pope Gregory VII) புனிதர்களாக அருட்பொழிவு செய்விக்கப்பட்டனர். ஸ்டீஃபன், ஹங்கேரி மற்றும் அண்டை பிரதேசங்களில் பிரபலமான புனிதர் ஆவார். ஹங்கேரியில், அவருடைய நினைவுத் திருவிழா (ஆகஸ்ட் 20 அன்று கொண்டாடப்படுகிறது) மாநிலம் உருவாக்கப்பட்டதை நினைவுகூரும் ஒரு பொது விடுமுறை நாளுமாகும்.

கன்னி மரியாவின் விண்ணேற்புப் பெருவிழா August 15

இன்று திருஅவையானது புனித கன்னி மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. புனித கன்னி மரியா தனது மண்ணக வாழ்வை முடித்துகொண்டவுடன், உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை இவ்விழா நமக்கு எடுத்துரைக்கிறது.

வரலாற்றுப் பின்னணி:
கி.பி.நான்காம் நூற்றாண்டிலிருந்து கீழைத் திருஅவையில் இவ்விழா டார்மிஷன் என்ற பெயரில் அதாவது ‘அன்னை ஆண்டவரில் துயில் கொள்கிறார்’ என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருவதற்கான வரலாற்றுக் குறிப்புகள் இருக்கின்றன. அதன்பிறகு எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த யோவான் டமாசின் என்பவர், “அன்னை மரியா ஆண்டவர் இயேசுவைப் பெற்றெடுப்பதன் பொருட்டு, கருவிலே பாவக்கறையின்றி உதித்ததால், அவர் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்” என்று கூறுவார்.

1568 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த ஐந்தாம் பயஸ் என்பவர் மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவை உலகம் முழுவதும் கொண்டாடப் பணித்தார். 1950 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் நாள், மரியா உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்ற நம்பிக்கைப் பிரகடனமானது இயற்றப்பட்டது. பின்னர் இரண்டாம் வத்திக்கான் சங்கமானது, “மாசற்ற புனித கன்னி மரியா மண்ணக வாழ்வை முடித்ததும், உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்று கட்டியம் கூறியது (திச 59). இவ்வாறுதான் புனித கன்னி மரியாவின் விண்ணேற்புப் பெருவிழா உலக முழுவதும் கொண்டாடும் நிலை உருவானது.

ஆகஸ்ட் 15)✠ புனிதர் டார்ஸிசியஸ் ✠(St. Tarcisius)

† இன்றைய புனிதர் †
(ஆகஸ்ட் 15)

✠ புனிதர் டார்ஸிசியஸ் ✠
(St. Tarcisius)

நற்கருணை மறைசாட்சி:
(Martyr of the Eucharist)
பிறப்பு: தெரியவில்லை

இறப்பு: கி.பி. 3ம் நூற்றாண்டு
ரோம் (Rome)

ஏற்கும் சபைகள்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
ஆங்கிலிக்கன் ஒன்றியம்
(Anglicanism)

முக்கிய திருத்தலம்:
கேபிட்டில் இருக்கும் சான் சில்வெஸ்ட்ரோ, ரோம்
(San Silvestro in Capite, Rome)

நினைவுத் திருநாள்: ஆகஸ்ட் 15 (ரோமன் தியாகவியல்)

பாதுகாவல்: பலிபீட சிறுவர்கள் (Altar Servers) மற்றும் புதுநன்மை அல்லது, முதல் நற்கருணை (First Communicants) வாங்குவோர்

புனிதர் டார்ஸிசியஸ், கி.பி. 3ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த, ஆதிகால கிறிஸ்தவ திருச்சபையின் மறைசாட்சி ஆவார். அவரைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை எனினும், கி.பி. 4ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆட்சிபுரிந்த,  "திருத்தந்தை முதலாம் டமாஸஸ்" (Pope Damasus I) அவர்களது கவிதைத் தொகுப்புக்களிலிருந்து இவரைப்பற்றின விபரங்கள் வெளிப்பட்டன.

டார்ஸிசியஸ் ஒரு சிறுவனாக இருந்தபோது, ரோமப் பேரரசு, பேரரசன் வலேரியன் (Valerian) என்பவனால் ஆளப்பட்டது. கிறிஸ்தவர்கள் இயேசுவை நேசிப்பதாலும், அவருடைய போதனையினாலும் அவர் வெறுத்தார். நிலைமைகள் மோசமாக இருந்த அழுக்கு சிறைகளில் அவர்கள் தூக்கி எறியப்பட்டனர். தியாகிகளாக இருந்த அவர்களில் பலர், அவர்களின் கிறிஸ்தவ நம்பிக்கைகளுக்காக கொல்லப்பட்டனர்.

இந்த கிறிஸ்தவர்கள் எவ்வாறு மறைசாட்சிகள் ஆனார்கள்? அவர்களில் சிலர் அடித்து கொல்லப்பட்டனர். மற்றவர்கள் எரிக்கப்பட்டனர். மற்றும், அனைத்தையும் விட மிகக் கொடூரமானது, அவர்களில் பலர் "கொலிசியம்" (Coliseum) என்று அழைக்கப்படும் ஒரு பெரிய அரங்கில் வீசப்பட்டனர் (இது இன்றும் உள்ளது). அங்கே அவர்கள் சிங்கங்களால் உண்ணப்பட்டனர். இந்த கொடூரமான கொடுமையைப் பார்த்து அதை ரசித்த சக்கரவர்த்திக்கும் அவரது நண்பர்களுக்கும் இது ஒரு விளையாட்டு போல இருந்தது. இருப்பினும், கிறிஸ்தவர்கள் இயேசுவை விசுவாசிப்பதனால், இவை அனைத்தையும் சகித்தார்கள்.

பேரரசனின் ஆட்களிடம் பிடிபடுவதைத் தவிர்ப்பதற்கு, கிறிஸ்தவர்கள் ஜெபிக்க விரும்பினால், தங்கள் வீடுகளில் ரகசியமாக சந்திக்க வேண்டியிருந்தது. நிலைமை மிகவும் ஆபத்தானதாக மாறியபோது, அவர்கள் நிலத்தடி அறைகள் மற்றும் "கேடகோம்ப்ஸ்" (Catacombs) எனப்படும் பத்திகளைக் கட்டினர். இதனால் அவர்கள் பாதுகாப்புடன், ஒன்றாக சந்திக்க முடிந்தது. திருப்பலிகளை ரகசியமாக கொண்டாட, அவர்கள் "கிரிப்ட்கள்" (Crypts) என்று அழைக்கப்படும் தரையில் கீழே பெரிய அறைகளை கட்ட வேண்டியிருந்தது. அங்கு அவர்கள் இறந்தவர்களையும் அடக்கம் செய்தனர்.

கேடகோம்ப்களுக்கான நுழைவாயில்கள் மறைக்கப்பட்டிருந்தன. அவை வழக்கமாக நகரத்திற்கு வெளியே கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் இருந்தன. இதே கேடகோம்ப்கள் இன்றும் உள்ளன. அவற்றை ரோம் செல்லும் பார்வையாளர்கள் காணலாம்.

அங்கேதான் அவர்கள் ஜெபிக்கவும், தங்கள் விசுவாசத்தைப் படிக்கவும், திருப்பலி கேட்கவும், புனித ஒற்றுமையைப் பெறவும் கூடினர். தைரியமான ஆயர்கள் மற்றும் பாதிரியார்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்ததால் இது சாத்தியமானது. இதனால் மக்கள் இயேசுவின் உடலையும் இரத்தத்தையும் நற்கருணைக்குள் பெற முடிந்தது. கேடகோம்ப்களின் நுழைவாயில்களை அறிவதை இரகசியமாக பாதுகாப்பதில் கிறிஸ்தவர்கள் எவ்வளவு கவனமாக இருந்தபோதிலும், சில சமயங்களில் புறமதத்தினர் அவற்றைக் கண்டுபிடித்தனர். எனவே, ஏராளமான கிறிஸ்தவர்கள் பிடிபட்டனர் அல்லது சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கு, ஒவ்வொரு நாளும், அவர்கள் கொல்லப்படுவார்கள் என்று எதிர்பார்த்தார்கள். அவர்கள் அனுபவித்த துன்பங்கள் ஏராளமாக இருந்தபோதிலும், அவர்கள் நற்கருணை இயேசுவைப் பெற விரும்பினார்கள்.

ஒரு நாள், ஆயர் ஒருவர், இதுபோன்ற ஒரு கேடகோம்ப்பில், ஒரு மாபெரும் புனித திருப்பலியினை கொண்டாடவிருந்தபோது, சிறையில் கைதிகளாயிருந்த அவரது சக ஆயர்கள் மற்றும் பாதிரியார்களிடமிருந்து அவருக்கு ஒரு கடிதம் வந்தது. தயவுசெய்து புனித நற்கருணையை அவர்களுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டனர். இயேசு அவர்களுடன் இருந்தால், அவர்களது அச்சம் குறைவாக இருக்கும், அவரை நேசிக்கும் காரணத்துக்காக ஒரு தியாகியின் மரணத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வார்கள் என்பதை அவர்கள் அறிந்தார்கள். புனித நற்கருணையை கைதிகளிடமும் நோயுற்றவர்களிடமும் எடுத்துச் செல்வது மிகவும் ஆபத்தானது என்பதால், ஆயருக்கு இது ஒரு பிரச்சினையாக இருந்தது.

புனித திருப்பலியினை தொடங்குவதற்கு முன், ஆயர் அங்குள்ள மக்களிடம், நற்கருணை இயேசுவை கைதிகளுக்கு எடுத்துச் செல்ல சிறந்த நபரைத் தேர்வுசெய்ய ஜெபிக்கும்படி கேட்டார். பாதிரியார்கள் அவ்வாறு செய்வது இப்போதுள்ள காலகட்டத்தில் மிகவும் ஆபத்தானது என்பதால், சந்தேகத்தைத் தூண்டாத வேறு சில நல்லவர்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியம் என்றார்.

திருப்பலி முடிந்தவுடன், ஆயர், ‘இந்த துணிச்சலான பணியை யார் செய்ய தயாராக இருக்கிறீர்கள்’ என்று கேட்டார்.  டார்ஸிசியஸ் என்ற பலிபீட சேவை சிறுவன் ஒருவன் எழுந்து நின்று, “என்னை அனுப்புங்கள்” என்றான். சிறுவன் மிகவும் இளமையாக இருந்ததால், அது ஆபத்தில் முடியக்கூடும் என்று ஆயர் நினைத்தார். ஆனால் டார்ஸிசியஸ், தாம் மிகவும் இளமையாக இருப்பதால் யாரும் தம்மை சந்தேகிக்க மாட்டார்கள் என்று, ஆயரை நம்ப வைத்தான். நற்கருணையில் வாழும் இயேசுவிடம் டார்ஸிசியஸ் வைத்திருந்த ஆழ்ந்த அன்பை எல்லா கிறிஸ்தவர்களும் அறிந்திருந்தனர். எனவே ஆயர், சிறுவனின் வாய்ப்பை தர ஒப்புக்கொண்டார்.

ஒரு துணியில் பொதியப்பட்டு, சிறு பேழை ஒன்றினுள் வைக்கப்பட்ட சில நற்கருணைகள்,  டார்ஸிசியசிடம் ஒப்படைக்கப்பட்டன. டார்ஸிசியஸ் அதனை, தமது மார்புக்கு மேலாக உள்ள அங்கியினுள்ளே மறைத்துக்கொண்டார். தன்னுடைய பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்ட பரலோக பொக்கிஷங்களை நினைவில் கொள்ளும்படி ஆயர் கேட்டுக்கொண்டார். உண்மையாகவே இயேசு வாழும் இந்த புனிதமான அருட்பிரசாதனங்களை உண்மையுடனும் பாத்திரமாகவும் பாதுகாக்க, நெரிசலான தெருக்களைத் தவிர்க்குமாறு வேண்டினார். அவற்றை விட்டுவிடுவதைவிட,  தாம் தமது உயிரையே விட்டுவிடுவதாக கூறிய டார்ஸிசியஸ் புனிதப் புதையலான அவற்றை பற்றிக்கொண்டு சிறை நோக்கி புறப்பட்டார்.

"நோட்ரே டேமின்" (Notre Dame) அருட்சகோதரி ஒருவர், இங்கிருந்து கதையை எடுத்துக்கொள்கிறார்:

ஓ, எங்கள் ஆசீர்வதிக்கப்பட்ட இறைவனை தனது இதயத்திற்கு மிக நெருக்கமாக சுமந்தபோது டார்ஸிசியஸ் எவ்வளவு மகிழ்ச்சியையும், பெருமையையும் உணர்ந்தார்! அவர் கடந்து வந்த இடங்களையோ மக்களையோ விட்டுவிடும் எண்ணங்கள் அவருக்கு இல்லை. அவர் சுமந்த இயேசுவைப் பற்றி மட்டுமே நினைத்திருந்தார்.

"ஓ, அன்புள்ள இயேசுவே, நான் உன்னை எப்படி நேசிக்கிறேன்," என்று அவர் கிசுகிசுத்தார். "உங்கள் சின்னஞ்சிறிய தூதராக என்னைத் தேர்ந்தெடுத்திருப்பது எவ்வளவு நல்லது. சிறையில் இருக்கும் இந்த நல்ல மனிதர்களைப் போல நானும் உங்களுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் மனமுவந்து துன்பப்படுவேன், இறப்பேன். ஒருவேளை, ஒரு நாள், நீங்களும் என் உயிரை உங்களுக்காக அர்ப்பணிக்க அனுமதிப்பீர்கள்.”

இது போன்ற நேசமிகு வார்த்தைகளை கிசுகிசுத்தவாறு, அவர் விரைவாகச் சென்றார். அவர் இப்போது நெடுஞ்சாலையிலிருந்து வெளியேறி கேடகோம்ப் சாலையில் இருந்தார். அங்கு அவர் தனது பள்ளித் தோழர்கள் உள்ள ஒரு குழுவைக் கடந்தார். விளையாடுவதற்கு ஒரு அணியை உருவாக்க எண்ணிய அவர்களுக்கு ஒரே ஒரு நபர் தேவைப்பட்டார். டார்ஸிசியஸைப் பார்த்த அவர்கள், அவரை நிறுத்தி அவர்களுடன் சேர அழைத்தனர்.

"நான் வருந்துகிறேன், ஆனால் நான் ஒரு முக்கியமான செய்தி கொண்டுபோகிறேன்" என்ற அவர், விரைந்து சென்றார். ஆனால் அவரைப் பிடித்துக்கொண்ட சிறுவர்கள், அவரை விட மறுத்தனர்.

டார்ஸிசியஸ் தனது கைகளை மார்பகத்துடன் இறுக்கமாகப் பிடித்திருப்பதைப் பார்த்த ஒருவன், "உன்னிடம் என்ன இருக்கிறது நான் பார்க்கிறேன்" என்றான்.

"இல்லை, இல்லை," என்று டார்ஸிசியஸ் அழுதார். தன்னை விடுவிக்க போராடினார். அவரது கவலை அவர்கள் அனைவரையும் ஆர்வமாக்கியது. மேலும் அவர்கள் அனைவரும் ஒன்றாக அவரது கைகளை இழுக்க முயன்றனர்.

"என் இயேசுவே, என்னை பலப்படுத்துங்கள்" என்று டார்ஸிசியஸ் கிட்டத்தட்ட மூச்சைப் பிடித்து முணுமுணுத்தார். ஆனால், அவரது வார்த்தைகளைக் கேட்டுவிட்ட ஒரு சிறுவன், “அவன் ஒரு கிறிஸ்தவன். அவன் மர்மமான ஏதோ சில கிறிஸ்தவ பொருளை அங்கே மறைக்கிறான்” என்று, மற்றவர்களிடம் கூக்குரலிட்டான்.

இதனால் ஆர்வம் அதிகமான சிறுவர்கள், டார்ஸிசியஸ் என்னதான் வைத்திருக்கிறார் என்று பார்த்துவிடுவது என்று தீர்மானித்தார்கள். எனவே அவர்கள் கல்லெறிந்து, உதைத்து, அவரைத் தாக்கினார்கள். அவருடைய கைகளை விலக்க தங்களால் முடிந்ததைச் செய்தார்கள். ஆனால் அவர்களால் அவரது பிடியைத் தளர்த்த முடியவில்லை.

அந்த வழியாகச் சென்ற வழிப்போக்கன் ஒருவர், என்ன விஷயம் என்று கேட்டார். "அவன் ஒரு கிறிஸ்தவன், மர்மமான சில கிறிஸ்தவ பொருளை சுமந்து வருகிறான். நாங்கள் அவனிடமிருந்து அதைப் பெற முயற்சிக்கிறோம்" என்று சிறுவர்களில் ஒருவன் கத்தினான்.

"அவன் ஒரு கிறிஸ்தவன் என்றா சொன்னாய்?" என்ற வழிப்போக்கன், டார்ஸிசியஸை கொடூரமாக அடித்து கீழே தள்ளினான்.

இந்த தருணத்தில், அந்த வழியாக வந்த ஒரு படை வீரன், கூட்டத்தை நோக்கி விரைந்து சென்று, அவர்களை வலது மற்றும் இடதுபுறமாக சிதறடித்து விரட்டினான். பின்னர், குனிந்து டார்ஸிசியஸை தனது கைகளில் தூக்கினான்.

"கோழைகளே” என்று கத்திய படை வீரன், "ஒரு சிறிய பையனை எல்லாரும் சேர்ந்து அடிக்கிறீர்களே" என்ற அவர் விரைவாக வீதியில் இறங்கி அமைதியான பாதையில் விரைந்தார். டார்ஸிசியஸின் தலைமுடியை கோதிய அவர், "டார்ஸிசியஸ் பையா" என்று செல்லமாக அழைத்தார். கண்களைத் திறந்து பார்த்த டார்ஸிசியஸ், அவர், கேட்டக்கோம்பில் தாம் அடிக்கடி சந்தித்துள்ள ஒரு கிறிஸ்தவர் என்பதை உணர்ந்தார்.

"நான் இறந்து கொண்டிருக்கிறேன், ஆனால் நான் என் கடவுளை அவர்களிடமிருந்து பாதுகாத்துவிட்டேன்" என்று அவர் கூறினார். அவர் தனது விலைமதிப்பற்ற புதையலை படைவீரனிடம் ஒப்படைத்தார். அவர் அதை தனது அங்கிக்குள் பயபக்தியுடன் வைத்துக்கொண்டார். "எனக்காக அவரை சிறைக்குள் அழைத்துச் செல்லுங்கள்" என்று டார்ஸிசியஸ் கூறினார். ஒரு மென்மையான பெருமூச்சுடன் அவர் மீண்டும் சிப்பாயின் கைகளில் விழுந்தார். அவருடைய சிறிய ஆத்மா ஏற்கனவே கடவுளோடு ஒன்றிப்போயிருந்தது. அவருக்காக அவர் விருப்பத்துடன் தமது உயிரைக் கொடுத்தார். ஏனென்றால், "ஒரு மனிதன் தன் நண்பனுக்காக உயிரைக் கொடுப்பதைவிட, பெரிய அன்பு வேறு எதுவுமில்லை" என்று இயேசு ஒருமுறை சொல்லியிருக்கிறார்.

சின்னஞ்சிறு டார்ஸிசியஸ் நண்பர்களின் நண்பரான இயேசு கிறிஸ்துவுக்காக தனது உயிரைக் கொடுத்தார்!

டமாஸிசியஸை, திருத்தொண்டர் புனிதர் ஸ்தேவானுடன் (Deacon, Protomartyr of The Faith, Saint Stephen) ஒப்பிடும் திருத்தந்தை முதலாம் டமாசுஸ், (Pope Damasus I), "ஸ்தேவான் ஒரு கூட்டத்தினரால் கல்லெறியப்பட்டு கொல்லப்பட்டதை போலவே, டமாஸிசியஸும் ஆசீர்வதிக்கப்பட்ட நற்கருணையைச் சுமந்த காரணத்துக்காக கல்லெறியப்பட்டு கொல்லப்பட்டார்" என்கிறார்.

ஆகஸ்ட் மாதம் 15ம் நாளன்று இவரது நினைவுத் திருநாள் நினைவுகூரப்படுகிறது. இந்நாளானது, அன்னை மரியாளுடைய (Feast of the Assumption) விண்ணேற்பு தின விழாவாக கொண்டாடப்படுவதால், இவருடைய நினைவுத் திருநாள், பொது ரோமானிய நாட்காட்டியில் (General Roman Calendar) குறிப்பிடப்படவில்லை. ஆனால் ரோமானிய தியாகவியலில் (Roman Martyrology) மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

14 August 2020

புனித அர்னால்டு (1040-1087)(ஆகஸ்ட் 14)

புனித அர்னால்டு (1040-1087)

(ஆகஸ்ட் 14)

இவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். சில காலம் முதலாம் ஹென்றியின்  படையில் ராணுவ வீரராகப் பணியாற்றிய இவர், இறைவனின் அழைப்பை உணர்ந்து, அதை விட்டுவிட்டுச் சோஸ்சன்ஸ் என்ற இடத்திலிருந்த புனித பெனடிக்ட் துறவற சபையில் சேர்ந்து துறவியானார்.
துறவுமடத்தில் இவர் வாழ்ந்த எடுத்துக்காட்டான வாழ்க்கையைப் பார்த்து விட்டு, இவரைத் துறவுமடத்தின் தலைவராக உயர்த்தினார்கள். அப்பதவி தனக்கு வேண்டாம் என்று இவர், துறவிமடத்தை விட்டு ஓடியபொழுது, அதிசயமாக ஓர் ஓநாய் வந்து இவரைத் தடுத்து நிறுத்தி, இவரைத் துறவிமடத்தின் தலைவர் பொறுப்பை ஏற்குமாறு செய்தது.

இதற்குப் பிறகு இவருக்கு சோஸ்சன்ஸ் நகரின் ஆயராகப் பொறுப்பேற்குமாறு அழைப்பு வந்தது. "ஒரு பெரும் பாவி ஆயர் பதவிக்குப் பொருத்தமானவர் கிடையாது" என்று சொல்லி அதை இவர் தட்டிக் கழிக்கப் பார்த்தார்; ஆனால் ஆயர் பதவிக்கு இவரைவிட பொருத்தமானவர் வேறு யாரும் கிடையாது என்று  இவரைச் சோய்சன்ஸ் நகரின் ஆயராக திருநிலைப்படுத்தப்படுத்தினார்கள். 

தனக்கு கொடுக்கப்பட்ட ஆயர் பொறுப்பை நல்ல முறையில் செய்து வந்த இவர், துறவற வாழ்வுதான் தனக்குச் சரியாக வரும் என்று முடிவு செய்து, ஆயர் பதவியைத் துறந்துவிட்டு, முன்பிருந்த மடத்திற்கு வந்து, கடைசி வரைக்கும் ஒரு துறவியாக வாழ்ந்து இறையடி சேர்ந்தார்.
www.Stjck.blogspot.com

புனித மாக்சிமிலியன் கோல்பே (Maximilian Kolbe OFMConv)குரு, துறவி, மறைசாட்சி August 14

இன்றைய புனிதர் :
(14-08-2020)

புனித மாக்சிமிலியன் கோல்பே (Maximilian Kolbe OFMConv)
குரு, துறவி, மறைசாட்சி
பிறப்பு 
7 ஜனவரி 1894 
போலந்து Zdunska Wola, Poland
    
இறப்பு 
14 ஆகஸ்டு 1941 
ஹிட்லர் வதை முகாம், போலந்து
முத்திபேறுபட்டம்: 17 அக்டோபர் 1971 திருத்தந்தை ஆறாம் பவுல்
புனிதர்பட்டம்: 10 அக்டோபர் 1982 திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்

மாக்சிமிலியன் சிறுவயதிலிருந்தே அன்னை மரியின் மீது பக்திகொண்டு வளர்ந்தார். இளம் வயதிலேயே பிரான்சிஸ்கன் துறவற சபையில் சேர்ந்து குருவானார். இவர் குருத்துவ பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெறும்போது, காசநோயால் தாக்கப்பட்டார். இறையன்னையின் அருளால் மீண்டும் குணம் பெற்றார். 1918 ஆம் ஆண்டில் உரோமையில் குருபட்டம் பெற்ற இவர் அன்னை மரியாளைப்பற்றி போதித்து, மக்களிடையே அன்னை மரியின் பக்தியை வளர்த்தார். பின்னர் "மாசற்ற மரியாவின் சேனை" என்ற பெயரில் ஓர் சபையைத் தொடங்கினார். அச்சபையை பல நாடுகளில் பரப்பி, மரியன்னையின் பக்தியை பரப்பினார். இவற்றிற்காக பலரிடம் அடிகள் பட்டு, பல அவமானத்திற்கு உள்ளானார். 

மறைப்பணியாளராக ஜப்பான் நாட்டிற்கு சென்றார். அங்கு திறம்பட நற்செய்தியை பறைசாற்றினார். மீண்டும் தன் தாய் நாடான போலந்து நாட்டிற்கு திரும்பினார். அப்போது போலந்து நாடு ஹிட்லரின் ஆட்சியால் பிடிப்பட்டது. அச்சமயத்தில் மூண்ட உலகப்போரில் மாக்சிமிலியனும் ஹிட்லரிடம் பிடிபட்டார். சிறையில் அடைக்கப்பட்டார். சிறைவாழ்வின்போது தன்னுடன் இருந்த மற்றவர்களிடம் மிக அன்பாக நடந்துகொண்டார். அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அம்மக்களிடம் இறையுணர்வை வளர்த்தார். அச்சமயத்தில் ஹிட்லரால் இளைஞர் ஒருவன் பிடிபட்டு சிறையிலடைக்கப்பட்டான். இவர் ஓர் திருமணமான இளைஞர். தன்னை விடுவிக்கும்படி ஹிட்லரிடம் கெஞ்சினான். ஆனால் அவன் கோரிக்கையை ஹிட்லர் ஏற்க மறுத்தான். 

இதனைக் கண்ட மாக்சிமிலியன் அவ்விளைஞனுக்கு உதவி செய்து சென்று, அவனை விடுவிக்கும்படி மன்றாடி, அவனுக்கு பதில் தன் உயிரை கொடுக்கிறேன் என்று கூறினார். கடைசியாக அவ்விளைஞனுக்குப் பதில் தம்மையே சாவுக்கு கையளித்தார். பிறருக்காக தன்னையே தியாகம் செய்தார். 

செபம்:
தியாகத்தின் மறு உருவே எம் தலைவா! உம் மக்கள் பாவ வாழ்விலிருந்து மீட்படைய நீர் சிலுவை சாவில் உம் உயிரை தியாகம் செய்தீர். தன் நண்பருக்காக உயிரை கொடுப்பது சிறந்த அன்பு என்று கூறி, மற்றவர்களுக்காக வாழ அழைத்தீர். புனித மாக்சிமிலியனும், தன்னுயிரையே மற்றவர்களுக்காக தியாகம் செய்தார். அவர்களின் முன்மாதிரியான வாழ்வை பின்பற்றி நாங்கள் வாழ எமக்கு உம் அருளை தந்தருளும்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Saint of the Day : (14-08-2020)

St. Maximilian Mary Kolbe

St. Maximilian Mary Kolbe was born on January 8, 1894 in Poland, to father Julius Kolbe and mother Maria Dabrowska. He joined the Franciscans in 1907 and ordained as a priest in 1918. He founded a movement devoted to Our Lady and spread this movement through a magazine named The Knight of the Immaculate. He was arrested by Nazis on February 17, 1941 and sent to the concentration camp at Auschwitz. He was singing hymns to the Virgin Mary in the concentration camp without any fear. He was tortured in the Nazi concentration camp without giving any food, water and other facilities for more than two weeks. When another person was due to be killed on a particular day, that man started crying my wife, my children. Then Maximilian volunteered to take the place of that man to die, to save that poor man. He was killed by giving carbolic acid injection. He died on August 14, 1941.

A cure from intestinal tuberculosis to one Angela Testoni in July, 1948 and also a cure from calcification on the arteries/sclerosis were attributed to the intervention of St. Maximilian.

He was beatified in 1971 by Pope Paul-VI and canonized by Pope John Paul-II on October 10, 1982. He was declared as a martyr and is venerated as a patron saint of drug addicts and political prisoners.

---JDH---Jesus the Divine Healer---

† இன்றைய புனிதர் †
(ஆகஸ்ட் 14)

✠ புனிதர் மாக்சிமிலியன் கோல்ப் ✠
(St. Maximilian Kolbe)

குரு, மறைசாட்சி, “அமலோற்பவ அன்னையின் படை” எனும் ஒரு உலகளாவிய கத்தோலிக்க சுவிசேஷ இயக்கத்தின் நிறுவனர்:
(Priest,Martyr and Founder of Militia Immaculatae, a Worldwide Catholic Evangelization Movement)

பிறப்பு: ஜனவரி 8, 1894
ஸுடுன்ஸ்கா வோலா, போலந்து அரசு, ரஷிய பேரரசு
(Zduńska Wola, Kingdom of Poland, Russian Empire)

இறப்பு: ஆகஸ்ட் 14, 1941 (வயது 47)
ஆஸ்விட்ஸ் நாசி இருட்டறை சிறை முகாம், போலந்து
(Auschwitz concentration camp, General Government)

ஏற்கும் சபை/ சமயம்: 
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் திருச்சபை
(Anglican Church)
லூதரன் திருச்சபை
(Lutheran Church)

முத்திபேறு பட்டம்: அக்டோபர் 17, 1971 
திருத்தந்தை ஆறாம் பவுல்
(Pope Paul VI)

புனிதர் பட்டம்: அக்டோபர் 10, 1982 
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

நினைவுத் திருவிழா: ஆகஸ்ட் 14

பாதுகாவல்: 
போதை மருந்து அடிமைகளுக்கு எதிராக, போதை மருந்துப்பொருட்களின் அடிமைகள், குடும்பங்கள், சிறைவைக்கப்பட்ட மக்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் கைதிகள், சிறைக்கைதிகள், கருக்கலைப்பு மற்றும் கருணைக்கொலைக்கு எதிரான இயக்கம், “அமலோற்பவ அன்னையின் படை” எனும் ஒரு உலகளாவிய கத்தோலிக்க சுவிசேஷ இயக்கம் (Militia Immaculatae)

புனிதர் மாக்சிமிலியன் கோல்ப், போலந்து நாட்டைச் சார்ந்த, ஃபிரான்சிஸ்கன் (Polish Conventual Franciscan Friar) துறவியாவார். மரியாளின் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்த இவர், 1941ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 14ம் தேதியன்று, இரண்டாம் உலகப்போரின்போது, ஜெர்மன் நாட்டினரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த போலந்து நாட்டிலுள்ள “ஆஸ்விட்ஸ் நாசி இருட்டறை சிறை முகாமில்” (Auschwitz Concentration Camp) அறிமுகமில்லாத இளைஞர் ஒருவருக்காய் தன் உயிரை கொடுத்தார். இவர், அமலோற்பவ அன்னை மரியாளின் பக்தியைப் பரப்புவதில் மிகவும் தீவிரமாய் இருந்தார். “வார்சாவ்” (Warsaw) எனும் இடத்திற்கருகே, “நியபோகலனோவ்” (Monastery of Niepokalanów) எனும் துறவு மடத்தை நிறுவி அதனை நிர்வாகம் செய்தார். ஒரு வானொலி நிலையத்தையும், இன்னபிற பதிப்பகங்களையும், நிறுவனங்களையும் நிறுவி நடத்தி வந்தார்.

1982ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 10ம் தேதியன்று, இவரை புனிதராக அருட்பொழிவு செய்வித்த திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் (Pope John Paul II) அவர்கள், கோல்பேயை “தொண்டுப்பணிகளின் மறைசாட்சி” (Martyr of Charity) என்றும், “எமது கடினமான நூற்றாண்டின் பாதுகாவலர்” (The Patron Saint of Our Difficult Century) என்றும் அறிவித்தார்.

அன்றைய ரஷிய பேரரசின் (Russian Empire) பாகமான போலந்து அரசின் (Kingdom of Poland) “ஸ்டுன்ஸ்க வோலா” (Zduńska Wola) எனும் இடத்தில் 1894ம் ஆண்டு, ஜனவரி மாதம், 8ம் தேதியன்று, பிறந்த கோல்ப், “ஜூலியஸ் கோல்ப்” (Julius Kolbe) எனும் ஜெர்மன் இன நெசவுத் தொழிலாளியின் இரண்டாவது மகன் ஆவார். “போலிஷ்” (Polish) மருத்துவச்சியான (Midwife) “மரியா” (Maria Dąbrowska) இவரது தாயார் ஆவார். இவருக்கு நான்கு சகோதரர்கள் இருந்தனர். இவர் பிறந்த சிறிது காலத்திலேயே இவர்களது குடும்பம் மத்திய போலந்திலுள்ள “பபியானிஸ்” (Pabianice) எனும் நகருக்கு குடி பெயர்ந்து சென்றது. 

1906ம் ஆண்டு, கோல்ப் சிறுவனாக இருந்தபோது இவருக்கு காணக்கிடைத்த அன்னை மரியாளின் திருக்காட்சி, இவரது வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பின்னாளில், அவர் அதனை பின்வருமாறு வர்ணிக்கிறார்:
“அந்த இரவு, இறைவனின் தூய அன்னையிடம், ‘எனக்கு என்ன ஆகும்; அல்லது நான் என்ன ஆவேன்’ என்று கேட்டேன். பின்னர், அன்னை இரண்டு கிரீடங்களை கைகளில் ஏந்தியபடி என்னிடம் வந்தார்கள். ஒரு கிரீடத்தின் நிறம் வெண்மை; மற்றொன்றின் நிறம் சிகப்பு. இந்த இரண்டு கிரீடங்களில் ஏதாவது ஒன்றினை ஏற்க தயாராக இருக்கிறாயா என்றார்கள். வெண்ணிற கிரீடத்தை ஏற்றுக்கொண்டால் நான் தூய்மையில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும், சிகப்பு நிற கிரீடத்தை ஏற்றுக்கொண்டால் நான் ஒரு மறைசாட்சியாக வேண்டும் என்றும் அன்னை சொன்னார்கள். நான், இரண்டையும் ஏற்றுக்கொள்வதாக சொன்னேன்.”

1907ம் ஆண்டு, கோல்பும், அவரது மூத்த சகோதரரான ஃபிரான்சிசும் ஃபிரான்சிஸ்கன் இளம் துறவியர் (Conventual Franciscans) பள்ளியில் இணைந்தனர். 1910ம் ஆண்டு, கோல்ப் புகுமுக துறவறத்தில் (Novitiate) இணைய அனுமதிக்கப்பட்டார். அங்கே, “மாக்சிமிலியன்” (Maximilian) எனும் பெயரை தமது ஆன்மீக பெயராக ஏற்றுக்கொண்டார். தமது முதல் உறுதிப்பாடுகளை 1911ம் ஆண்டிலும், இறுதி உறுதிப்பாடுகளை 1914ம் ஆண்டிலும் ஏற்றார். “மரியா” (Maria) என்ற கூடுதல் பெயரையும் ஏற்றுக்கொண்டார்.

1912ம் ஆண்டு ரோம் (Rome) அனுப்பப்பட்ட கோல்ப், “திருத்தந்தையர் கிரகோரியன் பல்கலைகழகத்தில்” (Pontifical Gregorian University) கல்வி கற்று, 1915ம் ஆண்டு தத்துவ பாடத்தில் முனைவர் பட்டம் வென்றார். 1919ம் ஆண்டு, “புனிதர் பொனவென்சூர் திருத்தந்தையர் பல்கலைகழகத்தில்” (Pontifical University of St. Bonaventure) இறையியலில் முனைவர் (Doctorate in Theology) பட்டம் வென்றார்.

1917ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 16ம் நாளன்று, பாவிகளையும், கத்தோலிக்க திருச்சபையின் எதிரிகளையும் அன்னை மரியாளின் பரிந்துரை மூலம் மனமாற்றம் செய்விப்பதற்கான “அமலோற்பவ அன்னையின் படை” (Militia Immaculatae) எனும் ஒரு உலகளாவிய கத்தோலிக்க சுவிசேஷ இயக்கத்தினை நிறுவினார்.

கோல்ப் 1918ம் ஆண்டு குருத்துவ அருட்பொழிவு பெற்றார். 1919ம் ஆண்டு, ஜூலை மாதம், புதிதாய் சுதந்திரம் பெற்ற போலந்து (Newly Independent Poland) நாட்டுக்கு திரும்பிச் சென்றார். அங்கே, அமலோற்பவ அன்னை கன்னி மரியாளின் பக்தி முயற்சிகளை பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டார். 1919 முதல் 1922ம் ஆண்டு வரையான காலத்தில், “க்ரகோவ் குருத்துவ பள்ளியில்” (Kraków seminary) கற்பிக்கும் பணியாற்றினார். இக்கால கட்டத்தில், இவர் காசநோயால் (Tuberculosis) பாதிக்கப்பட்டார். 1927ம் ஆண்டு, “நியபோகலனோவ்” (Niepokalanów) எனுமிடத்தில் புதியதொரு ஃபிரான்சிஸ்கன் துறவு மடம் ஒன்றினை நிறுவினார்.

1930ம் ஆண்டு முதல் 1936ம் ஆண்டு வரையான காலத்தில், கோல்ப் கிழக்காசிய (East Asia) நாடுகளில் தொடர் மறைப்பணியாற்றினார். முதலில் சீன நாட்டிலுள்ள “ஷங்காய்” (Shanghai, China) சென்றார். அங்கே தமது மறைப்பணிகளில் வெற்றி காண இயலாத கோல்ப், ஜப்பான் (Japan) நாட்டுக்கு சென்றார். அங்கே, ஜப்பானின் “நாகசாகி” (Nagasaki) நகரின் புறநகர் பகுதியில், 1931ம் ஆண்டு ஒரு துறவு மடத்தை நிறுவினார். 1932ம் ஆண்டின் மத்தியில் இவர் இந்தியாவின் மலபார் (Malabar) பகுதிகளுக்கு பயணித்தார். அங்கேயும் அவர் ஒரு துறவு மடத்தை நிறுவினார். ஆனால், சிறிது காலத்தின் பின்னர், அது மூடப்பட்டது.

மிகவும் நலிந்த உடல் நலம் காரணமாக, கோல்ப் 1936ம் ஆண்டு போலந்து திரும்பினார். இரண்டு வருடங்களின் பின்னர், 1938ம் ஆண்டு, “நியபோகலனோவ்” (Niepokalanów) எனுமிடத்தில் ஒரு வானொலி நிலையம் தொடங்கினார்.

ஜெர்மனியின் போலந்து (The Invasion of Poland by Germany) படையெடுப்புடன் இரண்டாம் உலகப்போர் (World War II) தொடங்கியது. கோல்ப் தங்கியிருந்த துறவு மடத்தில் தம்முடன் இருந்த சில துறவியர் உதவியுடன் ஒரு தற்காலிக மருத்துவமனையை நிறுவினார். அவருடைய நகரம் ஜெர்மன் காரர்களால் பிடிபட்ட பிறகு, 1939ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 19ம் தேதி, கோல்ப் கைது செய்யப்பட்டார். ஆனால், டிசம்பர் மாதம், 8ம் தேதி, விடுவிக்கப்பட்டார். அவர் ஜெர்மன் குடிமக்களைப் போலவே தனது ஜெர்மனிய வம்சாவளியை அங்கீகரிப்பதற்காக ஜெர்மன் குடிமக்களுக்கு ஒத்த உரிமைகள் வழங்கிய “டட்ச் வோல்க்ஸ்லிஸ்டில்” (Deutsche Volksliste) கையெழுத்திட மறுத்துவிட்டார். விடுவிக்கப்பட்ட கோல்ப், தமது சகா துறவியருடன் இணைந்து, பெரிய போலந்திலிருந்து (Greater Poland) வந்த அகதிகளுக்கு அடைக்கலம் தந்து தங்கவைத்தனர். ஜெர்மானிய துன்புருத்தல்களிலிருந்து சுமார் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட யூதர்களையும் தமது துறவு மடத்தில் மறைத்து வைத்தனர். இவர்களது துறவு மடம், ஜெர்மானிய நாசிக்களுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களை அச்சிடும் அச்சுக்கூடமாகவும் செயல்பட்டது. இவர்களது துறவு மடம், 1941ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 17ம் தேதியன்று, ஜெர்மன் அதிகாரிகளால் மூடப்பட்டது. அன்றைய தினமே, கோல்பும் நான்கு துறவியரும் “கெஸ்டபோ” (German Gestapo) என்றழைக்கப்படும் ஜெர்மனிய நாஸி இரகசிய போலீசாரால் கைது செய்யப்பட்டு, “பவியாக்” (Pawiak Prison) சிறையில் அடைக்கப்பட்டனர். மே மாதம், 28ம் தேதி, அங்கிருந்து “ஆசுவிட்ஸ்” (Auschwitz) சித்திரவதை முகாமுக்கு (கைதி # 16670) மாற்றப்பட்டார். அங்கேயும் குருவாக தொடர்ந்து செயல்பட்டதால், கோல்ப் வன்முறைத் துன்புறுத்தலுக்கு ஆளானார்.

1941ம் ஆண்டு, ஜூலை மாத இறுதியில், மூன்று கைதிகள் அங்கிருந்து தப்பித்து சென்றனர். இதனால் கடும் கோபமுற்ற சிறையின் தலைமை அதிகாரி, மேலும் தப்பிக்கும் முயற்சிகளை தடுப்பதற்காக, பத்து கைதிகளை தேர்ந்தெடுத்து, நிலத்தடி பதுங்கு குழிகளில் அடைத்து கொல்ல உத்தரவிட்டான். அவர்களுள் ஒருவரான “ஃபிரான்சிஸ்செக்” (Franciszek Gajowniczek) என்பவர், தமது குடும்பத்தினரை நினைத்து, “என் மனைவி, என் குழந்தைகள்” என்று கதறி அழுதார். இவருக்காக மனமிரங்கிய கோல்ப், அவருக்குப் பதிலாக தாம் செல்ல முன்வந்தார். நீரும் உணவுமின்றி பதுங்கு குழிகளில் அடைபட்டவர்களை கோல்ப் அன்னை மரியாளிடம் செபிக்க தூண்டினார். நீரும் உணவுமின்றி இரண்டு வாரங்கள் கழிந்தபின்னர், கோல்ப் மட்டுமே அங்கே உயிருடன் இருந்தார். மீதமுள்ள எட்டு பேரும் மரித்துப் போனார்கள். காவலர்கள் பதுங்கு குழியை காலி செய்ய எண்ணினார். ஆகவே, “கார்போலிக் அமிலம்” (carbolic acid) என்னும் விஷ ஊசி போட்டு கொல்ல முடிவெடுத்தனர். கோல்ப், அமைதியாக தமது இடது கையை உயர்த்தி விஷ ஊசியை வாங்கிக்கொண்டார்.

13 August 2020

புனித பெனில்திஸ் (1805-1862)(ஆகஸ்ட் 13)

புனித பெனில்திஸ் (1805-1862)

(ஆகஸ்ட் 13)

இவர் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்தவர். இவரது குடும்பம் ஒரு சாதாரண விவசாயக் குடும்பம்.
இவர் தனது தொடக்கக் கல்வியை தெலசால் அருள்சகோதர்கள் நடத்தி வந்த பள்ளிக்கூடத்தில் கற்றார். இவரிடம் விளங்கிய அறிவாற்றலைக் கண்டு வியந்த அங்கிருந்த அருள் சகோதரர்கள் இவரைப் 14 வயதிலேயே மாணவர்களுக்குப் பாடம் எடுக்க இசைவு தந்தனர்.

இருபதாவது வயதில் தெலசால் அருள் சகோதரர்கள் சபையில் சேர்ந்த இவர், தனது நாற்பத்து ஒன்றாம் சாகஸ் என்ற இடத்திலிருந்த ஓர் இல்லத்தின் தலைவரானார்.

சாகஸ் என்ற இடம் ஒரு சாதாரண சிற்றூர். இவ்வூரில் கல்வியில் பின்தங்கிய மாணவ மாணவிகள் பலர் இருந்தார்கள். அவர்களுக்கு இவர் மாலை நேர வகுப்பு எடுத்து அவர்கள் கல்வியில் சிறந்தோங்கச் செய்தார்.

இவர் மாணவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்த நேரம் போக, மற்ற நேரங்களில் நோயாளர்களைச் சந்தித்து அவர்களிடம் ஆறுதலாகப் பேசினார்; மாணவர்களுக்கு மறைக்கல்வியும் எடுத்தார். இதனால் சாகஸ் என்ற அந்தச் சிற்றூர் கல்வியில் மட்டுமல்லாது ஆன்மிகத்திலும் சிறந்து விளங்கியது.

இவர் இறக்கும் போது, இவரிடம் கல்வி கற்ற 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் அருள்பணியாளர்களாக மாறி இருந்தார்கள்.

இவருக்கு 1967 ஆம் ஆண்டு திருத்தந்தை ஆறாம் பவுலால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

புனிதர் ரேட்கண்ட் ✠(St. Radegund) August 13

† இன்றைய புனிதர் †
(ஆகஸ்ட் 13)

✠ புனிதர் ரேட்கண்ட் ✠
(St. Radegund)
இளவரசி/ அரசி/ நிறுவனர்:
(Princess/ Queen/ Foundress)

பிறப்பு: கி.பி. 520
துரிங்கியன் பழங்குடியினர்
(Thuringian tribes)

இறப்பு: ஆகஸ்ட் 13, 587 (வயது 66–67)
தூய திருச்சிலுவை மடம், போய்ட்டேர்ஸ், அகிட்டைன், ஃபிரேங்க்ஸ் அரசு
(Abbey of the Holy Cross, Poitiers, Aquitaine, Kingdom of the Franks)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

நினைவுத் திருவிழா: ஆகஸ்ட் 13

பாதுகாவல்:
இயேசு கல்லூரி (Jesus College), கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகம் (Cambridge)

புனிதர் ரேட்கண்ட், ஒரு துரிங்கியன் இளவரசியும் (Thuringian Princess), ஃபிரேங்கிஷ் அரசியும் (Frankish Queen), போய்ட்டேர்ஸ் (Poitiers) நகரிலுள்ள “திருச்சிலுவை துறவு மடத்தை” (Abbey of the Holy Cross) நிறுவியவருமாவார். ஃபிரான்ஸ் (France) மற்றும் இங்கிலாந்து (England) நாடுகளிலுள்ள பல்வேறு ஆலயங்களின் பாதுகாவலரான இவர், கேம்ப்ரிட்ஜ் (Cambridge) பல்கலையின் இயேசு கல்லூரியின் (Jesus College) பாதுகாவலருமாவார்.

ரேட்கண்ட், ஜெர்மன் (German) நாட்டிலுள்ள, துரிங்கியன் (Thuringian) நிலத்தின் மூன்று அரசர்களில் ஒருவரான “பெர்டாச்சார்” (Bertachar) என்பவரது மகளாவார். ரேட்கண்ட்டின் மாமனான “ஹெர்மன்ஃபிரிட்” (Hermanfrid) என்பவர், “பெர்டாச்சாரை” (Bertachar) சண்டையிட்டு கொன்றுவிட்டு, ரெட்கண்ட்டை கைப்பற்றினான். ஃபிரேன்கிஷ் (Frankish King) அரசன் “தியோடெரிக்” (Theuderic) என்பவனுடன் இணைந்த பிறகு, தமது இன்னொரு சகோதரனான “படேரிக்” (Baderic) என்பவனையும் சண்டையிட்டு தோற்கடித்தான். இருப்பினும், அவரது சகோதரர்களை நசுக்கி, துரிங்கியாவின் கட்டுப்பாட்டை கைப்பற்றிய “ஹெர்மன்ஃபிரிட்”, அரசன் “தியோடெரிக்குடன்” (Theuderic) தத்துவார்த்தத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான உடன்படிக்கைக்கு மறுப்பு தெரிவித்தான்.

கி.பி. 531ம் ஆண்டு, “தியோடெரிக்”, தமது சகோதரன் “முதலாம் க்லோடேய்ர்” (Clotaire I) என்பவருடன் துரிங்கியா திரும்பினார். இருவரும் இணைந்து ஹெர்மன்ஃபிரிட்’டை தோற்கடித்து, அவரது இராச்சியத்தை வெற்றிகொண்டார்கள். ரேட்கண்ட்டை பொறுப்பேற்றுக்கொண்ட “முதலாம் க்லோடேய்ர்,” அவரை அங்கிருந்து திரும்ப “மெரோவிங்கியன் கௌல்” (Merovingian Gaul) அழைத்துச் சென்றார். ரேட்கண்ட், “முதலாம் க்லோடேய்ரின்” ஆறு மனைவியர் (Wives) அல்லது “திருமணமாகாமல் சேர்ந்து வாழும் பெண்களில்” (Concubines) ஒருவராவார். குழந்தைகள் பெற்றுக்கொள்ளாத ரேட்கண்ட்டின் தர்மசிந்தனை குறிப்பிடப்படுவதாகும்.

கி.பி. 550ம் ஆண்டு, துரிங்கியன் அரச குடும்பத்தின் எஞ்சிய கடைசி ஆண் உறுப்பினர், ரேட்கண்ட்டின் சகோதரர் ஆவார். “முதலாம் க்லோடேய்ர்” அவரையும் கொலை செய்தார். தமது இராச்சியத்தை விட்டு ஓடிப்போன ரேட்கண்ட், திருச்சபையின் பாதுகாப்பை கோரினார். “நோயோன்” (Noyon) ஆயரிடம், தம்மை ஒரு திருத்தொண்டராக (Deaconess) நியமிக்க வலியுறுத்தினார். கி.பி. 560ம் ஆண்டு, போய்ட்டேர்ஸ் (Poitiers) நகரில், “செயின்ட் க்ரோய்க்ஸ்” (Monastery of Sainte-Croix) துறவு மடத்தை நிறுவினார். அங்கே, நோயாளிகள்மீது அக்கறை செலுத்தினார். ரேட்கண்ட், பழம், மீன், முட்டை, இறைச்சி ஆகியவனவற்றை தவிர்த்து, அவரையினங்களையும் காய்கறிகளையுமே உண்டார். செபித்தல் மூலம் நோயாளிகளை குணமாக்கும் அற்புத சக்தி கொண்டிருந்தார் என்று பரவலாக நம்பப்பட்டார்.

அவரது துறவு மடம், கிறிஸ்துவின் உண்மையான திருச்சிலுவையின் மிச்சத்திற்கான பெயரிடப்பட்டது. இவர், உண்மையான திருச்சிலுவையின் மிச்சமொன்றினை, “பைசண்டைன் பேரரசர்” (Byzantine Emperor) “இரண்டாம் ஜஸ்டினிடமிருந்து” (Justin II) பெற்றதாக கூறப்படுகிறது. போய்ட்டேர்ஸ் (Poitiers) ஆயரான (Bishop of Poitiers) “மரோவியஸ்” (Maroveus) அதனை துறவு மடத்தில் ஸ்தாபிக்க மறுத்தும், ரேட்கண்ட்டின் வேண்டுகோளின்பேரில், “டூர்ஸ்” ஆயரான “யூஃப்ரோனியஸ்” (Eufronius of Tours) என்பவரை, அரசன் “சிக்பெர்ட்” (Sigebert) அனுப்பி அதனை ஸ்தாபிக்கச் செய்தார். 

ஆறாம் நூற்றாண்டின் கிறிஸ்தவ துறவியான “ஜூனியன்” (Junian of Maire), ரேட்கண்டின் நெருங்கிய நண்பராவார். நண்பர்களான இவர்கள் இருவருமே கி.பி. 587ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 13ம் தேதி, ஒரே நாளில் மரித்ததாக கூறப்படுகிறது.

† Saint of the Day †
(August 13)

✠ St. Radegund ✠

Princess/ Queen/ Foundress:

Born: 520 AD
Thuringian tribes

Died: August 13, 587 (Aged 66–67)
Abbey of the Holy Cross, Poitiers, Aquitaine, Kingdom of the Franks

Venerated in:
Roman Catholic Church
Eastern Orthodox Church

Major Shrine: Church of St. Radegonde, Poitiers, Vienne, France

Feast: August 13

Patronage: Jesus College, Cambridge

Radegund was a Thuringian princess and Frankish queen, who founded the Abbey of the Holy Cross at Poitiers. She is the patron saint of several churches in France and England and of Jesus College, Cambridge.

The life of Saint Radegund is portrayed by two different writers, both of whom had very different relationships with her. Radegund’s life is seen in different ways but both showing the holy life she leads and her devotion to God. Verantius sought to show her similarities to saints like St. Martin who lived in poverty and sought repentance through violence to their bodies. Baudonivia on the other hand showed Radegund’s life in the monastery, where she used her royal status and clout to encourage others to join the Christian faith.

The author who first wrote a hagiographic of Radegund’s life was Verantius. A poet who developed a friendship with Radegund via letters and poems. He wrote a biography in the year 587. He had a difficult time portraying her as a saint because she was a woman and because she lived her life with piety and dedication to the holy word. He wrote in a way that depicted the female sex as far weaker and less holy than the male sex. Radegund lived in an exceptional holy way, regardless of her sex. “In other words, a woman who dedicated herself to a Christian life of the sort exemplified by Radegund could, like her, transcend the inherent shortcomings of her sex.” This quote portrays the majority of the population's feelings regarding the female race.

Varantius goes on to show how Radegund lived her life in a way of rejecting the flesh and ascetics. Radegund wore hair shirts which were an undergarment worn to discomfort the body in order to seek repentance from God. Along with this type of bodily torture, she also restrained her arms and neck with iron rings which caused her flesh to swell and bleed. By mortifying her flesh she sought to live a life with God. Verantius also wrote a great deal about her union with a man. He wanted to make it clear that she was still a very holy woman even when bound to a man. He says, “People said that the King had yoked himself to a monarch rather than a queen.” This shows that even though she was legally married, her heart was still very much with God. Radegund being a queen also presented an issue for Verantius. He believed Queen Radegund rejected her status and duties as queen in order to live a pious and basic life. When Verantius does mention her queenliness “he notes that she left her clothes and ornaments for the poor or to a church.”

The author of the second hagiography portrays Radegund in a very different light than Verantius. This hagiography was written twenty years after Radegund’s death and was written at the request of the congregation of the monastery that Radegund had founded and lived. The author’s name was Baudonivia. Baudonivia did not feel it necessary for Radegund to overcome her sex, so she does not make a point to show the imperfections of the female sex.

The Radegund that Baudonivia portrays is one that does not cause discomfort to her body and used her royal status to help those in need, contrary to Verantius. “Radegund and her retinue passed near a fane where non-christian Franks worshipped, and she ordered it destroyed.” According to Baudonivia, Radegund continued to use her noble blood even after she retreated to the monastery. Whenever she got wind of a disagreement between kings she wrote letters to them urging them to have peace. Baudonivia believed Radegund knew the good she could do by using her royal status. The miracles that Radegund performs according to Baudonivia are performed on a higher class of people than the hagiography that Verantius portrays. Because of one of her healing miracles a foundation for a basilica of Saint Radegund was formed. This demonstrates the population she was affecting in Baudonivia’s writings.

The audience that each of the hagiographies hoped to adhere to were very different. Verantius was writing for the entire public, specifically men of the church. We know this because of the number of times he refers to the female sex being weaker and how Radegund overcomes the shortcomings of her sex. He wanted to give her the recognition that she deserved for living such a pious and holy life. And at this time in history, men ruled the church and were skeptical of women. Verantius emphasized Radegund as the stereotypical saint by showing her ability to harm her body, her desire to live a minimalist lifestyle, and her rejection of royal status. He also describes her marriage as being less of a secular marriage but a marriage with God. He wanted to portray her as being married but not in a way that would discredit or make her more of a woman.

Baudonivia on the other hand had an audience that was primarily intended for the women of the monastery. In the writings, it is said that the women of the monastery did not necessarily see the Radegund that Verantius portrays, instead, “Their Radegund had shaped not merely the physical but also the spiritual and emotional space in which they lived, through which they moved, and in which they prayed.” Baudonivia portrayed Radegund in the way that the women remembered and rejoiced her. They believed her to be a saint and did not need the affirmation of the church.

I found both analyses’ of Saint Radegund very interesting because they seem to portray two very different women. One that lived a pious and minimal life, the other a life that used the gifts God gave her to create a better and more Christian world. In my opinion, both showed very holy lives, but the intended audiences were clearly different groups. Whether or not one was more accurate is not known but if we look at the authors we can guess that Verantius’ version was either the most accurate of Radegund’s life or at least the way she wanted to be portrayed to the rest of the world. Baudonivia’s version was written nearly two decades after Radegund’s death so we can suppose that she was acquiring information about Radegund’s life from other nuns and friends within the Poitiers community.

The way that Verantius describes her marriage is very interesting because historically very little is known about the marriage and no children were produced causing one to believe that it was a marriage of little passion and love. Verantius describes the lengths that Radegund would go to in order to leave the marital bed and seek comfort in God, through asking to relieve nature and staying throughout the night. Eventually fleeing her husband’s home to go to the monastery. Doing some research on the Frankish kingdoms, all of Radegund’s family fought over land and was killed except for her cousin/husband. What I found even more interesting was that she was one of six wives, which is not a Christian tradition. This could have caused her complete devotion to the Christian church and turn to a life faithful only to God.

Whatever the reason for her pious and devout life, one thing is certain, Radegund was a woman who broke the mold and showed that women could live holy lives just like men. She was a very unique figure in the history of the Christian church because of the way she obtained sainthood. Most women in that time period who had gained sainthood did it through martyrdom, Radegund however, obtained sainthood the way men did, by living a life worthy of God.

புனித போன்தியன் (Pope St. Pontian) 18ம் திருத்தந்தை : (18th Pope) August 13

இன்றைய புனிதர் :
(13-08-2020)

புனித போன்தியன்  (Pope St. Pontian)  

18ம் திருத்தந்தை : (18th Pope)  

இயற்பெயர் : பொன்தியானுஸ்  
பிறப்பு : c 200 சார்தீனியா, (Sardinia) ரோமப் பேரரசு  

இறப்பு : 237 சார்தீனியா, (Sardinia) ரோமப் பேரரசு  

நினைவுத் திருவிழா : ஆகஸ்ட் 13  

திருத்தந்தை போன்தியன் (Pope Pontian) ரோம் ஆயராகவும், திருத்தந்தையாகவும் கி.பி. 230 முதல் 235 வரை ஆட்சி செய்தார். அவருக்கு முன் பதவியிலிருந்தவர் திருத்தந்தை முதலாம் அர்பன் ஆவார். திருத்தந்தை போன்தியன் கத்தோலிக்க திருச்சபையின் 18ம் திருத்தந்தை ஆவார்.  

வரலாறு : இவருக்கு முந்தைய திருத்தந்தையர்களை விடவும் இவரைப் பற்றி சிறிது அதிக தகவல்கள் கிடைத்துள்ளன. "லிபேரிய பட்டியல்" (Liberian Catalogue) என்னும் ஏட்டை நான்காம் நூற்றாண்டில் தொகுத்த ஆசிரியருக்கு அந்தக் கூடுதல் தகவல்கள் புதிதாக அப்போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு திருத்தந்தைக் குறிப்பேட்டிலிருந்து கிடைத்தன.  'ரோம் நகர் இப்போலித்து' (Hippolytus of Rome) என்னும் புகழ்பெற்ற இறையிலார் போன்தியனுக்கு முந்திய திருத்தந்தையர்கள் ஆட்சிக்காலத்தில் எதிர் - திருத்தந்தையாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார். அவரும், போன்தியனும் வேறு திருச்சபைத் தலைவர்களும் திருச்சபைக்கு எதிராக இருந்த 'மாக்சிமினஸ் த்ராக்ஸ்' (Maximinus Thrax) என்ற ரோமப் பேரரசனால் சார்தீனியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.  எனவே, போன்தியன் 235 செப்டம்பர் 25 (அல்லது 28ம் நாள்) திருத்தந்தைப் பதவியைத் துறந்தார். இப்போலித்து என்ற எதிர் திருத்தந்தையால் திருச்சபையில் ஏற்பட்ட பிளவும் ஏறக்குறைய அதே சமயத்தில் முடிவுக்கு வந்தது. இப்போலித்து திருச்சபையோடு சமாதானம் செய்துகொண்டார்.

 போன்தியன் எவ்வளவு காலம் நாடு கடத்தப்பட்டு வாழ்ந்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. "திருத்தந்தையர் நூல்" (Liber Pontificalis) என்னும் ஏட்டின்படி, போன்தியன் சார்தீனியாவில் உலோகச் சுரங்கங்களில் கட்டாய வேலை செய்ததாலும், கொடூரமாக நடத்தப்பட்டதாலும் இறந்தார். அவர் 'தாவொலாரா' என்னும் தீவில் இறந்ததாக ஒரு மரபு உள்ளது.  

உடல் அடக்கம் :

போன்தியனின் திருவிழா நவம்பர் 19ஆக இருந்தது. பின்னர் போன்தியனுக்கும் இப்போலித்துவுக்கும் ஒரே நாளில், ஆகஸ்ட் 13ம் நாள் விழாக் கொண்டாட தீர்மானிக்கப்பட்டது. அந்த நாளில்தான் அவருடைய உடலின் மீபொருள்கள் கலிஸ்டஸ் சுரங்கக் கல்லறையில் வைக்கப்பட்டன.  போன்தியனின் மீபொருள்களைத் திருத்தந்தை ஃபேபியன் (ஆட்சி: 236-250) என்பவர் ரோம் நகருக்குக் கொண்டு வந்து, கலிஸ்டஸ் சுரங்கக் கல்லறையில் அடக்கம் செய்தார். அவரது கல்லறையில் வைக்கப்பட்ட கல்வெட்டு 1909ல் கண்டெடுக்கப்பட்டது. அதில் "PONTIANOS, EPISK" என்னும் சொற்கள் உள்ளன. அவற்றைத் தொடர்ந்து, "MARTUR" என்னும் சொல் வேறு ஒருவரால் சேர்க்கப்பட்டுள்ளது தெரிகிறது. இதற்கு, "ஆயரும் மறைச்சாட்சியுமான போன்தியன்" என்பது பொருள்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

Saint of the Day : (13-08-2020)

Sts. Pontian and Hippolytus

Tradition says that Hippolytus was born in the year A.D. 170. He was converted to Christianity by St. Lawrence. He was considered as a most important Christian theologian of third century. He used to frequently quarrel with bishops of Rome and has headed a rival group. For this reason he was called as antipope. He opposed the Roman bishops who have dealt with pagan converts to Christianity very leniently, when they joined the Christian community. During the reign of Emperor Maximinus of Thrax, Hippolytus and Pope Pontian were exiled to Sardinia in the year A.D. 235 for heading a rival group in Christianity. Pope Pontian reigned as pope from July 21, 230 to September 28, 235. When Pontian was exiled along with Hippolytus to Sardinia, Pontian abdicated from the papacy to enable the Church to elect a new Pontiff. Probably he was the first pope to abdicate papacy. Both were then killed in the infamous mines of Sardinia and died as Christian martyrs. Hippolytus has reconciled to the Church before his martyrdom. His body was brought to Rome and interned there on August 13, 236.

St. Hippolytus is venerated as a patron of prison guards, prison officers and prison workers.

---JDH---Jesus the Divine Healer---

12 August 2020

புனித ஜேன் பிரான்சிஸ் தே ஷாந்தால் (St. Jane Frances de Chantel August 12

இன்றைய புனிதர் :
(12-08-2020)

புனித ஜேன் பிரான்சிஸ் தே ஷாந்தால் (St. Jane Frances de Chantel)
பிறப்பு : 28 ஜனவரி 1572    
டிஜோன்(Dijon), பிரான்ஸ்
    
இறப்பு : 13 டிசம்பர் 1641 
பிரான்ஸ்

முத்திபேறுபட்டம்: 21 நவம்பர் 1751, 15 ஆம் பெனடிக்ட்
புனிதர்பட்டம்: 16 ஜூலை 1767, 13 ஆம் கிளமென்ட்

இவர் சிறுவயதிலேயே தன் தாயை இழந்தார். இதனால் இவர் இறைவனையே தாயாகக் கொண்டு வாழ்ந்தார். அரண்மனையில் இவர் வாழ்ந்தபோதும் கூட ஆன்மீகக் காரியங்களில் அக்கறைக்காட்டி வந்தார். பின்னர் இவர் தே ஷாந்தால் என்ற அரசரை திருமணம் செய்துகொண்டார். 6 பிள்ளைகளைப் பெற்றபின் திருமணமான ஏழு ஆண்டுகள் கழித்து தன் கணவரை இழந்தார். பின்னர் தன் பிள்ளைகளை வளர்த்தெடுத்தப்பின்னர், தான் ஓர் துறவற சபையை தொடங்க விரும்பினார். இதனால் புனித பிரான்சிஸ் சலேசியாரை சந்தித்து, தன் விருப்பத்தை தெரிவித்தார். 

பின்னர் பிரான்சிஸ் சலேசியாரை தன் ஆன்மீக குருவாக தேர்ந்தெடுத்து, அவர் காட்டிய வழியில் பின்தொடர்ந்தார். அரண்மனையில் வாழ்ந்ததால் முழுமையாக ஆன்மீக காரியங்களில் ஈடுபட முடியவில்லை என்பதை உணர்ந்து, அரண்மனையைவிட்டு வெளியேறினார். இதனால் பல துன்பங்களை அனுபவித்தார். அப்போது தன் ம்கனையும் இழந்தார். அச்சமயத்தில் பிளேக் நோய் பிரான்ஸ் நாட்டில் பரவியது. ஏராளமான மக்கள் அந்நோயால் இறந்தனர். அவரின் மருமகளும் அந்நோயால் தாக்கப்பட்டு இறந்தார். இதனால் இன்னும் மனமுடைந்த ஜேன் பிரான்சிஸ், பிளேக் நோயால் தாக்கப்பட்ட மக்களிடையே பணிபுரிந்தார். தன் அரண்மனை சொத்துக்கள் அனைத்தையும் விற்று ஏழைகளுக்காக செலவு செய்தார். அப்போதுதான் பிளேக் நோயால் பாதித்தவர்களுக்கு பணிபுரிவதற்கென்றே ஓர் துறவற சபையை நிறுவினார். தன் பிள்ளைகளையும், உற்றார், உறவினர் அனைவரையும் துறந்து இறைப்பணியை செய்தவர். ஆழ்ந்த விசுவாசமும், நம்பிக்கையும் கொண்டு, இடைவிடாமல் இறைபணி ஆற்றினார். தமக்கிருந்த எல்லாவற்றையுமே இறைவனின் மகிமைக்காக இழந்தார். 

செபம்:

நலமளிப்பவரே இறைவா! எம் சமுதாயத்தில் நோயால் பாதிக்கப்பட்டு, உடல் வேதனைகளை அனுபவிக்கிற ஒவ்வொருவரையும் நீர் நிறைவாக ஆசீர்வதியும். உடல் நோய்களை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும், மனபலத்தையும் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

Saint of the Day : (12-08-2020)

Saint Jeanne de Chantal

Born to the nobility, the daughter of the president of the Parliment of Burgundy who raised her alone after the death of her mother when Jeanne was 18 months old. Married in 1592 at age twenty to Baron de Chantal. Mother of four. Widowed at 28 when the Baron was killed in a hunting accident and died in her arms. Taking a personal vow of chastity, she was forced to live with her father-in-law, which was a period of misery for her. She spent her free time in prayer, and received a vision of the man who would become her spiritual director. In Lent, 1604, she met Saint Francis de Sales, and recognized him as the man in her vision. She became a spiritual student and close friend of Saint Francis, and the two carried on a lengthy correspondence for years. On Trinity Sunday, 6 June 1610 she founded the Order of the Visitation of Our Lady at Annecy, France. The Order was designed for widows and lay women who did not wish the full life of the orders, and Jeanne oversaw the founding of 69 convents. Jeanne spent the rest of her days overseeing the Order, and acting as spiritual advisor to any who desired her wisdom. Visitationist nuns today live a contemplative life, work for women with poor health and widows, and sometimes run schools.

Born :
28 January 1572 at Dijon, Burgundy, France

Died :
13 December 1641 at the Visitationist convent at Moulins, France of natural causes
• relics at Annecy, Savoy (in modern France

Canonized :
16 July 1767 by Pope Clement XIII

Patronage :
against in-law problems
• against the death of parents
• forgotten people
• parents separated from children
• widows

---JDH---Jesus the Divine Healer---
† இன்றைய புனிதர் †
(ஆகஸ்ட் 12)

✠ புனிதர் ஜேன் ஃபிரான்செஸ் டி சான்ட்டல் ✠
(St. Jane Frances de Chantal)

நிறுவனர்:
(Foundress)

பிறப்பு: ஜனவரி 28, 1572
டிஜோன், பர்கண்டி, ஃபிரான்ஸ்
(Dijon, Burgundy, France)

இறப்பு: டிசம்பர் 13, 1641 (வயது 69)
மௌலின்ஸ், ஃபிரான்ஸ்
(Moulins, France)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: நவம்பர் 21, 1751 
திருத்தந்தை 14ம் பெனடிக்ட்
(Pope Benedict XIV)

புனிதர்பட்டம்: ஜூலை 16, 1767 
திருத்தந்தை 13ம் கிளமென்ட்
(Pope Clement XIII)

முக்கிய திருத்தலங்கள்:
அன்னேஸி, சவோய்
(Annecy, Savoy)

நினைவுத் திருநாள்: ஆகஸ்ட் 12

பாதுகாவல்:
மறக்கப்பட்ட மக்கள்; மாமியார் பிரச்சினைகள்; காணாமல் போன பெற்றோர்;
பிள்ளைகளிடமிருந்து பிரிக்கப்பட்ட பெற்றோர்; விதவைகள்.

மனைவி, தாய், துறவி என பன்முகம் கொண்ட புனிதர் ஜேன் ஃபிரான்செஸ் டி சான்ட்டல், “தூய மரியாளின் திருவருகையின் அருட்சகோதரியர்” (Congregation of the Visitation) எனும் பெண்களுக்கான துறவற சபையின் நிறுவனரும், ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார்.

“பேரன் டி சான்ட்டல்” (Baronne de Chantal) எனும் இயற்பெயர் கொண்ட இவர், ஃபிரான்ஸ் (France) நாட்டின் “டிஜோன்” (Dijon) நகரில் பிறந்த ஜேன், “பர்கண்டி” (Burgundy) மாநில பாராளுமன்ற அரசவை தலைவரின் மகள் ஆவார். பதினெட்டு மாத குழந்தையாய் இருக்கையிலேயே தமது தாயை இழந்த இவர், தமது தந்தையால் கல்வி கற்பிக்கப்பட்டு, அழகும், உற்சாக குணமும் கொண்ட, மகிழ்ச்சியான பெண்ணாக வளர்ந்தார்.

இருபத்தொரு வயதில், “பேரோன் தெ சான்ட்டல்” (Baron de Chantal) என்ற அரச குடும்பத்தைச் சார்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். இருபத்தெட்டு வயதில், ஆறு குழந்தைகளுக்கு தாயானார். இதில் மூன்று குழந்தைகள், குழந்தைப் பருவத்திலேயே மரித்துப் போயின. கி.பி. 1601ம் ஆண்டு நடத்த ஒரு துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது, விபத்து காரணமாக, “பேரோன் தெ சான்ட்டல்” (Baron de Chantal) இறந்து போனார். ஜேன் அரண்மனையில் வாழ்ந்தபோதும், வரிசையாக தமது குடும்ப அங்கத்தினர்களின் மரணத்தால் மனமுடைந்து போனார். அவரது தாயார், வளர்ப்புத் தாயார், சகோதரி, தமது இரண்டு குழந்தைகள் - இப்போது தமது கணவர் என மரணங்கள் இவரை மனமுடைய வைத்தன.

இதனால் ஆன்மீகக் காரியங்களில் அக்கறைக்காட்டி வந்தார். கற்பு நிலைக்கான உறுதிப்பாடு எடுத்துக்கொண்டார். தாம் வசித்த வீட்டிலேயே தினமும் திருப்பலிகள் நிறைவேற்றும் வழக்கத்தினை ஏற்படுத்தினார். பல்வேறு தொண்டு பணிகளில் ஈடுபட்டார். 75 வயதான இவரது மாமனார், வீண் பிடிவாதமும், கொடூர, ஊதாரி குணமுள்ளவராய் இருந்தார். தமது வீட்டுக்கு திரும்பி வரவில்லையெனில் அவருடைய குழந்தைகளை பரித்துக்கொள்வதாக பயமுறுத்தினார். இத்தனைக்கும், ஜேன் இன்முகத்துடன் நடந்து கொண்டார்.

கி.பி. 1604ம் ஆண்டு, “டிஜொன் சிற்றாலயத்தில் (Sainte Chapelle in Dijon) பிரசங்கிக்க வந்திருந்த “ஜெனீவாவின்” ஆயரான (Bishop of Geneva) புனிதர் “ஃபிரான்சிஸ் டே சலேஸ்” (Francis de Sales) அவர்களை ஜேன் சந்தித்தார். ஆயரை ஜேன் தமது ஆன்மீக வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டார். தாம் துறவறம் ஏற்க வேண்டுமென்ற தமது விருப்பத்தை தெரிவித்தார். ஆனால், அந்த முடிவினை தாமதப்படுத்துமாறு “ஃபிரான்சிஸ் டே சலேஸ்” அறிவுறுத்தினார். ஜேன், மறுமணம் செய்துகொள்வதில்லை என்றும், தமது ஆன்மீக வழிகாட்டிக்கு கீழ்படிவதாகவும் உறுதி ஏற்றார்.

மூன்று வருடங்களின் பின்னர், “ஃபிரான்சிஸ் டே சலேஸ்” ஜேனிடம் தமது திட்டத்தை கூறினார். வயது, உடல்நிலை, மற்றும் பிற காரணங்களுக்காக ஏற்கனவேயுள்ள ஆன்மீக – துறவற சபைகளில் சேர இயலாத பெண்களுக்கான ஒரு ஆன்மீக துறவற சபையை தோற்றுவிப்பதே அத்திட்டமாகும். அங்கே கன்னியர்க்கான மடம் இருக்காது. ஆனால், ஆன்மிகம் மற்றும் இரக்கத்தின் இயல்பான பணிகள் செய்வதற்கான பூரண சுதந்திரம் இருக்கும் என்றார். எலிசபெத் அம்மாளைக் காண வந்த தூய மரியாளின் நற்குணங்களையும் நல்லொழுக்கங்களையும் முன்மாதிரியாக கொண்டிருக்க வேண்டும். ஆகவே, அவர்கள் தாழ்ச்சியும் சாந்த குணமும் நிறைந்த “திருவருகையின் அருட்சகோதரியர்” (Visitation Nuns) என்றழைக்கப்படுவர் என்றார்.

“திருவருகையின் அருட்சகோதரியர்” சபையை தொடங்குவதற்காக, தென் ஃபிரான்ஸில், ஜெனீவாவுக்கு (Geneva) 35 கிலோமீட்டர் தெற்கேயுள்ள “அன்னேசி” (Annecy) எனுமிடத்திற்கு ஜேன் பயணமானார். கி.பி. 1610ம் ஆண்டு, ஜூன் மாதம், 6ம் தேதி, திரித்துவ ஞாயிறு அன்று, “திருவருகையின் அருட்சகோதரியர் சபை” (Congregation of the Visitation) நிறுவப்பட்டது.

ஊழியங்களில் பெண்களுக்கெதிரான வழக்கமான எதிர்ப்பு இதிலும் இருந்தது. ஆகவே, புனித அகுஸ்தினாரின் (Rule of Saint Augustine) துறவற சட்ட திட்டங்களை இச்சமூகத்தினரிடையே “ஃபிரான்சிஸ் டே சலேஸ்” செயல் படுத்தினார். உடல் நலம் குறைந்த மற்றும் வயோதிக வயது பெண்களை சபையில் ஏற்றுக்கொள்வதற்காக மக்கள் அவரை விமர்சித்தபோது, "நான் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? நான் நோய்வாய்ப்பட்ட மக்களையே விரும்புகிறேன். நான் அவர்கள் பக்கத்திலேயே இருப்பேன் என்றார்.

புனிதர் ஃபிரான்சிஸ் டே சலேஸ் (Saint Francis de Sales) அவர்கள் மரித்தபோது, சபை பதின்மூன்று இல்லங்களைக் கொண்டிருந்தது. ஃபிரான்சிஸ் டே சலேஸ் மரணத்தின் பின்னர், “புனிதர் வின்சென்ட் டே பவுல்” (St. Vincent de Paul) இவரது ஆன்மீக வழிகாட்டியாக இருந்தார். “மௌலின்ஸ்” (Moulins) நகரிலுள்ள இவர்களது சபையின் இல்லத்தில், தமது 69 வயதில் ஜேன் மரணத்தின் முன்னர், இவர்களது சபைக்கு 86 இல்லங்கள் இருந்தன. கி.பி. 1767ம் ஆண்டு, சபைக்கு 164 இல்லங்கள் இருந்தன. ஜேன், இயேசுவின் தூய இருதய பக்தியிலும் மரியாளின் (Sacred Heart of Jesus and the Heart of Mary) தூய இருதய பக்தியிலும் மிகவும் ஆர்வமுள்ளவராய் விளங்கினார்.

11 August 2020

புனித அட்ராக்டா ( ஆறாம் நூற்றாண்டு)(ஆகஸ்ட் 11)

புனித அட்ராக்டா ( ஆறாம் நூற்றாண்டு)

(ஆகஸ்ட் 11)
இவர் அயர்லாந்து நாட்டைச் சார்ந்தவர். இவரது குடும்பம் மிகவும் செல்வச் செழிப்பான குடும்பம்.

சிறுவயதிலேயே கடவுள்மீது மிகுந்த பற்று கொண்ட இவர், வளர்ந்து பெரியவரான போது, துறவியாகப் போக முடிவு செய்தார். இதற்கு இவரது பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர். ஆனாலும் இவர் தன் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறித் துறவியானார். 

இவர் 'அயர்லாந்து நாட்டின் திருத்தூதர்' என அழைக்கப்படும் புனித பேட்ரிக், பெண்களுக்ககெ ஒரு துறவற சபையை‌ நிறுவிய போது, இவரைத் தான் தலைவியாக நியமித்தார். 

இவர் வழிப்போக்கர்கள் தஙகி ஓய்வெடுத்துச் செல்ல விடுதி ஒன்றைக் கட்டி, அதன் மூலம் வழிப்போக்கர்களுக்குப் பேருதவியாக இருக்கும்.

தன்னை நாடி வந்தோருக்கு இவர் தாராளமாக உதவி செய்தார். இவ்வாறு அறச்செயல்கள் செய்வதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இவர் விளங்கினார்.

கடவுள் இவருக்கு அருமடையாளங்கள் செய்வதற்கான ஆற்றலைத் தந்திருந்தார்.  இதன் மூலம் இவர் பலரையும் நோய்நொடிகளிலிருந்து  விடுவிடுத்து நல்வாழ்வு தந்தார். இவர் பல கோயில்களையும் துறவுமடங்களையும் கட்டியெழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

August 11​Saint of the day:Saint Philomena

August 11
Saint of the day:
Saint Philomena
Patron Saint of Children, youth, babies, infants, priests, lost causes, sterility, virgins, 
Children of Mary, The Universal Living Rosary Association, Sibonga, Cebu, Pulupandan, Negros Occidental
St. Philomena's Story

Little is known about the life of St. Philomena. However, it is believed she was a Greek princess who became a virgin martyr and died at 13-years-old.
Remains of a young lady were discovered in May 1802 at the Catacombs of Priscilla on the Via Salaria Nova with three tiles reading "Peace be to you, Philomena."
All that is known about St. Philomena's life comes from a Neapolitan nun's vision. Sister Maria Luisa di Gesu claims St. Philomena came to her and told her she was the daughter of a Greek king who converted to Christianity. When Philomena was 13-years-old, she took a vow of consecrated virginity.
After her father took his family to Rome to make peace, Emperor Diocletian fell in love with Philomena. When she refused to marry him, she was subjected to torture.
St. Philomena was scourged, drowned with an anchor attached to her, and shot with arrows. Each time she was attacked angels took to her side and healed her through prayer.
Finally, the Emperor had Philomena decapitated. According to the story, her death came on a Friday at three in the afternoon, the same as Jesus.
Two anchors, three arrows, a palm symbol of martyrdom, and a flower were found on the tiles in her tomb, interpreted as symbols of her martyrdom.
The nun's account states Philomena was born on January 10 and was killed on August 10.
Devotion for Philomena began to spread once her bones were exhumed and miracles began to occur. Canon Francesco De Lucia of Mugnano del Cardinale received relics of St. Philomena and had them placed in the Church of Our Lady of Grace in Mugnano, Italy.
Soon after her relics were enshrined, cancers were cured, wounds were healed and the Miracle of Mugnano, when Venerable Pauline Jaricot was cured of a severe heart issue overnight, were all attributed to St. Philomena.
Other Saints began to venerate Philomena and attributing miracles in their lives to the young martyr, including St. John Marie Vianney and St. Peter Louis Marie Chanel.
Although controversy sometimes surrounds the truth behind St. Philomena's life and sainthood, many believers all around the world continue to see her as a miraculous saint, canonized in 1837.
St. Philomena is the patron saint of infants, babies, and youth. She is often depicted in her youth with a flower crown, a palm of martyrdom, arrows, or an anchor.
Her feast day is celebrated on August 11.

அசிசி நகரின் புனித கிளாரா (Klara von Assisi OSCI)சபை நிறுவுனர் August 11

இன்றைய புனிதர் :
(11-08-2020)

அசிசி நகரின் புனித கிளாரா (Klara von Assisi OSCI)
சபை நிறுவுனர்
பிறப்பு : 1194 
அசிசி, இத்தாலி
    
இறப்பு : 11 ஆகஸ்டு 1253
அசிசி, இத்தாலி
15 ஆகஸ்டு 1255
திருத்தந்தை 4 ஆம் அலெக்சாண்டர்
பாதுகாவல்:    பார்வையற்றோர்

இவர் ஓர் பிரபு குலத்தில் பிறந்தவர். தனது இளம்வயதிலேயே அசிசியாரின் மறையுரையாலும், அவரின் ஏழ்மையான வாழ்வாலும் ஈர்க்கப்பட்டார். இதனால் அசிசியாரின் மறைபோதனைகளை தவறாமல் கேட்டு வந்தார். மிகவும் அழகான இளம்பெண் கிளாராவை திருமனம் செய்துகொடுக்க, இவரின் தந்தை ஏற்பாடு செய்தார். இதையறிந்த கிளாரா திருமண வாழ்வை விரும்பாமல் வீட்டைவிட்டு வெளியேறினார். பிரான்ஸ் அசிசியார் இருக்கும் இடத்தை தேடி ஓடினார். அசிசியாரை சந்தித்ததும் அவரின் அறிவுரைப்படி புனித ஆசீர்வாதப்பர் சபையில் தங்கினார். அப்போது தன்னுடைய அரண்மனை ஆடைகளை களைந்து துறவற ஆடையை உடுத்திக்கொண்டார். தான் ஓர் துறவி என்பதை மனதில் கொண்டு தன் முடியையும் வெட்டிக்கொண்டார். 

கிளாரா அசிசியாரை போலவே மிகவும் ஏழ்மையான வாழ்வை வாழ்ந்தார். ஏழைமக்களுக்காக கடுமையாக உழைத்தார். பின்னர் பெண்களுக்கென்று ஓர் துறவற சபையை தொடங்கினார். அசிசியாரின் சபை ஒழுங்குகளையே தானும் கடைபிடித்து தன் சபையினரையும் வாழ வைத்தார். மிகவும் கடுமையான செப, தவ வாழ்க்கையை வாழ்ந்தார். இவரின் சபை ஐரோப்பிய நாடுகளில் பரப்பப்பட்டு, நாளடைவில் உலகம் முழுவதும் பரவியது. அன்றிருந்த கடுமையான ஒழுங்குகள், இன்றுவரை கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. அசிசியாரின் சபை சகோதரர்களும், திருச்சபையிலிருந்து பல திருத்தந்தையர்களும், கர்தினால்கள், ஆயர்கள், குருக்களும் இவரை ஆன்மீக வழிகாட்டியாக தெரிந்துகொண்டு, இவரிடம் ஆலோசனை பெற்று வாழ்ந்தனர். 

இவர் தனது 59 ஆம் வயதில் தனது துறவற இல்லத்தில் இறைவார்த்தைகளை கேட்டபடியே உயிர்திறந்தார். இவர் இறந்த இரண்டே ஆண்டுகளில் புனிதர் பட்டம் பெற்றார். 

செபம்:
ஏழைகளின் தோழனே எம் இறைவா! ஏழ்மையை ஆடையாகக் கொண்டு வாழ்ந்த புனித கிளாராவைபோல, நாங்களும் ஏழ்மையை நேசித்து, ஏழைகளுக்கு உதவி செய்து , தொடர்ந்து உமது நண்பர்களாக வாழ எமக்கு நீர் உதவி செய்தருள வேண்டுமென்று தந்தையே உம்மை வேண்டுகின்றோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

Saint of the Day : (11-08-2020)

St. Clare

She was born on July 16, 1194 in Assisi, Italy. Her father was Favorino Scifi, the Count of Sasso and mother Orto Lana. Since her parents were of noble family, they wanted take St. Clare to their home, when she became a nun against their will. She refused to return to home and told her parents that God has called for her service. She was one of the first followers of St. Francis of Assisi. She founded an Order of Nuns named Order of Poor Ladies. The Order was renamed as Order of Saint Clare and also called as Poor Clares after the death of St. Clare, by Pope Urban-IV in the year 1263. One day some enemy soldiers came to raid the convent, where St. Clare was residing. St. Clare placed the Blessed Sacrament before the soldiers and she kneeled down to pray. Suddenly the enemy soldiers fled from the convent, due to some sudden fright struck the soldiers. The prayer of St. Clare and her faith in the Blessed Sacrament saved the nuns of the convent on that day. She died on August 11, 1253. She was canonized by Pope Alexander-IV on August 15, 1255, as St. Clare of Assisi. She is considered as the patron of sore eyes. Pope Pius-XII designated her as the patron saint of television in the year 1958.

---JDH---Jesus the Divine Healer---
† இன்றைய புனிதர் †
(ஆகஸ்ட் 11)

✠ அசிசியின் புனிதர் கிளாரா ✠
(St. Clare of Assisi)

கன்னியர்/ எளிய பெண்களின் ஆன்மீக துறவற சபை நிறுவனர்:
(Virgin/ Foundress of the Order of Poor Ladies)

பிறப்பு: ஜூலை 16, 1194
அசிசி, இத்தாலி
(Assise, Italy)

இறப்பு: ஆகஸ்ட் 11, 1253 (வயது 59)
அசிசி, இத்தாலி
(Assise, Italy)

ஏற்கும் சமயம்: 
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிகன் சமூகம்
(Anglican Communion)
லூதரனியம்
(Lutheranism)

புனிதர் பட்டம்: செப்டம்பர் 26, 1255
திருத்தந்தை நான்காம் அலெக்சாண்டர்
(Pope Alexander IV)

முக்கிய திருத்தலங்கள்: 
புனித கிளாரா பேராலயம், அசிசி
(Basilica of Saint Clare, Assisi)

நினைவுத் திருவிழா: ஆகஸ்ட் 11

சித்தரிக்கப்படும் வகை: 
கதிர்ப்பாத்திரம் (Monstrance), பெட்டி (Pyx), எண்ணெய் விளக்கு (Lamp), கன்னியர் சீருடை (Habit of the Poor Clares)

பாதுகாவல்:
கண் நோய் (Eye disease), பொற்கொல்லர் (Goldsmiths), சலவையகம் (Laundry), தொலைக்காட்சி (Television), பின்னல் பணியாளர் (Embroiderers), நல்ல வானிலை, அலங்கார தையல் பணியாளர் (Needleworkers), சாண்டா கிளாரா ப்யூப்லோ (Santa Clara Pueblo), ஒபாண்டோ (Obando)

அசிசியின் புனிதர் கிளாரா, ஒரு இத்தாலிய கிறிஸ்தவ புனிதரும் (Italian Saint), “அசிசியின் புனிதர் ஃபிரான்சிஸ்” (Saint Francis of Assisi) அவர்களின் ஆரம்பகால சீடர்களுள் ஒருவருமாவார். இவர், ஆண்களுக்கான ஃபிரான்சிஸ்கன் சபை ஒழுங்குகளைத் தழுவி, “எளிய பெண்களின் ஆன்மீக துறவற சபையை” (Order of Poor Ladies) நிறுவினார். இவரால் எழுதப்பட்ட இவரது சபையின் சட்ட திட்டங்கள், முதன்முதலாக, ஒரு பெண்ணால் எழுதப்பட்ட சட்ட திட்டங்களாகும். “எளிய பெண்களின் சபை” (Order of Poor Ladies) எனும் பெயர் கொண்ட இவரது சபை, இவரது மரணத்தின் பின்னர், இவரை கௌரவிக்கும் விதமாக, “புனிதர் கிளாராவின் சபை” (Order of Saint Clare) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பொதுவாக, இச்சபையினர் “எளிய கிளாராக்கள்” (Poor Clares) என அறியப்படுகின்றனர்.

தொடக்க காலம்:
“சியாரா ஆஃரெடுஸியோ” (Chiara Offreduccio ) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் கிளாரா, இத்தாலியின் அசிசி (Assisi) நகரில் பிரபுக்கள் குடும்பமொன்றில் கி.பி. 1194ம் ஆண்டு, ஜூலை மாதம், 16ம் தேதி, பிறந்தார். அசிசியின் “சஸ்ஸோ-ரொஸ்ஸோ” (Sasso-Rosso) பிராந்தியத்தின் பிரபுவான “ஃபேவரினோ ஸ்கிஃப்ஃபி” (Favorino Sciffi) இவரது தந்தை ஆவார். இவரது தாயாரின் பெயர், “ஒர்டோலனா” (Ortolana) ஆகும். 

இவரது தாயாரும் சகோதரியரும்:
கிளாராவின் தாயார் “ஒர்டோலனா” (Ortolana), பிற்காலத்தில் தமது சொந்த மகள் கிளாரா நிறுவிய “எளிய பெண்களின் சபையில்” இணைந்து துறவியானார். பின்னர், தமது கணவரின் மரணத்தின் பின்னர் “புனிதர் தமியான் துறவு மடத்தில்” (Monastery of San Damiano) இணைந்தார். இவர், “அருளாளர் அசிசியின் ஒர்டோலனா” (Blessed Ortolana of Assisi) என்று அறியப்படுகிறார். கிளாராவின் சகோதரியரான “பீட்ரிக்ஸ்” மற்றும் “கத்தரீனா” (Beatrix and Catarina) ஆகியோரும் கிளாராவின் சபையின் இணைந்தனர். இவர்களில் “கத்தரீனா”, புனிதர் “அசிசியின் அக்னேஸ்” (St. Agnes of Assisi) ஆவார்.

துறவற வாழ்வு:
ஆரம்பம் முதலே மிகவும் பக்தியுள்ள பெண்ணாக இவர் வளர்க்கப்பட்டார். இவருக்கு 18 வயது நடந்தபோது, அசிசியிலுள்ள புனித “ஜோர்ஜியோ” தேவாலயத்தில், அசிசியின் புனிதர் ஃபிரான்சிஸ் ஆற்றிய தவக்கால மறையுரையால் ஈர்க்கப்பட்டார். இறைவனின் நற்செய்திகளின்படி வாழ தமக்கு உதவுமாறு ஃபிரான்சிசை வேண்டினார். கி.பி. 1212ம் ஆண்டு, மார்ச் மாதம், 20ம் நாள், குருத்து ஞாயிறு அன்று, தனது அத்தையான “பியான்கா” (Bianca) மற்றும் ஒரு பெண் ஆகிய இரண்டு பேரின் துணையுடன் வீட்டை விட்டு வெளியேறி, ஃபிரான்சிசை சந்திப்பதற்காக “போர்ஸியுன்குலா” சிற்றாலயம் (Chapel of the Porziuncula) சென்றார். அங்கே, தமது அழகிய கூந்தலை மழித்தார். தமது அழகிய விலையுயர்ந்த ஆடைகளை களைந்து, வெற்று மேலங்கி மற்றும் முக்காடு ஆகியவற்றை பெற்றுக்கொண்டார்.

ஃபிரான்சிஸ், அவரை “பஸ்டியா” (Bastia) எனும் இடத்தின் அருகேயுள்ள “புனித பாலோவின் பெனடிக்டின் கன்னியாஸ்திரிகளின் பள்ளியில்” (Convent of the Benedictine nuns of San Paulo) தங்க வைத்தார். அங்கே வந்த கிளாராவின் தந்தை, அவரை வலுக்கட்டாயமாக வீட்டுக்கு அழைத்துச் செல்ல முயற்சித்தார். ஆனால், ஆலயத்தின் திருப்பலி பீடத்தினுள்ளே ஓடிப்போன கிளாரா, முக்காடை விலக்கி, தமது கூந்தலற்ற தலையை காட்டினார்.

ஃபிரான்சிஸ் அவரை மற்றுமொரு பெனடிக்டைன் கன்னியாஸ்திரிகள் மடாலயத்துக்கு (Monastery of the Benedictine Nuns) அனுப்பினார். விரைவில் அவரது தங்கை “கத்தரினாவும்” (Catarina) “அக்னேஸ்: (Agnes) என்ற பெயருடன் அவர்களுடன் இணைந்தார். “புனித தமியானோ தேவாலயத்தின்” (Church of San Damiano) அருகே, ஃபிரான்சிஸ் அவர்களுக்காக கட்டித்தந்த சிறிய குடியிருப்பில் தங்கினார்கள்.

அவர்களுடன் இன்னும் பிற பெண்களும் இணைந்தனர். அவர்கள், “புனித தமியானோவின் ஏழைப்பெண்கள்” (Poor Ladies of San Damiano) என்று அறியப்பட்டனர். கிளாரா, 40 ஆண்டுகள் கடுமையான துறவற தவ வாழ்வை மேற்கொண்டார். மிகுந்த எளிமை, தாழ்ச்சி, தொடர்ச்சியான உண்ணா நோன்பு, மாமிச உணவு உண்ணாமை, தொடர்ந்த மவுனம், காலணிகள் அணியாமை போன்ற கடுமையான தவ முயற்சிகளை மேற்கொண்டார். ஏழைகளின் புதல்வியர் சபை என்று பெயர் கொண்டிருந்த கிளாராவின் துறவற சபை, ஏழைப் பெண்களின் முன்னேற்றத்தையே முக்கிய நோக்கமாக கொண்டிருந்தது.

விசுவாசத் துறவி:
கி.பி. 1224ம் ஆண்டு, அரசன் “இரண்டாம் ஃபிரடெரிக்கின்” (Frederick II) இராணுவத்தினர் அசிசியை கொள்ளையிட வந்தனர். அப்போது, அர்ச்சிஷ்ட நற்கருணை ஆண்டவரை கையிலேந்தியபடி கிளாரா வெளியே வந்தார். நற்கருணை நாதரின் வல்லமையாலும், திடீரென நிகழ்ந்த அற்புதத்தாலும், அரச இராணுவத்தினர் எவருக்கும் யாதொரு துன்பமும் ஏற்படுத்தாமல் திரும்பிப் போனார்கள்.

கிளாரா, நற்கருணை நாதராம் கிறிஸ்து இயேசுவிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். இவர் இயேசுவின் வல்லமையையும் அன்பையும் தனது வாழ்வில் எப்போதும் உணர்ந்து வாழ்ந்தார். நற்கருணையின் மதிப்பீடுகளான அன்பு, தியாகம் ஆகியவற்றை தனது வாழ்வில் கடைபிடித்து வாழ்ந்து வந்தார்.

"இறைவா, உம் விருப்பம் போல் என்னை நடத்தும்; என் மனம் என்னுடையதல்ல உமக்குரியது" என்று கிளாரா அடிக்கடி செபித்து வந்தார். தன்னோடு துறவற வாழ்வு மேற்கொண்டிருந்த பெண்கள் இறைவனின் அன்பில் வளர இவர் சிறந்த முன்மாதிரியாக விளங்கினார். ஏழை, எளியப் பெண்களின் வாழ்க்கை மேன்மை அடைய மிகவும் ஆர்வமாகவும் கடுமையாகவும் உழைத்தார்.

கி.பி. 1253ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 11ம் தேதி மரித்த கிளாரா, இறைவனின் அமைதியில் உயிர்த்தார்.

10 August 2020

திருத்தொண்டர் லாரன்ஸ் (Laurentius/ Lorenz / Lawrence)மறைசாட்சி August 10

இன்றைய புனிதர் :
(10-08-2020)

திருத்தொண்டர் லாரன்ஸ் (Laurentius/ Lorenz / Lawrence)
மறைசாட்சி
பிறப்பு : 230
ஸ்பெயின்
    
இறப்பு : 10 ஆகஸ்டு 258 
உரோம், இத்தாலி. வலேரியன் என்ற என்ற அரசனால் கொல்லப்பட்டார்.
பாதுகாவல்: வுப்பர்டால்(Wuppertal) மற்றும் நூரன்பெர்க்(Nürnberg) நகரங்களுக்கு.

இவர் உரோமைத் திருச்சபையின், திருத்தந்தை புனித 2 ஆம் சிக்ஸ்டஸிடம் (Pope Sixtus II) திருத்தொண்டராக இருந்தார். அப்போது மாமன்னன் வலேரியன் (Valerien) கிறித்தவர்களை அடக்கி, ஒடுக்கி துன்புறுத்தினான். அந்நேரத்தில் திருத்தந்தை 2 ஆம் சிக்ஸ்துவையும் அவருடன் இருந்த நான்கு திருத்தொண்டர்களையும் பிடித்து சென்று கொன்றான். அவர்கள் மரித்த நான்காம் நாளே லாரன்சும் மறைசாட்சியாக எரித்துக்கொல்லப்பட்டார். ஆலயத்திற்கு சொந்தமான அனைத்து பொருட்களையும் எடுத்து ஏழைகளுக்கு கொடுத்தார். அரசன் கேட்ட கேள்விகளுக்கு லாரன்ஸ் கூறிய விடைகளை அரசன் தவறாக புரிந்துகொண்டான். அதனால் லாரன்சை ஒரு இரும்புக்கட்டிலில் போட்டு அதற்கடியில் நெருப்பு வைத்து கொளுத்தி கொல்லும்படி ஆணையிட்டான். ஆனால் லாரன்சோ, நெருப்பில் வேகும்போது இறைவனைப் போற்றி புகழ்ந்து செபித்தார். தன் உடல் முழுவதும் எரிந்த பிறகு, நன்றாக வெந்துவிட்டது, திருப்பிப்போடுங்கள் என்றார். இவரது கல்லறை காம்போ வேரோனா என்ற பகுதியில் தீபூர்த்தினா சாலை அருகே உள்ளது. அக்கல்லறையின்மேல் மாமன்னர் கொன்ஸ்தான்சியுஸ் பேராலயம் ஒன்றை எழுப்பினார். 4 ஆம் நூற்றாண்டிலேயே இப்புனிதரின் பக்தி பரவியது.

செபம்:
அன்பின் ஊற்றே எம் இறைவா! தனது வாழ்வை மக்களின் பணிக்காகவும், உமது இறையரசின் மேன்மைக்காகவும் அர்ப்பணித்து மறைசாட்சியாக மரித்த புனித லாரன்சை நினைத்து உமக்கு நாங்கள் நன்றி கூறுகின்றோம். அவர் உம்மை அன்பு செய்ததுபோல, நாங்களும் உம்மை அன்பு செய்து அவர் போதித்த வாழ்வின்படி நாங்கல் வாழவும், நீர் வரம் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

Saint of the Day : (10-08-2020)

St. Lawrence

He was born in A.D. 225 in a place now in modern day Spain. He was one of the seven Deacons of ancient Rome under Pope Sixtus-II. He gave all the money he had to the poor people. When the Pope Sixtus-II was condemned to death by the Emperor Valerian and when the Pope was led to execution, St. Lawrence followed the Pope. He asked the Pope Father, where are you going without your deacon. To this the Pope answered him that in three days you will follow me. After the death of the Pope Sixtus-II, the Prefect of Rome, who was a greedy pagan, ordered Lawrence to bring all the Church’s treasures to him. Lawrence asked for three days to bring the treasures to him. He then gathered all the poor and sick people in Rome and brought them before the Prefect and told him they are the treasures of the Church. The Perfect became furious and condemned Lawrence to a slow and cruel death. He was tied on top of an iron grill over a slow fire. This roasted the flesh of Lawrence little by little and led him to a slow and very painful death. Tradition says that he was martyred at San Lorenzo in Panisperna on August 10, 258. Legend says that St Lawrence, while he was roasted on the iron grill told the soldiers that his flesh is now suitably roasted so that it can be eaten by them. Emperor Constantine constructed an Oratory in honor of St. Lawrence. The grill of iron of martyrdom was placed by Pope Pascal-II in the Church of St. Lorenzo in Lucina.

He is one of the widely venerated saints of Catholic Church. The Perseid Meteor Shower occurs every year in mid-August on or near San Lawrence feast day, is called by many people as the Tears of Saint Lawrence.

---JDH---Jesus the Divine Healer---

† இன்றைய புனிதர் †
(ஆகஸ்ட் 10)

✠ புனிதர் லாரன்ஸ் ✠
(St. Lawrence of Rome)

திருத்தொண்டர், மறைசாட்சி:
(Deacon and Martyr)

பிறப்பு: டிசம்பர் 26, 225
வலென்சியா அல்லது ஒஸ்கா, ஹிஸ்பானியா (தற்போதைய ஸ்பெயின்)
(Valencia or less likely Osca, Hispania (modern-day Spain)

இறப்பு: ஆகஸ்ட் 10, 258
ரோம் (Rome)

ஏற்கும் சமயம்: 
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodoxy)
ஆங்கிலிகன் சமூகம்
(Anglican Communion)
லூதரனியம் 
(Lutheranism)

முக்கிய திருத்தலம்:
புனிதர் லாரன்ஸ் ஃபுவோரி லெ முரா பேராலய திருத்தலம், ரோம்
(Basilica di San Lorenzo fuori le Mura in Rome)

நினைவுத் திருவிழா: ஆகஸ்ட் 10

பாதுகாவல்: 
கனடா (Canada), இலங்கை (Sri Lanka), நகைச்சுவையாளர்கள் (Comedians), நூலகர்கள் (Librarians), மாணவர்கள் (students), சுரங்கத் தொழிலாளர்கள் (miners), சமையல்காரர்கள் (Chefs), ரோஸ்டர்ஸ் (Roasters), ரோம் (Rome), ரோடர்டாம் (நெதர்லாந்து) (Rotterdam (Netherlands), ஹூஸ்கா (ஸ்பெயின்) (Huesca (Spain), சான் லாரென்ஸ் (San Lawrenz), கோசோ மற்றும் பிர்யூ (மால்டா) (Gozo and Birgu (Malta), பாராங்கை சான் லோரென்சோ சான் பப்லோ (பிலிப்பைன்ஸ்) (Barangay San Lorenzo San Pablo (Philippines), ஏழை (Poor), தீயணைப்பு வீரர்கள் (Firefighters).

புனிதர் லாரன்ஸ், “திருத்தந்தை இரண்டாம் சிக்ஸ்டஸின்” (Pope Sixtus II) கீழே ரோம் நகரில் பணியாற்றி, ரோமப் பேரரசன் “வலேரியன்” (Roman Emperor Valerian) என்பவனது ஆட்சிக் காலத்தில் நடந்த கிறிஸ்தவ துன்புருத்தல்களின்போது கி.பி. 258ம் ஆண்டு கொல்லப்பட்ட ஏழு திருத்தொண்டர்களுள் (Deacon) ஒருவர் ஆவார்.

மரபுகளின்படி, மறைசாட்சிகள் – புனிதர் “ஒரேன்ஷியஸ்” (St Orentius) மற்றும் புனிதர் “பேஷியன்ஷியா” (St Patientia) ஆகியோர் இவரது பெற்றோர் என நம்பப்படுகிறது.

இவர், கிரேக்க குடியும், மிகவும் பிரபலமான மற்றும் மிகவும் மதிப்புமிக்க ஆசிரியர்களுல் ஒருவரும், எதிர்கால திருத்தந்தையுமான இரண்டாம் சிக்ஸ்டசை” (Pope Sixtus II) தற்போதைய “சரகோஸா” (Zaragoza) எனுமிடத்தில் சந்தித்தார். இறுதியில் இருவரும் ஸ்பெயின் (Spain) நாட்டை விட்டு, ரோம் (Rome) நகர் புறப்பட்டுச் சென்றனர். கி.பி. 257ம் ஆண்டு, சிக்ஸ்டஸ் திருத்தந்தையானபோது, அவர் லாரன்ஸையும் இன்னும் ஆறு பேரையும் திருத்தொண்டர்களாக (Deacon) அருட்பொழிவு செய்வித்தார். லாரன்ஸ் இளைஞராக இருப்பினும், அவர்களில் முதன்மைத் திருத்தொண்டராக (Archdeacon of Rome) நியமித்தார்.

ரோமானிய அதிகார வர்க்கம், விதிமுறை ஒன்றினை நிறுவியதாக “கர்தாஜ்” ஆயரான (Bishop of Carthage) “புனிதர் சைப்ரியன்” (St. Cyprian) குறிப்பிடுகிறார். அந்த விதிமுறையில், கண்டிக்கப்பட்ட அனைத்து கிறிஸ்தவர்களும் தூக்கிலிடப்பட வேண்டுமென்றும், அவர்களின் பொருட்கள் மற்றும் சொத்துக்கள் பேரரசின் கருவூலத்தால் பறிமுதல் செய்யப்பட வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறுகிறார்.

“பேரரசன் வலேரியன்” (Emperor Valerian), கி.பி. 258ம் ஆண்டு, ஆகஸ்ட் மாத தொடக்கத்தில், அனைத்து ஆயர்கள், குருக்கள் மற்றும் திருத்தொண்டர்கள் அனைவரும் உடனடியாக தூக்கிலடப்படவேண்டும் என்ற உத்தரவினை வெளியிட்டான். கி.பி. 258ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி, “புனிதர் கல்லிக்ஸ்டஸின்” (Cemetery of St Callixtus) கல்லறையில் வழிபாடு நடத்திக்கொண்டிருந்த திருத்தந்தை “இரண்டாம் சிக்ஸ்டஸ்” (Pope Sixtus II) பிடிக்கப்பட்டு, உடனடியாக தூக்கிலிடப்பட்டார்.

சிக்ஸ்டசின் மரணத்தின் பின்னர், திருச்சபையின் சொத்துக்கள் அனைத்தையும் திருப்பி ஒப்படைக்க வேண்டுமென ரோம தலைமை அதிகாரி (Prefect) கட்டளையிட்டான். சம்பவங்களின் ஆரம்ப ஆதாரமாக இருந்த புனிதர் “அம்ப்ரோஸ்” (St Ambrose), சொத்துக்களை ஒன்று திரட்ட தமக்கு மூன்று நாட்கள் அவகாசம் வேண்டுமென லாரன்ஸ் கேட்டதாகவும், இயன்றவரை சொத்துக்களை வேக வேகமாக ஏழைகளுக்கு பகிர்ந்தளித்ததாகவும் கூறுகிறார். சொத்துக்கள் ரோம தலைமை அதிகாரியின் (Prefect) கைகளுக்கு போய் விடக்கூடாதே என்ற அவசரம் அவரது வேகத்திலிருந்தது என்கிறார்.

மூன்றாவது நாள், ஒரு சிறு குழுவை தலைமை தாங்கி வந்த லாரன்ஸ், தலைமை அதிகாரி முன்னிலையில் ஆஜரானதாக கூறுகிறார். திருச்சபையின் சொத்துக்களை ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டபோது, அவர் தம்முடன் வந்திருந்த எளியவர்கள், ஊனமுற்றோர், பார்வையற்றோர் மற்றும் வேதனையால் துன்புருவோரை அதிகாரியின் முன்னிறுத்தி, இவர்களே திருச்சபையின் உண்மையான சொத்துக்கள் என்றார். “திருச்சபை உண்மையிலேயே செல்வம் மிகுந்தது; உங்களுடைய பேரரசனை விட எவ்வளவோ செல்வம் உள்ளது” என்று, லாரன்ஸ் தலைமை அதிகாரியிடம் அறிக்கையிட்டார். இத்தகைய அறைகூவல், லாரன்ஸை நேரடியாக மரணத்தின் வாயிலுக்கு இட்டுச் சென்றது. கடும் கோபமடைந்த தலைமையதிகாரி, தாம் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த, இறைச்சி போன்றவற்றை சுடுவதற்கு பயன்படும் கம்பி போன்ற பெரிய அளவிலான சூடான இரும்பு கம்பிகளில் லாரன்ஸை படுக்கவைத்தான். நெடு நேர வேதனை அனுபவித்த லாரன்ஸ், சிரித்த முகத்துடன், “இந்த பக்கம் வெந்துவிட்டது; மறுபக்கம் திருப்பி போடு” என்றார்.

மரபுப்படி, புனித லாரன்ஸை கௌரவிக்கும் விதமாக, பேரரசர் “முதலாம் கான்ஸ்டன்டைன்” (Emperor Constantine I) ஒரு சிற்றாலயம் அமைத்தார். இது ரோம் நகரின் ஏழு திருப்பயண ஆலயங்களுல் ஒன்றாக துவக்கக்காலம் முதலே கருதப்பட்டது. இவ்வாலயத்தை திருத்தந்தை “முதலாம் டமாஸ்கஸ்” (Pope Damasus I) சீரமைத்து “புனித லாரன்ஸ் பேராலயமாக” (Basilica di San Lorenzo fuori le Mura) மாற்றினார். புனிதர் லாரன்ஸ் மறைசாட்சியாக மரித்த இடத்தில், “புனித லாரன்ஸ் சிறு பசிலிக்கா” (Minor Basilica of San Lorenzo in Panisperna) உருவாக்கப்பட்டது. லாரன்ஸ் மறைசாட்சியாக உபயோகப்பட்ட இரும்புக்கம்பி, அங்கேயே வைக்கப்பட்டுள்ளது.

09 August 2020

திருச்சிலுவையின் புனித தெரசா பெனடிக்டா(Edith Stein) Holy Cross of St. Theresa Benadiktaமறைசாட்சி ஆகஸ்ட் 09

இன்றைய புனிதர் :
(09-08-2020)

திருச்சிலுவையின் புனித தெரசா பெனடிக்டா(Edith Stein) 
Holy Cross of St. Theresa Benadikta
மறைசாட்சி
பிறப்பு : 12 அக்டோபர் 1891, 
ப்ரேஸ்லவ்(Breslau), போலந்து
    
இறப்பு : 9 ஆகஸ்டு 1942, 
ஹிட்லர் வதை முகாம், அவுஷ்விட்ஸ்(Auschwitz), போலந்து

முத்திபேறுபட்டம்: 1 மே1987, கொலோன்(Köln), ஜெர்மனி, திருத்தந்தை 2 ஜான்பவுல்
31 ஆம் வயதில் யூத மதத்திலிருந்து மனமாறி துறவியானார்

இவர் ஓர் யூதர் குலத்தில் பிறந்தார். சிறுவயதிலிருந்தே ஆன்மீகக் காரியங்களில் ஈடுபட்டார். பல புனிதர்களின் வரலாற்றை ஆர்வமுடன் வாசித்து, அவர்களைப்போல வாழவேண்டுமென்று விரும்பினார். இவர் தனது சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். இதனால் தாய் மிகவும் கடினப்பட்டு தன்பிள்ளைகளை வளர்த்தார். தெரசா மிகவும் அறிவாளியாக திகழந்தார். பல அறிவியல் அறிஞர்களின் நூல்களை வாசித்தார். அப்போது தன் தாய்க்கு உதவி செய்யும் நோக்குடன் ஒரு கிறித்துவ குடும்பத்தில் உதவி செய்ய சேர்ந்தார். அக்குடும்பத்தில் இருந்த ஒரு பெண், தன் தாயை போலவே விதவையாக இருந்தார். தன் கணவரை நினைத்து, திருச்சிலுவையை நோக்கி கண்ணீர்விட்டு மன்றாடி செபித்தார். தொடர்ந்து செபித்த அப்பெண்ணினால் கிறிஸ்துவ மதத்திற்கு தானும் மாற வேண்டுமென்று தூண்டப்பட்டார். 

அப்போது அவ்வூரிலிருந்த பங்கு தந்தையை அணுகி, தன் விருப்பத்தை தெரிவித்தார். அதன்பின் முறைப்படி செபங்களை கற்றுக்கொண்டு, திருமுழுக்கு பெற்று கிறித்தவராக மாறினார். பங்குத்தந்தையின் அறிவுரையின்படியும், விருப்பப்படியும் ஓர் கிறிஸ்துவ பள்ளியில் பயின்று, ஆலயக் காரியங்களில் ஈடுபட்டார். நன்கு கற்றுத் தேர்ந்த தெரசா யூதக் குலத்திலிருந்து, கிறிஸ்துவத்திற்கு மாறியபின், பள்ளியில் பணிபுரியும் ஆசிரியராக பணியாற்றினார். மிகச் சிறப்பாக பணிபுரிந்த அவர் ஹிட்லர் ஆட்சியால் பாதிக்கப்பட்டார். ஹிட்லரால் மிகவும் துன்புறுத்தப்பட்டார். 

அவ்வேளையில்தான் ஒருநாள் கார்மேல் மடத்திற்குள் தஞ்சம் புகுவதற்காக நுழைந்தார். நாளடைவில் அக்கன்னியர்களுள் தானும் ஒருவரானார். பலமுறை ஹிட்லரால் துன்புறுத்தப்பட்டபோதும், தான் " ஓர் கிறித்தவள்" என்றே கூறினார். இதனால் ஹிட்லர் யூத குலத்திற்கு, மேலும் பல துன்பங்களைக் கொடுத்தான். அப்படி இருந்தபோதும் கூட இறைவனை இறுகப்பற்றிக்கொண்டு தொடர்ந்து செபித்தார். ஹிட்லரின் பிடியிலிருந்தபோதும்கூட உடனிருந்த மக்களிடையே போதித்தார். இதனால் ஹிட்லரால் பலமுறை கொடுமைப்படுத்தப்பட்டு உயிர் துறந்தார்.

செபம்:

எல்லாம் வல்லவரே எம் தந்தையே! இதோ ஹிட்லர் ஆட்சியின்போது இறந்துபோன, எம் யூத குல சகோதர, சகோதரிகளை உம் பதம் வைக்கின்றோம். அவர்கள் அனைவரையும், நீர் கருணைகூர்ந்து உம் வான்வீட்டில் சேர்த்தருளும். இன்றும் யூத மக்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளை நீர்தாமே அகற்றி, நல்வாழ்வளித்தருள் வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சி மன்றாடுகின்றோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

Saint of the Day : (09-08-2020)

St. Teresa Benedicta of the Cross (Edith Stein)

Edith Stein, which was the birth name of this saint, was born on October 12, 1891 in Breslau in Israel. She was born a Jewish woman. Her father was running a timber business but died when Edith was two years old. She completed a nursing course and served in an Austrian Field Hospital during First World War. Even though she was a born Jew, she gave-up practicing Jewish religion at her age of 14 years. When the Austrian Field Hospital was dissolved, she went to Germany and passed her Doctorate with distinction. She was baptized and became a Christian on January 1. 1922. She joined in the Carmelite Convent and her investiture took place on April 15, 1934. Her name was then changed from Edith Stein to Teresa Benedicta. Hitler’s Nazi people arrested her on August 2, 1942 when she was in the chapel along with other sisters. She and other sisters were taken to a Nazi transit camp and were killed by Nazis by giving poisonous gas, probably on August 9, 1942. She died as a catholic martyr during Nazi persecution.

She was beatified by St. Pope John Paul-II on May 1, 1987 in Cologne.

---JDH---Jesus the Divine Healer---
† இன்றைய புனிதர் †
(ஆகஸ்ட் 9)

✠ புனிதர் சிலுவையின் தெரெசா பெனடிக்டா ✠
(St. Teresa Benedicta of the Cross)

கார்மேல் சபை அருட்சகோதரி மற்றும் மறைசாட்சி:
(Discalced Carmelite nun and Martyr)

பிறப்பு: அக்டோபர் 12, 1891
ப்ரெஸ்லவ் (சிலேசியா), ஜெர்மனி (தற்போது வ்ரோக்ளோ, போலந்து)
(Breslau, German Empire (Now Wrocław, Poland)

இறப்பு: ஆகஸ்ட் 9, 1942 (வயது 50)
ஔஸ்விட்ஸ் - சித்திரவதை முகாம், பொது அரசு (நாஜி-ஆக்கிரமிக்கப்பட்ட போலந்து)
(Auschwitz Concentration Camp, General Government (German-occupied Poland)

ஏற்கும் சமயம்: 
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திப்பேறு பட்டம்: மே 1, 1987 
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)
கோலோன், ஜெர்மனி
(Cologne, Germany)

புனிதர் பட்டம்: அக்டோபர் 11, 1998
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

நினைவுத் திருவிழா: ஆகஸ்ட் 9

சித்தரிக்கப்படும் வகை: 
ஒரு புத்தகம் (A book), தீ நாக்கு (Flames), 
கார்மேல் பெண் துறவியின் ஆடையில் தாவீதின் மஞ்சள் நிற விண்மீன் (Yellow Star of David on a Discalced Carmelite nun's habit, Flames, a book)

பாதுகாவல்:
ஐரோப்பா (Europe), பெற்றோரை இழந்தோர் (Loss of Parents), மனம் மாறிய யூதர்கள் (Converted Jews), மறைசாட்சியர் (Martyrs), உலக இளைஞர் தினம் (World Youth Day)

“புனிதர் சிலுவையின் தெரெசா பெனடிக்டா” (St. Teresa Benedicta of the Cross), ரோமன் கத்தோலிக்க மதத்திற்கு மனம் மாறிய ஒரு ஜெர்மானிய - யூத தத்துவயியலாளர் (German Jewish Philosopher) ஆவார். 13 வயதில், யூத மதத்தின் மீது நம்பிக்கை இழந்ததாலும், கத்தோலிக்க திருச்சபையின் மீது கொண்ட உறுதியான விசுவாசத்தாலும், மறைகல்வி பயின்று 1 ஜனவரி 1922 அன்று கத்தோலிக்கராக திருமுழுக்கு பெற்றார். 1934ம் ஆண்டு, “தீவிர கட்டுப்பாடுகளைக் கொண்ட கார்மேல் சபையில்” (Discalced Carmelite) இணைந்து துறவு வாழ்வினை மேற்கொண்டார்.

வரலாறு:
“எடித் ஸ்டைன்” (Edith Stein) எனும் இயற்பெயர் கொண்ட இவர், கி.பி. 1891ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 12ம் நாள், அப்போதைய ஜெர்மனியின் “ப்ரெஸ்லவ்” (Breslau) நகரத்தில் யூதப் பெற்றோருக்கு 11வது குழந்தையாகப் பிறந்தார். இந்நகரம் தற்போது போலந்து நாட்டில் “வ்ரோக்ளோ” (Wrocław, Poland) என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. யூதர்களின் முக்கிய விழாவான “பிராயச்சித்த நாள்” விழாவின்போது (Day of Atonement) இவர் பிறந்தார். இவருக்கு 2 வயது நடந்த போது இவரின் தந்தை இறந்தார். 

எடித், மெய்யியல் படிப்பில் சிறந்து விளங்கினார். உண்மையைத் தேடுவதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். இவர் தனது 14வது வயதில் கடவுள் நம்பிக்கையை கைவிட்டார். தன்னை ஒரு நாத்திகர் என்றே அறிவித்தார். ஒரு சிறந்த கத்தோலிக்கப் பேராசிரியரின் விதவை மனைவிக்கு உதவிகள் செய்து வந்தார். இந்த விதவை, தனது அத்தனை துன்பங்களிலும் சிலுவையில் அறையுண்ட இயேசுவில் விசுவாசம் கொண்டிருந்தது இவருடைய வாழ்வை மாற்றியது. 

ஒருசமயம் தனது நண்பரின் இல்லம் சென்றிருந்த சமயத்தில் “புனிதர் அவிலாவின் தெரேசாவின்” (St. Teresa of Ávila) வாழ்க்கை வரலாறு புத்தகம் கிடைத்தது. அதையும் எடுத்து வாசித்தார் எடித். இது அவரது அகக் கண்களை திறந்தது. இதன் விளைவாக திருமறை விளக்க நூல் ஒன்றையும் திருப்பலி புத்தகம் ஒன்றையும் வாங்கி வாசித்தார். கத்தோலிக்க நம்பிக்கையினைத் தழுவினார். 1 ஜனவரி 1922 அன்று திருமுழுக்கு பெற்ற இவர், 1923 முதல் 1931 வரை “ஸ்பேயர்” (Speyer) எனுமிடத்திலுள்ள “டோமினிக்கன் அருட்சகோதரியர் பள்ளியில்” (Dominican nuns' school) கற்பிக்கும் பணி செய்தார்.

எடித் கற்பிக்கும் பணியை விட்டுவிடவேண்டுமென “நாசி அரசாங்கம்” (Nazi government) வற்புறுத்தியது. திருத்தந்தை “பதினோராம் பயஸ்” (Pope Pius XI) அவர்களுக்கு இவர் எழுதிய கடிதமொன்றில், நாஜி ஆட்சியை கண்டனம் செய்த இவர், கிறிஸ்துவின் பெயரைத் துஷ்பிரயோகம் செய்வதை நிறுத்துவதற்காக, நாஜி ஆட்சியை வெளிப்படையாக கண்டனம் செய்ய வேண்டினார். அவர் திருத்தந்தைக்கு எழுதிய இந்த நீண்ட கடிதத்திற்கு திருத்தந்தையிடமிருந்து பதிலேதும் வரவில்லை. கடிதத்தை திருத்தந்தை படித்தாரா என்பதே தெரியாது. (இருப்பினும், 1937ம் ஆண்டு, நாஜி ஆட்சியை கண்டித்து, ஜெர்மனி மொழியில் ஒரு சுற்றறிக்கையை திருத்தந்தை வெளியிட்டார்.)

இதனால் இவர் 1933ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி கொலோன் (Cologne) நகரிலுள்ள “சமாதானத்தின் அன்னை” (St. Maria vom Frieden (Our Lady of Peace) கார்மேல் துறவற (Discalced Carmelite monastery) சபையில் சேர்ந்தார். "சிலுவையின் தெரெசா பெனடிக்ட்டா" என்ற ஆன்மீக பெயரை ஏற்றார். திருச்சிலுவையினால் ஆசீர்வதிக்கப்பட்ட தெரெசா என்பது இதன் பொருள். 

அச்சமயத்தில், 1937ம் ஆண்டில், ஹிட்லரின் நாசிப் படையினர் ஜெர்மனியில் யூதர்களை சித்திரவதை செய்வது தலைதூக்கியது. ஜெர்மனியில் யூதர்களின் எண்ணிக்கை பெருகி வந்ததையும் அவர்களது வளமான வாழ்வையும் ஹிட்லரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இதன் அடையாளமாக முதலில் கொலோன் யூதமதத் தொழுகைக் கூடத்தைத் தீக்கிரையாக்கினான் ஹிட்லர். 

எனவே எடித்தின் பாதுகாப்புக்காகவும், கத்தோலிக்கத்துக்கு மாறியிருந்த எடித்தின் இன்னொரு சகோதரி ரோசாவின் (Rosa) பாதுகாப்பிற்காகவும், இவர்களிருவரையும் நெதர்லாந்து நாட்டிலிருந்த “எச்ட்” (Echt, Netherlands) எனும் இடத்திலிருந்த துறவு மடத்துக்கு இவர்களது சபையினர் அனுப்பி வைத்தனர். இறுதியில் நெதர்லாந்திலும் அவர்களுக்கு பாதுகாப்பு இருக்கவில்லை. 

ஹிட்லரின் நாசிப் படைகள் 1940ம் ஆண்டில் நெதர்லாந்தை ஆக்கிரமித்தன. 2 ஆகஸ்ட் 1942 அன்று, தெரேசா, ரோசா மற்றும் பல யூதர்கள் கைது செய்யப்பட்டனர். முதலில் அவர்கள் “அமெர்ஸ்ஃபூர்ட்” மற்றும் “வெஸ்டேர்பொர்க்” (Amersfoort and Westerbork) ஆகிய சித்திரவதை முகாம்களில் அடைக்கப்பட்டனர். “வெஸ்டேர்பொர்க்” முகாமில், எடித்தின் விசுவாசம் மற்றும் அமைதியால் ஈர்க்கப்பட்ட “டட்ச்” அதிகாரி (A Dutch official) ஒருவர், சகோதரியர் இருவரும் தப்பிச் செல்ல ஒரு திட்டம் வகுத்து தந்தார். ஆனால், அதனை எடித் தீர்க்கமாகவும் கடுமையாகவும் அவரது உதவியை மறுத்துவிட்டார். அத்துடன், “இந்த கட்டத்தில் யாரோ ஒருவர் தலையிட்டு, அவரது ஆயிரக்கணக்கான சகோதர சகோதரிகளின் தலைவிதியினைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை எடுத்துவிட்டால், அது முற்றிலும் நிர்மூலமான அழிவு ஆகும்” என்றார்.

1942ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 7ம் நாளன்று, அதிகாலை, 987 யூதர்கள் “ஆஷ்விட்ஸ்” (Auschwitz) சித்திரவதை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அம்முகாமில் 1942ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 9ம் தேதியன்று, புனிதர் சிலுவையின் தெரெசா பெனடிக்டாவும் அவரது சகோதரியும் இன்னும் பலரும் நச்சுவாயு அறைகளில் அடைக்கப்பட்டு இறந்தனர்.

திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் (Pope John Paul II), இவரை ஐரோப்பாவின் ஆறு பாதுகாவலர்களுல் ஒருவராகவும் அறிவித்தார்.

புனித குரோம்நதி (- 1903)(ஆகஸ்ட் 09)

புனித குரோம்நதி (- 1903)

(ஆகஸ்ட் 09)
இவர் அயர்லாந்தைச் சார்ந்தவர். இவருடைய குழந்தைப் பருவத்தைக் குறித்த போதிய குறிப்புகள் கிடையாது; ஆனால் இவர் ஃபினியன் என்பவருடைய சீடராக இருந்து, பின் அருள்பணியாளராக உயர்ந்தார்.

இவர் அருள்பணியாளராகத் திருப்பொழிவு செய்யப்பட்ட பிறகு, அச்சோன்றி என்ற இடத்தில் பங்குப் பணியாளராக நியமிக்கப்பட்டார். அவ்விடத்தில் இவர் ஒரு கோயிலைக் கட்டி எழுப்பி, அது ஓர் ஆன்மிகத் தலமாக இருக்குமாறு செய்தார்.

அந்த இடத்திற்குப் பலரும் வந்தார்கள். அவர்களிடம் இவர் ஆண்டவருடைய நற்செய்தியை வல்லமையோடு எடுத்துரைத்தார். இதன் பிறகு இவர் ஆயராக உயர்ந்து தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களை நல்ல முறையில் வழி நடத்தி வந்தார்.

இவருடைய உருவாக்கத்தில் பின்னாளில் அருளாளராக உயர்த்தப்பட்டவர்தான் பெச்சின் என்பவர்.

இவ்வாறு கடவுளுடைய வார்த்தையை மக்களுக்கு வல்லமையோடு எடுத்துரைத்து, அவர்களைக் கடவுளுக்கு உகந்தவர்களாக மாற்றிய இவர், 1903 ஆண்டு இறையடி சேர்ந்தார்